திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, July 31, 2007

வாழ்க்கையின் நோக்கம்

பெரியவர்கள் சொல்வ்து எப்போதுமே
நன்மைதான் , உண்மைதான்
திரு மஹாத்மா காந்தி சொன்னதை
என்றுமே கடைப் பிடித்து வருகிறேன்

என்னுடைய நோக்கமே
பிறந்தோம் ,எப்படியும் இறக்கப் போகிறோம்
இது ப்ரபஞ்ஜ விதி,யாராலும் மாற்ற
முடியாத ப்ரபஞ்ஜ விதி,
ஆக்வே இந்த வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு
முன்னால்,எதையாவது சாதித்து விட்டுத்தான்
இந்தப் பயணத்தை முடிப்பது என்று ,
மன உறுதியோடு செயல் பட்டு வருகிறேன ,

திரு ரங்கஸ்வாமிஅவர்களுக்கும் திருமதி கமலம்மாள்
அவர்களுக்கும் எட்டாவது குழந்தையாய்ப் பிறந்தவன்
நான், அதனால்தான் கிருஷ்ணன் என்று பெயரிட்டார்கள்,
பிறக்கும் போதே (born with silver spoon )
என்று சொல்வார்களே
அதைப் போல செல்வத்தில் பிறந்து ,செல்வத்தில் வள்ர்ந்து
யாரோ ஒருவரின் த்ரோகத்தால் அத்தனை செல்வங்களும்,
போனதால் மனமொடிந்து என் தந்தை
திடீரென்று மாரடைப்பில் இறந்தார்,
திடீரென்று ஏற்பட்ட சுழல் எங்களைப் பந்தாடியது
மூலைக்கு ஒருவராய் தூக்கிப் போட்டது

அதன் பிறகு என் மூத்த அண்ணன் குடும்பப்
பொறுப்பேற்றுக் கொண்டார்,
அண்ணீ வந்தார்கள்

நான் என் அன்னை ,என் தம்பி மூவரும்
அனாதையாக்கப் பட்டோம்
நடுத் தெருவுக்கு வந்தது (silver spoon)
அதன் பிறகு என் தாயாரின் உறவினர் ஒருவர்
என் பெற்றோர் இருவரும் பலருக்கு செய்த
எத்தனையோ உதவிகள் பற்றி புழ்ந்து விட்டு
எனக்கும் லுகாஸ் டீ வி ஸ் ஸில்
வேலை வாங்கிக் கொடுத்தார்
அப்போது எனக்கு மாத சம்பளம் ( 97 Rs )
அன்றிலிருந்து இன்று வரை நேர்மையாக் ,யாருக்கும்
எந்த தீங்கும் செயாதவனாக என்னை என் தாயார்
முன்னுக்கு கொண்டுவந்தார்கள்
கடைசி காலத்தில் அவருக்கும் கேன்சர்
என்னும் கொடிய நோய் தாக்கியது
3000 rs சம்பளத்தை எட்டியிருந்தேன் நான்
ஆனால் மருத்துவச் செலவு மட்டும்
10000 rsஆகும் நான் செய்யாத வேலையே கிடையாது

எப்படியாவது என் தாயாரின் கொடிய நோயை அகற்றிவிட வேண்டும்.
ஆனால் யாரிடமும் ஒரு பைசாவுக்கு கூட உதவி
கேட்டு செல்லக்கூடாது என்னும் வைராக்யம்,ஆகவே
சில பல ஒப்பந்த முறை வேலைகளை என் அலுவலகப் பணீ
நேரம் தவிர செய்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன் நான்
வாழ்க்கையின் அடித் தளத்தையும் ,சொகுசுத் தளத்தையும்
ஒரு சேரப் பார்த்தவன்,

ஒருமுறை மருத்துவர் கலாநிதி எம் பீ,அவர்களின்
மருத்துவ மனையில் என் அம்மாவை சேர்த்து
அவர்களுக்குத் தேவையான ரத்தம் ஏற்றிவிட்டு
அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்

என்னுடைய மகன் வெங்டநாதன் அப்போது
ஒரு சாதாரண வேலையில் இருந்தான்
அவன் என்னிடம் வந்து அப்ப கவலைப் படாதே
இந்தா 500 ரூபாய் வைத்துக் கொள்
என்று அவன் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தான்

இப்போது அவன் மைக்ரோசாப்ட் என்னும்
நிருவனத்தில் பணி புறிகிறான்,பல ஆயிரக் கணக்கில்
சம்பாதிக்கிறான்,நிறைய பணம் கொடுக்கிறான்

ஆனால் அந்தச் சிறு வயதில் அவன் கொடுத்த
அந்த 500 ரூபாய்க்கு எதுவுமே ஈடாகாது


அதற்குப் பிறகு இரண்டு முறை விபத்தில் சிக்கி
இரண்டு தோள்பட்டை எலும்பும் முறிந்தும்பின்
இப்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டையுடன் ஆணிகள் அவகளை
ஒட்டவைத்துக் கொண்டிருக்கின்றன
இரண்டு வருடங்களுக்கு முன் இருதய திறப்பு அறுவை
சிகிச்சை செய்து கொண்ட்டேன்,
பயப் படாதீர்கள்
இப்போது நான் பரி பூரண ஆரோக்கியம்
வாழ்க்கையிலும் என்னுடைய மக்களை நன்றாகப்
படிக்க வைத்து அவர்கள் அனைவரும் கணிணித் துறையில்
பணி புறிந்து கொண்டிருக்கிறார்கள்
நானும் நடிப்பு, ,கவிதைகள் எழுதுதல் என்று சுகமாக
இருக்கிறேன் இறைவன் அருளாலும் ,என் பெற்றோர்களின்
ஆசீர்வாத்தினாலும் மிக நன்றாக இருக்கிரேன்.
நானும் என் மனனவியும்அமெரிக்கா, கன்டா ,மலேஷியா,சிங்கபூர்
போன்ற நாடுகளுக்கு சென்று பார்த்துவிட்டு
வந்தேன், மேலும் என் தம்பியின் மக்களைப் படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறேன்,என் தம்பி குடும்பத்தையும்
முன்னுக்குக் கொண்டு வர என்னாலியன்ற
உதவி செய்து கொண்டிருக்கிறேன்
இது வரை நான் சொன்னது என்னுடைய சுய புராணமே தவிர
விளம்பர நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல
என்னுடைய நோக்கமே எப்படியாவது என்னுடைய
நல்ல முயற்ச்சிகளால்
அடுத்தவருக்கு எந்த த்ரோகமும் செய்யாது
ஏதாவதொரு உபயோகமான
புகழ் மிக்க சாதனயை செய்துவிட்டு
போக வேண்டும் என்றுதான்
முயன்று கொண்டிருக்கிறேன்
எப்படிப் பட்ட சோதனைகள் வந்தாலும்
நேர்மையாக அதை எதிர் கொண்டு சாதனைகள்
செய்வேன் என்னும் உறுதி பூண்ட நெஞ்ஜுரம்
கொண்ட

தமிழ்த் தேனீ

தண்ணீரும் அசோக சக்ரவர்த்தியும்

" உயிர்த் தண்ணீர் "

டேய் தணிகாசலம் , எதுலெ வேணா வெளையாடு
ஆனா தண்ணீலெ மட்டும் வெளையாடதே
"இவ்வளவு போதையிலும்"
அம்மாவின் குரல் காதிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எங்கோ தூரத்தில் இருந்து'
"கடவுள் பாதி மிருகம் பாதி,
கலந்து செய்த கலவை நான் "
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது,

ஆனா நான் இப்போ தினம் தினம் தண்ணீரிலேயே
தான் விளையாடிக்கிட்டு இருக்கேன்,
என்ன செய்யறது? மனுஷனுக்கு ஆயிரம் கவலை,


அடபோடா ! குடிக்கவே தண்ணி இல்லை ,ஆனா
நீங்க நீச்சலுக்கு தண்ணி வீணடிக்கிறீங்க
சாராயம் காச்சறீங்க,
"குடிக்க கூழ் இல்லையாம், கொப்பளிக்க
பன்னீர் கேக்கறாங்க"
தண்ணியை பாட்டில்ல பிடிச்சு விக்கறீங்க!!
அசரீரியாய் என் அம்மாவின் குரல்.

ஆமாம் !!! காவிரிக் கரையிலே எங்க ஊரு,
விடியற்காலமே எழுந்து, கையிலெ வேப்பங்
குச்சியோட போய் ,காலைக்கடன் எல்லாம்
முடிச்சுட்டு, அப்பிடியே காவிரியிலே தொப்புன்னு
குதிச்சி ,நீந்திக் கரையேரி மருபடியும் ,
தொப்புன்னு குதிச்சு .......அது ஒரு தொடர் கதை
சொல்லிகிட்டே போகலாம்,

ம்ம்ம்ம்... அது ஒரு காலம் ,
இப்போ போய்க் காவிரியிலே தொப்புன்னு
குதிச்சோம்னு வெச்சுக்கோ, அவளோதான் ஆளே க்ளோசு,
ஒரே கல்லும் மண்ணுமா தான் இருக்கு ...காவிரியிலே,

குடிக்கக்கூட தண்ணி இல்லாமே நாட்டுல மக்கள்,
கையில குடத்தோட அலையுற அவலத்தப் பாத்துட்டும் ,
தண்ணிப் ப்ரச்சனைய கவனிக்காம தேர்தல்ல,
மும்மரமா இருக்கிற அரசியல்வாதிகளை நெனைச்சு, வருத்தப்
பட்டுபேசறோமான்னு, தெரியாமெ புலம்பிக் கொண்டு,
இருந்தான் தணிகாசலம் ,இந்த நாட்டின் குடிமகன்.




அசோகர் சாலை இருமருங்கிலும் நிழல் தரும்
மரங்களை நட்டார். ஆங்காங்கே குளங்களை
வெட்டினார்,
என்று கத்தி படித்தபடி மனப்பாடம் செய்து
கொண்டிருந்த, அவனின் செல்ல வாரிசு ஓடிவந்து,
அப்பா . அப்பா , எதுக்குப்பா அசோகர் மரம் நட்டாரு?
எதுக்குப்பா குளம் வெட்டினாரு?
அவரு ராஜாதானே அவுருபாட்டுக்கு
ஜாலியா இருக்கவேண்டியதுதானே,


ஐந்து வயதுக் குழந்தை ரிஷி கேட்ட கேள்விக்கு,
என்ன பதில் சொல்றதுன்னு யோசித்தான்
தணிகாசலம்,

போப்பா உனக்குத் தெரியலை ,நான் பாட்டிகிட்டே
கேட்டுக்குறேன், என்று சொல்லிவிட்டு,
பாட்டி தங்கி இருக்கும் முதியோர்இல்லத்து ,
தொலைபேசி எண்ணைச் சுழற்றி,
என் பாட்டி கமலம்மாளை கூப்பிடுங்க
என்றான் ரிஷி,
பாட்டீ... எதுக்கு பாட்டி... அசோகர் குளம் வெட்டினாரு,
எதுக்குப் பாட்டி மரம் நட்டாரு?

