திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 24, 2008

சின்னத் திரை பெரிய திரை

சின்னத்திரை-பெரியதிரை

சின்னத்திரை - பெரிய திரை -எதுவானாலும்
எதிலும் ஒரு முத்திரை பதிக்க வேண்டும்,
என்பதே நம் நோக்கமாக இருந்தால்
நல்லது,

இன்று பல பேருடைய முகத்திரையை கிழித்துக்
கொண்டிருக்கிறது , சின்னத் திரையும் பெரிய
திரையும்.
சின்னத் திரை ,பெரிய திரை ,காரணமாக உருவான
பல பத்திரிகைகள், ஏற்கெனவே இருக்கும் பல
பத்திரிகைகள், உள் பட எல்லாருமே.,
மனிதர்களின் வாழ்க்கைக்கு இந்த இரண்டும்
உதவுகிறதா?
அல்லது இவை இரண்டும் மனிதர்களின் வ.¡ழ்க்கையை
சீரழிக்கிறதா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்,

ஆனால் இந்த இரண்டும் எந்த அளவுக்கு
முன்னேற்றம் அளிக்கிறதோ,
அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்க்கையை
சீரழிக்கவும் செய்கிறது .,
என்பதை மனம் திறந்து சொல்கிறார்களோ,....
இல்லையோ மனத்தளவு உணர்ந்திருக்கிறார்கள்
என்பது நிச்சயம்,

என் நண்பர் ஒருவர், அவர் போகாத அயல்நாடுகளே
இல்லை, பல பெரிய பதவிகள் வகித்திருக்கிரார்
அவர் இன்று சின்னத் திரை ,பெரிய திரை
இரண்டிலும் நடித்துக் கொண்டு இருக்கிரார்
அவரை நான் கேட்டேன் , நண்பரே
உங்க தகுதிக்கும் வயசுக்கும் இதெல்லாம்
தேவையா என்று,
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை
யோசிக்க வைத்தது,

மிஸ்டர் கிருஷ்ணமாச்சாரி நான் கடந்த
காலத்தில் என்னன்னவோ செய்தேன்
ஆனால் யாருமே எங்கிட்ட வந்து
ஐயா நீங்கதானா அதுன்னு கேட்டதே
இல்லை,
ஆனா ஒரு சினிமாவுல ,ஒரு தொலைக்காட்சி
தொடர்ல நான் நடிச்ச உடனே
ஐயா நீங்கதானே அது , ஐயா நீங்கதானே அது ,
அப்பிடீன்னு பலபேரு கேக்கராங்க,
இப்போ சொல்லுங்க இது தேவையா
தேவை இல்லையான்னு- அப்பிடீன்னார்,
உண்மைதான் எல்லாருக்குமே ஒரு
(ரெகக்னேஷன்) அதாவது தகுதி உணர்தல்
தேவைப்படுகிறது,
இந்தத் தகுதி உணர்தல் மட்டும் நம் நாட்டில்
சரியான அளவில் இருந்தால் நம்மில் யாராவது
அயல் நாட்டுக்கு வேலைக்கு சென்றிருப்போமா
சொந்த பந்தங்களை விட்டுட்டு சுவையான
வாழ்க்கை முறையை விட்டுட்டு
நம் திறமைகளை அயல் நாட்டுக்கு விற்க
முடிவு செய்திருப்போமா?
இது ஒரு கோடி பதில்களை தேக்கி
வைத்திருக்கும் கேள்வி?

சரி, முதன் முதலில் நடிக்கவேண்டும் என்ற
ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது,
ஏதாவது ஒரு துறையில் ப்ரபலமாக
இருக்க வேண்டும்!!!
பிறந்தோம்! - இறப்பதற்கு முன்
ஏதாவது சாதனை செய்யவேண்டும் என்கிற
தாகத்தை எனக்குள் விதைத்தது,
என் தாயார் கமலம்மாள் அவர்கள்.,

வெறும் மூன்றாவது மட்டுமே படித்துவிட்டு,,
பெண்கள் வெளியே வரமுடியாத ,
அந்தக் காலத்திலேயே, தாய் நாட்டுக்காக
கதைகள் எழுதி , கவிதைகள் எழுதி,
வை. மு. கோதைநாயகிஅம்மாள் போன்ற பல
பெரியவர்களுடன் சேர்ந்து , வாருங்கள் மறியல்
செய்து , மனமகிழ்ந்திட வாருங்கள் ,என்று
விடுதலைப் பாடல்களைபாடி , ஊர்வலமாகப் போய்
தன்னுடைய ஒரே சொத்தான இரு தங்க
வளைல்களை ,மஹாத்மா காந்தியிடம்
கழட்டிக் கொடுத்துவிட்டு ,வீட்டுக்குச்சென்று
வளையல்களை மஹாத்மாவிடம்
நாட்டுக்காக கழட்டிக் கொடுத்துவிட்டேன்,!!
என்று தைரியமாகக் கூறியவர்,
என் தாயார் கமலம்மாள் என்பது
சத்தியமான உண்மை!!!!

மூன்றாவதே படித்த என் அம்மாவின் தமிழ் அறிவு,
என்னைப் பல முறை வியக்க வைத்துள்ளது.
ஒரு முறை வில்லிவாக்கம் என்னும் ஊரிலே
குடியிருந்தோம்
வழக்கமாக புகைவண்டி நிலையத்துக்கு
அருகிலே இருக்கும்
காய்கறிக் கடைக்கு சென்று தேவையான
காய் கறிகள் வாங்கிக் கொண்டு திரும்புவோம்
ஒரு நாள் மாலை வேளை, கதிரவன் தன்
வழக்கமான பணியை முடித்துக்கொண்டு
வேலைக் களைப்பால் முகம் சிவந்து
அதனாலேயே அழகாக, மிக அழகாக,
தோன்றிக் கொண்டு ...இல்லை இல்லை
மறைந்து கொண்டிருக்கும், காட்சியை
கண்டுவிட்டு வீடு திரும்பினோம்!

என் அம்மா டேய் கண்ணா எழுது என்றார்கள்
ஆமாம் என்னை என் அம்மா கண்ணா என்றுதான்
அழைப்பார்கள்,
உடனே காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தேன்
சரமாரியாக என் அம்மாவின் வாயிலிருந்து
கவிதை மழை!!!

மரகதப் பச்சைக் கரை வரைந்த ,
வைரக் கிரணங்கள் இழை சேர்த்து,
செந்தூரச் செந்தழல் சேலை கட்டி,
மாலை மயங்கும் வேளையிலே,
மலை முகட்டின் சிகரத்திலே,
காதலன், காவலன், காரிருளோன்,
வரக் காத்திருக்கும், வண்ண மாலைப்
பெண்ணே!!!
பத்தினிப் பெண்டிரின் பாத நடை போல,
மெத்து மெத்தன்ன நடை பயின்று,
நித்தம் நித்தம் நீ நின்றும் நில்லாமலும்,
மஞ்சில் ஒளிந்திடப் போகையிலே,
அப்பிடீன்னு அது பாட்டுக்கு
கொட்டிக்கொண்டே இருந்தது.

இன்னும் பல அருமையான வரிகள் ,
இந்தப் பாடலில் இருக்கிறது.
இந்தப் பாடல், இன்னும் பல
தெய்வீகப் பாடல்கள், எல்லாம்
உயர் திரு பாம்பே சகோதரிகள்
அவர்களால் பாடப்பட்டு,
சங்கீதா ஒலிநாடா நிறுவனத்தால்,
ஒலி நாடாவாக தெய்வீகப் பாமாலை
என்னும் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்
அப்போது என் தாயாருக்கு 78 வயது,
அது மட்டுமல்ல, அப்போது என் தாயார்
ஒரு புற்று நோயாளி, வாரா வாரம் இரத்தம்
ஏற்றிக் கொண்டால்தான், நடமாடவே முடியும்,
அந்த பொல்லாத நாட்களிலும், எதாவது
சாதனை நிகழ்த்தவேண்டும் ,என்கிற ஆர்வம்
அவர்களை , திரு ஜயேந்திரஸ்வாமிகள்
ஏற்படுத்திய ஜன் கல்யாண்- என்ற அமைப்பில்
கலைமகள் பத்திரிகையும் ,ஸ்டேட் பாங்க்கும்
இணைந்து நடத்தியஒரு கதைபோட்டி,
அதில் கலந்து கொண்டு, வெற்றிகரமாக
முதற் பரிசும் பெற்ற என் தாயார்,
உயர் திரு சங்கராச்சாரியார் ஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகளின்- திருக் கரங்களால்
தங்க காசு வாங்கும் அளவுக்கு, திறமையும்,
உறுதியும் ,கொண்ட என் தாயார்
கமலம்மாள் அவர்கள் அளித்த ஊக்கமேஎன்னை
குறைந்த பட்ஷம் இந்த அளவுக்காகவாவது
எழுத வைத்திருக்கிறது என்பதில்
எனக்கு சந்தேகமில்லை.

ஆகவே ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும்
ஊக்கம் கொடுக்க ஒரு கருவி நிச்சயமாய்த்
தேவைப் படுகிறது!

