திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, September 11, 2013

மந்திரமாவது நீறு


                                    மந்திரமாவது நீறு”

மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி
வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் .ஆகவே நாம் அவைகளை கையில் வைத்துக் கொண்டு மனமார ப்ரார்த்தனை செய்து அவகளை வணங்கிவிட்டு உபயோகித்தால் எப்படிப்பட்ட வியாதியும் ,த்ருஷ்டிகளும்
விலகும்  என்பது நான் கண்கூடாகப் கண்டவன் நான்

என்  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் .மானசா என்கி ஜரத்காரு தேவி என்கிற சக்தியின்  ஸ்லோகம் ஒன்று இருக்கிறது

"  ஓம்   ஐம் ஹரீம்  ஸ்ரீரீம் க்லீம் ஜம் மனஸா தேவ்யை நமஹ:  "

 கையில் கொஞ்ம் திருநீறு வைத்துக் கொண்டு
இந்த
 ஸ்லோகத்தை  மானசீகமாக ,ஜரத் காரு தேவியைப்
ப்ரார்த்தித்து
 108 தடவைகள் உச்சரித்து பயத்தால் ,அல்லது த்ருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு , நெற்றியில் இந்த திருநீற்றினை இட்டுப் பாருங்கள் .உடனே பலன் கிடைக்கும்
குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் துவங்கும்

இது என் அனுபவ பூர்வமான உண்மை

" மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி
வேப்பிலை, மஞ்ள், இவைகள் அனைத்துக்கும்
இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்
 "
                                      1.மந்திர ஒலிகள்

அமைதி,சாந்தம்,ஆழ்நிலை உட்ப்ரயானம்,இவை அத்தனைக்கும் முந்தைய படிதான் ஒலி,சப்தம்,மொழி,எல்லாமே ஒவ்வொரு மனிதனும் பிறப்பதிலிருந்து  பயபக்தி, இறை கானங்கள்,உச்சாடனங்கள்
இவைகள் போதிக்கப் பட்டு வளர்க்கப் படுகிறான் .

இறைவனை நம்புவோர்கள் மட்டுமே இதை நம்புவார்கள் ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு படிக்கட்டுக்கள்.ஒவ்வொன்றாக தாண்டவேண்டும், அமைதியாக, சாந்தமாக, ஆழ்நிலை உட்ப்ரயாணம் செய்ய, மந்திர உச்சாடனத்துக்கு நிச்சயமாக பலன் இருக்கிறது .
அதன் ஒலி அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒன்று கூடிய மஹாசக்தி, எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும்  மிக எளிதாக ஏற்படுத்தும்
நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அத்தனை விஞ்ஞான முன்னேற்றமும் "கண்டு பிடிக்கப் பட்டவையே,
 உருவாக்கப் பட்டவை அல்ல "

ஆக ஏற்கெனெவே இந்தப் ப்ரபஞ்ஜத்தில் இருப்பதை
விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அல்லது மெய்ஞானிகள்  உணர்கிறார்கள்  அவ்வளவே

ஒவ்வொரு விஞ்ஞானி ஒவ்வொருகண்டுபிடிப்பை
நிகழ்த்தும் போதும் அவர்களுடைய அறிய செயல் திறன்
 அதிர்வுகளும் ப்ரபஞ்த்தின் இயற்கையான அதிர்வுகளும்
அல்லது அலை வரிசைகளும் ஒரு இணையாக சந்திக்கும் போது
நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள்

அல்லது மெய்ஞானிகள் தங்களுடைய ஆசார அனுஷ்டான
வழிமுறைகளால் தம்மை உணர்ந்து உள்ளுக்குள்ளே இருக்கும்
ஆன்ம சக்தியை
 அடைந்து அந்த ஆத்ம சக்தியின் மூலமாக
ப்ரபஞ்த்தின் உன்னதமான
 சக்தியின் அலைவரிசையை
தொடர்பு கொண்டு தம்முடைய ஆத்ம சக்தியை
அந்த அலைவரிசையோடு ஒத்துப் போகச் செய்து
அதன் மூலமாக தாம் உணர்ந்த அற்புதங்களை
கண்டு பிடிப்பாக மக்களுக்கு சொல்லி அவர்களை
உய்யச்செய்வது .இவை தான், மந்திர அல்லது தந்திர அல்லது விக்ஞான அல்லது, மெய்ஞான வழிகள்

                     ப்ரசாதம்

இறைவனை நம்புகிறவர்கள் மட்டுமே ப்ரசாதம் என்னும்
சொல்லையே நம்புவர் .

