திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, December 9, 2009

ஆசை மச்சான் சிறு கதை

அன்புள்ள  நண்பர்களே   ஆசை மச்சான் என்னும் சிறுகதை  யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது  படித்துப் பாருங்கள்
கீழ்க்கண்ட  சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory08122009.asp

அன்புடன்
தமிழ்த்தேனீ



Tuesday, December 8, 2009

http://youthful.vikatan.com/youth/Nyouth/thamiltheni2511.asp

அன்புள்ள நண்பர்களே  யூத்புல் விகடனில் வெளியான 
அஸ்தி (ர)வாரம்  என்னும் சிறுகதையை
மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
படித்து மகிழுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Monday, November 30, 2009

அஸ்தி(ர)வாரக் கதை

அஸ்தி (ர)  வாரம் சிறு கதை  யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது
படித்து மகிழுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ



Wednesday, November 11, 2009

இந்து மனம்

ஆவடியில் ஒரு பள்ளியில் நான் உரையாற்றப் போயிருந்தேன்

அந்தப் பள்ளி ஒரு கிரித்துவப் பள்ளி
அங்கே மேடையில் நான் அமர்ந்திருந்தேன்

என் இடப்பக்கம் ஒரு இசுலாமியப் பெரியவர் இசுலாம் வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்

என் வலப்பக்கம் ஒரு கிரித்துவ பாதிரியார் கிரித்துவ வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்

என்னை இந்து மதம் பற்றிப் பேச அழைத்திருந்தனர்

நான் மேடையில் முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டேன்
எண்ணிப் பாருங்கள் என் நிலையை

ஆனால் நான் கவலைப்படவில்லை

ஒலிபெருக்கியைப் பிடித்தேன்

எதிரே இருந்த ஒரு ஆசிரியையிடம்

சகோதரி உங்கள் சாலையில் ஒரு பெரியவர் உங்கள் கண்முன்னே கீழே விழுந்து விடுகிறார்
நீங்கள் பதறிப் போய் உங்கள் வீட்டுக்காரரை உதவிக்கு அழைக்கிறீர்கள்
அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டேன்

அந்த ஆசிரியை கூறினார்
ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் அவருக்கு உதவி செய்வோம் ஓடி வாருங்கள் என்று அழைப்பேன் என்று கூறினார்

அந்த ஆசிரியை ஒரு பெரியவர் என்று கூறினார்களே தவிற
ஒரு இசுலாமியப் பெரியவர்,அல்லது ஒரு இந்துப் பெரியவர், அல்லது ஒரு கிரித்துவப் பெரியவர்
கீழே விழுந்து விட்டார் என்று கூறவில்லையே
பொதுவாக ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் என்றுதானே கூறினார்கள்
என்று குறிப்பிட்டுவிட்டு என்னுடைய உரையை ஆரம்பித்தேன்

என் முதல் வார்த்தையே என்ன தெரியுமா...?

இந்து மதத்தைப் பற்றியோ
இசுலாமிய மதத்தைப் பற்றியோ

கிரித்துவ மதத்தைப் பற்றியோ
மற்ற எந்த மதத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை

இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்றேன்
நாமெல்லோரும் இந்தியர்கள் ,நமக்குள் பேதமில்லை
ஆகவே மதத்தைப் பற்றியோ, தனிதனியாக வேதங்களைப் பற்றியோ
விவாதம் தேவையில்லை, எது உயர்ந்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்
அவரவர் தாய் அவரவர்க்கு உயர்வு,இங்கே யாரும் தாழ்வில்லை, யாரும் உயர்வில்லை,எல்லோரும்  சமமே,
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மதம் , வேதம் என்

பதெல்லாம் போய்ச்சேரும் இடத்துக்கு உண்டான   வாகனம்தான்,

அவரவர் வாகனம் அவரவர்க்கு உயர்வு
வாகனம்தான் வேறு வேறு, போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்

ஆகவே இந்து மனம் பற்றி யோசிப்போம், இந்து மனம் பற்றி பேசுவோம்
நாம் அனைவருமே இந்தியர்கள் என்று பெருமிதம் கொள்வோம்

வந்தே மாதரம் என்று கூறிவிட்டு உட்கார்ந்தேன்

இசுலாமியப் பெரியவரும் , கிரித்துவப் பெரியவரும் என் பேச்சை ஆமோதித்து   என்னைக் கட்டிக்கொண்டு  ஆனந்தக் கண்ணீர் சொறிந்து
 இந்தப் பொது மனம் இனி இந்தியர்கள் அனைவருக்கும் வரப் பாடுபடுவோம் என்றனர்

நாங்கள் மூவரும் ஒன்றாக உணவருந்திப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்

வந்தே மாதரம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, November 2, 2009

புவி வெப்பமயமாவதைத் தடுக்க

தமிழ் வணிகம்காம்

என்னும் இதழில் வெளிவந்த  கட்டுரை

http://www.tamilvanigam.com/index.php/kt/811-2009-11-02-03-41-01.html

.  .

Monday, October 5, 2009

கனவுப் ப்ரபஞ்சம்

நேற்று வழக்கமான பணிகள் முடிந்து
தூங்கப் போனேன், நல்ல தூக்கம்

அதன் நடுவே நாம் தூங்குகையில் நம் ஆத்மா லோக சஞ்சாரம் செய்யக் கிளம்பிவிட்டது போலும்
மனுஷன் கொஞ்சம் அசந்தா போதும்
அவனோட ஆத்மாவே அவனை விட்டுட்டு சுற்றுலா கிளம்பிவிடுகிறது,அப்படி இருக்க யாரை நம்புவது.?

அது போல ஆதமா சுற்றுலா செல்லும்போதுதான் கனவுகள் வரும், அந்த ஆத்மா எங்கெல்லாம் போகிறதோ, யாரையெல்லாம் பார்க்கிறதோ,
அந்த செயல்களின் தொடர்பாக நமக்கு கனவுகள் வரும் என்று நினைக்கிறேன்,

நேற்று என்னவோ தெரியவில்லை எனக்கும் என் தந்தையார் திருவாளர் ரங்கஸ்வாமி ஐய்யங்கார் அவர்களுக்கும் ஒரு சந்திப்பு,
ஏதேதோ பழைய நிகழ்வுகளின் சிந்தனைகள்

காலையில் கண் விழித்தேன்
காலைக்கடன்களை முடித்துவிட்டு கணிணியைத் திறந்தேன்

என்னுடைய கணிணியின் திரையில்,
எம் எஸ் என், யாஹூ, கூகுல்டாக், என்று ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது, ஏதோ ஆகாயத்தில் நகஷத்திரங்கள் மின்னுவது போல ஒவ்வொன்றாக மின்னத் தொடங்கிற்று

எம் எஸ் என் மெசஞ்சர் தோன்றியது

அதில் ரங்கஸ்வாமி தொடர்பிலிருக்கிறார் என்று காட்டியது

ப்ரபஞ்சத்துக்கும் நம் கணினிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று புலனானது

என்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி

அன்புடன்
தமிழ்த்தேனீ






Thursday, October 1, 2009

விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே  என்னும் கட்டுரை  சென்னை ஆன் லைனில் வெளியிட்டிருக்கிறார்கள்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=2933c31a-15cf-40e4-a2b5-a76e292d5ad5&CATEGORYNAME=Thene
“ மெய்ஞானம் “




நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒவ்வொரு செயல்களும், பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ச்சி செய்து அறிவு பூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் ,

நம் முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்ட மெய்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்,அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன், இதே போல்

அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்,

மெய்ஞானம்தான் விஞ்ஞானம் , விஞ்ஞானம்தான் மெய்ஞானம்,

என்பதை கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதை கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர், அந்த திருஷ்டி கழிய, சுற்றிப்போடுதல்,அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்



அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில்வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்தஉப்பையும், காய்ந்தமிளகாயையும், எரிகின்ற நெருப்பில்இடுவார்கள், அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும், காய்ந்தமிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத்தாக்கும்,



இந்த நிகழ்வில் உப்பும் ,காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த ,வேதிய மாற்றம்நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, விஞ்ஞானப் ப்ரகாரம் உப்பும் காய்ந்தமிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம் நம் நோயைத்தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது



கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் ,சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்த தண்ணீருக்கு அளிக்கும்,அந்த சிவப்புத்தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் , தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,



அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய ,மாற்றத்தால் விளையும் மணம் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து நம் நாசியில் புகுந்து நமக்கு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது



அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர் பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி , இந்தக் கிருமி நாசினி

பசுமாட்டின் சாணத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது



அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை

ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடி நீரையும் அளிக்கிறது, பயிர் செழித்து வளரத்தேவையான இயற்கைச் சத்துக்களை பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துக்கள் தாமாகவே கலந்து அந்த சத்துக்களும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு , மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியல் விந்தையால் நீராக , சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது,



ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞானிகளாலும்

ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்த பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள்

அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது , அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவைகள் எல்லாவற்றையும் அதாவது நம்முடைய மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்



ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை



மெய்ஞ்ஞானம் எதை கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது





இயறகையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவைகளில் உள்ள நன்மைகளை அடைவோம்



ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது



அன்புடன்

தமிழ்த்தேனீ

rkc1947@gmail.com -- http://peopleofindia.net -- http://thamizthenee.blogspot.com

Wednesday, September 9, 2009

நாணயம்

செய்தி : பழங்கால நாணயங்களின் நிரந்தர கண்காட்சி !
400 அரிய வகை நாணயங்கள் காணவாய்ப்பு !