பாட்டி சிரித்தாள் தொலைபேசியில்,

டேய் கண்ணா இந்தக் கேள்விக்கு உங்கப்பனுக்கு
மட்டும் இல்லே, யாருக்கும் பதில் தெரியாது,

அசோகர் ஒரு ராசா
ராசாவுக்கு எப்பவும் தன்னோட நாடு. நாட்டு ஜனங்களோட
வசதி, இதுதான்முக்கியம் ,அதனாலெ
மக்கள் நல்லா இருக்கணும்னா,
நாடு வளமா இருக்கணும் ,
நாடு வளமா இருக்கணும்னா, விவசாயம்
நல்லா நடக்கணும் அப்பொதான் இப்பொ
நாமெ சாப்படுறோமே அந்த அரிசி, விளையும்
எல்லா தானியமும், வளரும் காய், கனி ,எல்லாம்
நிறைய கிடைக்கும், அப்போதான் நாட்டுலெ
பஞ்சம் இல்லாமெ இருக்கும்,
பஞ்சம் இல்லாமெ நாடு இருந்தாதான்,
மக்கள் சொகமா இருப்பாங்க , அதுக்கு ,

நீர்இன்றி அமையாது இவ்வுலகம்'ன்னு
பெரியவங்க சொன்னா மாதிரி.



தண்ணி வேணும் தண்ணி இருந்தாதான்
விவசாயம் பண்ண முடியும்
விவசாயம் பண்ணி செழிப்பா எல்லாம்
விளைஞ்சாதான் ,
விவசாயி சந்தோசமா இருப்பான்.,

ஆமாண்டா விவசாயி எந்த நாட்டுலெ
சந்தோசமா இருக்கானோ, அந்த நாட்டிலெ
தான் மக்கள் சந்தோசமா இருப்பாங்க,
நீர் உயர வரப்புயரும், வரப்புயர நெல்
உயரும் , நெல் உயரக் குடி உயரும்,
குடிஉயரக் கோன் உயர்வான்,
அப்பிடீன்னு அவ்வைப் பாட்டி சொன்னா
மாதிரி
மக்கள் சந்தோசமா இருந்தாதான் ,எல்லாருக்கும்
நல்லது, அப்பிடீன்னு அசோகர் அந்தக் காலத்திலேயே
உணர்ந்திருந்தாரு,
அதுனாலெதாண்டா மரம் நாட்டாரு,
குளம் வெட்டினாரு,
நம்ம நாகரீகமெல்லாம் வளர்ந்ததே நதிக்கரையிலேதாண்டா....
இப்போ புரியுதாடா கண்ணா என்றாள் பாட்டி?
புரிஞ்சுதோ இல்லையோ,
தலையை மட்டும் வேகமா ஆட்டிட்டு தொலைபேசியை
வைத்தான் ரிஷி,

மறு நாள் காலையில் பாட்டி சொன்னதையே
நினைத்துப் பார்த்துகொண்டிருந்த ரிஷி
வாசலில் கேட் அழைப்பு மணியைக் கேட்டு
வாசலுக்கு ஓடினான்,
வாசலில் நாலைந்துபேர் கும்பலாக நின்றிருந்தனர்
அதில் ஒருவன், தம்பி உங்க அப்பாவைக் கூப்பிடு,
என்றான்,
அப்பா ,அப்பா ...வாசல்லெ யாரோ வந்திருக்காங்க,
உன்னைப் பாக்கணுமாம் ரிஷியின் குரல்,
தணிகாசலம் எட்டிப் பார்த்தான்,யாரு?

சார் ...நாங்க மெட்றோ வாட்டர்
லேருந்து வரோம்,
நீங்க வாட்டர் டாக்ஸ் கட்டலை அதனாலெ
கனக்ஷன் கட் பண்ணப் போறோம் என்றார்கள்
வந்தவர்கள்,

என்ன இது அநியாயமா இருக்கு நீங்க தண்ணியே
குடுக்கறது இல்லே குடுக்காத தண்ணிக்கு எதுக்கு
டாக்ஸ் அப்பிடீன்னா தணிகாசலத்தின் சகதர்மிணி
வசந்தா,
ச்சு சும்மாஇரு நான் பாத்துக்கரேன் அப்பிடின்னுட்டு,
ஏன் சார் ,என் பொண்டாட்டி கேக்கறது ஞாயம்தானே,
அதுமட்டுமில்லே, இது என் பொண்டாட்டி யோட
குரல் மட்டும் இல்லை இந்த நாட்டு மக்களின் குரல்
அதுனாலெதான் இவ்வளவு உரக்க கேக்குது?
என்று கிண்டலடித்தான் தணிகாசலம்,

அதுக்கு வந்தவர்கள் சார் நாங்க வொர்க்கர்ஸ்,
எங்களை கேட்டா நாங்க என்னா பண்ணுவோம்,
நீங்க அரசாங்கத்தை கேளுங்க? என்றார்கள்.

சரிப்பா இப்பொ கனக்ஷன் இருக்கறதும்
இல்லாததும் ஒண்ணுதான்,
நீங்க கட் பண்ணிக்கோங்க ,என்றான் தணிகாசலம்

பாவம், அவர்கள் கவலை அவர்களுக்கு,
வர வர மக்கள் முழிச்சுகிட்டாங்க,
நம்மை எல்லாம் நம்ப மாட்டேங்கராங்க,
ஹும்.. சரி வா இன்னிக்கு ,ஒண்ணும் தேறாது,
முணுமுணுத்துகொண்டே, படியிறங்கிச் சென்றனர்
அவர்கள்,

என்னா நெனைச்சுண்டு இருக்காங்க இவங்க
அவவனுக்கு இருக்கிற ப்ரச்சனையெல்லாம்
போதாதுன்னு இவங்க வேற எரிச்சலைக்
கிளப்பறாங்க இன்னிக்கு குடிநீர் வாரியத்துக்கு
போய் ஒரு வழி பண்ணிட்டு வரேன்னு கிளம்பினான்
தணிகாசலம்,

ஏங்க, இவங்க குடிநீர் வாரியத்திலேருந்து
தான் வராங்கன்னு தெரியுமா?
இவங்க பேச்சை கேட்டுகிட்டு,நீங்க அங்க போய்
வீண் சண்டையை இழுத்துகிட்டு வராதீங்க,

அது இருக்கட்டும் முதல்ல தண்ணி லாரிக்காரனுக்கு
போன் பண்னி தண்ணி கொண்டுட்டு வரச்சொல்லுங்க
பணம் சாயங்காலம் வந்து வாங்கிக்க சொல்லுங்க
இல்லைன்னா நாளைக்கு தண்னி இல்லாமெ
கஷ்டப் படணும்" என்றாள் வஸந்தா!!!


அம்மாவின் அசரீரிக் குரல்!!!

"டேய் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்திரப்படாதே அவங்களும் அரசாங்கத்த
போய் கேளுன்னுதான் சொல்லுவாங்க!!!

நீ குடிதண்ணிப் ப்ரச்சனைக்கு இந்த நாட்டுக்
குடிமகனா என்னா பண்ணே, சும்மா அரசாங்கத்தை
குறை சொல்லி ப்ரயோசனம் இல்லை,
ஏரியெல்லாம் அரசாங்கம் தான் தப்பான,
திட்டம் போட்டு குடியிருப்பு கட்டிக் கொடுத்தாங்கன்னா,
நீயும் அதை வாங்கி இங்கதானே வாழறே?
ஏரியை பாழ்பண்ணி அங்க வீடு கட்டினா நான்
வாங்கமாட்டேன்ன்னு, சொல்லி வாங்காமெ இருக்கறதுதானே?"

அம்மாவின் கேள்வி அசரீரியாய், சம்மட்டி அடியாய் விழுந்தது!!!

நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள்
கேட்பது எதற்கு,
நாம் என்ன செய்தோம் அதற்கு என்று
உணர்ந்தால் நன்மை உனக்கு!!!!
கண்ணதாசன் பாட்டு தான்
ஞாபகத்துக்கு வந்தது, உண்மைதானே?
நாமெ என்னா செய்தோம்?!!!



சரி நாமெ நம்ம வேலையைப் பாப்போம்,
அப்பிடியே வசந்தாவைக் கொண்டுபோய்,
அவ ஆபீசுலெ விட்டுட்டு வேலைக்கு போகணும்.
கிளம்பினான் தணிகாசலம் !!

சரி ..சரி.. ஜாக்கிறதையா போய்ட்டு வா என்றது அம்மாவின்
அசரீரிக்குரல் ஆமாம்!!
அம்மா எப்பவும் வாசல்லெ வந்து வழிஅனுப்புவா
ஆண்டவனை வேண்டிகிட்டு!!

அம்மான்னா அம்மாதான்...

வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனம்
அம்மாவைப் பத்தியே, அம்மா சொன்னதைப்
பத்தியே, அசை போட்டுக்கொண்டு இருந்தது,
நாம் எல்லாருமே நாட்டுக்கும் எதுவும்
செய்யிறது ,இல்லை பெத்த அம்மாவுக்கும்
எதுவும் செய்யிறது இல்லை,
அது சரி தாயே மதிச்சாதானெ தாய்நாட்டை
மதிப்போம்!!!!
அம்மாக்களுக்கு முதியோர் இல்லம் கட்றோம்,
இல்லை.. இல்லை ...கட்றது கூட இல்லை ,
காட்றோம்.!!

தாய் நாட்டுக்கு நாமெ என்ன செய்யப் போறோம்?
ஒண்ணும் செய்ய மாட்டோ ம், நம்மாலெ
முடிஞ்சதெல்லாம் அடுத்தவனை குறை சொல்றதுதான்,
மனமும் வண்டியும் ஓடிக்கொண்டிருந்தது!!!

ஒரு வாரம் கழித்து, என் சி சி கேம்ப்பிலிருக்கும்
பெரிய மகன் க்ருஷ்ணனிடமிருந்து ,ஒலிநாடா ஒன்று
பார்சலில் வந்தது- அதன் மேலே
அப்பா இந்த ஒலிநாடாவைக் கேட்கவும்,
உங்கள்
அன்பு மகன்
கிருஷ்ணன்

என்று எழுதி இருந்தது
தணிகாசலம் பதறிப்போய்
அதை டேப் ரெகார்டரில் போட்டு
கேட்க ஆரம்பித்தனர்......
அதில்.....


அப்பா இங்க பூங்குடின்னு ஒரு
கிராமத்திலெ எங்க கேம்ப் போட்டு இருக்காங்க,
நம்ம பாட்டி அடிக்கடி சொல்றது போல,
நானும் நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு
தோணிகிட்டே இருந்தது,


அந்தப் பூங்குடி கிராமத்திலெ ஊர் மக்கள் எல்லாம்
சேர்ந்து குளம் வெட்றாங்க,
எவ்வளோ தோண்டியும் தண்ணி வரல,
அங்க ஒரு பெரியவர் ,
இப்பிடியெல்லாம் பூமியைத் தோண்டினா மட்டும்
தண்ணி கிடைச்சுருமா?கிடைக்காது...