ப்ரசாதம் என்பது நாம் அதாவது மானிடர்களாகிய நாம்
நம்மைப் படைக்கும் முன்னரே நாம் உயிர் வாழ்வதற்காக,
பிணியில்லாமல் இருப்பதற்காக,அப்படியும் மீறி பிணிகள் வந்தால்
அவற்றைப் போக்கிக் கொள்வதற்காக
அனைத்து
 வழிகளையும் படைத்த இறைவனுக்கு
நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான்

அதிலும் குறிப்பாக ப்ரசாதம் என்கிற வார்த்தையை
நம்புகிறவர்களிடம் நான் நகைச் சுவையாக ஒரு கேள்வி கேட்பதுண்டு

ப்ரசாதமாக  படைக்கும் உணவை நீங்கள் எந்த தெய்வத்துக்குப் படைக்கிறிர்களோ அந்த தெய்வம் உண்மையிலேயே
உண்டு மிகுதியை உங்களுக்கு ப்ரசாதமாக
தருகிறது என்று நம்புகிறீர்களா.......?
 என்று

ஆமாம் நம்புகிறோம் என்று பதில்
சொன்னவர்களிடம்
 நகைச்சுவையாக மீண்டும்
அப்படியானல் சரி
 நீங்கள் படைக்கும்
உணவுப் பொருட்களை
 உண்மையிலேயே
இறைவன்
  உண்பதானால் நீங்கள் அளித்த
உணவின் அளவு கொஞ்மாவது குறைந்திருக்க
வேண்டுமே என்று அதற்கு இதுவரை
பதிலளித்தவர்கள்
 இல்லை,

நட்ட கல்லும் தெய்வமே
நம்முள் நாதன் இருந்தால் ,நம்பிக்கைதான் வாழ்க்கை
மேலும் நாம் அளிக்கும் எதுவாக இருந்தாலும் சரி
நம்மைப் படைத்த இறைவனுக்குநாம் செலுத்தும்
நன்றிக் கடனாக நாமே ஏற்படுத்திக் கொண்ட
விஷயங்கள்தான் .


ப்ரசாதம் படைப்பது என்பது
உண்மையிலேயே நாம் படைப்பதை இறைவன்
ஏற்றுக் கொண்டு இறைவன் அதை உண்ண
ஆரம்பித்து விட்டால்
 நாம் அடுத்தமுறை
படைப்போமா என்பது சந்தேகமே

ப்ரசாதம் என்பதன் தாத்பரியமே
 நாம் செலுத்தும் நன்றிக் கடன் ,மேலும் நம் நம்பிக்கை
சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு படைத்துவிட்டு
நாம் சாப்பிட்டால் அந்த உணவு வகைகளில் ஏதேனும்
தோஷங்கள்,அல்லது
 மருத்துவ நிபுணர்கள்
கூறுவது போல ஏதேனும் ஒவ்வாமையான விஷயங்கள்
இருக்குமானால் அவைகளை இறைவன் நீக்கிவிடுவான்
என்னும் நம்பிக்கை இவ்வவளவே

"மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான
திருநீறு, வில்வம்,துளசி,வேப்பிலை, மஞ்ள், இவைகள்
அனைத்துக்கும்
 இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்  "

அதே இறைவன் இவை எல்லாவற்றையும் உபயோகித்து
பலன் அடையும் சக்தியையும் நமக்களித்திருக்கிறான்

ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் யார் உபயோகித்தாலும் இவை நிச்சயமாக பலன் தரும் வண்ணம் அருள் செய்திருக்கிறான் கருணை மனம் கொண்ட இறைவன்
           

                திரு நீறு + திருநாமம்

திரு நீறு என்பதே  பசுமாட்டின் சாணம் அதைக் காய வைத்து
அதை நெருப்பிலிட்டு அதன் மூலமாக வரும் சாம்பல்
பசுமாட்டின் சாணம் ஒரு கிருமி நாசினி என்று
விக்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்
அதனால்தான் நம் முன்னோர்கள்
சுகாதாரம் கருதி பசுமாட்டின் சாணத்தை தண்ணீரிலே
கலந்து தாங்கள் வாழும் பகுதிகளில் தெளித்து
நோய்க் கிருமிகளிடமிருந்து
 ஓரளவு தப்பித்து வாழ்ந்தனர்
நம்முடைய மூத்தோர்களால் மெய்ஞானம் என்று
சொல்லப் பட்ட அனைத்துமே விஞ்ஞானம்தான்
அக்காலத்தில் மக்களுக்கு விஞ்ஞானம் என்றால் புரியாது
அதனால் மெய்ஞானம் என்று சொல்லி வைத்தனர்
நான் ஒரு கவிதையில்

 

"  வேதியல் படித்தால் தெரியும்,
வேதம் படித்தாலும் புரியும்,
வேதியல் விந்தை, -வேதம் தான்
வேதியலின் தந்தை,
வேதம், வேதியலின் வர்க மூலம்,
 "

என்று எழுதி உள்ளேன்


இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல் படும் விபூதி,திருநீறு இவைகளை நாம் கையில் வைத்துக் கொண்டு மந்திர உருவேற்றினால் இன்னும் கூடுதலாக சக்தி பெற்று நம்மை பல நோய்களிலிருந்து
காப்பாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை .

அதே போல் வைணவர்கள் தரிக்கும் நாமம் என்று சொல்லப் படும் வெள்ளை கட்டி அதைக் குழைத்து நெற்றியிலே  இட்டுக் கொள்ளும் போது நாமக்கட்டி என்று சொல்லப் படுகின்ற அதில் சுண்ணாம்பும் கலந்திருக்கின்ற காரணத்தால் நாமமும் அதன் நடுவிலே இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூர்ணம் என்னும் சிவப்புக் கோடு மஞ்ள்
என்னும் கிருமி நாசினியை உபயோகித்து உருவாக்கப் பட்டிருப்பதால்
நாம் நம் நெற்றியில் இவைகளைத் தரிக்கும் போது நெற்றியின் நடுப் பகுதியான முக்கியமான சைனஸ் என்னும் நரம்புகளில் அனாவசியமாக சேரும் தண்ணீர் நமக்கு ஏற்படுத்தும் தலைவலி கழுத்து வலி போன்ற நோய்களை தடுக்கும் கிருமி நாசினியாக செயல் படுவதால் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து  தீர்கதரிசனத்துடன் கண்டு பிடித்து வைத்திருக்கும் இவைகளை இறைவன் ப்ரசாதமாக
 நாம் நினைத்து அணிவதனால் செயற்கையாக தயாரிக்கும் மாத்திரைகளை உபயோகிக்கும் நிலை நிச்சயமாக குறையும்

               வில்வம்


அரசமரம் ,வில்வ மரம் இவைகள் வெளியிடும் காற்று இயல்பாகவே மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வல்லது  என்று விக்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர் .

புற்று நோய் என்னும் கொடிய நோய் வில்வ இலைகளை  தினமும் சேர்த்துக் கொண்டால் தீர்ந்துவிடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வர்

சூட்டுக்கு சூடு தான்  நல்வினை பயக்கும் மருந்து, ஆகவே நம் உடல் சூடுஅதிகமாகும்போது வில்வ இலையின் சூடு நம் உடலில் சேரும்போது இயல்பாகவே நாம் சமனப் பட்டு நோய் தீரும்
அதை இறைவனுக்கு அவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு
ப்ரசாதமாக சேர்த்துக் கொண்டால் அவன் அருளும்
சேர்ந்து நாம் பூரண குணமடைவோம் எனபதில்
என்ன சந்தேகம்....?