நான் சாதாரணமாக சொல்வேன் ,
என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது
இவர்தான் அப்பிடீன்னு யாரையவது கை காட்டுவேன்,
எப்பிடீன்னு என் நண்பர்கள் கேட்டா,
இவர்மட்டும் தலையிடாமே இருந்திருந்தால்
இன்னும் முன்னுக்கு வந்திருப்பேன்,
அப்பிடீன்னு சொல்வேன் விளையாட்டாக,
அப்பிடி யாரும் தேவை இல்லை,
ஆனால் ஆனானப் பட்ட ஆஞ்சனேயருக்கே
அவருடைய பலம் ,ஸக்தி என்னான்னு உணர்த்த
ஒருவர் தேவைப் படும் போது ,
நாமெல்லாம் எம்மாத்திரம்?அதனால் நமக்கும்
ஒரு உந்து ஸக்தி வேண்டும்,
வாழ்க்கையில் முன்னேற,
அது சின்னத்திரையாக, இருந்தால் என்ன
பெரிய திரையாக, இருந்தால் என்ன?
எதையாவது பிடித்துக்கொண்டு
நாமும் உயர்ந்து ,நாட்டையும் உயரவைக்க,
என்ன வழி என்று யோசிப்போம்.


நான் சின்னத்திரையில் , அடியெடுத்து
வைப்பதற்கு முன்பே பெரிய திரையில்,
எனக்கு ஒரு ஸந்தர்ப்பம் கொடுத்தவர்
என் நாடக ஆசான் - எம் ஆர் ராஜாமணி
அவர்கள்,
அப்போது நான் லூகாஸ் டீ வி எஸ் என்னும்
நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டிருந்தேன்,
அங்கு தொழிலாளர் நல சங்கத்தின் ஓராண்டு
நிறைவு விழா 1967 ம் ஆண்டு,
அதற்காக ஒரு நாடகம் போடுவது என்று
முடிவானது,
அதை ஒரு தொழிலாளியே எழுதி இயக்கி
அரங்கேற்றம் செய்தார்,
என் வாழ்க்கையில் முதன் முதலாக அதில்
பங்கேற்க அவர்களை நாடினேன்,
அவர்களும் எனக்குகொரு முதியவர்
பாத்திரம் கொடுத்தனர் ,
அப்போது எங்களுக்கு டி வி சுந்தரமய்யங்காரின்
புதல்வர் திரு டி எஸ் க்ருஷ்ணா அவர்கள்
தலைமை பொறுப்பாளராக இருந்தார்,

அவரை நாங்கள் செல்லமாக சிங்கம், என்றும்
தாத்தா, என்றும் அழைப்போம் ஏனென்றால்
எங்கள் நிறுவனத்தின் அடையாளம்
அடையாளக் கொடி எல்லாம் சிங்கம்தான்,

எங்கள் நிறுவனத்தின் பின்னால் நிறைய காலி
இடம் இருக்கும் ,அதிலேயே பந்தல் போட்டு,
நாங்கள் எல்லாரும் முகப்பூச்சு அணிந்து கொண்டு
வேஷம் போட்டுக் கொண்டு நின்றிருந்தோம்,
அப்போது எங்கள் சிங்கம் டி எஸ் க்ருஷ்ணா
அவர்கள் மேடைக்கு வந்தார்....
அவர் காலிலே விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம்,
அவர் நாங்கள் போட்டுக் கொண்டிருந்த அத்தனை
வேஷத்திலும் , எங்களை அடையாளம் கண்டு கொண்டு
நீ க்ருஷ்ணமாச்சாரி தானே? என்று
கேட்டது இன்றும் நினைவில் உள்ள ஒரு பசுமை!!

அதற்குப் பிறகு எத்தனையோ நாடகங்கள் ,,
எங்கள் நிருவனத்திலே போட்டி நாடகங்களாக
உருவாக்கப்பட்டு, பல பெரிய திரை நட்சத்திரங்களை,
நடுவர்களாகக் ,கொண்டுவந்து பல நாடகங்கள்
என்னாலேயெ உருவாக்கப்பட்டு,
பல பெரியவர்களின் கையால் பரிசுகள் வாங்கி,
அதெல்லாம் ஒரு பொன்னான காலம்!!!!
ஒரு கலைஞன் உருவான காலம்.!!!!

அப்போது ஒரு நாடக விழாவுக்கு என் குரு
எம் ஆர் ராஜாமணி அவர்கள் நடுவராக
வந்தார், என் நாடகத்தைப் பார்த்துவிட்டு
பாராட்டிவிட்டு ,எனக்கு முதற் பரிசும்-
(கதை, வசனம், ஆக்கம், இயக்கம் )
அளித்துவிட்டு , ஏன் உன் திறமையை
எங்கோ ஒரு மூலையில் வீணாக்கறே,
என்னோட வந்து சேர்ந்துக்கோ,
உன்னை உன் திறமையை வெளிக் கொண்டு வரேன்
அப்பிடீன்னு சொன்னது இன்றும் என் காதுகளில்
ஒலிக்கிறது !!!!!
அப்போது அவர் அவருடைய சகோதரர் விசு,
அனைவரும் தொழில் முறையாக நாடகம் போட்டுக்
கொண்டிருந்தனர் ,
நானும் வேலை செய்து கொண்டே, மாலை வேளைகளில்
அவருடைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்,
அப்போது சென்னை தூரதர்ஷன் நிலையத்தில்
நடிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது,
அப்படியே அந்த தகுதிச்சான்றும் கிடைக்கப் பெற்று
அதிலும் பல வகையான வேடங்கள் நடித்தேன்,
அப்புறம் நாலு பேருக்கு நன்றி என்கிற திரைப் படத்திலும்
நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது,
ஆனாலும் சித்தீ என்னும் சின்னத்திரை தொடரிலேதான்
என்னைமக்கள் அங்கீகாரம் செய்தனர்,
அந்தத் தொடரிலே நடிக்க
எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தவர்
திரு சி ஜே பாஸ்கர், அவருக்கும் எனக்கு
தொடர்ச்சியாக நடிக்க ஆதரவு கொடுத்த
ரேடன் டீ வீ நிருவனத்திற்கும்
திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் என் நன்றி

மானேஜர் சாரங்கனாக,சித்தீ சாரதா என்னும் பாத்திரத்தில்
நடித்த, திருமதி ராதிகா அந்த நிறுவனத்தின் முதலாளியையும்,
அந்த நிருவனத்தையும் ,சலாம் போட்டுக்கொண்டேஅழிக்கும் வில்லனாக
மானேஜர்சாரங்கனாக நடித்தேன்
மானேஜர் சாரங்கனாக மக்களுக்கு என்னைப் பிடித்தது,
மக்களுக்கு எப்போதும் வீரப்பனையும் பூலான் தேவியையும்
தான் பிடிக்கும் போல் இருக்கிறது!!!
எனென்றால் தங்களால் செய்ய முடியாத வீர சாகசங்களை,
செய்பவர்களை புகழ்ந்து, தங்கள் தாகங்களை தீர்த்துக்
கொள்ளூம் அப்பாவி மக்கள்!!!
இவர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன்,
எதையும் தட்டிக்கேட்க தைரியமில்லாத,
அப்படியே தட்டிக் கேட்டாலும் பல அடியாட்களை,
கையில் வைத்துக்கொண்டு, ஞாயத்தைக் கேட்பவர்களை,
பயமுறுத்தியே தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளும்,
நம் நாட்டின் அவலங்களை நினைத்து வருத்தப் படுகிறேன்.

அது கணிணி யாக இருந்தாலும் , தொலைக்காட்சியாக
இருந்தாலும், எதுவாக இருந்தாலும் ,அவைகளை,
நாம் எப்படி உபயோகிக்கிறோம் ,என்பதைப் பொருத்துதான்
அது நமக்கு பலன் கொடுக்கிறது,

கணிணி யில் எத்தனையோ உபயோகமான பகுதிகள்,
உள்ளன, ஆனால் அவை என்னென்ன என்று கூடத்
தெரியாமல், தேவை இல்லாத பக்கங்களைப்
புரட்டி, கெட்டுப் போகும் மாணவர்களை பார்க்கிறோம்,
அதே கணிணியில், நல்ல விஷயங்களை உபயோகித்து,
பல புதிய கண்டுபிடிப்புகளை, நிகழ்த்தும் மாணவர்களையும்
பார்க்கிறோம்,

சின்னத்திரையில் ,எத்தனையோ நல்ல பகுதிகள்,
இருக்கிறது, ஆனால் நமக்கு தொடர்கள்,சினிமா,
ஒலியும் ஒளியும், இவைகள் தான் பிடிக்கின்றன,
நம்மைச் சொல்லியும் குற்றமில்லை, நமக்கு
வாழ்க்கையில் எத்தனையோ கவலைகள்,
அதை மறக்க நாம் பார்க்கிறோம்,

ஆனால் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும்
வரும் எல்லாவற்றயும் உண்மை என்று நம்பி
எத்தனை பேர் ஏமாந்து போகிறார்கள்,
நடிப்புக்கலை, எத்தனையோ பேரை வாழவைக்கிறது,
அதே நடிப்புக்கலை, எத்தனையோ பேரை,
அழித்தும் இருக்கிறது!!
உதாரணமக... 12/4/2004 குமுதம் இதழில்,
தற்போது நடந்துள்ள ' ஒரு உண்மை சம்பவத்தை பற்றி,
திருவேங்கிமலை சரவணன் எழுதியிருக்கும்
"ஒரு ஏழை நடிகனின் உயிர் போனால்"
என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள்,
அந்தக் கட்டுரையில் சில யதார்த்தமான
வரிகள்...என் மனதைப் பிழிந்தன.!!!

