திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, April 13, 2010

விக்ருதி வருடப் பிறப்பு

                                                            புதுவருடப்பிறப்பு


விரோதி வருடம் முடிந்து , தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி சித்திரை மாதம் ஒன்றாம் தேதி புதன் கிழமை காலை 5.15 மணிக்கு மீன லக்னமும் ,மீன ராசியும் கஜகேசரி யோகமும் கூடிய சுபவேளையில் சுக்கிர ஓரையில் பிறக்கிறது விக்ருதி வருடம்



”ப்ரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் சர்வ பூத ஹிதப்ரதாம்”

என்னும் வரிகள் மஹாலக்‌ஷ்மி அஷ்டோத்திரத்தில் வருகின்றன

இந்த விக்ருதீம் என்னும் சொல்லுக்கு மாறுதலை ஏற்படுத்துவது என்று பொருள், மாறுதலையைக் கொண்டவர் வினாயகர், அவரை ஓம்கார ஸ்வரூபி என்பர், அவரை வழிபட்டால் எல்லாக் காரியங்களும் தடையின்றி நடக்கும் எனபது நம்பிக்கை, இப்படி வினாயகர் பெயரும்

விக்ருதீம் என்னும் சொல்லுக்கு மஹாலக்‌ஷ்மியை வழிபடுவதால் நன்மையான முன்னேறங்கள் வரும் மாறுதல்கள் வரும் என்றும் பொருளுண்டு, திரு நாராயணனின் மார்பில் அல்லவா மஹாலக்‌ஷ்மி வாசம் செய்கிறாள் ,ஆகவே ஸ்ரீமன் நாராயணனையும் சேர்த்தே வணங்கினால் நன்மையுண்டு

இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தாக்கம் முழுவதுமாக இருப்பதால், செவ்வாயின் அதிபதியான முருகனையும் வழிபட்டால் செவ்வாயின் தாக்கத்திலிருந்து சற்றே விடுபடலாம் என்று ஜோதிடர்கள் கருத்து கூறுவர்

ஆகவே வினாயகரையும் ,மஹாலக்‌ஷ்மியையும்,ஸ்ரீமன் நாராயணனையும், முருகனையும் வழிபடுதல் நலம் விளைவிக்கும் ,

நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம், சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள், காலை ,நடுப்பகல், பிற்பகல், என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும், இடமாயிருக்கும்,

சம்வத்திரம். பரிவத்சரம், இடா வஸ்திரம், அனுவஸ்தரம்,இத்வத்ஸரம்

ஆகிய் ஐவகை வருஷங்கள் அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்

இளவேனில்,(வசந்தருது) ருதுவேனில் (க்ரீஷ்மருது),கார்காலம்(வர்ஷ ருது), குளிர்காலம் (சரத்ருது), முன்பனிக்காலம் (ஹேமந்த ருது), பின்பனிக்காலம் (சிசிர ருது) ,

ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள், , காயத்ரீ,ப்ருஹ்ருதி,உஷ்ணிக், ஜகதீ,த்ருஷ்டுப்,அனுஷ்டுப்,பங்க்தி, ஆகிய ஸப்த சந்தஸ்ஸூகள் எழு குதிரைகளாகும்,, அவற்றை அடிப்படையாக க் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன,

துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கிறது,சூரியனே “ தேவயான மார்கம் ”” “ அது அர்ச்சராதி மார்கம் எனவும் சொல்லப்படும், புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்கம் செல்லப் பயன்படும் வழி ””” “’’””பித்ருயாணம்” “என்றும் தூமாதி மார்கம் என்றும் அழைக்கபடும்,

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் "ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

நாமும் இந்த விக்ருதி வருஷப் பிறப்பன்று இறைவனைத் தரிசித்து இந்த வருஷம் நமக்கெல்லாம் இனியதாக இருக்கப் ப்ரார்த்தனை செய்வோம்.

அன்புடன்

தமிழ்த்தேனீ