திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, October 5, 2009

கனவுப் ப்ரபஞ்சம்

நேற்று வழக்கமான பணிகள் முடிந்து
தூங்கப் போனேன், நல்ல தூக்கம்

அதன் நடுவே நாம் தூங்குகையில் நம் ஆத்மா லோக சஞ்சாரம் செய்யக் கிளம்பிவிட்டது போலும்
மனுஷன் கொஞ்சம் அசந்தா போதும்
அவனோட ஆத்மாவே அவனை விட்டுட்டு சுற்றுலா கிளம்பிவிடுகிறது,அப்படி இருக்க யாரை நம்புவது.?

அது போல ஆதமா சுற்றுலா செல்லும்போதுதான் கனவுகள் வரும், அந்த ஆத்மா எங்கெல்லாம் போகிறதோ, யாரையெல்லாம் பார்க்கிறதோ,
அந்த செயல்களின் தொடர்பாக நமக்கு கனவுகள் வரும் என்று நினைக்கிறேன்,

நேற்று என்னவோ தெரியவில்லை எனக்கும் என் தந்தையார் திருவாளர் ரங்கஸ்வாமி ஐய்யங்கார் அவர்களுக்கும் ஒரு சந்திப்பு,
ஏதேதோ பழைய நிகழ்வுகளின் சிந்தனைகள்

காலையில் கண் விழித்தேன்
காலைக்கடன்களை முடித்துவிட்டு கணிணியைத் திறந்தேன்

என்னுடைய கணிணியின் திரையில்,
எம் எஸ் என், யாஹூ, கூகுல்டாக், என்று ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது, ஏதோ ஆகாயத்தில் நகஷத்திரங்கள் மின்னுவது போல ஒவ்வொன்றாக மின்னத் தொடங்கிற்று

எம் எஸ் என் மெசஞ்சர் தோன்றியது

அதில் ரங்கஸ்வாமி தொடர்பிலிருக்கிறார் என்று காட்டியது

ப்ரபஞ்சத்துக்கும் நம் கணினிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று புலனானது

என்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி

அன்புடன்
தமிழ்த்தேனீ






Thursday, October 1, 2009

விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே  என்னும் கட்டுரை  சென்னை ஆன் லைனில் வெளியிட்டிருக்கிறார்கள்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=2933c31a-15cf-40e4-a2b5-a76e292d5ad5&CATEGORYNAME=Thene
“ மெய்ஞானம் “




நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒவ்வொரு செயல்களும், பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ச்சி செய்து அறிவு பூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் ,

நம் முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்ட மெய்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்,அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன், இதே போல்

அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்,

மெய்ஞானம்தான் விஞ்ஞானம் , விஞ்ஞானம்தான் மெய்ஞானம்,

என்பதை கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதை கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர், அந்த திருஷ்டி கழிய, சுற்றிப்போடுதல்,அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்



அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில்வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்தஉப்பையும், காய்ந்தமிளகாயையும், எரிகின்ற நெருப்பில்இடுவார்கள், அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும், காய்ந்தமிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத்தாக்கும்,



இந்த நிகழ்வில் உப்பும் ,காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த ,வேதிய மாற்றம்நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, விஞ்ஞானப் ப்ரகாரம் உப்பும் காய்ந்தமிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம் நம் நோயைத்தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது



கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் ,சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்த தண்ணீருக்கு அளிக்கும்,அந்த சிவப்புத்தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் , தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,



அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய ,மாற்றத்தால் விளையும் மணம் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து நம் நாசியில் புகுந்து நமக்கு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது



அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர் பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி , இந்தக் கிருமி நாசினி

பசுமாட்டின் சாணத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது



அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை

ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடி நீரையும் அளிக்கிறது, பயிர் செழித்து வளரத்தேவையான இயற்கைச் சத்துக்களை பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துக்கள் தாமாகவே கலந்து அந்த சத்துக்களும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு , மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியல் விந்தையால் நீராக , சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது,



ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞானிகளாலும்

ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்த பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள்

அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது , அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவைகள் எல்லாவற்றையும் அதாவது நம்முடைய மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்



ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை



மெய்ஞ்ஞானம் எதை கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது





இயறகையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவைகளில் உள்ள நன்மைகளை அடைவோம்



ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது



அன்புடன்

தமிழ்த்தேனீ

rkc1947@gmail.com -- http://peopleofindia.net -- http://thamizthenee.blogspot.com