திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, December 21, 2010

” கர்ப்ப வாசம் சிறுகதை



வல்லமை இதழில் “ கர்ப்பவாசம் “ சிறு கதை படிக்க

http://www.vallamai.com/?p=1489  சொடுக்குங்கள்




அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, December 15, 2010

இனிய குரல்

 ஒரு குறிப்பிட்ட ப்ரபலமான வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு, வங்கியிலிருந்து ஒரு இனிய குரல் அந்த உரையாடலைக் கீழே அளித்திருக்கிறேன்

டிர்ரீங் டிர்ரிங்



நான் : ஹலோ

இனிய குரல்: சார் காலை வணக்கம்

நான் : காலை வணக்கம்

இனிய குரல்: சார் எங்க வங்கி சார்பா உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?

நான் : தாராளாமா கேக்கலாம்

இனிய குரல்: எங்க வங்கியின் சார்பாக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன்

நான் ( மனதுக்குள் ஏமாளி என்றா)   அப்படியா சொல்லுங்க

இனிய குரல்: நீங்க க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான்: வெச்சிருக்கேன்

இனிய குரல்: எங்க வங்கியோட க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான் : இல்லையே

இனிய குரல்: கவலைப்படாதீங்க சார் அதுக்குதான் உங்களைத் தொடர்பு கொண்டேன், உங்களுக்கு எங்க வங்கியின் க்ரெடிட் கார்ட் வழங்கப் போறோம்

நான் : மிகவும் சந்தோஷம்
இனிய குரல்: எங்க அலுவலர் ஒருவர் உங்க வீட்டுக்கு வருவார், அவரிடம் உங்களோட அடையாள அட்டை, அல்லது பான் கார்ட், அல்லது ஓட்டுனர் உரிமம் போன்றவைகளைக் காட்டுங்கள்

நான் : சரி காட்டுகிறேன்

இனிய குரல் : அவர் ஒரு விண்ணப்ப படிவம் அளிப்பார், உங்களிடம் கேட்டு விவரங்கள் அவரே எழுதிக்கொள்வார்,  அதில் உங்கள் கையெழுத்தை இடுங்கள், பிறகு எழே நாட்களில் உங்கள் க்ரெடிட் கார்ட் உங்கள் வீடு தேடி வரும்

நான் : மிகவும் நன்றி , சரி இனிய குரலே இவ்வளவு நேரம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னேன் சில நிமிடங்கள் உங்களால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

இனிய குரல்: நிச்சயமாக உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பது எங்கள் பொறுப்பு

நான்: அப்படியானால் நன்றி , நீங்களும் என் மகள் போலவே கடமை உணர்வோடு பேசுகிறீர்கள், எனக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது.

இனிய குரல்: நன்றி சார் பலபேரு எங்க கிட்ட எரிஞ்சு விழறாங்க நாங்க எங்க கடமையைத்தானே செய்யிறோம்

நான்: ஆமாம் பலருக்கு பொறுமை இருப்பதில்லை ,ஆமாம் நீங்கள் க்ரெடிட் கார்ட் வைத்திருக்கிறீர்களா?

இனியகுரல்: எங்கள் வங்கி வைத்திருக்கிறது

நான் : உங்களிடம் இல்லையா?

இனிய குரல்: இல்லை ஐய்யா உங்களுக்கு எங்கள் வங்கியிலிருந்து அளிப்பார்கள்

நான்: அப்படியானால் உங்களுக்கு அளிக்கவில்லையா?

இனிய குரல்: எங்களுக்கும் அளிப்பார்கள் , ஆனால் நான் வாங்கவில்லை

நான்: ஏன் அப்படி இனிய குரலே

இனிய குரல்: சார் அது ரொம்பத் தொந்தரவு, க்ரெடிட் கார்ட்தான் இருக்கேன்னு நல்லி, குமரன், ஜீ ஆர் டீ தங்க மாளிகைன்னு அடிக்கடி போயி செலவு பண்ணுவோம், ஆனா பணத்தை திருப்பிக் கட்டும்போது குறிப்பிட்ட நாளுக்குள்ளே கட்டலேன்னா வட்டி போடுவாங்க, அனாவசியமா மாட்டிக்குவோம், எதுக்கு இந்த வம்புன்னுதான் வாங்கலை

நான்: புத்திசாலிப் பொண்ணும்மா நீ, நீ கட்டாட்டி உங்க அப்பா கட்றாரு, ஒரு க்ரெடிட் கார்ட் வாங்கி வெச்சிக்க வேண்டியதுதானே

இனிய குரல்: சார் எங்க அப்பா கட்ட மாட்டாரு, திட்டுவாரு

நான் : அடடா அதெல்லாம் கவலைப்படாதேம்மா திட்டினாலும் அவுரு உங்க அப்பாதானே, தைரியமா வாங்கிக்கோம்மா ஒரு க்ரெடிட் கார்ட், நானே உங்க வங்கிக்கு வந்து விண்ணப்ப படிவமெல்லாம் நிரப்பி உனக்கு உதவி செய்யறேன்

இனிய குரல்: வேண்டாம் சார் எனக்கு க்ரெடிட் கார்டே வேண்டாம், வேற வழியில்லாமே இந்த வங்கி எனக்கு தரசம்பளத்துக்காக மனசாட்சியை அடகு வெச்சிட்டு உங்களைமாதிரி நல்லவங்களுக்கு எங்க வங்கியோட க்ரெடிட் கார்டை எப்பிடியாவது விக்கணும்னு நாங்க ட்ரை பண்றோம், ரொம்ப ஆபத்து சார் சார்,க்ரெடிட் கார்டே வெச்சிக்கக் கூடாது சார்.

நான்: சரிம்மா உனக்கு எப்பவாவது க்ரெடிட் கார்ட் வாங்கணும்னு இருந்தா எனக்கு போன் பண்ணும்மா நானே வந்து வாங்கித் தரேன்

இனிய குரல்: ரொம்ப நன்றி சார் வணக்கம்

நான் : வணக்கம்



(தொல்லைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது)

அன்புடன்

தமிழ்த்தேனீ

Friday, November 26, 2010

” அப்பிடி ஒண்ணும் இல்லே”

 ” அப்பிடி ஒண்ணும் இல்லே”




கடவுளை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு



நானும் கடவுளிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்

அவரும் பதில் சொன்னார் கடைசியில் தெளிந்தேனா? குழம்பினேனா?



நான் : கடவுளே உலகில் எத்துணை இன்பம் வைத்திருக்கிறாய், ஆனால் உனக்கு ஏன் இந்தப் பாரபக்‌ஷம்? சிலருக்கு மட்டும் கிடைக்கச் செய்கிறாய், பலருக்கு கிடைப்பதே இல்லை ஏன் இப்படி



கடவுள்: உன் கேள்வியே தவறு, எல்லாவித இன்பத்தையும் நான் படைத்து உங்கள் அனைவரையுமேதான் அனுபவிக்கச்சொன்னேன் .ஆனால் நீங்கள் பணம் என்று ஒன்றை உண்டாக்கிவிட்டீர்கள். அந்தப் பணத்திற்கு அளிக்கும் மதிப்பை உங்களையெல்லாம் உண்டாக்கிய எனக்கு கூட அளிப்பதில்லை.

நீங்கள் உருவாக்கிய பணத்தை யார் அதிகமாக சம்பாதிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள், மற்றவர்கள் அனுபவிக்க முடியாதபடி நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து விட்டீர்கள்.அந்த விலை கொடுத்தால் யார்வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அதில் தடையில்லை என்னும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்,நானென்ன செய்வது



நான் : அது சரி ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறீர்! சற்றே அமைதியாக பேசுங்களேன்



கடவுள்: ஆமாம் எனக்கே மூச்சு முட்டுகிறது இந்தப் பணத்தை நினைத்தால். கோவம் வருகிறது, நீங்கள் கண்டு பிடித்த பனத்தை ஈட்ட என்னையே கேவலப்படுத்திவிட்டீர்கள்.

என் மனைவிக்கு லக்‌ஷ்மி என்று பெயரிட்டீர்கள் சரி , ஆனால் அவள்தான் செல்வத்துக்கு அதிபதி என்றீர்கள் அதுவும் சரி, அதென்னப்பா நீங்கள் வீட்டில் மாட்டும் நாட்காட்டிகளிலும், உங்கள் பூஜை அறையில் இருக்கும் லக்‌ஷ்மியின் திரு உருவப் படத்திலும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி ஏதோ தங்கக் காசுகளைக் கொட்டுவது போல அச்சடிக்கிறீர்கள்? பணமழை பொழிவது போல அச்சடிக்கிறீர்கள்? நீங்கள் கண்டு பிடித்த பணத்தை எப்படி எங்களிடம் எதிர் பார்க்கிறீர்கள் என்றே புரியவில்லை,



அது மட்டுமா நீங்கள் கண்டு பிடித்த பணத்தை ஈட்ட திருட்டு, கள்ளக்கடத்தல், கொள்ளையடித்தல், விபசாரம், சாராயம், குழந்தைகள் கடத்தல், தாலிக்கொடி பறித்தல், சந்தன மரம் கடத்தல், நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்றல், கட்சி மாறுதல், எல்லாத் துறைகளிலும் லஞ்சம் வாங்குதல் பங்கு மார்க்கட்டு பேரங்கள் ,மொத்தமாக நாட்டின் செல்வத்தையே சுறண்டி உங்கள் வீட்டுக்குள் கொண்டு போய் வைக்க மெகா ஊழல்கள்

இத்தனையும் செய்கிறீர்கள்.



அதைக் கூட பொறுத்துக்கொள்கிறோம், ஆனால் எங்களுக்கு கோயில் கட்டி விக்ரக வடிவில் எங்களைப் ப்ரதிஷ்டை செய்து, தினமும் எங்கள் தலைமேல் தேன் ,பால், பஞ்சாமிருதம், போன்றவைகளை ஊற்றி ஊற்றி எங்களை திக்குமுக்காடச் செய்து நீங்கள் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயரத் தூக்கி நாங்கள் படும் கஷ்டங்களை பார்க்கச் சகிக்காமல் கண்களை வேறு மூடிக்கொண்டு ஏதோ எங்களையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் பார்ப்பது போன்ற ஒரு பாவனையில் பக்திமான் வேடம் போடுகின்றீர்கள்.



