திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 19, 2007

தினம் ஒரு கவிதை

dokavithai@yahoogroups.com

From: kris_chary

Date: Wed Oct 5, 2005 8:57 am )

தினம் ஒரு கவிதை

தினம் தினம் ஒரு ஆரம்பம்
தினம் தினம் ஒரு கவிதை
அனுபவம் என்னும் பாடம்-இதைவிடக்
கவிதை யாரால் எழுத முடியும்
இறைவன் எழுதும் கவிதை
இது ப்ரபஞ்ஜத்தின் ஆரம்ப விதை
முடிவில்லா ஆரம்பம்
முற்றுப் புள்ளி இல்லாத் தொடர் கவிதை
முடிவில்லா வானம் போல்
முயன்றாலும் தொட முடியாத
வெட்ட வெளி போல் ப்ரபஞ்ஜம்
இறைவன் எழுதும் கவிதை
தினந்தோறும் ப்ரசவம்


தமிழ்த் தேனீ