மனுஷன் மனசுலெ இரக்கம் , மனிதாபிமானம் எல்லாம் போச்சு ,
மனசுலெ ஈரம் இருந்ததானே மண்ணுலெ இருக்கும்?
எங்க காலத்துலெ இப்பிடி தோண்டி, தண்ணி வரலையின்னா,
ஒரு உசிரை பலி கொடுத்தா தண்ணி கிடைக்கும்னு சொல்லுவாங்க,
இப்பொல்லாம் யாரு அடுத்தவனுக்காக இரக்கப் படரான்?
யாராச்சும் ஒருத்தன் தானே முன்வந்து தன்னை த்யாகம்
செய்யத் தயாரா இருந்தா? தண்ணி தானே வரும்னு ....

சொன்னதைக் கேட்டேன்!!! ஏன் இந்த நாட்டுக்காக
நாமே இந்த த்யாகத்தை செய்யக் கூடாதுன்னு,
தோணிச்சு , அதுனாலெ என்னை மன்னிச்சுருப்பா,
இந்த ஒலிநாடா உன் கைக்கு கிடைக்கும்போது,
நான் ஒரு நல்ல காரியத்தை செய்தோம்கிற ,
த்ருப்தியோட போறேன் ,எப்பிடியாவது நம்ம நாட்டுக்கு
உதவணும்கிற நல்ல எண்ணம்தான்
நாட்டுலெ ஏதாச்சும் ஒரு மூலைலெ கொஞ்சம்
தண்ணீ கிடைச்சா கூட எத்தனையோ மக்களுக்கு
தாகம் தணியும்,
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" ன்னு
பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருதுப்பா

ராமருக்கு சேது அணை கட்டும்போது அணில்
உதவினாமாதிரி நானும் நாட்டுக்கு உதவ
ஒரு சந்தர்ப்பம் கொடுத்த
உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றி

அப்பா ஒண்னு மட்டும் சொல்றேன்
அசோகர் மாதிரி ராஜா வெல்லாம் முட்டாள் இல்லை
நாமெல்லாம் புத்திசாலியும் இல்லை...


இப்படிக்கு
உங்கள்
அன்பு மகன்
க்ருஷ்ணன்

டேய் செல்லமே கதறினர் தணிகாசலமும் , வசந்தாவும்

வீடே இருளில் மூழ்கிக்கிடக்க தணிகாசலமும் , வசந்தாவும்
பூங்குடி கிராமத்துக்கு புறப்பட்டனர்,
அங்கு போய் காம்ப் இருக்கும் இடத்துக்கு
ஓடினர்.
அங்கே.....
கொளுத்துகிற வெய்யிலில் மாணவர்கள் எல்லாம்
சேர்ந்து கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்

அதில் க்ருஷ்ணனும் இருந்தான் !!!!!

டேய் க்ருஷ்ணா.. கதறிக்கொண்டே ஓடிபோய்
கட்டிக்கொண்டனர் இருவரும்....
தழுதழுத்தான் தணிகாசலம் டேய் உனக்கு என்னாடா
ஆச்சு ? நாங்க உன்னை மறுபடியும் உயிரோட பாக்கறமா?
இது உண்மை தானா?கதறினர் இருவரும்...

அப்பா எனக்கு ஒண்ணுமில்லை
அயம் ஆல் ரைட்
கவலப் படாதீங்க!!

நான் எடுத்த முடிவு சரிதான் ஆனா
கடைசீ நேரத்துலெ என் முடிவை
மாத்திகிட்டேன்,
உலகத்துலெ விலை மதிக்க முடியாதது
மனிதாபிமானம் ,ரெண்டாவது உயிர்
ஆனா உயிர் இருந்தா மனிதாபிமானத்தை
நம்ப மனசுலே வளர்த்துக்கொண்டு
மகத்தான சேவை எல்லாம் செய்யலாம்
அப்பிடீன்னு அடிக்கடி உங்கம்மா அதான்
என் பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு
வந்தது ,அதனாலெ என் முடிவை நான்
மாத்திகிட்டேன் ,
அப்பா நான் இப்போ உயிரோடதான் இருக்கேன்
ஆனா நான் உயிரோட இங்கேருந்து திரும்பி வரணூம்னா
ரெண்டு உதவி கேட்கப் போறேன்,,,,,,,,

1. முதியோர் இல்லத்துலெ இருக்குற எங்க
பாட்டி நம்ப வீட்டுக்கு வரணும்,நம்மோடயே
தங்கணும்

2. நாம நமக்கு ஊருலெ இருக்கிற நிலத்துலெ
பெரிய கிணறு எடுத்து எல்லாருக்கும்
உதவற மாதிரி செய்யணும்
செய்வியாப்பா?

டேய் க்ருஷ்ணா எங்களுக்கு நீ வேணும்டா
அது மட்டுமில்லை அப்பனுக்கு பாடம் சொன்ன
முருகன் மாதிரி நீ எங்களுக்கு ஒரு நல்ல
பாடம் சொல்லிக்குடுத்துட்டெ

நாமெ எல்லரும் போய் பாட்டியைக் கூட்டிகிட்டு
வரலாம்,இனிமே நாங்க உங்க பாட்டியை,
அதான் என் அம்மாவையும் மறக்க மாட்டோ ம்
நம்ம நாட்டையும் மறக்க மாட்டோ ம் ,

நிச்சயமா நம்ம நிலத்திலெ நீ சொன்னா மாதிரி
கிணறு வெட்டி நல்லது செய்யலாம்!!!!

மீண்டும் எல்லொரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
என்று சொன்ன தணிகாசலம்
மனைவியையையும் அழைத்துக்
புறப்பட்டான்,


அப்பா நாமெ இப்போ பாட்டியை பாக்கத்தானெ போறோம்,
பாட்டிக்கு ஒரு பாட்டில் தண்ணீ வாங்கிகிட்டு போகலாம்
பாட்டி அடிக்கடி தாகம் எடுக்குதுன்னு சொல்லுவாங்க
என்றான் குழந்தை ரிஷி
மீண்டும் எல்லோரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!




அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, July 30, 2007

குரு

குரு
குரு என்பவர் எந்த தோற்றத்தில் வருகிறார்
என்பது முக்கியமே அல்ல
அவர் எப்படிப் பட்டவர் என்பதும் முக்கியமல்ல
ஒரு சரியான தருணத்தில் நம் அகக் கண்களைத் திறந்து
ஒரு சரியான வழிகாட்டுதல் மூலம் நம்மை ஆட் கொள்ளுபவர்கள் அனைவருமே குருஸ்தானத்தை அடைகிறார்கள்

ஒரு கதை ஞாபகம் வருகிறது

ஒரு பாமரன் கர்ப்பிணியாய் இருக்கும்
தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு ஆற்றின் அக்கரைக்குச் சென்று ,தன்னுடைய பணியை முடித்துவிட்டு திரும்பும் போது ,ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது
அக்கரையிலிருந்து அவசரச் செய்தி ,
கர்ப்பிணி மனைவிக்கு ப்ரசவ வலி
எடுத்து விட்டதாக.
இறைவா என் மனைவியையும்
குழந்தையையும் காப்பாற்று ,
என்னை எப்ப்டியாவது அக்கரைக்கு
அழைத்துப் போ என்று வேண்டிக் கொண்டிருந்தான்

ஆனால் ஆற்றின் சுழல் வேகத்தில் அக்கரைக்கு
செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது
ஆபத் பாந்தவன் போல்
ஒரு சிறுவன்அங்கு வந்து ...என்ன அக்கரைக்குப் போக வேண்டுமா...? வாருங்கள்
என்று அக்கரையோடு அழைத்தான் சிறுவன்

நம்மாலேயே இந்த வெள்ளப் பெருக்கில்
அக்கரை போக முடியாதே
இந்தச் சின்னஞ்சிறுவன் எப்படி அழைத்துப் போவான் ...?
நம்பிக்கை இல்லாவிடினும் நேர அவசரம்
கருதி ஆமாம் உதவி செய்ய முடியுமா?
என்று கேட்டான் பாமரன்

அதற்கு அச்ச் சிறுவன் வாருங்கள் அழைத்துப் போகிறேன்
என்று கன கம்பீரமாய் கூறிவிட்டு
என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,
என் பெயர் ஆயன் ,ஆயன் ,ஆயன் என்று
என் பெயரைச் சொல்லியபடியே வாருங்கள்
என்று சொல்லி நாராயணா நாராயணா
என்று கூறிக் கொண்டே
ஆற்றின் மேல் நடக்க்த் துவங்கினான்,இருவரும்
பாமரன் ஆயன் ,ஆயன் என்று கூறிக் கொண்டே
அந்த வெள்ளப் பெருக்கில் தன்ணீரின்
மேல் நடந்து போகத் துவங்கினர் மூழ்காமலே
முதலில் ஆச்சரியப் பட்ட பாமரன் பாதி வழியில்
திடீரென்று ,,யோசித்தான் சின்னஞ் சிறு இப்பாலகனே
நாராயணா ,நாராயணா என்று சொல்லும் போது தண்ணீரின் மேல் நடக்க முடிகிறதே ,
ஏன் நாமும் நாராயணா என்றே
சொல்லிக் கொண்டு நடக்கலாமே என்று எண்ணி
நாராயணா என்றான் ,உடனே தன்ணீரில் மூழ்கினான்
அப் பாமரனைப் பிடித்து தூக்கிய ஆயன்
என் பெயரை விட்டு விட்டு ஏன்
நாராயணன் பெயரைச் சொன்னீர்கள்
என்று கேட்க பாமரன் பதில் சொல்லத்
தெரியாமல் விழித்தான்

உடனே ஆயன் என்னும் அச்சிறுவன்

"எனக்கு நாராயணனைத் தெரியும்"
நான் அவன் பெயரைச் சொன்னேன்
உங்களுக்கு என்னைத் தானே தெரியும் ,
நான் தானே காப்பாற்றி
அழைத்துப் போகிறேன்
ஆகவே என் பெயரையே சொல்லுங்கள்
என்று சொல்ல பாமரன் ஆயன் ,ஆயன்
என்று சொல்லி அக்கரையை அடைந்தனர்
அவன் மனவிக்கு சுகப் ப்ரசவம் தாயும் சேயும் நலம்
அச்சிறுவன் அவர்களை ஆசீர்வதித்து

,யார் உனக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை நம்பு
அவரைத் தாண்டி அவருக்கு மூலம் எது என்று பாராதே
என்று சொல்லி விடை பெற்றான் ஆயன்

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது
என்பதன் அர்த்தமும் இதுதான்
குரு எப்படி இருக்க் வேண்டும் என்று
நீ முடிவு செய்யாதே
உருவு கண்டு எள்ளாதே
உன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ள நீ பக்குவப் படு

குருப் ப்ரம்மா ,குரு விஷ்ணு, குரு தேவோ
மஹேச்வரஹ:குருஸ் சாஷ்ஷாத் பரப் ப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு திருவண்ணாமலை