"ஹீரோ நடிகனுக்கு, இன்னும் இரண்டு வருடம்,
கழித்து' அவன் கொடுக்கப் போகும் கால்ஷீட்
தேதிகளுக்காக , இன்றே லட்சத்திலும்,
கோடியிலும் , அட்வான்ஸ் கொடுக்கிற,
சினிமா உலகம், ஏழை நடிகன் மார்ட்டினுக்கு

அவன் உழைப்புக்கு மட்டு மல்ல,
உயிருக்கு கூட விலையாகக் கூட
ஏதும் தராமல், "படம் ஓடினால் "
தருவதாக சொல்லுவது,
இவர்கள் சினிமாவில் வசனங்களில்
முழங்கும், மனிதாபிமானப் ப்ரசங்கமும்,
அறிக்கைகளில், வெளிப்படுத்தும்
சமூக அக்கரையும், எவ்வளவு பொய்யானது,
ஏமாற்றுத்தனமானது, என்பதை எண்ணும் போது,
வருத்தமாக மட்டுமில்லை,அச்சமூட்டும் வகையிலும்
இருக்கிறது"
என்றார் பெயர் சொல்ல விரும்பாத
ஒரு ஸ்டண்ட் மேன்.


அந்த ஸ்டண்ட் மேனும் பெயர் வெளியிட விரும்பவில்லை,
கண்ணுக்கெதிரே நடக்கும் அக்ரமத்தை,
சொன்ன அவரால், தைரியமாக ,அவருடைய
பெயரைச் சொல்ல முடியவில்லை ,என்றால்,
பெரிய திரை எப்படி இருக்கிறது ....
என்று நமக்கே நிதர்சனமாகப் புரிகிறது.!!!!


இப்போது சின்னத்திரையில் பேட்டி கொடுக்கும்
பெரியதிரை , சின்னத்திரை ,
இயக்குனர்கள் , நடிகர்கள், எத்தனை துன்பங்களை
இடர்ப்பாடுகளை , அவமானங்களை ,சந்தித்து
இருக்கிறார்கள்.என்பதை அவர்கள் வாயின் ,
மூலமாகவே கேட்கும் போது -உண்மையிலேய
வருத்தமாக இருக்கிறது!!!,

இப்படி, பலவிதமான சோதனைகளைக் கடந்து ,
எத்தனை பேர் முன்னுக்கு வருகிறார்கள்?
ஆனால் இந்த சின்னத்திரை , பெரிய திரை
இரண்டையும் நம்பி ,தன் தகுதி அறியாமல்,
சென்னைக்கு வந்து, கஷ்டப்படுபவர்கள்
தான் ஏராளம்,
எதோ மன மகிழ்ச்சிக்காக சிறிது நேரம்
மட்டுமே ,ரசிக்கவேண்டிய தொலைக் காட்சித்
தொடர்கள் ,சினிமாக்கள்,

தேவை இல்லாத பழிவாங்கும்
கதைகளைஒளிபரப்பி , இன்று எத்தனை
குடும்பங்களையும், மனதையும்,புனிதமான
தாம்பத்ய உறவுகளையும் ,
சீரழித்துக் கொண்டிருக்கிறது?

நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை
நமக்கு பிடிக்கவில்லை,
நம் குழந்தைகளுக்கு ?!!! நம்மையே பிடிக்கவில்லை,
ஆமாம் ,முக்கியமாக ஒரு தொடரைப்
பார்த்துக் கொண்டிருக்கும்போது ,நந்தி மாதிரி
அதைப் பார்க்க விடாமல் ,பேசுகிறார்களே!!
என்று எரிச்சல் வருகிறது,
ஸ்தானத்துக்கோ, வயசுக்கோ ,மதிப்பு தராமல்
அப்பா தொந்தரவு பண்ணாமல்,
தள்ளிப் போ, கொஞ்ச நேரம்
"போகோ" பார்த்துட்டு வரேன்,
அப்பிடீன்னு குழந்தை சொல்கிறது!!

கொஞ்ச நேரம் நிம்மதியா டீவீ
பார்க்க விடறயா சனியனே,
பெத்தவள் குழந்தையிடம் சொல்கிறாள்
மொத்தத்தில் நம்முடைய உறவுகளை,
மனிதாபிமானங்களை, மரியாதைகளை,
அன்பை, பாசத்தை ,எல்லாவற்றையும்
இந்த சின்னத்திரை,பெரிய திரை
இரண்டும் அழித்துக் கொண்டு இருப்பது
நிதர்சனமான உண்மை!!!!!

இவற்றையெல்லாம் நான் சொல்லுவதால்
அடியோடு இவைகளைப் புறக்கணிக்க வேண்டும்
என்று நான் சொல்லுவதாக எண்ணவேண்டாம்,
இதே சின்னத்திரை, பெரிய திரை
இரண்டிலுமே மக்கள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டிய
பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன,

உட்கார்ந்த இடத்திலேயே எங்கும் போகாமல்
மழையில் நனையாமல்,வெய்யிலில் கருகாமல்,
பனியில் உறையாமல், பல நாடுகளையும்,
பல ஊர்களையும், பலவிதமாக நாட்டிலே,
உலகத்திலே ,நடக்கும் அன்றாடச் சம்பவங்களை
உடனுக்குடன் அறிகிறோம் !!
நமக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் பல
விதமான திறமைகளை, வெளிக்கொண்டு வரும்
சாதனமாகவும், இந்த சின்னத்திரை,பெரிய திரை
இரண்டும் பயன்படுகிறது ,என்பதில் எந்த
ஐயப்பாடும் இல்லை.!!

சின்னதிரை ,பெரிய திரை இரண்டின் மூலமாக
பல குடும்பங்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன,
பல இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்,
பலவிதமான திறமைகள் ஊக்குவிக்கப் படுகின்றன,
கல்வி கற்றுத் தரப்படுகிறது,
என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.!!

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என்னை
திரு கணேஷ் அறிந்ததும் ,உலகத்தின் பல பாகங்களிலும்
வசிக்கும் பலபேருக்கு என் போன்ற சாதாரணர்களையும்
அறிமுகப் படுத்தி வைத்ததும் இந்தச்
சின்னத்திரை, பெரிய திரைதானே!!!

ஒரு முறை,மாங்காடு கருமாரியம்மன் கோயில்
வாசலில் "சித்தீ" என்னும் தொடரின் ஒரு காட்சியில்
நடிப்பதற்காக ஒரு கடை வாசலில்
நானும் ,என் நண்பரும், உங்களுக்கெல்லாம்
தன்னுடய அருமையான நடிப்பாலும் , சித்திரம்
வரையும் கலையாலும் அறிமுகமாகி உள்ள
திரு சிவகுமார் அவர்களும் உட்கார்ந்து இருந்தோம்
அப்போது பல ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப்
வாங்குவதற்காக வந்தனர்,
அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு பக்கத்தில்
இருந்த என்னிடமும் ஆட்டோ கிராப் போடுமாறு
கேட்டனர்,
நான் அவ்வளவு பெரிய நடிகனில்லை,
சிவகுமாரிடம் வாங்குங்கள் என்றேன்.
அதற்கு திரு சிவகுமார் அவர்கள் ,என்னையும்
ஆட்டோகிராப் போடச்சொல்லி, அவர்களிடம்
வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்கள் போனதும்
இந்தச் சின்னத்திரையின் வீச்சு,எந்த அளவுக்கு
இருக்கிறது என்பதைச் சொல்லி,
அதைக் காலம் வரும்போது நான் அறிவேன் என்றார்கள்.
உண்மை!!!!
ஆமாம்.....அதை நான் பல முறை என்வாழ்விலே உணர்ந்தேன்
பல ஊர்களில், பல அலுவலகங்களில்,ஏன் பல வெளிநாடுகளில்
இருந்து எனக்கு வந்த ஈ - மெயில்களும்
பல தொலைபேசி விமர்சனங்களூம் அதை உறுதிப் படுத்தின,

மனிதன் பிறந்தால் இறப்பது உறுதி
ஆனால் பிற்காலத்தில் என்னுடைய
சந்ததியினர் கூட சீ டி, ப்ளாப்பி,
பல பதிவுகள், சினிமா ,தொலைக் காட்சித்
தொடர்களின் பதிவுகள் இவைகளில்
பிற்காலத்தில்கூட என்னைப் பார்க்க முடியும்
என்பது எப்படிப்பட்ட சந்தோஷம்?
இது போன்ற பலவகையான நல்லவைகளும்
இந்த விஞ்ஞான யுகத்தில்
இந்த சின்னத்திரை, பெரிய திரை
என்னும் சாதனங்களால் ஏற்பட்ட இலாபங்கள்..
அந்தப் புகழ்தான் என்னுடைய " காதலி தினம்"
என்னும் சிறு கதை , தமிழோவியம் என்னும்
இந்தப் பத்திரிகையில் , வெளிவரும் சந்தர்ப்பத்தை,
ஏற்படுத்தி தந்தது ,என்பதும் பல கவிதைகள்
தினம் ஒரு கவிதை- தமிழோவியம் .காம்
என்னும் இணையப் பத்திரிகைகளில் வெளிவருவதற்கு
சின்னத் திரை பெரிய திரைகள் எனக்கு ஏற்படுத்திய
ப்ராபல்யம் தான் காரணம்
என்பதும் மறுக்க முடியாத உண்மை
இன்று தமிழ்த்தேனீ என்னும் பெயரிலே
நான் சுமாராக 15 குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
தமிழ்த்தேனீ என்ற என்னுடைய பெயர் பல பேருக்குத்
தெரிந்திருக்கிறது,

அன்புடன்
தமிழ்த்தேனீ






அன்புடன்
தமிழ்த்தேனீ

"மனம்" ஆராய்ச்சிக் கட்டுரை

கட்டுரை-மனம் பாகம் 1
எண்ணம் ஆக்கம் வடிவம்: ஆர் கிருஷ்ணமாச்சாரி என்கிற
தமிழ்த்தேனீ

கடலாழம், ப்ரபஞ்சத்தின் தூரம், ஒளியின் வீச்சு, வேகம்,
ஒலியின் அதிகபட்ச அளவு, எதை வேண்டுமானலும்,
அது அதற்குண்டான விஞ்ஞான அளவுகோள்களை,
வைத்துக் கண்டு பிடித்து விடலாம், ஆனல் இன்னும்
மனிதனால் கண்டு பிடிக்க முடியாத ,நான்கு விஷயங்கள் ,
வெகு நாட்களாக என்மனதை உறுத்திக்
கொண்டே இருக்கிறது,

அவை: 1. மனம் :- மனதாழம், மனத்தின் வீச்சு, மனதின் சக்தி!