இத்தனையும் செய்து விட்டு எங்களைக் காவல் காக்க காவல்காரர்களை நியமிக்கிறீர்கள். அந்தக் காவல்காரர்கள் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு எங்கள் கதவருகே வாயிலெடுத்துக்கொண்டே படுத்துக்கொள்கிறார்கள், நாற்றம் குடலைப் புடுங்குகிறது, கதவை வேறு பூட்டி விடுகிறீர்கள் ஓடக்கூட முடியவில்லை, இவ்வளவு அவஸ்தையையும் நாங்கள் பட்டு உங்களைக் காக்கிறோம், ஆனால் நீங்கள் எங்கள் விக்ரகங்களையே நீங்கள் கண்டு பிடித்த பணத்துக்காக கடத்தி விற்கிறீர்கள்.

எங்கள் உண்டியலில் நீங்களே காசு போட்டுவிட்டு இரவில் அந்த உண்டியலை நீங்களே உடைக்கிறீர்கள், அதற்கு தடையாயிருக்கும் காவல்காரரை கொலை செய்கிறீர்கள்

கள்ளத்தனமாக சேர்த்த பணத்தையெல்லாம் எங்கே வைப்பது என்றே தெரியாமல் ஒவ்வொரு மடாதிபதிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள், அதன் பிறகு உங்கள் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து விட்டதே என்றுணர்ந்து அவர்கள் மேல் ஏதேனும் குற்றம் சார்த்தி அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறீர்கள்.

இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு அளித்த சுகபோகங்கள் பாரபக்‌ஷமானவை என்று என்னிடமே கேட்கிறீர்கள் . கோபம் வராமல் என்ன செய்யும் ?





நான்: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் .மீண்டும் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்க முடியுமா?



கடவுள்: முடியும் ஒரு வழி இருக்கிறது நான் சொல்கிறேன்! சரி உலகில் உள்ள இன்பங்களில் இது வரை நீ அனுபவித்த இன்பங்களில் த்ருப்தி கண்டாயா? அப்படியானால் அவைகளை சொல். நான் உனக்கு அந்த இன்பங்களை தவிர்த்து வேறு இன்பங்களைத் தருகிறேன், இது வரை யார் அனுபவிக்கவில்லையோ அவர்களுக்கு அந்த இன்பங்களை பகிர்ந்து தருகிறேன்



நான் : “ நியாயமாகத்தான் தெரிகிறது” நான் யோசிக்க வேண்டும் சற்றே நேரம் கொடுங்கள்



கடவுள்: சரி காத்திருக்கிறேன்



நான் : நான் யோசித்தேன்



கடவுள்: கண்டு பிடித்தாயா ஒரு பட்டியல் கொடு அவற்றை நீக்குகிறேன்.



நான் : ” அப்படி ஒண்ணும் இல்லே “ நான் யோசித்ததில் நான் நிறைவாக அனுபவித்த இன்பம் ,அதுவும் இனி நான் அனுபவிக்காமல் விட்டுத்தரும்படியாக

“ அப்படி ஒண்ணும் இல்லே “!



கடவுள்: அடப்பாவி ! அப்படியானால் நீ மற்றவருக்கு விட்டுத் தர ஒன்றுமே இல்லையா உன்னிடம்?



நான் : ஆமாம் ” அப்பிடி ஒண்ணும் இல்லே” ! அது சரி என்கிட்ட கேக்கிறீங்களே உங்க்ளுக்கு வேண்டுதல், படையல், எல்லாம் வெச்சிருக்கோமே அதிலே இனிமே உங்களுக்கு இனி என்னென்ன வேண்டாம்ன்னு நீங்கள் ஒரு பட்டியல் போட்டுத் தருவீர்களா? நாங்களும் ஏற்கெனவே நீங்கள் அனுபவித்ததையெல்லாம் நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறோம்



கடவுள் நானும் யோசிக்கிறேன்...... இல்லை யோசித்தேன் அப்படி ஒண்ணு இல்லே!



கடவுள் மறைந்து போனார். தேடிக்கொண்டிருக்கிறேன்.



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, November 21, 2010

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

இயற்கையாக ஐப்பசி மாதத்தில், கார்த்திகை மாதத்தில் கார்மேகமாய் சூல் கொண்டு மேகங்கள் கருமேகமாய் இருக்குமாம், அடை மழை பெய்யும் என்பார்கள்அப்படிப்பட்ட காலங்களில் விஷப் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் என்னும் வழக்கங்களை விதைத்து விதைத்துப் போயிருக்கின்றனர்

”கார்த்திகைக்குப் பிறகு மழையும் கிடையாது
கர்ணனுக்கு பிறகு கொடையும் கிடையாது”
 என்பார்கள்

அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் தீபங்களை ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமான பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம், நம் வாழ்விலும் ஒளி பெருகட்டும்

அன்புடன்

தமிழ்த்தேனீ

" பம்பரம் “ கதை

 “பம்பரம்” சற்றே பெருங் கதை


வல்லமை இதழில் படிக்க



http://www.vallamai.com/?p=1344



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, November 8, 2010

" மயக்கம் “ சிறுகதை



 ” மயக்கம் “ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்

http://www.vallamai.com/?p=1267



அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, November 3, 2010

வினாயகர் அகவல்

 தீபாவளி நன்நாளில் ஆனைமுகன் வினாயகனை நினைந்து வேண்டிக்கொண்டால் சர்வ மங்களமும் உண்டாகும்

ஔவையார்  இயற்றிய ”வினாயகர் அகவல் http://www.radiuswebhost.com/play/podsating/29973007298530062991296529923021%2029492965299729943021“      

என் குரலில் கேட்டு மகிழ  சொடுக்குங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Saturday, October 30, 2010

” பேரின்பம் “ சிறுகதை

“பேரின்பம் “சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்




http://www.vallamai.com/?p=1208



அன்புடன்

தமிழ்த்தேனீ

” தவம் “

”குழந்தை வேண்டித் தவம்  செய்தல் தவம்
குழந்தையே  செய்யும் தவம்  எதை வேண்டி”

அன்புடன்
தமிழ்த்தேனீ

Tuesday, October 12, 2010

"நசுங்கல்” சிறுகதை

 வல்லமை இதழில் வெளியாகி உள்ள “நசுங்கல்” என்னும் சிறுகதை படிக்க சொடுக்குங்கள்,
தன்னுடைய மெக்கானிகல் ஷெட்டில் வந்திருந்த ஒரு காரை பழுது பார்த்துவிட்டு, இப்போ சரியாயிடிச்சி எடுத்து ஓட்டிப்பாருங்க சார் என்று அந்த காரின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சிவா, அங்கே ஒரு டொயோட்டா கொரோலா காரை ஓட்டிவந்து நிறுத்திவிட்டு ஏம்பா இந்தக் காரை எவனோ ஒரு மோட்டார்பைக்லே போனவன் இடிச்சிட்டுப் போய்ட்டான், தப்பு தப்பா வண்டி ஓட்றாங்க, ,பயந்துகிட்டே எப்பிடியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிகிட்டு வந்தேன், முன்னாலே பம்பர்கிட்ட நசுங்கி இருக்கு பாரு டயர்லே உராயுது, இதைச் சரி செய்ய முடியுமா என்றார்


சிவா காரைப் பார்த்தான் ,செஞ்சு தரேன் சார் ,உக்காருங்க என்றான், காரின் பின்பக்கம் வந்தவன் பின்பக்க கண்ணாடியில் டாக்டர் என்று எழுதியிருப்பதைக் கவனித்து,மீண்டும் அவரை உற்று நோக்கினான்,அவனுக்கு அவர் யாரென்று நினைவு வந்தது, அவரை உட்காரச் சொல்லிவிட்டு, காரின் முன்பக்கம் வந்து நசுங்கிய பகுதியைப் பார்வையிட்டு சார் இந்த நசுக்கலை நான் சரி பண்ணித்தரேன்,ஆனா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும்,அப்பிடி இந்தப் பகுதிக்கு மட்டும் பெயிண்ட் அடிச்சா அது தனியா தெரியும், காரோட வர்ணத்துக்கு ஒத்துப்போகாது, பரவாயில்லையா? அப்பிடி இல்லேன்னா டிங்கரின் வேலையை ,முடிச்சிட்டு மொத்தமா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும் என்றான்,

இதோ பாருப்பா நீ இந்த நசுங்கலை மட்டும் எடுத்துக்குடு, ஓரளவு டயர்லே இடிபடாமெ இருந்தா சரி, மத்தபடி நான் என்னோட சர்வீஸ் செண்டர்லே விட்டு சரிபண்ணிக்கிறேன், ரொம்ப வெலை உயர்ந்த காருப்பா, டொயோட்டா கரோலா, வெலை எவ்ளோ தெரியுமா கிட்டத்தட்ட பத்து லக்ஷம் என்றார்

சரி சார் எத்தனை லக்ஷமா இருந்தா என்னா செய்யவேண்டியதை செஞ்சுதான் ஆகணும் என்று சொல்லிக்கொண்டே நசுங்கிய பகுதியின் பின்னால் ஒரு மரக்கட்டையை வைத்து முன் பக்கமாக ஒரு சுத்தியலால் டொம்மென்று தட்டினான்,

டாக்டர் நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்து என்னாப்பா இது இப்பிடி அடிக்கறே, கொஞ்சம் மெதுவா அடி ,நான் யாரையும் இந்தக் காரைத் தொடவே விடமாட்டேன், என்னோட வாழ்க்கையிலே நான் அதிகமா நேசிக்கறது இந்தக் காரைத்தான், மெதுவா மெதுவா என்றார்,

சிவா மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,ஆமாம் இதே டாக்டர் வேலைசெய்யும் மருத்துவ மனையில் அவன் உயிருக்குயிராய் நேசித்த மனைவி விமலா ஒரு விபத்தில் மாட்டிகொண்டு குற்றுயிரும் குலைஉயிருமாகக் கொண்டு போனபோது நடந்த அந்தக் காட்சி விரிந்தது