இந்தச் செய்தியைப் படித்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன
நாணயங்கள் காலத்துக்கு காலம் மாறுபடுகிறது
நாணயங்கள் என்றதும் என்னுடைய சிறு வயது நினைவுக்கு வருகிறது
என்னுடைய சிறு வயதில்
ஒரு ரூபாய்க்கு 16 அணா
ஒரு அணாவுக்கு இரண்டு அரையணா
ஒரு அரையணாவுக்கு இரண்டு காலணா
ஒரு அணாவுக்கு நாலு காலணா
அந்தக் காலணாவில் ஒட்டைக் காலணா உண்டு,
ஓட்டை இல்லாத காலணாவும் உண்டு
ஒரு காலணாவுக்கு மூன்று தம்பிடிகள்

ஆக ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள்

அதே போல ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தின் அளவில் பாதி அளவு இருக்கும், அப்போதெல்லாம் உணவு விடுதிகள் சென்னை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் இருக்கும் ,அதற்கு தண்ணீர்ப் பந்தல் என்றும் பெயரிட்டு இருப்பார்கள்,அந்த உணவு விடுதியில் சென்று மணக்க மணக்க இருக்கும் சுவையான உணவு வகைகளை உண்ண ஆரம்பித்தால் ,உண்ண உண்ண கணக்கு தெரியாமல், வயிறு நிறைந்தாலும்,மீண்டும் உண்ணத் தோன்றும், வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு எவ்வளவு ஆயிற்று என்று கணக்கு கேட்டால் நாம் என்னென்ன சாப்பிட்டோம் என்று


மனக்கணக்கு போட்டே சொல்வார்கள், அவ்வளவு சாப்பிட்டும் ஒண்ணரை அணா என்பார்கள் ,அது ஒரு பொற்காலம் ,சுவையிலும் சரி, பணத்தின் மதிப்பிலும் சரி அது உண்மையாகவே ஒரு பொற்காலம்தான்,
உட்காருவதற்கு ஒரு நீளமான மர பென்ச் போட்டிருப்பார்கள்,
வைத்துக்கொண்டு உண்ணவும் ஒரு நீளமான பென்ச் போட்டிருப்பார்கள்
மந்தாரை இலையில் வைத்து உண்ணக் கொடுப்பார்கள்,
எனக்கு வயது 60 க்கு மேல் ஆகிறது, இன்னமும் அந்தச் சுவை நாவை விட்டு அகலவில்லை,
சமீபமாக கேரள மாநிலத்தில் இருக்கும் வர்க்கலா என்னும்
ஷேத்திரத்துக்கு சென்றிருந்தோம், அங்கே வர்க்கலா என்னும்
அந்தக் கடற்கரை மிகவும் அருமையாக இருக்கிறது,
அந்தக் கடற்கரையில் வெளி நாட்டவர் அனேகம் பேர் வருகிறார்கள்,அருமையான சுற்றுலாத்தலம் அது

அங்கே நம்முடைய கிங் ஜார்ஜ் உருவம் பொறித்த பெரிய ஒரு ரூபாய்,

விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த வெள்ளியினாலான ஒரு ரூபாய், காலணா, ஓட்டைக் காலணா, தட்டைக் காலணா, அரையணா,
மஞ்சள் அரையணா , மற்றும் பித்தளையில் செய்த தாமரைப் பூ உருவம் பொறித்த 20 பைசா போன்றவைகளை ஒரு பெரிய தட்டில் பரப்பி வைத்து

விற்றுக்கொண்டிருந்தார் ,
அவைகளை மிகவும் ஆர்வமாக வெளிநாட்டினர் வாங்கிச் செல்கின்றனர்
அந்த வெளி நாட்டவரிடம் நம்முடைய ஆட்கள் தட்டைக் காலணா, தற்போதைய முன்னூறு ரூபாய்,விலைக்கு விற்கிறார்,
ஓட்டைக் காலணா நானூறு ரூபாய், மற்ற நாணயங்கள் அவர்கள் மனதில் எவ்வளவு,தோன்றுகிறதோ அந்த தொகையை சொல்கிறார்கள், வெளிநாட்டவரும் மிக ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்
ஒரு காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய்
நாணயம், 50 பைசா நாணயம்,25 பைசா நாணயம் 20 பைசா நாணயம், 10 பைசா
நாணயம், 5 பைசா நாணயம் என்று உரு மாறிற்று,
அதில் குறிப்பாக 20 பைசா நாணயங்களின் புழக்கம் திடீரென்று
முடங்கியது,கிடைக்காமல் போயிற்று என்ன காரணம் என்று ஆராய்ந்தால்

அந்த தாமரை உருவம் பொறித்த 20 பைசா நாணயத்தில் தாமரை உருவம்
பதித்திருந்ததால் சேமித்து வைத்து, இறைவனுக்கு சொர்ண புஷ்பம் என்று சொல்லி அந்த 20 பைசா (108)நாணயங்களை, அர்ச்சனை செய்ய உபயோகித்தார்கள், அது மட்டுமல்ல, மற்றும் அந்த 20 பைசா நாணயங்களை மோதிரம் செய்து விரலில் மாட்டிக்கொள்ளுதல் அந்தக் காலத்து நாகரீகமாக இருந்தது, அதையும் தாண்டி பித்தளையில் செய்த அந்த 20 பைசா நாணயங்களை சேர்த்து வைத்து பாத்திரக்கடையில் போட்டு, அண்டான், குண்டான், போன்றவைகளை செய்து வாங்கி வீட்டில்

வைப்பர், இது போன்ற காரணங்களால் அந்த 20 பைசா நாணயங்களுக்கு மதிப்பு அதிகமானது, தட்டுப் பாடு ஏற்பட்டது

கலிகாலம் என்பதற்கு இதை விட சாட்சியங்கள் வேண்டுமா என்றும் தோன்றியது

கேரள மாநிலத்தில் இருக்கும் அந்த வர்க்கலாஎன்னும் ஷேத்திரத்தில்கோயிலில் உள்ள விக்ரகம் பிராமணர்கள் ஆசமனம் செய்வது போல வடிக்கப் பட்டிருக்கும் அந்தப் பெருமானின் கைகள் ஆசமனம் செய்வது போல கையில் தண்ணீரை வைத்து வாயருகே வைத்து ஆசமனம் செய்வது போல இருக்கும் ,அந்த கை காலத்துக்கு காலம், அருகே தானாகவே நெருங்கிக் கொண்டே இருக்கிறது, எப்போது அந்தக் கை வாயின் மிக அருகே சென்று ஆசமனம் செய்ய முடியும் அளவுக்கு நெருங்குகிறதோ அப்போது
இந்த உலகத்தில் ப்ரளயம் வரும் ,ப்ரபஞ்சம் அழியும் என்பது பலருடைய
நம்பிக்கையான ஐதீகம்,
நாணயம் இப்போதெல்லாம் ஏமாற்றப் பயன்படுகிறது
நாணயமான மனிதர்களைப் பார்ப்பதும் அறிதாகி வருகிறது

நாணயம் சிலரின் நா - நயத்தினால் கவரப்பட்டு
அனைவரையும் ஏமாற்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ


Saturday, September 5, 2009

ஆசிரியர் தினமான இன்று

ஆசிரியர் தினமான இன்று
1. பசித்தால் அழவேண்டும், அழுதால்தான் பால் கிடைக்கும்உழைத்தால்தான் பலன் கிடைக்கும்அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று உணர்த்தி,
அதன் பிறகு நான் சிணுங்கினாலே என் பசியறிந்து எனக்கு
அமுதம் உட்டி என் உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும்
உயிரும் , சக்தியும், அறிவும் ஊட்டி வளர்த்த
என் முதல் ஆசிரியையான என்
தாய் என்கிற முதல் குருவுக்கும்
2.என் அறிவுக்கண்ணைத் திறக்க நான் கற்க ஆரம்பித்த முதல்
நாள் , என் கையைப் பிடித்து பரப்பிய நெல் பரப்பில்
என்னை ஓம் என்று எழுத வைத்த என் தகப்பன், என்கிற
இரண்டாம் குருவுக்கும்
3. பள்ளியில் சேர்த்ததுவிட்டு சென்ற அன்னையையும்
அப்பனையும் நினைத்து பிரிவுத்துயர் தாங்காது , புதிய இடம்
புதிய நபர்கள், கண்டு மிரண்டு போய் அழ ஆரம்பித்த
என்னை , முதன் முதலாய் ஒரு தாய்மை உணர்வோடு
அழக்கூடாது, அம்மா ,அப்பா இருவருமே இங்கேதான்
வெளியே இருக்கிறார்கள். என்று எனக்கு ஆறுதல் சொல்லி
"அழ அழச் சொல்லுவர் தமர்" என்னும் முது மொழிக்கேற்ப
என்னை மடியிலே உட்காரவைத்துக்கொண்டு என்னைப்
போன்ற குழந்தைகளைக் காட்டி , அவர்களைப் போலவே
நானும் அழாமல் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என்று
உணர்த்தி, எனக்கு பலூன், பொம்மைகள், இனிப்பு எல்லாம்
கொடுத்துகையைப் பிடித்து கல்வியை எனக்குள்ளே இனிய
விருந்தாக உள்ளேற்ற ஆரம்பித்த அந்த ஆசிரியை
ஆகிய மூன்றாம் குருவுக்கும்,
அதன் பிறகு என் கூடவே இருந்து ஒவ்வொருகணமும்
எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்த என் வகுப்புத்
தோழர்கள் என்கின்ற குருமார்களுக்கும்,,
சற்றே வளர்ந்த நிலையில் நான் செய்த குறும்புகளுக்கு என்
காதைப் பிடித்து திருகி , காய்ச்சல் வந்தால் மருந்து கொடுத்து
குணப்படுத்தும் வைத்தியர் போல என்னை மிகச் சரியான
பாதையில் திசை திருப்பி என்னை முன்னுக்குக் கொண்டு
வந்த அத்துணை ஆசிரியர்களுக்கும்
அதன் பிறகு இன்று வரை, இன்னும் நான் இருக்கும் காலம்
வரை எனக்கு, ஒவ்வொரு அனுபவத்திலும் ஞான குருவாக
இருந்து வழிகாட்டிய, மற்றும் வழி காட்ட இருக்கிற
அத்துணை குருமார்களுக்கும் , ஆசிரியைகளுக்கும்,
ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினமான இன்றைக்கும் இனி
வரும் எல்லாக் காலங்களிலும் என் நன்றி கலந்த , பக்தி
கலந்த குரு வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்
அன்புடன்தமிழ்த்தேனீ

Monday, August 17, 2009

உட்ப்ரயாணத்தின் மகிமை

ஒவ்வொரு உயிரிலும் சக்கராயுதமும்
சங்கும், வில்லும் வேலும்,கதையும், போன்ற பதினாறு ஆயுதங்களும்,ஆழிப்படைகளும், உள்ளடங்கி ஒரு சைதன்யம் இருப்பதை உலகிற்கு கண்ணன் உணர்த்திய நிகழ்வே மஹாபாரதம்

ஒவ்வொரு உயிரும் இந்த சக்தி இருப்பை தாமாக தம்மை உணர்ந்து அறிந்துகொண்டு தம் சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்பதே இறைவன் கண்ணனின் கீதோபதேசம்

நம்முள்ளே ஒளிந்திருக்கும் அத்துணை சைதன்யத்தின்,ஆயுதங்களின் மஹா சக்தியின் முழுப்பரிமாணத்தையும் உணரும் நிகழ்வே ஆழ்வார்கள் ,நாயன்மார்கள் நமக்களித்த போதனைகள்

நம் சக்தியை முழுதாக உணர்ந்து தகுதியான இடத்தில் தகுதியான நேரத்தில் வெளிப்படுத்தி நம் ஆக்க சக்தியை நமக்கும் புரிகின்ற வகையிலே ஏற்படுத்தப்பட்ட கதா பாத்திரங்கள்தான்
இதிகாச புராணங்களின் உள் நோக்கம்,

நம்மிலிருந்து நாமே பிரிந்து கருடப் பார்வையாக நம்மையே உற்று நோக்கினால் நம் உள்ளே தினம் நடக்கும் குருக்ஷேத்திரப் போரை நாமே காணலாம், நம்மை உணர இதைவிடச் சாலச்சிறந்த வழி வேறேதும் இல்லை

அதனால் உட்ப்ரயாணம் மேற்கொள்ளுதலே உயரப்பறத்தலுக்கும், உள்ளுணர்வுகளுக்கும் வழி வகுக்கும்


கருடப் பார்வையில் ககனம் முழுவதும் நம் கண்ணுக்கும் எட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


Friday, July 3, 2009

கட்டிடம் கட்டுவோமா

கட்டிடம் கட்டுவோமா
தமிழ்த்தேனீ
பக்கத்து நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள், எத்தனை முறைகள் வீட்டைப் பெருக்குவது, எத்தனை முறைகள் வீட்டைச் சுத்தம் செய்வது? என்ன செய்தும் பலனே இல்லை. கால்வைத்து நடக்க முடியவில்லை. காலெல்லாம் மண்ணும் அழுக்கும் சேர்ந்த கலவை ஒட்டிக்கொண்டு நடக்க நடக்க வீடெல்லாம் அழுக்காகிறது. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தூசியினால் ஏற்படும் இருமல் போன்றவற்றால் அடிக்கடி வைத்தியரிடம் போகும் நிலை. அதையும் தவிர்த்து தினமும் அங்கே நிற்க வைத்திருக்கும் வாகனங்களைச் சுத்தம் செய்வது அலுவலுக்குப் போகும் அவசரத்தில் மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.என்னதான் செய்வது என்று புலம்பிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே! ஆமாம், இந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்னும் அலுவலகம் செயல்படுகிறதா, இல்லையா என்று சந்தேகப்படும் பொது மக்களே!நம் நாட்டில் தான் இப்படியா? அனைத்து நாடுகளிலுமே இப்படித்தான் பல கட்டடங்கள் கட்டும் போது அந்தக் கட்டடத்தினால் ஏற்படும் தூசிகள், சிமென்ட் கலவைகள், எல்லாம் பக்கத்து வீடுகளின் மீதோ, அல்லது பக்கத்தில் இருக்கும் கட்டடங்களின் மீதோ விழுந்து அவர்களைத் துன்பப்படுத்துகிறதா?சில வெளிநாடுகளில் கட்டடங்கள் கட்டும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் முறை மிகவும் நேர்த்தியானதாக, அடுத்தவருக்குத் துன்பம் தராத வகையில் இருக்கிறது. அவற்றை நேரிலே பார்த்தவர்களின் நானும் ஒருவன். ஆகவே அவர்கள் கடைப்பிடிக்கும் முறையைப் பார்ப்போம்ஒரு முறை மலேசியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே பெருநகரச் சாலைகளிலும் பல பெரிய கட்டடங்களைக் கட்டுகிறார்கள். அதே போன்று அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டுகிறார்கள். கோலாலம்பூரில் நாங்கள் இருந்த கட்டடத்தில் மொத்தம் 29 மாடிகள். அதில் 26ஆம் மாடியில் இருந்தோம். அங்கிருந்து பார்க்கும் போது நகரமே மிக அழகாகத் தெரியும்.மேலும் அந்தக் கட்டடத்தின் மிக அருகே, நம் நாட்டின் கூவம் நதியைப் போன்று ஒரு ஆறு ஓடுகிறது. அதற்குப் பின்னால் பறக்கும் மின்சார ரயில் ஓடுவது பார்க்க, கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.மழை நன்றாகப் பெய்யும் போது பார்த்தால் அந்த நதியில் வெள்ளமாய்க் கரை புரண்டு தண்ணீர் ஓடும். மழை விட்டுச் சில விநாடிகளில் சாலைகளும் அந்த நதியும் பழைய நிலைமைக்குத் திரும்பி, பளபளவென ஜொலிக்கும். எங்குமே தண்ணீர் தேங்கி நின்று நாங்கள் பார்க்கவில்லை.அந்த நகரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்னர் மாசுக் கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும். அப்போது ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதாவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் எங்கள் கட்டடங்களைக் கட்டி முடிப்போம் என்று. அந்த உறுதி மொழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள். அவர்கள் கட்டும் கட்டடத்தின் மேலாக வெளிப்புறமாக இரும்பினாலான ஒரு வலை போடுகிறார்கள். அந்த வலை ஒரு சிறு தூசியையும் கூட வெளியே விடுவதில்லை. அதனால் அவர்கள் நெடுஞ்சாலைகளில் கட்டும் கட்டடங்கள் கூட எந்த ஒரு மாசையும் விளைவிப்பதில்லை. அந்தக் கட்டடங்களிலிருந்து விழும் கற்கள் சாலையில் ஓடும் வாகனங்களின் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுவதில்லை.அதே போல அமெரிக்காவில் அவர்கள் பெரும் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டுகிறார்கள்; பல அடுக்கு மாடிகள் கட்டுகிறார்கள்; அவர்களும் இதே போன்ற முறைகளைக் கையாளுகிறார்கள். அது மட்டுமல்ல, அங்கே வீடுகள் கட்டிவிட்டு அந்த வீடுகளுக்கு முன்னால் ஒரு சாய்மானமான புல் வெளியை ஏற்படுத்துகிறார்கள். அந்தப் புல் வெளியை அவர்கள் ஏற்படுத்தும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு இடத்தில் அந்த விலை உயர்ந்த புல்வெளியை அவர்கள் உருவாக்கி, அந்தப் புல் வெளிகளை சதுரம் சதுரமாக இரண்டு அல்லது நான்கு அங்குலம் கனத்துக்கு வெட்டி அவற்றை ஒரு மூடிய வாகனத்தில் வைத்து அங்கே கொண்டு வந்து அவற்றை அந்தச் சாய்வான பகுதியில் அடுக்கி அப்படியே வளர்க்கிறார்கள். அவற்றை அடுத்து ஒரு அகலமான நடைபாதை. அதற்கு அடுத்து மீண்டும் சமதரையில் புல்வெளி. அதற்கு அடுத்து மீண்டும் ஒரு நடைபாதை, அதற்கு அடுத்துதான் சாலைகள். ஆகவே வாகனங்கள் நடைபாதையில் நடப்போரின் மீது எதிர்பாராத பெரிய விபத்துகள் ஏற்பட்டாலொழிய மோத முடியாதுஇவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே மனித உயிர்களின் மீது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது என்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே நம் நாடும் அப்படியெல்லாம் வளரக் கூடாதா என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது.அது சரி, எப்பொழுது பார்த்தாலும் வெளிநாடுகளைப் புகழ்வதே சிலருக்கு வேலையாய்ப் போய்விட்டது என்று நினைப்பவர்களே நம் நாட்டையும் வீட்டையும் நாமும்தான் முயன்று சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வோமே! சுத்தம் சோறு போடுகிறதோ, இல்லையோ! வியாதிகளை அண்டவிடாமல் தடுக்கும்; அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். அடடா! இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் வீடு கட்டினேனே. அப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லையே! அண்டை வீட்டுக்காரர்கள் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள்! நான் நேரிடையாக பாதிக்கப்படும் போதுதான் இவ்வளவு ஞானமும் எனக்கு வருகிறது... என்ன செய்ய?
தமிழ்த்தேனீ