என்னுடைய ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்


சென்னையிலுள்ள திருவண்ணாமலை சிவத் தலம்
ஸ்ரீவில்லி புத்துரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள்
இருக்கும் இன்னொரு திருவண்ணாமலையைப் பற்றி
சொல்கிறேன் ,இது வைணவத் தலம்
இங்கு அருமையான ஒரு கோயில் உள்ளது
கீழே ஒரு அருமையான பெரிய குளம் உள்ளது
அதன் அருகே கரையில் ஒரு வினாயகர் உள்ளார்
அவருக்கு ஆதி வினாயகர் என்று பெயர்
அந்த வினாயகர் மிகப் பெரிய சிலா ரூபம்,
அதன் பக்கத்திலேயே, அருமையான மிகப் பெரும்
ஆலமரமும் வேம்பும் பலவருடங்களுக்கு முந்தையது இருக்கிறது
அந்த மரத்தின் கீழே நாகம் ப்ரதிஷ்டை செய்யப் பட்டு
இருக்கிறது, மேலே படிகளேறிப் போனால் மலை மீது
ஸ்ரீனிவாசர் ஆலயம் இருக்கிறது ,
அங்கு திருவண்ணாமலை ஸ்ரீனிவாசன் குடிகொண்டிருக்கிறான்
,மிகவும் தொன்மை வாய்ந்த அருமையான தலம்
அந்தக் கோயிலில் நின்று கொண்டு பார்த்தால்
ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் இயற்கயோடு ரசிக்கலாம்

ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அக் கோயிலுக்கு
மோட்டார் வாகனத்திலும், எல்லா வாகனங்களிலும் செல்லலாம் ,
செல்லும் வழியை இன்னும் சீரமைத்தால்
இயற்கயை ரசிப்பதற்க்கும், ஆன்மீக வாசிகளுக்கு
மிகவும் நிறைவான ஒரு திருத்தலம்,இந்த
திருவண்ணாமலை

அங்கு குளத்தின் கரையில் இருக்கும்
ஆதிவினாயகரின்
தோறறம் மிக அற்புதமாக இருக்கும்
அந்த ஆதி வினாகயகரை தரிசித்து விட்டு
பக்கத்திலேயே இருக்கும் வேம்பும் அரசும் பின்னி வளர்ந்த
பெரிய மரத்தின்கீழ் இருக்கும் நாக விக்ரகங்களை
வணங்கிவிட்டு,
அண்ணாந்ந்து பார்த்தால் ஸ்ரீனிவாசனின் கோயில்,
மலை மேல் தெரியும்,அங்கு பூக்கடைகள்,அதிலிருக்கும்
இன்னும் க்ராமீய வாடை போகாத பூக்காரிகள்
அவர்களிடம் சென்று மாலை வாங்கிக் கொண்டு
படி ஏறலாம்,மொத்தம்250 படிகள், 200 படிகள் ஏறியவுடன்
மங்கம்மா கோயில்,பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம் அங்கு கைங்கரியம் செய்யும் ஒருவர் நமக்கு ஸ்ரீசுவர்ணம் இட்டுவிடுவார்
அன்னையன் தரிசனம் முடித்து ,அப்ப்டியே

- Show quoted text -

பாடங்கள்

என்வாழ்வில்
என்னை நெகிழ் வைத்த சம்பவங்கள்

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்ச்சி
நான் அடிக்கடி புரசைவாக்கத்திலிருந்த உணவு விடுதிக்கு
சென்று சுவையான சிற்றுண்டி சாப்பிடுவது என் வழக்கம்
இப்போது அந்தச் சுவை இல்லை அதனால்
அவர்களுடைய நலன் கருதி அந்த சிற்றுண்டி
விடுதியின் பெயரைத் தெரிவிக்காது
சம்பவத்துக்கு நேரிடையாக வருகிறேன்

அதே போல் ஒருநாள் அச்சிற்றுண்டி விடுதிக்கு
சென்று என்னுடைய ராஜ்தூத் துவிச்சக்கர வண்டியை
நிருத்திவிட்டு உள்ளே செல்ல முயலும் போது
யதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்
என்னுடைய ராஜ்தூத்தை ஒரு சிறுவன்
சுமார் 12 வயதிருக்கலாம்
ஒரு துணியை வைத்து நன்றாகத் துடைக்க
ஆரம்பித்தான், நான் அவன் என்னைப்
பார்க்கமுடியாத ஓரிடத்திலிருந்து
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
இருக்கும் ஒரு வண்டியையும் யாராவது
எடுத்துப் போய்விட்டால்...?
மனிதனுக்கு சந்தேக புத்திதானே...?

அந்தச் சிறுவன் மிக நன்றாக என்னுடைய
வண்டியைத் துடைத்துவிட்டு
நான்கூட அவ்வளவு நன்றாகத் துடைத்திருப்பேனா
என்பது சந்தேகமே..
ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டான்
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான்
வேண்டுமென்றே என்னுடைய வண்டியின் பக்கத்தில்
போய் நின்றேன்,உடனே அச்சிறுவன் ஓடிவந்து
அய்யா உங்கள் வண்டியை நன்றாகத் துடைத்திருக்கிறேன்
எனக்கு எதாவது பணம் இருந்தால் கொடுங்கள்
என்றான்
எனக்கு வேலையைச் செய்துவிட்டு கூலி கேட்கும்
அவன் குணம் பிடித்திருந்தது ,
(இப்படிப் பட்டவர்களை ஆராயும்போது சில விஷயங்கள்
கிடைக்கும் என்பது என் அனுபவ பூர்வமான உண்மை )
எந்த மனிதரை ஆராய்ந்தாலும் ஏதாவதொரு
அனுபவம் கிடைக்கும் அது நம் வாழ்க்கைக்கு
உபயோகமாகவும் இருக்கும்

அதனால் அவனை மேலும் ஆராய எண்ணி
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு
என்னுடைய வண்டியை என் அனுமதி இல்லாமல்
துடைத்துவிட்டு ,பணம் வேறு கேட்கிறாயா?என்றேன் மிறட்டும் தொனியில்,
அதற்கு அவன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு அய்யா முடிந்தால் பணம் கொடுங்கள் ,
இல்லையானால் பரவாயில்லை ,
என்னை மன்னித்துவிடுங்கள்,உங்கள் அனுமதி
இல்லாமல் உங்கள் வாகனத்தை
நான் தொட்டது தவறுதான் என்றான்,
அவனுடைய அணுகு முறை மிகவும்
ரசிக்கத்தக்கதாகவும்
யோசிக்கத்தக்கதாகவும் இருந்தது
நான் அவனை மேலும் சோதிக்க
நான் உனக்கு பணம் தர முடியாது,
வேண்டுமானால் என்னுடன்வா உனக்கு
உணவு வாங்கித் தருகிறேன்
(இது என்னுடைய நெடுநாளைய பழக்கம்,)
என் தந்தையாரும் தாயாரும் அடிக்கடி
சொல்வார்கள்,
பணம் எவ்வளவு கொடுத்தாலும்,
இன்னும் கொடுக்க மாட்டார்களா
என்றுதான் நினைப்பார்கள்,உணவு கொடுத்தால்
வயிரு நிறைந்தவுடன் போதும் போதும்,
நீங்க நல்லாஇருக்கணும் அப்பிடீன்னு
வாழ்த்துவார்கள் அதனால்
கல்விக்கு உதவி செய் ,பணம் கொடுக்காதே என்பார்கள்

ஆதலினால் அவனை உணவு விடுதிக்கு
உள்ளே அழைத்தேன்
அவன் வர மறுத்தான்,பணம்தான்
வேண்டுமென்று மன்றாடினான்
நான் என்னுடைய கொள்கையைக் கூறியவுடன்
அரை மனதோடு என்னுடன் உணவு விடுதிக்குள்
வந்து நான் சொன்னவுடன் உட்கார்ந்தான்,
அவனுக்கு ஆறு இட்டிலிகளையும்,
எனக்கு தோசையையும்
கொண்டு வரச் சொல்லி அனுப்பினேன்
நான் ருசிக்கு சாப்பிடுபவன்,
அவன் பசிக்கு சாப்பிடுபவன்

எல்லாம் வந்தது,நான் அவனையும் சாப்பிடச்
சொல்லிவிட்டு
நானும் சாப்பிட ஆரம்ப்பித்தேன்
திடீரென்று அவனைப் பார்த்தேன்
அவன் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை
அவனுடைய அடம் ,அழிச்சாட்டியம்
எனக்குப் பொறுக்கவில்லை
என்னை அறியாது கோபம் வந்தது
டேய் என்ன நினைச்சிட்டிருக்கே மனசிலே
சாப்புடுடா,பணம் நிச்சயமாக தரமாட்டேன்
என்று கத்தினேன்

அனைவரும் என்னை திரும்பிப் பார்த்தனர்
என்னை சுதாரித்துக் கொண்டு
(அந்த உணவகத்தின் பணியாளர் என்னையே
கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன்)
என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு
என்னடா சாப்பிடேன் என்றேன்
அதற்கு அச்சிறுவன் அய்யா என்னை மன்னிக்க வேண்டும்
நான் இதை வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடுகிறேன்
என்றான்,ஓ வெளியே எடுத்துப் போய் விற்றுவிட்டு
பணமாக மாற்றலாம் என்று பார்க்கிறாயா
அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்
என்றேன்

அச்சிறுவன் கூறிய பதில் என்னை
திடுக்கிட வைத்தது

அய்யா வீட்டில் என் தம்பி தங்கைகள்
பட்டினியாக இருக்கிறார்கள்
அவர்களுக்கும் கொடுத்து நானும்சாப்பிடுவேன்
நான் மட்டும் எப்படி அய்யா சாப்பிடுவது ..?
என்றான்.எனக்குப் பொட்டில் அறைந்தது போல்
இருந்தது,, ஆமாம் என் வீட்டில் இருப்பவர்கள்
சாப்பிட்டிருப்பார்களா..? இப்போதுதான்
அந்த நினைவே வருகிறது,உள்ளுக்குள்ளே
அவமான உணர்ச்சி, அத்தனை சிறிய வயதில்
அச்சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி
அன்பு பாசம்,நேசம் ,கடமை, அடடா


என்னுடைய கலவையான அதிர்ச்சியான ,சந்தோஷமான
அத்தனை உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு
நான் அவர்களுக்கும் வாங்கித் தருகிறேன், என்றுசொல்லி
நிறைய உணவுப் பண்டங்கள் கட்டி எடுத்துக் கொண்டு
என்னுடைய மேஜையில் வைத்தபிறகு
அவன் சாப்பிட ஆரம்பித்தான்
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்

என் கண்களில் கண்ணீர் மழை
பொழிந்து கொண்டே இருந்தது
எல்லோரும் என்னை வேடிக்கை பார்த்தனர்
நான் கவலைப்படவே இல்லை

அந்த ,சிறுவன் எனக்கு ஞானோபதேசம் செய்யவந்த
அச்சிறுவனை,கடவுள்,தீர்க்கதரிசி,ஞானி, எப்படி
வேண்டுமானாலும் கொள்ளலாம்
என்னுடைய அத்தனை உணர்ச்சிகளும்
, வெட்கித் தலை குனிந்திருந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ

நெகிழ வைத்த சம்பவங்கள் 1.