2. மூளை:- ஒரு மூளையில் பதிவாகிய விஷயங்களை
மற்றொறு மூளையில் பதிவு செய்ய ஒரு இயந்திரம்!

3. மூளையும் , மனதும் ,ஒன்று தானா?இல்லை வேறு வேறா?!

4.மனம், இந்தப் ப்ரபஞ்சத்துக்குள், அடங்குகிறதா அல்லது
இந்த ப்ரபஞ்சம், மனதுக்குள், அடங்குகிறதா?!


இவை நான்றையும் கண்டு பிடித்துவிட்டால்,
ஓரளவு படைப்பின் மூலத்தின் ஒரு பகுதியையாவது,
கண்டுபிடித்ததாக மனிதன் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்,!

எதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றாலும்,
அதற்கு ஒரு ஆய்வுக்களம் ,அல்லது ஒரு விஞ்ஞான
ஆராய்ச்சிக்கூடம், வேண்டும்!
சரி ,மனதைப் பற்றி ஆய்வு செய்ய எங்கு போவது?
எங்கும் போக வேண்டாம் ,நம் மனமே நம் ஆராய்ச்சிக்
களம் , விந்தை தான் ,ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி
செய்ய அந்த விஷயமே, ஒரு ஆராய்ச்சிக் களமாவது,
விந்தையிலும் விந்தைதான்!!!

மனதைப் பற்றி ஆய்வு செய்ய விஞ்ஞானக் கூடம்
வேண்டாம், மெய்ஞானக்கூடம் தான் வேண்டும்!
ஏனென்றால், மெய்யிலேதானே மனம் இருக்கிறது,
ஆமாம், மெய் எனும் உடம்பு ,என்று சித்தர்கள்
சொன்னது போல்,
இந்த மனம் உடம்பிலேதான் இருக்கிறதா?
அப்படியென்றால் , உடம்பை அல்லவா ஆராய்ச்சி
செய்ய வேண்டும் ? இல்லை ..இல்லை..
மனத்தைப் பற்றி , ஆராய்ச்சி செய்ய
விஞ்ஞானம் மட்டும் போதாது,
மெய்ஞ்ஞானமும் வேண்டும்.!!

மெய் ஞானம், எங்கு கிடைக்கும்?அனுபவ அறிவிலேதான்
கிடைக்கும் , ஆகவே நாம் மனதைப் பற்றி ஆராய,
அனுபவத்தை, அனுபவத்தின் மூலமாக கிடைத்த
எண்ணங்களை ,ஆராய்ச்சி செய்வோம்.!!
அனுபவம் கொடுக்கும் தெளிவு ,அறிவு ,ஞானம்
இவைகளை அடுத்தவரால் கொடுக்க முடியாது,
அவ்வளவு ஏன்,, ஆண்டவன்கூட நமக்கு அனுபவங்களைக்
கொடுத்து , அதன் மூலமாகத்தான் தெளிவைக் கொடுக்கிறான்,
ஆதலால் என் சிற்றறிவுக்கு ஏற்பட்ட அனுபவங்களை,
பாடமாகக் கொண்டு ,என் தெளிவை , உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.!!!

ஆதலினால், முதலில் மனம் என்பதைப் பற்றி, என் மனதில்
உதித்த சில எண்ணங்களை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்
என் ஆசையை , இந்தக் கட்டுரை மூலமாக சிறிதேனும்
தீர்த்துக்கொள்ளத்தான், இந்த சின்ன முயற்சியை
மேற்கொள்ளுகிறேன்.!!

கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள்,
மனதாழம் காண முடியாது.!!
என்று ஒரு கவிஞ்ஞன் பாடினான்,
மனிதனுக்கு ஆண் பால் ,பெண் பால், போன்ற
வித்தியாசங்கள் உண்டு,
மனதுக்கு ஏது வித்யாசம்?
மனம் என்னும் ஒரு கருவி ,மனிதனுக்கு மட்டும் சொந்த
மில்லை ,
மனம்....எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று,
ஒரு கரப்பான் பூச்சியை நாம் பார்த்து,
இதை எப்படியும் தப்பவிடக் கூடாது அடித்து
விடவேண்டும் ,என்று நம் மனதில் நாம் நினைப்பதை
அந்தக் கரப்பான் பூச்சி அதன் மனதில் உணர்ந்து ,
இவனிடம் மாட்டமல் தப்பி விடவேண்டும், என்று
நினைத்து அதற்காக எப்படி ஓடினால் தப்பிக்க
முடியும், என்று திட்டம் போட்டு தப்பித்து ஓடிவிடுகிறது.!!
இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது.!!

ஆகவே மனத்தை பற்றி சிந்திக்க, வேறு யாரால்
முடியும்? ஆகவே, என் மனமே நீதான் எனக்கு,
உன்னைப் பற்றி அறிய உதவவேண்டும்.!!

யார் என்னிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள்,
என்று கேட்டாலும், எல்லாப் ப்ரச்சனைகளோடும்,
சந்தோஷமாய் இருக்கிறேன், என்று பதில்
சொல்வது என் வழக்கம்.!

ஏனென்றால் ,ப்ரச்சனைகள் இருந்தாலும்,
அவைகளை சமாளித்துக் கொண்டு தான்,
அதற்கு நடுவே வாழவேண்டும், என்ற
கொள்கை உடையவன் நான்.! அது மட்டுமல்ல
“சகித்துக் கொண்டு வாழ்வதை விட
ரசித்துக் கொண்டு வாழ்வது சிறப்பானது “

ப்ரச்சனைகள் இல்லாத ஜீவராசிகளே,
உலகத்தில் கிடையாது என்பது அடியேனுடைய
எண்ணம்.!!
ஒரு முறை ஒருவர் சொன்னார்,
ப்ரச்சனை இல்லாத மனுஷனும் இல்லை,
அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, ன்னு

ஆனால் அர்ச்சனை இல்லாத கடவுள்கள்
இருக்கிறார்கள், ப்ரச்சனை இல்லாத ஜீவராசிகள்,
இல்லை இல்லை இல்லவே இல்லை,
இதுதான் உண்மை.!!

ப்ரச்சனைகள் பல வகைப்படும்,

1.தானாகவே வருவது,
2 நாமாக எற்படுதிக்கொள்ளுவது,
3.தீராத ப்ரச்சனைகள்,
4முயன்றால் தீர்த்துவிடக்கூடிய ப்ரச்சனைகள்,


ஆனால் ,
மனம் என்று ஒன்று இருக்கும் வரை,
அந்த மனத்தை கட்டுப்படுத்தும்
சூட்சுமம் அறியாத வரையில்,
யாருமே ப்ரச்சனைகளில் இருந்து
மீளவே முடியாது,
ஆகவே மனம்தான் பெரிய ப்ரச்சனை.!!

மனம்........

இது எங்கிருக்கிறது? , இதை முதலில்
கண்டுபிடிக்க வேண்டும்,
மனம் மூளையிலிருக்கிறதா?
இல்லை ,இதயத்தில் இருக்கிறதா?
சொல்லமுடியவில்லை , ஏனென்றால்,
மனமும் உயிரும் ஒரே மாதிரியானவை,
மனசு அதிர்ந்து போனால் உயிர் போகி
றது- உயிர் போய் விட்டால் மனது
எங்கு போகிறது?,
உயிர் எங்கிருக்கிறது? இதயத் துடிப்பிலா,
ரத்தத்திலா?, நாடிகளிலா? ,மூளையிலா?, அல்லது,
உணவிலா?
கடினம் கண்டுபிடிப்பது கடினம்!!!!


மனசுலெ இரூக்கு, வார்த்தையில் வரமாடேங்குது
அப்பிடீன்னு சொல்வோம்,

அப்படியானால், எண்ணங்கள் தேக்கி வைக்கப்படும்
இடம் ,மனது அல்ல மூளை.!
-இது சரியென்றால் , மனது மூளையிலுள்ளதா?
அப்படியென்றால் ,அன்பை, காதலை, வெளிக்காட்ட
இதயத்தின் படம் எப்படி வரையலாம்?
மூளையின் படமல்லவா வரையவேண்டும்?

மூளையின் , படம் வரைந்து காதலை சொன்னால்,
என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது!!
நிச்சயமாக பயித்தியக்கார விடுதிக்கு அனுப்புவார்கள்.

அப்படியானால் ,நாம் பார்க்கும் பொருட்கள்,
அழகு பிம்பங்கள், எல்லாம் மூளையில்
பதிகிறதா? அல்லது மனதில் பதிகிறதா?
அப்பப்பா.... மனம் நம்மை எவ்வளவு ஆட்டி
வைக்கிறது?

ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்,
வேலைக்காரர் என்னை உள்ளே
உட்காரச் சொல்லி விட்டு,
அவரை அழைத்துவர உள்ளே போனார்,
அதற்குள் என் மனதிலே எத்தனை எத்தனை
எண்ணங்கள்?
இவரைப்பார்ப்பது நம் தகுதிக்கு சரிதானா?,
இவரால் காரியம் நடக்குமா? ,இவர் எப்படி
இருந்தாலும் நைச்சியமாய்ப் பேசி காரியத்தை
முடிக்க வேண்டுமே!,
அந்த அறையை நோட்டமிட்டது என் மனது,
ஒரு விலை உயர்ந்த பொருள் என் கண்ணில்
பட்டது, உடனே அதை அவர் வருவதற்குள்
எடுத்து வைத்துக் கொள்ளலாமா?இப்படி
ஒரு மனது சொல்லியது,-அதற்குள் இன்னொரு
மனது ,வேண்டாம் அது தவறு என்று சொல்கிறது,
அடேயப்பா எத்தனை மனது உள்ளே இருக்கிறது?
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்!!


ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஒரு சக்தி இருக்கிறது,
தவறான காரியம் செய்யும்போது, உள்மனது
வேண்டாம் என்கிறது , அதை கண்டுகொள்ளாமல்
காரியம் செய்யும்போது ,மனசாட்சி இல்லாமல்
காரியம் செய்தோம் என்று சொல்கிறார்கள்,
இந்த உள்மனது சொல்வதைக் கேட்க
ஆரம்பித்தாலே போதும் ,காவல் நிலையங்களும்
வழக்குரைக்கும் மன்றங்களோ தேவைப்படாது,
உள் மனதை அலட்சியப்படுத்தி விட்டு,
செயலாற்றுபவர், திருடன் ,காமுகன் ,குடிகாரன்,
கொலைகாரன், என்ற பட்டங்களை சுமக்க
வேண்டியுள்ளது.!!

ஆகவே, எண்ணங்களை வைத்து யாரும்
தண்டனை வழங்குவதில்லை,
செயலை வைத்துதான், தீர்ப்பளிக்கிறார்கள்,
தண்டனை வழங்குகிறார்கள்,

இந்த மனது இருக்கிறதே, அதன் எண்ணங்களை,
துல்லியமாய் அளக்க ,இன்னும் கருவி கண்டு
பிடிக்கவில்லை,!!
ஆனால் நீதி மன்றங்களில், தண்டனை கிடைக்கிறதோ,
இல்லையோ, நம் மனம் மட்டும் நாம் செய்யும்
எதையுமே மறப்பதில்லை,!!!
பொல்லாதது இந்த மனது,
அவ்வப்போது எச்சரிக்கிறது,
உறுத்துகிறது ,நம் நிம்மதியைக் கெடுக்கிறது,
ஆகவே நீதி மன்றம் வெளியே இல்லை,
நம் உள்ளேயே இருக்கிறது.!!!

ஆகவே மனம் ,நம்மை ஆட்டிவைக்கும் கருவி,
எச்சரிக்கும் கருவி, ஆக மனம் என்பது ,ஒரு
கருவி , கருவி இருக்கிறது , ஆனால்
அது எங்கிருக்கிறது ?,,
அதுதான் ஆண்டவனின் சூக்ஷுமம்,
அதனால்தான் ஞானிகள்
உன்னை நீ உணர், என்று சிறிய வார்த்தையில்,
பெரிய தத்துவதைக் கூறுகின்றனர்.!!


ஒரு மறக்கமுடியாத சம்பவம்,

ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்,
அங்கு உள்ளே நுழைந்தவுடன்,
அந்த நண்பரின் குழந்தை வாங்க மாமா
என்று என்னைக் கூப்பிட்டு, என்னைத் தாண்டி
ஓடவும் ,அங்கிருந்த இரும்பு பீரோ அந்தக் குழந்தை
மேல் சாயவும் , நான் வேகமாக எழுந்து ஓடினேன்,
பீரோ என் மேல் விழுந்தது, எனக்கடியில் குழந்தை
நசுங்குகிறது,
பீரோ என்னை நசுக்குகிறது,
எப்படியும் குழந்தயைக் காப்பாற்ற வேண்டும்
என்கிற வெறியில் , கஷ்ட்டப்பட்டு பீரோவை
கொஞ்சம் மேலே தூக்கி ,குழந்தையை எனக்கடியிலிருந்து
வெளியே தள்ளிவிட்டேன், பிறகு என்னை அறியாமல்
மயங்கிவிட்டேன் , நாலுபேராலும் தூக்க முடியாத
அந்த பீரோவை, நான் எப்படி தாங்கினேன்? ,
எப்படி குழந்தையை காப்பாற்றினேன்?
என்று எனக்கே புரியவில்லை,
எனக்கு கை எலும்பு முறிவு ,
காலில் நல்ல அடி ,படுக்கையிலிருந்து மூன்று
மாதம் கழித்து தான் நான் எழுந்தேன்,
எனக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?
என் மனம் குழந்தையைக் காப்பாற்றக்
கட்டளை இட்டது,
ஆக, எனக்கு இயல்பாய் இல்லாத பலத்தை,
என் மனம் எனக்கு கொடுத்திருக்கிறது,
ஓ... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,
என்பது இதுதானோ?
ஆகவே மனதைக் கட்டுப்படுத்தினால்
எதையும் சாதிக்கமுடியும்.!!

விந்திய மலையிலே சித்தர்கள், அந்தப்
பனியிலும் தங்கள் உடலை 98.4,
என்கிற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்,
-காரணம் மனக் கட்டுப்பாடு,

அழகான பெண்ணை பார்க்கும்போது,
அவளை தங்கையாகவோ, தாயாகவோ,
மகளாகவோ, அல்லது சக்தியின்
அவதாரமாகவோ ,பார்க்கும் மனப்பக்குவம்
ஏற்படுத்திக்கொள்ள மனக்கட்டுப்பாடு
அவசியம் ,ஆகவே... மனக்கட்டுப்பாடு இல்லாமல்,
இந்த ப்ரபஞ்சம் இல்லை-இந்தப் ப்ரபஞ்சம்,
மனதுக்குள் கட்டுப்படவேண்டும்.!!!
சகல ஜீவராசிகளையும் ஆட்டிப்படைப்பது
மனம்!!!!
நம் மனதைக் கட்டுப்படுத்தினால் ,வசமாகாத
சித்துக்களே இல்லை ,நம் எண்ணங்கள் தான்
நம்மை வாழவைக்கிறது ,வீழ வைக்கிறது.!!

நம்மை அறியாமலே, நமக்கு ஒருவர் மீது
வெறுப்பு வறுகிறது, என்றால் அவர் தவறான
எண்ணங்களைக் கொண்டிருப்பார், அதை
நம் மனம் கண்டுபிடித்து விடுகிறது,
அதேபோல் ,நம்மை அறியாமலே ஒருவர் மீது
நாம் கொள்ளும் அன்புக்கும், அதுதான்
காரணம், நம் மேல் அவர் உண்மையான பாசம்
வைத்திருப்பார் ,அதையும் நம் மனம்
கண்டுபிடித்துவிடுத்துவிடுகிறது.!!

ஒரு ராஜா, வழக்கமாக உலா வரும் பாதையில்,
ஒரு சந்தனக்கட்டை வியாபாரி, அவருக்கு
வணக்கம் சொல்வார், ராஜாவுக்கும்
அவரைப் பார்க்கும் போது சந்தோஷமாக
இருக்கும் ,ஒருநாள் அந்த சந்தனக்கட்டை
வியாபாரி வணக்கம் சொல்லும்போது,
ராஜாவுக்கு,அவரை வெட்டிப் போடவேண்டும்
போல்இருந்தது, அதற்கு காரணம் தெரியாமல்,
அவர், மந்திரியைக் கூப்பிட்டு ஒரு நாளும்
இதுபோல் தோன்றியது இல்லையே
இன்று ஏன் இப்படி தோன்றுகிறது
என்று கேட்டார்,,


மந்திரி ஒருநாளைக்கு அந்த வழியே
செல்லாமல் வேறு வழியில் ராஜாவை
அழைத்துக்கொண்டு சென்றுவிட்டு,
மறுநாள் பழைய வழியிலேயே, அழைத்துக்கொண்டு
போனார், அன்று மீண்டும் ராஜாவுக்கு வியாபாரியை
பார்த்து சந்தோஷமாக இருந்தது, அதற்கு என்ன
காரணம் என்று மந்திரியைக் கேட்டார்,
அரசே..... அந்த சந்தனகட்டை வியாபாரியின்
சந்தனக் கட்டைகள் விற்காமல் இருந்தன,
அன்று அவன் மனதில் இந்த ராஜா இறந்து
போனால் அவரை எரிப்பதற்கு, சந்தனக்கட்டைகள்
விற்று விடுமே ,என்று எண்ணினார்,
ஆனல் நேற்று அவர் சந்தனக்கட்டைகளை ,
விற்பதற்கு வேறு ஏற்பாடு நான் செய்தேன்,
அதனால், இன்று ராஜா நீடூழி வாழ வேண்டும்
என்று நினைக்கிறார் , அதனால் உங்களுக்கும்
சந்தோஷமாக இருக்கிறது, என்றார் .!!
மற்றவர்களின் எண்ண ஓட்டங்களைக்
கூட நம் மனம் அறிகிறது,
இதைதான் பெரியோர்கள் த்ருஷ்டி படுகிறது
என்று சொன்னார்கள் .!!!