Jul 02, 2009



Thursday, July 2, 2009

இலக்கிய நந்தவனம் முதற் பரிசு

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும்  "இலக்கிய நந்தவனம்" பத்திரிகையில் வெளிவந்து முதற்பரிசு பெற்ற " முகவரி வேண்டும் " என்னும்  அறிமுகக் கவிதை


Saturday, April 25, 2009

எனக்கென்ன ?


பொது இடத்தில் உங்கள் கண் முன்னே ஒரு தகாத செயல்
நடக்கிறதா..? பாதிக்கப்பட்டவர் கத்திக்கொண்டிருக்கிறாரா
அவரை பல விஷமிகள் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனரா,
அதைப் பார்த்தும் நமக்கென்ன நாம் பாதிக்கப்படாமல்
இருந்தால் போதும் என்று ஒதுங்கிச் செல்பவரா நீங்கள்//
அங்கு பாதிக்கப்பட்டவர் தெரிந்தவராயினும் தெரியாதவராயினும்
நீங்களும்தான் ஓங்கிக் குரல் கொடுத்துப் பாருங்களேன்
நாளையே உங்களுக்கு இதே நிலை ஏற்படும்போது உதவ
மற்றவரையும் தயார் செய்யுங்களேன்

ஒரு முறை நானும் என் மனைவியும்  சென்னையில் அண்ணா நகரில் உள்ள
புகழ்வாய்ந்த புடவைக் கடைக்கு சென்று அங்கே காரை நிறுத்திவிட்டு
கடைக்குள் போக யத்தனித்தோம், ஆனால் கடைக்குள் நுழையும் வழியில்
செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி
வைத்திருந்தனர் அதனால் அவைகளுக்கு நடுவே புகுந்து செல்லவேண்டிய
கட்டாயத்தால் முதலில் நான் அடுத்து யாரோ ஒரு பெண்,அடுத்து என் மனைவி என்னும் முறையில் செல்ல ஆரம்பித்தோம்
அங்கிருந்த சிறிய இடைவெளியில் வழியை மறைத்துக்கொண்டு
அந்தப் பெண்ணையே முறைத்துப்- பார்த்துக்கொண்டு ஒருவர் நின்றிருந்தார்,முதலில் நான் அவரைக் கவனிக்கவில்லை, கவனித்தவுடன் அவரை நோக்கி முன்னேறிச்சென்றேன்,அப்போதும் என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமலும் வழியை விடாமலும் என்னடா ஒரு ஒரு தம்பதிகள் நடுவே அந்தப் பெண் வருகிறாளே,கூட வருபவர்கள் பெற்றோராக இருக்கக் கூடுமே என்னும் உணர்வு கூட இல்லாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர்,அவரை நெருங்கி நான் பாத்தது போதும் வழியை விடுங்க என்றேன்
உடனடியாக அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா

என்னா உன் பொண்ணைக் கடத்திக்கிட்டா போயிட்டேன்..?

அவர் அந்தப் பெண்ணை என்னுடைய பெண் என்று  நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டார்.  யாருடைய பெண்ணாயிருந்தால் என்ன..?அவர் செய்தது சாதாரணமாக  வாலிப வயதில் செய்யும் செயல்தான் என்றாலும்
அவருடைய கேள்வியிலே இருந்த வன்முறை என்னைக் கோபம் கொள்ள வைத்தது,   இதைக் கேட்டவுடன் வந்தது கோபம்

ஓங்கி  ஒரு அறைவிட்டேன்  அவனை  , கீழே விழுந்தான் அவன்
உரத்த குரலில்   யாருய்யா கடையிலே வழியிலே இது மாதிரி காலிப்பசங்களை  நிக்க வெச்சா யாரு உங்க கடைக்கு வருவாங்க என்று கத்தினேன்.  உடனே கடையிலிருந்து சிலர் ஓடி வந்தனர், பொது மக்களும் வழக்கம்போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்,

அதற்குள் கடையிலிருந்து வந்தவர்கள்  அவரை விலக்கி உடனே அங்கிருந்து போகும் படி அறிவுறுத்தினர்.  அவ்வளவு வீரமாகப் பேசிய அந்த நபர் தனக்கு எதிராக ஒரு கூட்டமே திரண்டதைப் பார்த்து மிரண்டு எதிர் பாராத தாக்குதலால் நிலை குலைந்து  பயந்து நடுங்கி திரும்பிப் பார்க்காமல் எடுத்தார்
ஓட்டம்.. அப்போது புரிந்தது சிலருடைய வீரம் ,

ஆனால் இப்போது நினைத்தால் அந்த நபர் ,வாலிபர்.
நான் வயதானவன் , என்னை அவர் ஒரு அறை விட்டிருந்தால் தாங்கி இருப்பேனா என்பது சந்தேகமே, ஆனாலும் அசுர பலம் வந்தது எனக்கு அப்போது ,  அது நியாயத்தின் பலம், நியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு சக்தி வருகிறது, அநியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு பலகீனம் வருகிறது

நான் செய்தது சரியென்று நினைத்தால் இனி தவறாமல்   தவறு நடக்கும் இடங்களில் தட்டிக் கேளுங்கள்  அதட்டிக் கேளுங்கள். ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.   ஓடுகிற நாயைத்தான் துரத்துவார்கள்
நின்று எதிர் கொள்ளும் நாய்க்கு பயப்படுவார்கள்.  நாயிற்கே இந்த நிலைமை என்றால் மனிதருக்கு ?

சிந்திப்போம் நியாயத்தைக் கேட்க பயப்படவேண்டாம், அநியாயத்தை தட்டிக் கேட்க தயங்க வேண்டாம். தைரியம் கொள்ளுங்கள்
தறுதலைகள் சிதறி ஓடிப் போய்விடுவர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Saturday, March 14, 2009

