திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, March 14, 2009

தமிழும் தரமும்

வள்ளுவனை எடைபோட்டோம், கம்பருக்கு சடைபோட்டோம்
தெள்ளிய தொல்காப்பியத்தையும்,கிள்ளிப் பார்த்தோம்
அகநானூறும் புறநானூறும் அவிழ்த்து முடிந்து ஆராய்ந்தோம்
ஔ  வ்வை அலசினோம் அவையில்  விவாதித்தோம்
இலக்கணமும் இலக்கியமும் வழக்கினிலே வரும்போது
கணிணியும் நாமும் செய்யும் தற்செயல் தவறுகளை
பதிப்பித்தே வாக்குவாதம் வளர்க்கிரதே
யாருக்கும் எண்ணமில்லை தமிழின் தரம் குறைக்க
தமிழ்வளர்க்க ஆர்வம் கொண்டே,அதன் தரம் ஆராய்ந்தோம்
கொட்டை வடி நீர் கேட்டால் கேட்டால் துவண்டு போய் விழிக்கின்றோம்
காப்பி வேண்டுமெறே உரைத்தால் என்றுரைத்தால் அளித்தே மகிழுகின்றோம்
தமிழென்ன கலப்பினமா, தனித்திருக்கும் தவமணியா
இனித் திருத்த அதிலென்ன ஏற்கெனவே குறைபாடா
இருக்கும் தமிழ் நற்தமிழே சந்தேகம் நமக்கு வேண்டாம்
திருத்துகிறோம் என்று சொல்லி அதன் தரம் குறைக்கவேண்டாம்
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
ஆரியமோ திராவிடமோ ஆதி தமிழுக்கு பேதமில்லை
நமக்குள்ளும் பேதமில்லை ,சொல்வழக்கில் பழகு தமிழ்
வளருமிங்கே புரிந்தோமில்லை
புரிந்து கொண்ட அழகுத்தாய் தமிழ்தானே ஏது எல்லை
அழைக்கின்ற கிள்ளை மொழி அவளுக்கோ மழலைதானே
அன்போடு ஓடிவந்து,தன் மடியில் தானிட்டு
நம் மேலே தலைப்பிட்டு அமுதம் தந்திடுவாள்
அன்னையவள் கருணை கொண்டு
பிறகென்ன பெருங்கவலை ,தமிழ் வளர்க்க இன்னொருவர் வரவேயில்லை,தமிழழிக்க இங்கொருவர் பிறக்கவில்லை
இத்தனை கோடி மாந்தர்களைப் பெற்றெடுத்து பேணிக்காத்து
அன்போடு அரவணைத்து அற்புதமாய் தன்னையும் தானே காத்து வளர்க்கும் தாந்தோன்றித் தமிழன்றோ தலைசிறந்த மொழியன்றோ ஆகையினால் தாயாய் நின்று நமை வளர்க்கும் தமிழ் தானே
ஆதவனின் பாதை தன்னை அறுதியிட ஆருண்டு
யாதுமாகி நின்ற தமிழ் எங்கும் நிறைந்த தமிழ்
தானாய் வழி நடக்கும் தரணியே தலை நிமிரும்
தமிழை வழிநடத்த நமக்கிங்கே தகுதியில்லை
மொழியொன்று எப்போதும் புறிந்து கொள்ள
அடுத்தவரின் மனதிருப்பை அறிந்து கொள்ள
பக்குவமாய் இதை உணர்ந்து மனிதம் காப்போம்

நம்மில் ஒரு பகுதி தமிழில்லை...
தமிழின் சிறு துகள்தான் நாமன்றோ
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
இருக்கும் தமிழ் கற்றிடவே நமக்கிங்கே போதாது இருக்கும் ஆயுள்
பாமரர்க்கும் புரிவதற்கு செய்வோம் செய்யுள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

\

Sunday, March 8, 2009

மகளிர் தினம்

இதிகாச புராணங்களிலும், சரித்திரங்களிலும் படித்துப் பார்த்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்மணிகள் பொங்கி எழுந்து,


தவக் கோலமோ, ஊர்த்துவக் கோலமோ கொண்டனர்

என்று செய்திகள் கூறுகின்றன



அப்படி வெகுண்டெழுந்த பெண்மணிகளை சாந்தப்படுத்தும் விதமாகவே ஆதி சங்கரர் பதித்த ஸ்ரீசக்கரம் போன்றவைகளை பதித்தோ, அல்லது அவர்களுக்கு விக்ரகங்கள் வடித்து, பலி கொடுத்தோ அவர்களின் உக்கிரத்தை தணித்திருக்கின்றனர்,



தாய்மை உணர்வுள்ள பெண்ணை சினமூட்டுவானேன்

பிறகு அந்த மஹா சக்தியின் உக்கிரம் தாங்காமல் அவளிடம் வழிபாடு நடத்துவானேன், இதே செய்கையைத்தான் ஆதி காலம் தொட்டு செய்து வருகிறோம்



ஆனால் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்



மகளிர்க்கென்று தனியாக ஒரு தினம் வேண்டாம்,

மகளிர் இல்லையென்றால் ஜனனமே கிடையாது

ப்ரபஞ்ச வளர்ச்சியே கிடையாது,

அப்படிப்பட்ட மகளிரை தினமும் அளிக்க வேண்டிய மரியாதையை அளித்துப் போற்றுவோம்



அன்புடன்

தமிழ்த்தேனீ