திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, January 15, 2012



  1. ஒரு கோவிலில் நான் எடுத்த புகைப்படம் 



சூரியக் கதிர்கள் விழும் அருமையான  காட்சியைப் படம் பிடித்தேன், நான் எதிர்பார்த்ததை விடச் சிறப்பான காட்சியாக அமைந்திருந்தது.
2.    2012ம் ஆண்டு   நம் வீட்டில் பொங்கல் திருநாள் கொண்டாட  சமைத்த  அறுசுவைகூடிய  உணவுகளும், சர்க்கரைப் பொங்கலும்


                                  “    பொங்கல் திருநாள்    



என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

 செய் நன்றி கொன்ற மகற்கு 

உலகில் எத்துணையோ விஞ்ஞானக் கருவிகள்

கண்டு பிடித்துவிட்டோம்

விஞ்ஞானம் அதி விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது



1.உடல் உறுப்புக்களைக் கூட தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம்

ஆனால் இன்னும் நம்மால் உயிரை தக்கவைத்துக் கொள்ளவோ,

உயிரின் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளவோ,  முடியவில்லை



2. ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் இருக்கும் மாலிக்யூல்களில் சேகரிக்கப்  பட்ட அபூர்வமான  சிந்தனைகளை கண்டு பிடிப்புகளை இன்னொரு மூளைக்குள்  இடம் மாற்றும் கருவியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அது மட்டும் கண்டு பிடிக்கப்பட்டால் பற்பல அறிஞர்களின்  மூளைத் தொகுப்புக்களை வெகு எளிதாக இன்னொரு மூளைக்குள் ஏற்றிவிடலாம்.



இவை எல்லாம் இருக்கட்டும் இத்துணைக் காலமாய்
நமக்கு பல விஞ்ஞான முன்னேற்றங்களை தங்கள் வாழ்வின்
சுவையான பகுதிகளை ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று கழித்துவிட்டு
தங்கள் வாழ்வை தியாகம் செய்த எத்துணையோ விஞானிகளுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்

அதை விட முக்கியமாக நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்

உழவர்கள், விவசாயிகள்
போகித் திருநாள்:

நம் வீட்டில் சேரும் குப்பை ,அழுக்குகள், இவைகளைக் களைந்து நெருப்பிலிட்டுப் பொசுக்கி,சுற்றுப் புற சூழலை சுத்தமாக்கும் திருநாளே போகி. அன்று எரியும் நெருப்பில் நம்முடைய மன அழுக்குகளையும் சேர்த்து எரித்து நம்மையும் தூய்மைப் படுத்திக் கொண்டு மீண்டும் புது வழ்வு துவங்கி மகிழ்ந்து நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகி என்னும் திருநாள்.


இன்னும் முக்கியமாக,  அன்றாடம் உணவில்லையெனில்  உயிர்வாழ முடியாத அத்துணை ஜீவராசிகளின் ஆதார சக்தியான  உணவைத் தயாரிக்க விளைவிக்க , தங்களுடைய பொன்னான நேரங்களை உழைப்பை, வியர்வையை நமக்காக செலவழித்துவிட்டு ,தங்களுக்கென்று ஒன்றும் சேர்த்து வைக்காத  விவசாயிகள் இவர்கள் அத்துணை பேரையும் காட்டிலும்   உயர்ந்தவர்கள் உத்தமர்கள், நம் உயிரைக் காப்பாற்றும் சக்திகள், உழவர்கள் ஜாதி ,மதம் ,நாடு, என்னும்  எந்த பேதமும் இல்லாத உலகக் காப்பாளர்கள், அமுத சுரபிகள் விவசாயிகளே

 அவர்கள் தானியங்கள் விளைவிக்க உதவிய அத்துணை  சாதனங்களுக்கும் நன்றி சொல்லும் திருநாளே  பொங்கல் திருநாள் ஏர், கலப்பை, இயற்கை, மாடுகள், எறும்பு,பறவைகள் மண்புழுக்கள் ,போன்ற பலருக்கும் நன்றி சொல்லும் விதமாக  ஏற்பட்ட  திருநாளே பொங்கல் திரு நாள். ஆகவே நன்றி சொல்வோம்

அத்துணை நண்பர்களும் சர்க்கரைபொங்கல்,
வெண் பொங்கல் ,வாழைப்பழம், கரும்பு இவைகளை உண்ண ஆரம்பிக்கும் போது அவற்றை நமக்குக் கிடைக்கச்செய்த 
அந்த உழவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு,முடிந்தால் அன்று ஒருநாளாவது ,அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்துவிட்டு, உண்போமானால்  அதுதான் நாம் செலுத்தும் நன்றி.