ரத்தம் வீணாகிக்கொண்டிருக்கிறது, இவன் தவித்துக்கொண்டிருக்கிறான், யாரைக் கேட்டாலும் கொஞ்சம் இருப்பா இங்கே டாக்டர்,நர்ஸ் போதிய அளவு இல்லே, கொஞ்சம் வெயிட்பண்ணு,இதோ டாக்டர் வந்திருவாரு என்றபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்,டாகடர் வந்தார் ,அவரிடம் விவரங்கள் சொல்லப்பட்டதுஅவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் டாக்டர்,, அவன் மனைவி விமலா நினைவில்லாமல் இருந்தாலும் வலியால் முனகிக்கொண்டிருந்தாள், டாக்டர் அவளது கையை வேகமாக இழுத்தார்,அவள் வலியால் அலறினாள்,

சிவா பதறிப் போய் டாக்டர் கொஞ்சம் மெதுவா பாத்து கவனமாசெய்யுங்க ,அவளுக்கு வலிக்கிது, அதுமட்டுமில்லை,எலும்பு உடைஞ்சிருந்தா இன்னும் அதிகமாயிடும் என்றான் பதறிப்போய், டாக்டர் இதோ பாருப்பா எங்களுக்கு தெரியும் என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாதுன்னு ,நீ அங்கே போயி ஒரு ஓரமா உக்காரு என்று விரட்டினார், வேறு வழியில்லாமல் தூரமாகப் போய் உட்கார்ந்து கொண்டு தெய்வங்களை வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் தன் இயலாமையை நினைத்து,



தன் மனதில் ஓடிய அந்தக் காட்சியின் வலியை மனதில் வாங்கிக்கொண்டே டாக்டரின் காரை சரி செய்துகொண்டிருந்தான் சிவா, சுத்தியலால் வளைந்த இடத்தை ஒரு அடி அடித்தான், டாக்டர் பதறிக்கொண்டு ஓடிவந்து ஏன்பா இந்தக் காரோட விலை என்னான்னு தெரியுமா,இப்பிடிப் போட்டு அடிக்கிறியே மெதுவா பாத்து நிதானமா செய்யிப்பா என்றார் அதிகாரமான குரலில்

டாக்டர் போன மாசம் விபத்து நடந்த என் மனைவிக்கு ஆப்ரேஷன் செஞ்சீங்களே நியாபகம் இருக்கா, நோயாளிகள் குடுத்த பணத்திலே வாங்கின காரையே இவ்வளவு மதிக்கிறீங்களே, என் பொண்டாட்டி உயிரு இதைவிடக் கேவலமா? நான் பதறினப்போ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஒரு கணவனோட பதட்டத்தை மதிக்காம எப்பிடி வெரட்டினீங்க

என்கிட்ட கொண்டு வந்து காரை விட்டுட்டீங்க இல்லே,எனக்குத் தெரியும் எப்பிடி சரி செய்யணுன்னுட்டு, போயி அங்கே ஒரு ஓரமா உக்காருங்க என்றான், டாக்டரின் மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை,

டாக்டர் சார் …உங்க காரை சரி செஞ்சுட்டேன் என்ற சிவாவின் குரல் கேட்டு மோனம் கலைந்தார் டாக்டர் , கார் நசுங்கிய இடம் இப்போது சரியாக இருந்தது,

என்னை மன்னிச்சுடுப்பா ..இனிமே நான் யாரையும் கோவமா பேசமாட்டேன் என்றார் டாக்டர்,

நசுங்கி இருந்த அவர் மனதையும் சரிசெய்துவிட்டான் அந்த மெக்கானிக்

அன்புடன்

தமிழ்த்தேனீ














அன்புடன்

தமிழ்த்தேனீ

Friday, October 8, 2010

நவராத்திரி

 “ நவராத்திரி “

         






நவராத்திரி என்றதும் என் நினைவுகள் என்னுடைய சிறுவயதுக்காலத்துக்கு பின்னோக்கி ஓடிவிட்டன, அப்போது நாங்கள் சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலயம், ஒற்றைவாடை நாடக அரங்கம் போன்றவைகள் இருக்கும் வால்டாக்ஸ் சாலையும் உயர் நீதிமன்றம், கலங்கரை விளக்கம், போன்றவை இருக்கும் சைனாபஜார் என்று சொல்லப்படும் சுபாஷ் சந்திர போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் 18 வெங்கட்ராயர் தெருவு, பீ ஆர் ஸ்கொயர், என்னும் பகுதியில் இருந்தோம் அந்தப் பகுதியில் நான் இருக்கும்போது எனக்கு வயது பதினொன்று

நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால் எங்களுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடும், பள்ளியில் விடுமுறைவிடுவார்கள், புது சொக்கா புது நிஜார், புது பாவாடை, புதுப் புடவை, பட்டாசுகள் இனிப்புகள் என்று ஆனந்தமாக பொழுதுகள் கழியும், ஊரே திமிலோகப்படும்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாபோன்று களைகட்டும், எங்கள் வீட்டில் என்னுடைய தகப்பனார் ஒன்பது படிகள் வைப்பார்,அந்த ஒன்பது படிகள் முழுவதும் விதம் விதமான பொம்மைகள் அலங்கரிக்கும்,

பரணிலிருந்து பெரிய பெரிய பெட்டிகளை இறக்கி அவைகளில் துணிகளிலும், காகித்த்திலும் பத்திரமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து கீழே அடுக்கி,மிக ஜாக்கிறதையாக அவைகளைப் பிரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றின் உயரம்,பருமன்,போன்ற வித்யாசங்களைக் கவனித்து, அந்தந்த பொம்மைகளை அந்தந்த தொடர்பான பொம்மைகளோடு அடுக்கி வைத்து ,அவைகளை எந்தப் படியில் வைக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றார்ப்போல் அவைகளைப் படியில் வைத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பார் எங்கள் தந்தை,கூடவே என்னுடைய தாயாரும்,என்னுடைய சகோதரிகளும் உதவி புரிவார்கள்,அது ஒரு பொற்காலம்,

ஆமாம் உண்மையிலேயே அது ஒரு பொற்காலம்தான்,

மாலையானால் போதும் , சின்னஞ்சிறார்கள்,சிட்டுப் போன்ற குழந்தைகள் ராமனாகவும்,கிருஷ்ணனாகவும், சரஸ்வதியாகவும் ,மஹாலக்ஷ்மியாகவும், ஆண்டாளாகவும்,காமாக்ஷியாகவும் ,மீனாக்ஷியாகவும் வேடமிட்டு அவர்களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் சற்றும் பொருந்தாவிடினும் கூட, அவர்கள் கள்ளமில்லாத குழந்தை மனத்தினராய் தளுக்கி , மினுக்கி புன்னகையுடன் வலம் வருவதைப் பார்க்க முடியும், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமாய் வாழ்ந்த அந்நாளில் குழந்தைகள் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைகளாகவே இருந்தார்கள், பெண்மணிகளும் புதுப்புடவை சரசரக்க வந்து கூடத்தில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பில் அமர்ந்து, இயல்பான புன்னகையுடன் இதமான குரலில் பலவகையான பாட்டுக்களை தங்களுடைய இனிமயான குரலில் பாடுவதும், குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து கீதமிசைப்பதுமாக ஒவ்வொரு பண்டிகைகளும் களைகட்டும்,

ஒவ்வொரு வீட்டிலும் அளிக்கும் தின்பண்டங்கள், சுண்டல் போன்றவற்றை வாங்கவே கூட்டம் கூடும் சிறுவர்கள் கும்மாளமாக மகிழ்ழ்சியுடன் உலா வருவதைப் பார்க்கும் போது மனம் நிறையும்,

பெரியவர்களும் தங்களின் இயல்பான ஆர்ப்பாட்டம் ,கோவம், எல்லாவற்ரையும் மறந்து புது வேட்டி புது சொக்காய் சகிதமாக வீட்டில் உள்ள பெண்டிருக்கும் ,குழந்தைகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும், மகிழ்ந்த அந்தக் காலங்கள் பொன்னானவை



அப்படிப்பட்ட பொன்னான தருணங்கள் நாட்டிலே சுபிக்ஷம் நிறைந்த அந்தப் பொன்னான காலம் , குழந்தைகளின் கபடமற்ற பொன்னான காலம்

அவையெல்லாம் திரும்பி வருமா நம் நாட்டில்?

பஞ்ச பூதங்களின்மகிமை உணர்ந்து அவைகளை இயற்கையை அரவணைத்துக்கொண்டு இதமாக பதமாக இனிமையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்கள் திரும்பி வருமா? என்னும் எண்ணம் தோன்றி ஒரு பெருமூச்சு விட வைக்கிறது என்ன செய்ய?

மீண்டும் நாம் இழந்த அந்தப் ;பொற்காலத்தை மீட்டவேண்டும்,அதற்காக நம் பாரம்பரியங்களின், ,மரபுகளின் வளத்தை இனிமையை மீண்டும் தெளிவான மனநிலையுடன் மீண்டும் அனுபவிக்க மனம் துடிக்கிறது

மாறுமா மீண்டும் பொற்காலம் மலருமா என்னும் ஏக்கத்துடன் நான்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Tuesday, October 5, 2010

கடல் கடந்தும் கலை

அமெரிக்காவில் சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் பணிபுரியும் என் மகன் திரு கே வெங்கடநாதன் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல இளைஞர்கள்,யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக இண்டஸ் கிரியேஷன்ஸ் என்னும் பெயரில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார், இதில் விசேஷமான செய்தி என்னவென்றால் இந்தக் குழுவை நடத்தும் இவர்களே நாடகம் எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், அதுகூட வியக்கத்தக்க செய்தி அல்ல, இவர்களே மேடை நிர்வாகமும் செய்கிறார்கள்,மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் நேற்று கூட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்,இந்த நாடகங்களுக்கு என்னுடைய மருமகள் திருமதி கவிதா அவர்களும் ஓவியம் வரைதல், போன்ற பல வர்ணம் பூசும் கலைகளை உருவாக்குகிறார், அரங்கில் உள்ள பல காட்சிகளில் இவரது கைவண்ணம் இருக்கிறது


கணிணிப் பொறியாளர்களான இவர்கள் தச்சு வேலை உட்பட அனைத்து வேலைகளையும் இவர்களே தங்கள் கைகளால் செய்து , மேடையில் அரங்கை நிர்மாணிக்கிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்க செய்தி


தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் ,கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும், வாழ்த்துவோம், பாராட்டுவோம்



http://www.youtube.com/watch?v=-4PhUFwBT0g



அன்புடன்

தமிழ்த்தேனீ





Sunday, October 3, 2010

விரஜா நதி ஓரம்

விரஜா நதி ஓரம் அந்த நதியைக் கடக்க காத்திருந்த பல பயணிகளில் ஒருவர் ராமசேஷன், அவருக்கு நினைவு வந்தது, திருமோகூர் காளமேகப் பெருமான் வந்து கையைபிடித்து அழைத்துச் செல்வாராமே, அதற்காக காத்திருந்தார், காத்திருந்த வேளையில் அவர் உடலை விட்டுவிட்டாலும் அவரை விடாத மனம் கூடவே இருந்து யோசித்துக்கொண்டிருந்தது,


இந்த பிறப்பை எடுத்தோமே ,இந்தப் பிறப்பில் என்ன செய்தோம், ,பாவம் செய்தோமா, புண்ணியம் செய்தோமா? நமக்கு நரகம் கிட்டுமா, சொர்கம் கிட்டுமா என்று தெரியாமல், பூமியிலும் இல்லாமல், ப்ரபஞ்ச வெளியிலும் இல்லாமல் நடுவே ஏதோ ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தார் ராமசேஷன், அவருக்கு சிரிப்பாய் வந்தது,

ஆமாம் இப்போதும் தமக்கு ராமசேஷன் என்று தான் பெயரா ,அல்லது யாராவது வந்து தனக்கு வேறு பெயர் வைப்பார்களா என்று யோசித்தார், சரி இனி பெயரில் என்ன இருக்கிறது, போய்ச்சேரும் இடமல்லவா முக்கியம், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவராயிற்றே அவர்,

ஆமாம் ஆரியக் கூத்தென்றால் என்னது அது?
ஆரியனுக்கு ஏது கூத்து? என்று யோசிக்கும் போதே ஆரியன் ஆடாத கூத்தா? என்கிற கேள்வியும் முளைத்தது, எப்படி இந்தச் சொல்வழக்கு வந்தது என்று யோசிக்கலானார்,

இப்படியே காத்திருந்தால் கால்கள் வலிக்குமே எங்காவது உட்காரலாமா? அடேடே இந்த சூக்க்ஷும சரீரத்துக்கு கால்களும் இல்லை,கால்கள் இருந்தால்தானே வலிக்கும், உடல் இருந்தால்தானே வலி தெரியும், திடமான உருவமும் இல்லையே எங்காவது உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்தாலும் அப்படியே காற்று போன பலூன் மாதிரி நைந்த துணி மாதிரி எதிலும் ஒட்டாமல் எப்படியும் இருக்கவிடாமல் அலைகிறதே இந்த சூக்ஷும சரீரம்?

அவருக்கு தன்னுடைய கடைசீக் காலம் நினைவுக்கு வந்தது, மனித உடல் இருந்த காலங்களில் அந்த உடலில் சர்க்கரை அதிகமாயிருக்கிறது,அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னது ஞாபகம் வந்தது, கூடவே அவருடைய மகன் அவருக்கு திவசம் செய்யும்போது இதை ஞாபகம் வைத்திருப்பானா? அவன் யோசிக்காமல் அரிசி சாதத்தையே படைத்தால் எப்படி சாப்பிடுவது, மறுபடியும் சர்க்கரை அதிகமாகி விடுமே , என்று யோசித்து அவருக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்,

இந்த சூக்ஷும சரீரத்துக்கு வியாதிகள் உண்டா? ரத்தமும் சதையும் கொண்ட மானுட சரீரத்துக்குதானே வியாதிகள் இந்த சூக்ஷும சரீரத்துக்கு கிடையாதே என்று யோசித்துவிட்டு மீண்டும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்

யாரோ ஒருவர் கைகொடுத்தார்,ஏன் உனக்கு நீயே யோசித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் யாரேனும் பார்த்தால் பயித்தியம் என்பர் என்று ஒரு குரல் கேட்டது

நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் ,கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை

ஓ கண்ணே இல்லை பின் எது புலப்படும் ?

கை கொடுத்தவர் கேட்டார் நீ மீண்டும் பிறக்க விரும்புகிறாயா?

அட காதுகளும்தான் இல்லை பின் எப்படி அவர் பேசுவது கேட்கிறது

இல்லை..கேட்கவில்லை மனதுக்கு புரிகிறது

யோசித்தார் எனக்கு இனி பிறவி வேண்டாம் என்றார்,


உடனே அந்த அமானுஷ்யக் குரல் இன்னும் நீ அந்த நிலையை எட்டவில்லை ஆகவே இனியும் உனக்கு பிறவி உண்டு, ஆகவே எப்படி, யாராகப் பிறக்க விரும்புகிறாய் என்று மட்டும் சொல் என்றது,

ராமனாகப் பிறந்தால் கானகம் ஏகி மனையாளைப் பிரிந்து தவிக்க வேண்டும்

பரசுராமனகப் பிறந்தால் தாயின் தலையையே வெட்ட வேண்டும்,

கிருஷ்ணனாகப் பிறந்தால் நல்லதே செய்துவிட்டு கெட்ட பெயரும் சம்பாதித்து பின் குறைக் கொள்ளியாக ஒதுங்க வேண்டும்
சரி பூலோக வாசிகளான மானுடரில் பலரையும் யோசித்துப் பார்த்தார், மஹாத்மா காந்தியாகப் பிறந்தால் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்டுவார்

இப்படீ ஒவ்வொன்றாக யோசித்துக்கொண்டே வந்தார்

யாரை நினைத்தாலும் ஒவ்வொன்று தடுத்தது

சரி மீண்டும் ராமசேஷனாகவே பிறக்கலாம் என்றால் இப்படி அடுத்த ஜென்மம் யாராக எடுக்கலாம் என்று யோசிக்கும் நிலை வரும்

அவருடைய மனம் குழம்பியது

எனக்குத் தெரியவில்லை நீயே ஒரு முடிவெடுத்து ஒரு பிறப்பைக் கொடு என்று வேண்டினார்

இப்போது தெய்வம் குழம்பியது ,யோசித்தது, தனக்குத்தானே பேசிக்கொண்டது சிரித்துக்கொண்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Friday, September 17, 2010

”நெற்றிக்கண் “ சிறுகதை



 ” நெற்றிக்கண் “ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள் http://www.vallamai.com/?p=872




அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, September 12, 2010

ஆப்ரேஷன் சக்ஸஸ்

‘ஆபரேஷன் சக்ஸஸ்’ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்


http://www.vallamai.com/?p=836



அன்புடன்

தமிழ்த்தேனீ



Thursday, August 26, 2010

“ மனோதத்துவம்“ சிறுகதை

 " மனோதத்துவம் " சிறுகதை வல்லமை இதழில் வெளியாகி உள்ளது


http://www.vallamai.com/?p=628



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, August 22, 2010

" பணம் ‘ சிறுகதை

Categorized

சிறுகதைகள்Tags : தமிழ்த்தேனீ

”பணம்”  சிறுகதை

http://www.vallamai.com/?p=600


Posted on 22 August 2010



தமிழ்த்தேனீ



“அப்பா! காலங்காத்தாலே எழுந்து அலுவலகத்துக்கு போற அவள் கணவன் ரமேஷுக்குப் பல் தேய்க்கிற பேஸ்ட்டுலேருந்து, துண்டுலேருந்து, கர்சீப் வரைக்கும் எடுத்துக் கையிலே குடுத்து, இருக்கறது ரெண்டு குழந்தைங்கன்னாலும் பெரியவன் கிஷோர் பள்ளிக்கூடம் போறான், அவங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்து, வயித்துக்குக் காலை உணவு குடுத்து, மதியம் உணவுக்கு வேண்டியதையெல்லாம் தயாரிச்சு டப்பாவிலே போட்டுக் குடுத்து, தலையை வாரி, சீருடை போட்டுவிட்டு, அனுப்பறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போகுது”, என்றபடியே புடவைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்தபடி, “இதோ இது இருக்குதே என் செல்லக் குட்டி. இவனுக்குக் கிட்டத்தட்ட ஒண்ணரை வயசாகுது. இடுப்பை விட்டுக் கீழே இறங்க மாட்டான். இன்னும் மழலையே மாறலை. ஆனா பேசற பேச்சு இருக்கே… யப்பா… செம வாலு, எப்பிடித்தான் அந்தக் காலத்திலே பத்து பதினொண்ணுன்னு பெத்து வளத்தாங்களோ? இதுக்கு வயித்துக்கு குடுத்துட்டு வரேன், அப்போதான் தூங்குவான், இல்லேன்னா நம்மளைப் பேச விடாம வம்பு பண்ணுவான்” என்றபடி பருப்புச் சாதத்தை ஊட்டி, அவன் தூங்க ஆரம்பித்ததும் கீழே விட்டுட்டு, “என்ன பண்றது எனக்கு காலம் இப்பிடியே போவுது” என்று சலித்துக்கொண்டே பெருமூச்சு விட்டாள் வசந்தா!



“ஏதோ மதிய வேளையாச்சே கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டுப் போலாம்னு வந்தா, தினோம் நீ செய்யிறதையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பியே பொழுதை ஓட்டற” என்றாள் சுசீலா!



“ஒரு மனுஷின்னா அவளுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும், மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும், சரி அதையே நெனைச்சிகிட்டு இருக்காதே, மனசை ப்ரீயா விடு”, என்றாள் சுசீலா.



‘பணம்’ தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஹாலில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அந்தத் தொடரில் ஒரு பெண், ‘எனக்குப் பணம் முக்கியமில்லே. ஆனா என்னை அவமானப்படுத்தின அந்தத் தியாகுவைப் பழி வாங்காம ஓயமாட்டேன், அவனை வாழ விடமாட்டேன், அவன் எங்க போனாலும் துரத்தித் துரத்திப் பழிவாங்குவேன்’ என்றாள், ஆண்பிள்ளைக் குரலில், வெறியோடு.