தமிழும் தரமும்

வள்ளுவனை எடைபோட்டோம், கம்பருக்கு சடைபோட்டோம்
தெள்ளிய தொல்காப்பியத்தையும்,கிள்ளிப் பார்த்தோம்
அகநானூறும் புறநானூறும் அவிழ்த்து முடிந்து ஆராய்ந்தோம்
ஔ  வ்வை அலசினோம் அவையில்  விவாதித்தோம்
இலக்கணமும் இலக்கியமும் வழக்கினிலே வரும்போது
கணிணியும் நாமும் செய்யும் தற்செயல் தவறுகளை
பதிப்பித்தே வாக்குவாதம் வளர்க்கிரதே
யாருக்கும் எண்ணமில்லை தமிழின் தரம் குறைக்க
தமிழ்வளர்க்க ஆர்வம் கொண்டே,அதன் தரம் ஆராய்ந்தோம்
கொட்டை வடி நீர் கேட்டால் கேட்டால் துவண்டு போய் விழிக்கின்றோம்
காப்பி வேண்டுமெறே உரைத்தால் என்றுரைத்தால் அளித்தே மகிழுகின்றோம்
தமிழென்ன கலப்பினமா, தனித்திருக்கும் தவமணியா
இனித் திருத்த அதிலென்ன ஏற்கெனவே குறைபாடா
இருக்கும் தமிழ் நற்தமிழே சந்தேகம் நமக்கு வேண்டாம்
திருத்துகிறோம் என்று சொல்லி அதன் தரம் குறைக்கவேண்டாம்
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
ஆரியமோ திராவிடமோ ஆதி தமிழுக்கு பேதமில்லை
நமக்குள்ளும் பேதமில்லை ,சொல்வழக்கில் பழகு தமிழ்
வளருமிங்கே புரிந்தோமில்லை
புரிந்து கொண்ட அழகுத்தாய் தமிழ்தானே ஏது எல்லை
அழைக்கின்ற கிள்ளை மொழி அவளுக்கோ மழலைதானே
அன்போடு ஓடிவந்து,தன் மடியில் தானிட்டு
நம் மேலே தலைப்பிட்டு அமுதம் தந்திடுவாள்
அன்னையவள் கருணை கொண்டு
பிறகென்ன பெருங்கவலை ,தமிழ் வளர்க்க இன்னொருவர் வரவேயில்லை,தமிழழிக்க இங்கொருவர் பிறக்கவில்லை
இத்தனை கோடி மாந்தர்களைப் பெற்றெடுத்து பேணிக்காத்து
அன்போடு அரவணைத்து அற்புதமாய் தன்னையும் தானே காத்து வளர்க்கும் தாந்தோன்றித் தமிழன்றோ தலைசிறந்த மொழியன்றோ ஆகையினால் தாயாய் நின்று நமை வளர்க்கும் தமிழ் தானே
ஆதவனின் பாதை தன்னை அறுதியிட ஆருண்டு
யாதுமாகி நின்ற தமிழ் எங்கும் நிறைந்த தமிழ்
தானாய் வழி நடக்கும் தரணியே தலை நிமிரும்
தமிழை வழிநடத்த நமக்கிங்கே தகுதியில்லை
மொழியொன்று எப்போதும் புறிந்து கொள்ள
அடுத்தவரின் மனதிருப்பை அறிந்து கொள்ள
பக்குவமாய் இதை உணர்ந்து மனிதம் காப்போம்

நம்மில் ஒரு பகுதி தமிழில்லை...
தமிழின் சிறு துகள்தான் நாமன்றோ
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
இருக்கும் தமிழ் கற்றிடவே நமக்கிங்கே போதாது இருக்கும் ஆயுள்
பாமரர்க்கும் புரிவதற்கு செய்வோம் செய்யுள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

\

Sunday, March 8, 2009

மகளிர் தினம்

இதிகாச புராணங்களிலும், சரித்திரங்களிலும் படித்துப் பார்த்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்மணிகள் பொங்கி எழுந்து,


தவக் கோலமோ, ஊர்த்துவக் கோலமோ கொண்டனர்

என்று செய்திகள் கூறுகின்றன



அப்படி வெகுண்டெழுந்த பெண்மணிகளை சாந்தப்படுத்தும் விதமாகவே ஆதி சங்கரர் பதித்த ஸ்ரீசக்கரம் போன்றவைகளை பதித்தோ, அல்லது அவர்களுக்கு விக்ரகங்கள் வடித்து, பலி கொடுத்தோ அவர்களின் உக்கிரத்தை தணித்திருக்கின்றனர்,



தாய்மை உணர்வுள்ள பெண்ணை சினமூட்டுவானேன்

பிறகு அந்த மஹா சக்தியின் உக்கிரம் தாங்காமல் அவளிடம் வழிபாடு நடத்துவானேன், இதே செய்கையைத்தான் ஆதி காலம் தொட்டு செய்து வருகிறோம்



ஆனால் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்



மகளிர்க்கென்று தனியாக ஒரு தினம் வேண்டாம்,

மகளிர் இல்லையென்றால் ஜனனமே கிடையாது

ப்ரபஞ்ச வளர்ச்சியே கிடையாது,

அப்படிப்பட்ட மகளிரை தினமும் அளிக்க வேண்டிய மரியாதையை அளித்துப் போற்றுவோம்



அன்புடன்

தமிழ்த்தேனீ

Saturday, February 28, 2009

” மனிதமே உன்னைத்தேடி”

உன்னைத் தேடி உன்னைத் தேடிக் களைத்து விட்ட மனிதன் நான் பூவுலகில் எங்கும் உன்னைக் காணவில்லை, எங்கு சென்று மறைந்திட்டாய் ,கண்ணில் படும் உயிர்க்கெல்லாம் கருணையோடு கை கொடுத்து, அன்பு பாசம் நேசம் காட்டி அணைத்திட்ட கருணை நிறை தெய்வங்களே எங்கு போனீர் எங்கு போனீர்,காணவில்லை உம்மையும் உம்மைத் தேடி உம்மைத் தேடி நானும் இங்கே களைத்துவிட்டேன்

கண்ணைக் கட்டிக் காட்டில் இட்டார், கண்ணிருந்தும் குருடனாய் உண்மை தேடி அலைகின்றோம், சித்தம் தடுமாறியே சித்தரென்று பெயரெடுத்து, தெளிந்த பின்னும் தேடித்தேடி பித்தராய் உருவெடுத்து தேடுகின்றோம் மனிதமே

பாதி மனிதர் தம் மனதின் மீதி மனிதம் மறந்து போய் பீதியினால் தமை மறைத்து நடைப்பிணமாய் வாழுகின்றார், சேதி சொல்லும் தினசரியும், தேடித்தேடி பரபரப்பாய் தீச் செய்தி தமை மட்டும் வழங்குகின்ற காணொளியும் ,அவலமான செய்திகளை அளித்திங்கே வாழுதே, நல்ல சேதிகளே இல்லையென்று எண்ணித் தரம் தாழுதே,மனிதம் இங்கே வீழுதே

குணத்தையெல்லாம் விட்டுவிட்டு பணத்தின் பின்னால் ஓடுதே, பிணத்தின் நெற்றிக் காசைக்கூட எடுக்கத் தானே ஆடுதே, மனித உயிர் மதிப்பின்றி தீக்கிரையாய் ஆகுதே, சட்டம் கூட திட்டம் தீட்டி தீவினையை ஏற்றுதே, நீதி இங்கே தீயுதே ,தீவிரமாய் பல வாதம் பதுங்கி பதுங்கிப் பாயுதே மனித நேயம் தேயுதே

காவல் செய்யும் காவலும், ஏவல் செய்யும் கனவானின் கைத்தடியாய் வாழுதே, நீதி செய்யும் நேர்மையும் தலை குனிந்தே நோகுதே, அழிவுப் பாதை நோக்கியே நாடும் இன்று போகுதே, இளம் வயதுக் குழந்தைகளை இரக்கமின்றி கற்பழித்து, இணைந்து வாழும் துணையினையும் அரக்கர் போலக் கொல்லுதே, அன்னை தந்தை இருவரையும் அடித்து ஓட்டி மகிழ்ந்து விட்டு, தம் மக்கள் மட்டும் தம்மை தாங்கவேண்டுமென்னுதே,

மனிதம் எங்கே மனிதம் எங்கே நானும் தேடித் தேடியே

இளைத்து விட்டேன் களைத்துவிட்டேன் காணவில்லை மனிதமே,,முன்பிருந்த மனிதம் இன்று எங்கே போய் ஒளிந்தது? இருட்டில் வாழ்ந்த நாளிலும், மனிதம் ஒளிர்ந்த நாடிது, ஒளி பாய்ச்சி இரவையும் பகலாக்கி தேடித் தேடிப் பார்த்துவிட்டேன், காணவில்லை மனிதமே , புனிதர் எல்லாம் எங்கோ சென்று பதுங்கிவிட்டார் பயத்திலே ,இனி இங்கே வேலையில்லை என்று தாமும் நினைத்திட்டே மாயமாய் மறைந்திட்டார் காணவில்லை ஜகத்திலே

இனி பொறுக்க வழியிலை என்று பொங்கி நானும் எழுந்திட்டேன், தேடித் தேடி அலைந்திட்டேன், தேக்கி வைத்த மனிதமது எங்கேனும் கண்ணில் பட்டால் மனிதர்களே, மனிதர்களே சேதி ஒன்று கூறுங்கள் நானும் அங்கு வருகிறேன் மீண்டுமதை பெற்றெடுத்து சேர்த்தளிப்போம் உலகுக்கே