அரச மரத்தின் காற்று பெண்களின் கர்பஸ்தானத்தில் இருக்கும்
பல ஒவ்வாமைகளை சரி செய்து அவர்களுக்கு .மகப் பேறு அளிக்க வல்லது அதனால்தான் பெரியவர்கள். மகப் பேறு கிட்டாதவர்களை அரச மரத்தை ப்ரதட்ஷனமாக வரச் செய்வர் .அவர்கள் ப்ரதட்ஷணமாக வரும்போது அந்த அரச மரக் காற்றில் இருக்கும் நல்ல விளைவுகள்
ஏற்படுத்தக் கூடிய வாசம் அப் பெண்களுக்கு குறைகளை களைந்து புத்திரபாக்கியத்தை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்

           “ துளசி  வேப்பிலை, மஞ்ள், “

சைவ ஆலயங்களில் திருநீறு,மற்றும் வில்வ இலைகள் அவைகளை ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கமும் வைணவ ஆலயங்களில் துளசிகலந்த தீர்த்தமும் மஞ்ள் கலந்த குங்குமமும் ப்ரசாதமாக அளிக்கும் வழக்கமும் மிகவும் யோசித்து பெரியோர்களால்
ஏற்படுத்தப் பட்டது .


"முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு
பண்பாடு
  "என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள்


நமக்கு வலுவூட்டுகிறது .சைவம் ,வைணவம் அதன் பின்னே
சாக்தம் என்று சொல்லக்கூடிய சக்தி வழிபாட்டுக் காரர்கள்
வேப்பிலையில் மஞ்ளைப் பூசி அதை அம்மனாகிய சக்திக்கு அணிவித்து ,அதையே ப்ரசாதமாக வாங்கி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள் .

நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்ப்பார்கள் .நல்ல வெய்யில் காலத்தில் வேப்ப மரத்தடியின்
கீழ் அமர்ந்து பாருங்கள் எவ்வவளவு குளிர்ச்சியாய்
இருக்கிறதென்று .  மஞ்ளும் வேப்பிலையும் குளிர்ச்சி
ஆகவேதான் வேனல் காலங்களில் வரும் கட்டிகள் அம்மை போன்ற நோய்கள்தீர வேப்பிலையை யும் மஞ்ளையும் அரைத்து
தடவுகின்றனர் வேப்பிலையும் மஞ்ளும் கருணையோடு
நம்மைக் காக்கும் உலகமாதா வான அன்னையின் அருளும்
 அதில் சேரும்போது நோய்கள் தீரும் என்பதில் என்ன சந்தேகம்....?

             “  சிவன்

சிவன்  அபிஷேகப் பிரியன் ஏனென்றால் ஒரு கையில் அக்னி உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பல் என்று நம்முடைய  பாபங்களைத் தீர்க்க பெற்ற தாய் போல அவன் தாங்கிக் கொண்டிருக்கிறான்
அத்தனை வெப்பத்தையும்.


அந்த வெப்பம் தணிய அவன் அபிஷேகப் பிரியனாயும்
வில்வ இலை தரித்தும் பசுஞ்சாணத்தல் செய்யப்பட்ட
திருநீறையும், குளிர்ச்சியான சந்திரனையும் கங்கையையும்
 தலையிலே
அணிந்து கொண்டு பனிமலையிலே,அதாவது கையிலாயத்திலே வாசம் செய்கிறான்