ஆகவே,நம் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் ,
மேலும் அடுத்தவர் மனதிலும் நல்ல எண்ணங்கள்
எற்படுத்தி, அவர்களையும் நம் வசமாக்கவேண்டும்,
இதைத்தான் ,ஆங்கிலத்தில் இமேஜ், என்கிறார்கள்
ஆக, மனம் எனும் கருவியை கட்டுப்படுத்தியே
ஆகவேண்டும்.!!
எப்படி கட்டுப்படுத்துவது?
அனுபவம் தான் ஆரம்பப் பாடம்,
அனுபவம், அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று,
அடுத்தவர்களால் உணரவைக்கமுடியாத ஒன்று,
அனுபவம் :- உலகில் எல்லாத் தவறுகளையும்
நாமே செய்து அனுபவம் பெற வேண்டுமென்றால்
அதற்கு ஆயுள் போதாது,அடுத்தவர் தவறு செய்யும்
போது கூட அதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,
ஆதலினால், அன்றாடம் நம்மைச்சுற்றி நடக்கும் ,
நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்,
அதில் நம்மை ஆழ்த்தி அதைக் கற்பனையாய்
அனுபவித்து, பெற்றுக்கொள்வது, அனுபவம்
ஆகும்-

கட்டுரை- மனம் பாகம் 2

என் மனம் நீ அறிவாய், உந்தன்
என்ணமும் நான் அறிவேன்.
என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை
வரிகளும்,
கண்ணும் கண்ணும் கொள்ளைஅடித்தால்,
காதல் என்றே அர்த்தம்.
என்ற கவிஞர் வைரமுத்துவின் ,வரிகளும்
வியப்பூட்டுகின்றன, நம் சிந்தனையைத்
தூண்டுகின்றன!!!

கண் மனதின் வாசல்-ஆகவே மனம் ஒன்றோடு
ஒன்று வசமாகிவிட்ட, காரணத்தாலேதான்
கண்ணோடு கண் நோக்குகிறதா?
அல்லது கண்கள் சந்தித்துக்கொண்டதால்,
மனம் வசப்படுகிறதா?
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்,
கண்கள் கலந்தன, கருத்தொருமித்தோம்,
என்றார் வர்ணித்தார் கம்பர்.
ஆதலால் கண்கள் கலந்தால், கருத்து ஒருமித்துப் போகும்,
அதன் பின் மனம் வசமாகும் என்பதா?

அல்லது ,இராமன் பரப்ரும்மம், சீதை உலக மாதா,
என்று, பரஸ்பரம் ஒருவரை ஒருவர், ஏற்கெனவே
மனதளவில் அறிந்திருந்ததால் ,ஒருமித்துக் கண்கள்
கலந்தனவா?

ஏனென்றால் இராமனோ சீதையோ வேறு யாரையும்
பார்த்து கருத்து ஒருமிக்கவில்லையே,
ஆகவே கண்கள், மனதின் வாசல்,
உள்ளிருப்பவர் சம்மதம் கொடுத்தால் அன்றி
வாசல் திறக்குமா?

ஆகவே உள்ளிருப்பது மனம்-உயிர்-ஆத்மா
அகத்தின் அழகு முகத்தில் தெரிவது, அகத்தின்
வாசலாகிய கண்கள், முகத்தில் இருப்பதால் தானோ?

மனக்கதவம் திறந்த பரம்பொருளே ,திருக்கதவும்
திறக்க வரமருளே, என்கிற அப்பரின் வரிகளும்
இதற்கு நல்ல சான்றாகும்.
என் மனசறியச் சொல்கிறேன்,
என் மனசாலகூட உனக்கு த்ரோகம்
செய்ததில்லை,
என் கண்களைப் பார், அதில் கள்ளம் இல்லை
இப்படியெல்லாம் பேசுகிறோம்.

மனதில் கள்ளம் இல்லவிட்டால், கண்கள்
தூய்மையாய் இருக்கும், என்பது உண்மையாகிறது.

மனதடக்கத்தோடு ,தன்னடக்கமாக ,இருப்பவன்
உலகை ஆளுவான் ,என்பார்கள்.
வாய் பேச முடியாத ஊமைகள் கூட,
கண்களாலும், சைகைகளாலும், அவர்கள்
நினைப்பதை ,நமக்கு புரியவைத்துவிடுகிறார்கள்.

சரி, கண்கள் இல்லாத குருடர்களூக்கு, இருக்கும்
மனதுக்கு, வாசல் கிடையாதா? உண்டு.
அப்பார்வை அற்ற விழிகள்கூட, அவை ஏற்படுத்தும்
பாவங்களினால் , அன்பை வெளிப்படுத்தி விடும்,
அந்த பாவங்கள், அவர்களுக்கு மனதின்
வாசலாகிவிடுகிறது ,பார்வையாகிறது,
மனிதருக்குப் ப்ரதானமாவது மனது,

மனதை எப்படி கட்டுப்படுத்துவது?
கணக்கிலடங்கா எண்ண அலைகள்,
மோதும் கடல் இது,
கடலில் கூட, அலைகள் ஓரத்திலேதான் வரும்,
நடுக்கடலில் அலைகள் இருக்காது,ஆகவே...
கடல் தனக்குத்தானே, நடுவிலே கட்டுப்பட்டு
இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
நடுக்கடலுக்கு போகவேண்டுமென்றால்,
அதற்கு வாகனம் வேண்டுமே,.
எண்ணங்களே, எண்ண அலைகளே, இல்லாத
ஆழ்மனது, என்பது நடுக்கடல் ,என்று
வைத்துக்கொள்வோம்-அல்லது கட்டுப்பட்ட
மனது, என்று வைத்துக்கொள்வோம்,
நம் மனதிற்குள்ளேயே, கட்டுப்படுத்த முடிகின்ற,
ஆழ் மனது இருக்கின்றது, அங்கு நாம்
சென்றால் , மனதைக் கட்டுப்படுத்தலாம்,
சரி... வாகனம் வேண்டுமே, முதலில் அந்த
வாகனம் நம் கட்டுக்குள் வரவேண்டும்-பிறகு
அதை நாம் ஆளவேண்டும், அதன்பின்
அதில் ஏறி, ஆழ் மனதுக்கு செல்லவேண்டும்.!

ஒருமுறை , பகவான் க்ருஷ்ணன் சகாதேவனிடம்,
உன்னால் என்னை கட்டிப்போடமுடியுமா?
என்று கேட்டாராம், உடனே சகாதேவன்
கண்களை மூடி, த்யானம் செய்து, கிருஷ்ணனை
மனதிற்குள்ளே கட்டிப்போட்டானாம்,
அது பக்திக் கட்டு,
அங்கு பக்தி, ஒரு சாதனமாக பயன்பட்டது,
அந்த பக்தி என்னும் சாதனத்தை பயன் படுத்தி,
த்யானம் என்னும் வழியில் சென்று ,ஆழ்நிலையைத்
தான் அடைந்து, அங்கு கண்ணனையும் அழைத்துச்
சென்று, கட்டிவிட்டு தான் மட்டும் வெளியே வந்த,
சகாதேவன் நிச்சயமாய் சக்தி படைத்தவன்தான்,
ஆக.... ஆழ் நிலைக்குப் போக, சக்தி தேவைப்படுகிறது
அந்த சக்தியை அடைய ... த்யானம் ,யோகம் ,தவம் ,
என்று எதை வேண்டுமானாலும் கையாளலாம்.
மனதிலே ,நமக்கு நாமே ப்ரதிக்யை எடுத்துக்கொண்டால்
அன்றி முடியாத காரியம்.

மனோதத்துவ நிபுணர்கள்,கூட நம்மை
வசப்படுத்த, நாமே, நம்மை அவரிடம், நம்பிக்கை
வைத்து ஒப்படைத்தால் தான் முடியும்,அல்லது
நம்மனதைக் கட்டுப்படுத்தும் வழி அவருக்குத்
தெரிந்திருக்க வேண்டும்
ஆகவே... மனதைக் கட்டுப்படுத்த,
முதலில், அதை தயார் செய்யவேண்டும்.

மனமென்னும் மனோதத்துவ நிபுணரிடம்
நாமே ,நம்மை தயார் செய்து ஒப்படைக்கவேண்டும்,
ஒத்துழைக்கவேண்டும், அப்பொதுதான், நம் மனதை
நாமே கட்டுப் படுத்தமுடியும்.!

மண்ணுலகில், மனிதனை விட சிறந்தது வேறொன்றுமில்லை,
ஜீவரசிகளில், மனதை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை!!!

கட்டுரை- மனம் பாகம் - 3

மனம் என்பது ,நாடு, மொழி ,மதம் ,இனம்,
ஜாதீ ,பணக்காரன், ஏழை, என்கிற எல்லா
அடிப்படைகளையும் கடந்து நிற்பது!!
எல்லாவற்றையும் கடந்து நின்றால் ,அது கடவுள்!!
அல்லவா? அப்படியானால், மனம் தான் கடவுளா?
உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஷேமமாக
இருக்கவேண்டும் என்று ,மனிதர்களின் ஒன்றுபட்ட
மனம் நினைத்தால்-இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானம்,
அறிவியல் நுட்பங்கள், போன்ற எல்லா வசதிகளையும்,
உலகில் உள்ள எல்லா மக்களும் அடையவேண்டும்,
என்ற சமநோக்கோடு உலகில் உள்ள அனைத்துப்
ப்ரதிநிதிகளும் ,ஒன்று கூடிப் பேசி ,மனதளவிலே செயல்
பட்டால் -பேதங்கள் நீங்கி, செயல்திறன் ,மூளைத்திறன்
அனைத்தும் ,ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு,
ஆக்கபூர்வமாக செயல் பட்டு, சரியான , மிகச் சரியான,
விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக அணுசக்தி :-இந்த சக்தியை, இதன் வளத்தை,
பெருக்க தனித்தனியாக செயல் படும் எல்லா நாடுகளும்,
ஒற்றுமையாக சேர்ந்து ,ஒரு அணு ஆராய்ச்சி நிலையம்
அமைத்து, எல்லா நாடுகளும் அதில் பங்கேற்றால்,
அதன் கண்டுபிடிப்புகள்பொதுவாக உலகிற்கே
பயன்படும்.!!!