திரு ஆண்டாளின் தோள்களிலே
கொஞ்ஜும் கிளிகள்
ரங்கா,ரங்கா,என்று கொஞ்ஜும்
ஸ்ரீரங்கம் ,திருவரங்கன் திருக் கோயில்
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்,.
ராஜ கோபுரத்தை

பல வருடங்களாக , பலமுறை பல பேர்
நிர்மாணிக்க முயன்றும் , முடியாமல் நின்ற
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டுவதற்காக
அப்போது இருந்த ஜீயர் 44வது பட்டம்,
ஸ்ரீவண் ஸடகோபஸ்ரீ வேதாந்த மஹா தேசிகன்
மிகவும் மிகவும் ப்ரயாசைப் பட்டு ,பலவிதமான
,முயற்சிகளை மேற்கொண்டார், அவருக்கு
வயது 70 க்கு மேல்
அந்த வயதிலும் அவர் பல பாடு பட்டு
நம்முடைய புராதனமான,
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்
ராஜ கோபுரத்தை நிர்மாணித்தே ஆகவேண்டும்
என்று தீர்மானமாக முடிவெடுத்து
அதற்காக மொத்த தொகை எவ்வளவு
ஆகும் என்று தோராயமாக ஒரு திட்டமிட்டு
அத்தொகை பல நல்ல வழிகளில்
ஈட்டிவந்தார்,
இயல்பாகவே மிகவும் இரக்க மனம் கொண்ட
எடுத்த உன்னதமான பணியை
முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தினால்
மடத்தின் அனாவசிய சிலவுகளைக் குறைத்து
சிக்கனத்தை மேற்கொண்டு ஒவ்வொரு பைசாவையும்
ஒரு கோடி போல் எண்ணி சேர்த்துக் கொண்டே
தைரியமாக திருப் பணியை ஆரம்ப்பித்தும் விட்டார்

அப்போது ஆட்சியிலிருந்த திரு எம் ஜீஆர்
என்று அழைக்கப் படும் திரு எம் ஜீ ராமச்சந்திரன்
அவர்கள் ஒரு லக்க்ஷ ரூபாய் நன் கொடை
கொடுத்தார்,திரு இளைய ராஜா இன்னும்
பல நல்ல உள்ளங்கள், இந்த நல்ல திருப் பணிக்கு
பொருளுதவி செய்தனர்,
அப்படியும் பணம் போதாமல் இன்னும்
பணம்சேர்ப்பதற்கு பல நல்ல வழிகளில்
முயன்று கொண்டிருந்தார் ஜீயர் அவர்கள்

திருப்பணிகளும் நடந்து கொண்டே இருந்தது
சிக்கனத்தை மேற்கொண்டாரே தவிர
தினம் வரும் அன்பர்களுக்கு
திருவரங்கன்நாச்சியாரின் ப்ரசாதம் அளிப்பது,
உணவளிப்பது எதையும் நிறுத்தவில்லை

அந்த நேரத்தில்
ஒரு வயதான மூதாட்டி அங்கு வந்து
அவரிடம் ,
ஆச்சாரியனே எனக்கு ஒரு பத்து ரூபாய்
கொடுங்கள்,என்று கேட்டார்,
அச்சாரியனும் அந்த மூதாட்டியிடம்
ராஜ கோபுரம் கட்டுதற்க்கே
பொருள் போதாமையால் இன்னும்
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே
இல்லை என்று பல முறை வற்புறுத்தி
சொல்லியும்
அந்த மூதாட்டி அங்கேயே நின்றுகொண்டு
மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்து கொண்டிருந்தாள் பத்து ரூபாய்
கொடுக்கும் படி
அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல்
உதவியாளரை அழைத்து அந்த மூதாட்டிக்கு
ஒரு பத்து ரூபாய் கொடுத்து அனுப்பும்படி
சொல்ல ,அவளுக்கு பத்து ரூபாய் கொடுக்கப் பட்டது

அந்த மூதாட்டி ஆசாரியனை மேலும் நெருங்கி வந்து
தன் தளர்ந்த குரலில் என்னை மன்னிக்க வேண்டும்
இந்த வயதிலும் நீங்கள் ராஜ கோபுர திருப்பணி செய்யும்
மகத்தான காரியத்துக்கு பல பெரிய மனிதர்கள்
பண உதவி செய்திருக்கிரார்கள்
ஆனால் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை
என்னிடம் பணம் இல்லை ஆனால் ராஜ கோபுர
த்ருப்பணிக்கு கொடுக்க மனம் மட்டும் உள்ளது
அதனால்தான் தங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன்
என்று கூறி
ஆச்சாரியனே இந்த அடியாளின் பங்காக
இந்தப் பத்து ரூபாயை ராஜகோபுர திருப்பணிக்காக
வைத்துக் கொள்ளுங்கள் என்று கதறினாள்
அங்கு திருவரங்கனும் நாச்சியாரும் ,ஆச்சாரியாரும்
நெக்குருகினர்
இந்தச் செய்திகேட்டு
அடியேனும் நெகிழ்ந்தோம்

மனமிருந்தால் வழியுண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ

Saturday, July 28, 2007

நாகரீகம்

உணர்ச்சி வசப் படுதல் என்பது மனிதர்க்கு
மட்டுமல்ல எல்லா விலங்கினங்களுக்கும் உண்டு,
உணர்ச்சி இருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும்
உணர்ச்சி வசப்படுதல் பொதுவானது
,இதில் தமிழன் என்ன , ?,வேற்று மாநிலத்தவர் என்ன?,
வேற்று நாட்டவர் என்ன....?

ஒரு யானையை துன்புறுத்தும் போது
அந்த பெரிய உருவம் கொண்ட யானை
நம் கண் முன்னால் எப்படி துடிக்கிறதோ
அதே போலத்தான் நம் கண்ணுக்குத்
தெரியாத எத்தனையோ பூச்சிகள்,
ஓரளவுக்கு கண்ணுக்குத் தெரியக் கூடிய
எறும்பு போன்றவையும் துடிக்கும்
ஆனால் அந்த எறும்பு துடிப்பது நம்
கண்ணுக்குத் தெரியவில்லை அவ்வளவுதான்

உணர்ச்சிவயப் படுதல் ஒவ்வொரு
ஜீவ ராசிக்கும் ஏற்றவாறு அமைகிறது
நம் ரத்தத்தை உரிஞ்ஜிக் குடிக்கும் கொசு
அப்போது நமக்கு கோபம் வருகிறது ,
எரிச்சல் வருகிறது,
சரி ஆனால் நம் ரத்தத்தை அதாவது
அதன் உணவை உண்ணவிடாமல் நாம்
சில வாசனைப் பொருட்களாலேயோ,
வேரு சில உபகரணங்களாலேயோ
தடுக்கும் போது அந்தக் கொசுவுக்கு
எப்படி கோபம் வருகிறது என்று
நமக்கு புரியுமா? அதன் கோபம் நம்
கண்ணுக்குத் தெரியவில்லை என்கிற
ஒரே காரணத்தால் அது உணர்ச்சி
வயப் படவில்லை,கோபப் படவில்லை
என்று நாம் நினைக்க முடியுமா....?

அது போலதான் மனிதன் உணர்ச்சி வயப் படுகிறான்
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும்
உணர்ச்சி வயப் படுகிறார் என்பதே உண்மை
ஆனால் பக்குவப் பட்ட மனிதர் உணர்ச்சி வயப் பட்டாலும் அதை வெளிக் காட்டும் முறையும் பக்குவமாக இருக்கும்

சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பவரையும்
கோபமாகப் பேசிக் கொண்டே நல்லது
செய்பவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்

ஒரு கதை நினைவிற்கு வருகிறது

ஒரு சாது ,மிகவும் சாது ,அவரிடம் போய்
ஒரு பாமரன் மிக ஆச்சரியமாக ,
சாமீ உங்களூக்கு கோபமே வராதா..?என்று கேட்டான்
அவரும் மிக இனிமையாக வராது அன்பனே என்றார்,
ஆனால் அந்தப் பாமரனுக்கு சந்தேகம் தெளியவில்லை
அது எப்படி சாமி ,உண்மையிலேயே உங்களுக்கு
கோபம் வராதா என்றான்
இல்லையப்பா வராது என்றார் சாது,
இது போல மாற்றி மாற்றி பலமுறை கேட்டவுடன்
அந்த சாது அடேய் போகிறாயா இல்லை உன்னைக் கொன்றுவிடட்டுமா? என்று ஆக்ரோஷமாகப் பாய்ந்தார்....
இப்போது புறிகிறதா எதற்கும் ஒரு அளவு உண்டு
உணர்ச்சி வயப் படுதலும் அவ்வாறே

மிகைப் படுத்துதல் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு அளவு கோலைக் கொண்டது
ஒவ்வொரு மனிதற்கும் மாறுபடும்

சிலர் ஒரு திறமையான நடிப்பை கண்டு ரசித்து,
அல்லது ஒரு நல்ல கவிதையைப் படித்து
ரசித்து உணர்ச்சி வயப் பட்டு பாராட்டுவதுண்டு
அப்படிப் பாராட்டுதல் ஒவ்வொருவருக்கு
ஒவ்வொரு பாணி ,வழக்கமாக இருக்கும்
என் நண்பன் ஒருவன் ஏதாவதொரு கதை,
அல்லது கவிதை , எழுதிக் காண்பித்தாலே
அவன் மனதுக்கு பிடித்துவிட்டால்
உடனே ஓடி வந்து என்னக் கட்டிப்பிடித்து
கண்களில் நீர் ததும்ப ஆஹா
ஆஹா ரொம்ப நல்லாருக்கு என்று
என்னைப் பாராட்டிவிட்டு எல்லோரிடமும்
போய் அடடா என்னமா எழுதறான்,
இதெல்லாம் ஒரு அருள்தான் என்று
சொல்லி மற்றவர்களையும்
அதைப் படிக்கச் சொல்லி மகிழ்வான்
இது அவன் பாணீ

இன்னொருவன் இருக்கிறான் இதே
நிகழ்வு ஏற்படும் போது அவன் என்
அருகில் வந்து முதுகிலே ஓங்கி
ஒரு அறை விடுவான் ,
இது அவனுடைய பாராட்டும் பாணி
வலித்தாலும் அவன் பாராட்டுகிறான்
என்னும் உணர்வு அவனைக் கடிந்து
கொள்ள இடம் கொடுக்காது

என்ன செய்வது அது போல, சில ரசனைகள்
தேவையான அளவு இருக்கும்
சில ரசனைகள் தேவைக்கு அதிகமாக இருக்கும்

உலகில் உள்ள எல்லா மொழிப் படங்களையும்
பாருங்கள் எல்லாமொழிப் படங்களிலும்
உணர்ச்சி வயப் பட்டு கத்தியை ,,
அல்லது துப்பாக்கியை அல்லது ஏதாவதொரு
ஆயுதம் ஏந்தாமல் இருக்கிறார்களா...?