அன்புடன்

தமிழ்த்தேனீ

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 10

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ,எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான்அங்கு ப்ரச்சனை முளைக்கிறது
தெய்வம் ,இறைவன், ஸ்வாமி,அல்லா,யேசு கிருஷ்ணன்,ராமன் ,வினாயகன்,சிவன், சக்தி,என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே ஒன்றே குலம் அது மனித குலம்,ஒருவனே தேவன் அவன் பொதுவானவன், எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன
என் தாயை நான் அம்மா என அழைப்பேன், என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள்என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள்,சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள், யார் எப்படி அழைத்தாலென்ன,என் அம்மா தானேஅதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்ஆனால் இருப்பது ஒரே தெய்வம்,அது இறைவன் நமக்கும் மேல் பெரியவன்,நம்மைக் காப்பவன்அவ்வளவுதான் ,இந்த உண்மை புரியத்தான்,ஆன்மீகம் என்று ஒன்றை பெரியவ்ர்கள் ஏற்படுத்தினார்கள்
அந்த ஆன்மீகத்தின் நோக்கமே,பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே,நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து,நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு,பிரிந்து,பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவை சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள்என்னும் நிலைமைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம்,(மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள் )
மக்களை மாக்கள் நிலைக்கு தள்ளும்,பிரிவினையை அரசியல் வாதிகள் வேண்டுமானால்அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்என்று ஒரு பழ மொழி இருக்கிறது,ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான்அவர்களுக்கு வசதி,ஆனால் நாம் இதை உணர்ந்து ,ஜாதி,மதம் ,இனம் ,மொழி ,கலாச்சாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு,மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து,மனதால் ஒன்றுபட்டால்மனிதம் பிழைக்கும், எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ,அங்கு எந்த வித பேதமும் இல்லாமல் அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்,அங்கே மனிதம் மலரும் , விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும்,கடவுள் மதத்திலில்லை,ஜாதியிலில்லை,இனத்திலில்லை,மொழியிலில்லை நிறத்திலில்லை,மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான் ஆமாம்,மனிதம் தான் கடவுள்கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்,கடந்தவன் என்று பொருள்கட+உள் உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று,பார்க்க ,உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும் உட்ப்ரயாணம் தேவை, உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம்அன்பு ,கருணை ,இரக்கம் சக உயிர்களை மதித்தல் மனிதனை மனிதனாக மதித்தல்மனிதனை மனிதனாகவே நேசித்தல்,மக்களை மாக்களாக்காமல் மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல் மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள்,இறைவன்அதுதான் ஆன்மீகம்!

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 9

ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது
அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்
சிறிது நேரம் விளையாடும், தன்னைச் சுற்றி யாருமே
இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்
அந்த நிலையிலே தான் எல்லா வளர்ந்த மனிதர்களும்
வளர்ந்தாலும் குழந்தைதான்,
அணைக்கும் கை இருக்கிறது ,நம்க்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து
ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான்
நாம் மனிதராக இருப்போம்,எப்போது அந்த நம்பிக்கை
நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்
அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி
நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார்
என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்,

இறைவன் இருக்கிறானா ,இல்லையா என்பது
நமக்கு தேவையில்லாத சிந்தனை
இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று
அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால்
இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும்
எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான்
மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு,
கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண்,
எல்லாம் இருக்கிறது ஆனால் எந்த அளவு
இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது
அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும்
உடனே வைத்தியர் அதை சமனப் படுத்த
மருந்து தருகிறார்
அது போல நம்முடைய சுயநலத்துக்காக
நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்
ஒரு பற்றுக் கோல் போல நமக்குப் பயன் படுகிறது
ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக் கோல்
சற்றே பருத்து ,சுயநலம் அதிகமாகும் போது
பொதுநலம் மறந்து போகிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 8

ஆன்மீகம் என்பது என்ன….?
மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி
ஒன்று இருக்கிறது,அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று
நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து
ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது
என்றும் சொல்லலாம்
அல்லது மனிதன் ஏற்கெனெவே இருக்கும்
ஆன்மீகத்தை உணரத் தலைப்பட்டான்
என்றும் கொள்ளலாம்


இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்ரு இருக்கிறதாக நம்பத் தொடங்கின
அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு
தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன
இந்த இறை நம்பிக்கைதான் இன்று வரை நம் எல்லோறையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது
ஆன்மீகம் என்று ஒரு வழியினால்தான்
மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்

நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை
நம்மை நாமேதான் காப்பாறிக் கொள்ளவேண்டும்
என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்
அப்படிப்பட்ட நாதீக வாதிகளுக்கு
“ உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு “
என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்
இடுக்கண் வரும்போது அதைக் களைய
ஒரு நண்பனாவது வேண்டும் ,அப்போதுதான்
ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்ரு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும் ,இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்
கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு
சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம்
அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது
தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க
,அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை
என்று தீர்மானமாக எண்னுவதால்தான் உயிரை
விடத் தீர்மானிக்கிறார்கள்

அப்படி தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்
அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்
அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான்
என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 7

கணிணியைப் பற்றி அறிந்து கொண்டு கணிணியில் எப்படி செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று
உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும்
கணிணியைப் பற்றி ,மனிதனால் உருவாக்கப்பட்ட
கணிணியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப் படுகிறதென்றால்
இந்தப் ப்ரபஞ்ஜத்தை படைத்த இறையைப் பற்றி அறிய
எவ்வளவு சக்தி , தகுதி ,தேவை
அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு
விளங்கமுடியாக் கடவுள் ,விளக்கமுடியாக் கடவுள்
என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை
எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம்
விளங்க முடியாத ,அல்லது விளக்க முடியாத
என்றெல்லாம்
இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும்
புறிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும்
நிர்ணயிக்கவில்லை
ஆகவே முதலில் போகவேண்டிய இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையை
கண்டுபிடித்து அந்த வழியில் நம் ப்ரயாணத்தை
மேற்கொண்டால் எதையும் காணலாம்
கடவுளையும் காணலாம்
பாகம் 8
திரு விவேகானந்தர்(நரேந்திரன்) முதலில் திரு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
சொல்லுவதைக் கவனிக்காமல்
அவ்ர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்
ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர்
நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக்
கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள்
இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்ர்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றாராம் ,அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர்
நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன்
என்று கூறி தன்னுடைய தயான சக்தியால்
நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு
இறைவனைக் காட்டும் முயற்ச்சியில் இறங்கினார்
அப்போது தேஜோமயமாக தாங்கவொண்ணா ஒளியாக
இறைவன் நரேந்திரனுக்கு காட்சி அளித்தாராம்
அந்த அற்புத ஜோதிச்வரூபனை ,அந்த ஒளியின்
விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம்

அதற்குப் பிறகு திரு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர்
இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள் அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம்
அப்போதுதான் நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 6

ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை ,
உதாரணமாக சூரியனை வெறும் கண் கொண்டு பார்க்க
முடியாது ,பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்கு சரியாக விளங்காது, அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா,அது போல
ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால்
அதன் சக்தியை நாம் தாங்கிக் கொண்டு இதமாக
இறைவனை தரிசிக்க வேண்டுமென்றால்
அதற்க்கு ஏற்ப பக்தி, த்யானம் ,போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்


வானிலே செவ்வாய்க் க்ரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலை நோக்கி கொண்டு பாருங்கள் ,
சூரியக் க்ரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண் கொண்டு பார்க்காதீர்கள்,கண்ணுக்கு
பாதகம் விளையும் என்றெல்லாம்
விக்ஞானிகள் சொல்கிறார்கள்
ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா
அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப்
பார்க்க முயலாதீர்கள்,
தியானம் , யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு
இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை
விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது
ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே

பாகம் 6.
2. விளங்க முடியாக் கடவுளா ..?அல்லது சக மனிதனா
இந்தக் கேள்விக்கு
ஒரு பதில் உண்டு
கடவுள் விளங்க முடியாதவனல்ல
விளக்க முடியாதவனும் அல்ல
விளக்கவும் முடியும் ,விளங்கவும் முடியும்
ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும்
ஞானமும் வேண்டும்

தமிழ் மறை நூல்களில்
“ கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் “
என்று ஒரு கூற்று உண்டு
அதற்குப் பொருள்
மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர்
கடவுளக் கண்டிருக்கின்றனர்,
அதாவது அவர்கள் கடவுளை கானும் அளவுக்கு
தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி
அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர்
சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்
பார்க்கவேண்டும் என்றாலும் கண் இமைகளைத்
திறக்க வேண்டும் ,அப்போதுதான் பார்க்க முடியும்
கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால்
பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ
அது போலத்தான் கடவுளும்
அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால்
அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை,மனதை ,நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்

கணிணியில் மென்பொருளைத்தாக்கும் கிருமிகள்
இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின்
செயல்பாட்டை வைத்து அறிய முடியும்
ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம்
அதுபோல நம் கணிணியை கிருமிகளிடமிருந்து
காப்பாற்ற எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள்
செலுத்தி அதைப் போக்க முடியும்
ஆனால் கணிணிக் கிருமிகளை எதிர்க்கும்
சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 5

சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான,மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலேகண்கூடாகக் கண்டவன் நான்
ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும் ,ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்,அருள் புறிகிறான் என்பது சத்தியமான உண்மை
ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி ,ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும் ,மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களை களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை
இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப் படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம் உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின


இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை
ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும்
இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும்
விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது
அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து
அந்தக் கல்விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் விதமாக
பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள்
செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி
ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை
அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை
அந்தக் கல் விக்ரகதின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக
சக்தி உள்ளவனாக மாற்றி,பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு ,மந்திர உருவேற்றி
அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை
எல்லோரும் வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை அந்த தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது

இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை
நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின
இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை
தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்
அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 4

எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது,

இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்

எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது
ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த,பாசம் வைத்திருந்தவன் நான் ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன் ,என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்
அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து,என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்,ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன்,
அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும் ,கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும், அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்


என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது, மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர்,
அப்போது என்னுடைய மூத்த (சகோதரி)ராஜாமணி அவர்கள் என்னை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம்
“ இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு, இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய் விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள்
என் காதில் அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது, என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது, வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன், மருத்துவர்களே ஆச்சரியப் படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது, இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும், மிகச் சாதாரணமான ,ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல் நலம் குன்றி அன்றே வலிப்பு கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்,
என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்…
“ உயிரை, ஆயுளைக், கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன்
இன்று வரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை
அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய் அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 3.

ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குதான் இதை உதாரணமாக,சொன்னேன்

நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம்
ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர்,அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன்,பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாக கயிறால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை, இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல் படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது,இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான் ,ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்

பொதுவாக ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்கு சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்,அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம், ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது , கூட்டாக முயற்சி செய்யும்போது,அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது
பெற்றோர்கள், மனைவி ,குழந்தைகள்,அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டு பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது ,தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி, இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம் நாம்,பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்
ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படி துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 2.

மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்துவர்கள்,எப்போதும் நல்ல சக்தி ஒன்று,கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு,கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்
கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது)நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்
சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப் பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது
நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றை செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்கு துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..?அல்லது சக மனிதனா?
என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது, விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையை காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான், கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும்,அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்

" குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று பெரியவர்கள் சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும் , அனைவரும் ஒற்றுமையாக ,இயல்பாக, சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாக பழகி வாழ்நாட்களை இனிமையாக கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான் இதை எழுதுகிறேன்

இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்,தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்,
ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும்,மாற்றுக் கருத்துக்களும் இனிமையான,இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன், கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல், நாம் எழுத முற்படுவோம்,அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்
ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன் ,இந்த மடல் நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன்,நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால்,அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை

என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம்,அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரை பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன், இதை தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு


Tuesday, February 24, 2009

ஆன்மீகம்-- 1. கடவுளும் மனிதனும்

“ஆன்மீகம்”


ஆன்மீகம் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது ஒரு நண்பர் என்னைக் கேட்ட ஒரு கேள்விதான். அந்தக் கேள்வி, "விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? உண்மையில் எது முக்கியம்?" என்கிற கேள்வியே. என்னை மிகவும் சிந்திக்க வைத்தது அதற்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில் எழுதி இருக்கிறேன்.

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும் சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகச் செயல் பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால், புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது. நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் எல்லோருடைய முழு மனதோடு கூடிய சம்மதத்தையும் எம்மதமாயிருந்தாலும் சரி, அனைத்து சகோதரகளும் "மனிதம்" என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம் முழு மனதோடு. கடவுள் நம்பிக்கை, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம் எல்லாமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை. அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வு அவசியமற்றது என்று தோன்றுகிறது.

"கண்ணுக்குத் தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்கையில் மிக முக்கியமான பங்காகக் கடவுளை வைத்திருக்கிறானே“ என்கிற பதில் நம்மை யோசிக்க வைக்கிறது. இவைகள் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது. மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வார். மேலும் விஷயமறிந்தவர்கள், எப்போதும் நல்ல சக்தி ஒன்று, கெட்ட சக்தி ஒன்று, ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு இரு சக்திகளும் நம்மை ஆட்டிவைக்கின்றன, கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.

சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் சொல்லியபடி திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது, நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்கக் கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லை. விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக் கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாமெதையுமே செய்ய முடியாது. சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஆக வேண்டும், அதுதான் ஆன்மீகம். கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்க முடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்.

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும், மனிதம் காப்பாற்றப்பட்டாலே ஆன்மீகம் காப்பாற்றப்படும்.நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று

கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்

கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,



குளிக்கலாம் வாரீகளா

' ஆரோக்கியக் குளியல் '

தினமும் குளிப்பது எதற்கு என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயாரைப் பார்த்துக் கேட்டதாகவும், அதற்கு அந்தப் பெண்மணி எப்படிப் பதில் கூறினால் அந்தக் குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தெரியாமையினால் பதில் கூறத் தயங்கியதாகவும் ஒரு செய்தியை மழலைகள் தளத்தில் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பல பெரியவர்களுக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. அவர்களுக்கும் புரியும் வகையில் குளையலைப் பற்றி யோசிப்போமா?
குறத்தி மகன் என்னும் திரைப்படத்தில் சுருளிராஜன் என்னும் நகைச்சுவை நடிகர் குறவர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "படிக்கச் சொன்னா பரவா இல்லேப்பா குளிக்கச் சொல்றாங்கோ" என்பார். அதைக் கேட்டவுடன் நமக்குத் தானாக சிரிப்பு வரும்.

எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள், குறவர்கள் குளிப்பதே கிடையாது. அவர்களைக் குளி என்றால் எவ்வளவு கடினமாயிருக்கும் அவர்களுக்கு? சமீபத்தில் அன்பே சிவம் என்னும் ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏதோ சொல்ல முயல இடைமறித்து, "போதும் சார், எனக்கு குளிக்கக் கூடத் தெரியாதா? அதுக்குக் கூட நீங்க சொல்லித் தரணுமா? போய் வேலையைப் பாருங்க" என்பார் மாதவன்.

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகிறோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கிறோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், "என்ன இன்று காக்காய்க் குளியலா?" என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள்.

என்னடா ஒரு சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போருக்கு இன்னும் ஏன் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே. இப்போது சொல்கிறேன்.

நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.

குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.

குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.

அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.

அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.



அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.

நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.

சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.

ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.

வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.

முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.

இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?

மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ


தாழம்பூவே தங்க நிலாவே

” தாழம்பூவே தங்க நிலாவே ‘




மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து, அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும் ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள், முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்.

நாளை வைகுண்ட ஏகாதசி, எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,

உத்திரமேரூரிலிருந்து ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள் தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம். அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்.

பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன். ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது.

நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த பிறகு நீ சூடிக்கொள் என்று.

எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே அனேக காரணங்கள் தோன்றினாலும் நமக்கு ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்.

பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து.

இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள். அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்.

அந்த வழக்கத்தினால், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைபிடிக்கிறாள்.

ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று.

அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன், அதன் ருசி சரியில்லாமல், என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம். அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்.

சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன் கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று, தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!

அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது.

ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன.

தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு வண்ணமாகவே, சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது. இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது.

அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும், நம் வீட்டுக்கு வா கண்ணா, என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண்ட வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்க வைக்கிறது.

சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய பரமன் கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறேன்.

அப்படி இருக்க ஸ்ரீரங்கன் மேல்பக்தியும், அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது.

என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது.

இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே, அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளா?

அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளா?

அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை?

அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ





Sunday, February 22, 2009

சிறு வயதில் என்னுடைய பாட்டியும் ,தாயாரும்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு, என்று பாடியும் ,
ஆனை ஆனை அழகர் ஆனை, அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை,
குட்டியானைக்கு கொம்பு முளைச்சுதாம் ,பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம், என்று சொல்லும் தமிழ் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம், மார்பிலே அம்பைத் தாங்கிய தன் பிள்ளையின் வீரம் கண்டு நெக்குருகி மார்பிலே பால் பீரிட்டெழ பிள்ளை இறந்த துக்கத்தையும் மறந்து,புறமுதுகு காட்டாத பிள்ளையைப் பெற்றெடுத்ததற்காக பெருமை கொண்ட வீரத்தமிழ்த் தாயின் கதைகள் கேட்டு வீரம் கொண்டோம்,

நம்முடைய பாரதியாரின் கனல் தெறிக்கும் பாடல்களை நம்மைப் பெற்றவர்கள் வாயாலேயே பாட அதைக்கேட்டு தேசப்பற்றும், ஞானமும் அடைந்தோம், தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் கண்ணனின் திருவிளையாடல் கேட்டு இளமை இனிமையென கண்டோம்,கொட்டடடா ஜெய பேரிகை கொட்டடா என்னும்பாடலைக் கேட்டு வீர முழக்கமிட்டோம்,ஓடி விளையாடு பாப்பா என்கிற பாட்டைக் கேட்டு வாழ்க்கையில் எந்தஎந்த பருவத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொண்டோம், ”சகலகலாவாணியே சரணம் தாயே சங்கீத வீணா பாணியே”

என்னும் பாடலைக் கேட்டு தமிழில் துதி செய்யக் கற்றுக் கொண்டோம்

அந்த சுந்தரத்தமிழ் இருக்க ,
லிட்டில் லிட்டில் ஸ்டார் பாட்டு எதற்கு ?