“இந்தப் பொம்பளையப் பார்த்தவொடனே ஞாபகம் வருது. உனக்குத் தெரியுமா, நம்ம தெருவிலே கோடீ வீட்டுலே இருக்காளே வத்சலா, அவ புருஷன் ராஜா வெஷம் குடிச்சிட்டானாம்”, என்றாள் சுசீலா.



“ஐயய்யோ ஏன், என்ன ஆச்சு?” என்றாள் வசந்தா!



“வத்சலாவோட புருஷன் ராஜா சீட்டு நடத்தினாரு இல்லே…. அதை ஒழுங்கா நடத்தி அதுலே லாபம் வந்தா பரவாயில்லே. அவங்க ஆடின ஆட்டம் இருக்கே, எல்லாருடைய பணத்தையும் வாங்கி வெளிநாட்டு டீவீ என்னா,நெக்லஸ் என்னா,அப்பிடியே மினுக்கினா, அது போதாக்குறைக்கு வீட்டை இடிச்சு பெரிய பங்களாவா மாத்திக் கட்டினாரு, கடைசீயிலே வரவேண்டிய பணமெல்லாம் வரலைன்னு சொல்லிட்டு யாருக்கும் பணம் குடுக்காம ஏமாத்தி இருக்காரு. எல்லாரும் போலீஸ்லே புகார் குடுத்துட்டாங்க. ஆனா அவராலே பணம் குடுக்க முடியலை. அவருக்கு ஏதோ நஷ்டமாம், என்ன செய்யிறதுன்னே தெரியலையாம், அதுனாலே அந்த ஆளு விஷம் குடிச்சிட்டான்” என்றாள் சுசீலா.



“ஐயய்யோ நான் கூட என் புருஷன் ரமேஷுக்கத் தெரியாம அவருகிட்ட சீட்டு கட்டி இருக்கேன், அப்போ என் பணமும் வராதா?” என்று அதிர்ந்தாள் வசந்தா.



“அதெல்லாம் கவலைப்படாதே. அவங்க கம்பெனிலேருந்து ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க, இவுரு இப்பிடிச் செஞ்சது அவரு வேலை செய்யிற கம்பனிக்கே தெரிஞ்சு போச்சாம். அதுனாலே அந்தக் கம்பனி இவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம். வேலையை விட்டு அனுப்பும்போது அந்தக் கம்பனி இவருக்கு சேர வேண்டிய பெரிய தொகையைக் குடுத்தாங்களாம். அந்தப் பணத்திலே எல்லாருக்கும் திருப்பிக் குடுத்துடறேன்னு அந்த ஆளு ராஜா சொல்லி இருக்காரு.”



திடீர்ன்னு யாரோ மூச்சுத் திணறுவது போல் சத்தம் கேட்டு, வசந்தா எழுந்து ஓடிப் போய்ப் பார்த்தாள். அவளோட குழந்தை திருதிருன்னு முழிச்சிண்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் மண் உண்டியல் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது.



“ஐயய்யோ குழந்தை இந்த உண்டியல்லேருந்து கீழே விழுந்த காசை எடுத்து வாயிலே போட்டுண்டான் போல இருக்கு… அது தொண்டையிலே மாட்டிண்டு அவனுக்கு மூச்சு திணறுது” என்று பதறினாள் சுசீலா. வசந்தா பதறிப்போய் குழந்தையின் வாயில் விரலை விட்டு எப்படியாவது காசை எடுத்து விடலாம் என்று முயன்றாள். குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. மேலும் பதறிய வசந்தா, அழ ஆரம்பித்தாள்.



“நீ ஒண்ணும் பதறாதே. நான் ஆட்டோ கூப்படறேன், நாம ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போயி எப்பிடியாவது குழந்தை தொண்டையிலே மாட்டிண்டு இருக்கற காசை வெளியே எடுத்துடுவோம்,” என்றபடி வாசலுக்கு ஓடிவந்து ஒரு ஆட்டோ பிடித்தாள் சுசீலா.

அதற்குள் வசந்தா குழந்தையை எடுத்துக்கொண்டு , வீட்டைப் பூட்டிவிட்டு, ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள்.



ஆட்டோ அவர்கள் வீட்டுக்கருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கே, ” இதோ பாருங்க, இப்போ டாக்டரெல்லாம் பிசியா இருக்காங்க. நீங்க உடனடியா பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க” என்றாள் நர்ஸ். ஆட்டோ பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடியது. உள்ளே டாக்டரிடம் ஓடினாள் வசந்தா.



வசந்தா சொன்ன விஷயத்தை கேட்ட அவள் கணவன் ரமேஷ், அலுவலகத்தில் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.



முதலில் குழந்தையைப் பார்த்த டாக்டர், “இதோ பாருங்க, ஒண்ணும் பதறாதீங்க,” என்றபடி எக்ஸ்ரே எடுத்தார். “எக்ஸ்ரேவில் ஒண்ணும் தெரியலைம்மா. ஆமா உங்களுக்கு நிச்சயமா தெரியுமா, குழந்தை காசை வாயிலே போட்டுண்டானா?” என்றார்.



“தெரியவில்லை டாக்டர், நான் கூட தொண்டையிலே விரலை விட்டுப் பார்த்தேன். என் விரலுக்கும் ஒண்ணும் அகப்படலை. ஆனா வாயிலேருந்து ரத்தமா வந்துது” என்றாள் வசந்தா.



“சரி நாம் எதுக்கும் இன்னொரு முறை ஸ்கேன் பண்ணிப் பாத்துடலாம். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலே ஒரு ஸ்கேன் செண்டர் இருக்கு. நான் எழுதித் தறேன். மத்த இடங்கள்ளே அதிகமா பணம் வசூலிப்பாங்க, நீங்க இங்கே போயி ஸ்கேன் பண்ணிண்டு சீக்கிரம் வாங்க,” என்றபடி தன்னுடைய கைப்பேசியில் பேச ஆரம்பித்தார்.



மீண்டும் வாயிலில் நின்றிருந்த ஆட்டோவிலே ஏறி, “இதோ பாருங்க, உடனடியா இந்த ஸ்கேன் செண்டருக்குப் போங்க” என்றாள். அங்கே ஸ்கேன் எடுத்து, அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கொடுத்தவுடன் மீண்டும் பெரிய ஆஸ்பத்திரிக்கே வந்து ஆட்டோக்காரருக்கு 200 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காண்பித்தாள் வசந்தா.



ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், “ஸ்கேன்லே கூட ஒண்ணும் தெரியலையே என்னா செய்யிறது? எனக்கென்னவோ குழந்தை காசு தொண்டை வழியா வயித்துக்கு போயிருக்கும்னு தோணுது. நீங்க காசை எடுக்க, குழந்தை வாயிலே விரலை விட்டீங்க இல்லே… அதுனாலே தொண்டையிலே உங்க நகம் கீறி ரத்தம் வந்திருக்கும்” என்றார், டாக்டர்.



வசந்தா பதறினாள். “கவலைப்படாதீங்க. காசு தானாவே மோஷன் போகும்போது வெளியிலே வந்துடும். அது்க்கு நடுவுலே ஏதாவது ஆச்சுன்னா உடனே குழந்தையை மறுபடியும் அழைச்சிட்டு வாங்க பாப்போம்” என்றார் டாக்டர்.



குழந்தை கஷ்டப்பட்டு, “ம்ம்மா” என்றான். வசந்தா குழந்தையின் அருகில் வந்து பதறியபடி “என்னடா கண்ணா?” என்றாள் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி.



குழந்தை ரமேஷை நோக்கி, “ப்பா” என்றது. ரமேஷ் கண்ணில் கண்ணீருடன் குழந்தையை நோக்கிக் குனிந்தான்.



குழந்தை வசந்தாவைப் பார்த்துக் கையை நீட்டியது. அதில் ஒரு முழு ஒரு ரூபாய் பளிச்சென்று மின்னியது.



“ம்மா… நானு பத்திரமா வெச்சிண்டு இக்கறேன், காசு, உனக்கு தரமாத்தேன் போ, காசு என்னுது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தது!

Friday, August 20, 2010

periyaazvaar vaarisu

http://www.youtube.com/watch?v=yfrWeDtVZMsபெரியாழ்வாரின் பரம்பரையில் வந்த திரு வேதபிரான் பட்டர் அவர்களின்பேட்டிய  மேற்கண்ட சுட்டியை சொடுக்கிப் பார்க்கலாம்,இந்தக் காணொளியில் ஆண்டாள் கோயிலில் ஆஸ்தான அர்ச்சகர் திரு கோவிந்தராஜ   பட்டர் அவர்கள் திரு வேதபிரான் பட்டரை அறிமுகப்படுத்துகிறார்,   இந்தப் பேட்டி மிகவும் இயல்பாக யதேச்சையாக அமைந்த பேட்டி  திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள் ஆண்டாள் கோயிலின் உள்ளே அந்தக்  கோயிலின் பெருமைகளை கூற அப்படியே அதைப் பதிவு செய்துகொண்டே வந்தேன்,  கோயில் வாயிலுக்கு வரும்போது எதிரே வந்தார் திரு வேதபிரான் பட்டர்,  பெரியாழ்வாரின் வாரிசு என்று திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள்  அறிமுகப்படுத்தினார்,அவர் எந்த முறையில் வாரிசு என்று அவர் வாயாலேயே கேட்போம்அன்புடன்தமிழ்த்தேனீ




பெரியாழ்வாரின் பரம்பரையில் வந்த திரு வேதபிரான் பட்டர் அவர்களின்

பேட்டிய  மேற்கண்ட சுட்டியை சொடுக்கிப் பார்க்கலாம்,
இந்தக் காணொளியில் ஆண்டாள் கோயிலில் ஆஸ்தான அர்ச்சகர் திரு கோவிந்தராஜ   பட்டர் அவர்கள் திரு வேதபிரான் பட்டரை அறிமுகப்படுத்துகிறார்,   இந்தப் பேட்டி மிகவும் இயல்பாக யதேச்சையாக அமைந்த பேட்டி  திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள் ஆண்டாள் கோயிலின் உள்ளே அந்தக்  கோயிலின் பெருமைகளை கூற அப்படியே அதைப் பதிவு செய்துகொண்டே வந்தேன்,  கோயில் வாயிலுக்கு வரும்போது எதிரே வந்தார் திரு வேதபிரான் பட்டர்,  பெரியாழ்வாரின் வாரிசு என்று திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள்  அறிமுகப்படுத்தினார்,
அவர் எந்த முறையில் வாரிசு என்று அவர் வாயாலேயே கேட்போம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, August 18, 2010