               மஹாவிஷ்ணு

மஹாவிஷ்ணு  படுத்துக் கொண்டிருப்பதே பாற்க்கடலில்.  அவன் மிகக் குளிர்ச்சியானவன் ,இல்லையென்றால் எப்படி அவன் நாபிக் கமலத்திலிருந்து தாமரை முளைக்கும் அதில் எப்படி நான்முகன் அமரமுடியும்....? அதனால்தான் பக்தர்களின் குளிர் கால நோய்கள் தீர்க்க எல்லாக் குளிரையும் தான் தாங்கிக் கொண்டு இருப்பதால் அதைச் சமன் செய்ய அவன் திருமகளை மார்பிலே தாங்கிக் கொண்டு
ஆடை ஆபரணங்கள் பூண்டு, சுகவாசி போல் தோற்றமளித்துக் கொண்டு நம் பாவங்கள் ,பிணிகள் இவைகளைப் போக்க நெய்,தேன் ,பால் ,பலகாரங்கள் .இன்ன பிற வசதிகளைச் செய்து கொண்டு
நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறான் ஆம் விஷ்ணு அலங்காரப் பிரியன் என்று சொல்வார்கள்

                 சக்தி

அது மஹா விஷ்ணுவாக இருக்கட்டும் ஈசன் சிவனாக இருக்கட்டும்
அனைவருக்கும் சக்தியாய் ஒளிர்பவள் சக்தி அதனால்தான்
சக்தியானவள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் படியாக
மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி
வேப்பிலை, மஞ்ள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் .என்று சொல்லக் கூடிய
 இறைவனுக்கே சக்தி கொடுப்பவள் அன்னை .


ஆதலால் தான் அவள் திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்ள், ,குங்குமம் இவைகள் அனைத்துக்கும் சக்தி கொடுப்பவளாக
அத்தனையையும் தான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு
ப்ரசாதமாக அளித்துக் காக்கிறாள் .

என்னை இந்த உன்னதமான கட்டுரைய எழுதவைத்த
சக்தி,அன்னையின் அருள் அவள் திருவடி தொழுது இக் கட்டுரையை
அளிக்கிறேன் .அன்னை அருள் பாலிக்கட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com

 

 

Sunday, September 8, 2013

மேலும் இரு புத்தகங்கள் வெளியீடு


என்னுடைய   முதல் பதிப்பான  " வெற்றிச் சக்கரம்"  புத்தகத்தை  தொடர்ந்து     இன்னமும் இரு புத்தக வெளியீடு

1. " மனம் என்னும் மந்திரச் சொல்"
2. "தங்கத் தாமரை"    

மனம் என்னும் மந்திரச் சொல்   என்னும் புத்தகம்  பல்சுவைக் கட்டுரைகள் அடங்கியது''

தங்கத் தாமரை    32  சிறு கதைகள் அடங்கியது

மணிவாசகம் வெளியீட்டாளர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்

நண்பர்கள் புத்தகங்கள் வாங்கி   மகிழுங்கள், என்னையும் மகிழவையுங்கள்
வெற்றிச் சக்கரம் புத்தகத்தை வாங்கிப் படித்து  என் புத்தகத்தை வெற்றிப் படைப்பாக்கிய   வாசகர்களுக்கு  நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ


Friday, September 6, 2013

39 ஆவது ஆண்டு மணநாள்


அட அதற்குள்ளாக  முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டதா?

1974 ம் ஆண்டு  செபடம்பர் மாதம் 6 ம் தேதி  நடைபெற்றது திருமணம்

ஆம் இன்று எங்கள் முப்பத்தி ஒன்பதாவது ஆண்டு  திருமண நாள்

நல்ல வாழ்க்கையை அருளிய இறைவனுக்கும்

எங்கள் தாய் தந்தையருக்கும் , முன்னோர்களுக்கும்   எங்கள் நமஸ்காரம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


Sunday, September 1, 2013

"நடுத்தெரு நாராயணன் " சிறுகதை

"நடுத்தெரு நாராயணன்" சிறுகதை வல்லமையில் வெளியாகி உள்ளது

படிக்க 


 http://www.vallamai.com/?p=37991

கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,   ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,
அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,
இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

 இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

தமிழ்த்தேனீ

எழுத்தாளர், நடிகர்


அன்புடன்
தமிழ்த்தேனீ