இதை நம் மக்கள் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை தமிழிலே ,சுந்தரத் தமிழிலே அளிக்கவேண்டும்,முதலில் பெரியவர்களுக்கு ஆங்கில மோகம் தீரவேணும்,எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழியை முதலில் அறிதல் அவசியமன்றோ,?
எனக்கு ஒரு ஆச்சரியம், ஆங்கிலம் தெரியாமலே இத்துணை நாட்கள் நமக்கு தமிழிலேயே எல்லாவித வாழ்க்கை முறைகளையும் பெற்றோர்கள் முறையாக கற்றுக் கொடுத்தனரே, இப்போது அந்த ஞானம் எங்கு போயிற்று

விலங்குகள், பறவைகள், கூட எந்த தேசத்திலிருந்தாலும் அதன் தாய் மொழியிலேயே தன் குட்டிகளுக்கு கற்பிக்கிறது,
அன்னிய நாட்டில் இருக்கும் பசுக்கள் கூட அம்மா என்றே தமிழை உச்சரிக்கின்றன,நாம் விலங்குகளை, பறவைகளை விட கீழானவராய் ஆகிவிட்டோமா?



சிரிப்புத்தான் வருகுதையெ-உலகைக்கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையே என்னும்பாடல் ஷண்முகப்ரியா ராகத்திலும்,

அகத்தியர் தருந் தமிழை அன்னைபோல் வளர்த்தனை

சகத்திலே உனைப்போலுண்டோ தாய்மொழிக்குழைத்தவர்

இகத்திலே தமிழ்த்தவம் இயற்றிச் சங்க நூல்களின்

சுகத்திலே குளித்தனை சுவாமிநாத வள்ளலே என்னும் பாடல் காமாஸ் ராகத்திலும்


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்னும் மஹாகவி பாரதியாரின் பாட்டுகள் ஒலித்த நாட்கள்,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்- மிடிப் பயம் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்
என்னும் பாடல் புன்னாக வராளி ராகத்திலே ஒலித்த அந்த நாட்கள்

வந்தே மாதரம் என்போம்- எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்என்னும் ஆனந்தக் களிப்பு ராகத்திலே பாடல் கேட்ட அந்த நாட்கள்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

என்னும் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில் கேட்ட அந்த நாட்கள் இவையெல்லாம் மீண்டும் வாராதோ என்று ஏக்கமாய் இருக்கிறது

அந்தநாள் இனி வருமோ-சொல்லடீ அம்பலப் பசுங்கிளியே

என்னும் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் ஆரபி ராகத்திலே காதில் ஒலிக்கிறது,

என்ன செய்ய?

அன்புடன்

தமிழ்த்தேனீ


Thursday, February 19, 2009

நிலப்பிரண்டை

சமீபத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்னும் தொலைக் காட்சித் தொடரில் நடிப்பதற்காக சென்ற ஒரு இடத்தில் எனக்கு மனைவியாக நடிக்கும் ஒரு பெண்மணியின் தகப்பனார் சேலத்து ஆசாமி,சுமார் 80
வயது இருக்கும், அவரிடம் அவரிடம் ஆத்மஞானம், இந்துமதம், நம் நாட்டின் பெருமைகள், என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக அவருடைய ஊரான
சேலத்தைப் பற்றி கேட்டேன், அப்போது அவர் கூறிய விவரங்களை வீட்டுக்குவந்து எழுதினேன்’அந்த விவரங்கள்:


சேலத்தில் மிகவும் விசேஷமான
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

மலைமேல் அர்தநாரீச்வரர் திருக் கோயில்
ஆங்கே ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிருப்பிக்கும் வகையில் இறைவன் ஆண்பாதி,பெண்பாதியாய் அர்தநாரீஸ்வரராய்க் திருக் கோலம் கொண்டுள்ளார்

ஆங்கே மலைமேலே உள்ள கருப்பக்கிரகத்தில்
அந்த அர்தநாரீஸ்வரர் பெருமானின் திருவடியின் கீழே
ஒரு சுனை இருக்கிறது எப்போதும் வற்றாத சுனை அது
அருச்சகர் அர்ச்சனை முடித்த பின் அந்தச் சுனையிலிருந்து நீரை எடுத்து பக்தர்கள் மேல் தெளிப்பர், பக்தர்களும் அந்த நீரை அருட் ப்ரசாதமாய் வணங்கி ஏற்றுக் கொள்வர்

அதே சேலத்திலே கஞ்ச மலை என்றொரு மலை இருக்கிறது, ஆங்கே சித்தர் கோயில் ஒன்றும் இருக்கிறது, இன்றும் அங்கே சித்தர்கள் வலம் வருகிறார்களாம்,
அந்த மலையின் அடிவாரத்திலே தடையாண்டி ஊற்று என்றொரு ஊற்று இருக்கிறது, ஈரோடு ,சீரகாபாடி பக்கம் வருகிற இந்த ஊற்றுத்தண்ணீர் பல வியாதிகளுக்கு,
குறிப்பாக மேகரோகம்,போன்ற சரும வியாதிகளை குணமாக்கும் மூலிகைத்தண்ணீர் என்பது நம்பிக்கை
ஆனால் உடலில் சோப்பு போன்றவைகளை தடவிக் கொண்டு குளிக்கக் கூடாது,என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன. முழுநிலவு நாளிலும் , மறை நிலவு நாளிலும் பக்தர்கள் அந்த மலையின்மேல் சென்று இரவு தங்குவார்கள்,உண்பதற்கு வேண்டிய,உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் சென்ரால் போதும், சுத்தமான குடிதண்ணீர் ஆங்கே மலைமேல் கிடைக்கிறது ஆங்கே மலைமேல் கிணறு மற்றும்,சுத்தமான ஓடை இருக்கிறது, அடிவாரத்தில் உணவு விடுதிகள் இருக்கின்றன,ஆனால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் ,அசைவ உணவு விடுதிகளுக்கு அங்கே தடை விதித்திருக்கிறார்கள், ஒவ்வொரு முழுநிலவு நாளிலும்,மறை நிலவு நாளிலும்,குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வருகிறார்கள், அதேபோல கொல்லி மலையிலும்,இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பன்ணை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் செம்மேடு, சுவாலக்காடு, அரபளீஸ்வரர் திருக்கோயில்,
கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்,இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்ம் அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்
கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்,அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம்,அன்னாசி,,பேரிக்காய்,கொய்யா, மாம்பழம், காப்பி,அதிகம் விளைகிறது,மான்களும் மயில்களும் அங்கே சுற்றித் திரியும் அந்தக் கொல்லி மலையின் அடிவாரத்திலே

வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள்,அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக் கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி 300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில்
குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள்

1.தலைவணங்கி வேர்

இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்க மாட்டார்கள் ,பணிந்து போவார்கள் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்,

2,மலைமுழுங்கி வேர்

இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான
காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று சொல்லுகிறார்கள்,அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார்,என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த
வேர்,எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வர இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக் கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள், நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்றுசொல்லுகிறார்கள், மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான் எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமானஇடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால் அந்த செடி மிக நன்மை பயக்குமாம்சமீபத்தில் கொல்லி மலைக்கு சென்றிருந்த ஒரு நண்பர் கூறினார் , அவர் நடந்து வரும் போது செடிகளே இல்லாத சமதரையில் திடீரென்று அவர் கண்ணில் பட்டிருக்கிறது அந்தச் செடிகள், அவை தன்னைத்தானே சுற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்த அவர் அந்தச் செடிகளின் அருகிலே சென்றவுடன் அவை சுழலுவதை நிருத்தி விட்டனவாம், அதன் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்திருக்கிறார்,அவருக்கு எந்த ஒரு மணமும் கிடக்கவில்லை ,அவ்வழியாக வந்த ஒரு பெரியவர் இவரிடம் வந்து என்ன பார்க்கிறாய் என்று கேட்க இவர் அந்தச் செடியைக் காண்பிக்க கையை அங்கே நீட்டிய போது அந்தச் செடிகள் இருந்த சுவடே தெரியவில்லையாம்

மீண்டும் அந்தப் பெரியவர் கையைக் காட்டியவுடன் அந்தச் செடிகள் பரவலாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது,அப்போது அந்த பெரியவர் கூறினாராம் அந்தச் செடிக்குப் பெயர் நிலம் பிரண்டை ,அது ஒரு மூலிகை என்று சாதாரணமாக நம் வீட்டில் வைத்திருக்கும் துளசி, வேப்பிலை,கருவேப்பிலை, போன்ற செடிகளில் இருந்து கூட அந்தச் செடிகளின் அனுமதியை மனதாரக் கேட்டு பின்தான் பறிக்க வேண்டும் என்பர், அப்படி இருக்க அபூர்வ மூலிகைகளை பறிக்கும் போது காப்பு கட்டி மந்திர உச்சாடனம் செய்து எடுத்தால்தான் பலன் தரும்,அதிலும் குறிப்பாக அந்த மந்திர உச்சாடனங்கள் ஒவ்வொரு மூலிகைக்கும் ஏற்றவாறு நாட்கள், நேரங்கள், மாறு படும் , உருவேற்றும் பொழுது உருவேற்றுபவரின் மனதிலேயே ஒரு அறிகுறி காட்டுமாம், உச்சாடனங்களின் நிறைவை.


அன்புடன்
தமிழ்த்தேனீ