" B + " சிறுகதை





http://www.vallamai.com/?p=544



“B+” ( சிறுகதை)

வல்லமை இதழில் வெளியாகி உள்ளது, மேலே உள்ள சுட்டியை சொடுக்கி  படித்து உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, July 19, 2010

”அதிர்ச்சி” சிறுகதை வல்லமை இதழில் படிக்க

 http://www.vallamai.com/?p=272

”அதிர்ச்சி”  சிறுகதை வல்லமை இதழில் படிக்க மேற்கண்ட சுட்டியை சொடுக்கவும்

அன்புடன்’
தமிழ்த்தேனீ

Monday, July 5, 2010

”முகமூடிகள்” சிறுகதை

அன்புள்ள  நண்பர்களே  ”முகமூடிகள்” என்று நான் எழுதிய சிறுகதை   ”வல்லமை  என்னும் மின் இதழில் வெளி வந்திருக்கிறது

அந்தக் கதையைப் படிக்க
சொடுக்குங்கள்         http://www.vallamai.com/?p=200

அன்புடன்
தமிழ்த்தேனீ             

Wednesday, June 9, 2010

பக்தி ஒரு நிகழ்வு

செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு அம்மன் தரிசனம் என்னும் பத்திரிகைக்காக என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களால் எழுதப்பட்ட்து

                                              ”பக்தி”


பக்தி என்றாலே நம் கண் முன் வரும் தோற்றங்களுள் முதன்மையானது
கையில் தம்பூருடன் கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன்ஆன்மாவையே உருக்கும் தோற்றம் கொண்ட இருக்கும் தியாகைய்யர் என்கிற தியாகராஜன் என்கிற தியாகப் ப்ரும்மம்தான்,அவர் வீட்டு வாயில் திண்ணையில் அவர் அமர்ந்திருக்கிறார்நாம் அந்த மகானை தரிசிக்க அவர் வீடு நோக்கி செல்கிறோம்,நாம் நெருங்க நெருங்க அவர் பாடும் ராமநாமம், தம்பூரின் ஒலி நயத்தோடு நம் காதுகளில் கேட்க ஆரம்பிக்கிறது,
 சதா ராம நாமத்தில் மூழ்கியிருக்கும் அவர்அப்போதும் ராம நாமாமிருதத்தில்,ஸ்ரீ ராமனுடைய குண விசேஷங்களில் மனதை ஆழ்த்தி ராம நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கியிருக்கிறார், அந்த இடமே கறவைகள் கன்றுகள் முதற்கொண்டு உருகி நிற்கின்றன,மரங்கள் செடிகள்கூட இதமான தென்றலில் இளமையாக ஆடுகின்றன, அந்த மோனத்தவத்தில் அவர் மூழ்கியிருக்கும்போது அந்த மோனத்தவத்தைக் கலைக்கும் வலிமை யாருக்குமே கிடையாது,அப்படி அவர் ஆழ்ந்த பக்தியில் திளைத்திருக்கும்போது அன்று ஏனோ தெரியவில்லை இடையிடையே சிரு சலனம் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருந்தது,ஆம் அவர் ஆழ் மனத்தையும் மீறி சலங்கை ஒலி ,பொற்சதங்கை ஒலி அவரின் ராம நாம சங்கீர்த்தனத்திற்கு மெருகூட்டியது,

ஒரு நாள், மறு நாள் ,அதற்கும் மறு நாள்,அதே நேரத்துக்கு கடந்த மூன்று நாட்களாக அவருக்கும் அந்த பொற்சதங்கை ஒலி பழகியிருந்தது, மறுநாள் அவரின் ராம நாம சங்கீர்த்தனத்தை தொடங்கும் போதே அந்த சலங்கை ஒலிக்காக அவரே காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் அவருள் விளைந்தது,கண்களை மூடி மனதில் ஸ்ரீ ராமனின் தோற்றத்தையே மனதில் நிறுத்தி நாம் சங்கீர்த்தனம் செய்யும் அவர் மனதும் கண்களும் விழித்துக்கொண்டன, அங்கே அவர் கண்ட காட்சி, உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று ஈடுபட்ட ஆழ்வாரைப் போல
ராம நாமத்தில் மூழ்கியிருந்த தியாகையர் கண்களில் முதல் பட்டது இரு செந்தாமரை இதழ்கள் ,அல்ல அல்ல இரு திருவடிகள், செம்பஞ்சுக்கு குழம்பு பூசி தங்க்க் கொலுசுகள் மின்ன தகதகத்த பாதங்கள்,அந்தப் பாதங்கள் நகர நகர அந்தப் பாதங்களின் பின்னாலேயே தியாகையரின் மனதும் செல்ல அந்த திருவடிகள் இரண்டும் மெல்லடி நடந்து தியாகையரின் வீட்டினுள்ளே சென்றது,
தியாகையரின் கண்களில் கண்ணீர்? இது என்ன ஆனந்தக் கண்ணீரா?விரஜா நதியில் குளித்தது போல் உடல் லேசாகி ஆனந்த்த்தில் மிதந்தது,சில வினாடிகள் அப்படியே அந்த திருவடிகளில் லையித்திருந்த தியாகைய்யர் நினைவுக்கு மீண்டு தன் வீட்டுக்குள் நுழைந்த அந்தத் திருவடிகளை மீண்டும் காண்வேண்டும் என்னும் ஆசையால் ,அந்த செந்தாமரைப் பாதங்களுக்கு திருவடிகளுக்கு சொந்தக்காரி யார் என்று அறியும் ஆவல் மிஞ்ச தன் வீட்டிற்குள்ளேயே ஒரு அன்னியனைப் போன்ற உணர்வுடன் நுழைந்தார்,அங்கே..
அங்கே அவரின் மனைவி கமலா ! தூணில் சாய்ந்த படி கண்கள் திறந்தபடி, எங்கோ பார்த்தபடி தன் நிலை மறந்து உட்கார்ந்திருந்தாள், ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தாள், அவள் தவத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் தியாகையர், கணவனைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்யும் அந்த உத்தமப் பெண்மணி தான் வந்ததையும் கவனிக்காமல் இருக்கிறாள் எப்படி? தனக்கும் மேலான அப்படி ஒரு சொர்க நிலையை அவள் அடைந்திருக்கிறாள், அப்படி ஒரு ஆனந்தமயமான ஆழ் நிலையை அவள் அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை கண்டு அவர் மனம் பெருமித்த்தால் விம்மியது, எப்படிப்பட்ட பெண்மணி இவள்? இவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்திருக்கிறோம் நாம் என்று பரவசமடைந்தார் தியாகையர்,
திடீரென்று தன் சுய நிலைக்கு திரும்பிய கமலா திடுக்கிட்டு எழுந்திருக்க அவளை எழுந்திருக்க விடாமல் இதமாக அப்படியே உட்காரவைத்து தானும் அவளருகே உட்கார்ந்து அவளைப் பரிவோடு பார்த்து , கமலா என்று அன்போடு அழைத்தார் தியாகையர், கமலா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், நானும் சில நாட்களாக கவனித்துக்கொண்டே இருக்கிறேன், பொற்சதங்கை அணிந்த இரு திருப்பாதங்கள் தினமும் நம் வீட்டிற்கு வரக் காண்கின்றேன், அந்த செந்தாமரைப் பாதங்களைப் பார்த்தவுடன் என் மனமும் அப்படியே மயங்குகிறது ,அந்த்த் திருவடிகளுக்கு உரிய பெண்மணி யார் தெரியுமா ? என்று கேட்டார்

அதற்கு கமலா தினமும் அந்தப் பெண் இங்கே வருகிறாள்,என் எதிரே அமர்கிறாள், ஏதோ பேசுகிறாள், அவள் வந்துவிட்டால் நான் என்னையே மறந்துவிடுகிறேன், அவள் கண்களைப் பார்த்துவிட்டால் போதும் , அப்புறம் இந்த உலகமே மறந்து போய்விடுகிறது, அப்பா..!! அந்தக் கண்கள்! எத்தனை விசாலம், எவ்வளவு ஆழமான அழகான கருணையோடு இருக்கும் கண்கள்!அந்தக் கண்களைப் பார்த்துவிட்டால் பார்த்துக்கொண்டே இருக்கிறேன், பசி தாகம் எதுவுமே தெரிவதில்லை, நீங்கள் யாரம்மா என்று கேட்கவேண்டும் என்று தினமும் நினைக்கிறேன், ஆனால் என்னால் முடியவே இல்லை, ஆமாம் யார் அந்தப் பெண்மணி? என்றாள் கமலா

அவள் யார்..?

ஒரு கணத்தில் தியாகைய்யருக்கு உடம்பு சிலிர்க்கிறது..அவள் யார் என்று அவருக்கு புரிந்துவிட்டது! திரும்பிப் பார்த்தவுடன் தன் குஞ்சுகளின் பசியை தன் பார்வையாலேயே போக்கும் மீனைப் போன்றவள் அவள்!அவள்தான் மின்னாக்‌ஷி, அவள்தான் பராசக்தி, இதுவரை நான் அவளைப் பற்றிப் பாடவே இல்லையே! அதை நினைவூட்டவே அவள் இங்கே வந்திருக்கிறாள்,

அது மட்டுமல்ல என் பிரிய சகியே அவள் உனக்கு மட்டும் எதற்காக தரிசனம் தந்தாள் தெரியுமா? மஹா பதிவிரதையான உனக்கு மோட்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கவே அவள் கருணையோடு இங்கே வந்தாள்!நான் அவளைக் கண்டு கொண்டேன்! என் தேவியை நான் தெரிந்து கொண்டேன்,என்றவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது!பக்திப் பரவசமாய்ப் பாட ஆரம்பித்தார்

”தாரிணி தெலுசு கொண்டி த்ரிபுரசுந்தரி”என்று அமிர்த வர்ஷமாக இன்றும் அவருடைய க்ருதி ஒலித்துக்கொண்டே இருக்கிறது

                                          சுபம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, June 2, 2010

கா(ஞ் ) சித்துண்டு சிறுகதை


கா(ஞ்) சித்துண்டு என்னும் சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது  படித்து மகிழுங்கள்   ,கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asphttp://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp


அன்பர்களே நான் எழுதிய கா(ஞ்)சித்துண்டு என்னும் சிறு கதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது,மேலே அளிக்கப்பட்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்,
அன்புடன்
தமிழ்த்தேனீ--

மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது



http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp





புஷ்பராகவ்-

இனி எதையாவது செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்தால்

யாரிடமும் கூறாமல் நாமே செயல் படுத்த வேண்டும்.இந்த

கதை ஒரு நல்ல பாடம்.அருமை
ரா.புஷ்பா..