பிறகென்ன

தமிழன் மிகைப் படுத்துவான் ,
எளிதில்உணர்ச்சி வயப் படுவான்
என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
எல்லா மனிதர்களும் உணர்ச்சிவயப் படுபவர்களே, மிகைப்படுத்துபவர்களே
மற்றவரைப் பார்க்கும் போது தமிழன் எவ்வளவோ
பண்பட்டவன் என்றுதான் சொல்ல வேண்டும்

ஆனால் இந்த தனிமனித வழிபாடு (HeroWorship)
என்பதுதான் எல்லா நாட்டிலும் கேடு விளைவிக்கிறது ,
குறிப்பாக மனிதர்க்கு கற்பூரம் காட்டுதல்,
மலர் தூவுதல், கோயில் கட்டுதல் ,
இவையெல்லாம் அநாகரீகத்தின்
உச்சகட்டம் என்றுதான் நான் சொல்லுவேன்

சிந்து நதிக்கரையில் தோன்றிய நம்
நாகரீகம் இப்போது கூவம் நதிக் கரையில்
அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக
மாறி விட்டது
அதுதான் என் வருத்தமும் கூட
நாகரீகம் என்பது ,மாறலாம் ,ஆனால் வளரவேண்டும்
உண்மையாகப் பார்த்தால் நம் நாகரீகம்
ஒரு மாயப் போர்வையை போர்த்துக் கொண்டு
அழிந்து கொண்டிருக்கிறது
இதுதான் உண்மை

அன்புடன்

தமிழ்த் தேனீ

Thursday, July 26, 2007

காதல்

பூக்கள்
பூக்கள் முகிழ்ப்பது போல காதலும்
முகிழ்க்கிறது ஒவ்வொரு வினாடியும்
பூக்களைப் போல காதலுக்கும்
ஆயுள் குறைவுதான் பூக்கள்
இதழ் மூடிக் காயாகி கனியாகி
மீண்டும் ஒரு மரத்தின் வித்தாக
மாறும் ஆனால் அது மீண்டும்
பூவாக முடியாது காதலும் அது போல
காதலிக்கும் பருவம் தாண்டி
கடி மணம் நிகழ்ந்த பின்
இல்லறத் தேன் அருந்தி
வம்ச விருத்தித் தவம் செய்யும்
மீண்டும் காதலாக , கன்னியாக ,
உருமாற முடியாது ,
பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை அன்புடன்
தோன்றுதல்தான் அழகு

அன்புடன்
தமிழ்தேனீ

பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை தோன்றுதல்தான் அழகு

நான் காதல் வேண்டாமென்று கூறவே இல்லை
காதல் நிச்சயமாக இருக்கிறது ,
உண்மையான காதலுக்கு ஆயுள் அதிகம்,
காதல் என்று மட்டும் இல்லையென்றால்
இந்தப் ப்ரபச்ஞ்ஜமே வளர்ந்திருக்காது


காதல் என்பது வேறு, பருவக் கிளர்ச்சி என்பது வேறு
இரண்டையும் சரியாகப் புறிந்து கொள்ளாமல்
பருவக் கிளர்ச்சியை காதல் என்று
எண்ணி ஏமாந்து போகவேண்டாம்
என்று தான் சொல்லுகிறேன்


இநத தவறான புறிந்து கொள்ளுதலால்
இயற்கையின் மாறுபாட்டால் உடற்கூறு
தன்மையால் , பாதிக்கப் படுவது பெண்களே
காதலித்த இருவருமே தங்கள் புனிதத்
தன்மையை கல்யாணத்துக்கு முன்னமே
இழக்கக் கூடாது,அப்படி இழந்த்தவர்கள்
அவர்களுக்கு குழந்தை பிறந்து
அது காதலிக்கும்போது பதறுகிறார்கள் ,

ஒவ்வொரு ஆணும்
(என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்)


தன் மனைவி பத்தினியாக இருக்க வேண்டும்
என்றுதானே நினைக்கிறான்


ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் தன்னைத்
தவிற வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல்
இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறாள்
அப்பொழுது கல்யாணத்துக்கு முன்னால்
நாம் எப்படி இருக்க வேண்டும் எனபதை
தீர்மானிக்க வேண்டுமல்லவா?
காதல் மிகவும் புனிதமானது
,
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தாலும்
அவைகளின் மீது நமக்கு உரிமை கிடையாது
என்பதை நினைவில் வைத்துக் கொண்டு
காதலியுங்கள் ,கடைசீ வரை நன்றாக
இணைந்து வாழுங்கள் என்றுதான்
சொல்கிறேன்
மனிதர்களில் ஆணோ பெண்னோ
எல்லோருக்குமே நாலு நல்ல குணம்
இருக்கும், நாலு கெட்ட குணம் இருக்கும்
இதைப் புறிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு
பணிந்தோ,அல்லது இதமாகப் புரியவைத்தோ,
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
கடைசீவரை இணைந்து வாழுங்கள்
இதுதான் காதல்


காதலித்து
ஒருவருக்கு ஒருவர்தான் என்று தீர்மானமாக
முடிவு செய்து இணைந்து,இயைந்து வாழ்வோம்
இணை பிரியாமல் வாழ்வோம்


காதலிப்போம், காதல் உண்டு காதல் நிச்சயமாக உண்டு
காதலையே காதலிப்போம்

காதலை,காதல் கவிதைகளை இரசித்து

முடித்த பிறகு என்னுள் எழுந்த

சிந்தனையை அப்படியே வடித்துள்ளேன்

சற்று அதிகப் ப்ரசங்கித் தனமாக தோன்றினாலும்

பொறுத்துக் கொண்டு யோசிப்போமே

காதல்

இது எத்தனை பேரை இப்படி கவிஞ்ஞனாக

மாற்றுகிறது, !!!!!!!!!! நானும் பார்க்கிறேன்

வாலிப வயது வந்தவுடன்

அதுவும் , ஒரு பெண்ணைக் காதலிக்க

ஆரம்பித்தவுடன்தான்,கற்பனை வருகிறது,

குழப்பம் வருகிற்து ,தெளிவு வருகிறது,

சிந்தனை வருகிறது ,சிரிப்பு வருகிறது

எல்லாம் வருகிறது,

அப்புறம் தான் செந்தமிழ் என்று ஒன்று

இருக்கிறது என்கிற ஞாபகமே வருகிறது

அப்புறம்தான் அவரவர் மொழியே

ஞாபகம் வருகிறது,அதற்குப் பின்தான்

கவிதை வருகிறது

கவிதை எழுதினாலே காதலைப் பற்றிய கவிதை

எழுதினால் தான் கவிஞ்ஞன் என்று ஒப்புக்

கொள்வார்களோ...? என்று பயம் வருகிறது,

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்

எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள்

இன்னும் கற்பனை செய்யாமல்

கருத் தரிக்காமல் இருக்கிறது

காதலியுங்கள்,கவிதை எழுதுங்கள்

ஆனால் சிந்தியுங்கள்

நாமாவது சற்று மாறுபட்டு

தெளிவான, பொலிவான,வளமான,

எதிர்காலத் தேவை உணர்த்த

நாம் வாழும் முறையை புதுப்பிக்கும் படியான ,

நல்ல சிந்தனைகளைத் தூண்டும் வகையில்

கருத்துக்கள் தோய்ந்த கருக்களை ,

சிந்தனைக் கருக்களை உருவாக்குவோம்

பின் குறிப்பு:

(நானும் என் வாலிப வயதில் இப்படி யெல்லாம் செய்தவன்தான்,)

இது காதலைப் பற்றி என் அபிப்ராயம்

இப்போது நான் சொல்வது சிலரைப்

புண்படுத்தினாலும் அவர்கள்

என்னை மன்னிக்கட்டும்

ஆனால் நான் ஒரு பொதுக் கவி

மனதில் பட்ட உண்மைகளை மறைக்காமல்

சொல்லவேண்டும் என்ற என்ணமுடையவன்

என் அம்மா சொல்வார்கள்

"அழ அழச் சொல்பவர் தமர்

இதம் பேசுபவர்கள் த்ரோகிகள்" , என்று

நான் இதம் பேசப் போவது இல்லை

காதலிக்க ஆரம்பித்த்வுடனே நம்முடைய

மனது நம்மை அறியாமலே

கதாநாயக அந்தஸ்துக்குப் போய் விடுகிறது

நாம் காதலிக்கும் பொழுதே நம்மை

நம் சுயத்தை மறைக்க ஆரம்பித்து விடுகிறோம்

எது இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது

தம்மை அலங்கரித்துக் கொண்டு போய்

காதலிக்கிறார்கள்

தம்முடைய் உண்மையான அந்தஸ்த்தை மறைத்து

போலியாக நடித்து ஒருவரை ஒருவர்

ஏமாற்றிக் காதலிக்கிறார்கள்

ஆனால் காரியம் முடிந்தவுடன்

கசந்து போகிறது வாழ்க்கை

காதல் என்பதே இப்போது எனக்குத் தெரிந்து

இல்லை இல்லை இல்லவே இல்லை

வாழ்க்கையில் இணையாமலே பிறிந்து

போகிற காதல்எவ்வளவோ பரவாயில்லை

இணைந்த பிறகு தாம்பத்யம் ,

புனிதமான தாம்பத்யம்

இரு கைகள் இணைத்துக் இனி பிறியோம்

எத்துணை துயர் வரினும் என்று உறுதி பூண்டு

அக்னி தேவனின் முன்னாலே அத்தனை

பெரியவர்கள் முன்னாலே சத்தியம்

செய்து விட்டு அத்தனை பேரையும் முட்டாளாக்கி

தம்மையும் முட்டாளாக்கிக் கொண்டு

விவாகரத்து புறிகிறார்களே என்னால்

பொறுத்துக் கொள்ளவே முடியாத அக்கிரமம்

இத்தனைக்கும் காரணம்

காமத்தை காதல் என்று புறிந்து கொள்ளுதலும்

இயல்பான வாழ்க்கை நடைமுறை ஆர்வத்தை

காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலும் தான்

என்னுடைய அகராதியில்

ஒருவரை ஒருவர் உண்மையாய்ப்

புறிந்து கொள்ளல் தான் காதல்

அது இது வரையில் ஏற்படவே இல்லை

எல்லா மனிதரிடமும் சில கெட்டவைகளும்

சில நல்லவைகளும் இருக்கும்

இந்த ரகசியம் புறிந்து கொண்டு இணைந்து

இணக்கமாய் வாழ்க்கையை ,இன்பமோ துன்பமோ

இருவரும் பகிர்ந்து கொண்டு வாழ்தலே காதல்

திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள் இணைந்து

வாழ்ந்தாலும் முழுமையாக ஒருவரை ஒருவர்

புறிந்து கொள்ளுதல் முடியாது

இப்போது காதலித்து திருமணம் ,சில மாதங்களிலேயே

எல்லாம் புறிந்தாற்போல் விவாகரத்து

சரியே இல்லை

காதலின் அடித்தளமே சரியில்லை

புரிந்து கொள்ளுதலே காதலின் அடிப்படை

ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்மானமாக

முடிவெடுத்து முதலில் தங்களுடைய குறைகளை

தெரிய வைத்து பின் தெளிய வைத்து

தெளிவாக காதலித்தால் மட்டுமே

காதல் இனிக்கும்

காதலித்து பின் திருமணம் புரிந்தாலும்,

திருமணம் நடந்த பிறகு காதலித்தாலும்(மனைவியை)
ஒரே ஒரு சபதம் எடுக்க வேண்டும் இருவரும்

ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்

வாழ்க்கைய தொடர,
காதலிக்கும் போது ஓரளவு புரிவது போல் இருக்கும்

ஆனால் புரியாது ,ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு

திருமணம் ஆன பின்னர் ஓரளவு புரியும்

ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, எப்படி இருந்தாலும் அதற்கேற்றார்ப் போல் நடந்து கொண்டு வாழ்கையை இனிமையாக நடத்த வேண்டும் இத்தனைக்கும் மேலாக
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட திருமணமாக இருந்தாலும், காதலித்து தானே செய்து கொண்ட திருமணமானாலும் இந்த தலைவிதி என்று