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் , அனைத்துயிர்க்கும் ஜீவாதாரமான சூரிய பகவானுக்கும்,அனைத்து உழவர்களுக்கும் நன்றி சொல்ல
மகிழ்ச்சியாய்ப்  பொங்கலிடுவோம்


"  சூரிய உழவன்  " கவிதை

    திரு வள்ளுவன் மனதுழுதான்,

   மறுவள்ளுவன் வயலுழுகிறான்,
   உழுகின்ற நாளெல்லாம் திருநாளே
  பரிதியாய் பரிவாய் அவனெழுகின்ற திருநாளே
  அவன்   வாராத    நாளென்றும் வெறு நாளே

 கதிரவன் தானேஎழுகிறான் கதிர்களால் உழுகிறான்,
ஏழு வண்ணக் குதிரைகள் தன் தேரில் பூட்டியே
 திண்ணமாக வருகிறான் வாழ்வின் இயலுழுகிறான்
தரணியிலே தர்மத்தை பகிர்ந்தளிக்க வருகிறான்
சுற்றுப்பாதை தன்னிலே கட்டுப்பட்டு வருகிறான்
தர்மமென்னும் விதியையே நமக்களிக்க வருகிறான்
பட்டுக் கதிர் சுட்டியே தொட்டு நம்மை அணைக்கவே
தொடர்ந்து மிளிர வைக்கவே, கெட்டவைகள் விலக்கியே
வாழ்வை ஒளிர வைக்கிறான், பட்டு தூய்மையாக்கியே
மனதைக் குளிர வைக்கிறான், கொட்டும் ஒளி அருளியே
சுழன்று கொண்டே வருகிறான்
தொழுதாலும் தவிர்த்தாலும் பொதுவாக அருள்கிறான்
மனிதத்தின் வேருக்கு வலுவாக மிளிர்கிறான்
மண்ணை வளம் செய்ய தரமாக வருகிறான்
முப்போக விளைச்சலுக்கு உரக் கதிராக வருகிறான்
தீமை கண்டு பொங்கியே தீமைகளை அழிக்கவே
போகி போகி போகி என்று தீயிட்டுக் கொளுத்துவோம்

உலகுக்கே பொதுவான தர்மத்தின் சக்கரம்
தாயாக நம்மையே தாங்குகின்ற நற்கரம் நீட்டுகின்ற
நற்கரம் அருளுகின்ற பொற்கரத்தான் தாளை வணங்குவோம்
அவனளித்த அரிசியும், அருமையான வெல்லமும்,
விளைந்து வந்த கரும்பையும், வாழவைத்த வாழையும்
அவனளித்த நெருப்பையே அடுப்பில் அங்கு மூட்டியே
அதன் மீது இருத்தியே ஆக்கும் பொங்கல் பொங்கவே

பாலும் ஊற்றிக் காய்ந்ததும் பொங்கிவரும் வண்ணமாய்
பொங்குகின்ற போதிலே பொங்கலோ பொங்கலென்று
ஓங்கும் குரல் எழுப்பியே ஒளியவனை வணங்குவோம்
பொங்குகின்ற நம் மனதைப் பொங்கலிட்டுப் பதப்படுத்தி
தங்குகின்ற மனிதம் தனைத் தாங்குகின்ற சக்கரம்
நன்மை கொண்டு களிக்கவே, தீமை கண்டு பொங்குவோம்
தீமைகளைக் கழித்துவிட்டு நன்மைதனை வளர்க்கவே
வாழையடி வாழையாய் வந்ததொரு நன்னாளாம்
ஆகாத சோர்வகற்றி ஆன்மாவை வளமாக்கி
புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம் நம் மனமும்,
மலரும் வண்ணம் ஆரியமோ திராவிடமோ
சாதி மத பேதமின்றி வையமெல்லாம் ஒளிகூட்ட
தவறாமல் மலர்ந்து வரும் தர்மசக்கரம்,
தைமாதத் திருநாளில் விடியும் வேளை
நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே,
நல் வேளயது தனிலே முத்தான அரிசியுடன்
இனிப்பான வெல்லமதை, அளவோடு நாம் சேர்த்து,
காமதேனு மடிகறந்த அமுதமென்னும் பால் சேர்த்து,
பொங்கி வரும் வேளையிலே, பொங்கலோ பொங்கல்
என்றே நம் வாழ்வும் இன்பமுற இயற்கையின்
தாள் பணிந்தே இறைவன் நாமமது நாம் சொல்லி
நல்லறமும் தருமங்களும், பொங்கலோ பொங்கலென்று
மனமொத்து உரத்துச் சொல்லி,வையகத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே, பொய்யகற்றி மெய்யுணர்ந்து
பொங்கல் திருநாளில் மங்கலமாய் நாம் களிப்போம்
நல்லேர் உழவர்களும், சொல்லேர் உழவர்களும்
மனமென்னும் பூமிதனை உழுது விளைத்தல் போல்
ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது, ஞான ஒளி பரப்பும்
இளம்பரிதி இறைவனுக்கே கதிரவனின் காலடியில்
நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு நாளாய் எண்ணி
நல்வாழ்வு தனை நாடி நன்மைகளைப் பொங்கிடுவோம்
என் மனமார்ந்த நன்றி
அன்புடன்
தமிழ்த்தேனீ- rkc1947@gmail.com