Priya பெறுநர் எனக்கு
nice pa :)

Tirumurti Vasudevan
:-)))

நல்லா இருந்தது.
Innamburan Innamburan
I told you, it is a good story.

Congratulations
meena muthu பெறுநர் mintamil

காஸ்ட்லி துண்டு! :)))))))))
kalvi Thulir


இந்த கதை .அருமைKavitha Prakash,
http://kalvithulir.blogspot.com/

http://kalvithulir.com

vishalam raman பெறுநர் mazalais


அன்பு தமிழ்த்தேனி அருமையான கதை கடை கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி ,,அதுவும் புடவைக்கடையா ?கேட்கவே வேண்டாம் என் வீட்டிலும் அந்தத்துண்டுதான் உபயோகிக்கிறோம்

---------------------------------------
பேஸ்புக்” பெறுநர் எனக்கு
Swaminathan Jayaraman commented on your தொடர்புச்சுட்டி:

மிகவும் நல்ல கற்பனை. ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ

Tuesday, April 13, 2010

விக்ருதி வருடப் பிறப்பு

                                                            புதுவருடப்பிறப்பு


விரோதி வருடம் முடிந்து , தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி சித்திரை மாதம் ஒன்றாம் தேதி புதன் கிழமை காலை 5.15 மணிக்கு மீன லக்னமும் ,மீன ராசியும் கஜகேசரி யோகமும் கூடிய சுபவேளையில் சுக்கிர ஓரையில் பிறக்கிறது விக்ருதி வருடம்



”ப்ரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் சர்வ பூத ஹிதப்ரதாம்”

என்னும் வரிகள் மஹாலக்‌ஷ்மி அஷ்டோத்திரத்தில் வருகின்றன

இந்த விக்ருதீம் என்னும் சொல்லுக்கு மாறுதலை ஏற்படுத்துவது என்று பொருள், மாறுதலையைக் கொண்டவர் வினாயகர், அவரை ஓம்கார ஸ்வரூபி என்பர், அவரை வழிபட்டால் எல்லாக் காரியங்களும் தடையின்றி நடக்கும் எனபது நம்பிக்கை, இப்படி வினாயகர் பெயரும்

விக்ருதீம் என்னும் சொல்லுக்கு மஹாலக்‌ஷ்மியை வழிபடுவதால் நன்மையான முன்னேறங்கள் வரும் மாறுதல்கள் வரும் என்றும் பொருளுண்டு, திரு நாராயணனின் மார்பில் அல்லவா மஹாலக்‌ஷ்மி வாசம் செய்கிறாள் ,ஆகவே ஸ்ரீமன் நாராயணனையும் சேர்த்தே வணங்கினால் நன்மையுண்டு

இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தாக்கம் முழுவதுமாக இருப்பதால், செவ்வாயின் அதிபதியான முருகனையும் வழிபட்டால் செவ்வாயின் தாக்கத்திலிருந்து சற்றே விடுபடலாம் என்று ஜோதிடர்கள் கருத்து கூறுவர்

ஆகவே வினாயகரையும் ,மஹாலக்‌ஷ்மியையும்,ஸ்ரீமன் நாராயணனையும், முருகனையும் வழிபடுதல் நலம் விளைவிக்கும் ,

நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம், சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள், காலை ,நடுப்பகல், பிற்பகல், என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும், இடமாயிருக்கும்,

சம்வத்திரம். பரிவத்சரம், இடா வஸ்திரம், அனுவஸ்தரம்,இத்வத்ஸரம்

ஆகிய் ஐவகை வருஷங்கள் அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்

இளவேனில்,(வசந்தருது) ருதுவேனில் (க்ரீஷ்மருது),கார்காலம்(வர்ஷ ருது), குளிர்காலம் (சரத்ருது), முன்பனிக்காலம் (ஹேமந்த ருது), பின்பனிக்காலம் (சிசிர ருது) ,

ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள், , காயத்ரீ,ப்ருஹ்ருதி,உஷ்ணிக், ஜகதீ,த்ருஷ்டுப்,அனுஷ்டுப்,பங்க்தி, ஆகிய ஸப்த சந்தஸ்ஸூகள் எழு குதிரைகளாகும்,, அவற்றை அடிப்படையாக க் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன,

துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கிறது,சூரியனே “ தேவயான மார்கம் ”” “ அது அர்ச்சராதி மார்கம் எனவும் சொல்லப்படும், புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்கம் செல்லப் பயன்படும் வழி ””” “’’””பித்ருயாணம்” “என்றும் தூமாதி மார்கம் என்றும் அழைக்கபடும்,

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் "ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

நாமும் இந்த விக்ருதி வருஷப் பிறப்பன்று இறைவனைத் தரிசித்து இந்த வருஷம் நமக்கெல்லாம் இனியதாக இருக்கப் ப்ரார்த்தனை செய்வோம்.

அன்புடன்

தமிழ்த்தேனீ






Sunday, April 11, 2010

சென்னை ஆன் லைனில் என் கட்டுரைகள்

1.விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே


சென்னை ஆன் லைனில் வெளி வந்த கட்டுரை

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=2933c...



2.இளங்கன்று பயமறியாது

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=893666ad-cac1-4812-ba40-8f407a5afaab&CATEGORYNAME=Thene



3. கட்டிடம் கட்டுவோர் கவனிக்கவும்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=a3ec2f63-0029-41a8-a76c-580f28a96acd&CATEGORYNAME=Thene



4. வாக்களித்தால் காக்கவேண்டும்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=fa0fc81d-c7a7-4209-b73a-1fa0bb9acb62&CATEGORYNAME=Thene



5.பொய்க்கால் மனிதர்கள்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=4681935e-50b4-4a50-9f0d-373f4d2cf0dc&CATEGORYNAME=Thene



6. ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=126a6a75-df0d-481b-9264-9bf1c30bda5b&CATEGORYNAME=Thene

Saturday, April 10, 2010

Use &Throw -உபயோகித்து தூக்கிஎறி

Use & Throw


உபயோகித்து தூக்கி எறி

என் மடிக்கணிணி கடந்த முப்பத்திஐந்து நாட்களாக என்னைவிட்டு யார் யாரிடமோ போய் உட்கார்ந்து கொண்டு என்னை எந்த வேலையையும் செய்யவிடாமல் நான் பட்ட அவதிகளையும், அந்த மடிக்கணிணியில் ஏற்பட்ட ப்ரச்சனயையும் நான் அடைந்த அனுபவத்தையும் அப்படியே எழுதுகிறேன், இதைப் படிக்கும் கணிணி உரிமையாளர்களுக்கு என் அனுபவம் ஒரு பாடமாக இருக்கும் என்பதே நோக்கம்

நான் துபாயில் மிந்தமிழ் மரபு சேகரத்துக்காக மின்பதிப்பாக்கம் செய்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு நாள் திடீரென்று என் கணிணியின் திரை பச்சை வண்ணம் கொண்டது, திரை முழுவதும் பச்சை நிறமாக மாறியது கண்ணன் மேல் ஆசைகொண்டாற்போல,

எழுத்துக்களும் , படங்களும் ஒன்றுமே தெளிவில்லாமல் கணிணியில் வேலையே செய்ய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன்

துபாயில் கணிணியை சரி செய்ய அதிகம் செலவாகும் என்று என் மாப்பிள்ளை கூறியதால் என்னுடைய மகளின் கணிணியை அவளுடைய அலுவலக வேலைகளை முடித்தபின்னர் வாங்கி சில பணிகளை மிகவும் ப்ரயாசைப்பட்டு முடித்தேன்,

சென்னை வந்ததும் முதல் வேலையாக என்னுடைய மேஜைக்கணிணியை சரி செய்யும் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன், அவர் சொன்னார்

Compaq Laptop Service center ரில் கொடுத்தால் அவர்கள் முக்கிய்மான பாகங்களை மாற்றுவர் அதனால் அதிகம் செலவாகும் எதனால் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் கொடுக்கலாம் என்றார்

அவர் கூறியதைக் கேட்டு மடிக்கணினியை அடையாரிலுள்ள அவருடைய கடைக்கு எடுத்துச் சென்றேன், நாலு மணி நேரம் உடகாரவைத்தார், நாலுமணிநேரம் கழித்து கணிணித் திரையின் (Cable) கெட்டுப் போயிருக்கிறது அது உடனே கிடைக்காது ,இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் கிடைக்குமா பார்க்கிறேன் என்றார், சரி என்று மடிக்கணினியை எடுத்துவந்தேன், நான்கு நாட்களாகியும் அவரிடமிருந்து செய்தி எதுவும் வராததால், நானே தொலை பேசியில் அழைத்து கேட்டவுடன் ,அந்த(Cable) கிடைக்கவில்லை என்றார், சரி இதெல்லாம் சரிப்படாது என்று முடிவுக்கு வந்து கூகிளில் தேடு பொறியில் சென்று அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் பெயரை எழுதி தேடினதில் கிடைத்தது வடபழனியில் இருக்கும் ஒரு கணிணி சரி செய்யும் நிறுவனத்தின் ஒரு விலாசம், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், அவர்கள் மிகவும் மரியாதையாக பேசினர் , அவர்களே வந்து என் மடிக்கணிணியை வாங்கிச் சென்று சரி செய்து மீண்டும் எடுத்து வந்து வீட்டிலேயே அளிப்பதாகக் கூறியதால் அகமகிழந்தேன்

சொன்ன சொல் தவறாமல் அவர்களும் ஒரு பொறியாளரை அனுப்பி என்னுடைய கணிணியை வாங்கிச் சென்றனர்