ஒன்று இருக்கிறதே அது தன் இஷ்டம் போலத்தான் நம்மைஆட்டுகிறது இதுதான் யதார்த்தம்

இது தலை விதியை நம்புபவர்களுக்கு

மட்டும் பொருந்தும்

இது என் எழுத்தல்ல குமுறல்

இளைஞ்ஞர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்

கொள்ளவேண்டுமே என்கிற எதிர்காலக் கவலை

உண்மைக் காதல் பெருகட்டும்

இப்படிக்குத்

தமிழ்த் தேனீ

பண்ட மாற்று,தள்ளுபடி அனியாயம

அன்பர்களே பல காலமாக ஒரு அனியாயம் நடந்து கொண்டிருக்கிறது
பொது மக்களை எல்லோருமே சுரண்டுகிறார்கள்
சமீபத்தில் என் மனைவி அரிசி வேகும் குக்கர் பண்ட மாற்று முறையில்
தள்ளுபடி விற்பனை நட்க்கிறது ,நாமும் அதில் பழைய குக்கரை
போட்டுவிட்டு புதியது வாங்குவோம் எனறாள்
நாங்களும் அந்த ப்ரபலமான அரிசி வேகவைக்கும் பாத்திரக் கடைக்கு சென்றோம்
அஙகே எங்களுடைய பழைய அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை
அடிமாடு விலைக்கு எடுத்துக் கொண்டு அவர்களுடைய புதிய
அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை அநியாயமான விலைக்கு எங்களிடம்
விற்றார்கள்
இது போல ஒவ்வொரு கடைக் காரர்களும் அவர்கள் விற்க்கும் பொருளுக்கு
உத்திரவாதம் கொடுக்கிறார்கள் ஆனால் கெட்டுப் போனால் அந்த யந்திரத்தின்
எந்த்த எந்த பாகங்கள் அடிக்கடி உடையுமோ கெட்டுப் போகுமோ அவையெல்லாம்
தவிர்த்து மற்ற பாகங்களுக்குதான் உத்திரவாதம் என்று சொல்லி மீண்டும்
நம்ம்மிடம்
அதிகப் பணம் வசூலிக்கிறார்கள்ு
நாம் பல வகையிலும் நட்டப் படுகிறோம்
வருடாந்திர உத்திரவாதம் கொடுக்கும் அத்தனை உற்பத்தியாளர்களும்
அவை கெட்டுப் போனால் அவைகளுக்கு எந்த பரிகாரமும் செய்வதில்லை
பணம் வாங்காமல்
அப்படியே நகை ,பொன் நகை அவைகளை நேற்று வாங்கி
இன்று அவர்களிடம் போய் திருப்பிக் கொடுத்தாலும்
நாம் கொடுக்கும் போதும் , வாங்கும் போதும் செய் கூலி சேதாரம் என்று
எல்லா செலவுகளையும் நம் தலையிலே கட்டி நம்மைக் கொள்ளை அடிக்கிறார்கள்
ஒரு சவரன் மோதிரம் வாங்கி ஒரு மாதம் தான் ஆகிறது
அதை மாற்ற வேண்டி கடைக்குப் போனோம்
அதே ஒரு சவரன் மோதிரம் புதியது அந்தப் பழைய மோதிரத்தின்
விலையை விட இரண்டாயிராம் ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்தோம்
மக்கள் பணம் கொள்ளை அடிக்கப் படுகிறதே ,அனியாயமாய் மக்கள் ஏமாற்றப்
படுகிறார்களே இவற்றை எப்படித் தடுப்பது மிகவும் கொடுமை
அன்புடன்
தமிழ்த் தேனீ
http://www.thamizthenee.blogspot.com/

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராசதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

பயமும் ,தற்காப்பும்

சாதாரண நாம் செல்லமாக கொஞ்சி விளையாடும்
பூனை கூட ஒரு சந்தர்ப்பம் நேரும் போது புலியாக மாறும்

முய்ற்ச்சி செய்து பாருங்கள் ஒரு வீட்டில் வளர்க்கும் பூனையாக இருந்தாலும் சரி
அல்லது எங்கிருந்தோ நம் வீட்டுக்கு வந்து பாலைக் கவிழ்த்து
குடித்துவிட்டுப் போகும் பூனையாக இருந்தாலும் சரி

அந்தப் பூனனயை ஒரு அறைக்குள் போட்டு
பூட்டி விட்டு நிலைக் கதவு ,மற்றும் ஜன்னல்களை
தாழ்ப்பாள் போட்டுவிட்டு நீங்கள் அல்லது வேறு யார்
வேண்டுமானாலும் கையில் ஒரு குச்சியை வைத்துக்
கொண்டு மிறட்டிப் பாருங்கள்
சற்றே மிரளும் ,அப்புறம் ஒரு கட்டில் அல்லது மேஜை
அடியில் புகுந்து கொள்ளும், அங்கும் போய் அதை விறட்டும் போது
அதற்க்கு போக வேறு வழியே இல்லை என்னும் நிலை
உருவாகிவிட்டால் அது சற்றும் எதிர் பாராமல் நமக்கும் அத்ற்க்கும்
உள்ள சக்தி பேதங்களையும் மறந்துவிட்டு நம் மேல் பாயும்
அப்படி தப்பிக்கவே முடியாத நிலை உருவாகும் போது
பூனனயும் புலியாய் மாறும்
உண்மையில் அங்கு என்ன நடக்கும் தெரியுமா..?
தன்னை மிரட்டிய அந்த மனிதரை அந்தப் பூனை
தன் நகத்தாலும் பற்களாலும் கடித்துக் குதறிவிடும்
அம் மனிதன் பிழைப்பதே கடினம்
நம்ப்புவதற்க்கு சற்று கடினமாக இருப்பினும்
இதுதான் உண்மை
nessasity is the mother of invension என்பார்கள்
ஆமாம் தேவை,அவசியத் தேவை ,அவசரத் தேவை ,இவைகள் தான்
பல கண்டுபிடிப்புகளுக்கு மூலாதாரமாய் இருந்த்திருக்கிறது

ஆமாம் ஒரு பூனைக்கே இவ்வளவு பலம் வருகிறதே
இதே கருத்தை உதாரணமாகக் கொண்டு
தன்னைத் தாக்க வரும் ,அடாத வன் முறை செய்ய வரும்
ஆண் மிருகங்களை ஏன் பெண்கள் குத்தி கிழிக்கக் கூடாது..?
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது..?

உயிருக்கு வரும் ஆபத்தை எதிர் கொள்ளவே பல்வீனமான
பூனை பலம் வாய்ந்த புலியாவ்து போல்
இயற்கையிலேயே சக்தி வடிவான பெண் ஏன் உயிரினும் மேலான
கற்பைக் காத்துக் கொள்ள புலியாகக் கூடாது..?



விசாலம் அவர்களே இறைவன் நம்க்கு பல உறுப்புகள்
அத்துடன் சிந்திப்பதற்க்கு மூளை எல்லாம் கொடுத்தாற்போல்
அந்தக் கறப்பான் பூச்சிக்கும் ,ஏன் எரும்புக்கும்,அத விட சிறிய
உயிர்களூக்கும் மூளை கொடுத்திருக்கிறான் இது படைப்பின் ரகசியம்
நீங்கள் அதைப் பார்த்து பயப் படுகிறீர்கள்
அதே நேரம் அது உங்களைப் பார்த்து பயப் படுகிறது
இதன் விளைவாகத்தான் விலகி ஓடும் எண்ணம் இருந்தாலும்
பயம் உங்களை அறியாமல் அதன் மீது உங்களையும்
உங்கள் மீது அதையும் வீழச் செய்கிறது
நீங்கள் பாட்டுக்கு சும்மா இருந்த்தால் பாம்பும் கடிக்காது
அசையாமல் இருந்தால் அது பாட்டுக்கு தன் வழியே நம் மீது ஊர்ந்து
போய்விடும் ,நீங்கள் பயந்த்து அசையும் போதுதான் அது பயந்து நம்மை கடிக்கிறது ,ஆகவே கடிப்பதும் கடிக்கப் படுவதும்
பயம், அல்லது தற்காப்பு உணர்ச்சியால்தான் என்பது என் கருத்து

அன்புடன்

தமிழ்த்தேனீ

உலகில் நல்ல சக்திகள்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராஸதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

"பேய்கள் "ஒரு சம்பவம்

என் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது

லூகாஸ் டீ வீ ஸ் ஸில் நான் பணி புரிந்து
கொண்டிருந்த காலம்
வில்லிவாக்கத்திலிருந்து நடந்தே
பணிக்கு செல்வது அப்போதைய
என் பழக்கமாக இருந்தது

இரவுப் பணி
அப்போது இரவு 9.45 ல் இருந்து
காலை 7.15 வரையில்


ஒரு நாள் இரவு சற்று உடல் நலம் சரியில்லாத
காரணத்தால் அரை நாள் விடுப்பு எடுத்துக்
கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்
வரும் வழியில் ஒரு சுடுகாடு உண்டு

இரவு நேரம் 2.15 நள்ளிரவு , கும்மிருட்டு
தனியாக நடந்துவரும் போது சுடுகாட்டிற்க்கு
சற்று முன்னால் சாலையின் மறு பக்கத்திலிருந்து
ஒரு பெண் உருவம் சாலையைக் கடந்தது
இந்த நேரத்தில் ஒரு பெண் தனியாக செல்கிறாளே
யாரது அப்படிப்பட்ட தைரிய சாலி என்று பார்க்கலாம்
என்று வேகமாக அவளை நெருங்கினேன்
அவளை நான் நெருங்கிய வேளை
அந்தப் பெண் அந்த சுடுகாட்டில் அடைந்து விட்டாள்
திடீரென்று அங்கு அவளைக் காண வில்லை
ஆனால் எப்போதும் காயத்ரி ஜபம் செய்து கொண்டே
இருக்கும் எனக்கு எந்த பயமும் தோன்றவில்லை
எங்கு தேடியும் ஒரு பெண் அங்கு வந்ததற்கு
எந்த ஒரு அடையாளமும் இல்லாமல்
மீண்டும் இயல்பாக ஒரு கருமை இருட்டு
மட்டுமே அங்கு குடியிருந்தது
நான் வீட்டுக்குவந்து கை கால்
கழுவிக் கொண்டு , தூங்க ஆரம்பித்தேன்
காலையில் என் அம்மாவிடம் ,நடந்ததைக் கூறினேன்
அதற்கு என் அம்மா முதலில்
என்னிடம் கேட்ட கேள்வி
உன் மனதில் பயம் வந்ததா? என்பதுதான்
இல்லை என்று பதில் கூறினேன்
அதற்கு என் அம்மா ,அதுதான் நல்லது
எந்த ஒரு கணம் உன் மனதில்
பயம் வருகிறதோ
அங்குதான் கெட்ட சக்திகள்
மனதை ஆக்ரமிக்கிறது
உலகில் கெட்ட சக்திகளும் உண்டு
நல்ல சக்திகளும் உண்டு
உலகமே கெட்ட சக்திக்கும் நல்ல சக்திக்குமான
போரில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
நம்முடையம் மனம் தான் அந்தப் போர்க் களம்
ஆகவே மனதை கெட்ட எண்ணங்கள், அனாவசியமான பயங்கள் இல்லாமல் ,தூய்மையாக வைத்துக் கொண்டாலே ,பேயும் இல்லை பிசாசும் ,இல்லைஆண்டவன் என்னும் இயற்கைதான் என்றுமே நிலையானது என்று தெளிவு படுத்தினார்,
ஆகவே மனம் தெளிவாக இருந்தால்
பேய்கள் இல்லை என்பது தான் உண்மையோ
என்று தோன்றுகிறது,