அதை விடுத்து ,என் நாடு வல்லரசு ,எல்லா நாடுகளும் எனக்கு
பயப்படவேண்டும், என்று நினைக்க ஆரம்பித்தால் ,
அணு ரகசியங்கள், அண்டை நாடுகளூக்கு
விற்கப்படும், அபாயம் தவிர்க்கமுடியாததாகிவிடும்.!

இதை எதற்காக சொல்கிறேனென்றால், எல்லா
நாடுகளும், எல்லா மக்களும், ஒரு மனதாக
இணைந்தால், மனம் ஒருமைப்பட்டால் ,சுபிட்ஷம்
வரும் .
எல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளப்பட வேண்டும்,
அங்கு ஆளப்படுபவர்கள் சுபிட்ஷமாக இருக்க வேண்டும்,
ஆள்பவர்கள் பொது நோக்கோடு உலகிற்காக
த்யாகம் செய்பவர்களாக இருக்கவேண்டும்',
அதற்கு.. எல்லோரும் பொது நோக்காக ,மனதளவிலே
நல்ல சிந்தனைகளை, மலரச் செய்யவேண்டும்,
எல்லோருடய மனமும் ஒன்றுபடவேண்டும்,
அப்போதுதான் பேதங்கள் மறையும்,
மனதிலே ஆத்மசக்தி வளரும்.!!

நம் மனது , அல்லது மூளை , அன்றாடம்
நாம் சந்திக்கும் சம்பவங்கள், சச்சரவுகள்,
வாசனைகள், இடங்களின் தத்ரூபமான
தோற்றங்கள் , நிறங்கள் ,எல்லாவற்றையும்
பதித்துக் கொள்கின்றது ,
இப்போது கணிணியில் ...,மெமெரி ரிகால்
என்னும் ஞாபகத் திருப்பம் , இருப்பது போல்
நம் மூளையிலும் ,அல்லது நம் மனதிலும்,
ஞாபகங்களை புதுப்பிக்க , ஒரு கருவி இருக்கிறது!
மனோதத்துவ நிபுணர்கள் , நம்மை தற்காலிகமாக
தூக்க மயக்கத்தில், ஆழ்த்தி நம் எண்ண அலைகளை
பின் நோக்கி போகச்செய்து ,அப்போதய கால கட்டத்தில்
என்ன நடந்தது , என்பதை நம் நினைவுக்குக் கொண்டு
வருவது உண்டு,
ஆனால் இதுவரை பதியாத, வருங்கால நிகழ்ச்சிகளை
எந்த முறையிலும் அறிய முடியாது ,என்பது விஞ்ஞானம்,
ஆனால்முடியும் என்கிறது மெய்ஞானம்,

த்ரிகால ஞானிகளை ,நம்முடைய இதிகாச புராணங்கள்
அறிமுகப் படுத்தியிருக்கிறது,
உதரணங்கள்:-
1.ரேணுகா தேவி, ஜமதக்னி முனிவரின் ,கற்புள்ள மனைவி
தன் கற்பின் திறத்தாலேயே, பச்சை மண்ணாலேயே
பாண்டம் செய்து ,நித்ய பூஜைக்கு நீர் கொண்டு வருபவள்,
அந்த நீரிலே, ஒரு கந்தர்வனின் நிழலைக் கண்டு,
இப்படியும் அழகான ஆண்களும் உள்ளனரா?
என்று நினைத்ததை, மனதாலேயே உணர்ந்த
ஜமதக்னி முனிவர்.!!!

2. அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் புத்ரன் ,
பரிஷ்ஷித்து மகராஜா பத்தாவது நாளில்,
பாம்பு கடித்து இறப்பான், என்று முன்கூட்டியே
உணர்ந்து சொன்ன த்ரிகால ஞானி,
ஆகவே,
மரணம் என்பது ,எப்படி ஏற்பட்டாலும்
அதில் எந்த மாற்றமும் இல்லை,
ஆஹா சரியான நேரத்தில் இறந்தார்,
என்றோ... -அடாடா சாகிற வயதா இது
என்றோ...
முடிவு செய்ய நம்மால் முடியுமா?
நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் ,
நம் பெயர் இருக்கும் , என்பார் பெரியோர்.
ஆகவே விதி வலியது.1
ஆமாம்!!!-அது எந்த அளவுக்கு வலியது என்றால் ,
அதைப் படைத்த ஆண்டவனாலேயே,
மாற்றமுடியாத அளவுக்கு வலியது.

ஆகவே நாம் , நம் மனதிற்கு ஆறுதலாகவோ,
நம்மை ஒரு கட்டுக்குள் வழி நடத்தவோதான்,
கடவுளைக் கும்பிடுகிறோம்.!!!
ஒருவருக்கு கத்தியால் காயம் ஏற்படும் ,
என்று விதி இருந்தால் ,
அந்தக் காயம் எதிராளியாலோ,
அல்லது நம் நோய் தீர்ப்பதற்காக
வைத்தியராலோ ,ஏற்பட்டே தீரும்.!!

உடலுக்கோ ,மனதிற்கோ, நோய் வந்தால்
வைத்தியர் உண்டு, உயிர் நோய்வாய்ப் படுமா?
அதற்க்கு வைத்தியம் உண்டா,
வைத்தியர் உண்டா?
உடலைவிட்டு உயிர் தனியாக இயங்கமுடியுமா?
உயிர் போனால், ஆவி போய் விட்டது என்கிறார்கள்,
அப்படியானால் உயிர் தான் ஆவியா?
ஒருவர் உடம்பில் ,ஆவி புகுந்து இருக்கிறது என்கிறார்கள்,
உயிர்தான் ஆவி என்றால், ஒரு உடம்பிற்குள்,
இரு ஆவி எப்படி இருக்கமுடியும்?
இதற்கு முன்னால் அவனுடைய மொழியைத் தவிர,
வேற்றுமொழியே, தெரியாத ஒருவன், ஆவிபுகுந்தால் மட்டும்
வேறு, வேறு,.. மொழிகள் பேசுவது எப்படி?
அப்படியென்றால்.. ஆவிகள் மனிதனுடைய மனதை
ஆக்ரமிக்கிறதா? அப்படியென்றால் ,வேறு ஆவிகளோ தேவதைகளோ,நம்மை ஆக்ரமிக்க முடியுமென்றால் ,
நம்மாலும் அவைகளை ஆக்ரமிக்க முடிய வேண்டும்
அல்லவா?..முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்
அதற்கு பெயரும் இட்டிருக்கிறார்கள் அதுதான்,

மனோவசியம்:-

ஆம் மனதை வசியம் செய்வதுதான் மனோவசியம்,
மனோவசியம் முறையாக செய்து ,
மிருகங்களை, மனிதர்களை, ஏன் தேவதைகளைக்கூட ,
வசியம் செய்ய முடியும், என்று நம் முன்னோர்கள்
நிரூபித்திருக்கிறார்கள்!!
ஆனால் மனிதன், எல்லாவற்றையும் வசியம் செய்துவிட்டு,
தன்மனதை வசியம் செய்யும் முயற்சியில்,
தோற்றுப் போகிறான்.!!

உயிர் என்பது ஆத்மாவா?இரத்தமா?
இருதயமா?மூளையா?
அல்லது நாடித்துடிப்பா?
ஒவ்வொரு யந்திரத்துக்கும் உள்ளே
மின்சாரம் ஒரு சக்தியாகி அதை இயங்கவைப்பதுபோல்
உடலுக்கு சக்தி ரத்தமென்றால் ரத்த தானம்
செய்யும்போது நம் உயிரை இன்னொரு
உடலுக்குள் செலுத்துகிறோமா?
ஒரு உடலுக்கு இரு உயிர்களா?

உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது
என்ற கண்னதாசனின் வரிகளைப் படித்தால்
உயிருக்கும் ஆத்மாவுக்கும் உருவம் கிடையாது
என்ரு பொருள் வருகிறது
அப்படியானால் உயிர் பிரிந்த பிறகும் அந்த
ஆத்மாவோடு மனம் இருக்கிறதா?
அந்த மனம் தான் எண்ணங்களைத்தேக்கி
வைத்துக்கொண்டு ஆன்மீகவாதிகள்
சொல்வது போல் ஏழு ஜென்மங்களுக்கும்
தொடர்பு விட்டுப்போகாத பாலமாய் இருக்கிறதா?
அப்படியானால் தூக்கம் என்பது தற்காலிக மரணம்,
மரணம் என்பது நிரந்தரமான ஓய்வு என்றும்
கூறுகிறார்கள்,

இந்த ஓய்வு என்பது உடலுக்கா? மனதிற்கா?
அல்லது உயிருக்கா?
ஆராய்ச்சிகள் கூறுகின்றன
மனிதன் கூடுவிட்டு கூடு பாயும் முறையில்
தன்னிலிருந்து தானே பிரிந்து மீண்டும்
தன்னை வந்தடைய முடியும் என்று
அப்போது உயிர் நம்மை விட்டுப் பிரிந்துசென்று
அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு
மீண்டும் நம்மை வந்தடைகிறது என்பதாகும்
நாம் காணும் கனவுகளே நம் ஆழ் மனதின்
விளைவுகளே என்று கூறுவர்

ஆகவே கனவு காணும் மனிதர்கள் தன்னிலிருந்து
பிரிந்து தானே தன்னை வந்தடையும் சக்தியில்
ஒரு குறிப்பிட்ட அளவினைக் கொண்டிருக்கிறார்கள்
என்பது தானே உண்மை
இந்தக் குறிப்பிட்ட அளவை விஸ்தரிக்க முடிந்தால்
அது மனித இனத்தை மெய்ஞானத்திலும்
விஞ்ஞானத்திலும் முன்னேற்றமடையச் செய்யும்

பழமொழிகள் ஆய்வு எண் 11

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை


குற்றம் பார்க்க வேண்டும் ,குறை கண்டு பிடிக்க வேண்டும்
என்று நினைத்துவிட்டால்
நாராயணன் முதல்,ஏசு முதல் ,அல்லா வரையில்
காந்தி முதல் கண்ணதாசன் வரை,
மதங்கள் முதல் மனங்கள் வரை
அன்னை முதல் தந்தை வரை
குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கலாம்
குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம்

ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு கருப்புப் புள்ளி
போன்றது குற்றம் ,குறைகள், எல்லாம்
அவைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும்,
அந்த மனோ நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்
என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட பழமொழி இது என்று
தோன்றுகிறது

அது போன்ற தேவையில்லாத ,சற்றும் நன்மை பயக்காத
மனோ நிலைகளை சற்றே களைந்து நல்லதைப் பார்க்க
மனத்தை பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்
தரும புத்திரருக்கு கெட்டவர்களே கண்ணில்
படவில்லையாம்
துரியோதனனுக்கு நல்லவர்களே கண்ணில்
படவில்லையாம்
எல்லாவற்றிர்க்கும் மனோ நிலையே காரணம்
உலகில் ஒரு நல்லது இல்லாமல் கெட்டது
இல்லை,ஒரு கெட்டது இல்லாமல் நல்லது இல்லை
ஒரு முறை ஆதி சங்கரர் ஆழ்ந்த தியானத்தில்
இருந்து கண் விழித்தார்,
அங்கு ஒரு பல்லி ( Lichard ) தலை கீழாக விழுந்து
நிமிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது
அதன்மேல் பரிதாபப்பட்டு அதை நிமிர்த்திவிட்டு
மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் ஆதி சங்கரர்,
மீண்டும் அவர் தியானம் கலைந்து பார்க்கையில்
அதே பல்லி புழு பூச்சிகளை பிடித்து உண்டு
கொண்டிருப்பதைப் பார்த்து தெளிந்தாராம்
உலகில் ஒருவருக்கு செய்யும் பரோபகாரம்
அடுத்தவருக்கு செய்யும் தீமையாகவும் இருக்கலாம்
ஆக கெடுதல் இல்லாமல் நல்லது இல்லை
நல்லது இல்லாமல் கெடுதல் இல்லை,
இரண்டும் கலந்ததே வாழக்கை,
அறியாமல் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்
அறிந்து கொண்டே தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்
தவறே செய்யாத மனிதர்களைக் காட்ட முடியுமா..?
முடியாது ....?
இயற்கையான காற்று வேகமாக அடிக்கும் போது
பல கட்டிடங்கள் வீழலாம்,அதே சமையம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலை கரை சேர்க்கவும் செய்யலாம்

மழை அதிகமாகப் பெய்யும் போது பல இடங்களில்
வெள்ளத்தினால் பலர் அடித்துச் செல்லப்படலாம்,
பல இடங்களில் பயிர்கள் செழித்து வளரவும் கூடும்
ஒரு இடத்தில் அதிக வெய்யிலாக கருதப்படுவது
மற்றொரு இடத்தில் குளிர்போக்கப் பயன்படலாம்
ஒரு இடத்தில் பற்றி எரியும் தீ பலவற்றை அழிக்கலாம்
அதேபோல் அடுப்பில் எரியும் தீ பசியைப் போக்கலாம்
அதனால் ஒரு இடத்தில் குற்றம் என்று கருதப்படும்
சில விஷயங்கள் சில இடத்தில் குற்றமாக
கருதப் படாமல் இருக்கக்கூடும்,
கண்ணதாசன் எழுதாத பாடல்களா,
தொடாத இலக்கியங்களா


அப்படிப்பட்டவர் ஒரு பாடலில்
"உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி "
கலகத்தில் பிறப்பதுதான் நீதீ
கலங்காதே மதி மயங்காதே”

என்று எழுதி இருக்கிறார்
என்ன பொருளென்று பார்ப்போம்
உலகத்தில் இருக்கும் ஜீவ ராசிகளில்
பாதிப் பேர் திருடர்கள்
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
அதாவது உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளில்
மீதி இருக்கும் பாதிப்பேர் ஊமைகள் குருடர்கள்,
என்றும் பொருள் கொள்ளலாம்,
அல்லது திருடர்களில் பாதிப் பேர் ஊமைகள்
குருடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்
ஆனால் அவர் எவ்வாறு பொருள் வரும்படி
எழுதி இருக்கிறார் என்று பார்த்தால்
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
என்றால் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும்
திருட்டுத்தனம் பாதியும் நல்லகுணம் மீதியும்
இருக்கும் என்று சொல்லுகிறார்

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை
நான் என்று வைர முத்து எழுதியதைப் போல
திருடனும் நல்லவனும் கலந்தே மனிதன் இருக்கிறான்
என்று சொல்லுமாப் போல் எழுதி உள்ளார்
என்று நினைக்கிறேன்
மனிதர்களி ன் மனதில் இருக்கும் திருட்டுத் தனங்கள்,
பாதி , மீதி நல்ல எண்ணங்கள்
பேச வேண்டிய விஷயத்தில், பேச வேண்டிய நேரத்தில்
பேசி உண்மையை சொல்லாமல் சிலர் ஊமைகளாகவும் ,நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில்
தக்க நடவடிக்கை எடுக்காமல் ,கண்டும் காணாதது போல
குருடர்களாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள்

எத்தைகைய துன்பம் வரினும் உண்மையைத் தவிற மற்றதை பேசேன்... என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு
மற்றவர்களுக்கு துன்பம் வருமென்றால்
அதைக் களையும் நோக்கில் அங்கு என்
குரல் உரத்து ஒலிக்கும் என்னும் மனோ உறுதியுடன்
செயல்படும் நல்ல குணம் பாதி
இப்படிக் கலவையான மனிதர்கள்
இருக்கிறார்கள், அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
இரண்டும் கலந்தே இருக்கிறது என்று பொருள் படும்படி எழுதி இருக்கலாம் ........
என்று சுட்டிக் காட்டவே அப்படி எழுதினார் என்று
நாம் பொருள் கொள்ளலாம்.....

குருடு என்பது அறிவிலா...?
ஊமை என்பது நியாயத்திலா..?
செவிடு என்பது நல்லவற்றைக் கேளாமை என்பதிலா
ஆக மொத்தம் உடல் ஊனங்களை விட மன ஊனங்கள்
கெடுதி பயக்கும் என்பதை நாம் புறிந்து கொள்ளலாம்
யாரிடத்தில் குற்றமில்லை...?
புத்தன் செய்தது சரியா ...இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன
தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விட்டு
வேறு மார்கத்துக்குப் போனது சரியா என்று...?

கண்ணன் செய்தது அத்தனையும் சரியா ...?
நோக்கம் வேண்டுமானால் தர்மத்தை நிலை நாட்ட
என்று இருக்கலாம், ஆனால் அவன் செய்த காரியங்கள்
100க்கு 99 சரியானதல்ல என்று விவாதிக்கிறார்கள்
மஹா பாரதம் படித்தால் தெரியும்...?

ராமன் செய்தது சரியா மக்களே பேசுகிறார்கள்
கட்டிய மனைவியை யாரோ சொன்னதற்காக
தீக்குளிக்க வைத்தான் என்று....

யேசு ஏற்படுத்திய கிறிஸ்தவ மதத்துக்கும்
பௌத்தத்துக்கும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டினால்
விளைவு எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோமா...?
என்றெல்லாம் விவாதிக்கின்றார்


அல்லாவைப் பற்றி நினைத்தால்
“முகம்மதுவின் எதிரிகளோடு நடந்த போரில் அப்துல் முத்தலிபின் உடல் சிதிலப்படுத்தப்பட்டது. ஹம்சாவின் இறந்த உடலை இழிவு படுத்தியதற்காக எழுபது எதிரிகளின் உடலை அவ்வாறு சித்திரவதை செய்வதாக சூளுரைத்தான் முகம்மது. பிறகு ஏதோ தோன்றி, ஒரே ஒரு சடலத்தை அவ்வாறு சிதிலப்படுத்தினால் போதும் என்று சொல்லிக்கொண்டான்.
அப்படி சொல்லிக்கொண்டதுதான் மேற்கண்ட வரி.
“ அதனை அல்லா சொன்னார் “என்று சொல்லி
அது குரானில் இருக்கிறது. என்கிறார்கள்
இதன் படி முஸ்லீம்கள் இறந்த எதிரிகளை,
அவர்கள் இஸ்லாமிய கும்பலில் இல்லாமல் இருந்தால்
அந்த உடல்களை இழிவு செய்ய அனுமதி கிடைக்கிறது.
இந்த விஷயமும் விவாதத்தில் இருக்கிறது

ஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை
ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று


அன்புடன்
தமிழ்த்தேனீ