அன்றிலிருந்து தினமும் அவர்களுக்கு தொலை பேசி வழியாக நான் தொடர்பு கொண்டு பேசி என்னுடைய தொலை பேசிக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்தது,,ஆனால் அவர்கள் ஒரு முறை கூட தொலை பேசியில் என்னை அழைத்து என்னுடைய மடிக்கணிணியின் நிலை என்ன என்பதக் கூறவே இல்லை, அதோடு என் கணிணியில் சில பாகங்களை மாற்றவேண்டும் அதற்கு ரூபாய் பதினைந்தாயிரம் ஆகும் என்றும் எனக்கு செய்திஅளித்தனர்

ஒரு கட்டத்தில் மனம் மிகவும் வெறுத்து அவர்களைத் தொலை பேசியில் அழைத்து மரியாதையாக அன்றே என்னுடைய மடிக்கணினியை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைக்கும்படியாகவும் அப்படி இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்று ஆதாரபூர்வமாக மிரட்டியதால் முப்பது நாட்களுக்குப் பிறகு என் மடிக்கணிணியை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து என்னிடம் கொண்டு வந்து அளித்தனர்,

கடைசியில்தான் தெரிந்தது அந்த நிறுவனமும் உண்மையான அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள அலுவலகம் அல்ல என்று, எனக்கு குழப்பம் ஏன் கூகிள் தேடு பொறியில் கூட சரியான விவரங்கள் கிடைப்பதில்லை என்று, மீண்டும் பலரை விசாரித்து உண்மையான அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தை அண்ணாசாலையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து அங்கே சென்று உட்கார்ந்தேன், ஒரு விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டினர், நானும் அவ்வாறே அளித்தேன், அவரிடம் கேட்டேன் கூகிள் தேடு பொறியில் உங்கள் நிறுவனத்தின் பெயரை எழுதி தேடினால் ஏன் உங்களின் உண்மையான விலாசம் கிடைக்கவில்லை என்று, அவர் மிகவும் சாதாரணமாக கூறினார் , இன்னும் வலையேற்றாமல் இருந்திருக்கும் என்று, அது சரி அவர்கள் வலையேற்றாமல் இருந்ததால் நாமல்லவோ மாட்டிக்கொண்டோம் வலையில் என்று எண்ணிக்கொண்டே இருக்கும்போது

எனக்கு ஒரு எண் வழங்கப்பட்டது அந்த எண்ணை அவர்கள் அழைக்கும் வரை உட்கார்ந்திருந்து மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு அந்த பொறியாளரிடம் அளித்தேன் அவர் திருப்பான் கொண்டு என்னுடைய மடிக்கணிணியை திறந்து பார்த்துவிட்டு ,சரி செய்து கொடுக்கிறோம் என்றார், நான் என்னுடைய கணிணியின் Hard Disk கை கழற்றிக் கொடுங்கள் ,அதிலே முக்கியமான விவரங்கள் இருக்கின்றன என்றேன், அதற்கு அவர் ,அப்படி முடியாது ,உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் Hard Disk க்கிலிலுள்ள விவரங்களை நீங்கள் எங்காவது சேமித்துக்கொண்டு பிறகு வந்து அளியுங்கள் என்றார், உடனடியாக சேமிக்க எங்கே போவது , அதனால் விழித்தேன், அவர் உடனே மாம்பலத்தில் உள்ள ஒரு கடையின் பெயரை சொல்லி அந்தக் கடையில் தனியாக வெளியில் வைத்து சேமிக்க Hard Disk விற்கிறார்கள், அதை வாங்கி உங்கள் விவரங்களை சேமித்து வைத்துகொண்டு உங்கள் வீட்டின் பக்கத்திலேயே எங்கள் அலுவலகம் அண்ணா நகரிலே இருக்கிறதே அங்கேயே நீங்கள் அளிக்கலாமே என்றார்

அதுவும் நல்ல ஆலோசனைதான் என்று மீண்டும் காரை ஓட்டிக்கொண்டு மாம்பலம் சென்று அந்தக் கடையில் External Hard Disk விலை கேட்டேன், அவர் சொன்னார் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் என்றார், மனம் வெறுத்துவீட்டிற்கே திரும்பி வந்து உட்கார்ந்து கூடியவரையில் முக்கியமான கோப்புகளை, புகைப்படங்களை Rewriteble C D யில் எழுதிக்கொண்டு, என் வீட்டின் அருகே இருக்கும் அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் கிளைக்கு சென்று அங்கும் இதே போன்ற நடைமுறைகளைக் கையாண்டு கணிணியை அங்கிருந்த பொறியாளரிடம் ஒப்படைத்தேன்,முன் பணமாக ரூபாய் முன்னூறு கட்டச் சொன்னார்கள், நாம் அவர்கள் கூறும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு அவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் நம் கணிணியை சரி செய்ய ஆகும் செலவில் அந்த முன்னூறு ரூபாயைக் கழித்துக்கொள்வதாகவும் , அப்படி இல்லையென்றால் அந்த முன்னூறு ரூபாய அவர்களின் அலுவலகத்துக்கு சேர்ந்துவிடும் என்று கட்டளை போட்டார்கள் , ஒப்புக்கொண்டு முன்னூறு ரூபாய் அளித்து ரசீது பெற்றுக்கொண்டேன், அவர் கணிணியை திறந்து முதலில் என்னுடைய Hard Disk ஐ கழற்றி என்னிடம் தந்துவிட்டு கணிணியை மட்டும் கொடுத்தால் போதும் என்று கணிணியை வாங்கி உள்ளே வைத்தார்,

மூன்று நாட்கள் சென்ற பின்னர் எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராத்தால் நானே நேரில் சென்று விசாரித்தேன், அப்போது அவர் ,ஐய்யா உங்கள் கணினியை பரிசோதனை செய்தோம் , அதன் விவரங்களை உங்களுக்கு இணையத்தில் மடலில் அனுப்புகிறோம் என்றார்கள், அதற்குப் பிறகு இணையத்தில் மடலில் விவரம் அனுப்பினார்கள், சில குறிப்பிட்ட பாகங்களின் பெயர்களை எழுதி அந்த பாகங்களின் விலையையும் எழுதி மொத்தம் 18 ஆயிரம் செலவாகும் என்றார்கள்,

என்னுடைய மகனுக்கு அவர்கள் அனுப்பிய மடலை முன்னுப்பினேன், அவன் ,, அப்பா நான் வேறு கணிணி வாங்கி அனுப்புகிறேன் வீணாக 18ஆயிரம் செலவழிக்க வேண்டாம் என்று கூறவே அந்த

அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் கிளைக்கு சென்று என் மடிக்கணினியை திருப்பித் தரும்படிக் கூறினேன் , அவர்கள் நீங்கள் இங்கே உட்கார்ந்து உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் நாங்களே கொண்டு வந்து வீட்டிலே கொடுக்கிறோம் என்றார்கள், நம்பி வீட்டுக்கு வந்தேன்

இரண்டு நாட்கள் அவர்களுக்கு தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு

மேலும் கொஞ்சம் பணம் தொலைபேசிக்கு செலவழித்து, கடைசியாக

ஒரு நாள் என் மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தார் ,

அவர் என் மடிக்கணினியை என்னிடம் அளித்து விட்டு ஒரு கடிதத்தில்

பெற்றுக்கொண்டேன் என்று கையெழுதிடச்சொன்னார்,

என்னுடைய கணிணி திறக்க முடியவில்லை, மூடமுடியவில்லை

மூடித்திறக்கும் பகுதியில் உள்ள ஒரு தகட்டை உடைத்திருந்தார்கள்

நான் இப்படியே என் கணிணியை வாங்கிக் கொள்ள முடியாது நான் உங்களிடம் அளித்த அதே நிலையில் அளித்தால் வாங்க்கிக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் அவர்களிடமே என் கணினியை ஒப்படைத்தேன்,

மீண்டும் அந்த அலுவலகத்துக்கு சென்று கேட்டால் அவர்கள் நான் இப்போது கணிணி இருக்கும் நிலையில்தான் அவர்களிடம் அளித்தேன் என்று வாக்குவாதம் செய்தார்கள், நான் மிகப் பொறுமையாக அவர்களிடம் நான் அண்ணா சாலையிலுள்ள பீட்டர்ஸ் சாலையில் உள்ள அவர்களின் இன்னொரு அலுவலகத்தில் அளித்ததையும் சுட்டிக் காண்பித்து ,அங்கே இருந்தவர் என் கணிணியை திறந்து பார்த்தார் ,அவரிடம் வேண்டுமானல் கேளுங்கள் நான் எப்படி உங்களிடம் கொடுத்தேன் என்று தெரியும் என்று வாதாடி நிரூபித்து

அவர்களையே சரி செய்து கொடுக்கும்படி வற்புறுத்தி மேலும் இரண்டு நாட்கள் காத்திருந்து சரி செய்து வாங்கினேன்

ஆக மொத்தம் நான் எந்தக் காரணத்துக்காக இப்படியெல்லாம் அலைந்தேனோ அந்த தவறு சரிசெய்யப்படவே இல்லை என்னுடைய கணினியில், என்பதுதான் முக்கியமான செய்தி



இதற்காகத்தான் மேலை நாடுகளில் Use And Throw என்னும் உத்தியைக் கடைப்பிடிக்கிறார்களோ என்று தோன்றியது

இந்தக் கலாச்சாரம் மேல் நாட்டுக் கலாச்சாரம் என்று நாம் நினைக்கிறோம் இல்லை நம் நாட்டுக் கலாச்சாரம்தான்,

இந்த Use And Throw உத்தியை நாமும் கடைப்பிடிக்கிறோம் நம்மைப் பெற்றவர்களிடம்,

அவர்களை உபயோகித்து நாம் முன்னுக்கு வந்த்தும் அவர்களை வெளியே துரத்தி விடுகிறோம்



ஆனால் இந்த Use And Throw உத்தியை நாம் வாங்கி உபயோகிக்கும்

மின்சாதனப் பொருட்களிடம் உபயோகிப்பதில்லை நாம்

பணம் பணம் பணம் அதுதானே காரணம்



அன்புடன்’

தமிழ்த்தேனீ