பேய்கள் இல்லை
என்பதுதான் என் கருத்து

அன்புடன் தமிழ்த் தேனீ

Tuesday, July 24, 2007

(யோசிப்போம்) 1.அர்த்தநாரீ


யோசிப்போம்் ”

அர்த்தநாரீ

எல்லா ஆண்களிடமும் - தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும் ,எல்லாப் பெண்களிடமும்-
தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும்,
இயற்கையாகவே உண்டு

நாம் எதை வளர்க்கிறோமோ அதற்குண்டான

பலன்தான் அடைய முடியும்

ஆகவே நம் வாழ்க்கை நம் கையில்் தான்

"கல்யாணம் என்கிற ஒரு புது பந்தத்தினால்

வெவ்வேறுகுடும்பப் பாரம்பரியம் இயல்புகள்,பழக்கவழக்கங்கள்

கொண்ட இருவர், அதாவது ,ஒரு ஆணும் ,பெண்ணும்

ஒரு கூறையில் ,ஒரே இடத்தில், இணைந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்

ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வது

என்பது நிச்சயமாக இயலாது,

முழுமையாகப் புறிந்து கொள்ளல் நிச்சயமாக முடியாது.......

,சுக, துக்கங்களிலும்,பங்கு கொண்டு , பல வருடங்கள்

ஒன்றாக வாழ்ந்த்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலே

வாழ்க்கையை முடிப்பவர்கள்தாம் மிக அதிகம் என்பது என்

அனுபவ பூர்வமான கூற்று,,........

ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து

திருமணம் செய்தாலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட

திருமணம் என்றாலும்

தவறு கண்ட இடத்தில் ,தைரியமாக ஆனால் மனம்

புண்படாத வகையில் எடுத்துக் கூறி, தங்களை

தாங்களே சரி செய்து கொண்டு, சமப்படுத்திக் கொண்டு,

வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம்

அப்படியில்லாமல் தவறாக நினைத்துக் கொள்ளப்

போகிறார்களேஎன்று எண்ணி யதார்த்தமான உண்மைகளை

சொல்வதற்கு கூட தைரியமில்லாமல் இருந்துவிட்டு பிறகு

காலம் கடந்து வருத்தப் படுவதில் அர்த்தமில்லை.

திருமணமான சில காலங்களுக்குள்ளேயே

விவாகரத்து ஏற்படும் சமீபகால நிகழ்வுகளுக்கு

மேற்கூறிய

தைரியமில்லாமைதான் மூல காரணம்

ஒரே கூறையின் கீழ் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்பொழுதே

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோம்

ஆதலினால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ,

தனித் தனி அந்தரங்கம்,தனித் தனி சுதந்திரம்

எல்லாம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும்

தனித் தனி சுய மரியாதை உண்டு

என்று ஒப்புக் கொண்டாலும்

பொதுவான மரியாதை,பொதுவான சுதந்திரம்

அன்பு, பாசம், நேசம்,எல்லாம்

ஏற்படும் காலம்தான் தாம்பத்தியக் காலம்

அதற்குப் பெயர்தான்

“தாம்பத்தியம்“-

தாம் பத்தியம் இருக்கும்

இனிமையான தாம்பத்தியம்

தாம்பத்தியங்கள் வெறும் ஒப்பந்த்தங்களாக மாறக் கூடாது

இதைப் புறிந்து கொள்ளாமல்

அவர் விஷயத்தில் நான் தலையிடமாட்டேன்

அவள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்

என்று மூன்றாம் மனைதர்களைப் போல ஒதுங்கி ஒதுங்கி

வாழ்வது,நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுவது

விபரீதமாகும்

அழ அழச் சொல்பவர் தமர் என்று ஒரு பழ மொழி உண்டு

அதற்குப் பொருள்

நாம் சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வந்தாலும்,

வருத்தம் வந்தாலும், அதற்காக நம்மை அவர்கள்

உதாசீனப் படுத்தினாலும் அவர்களுக்கும்

நமக்கும் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை

தைரியமாக சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி

புரியவைப்பது

தெரிந்தோ தெரியாமலோ, தவறான பாதையில்

செல்பவர்களை தட்டிக் கேட்கவும் ,

சரியான பாதையில் நடப்பவர்களை தட்டிக் கொடுக்கவும்

நிச்சயமாக தைரியம் வரவேண்டும், அல்லது

அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்

அப்போதுதான் அவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி

நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்

எவ்வளவு சொன்னாலும் கேட்காதவர்களை

யாரும் மாற்ற முடியாது காலம்தான் ,

அவர்களுடைய அனுபவந்தான்

அவர்களுக்கு புறிய வைக்கவேண்டும்

இச்சகம் பேசுவது என்று ஒன்று உண்டு

கேட்பவர்களுக்கு மிகவும் இதமாக,இனிமையாக இருக்கும்

சந்தோஷமாக இருக்கும் கேட்கும் பொழுது

ஆனால் சொல்பவர்களுக்கு உடனடியான லாபங்களையும்

கேட்பவர்களுக்கு பிற்காலத்தில் படு பயங்கரமான வீழ்ச்சியையும்

நஷ்டங்களையும் ஏற்படுத்தும் இச்சகம்

இந்த இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்

இதை உணராதவர்கள் தாம் அவசரத் திருமணங்கள் புரிதல்,

உடனடி விவாகரத்து புரிதல் என்கிற நிர்பந்த்தத்துக்கு ஆட்படுகிறார்கள்

அர்த்தநாரீ

அர்த்த என்றால் பாதி, நாரீ என்றால் பெண்

பாதி சக்தி ஆண்- சிவம், பாதி சக்தி பெண் -சக்தி

சிவன் பாதி சக்தி பாதி இணைந்து தான்

மொத்த சக்தியும்உருவாகிறது

இந்த சிவமும் சக்தியும் இணைந்ததுதான்

அர்த்தமுள்ள அர்த்த நாரீ

அர்த்தமுள்ள முழுமை பெறும் அர்த்த நாரீ

இதில் விக்ஞானப் ப்ரகாரமும்,ஆன்மீகப் ப்ரகாரமும்

நிறைய அர்த்தங்கள் உள்ளது

ஆணும் பெண்ணும் கலக்காவிட்டால் அங்கு

உயிர்கள் உருவாக முடியாது

உலகில் பிறந்த எந்தப் பிறப்பும் ஆண் தன்மையும்,

பெண்தன்மையும் கலந்து பிறந்ததே

ஆண் தன்மை உள்ள பெண்களும் உண்டு

பெண்தன்மை கொண்ட ஆண்களும் உண்டு

ஆண்மைகலக்காத பெண்ணும் ,பெண்மை கலக்காத ஆணும்

முழுமை பெறவே முடியாது

ஆணுக்குரிய தன்மை பெண்ணுக்குரிய தன்மை

இரண்டும் விகிதாசாரக் கலப்பில் வித்தியாசப் படலாம்

ஆனால் கலப்பு இல்லாமல் இருக்கவே முடியாது

அந்த விகிதாசாரம் எந்த அளவில் இருந்தால்

ஊனமில்லாமல் பிறக்கும் என்கிற

அளவு கோலைத்தான் ஆன்மீகத்தில்

“ஜாதகப் பொருத்தம்” என்றும்

விக்ஞானத்தில் ’’ உடற்கூறுப் பொருத்தம் “

என்றும் சொல்கிறார்கள்

ஆகவே ஆண்தன்மையோடு கலக்கும்

பெண் தன்மையின்,

அல்லது பெண்தன்மையோடு கலக்கும்

ஆண்தன்மையின்,

விகிதாசார மாறுதல், ஏற்றதாழ்வு, இவைகளினால்தான்

ஆண் என்றோ பெண் என்றோ

அல்லது இரண்டிற்க்கும் இடைப்பட்ட படைப்பான

அலி (அரவாணிகள்) என்றோ ஆகிறது

ஆகவே எந்த உயிரினமும் கேலிப் பொருளல்ல

ஜாதகத்தில்

ராசிப் பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம்,

யோனிப் பொருத்தம், தினப்பொருத்தம் ,மஹேந்திரப் பொருத்தம்,

இன்னும் பிற பொருத்தங்கள்

விக்ஞானத்தில் ரத்தத்திலுள்ள, வகைப் பொருத்தம் ,

அதாவது உடற்கூறின்மூலமாகிய,

மரபணுப் பொருத்தம்

குடும்ப பாரம்பரியப் பொருத்தம்

இன்னும் பிற பொருத்தங்கள்

இவைகளைக் கணக்கில் கொண்டுதான்

ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்யக் கூடாது

என்றும் பொருத்தங்கள் சரியாக இல்லையென்றால்

கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள்

இந்த உலகமே கணித மயமானது ,இங்கு பெரியோர்களால்

வகுக்கப் பட்ட சாத்திரங்கள், விக்ஞானிகளால் உருவாக்கப்பட்ட

நவீன வழிமுறைகள் எல்லாமே பல

வகையான கணிப்புகள், கணக்குகள்தாம்,

நமக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக

எதையுமே ஒப்புக் கொள்ளாமல் ,

எந்த வழியில் பயணிக்கப் போகிறோம் என்னும் தெளிவில்லாமல்

நம்மை நாமே குழப்பிக் கொள்வதால் ஏற்படும்

விளைவுகள்தாம், தடுமாற்றங்கள்தான் இப்போதைய

விவாகரத்துகளுக்கு மூல காரணம்

இந்தப் ப்ரபஞ்ஜத்தில் தானே நாம் வாழுகிறோம்

இந்தப் ப்ரபஞ்ஜத்துக்கும் நம்முடைய உயிர்,ஆன்மா

உயிரணுக்கள் எல்லாவற்றிர்க்கும் தொடர்பு உண்டு

பஞ்ஜ பூதங்கள்,அல்லது இயற்கை எனும்

பூமி,ஆகாயம்,நீர்,நெருப்பு,காற்று

இவை அனைத்துதும் இணைந்ததுதான்

ப்ரபஞ்ஜமும் அதிலிருக்கும் எல்லா உயிரினமும்

யோசனை செய்து பார்த்தால் புரியும்

இந்த ஐந்து இயற்கையும் ஒன்று

சேராமல் நம்முடன் ஒத்துழைக்காமல்

நம்மால் எதையுமே செய்ய முடியாது

அதேபோல் ஒவ்வொரு ஜீவராசியும் மீண்டும்

இந்த பஞ்ஜ பூதங்களுடன் இணைந்துதான் மீண்டும் உருவாகிறது

இநத இயற்கைதான் அர்த்தநாரீ தத்துவம்

பெண்ணுக்குள்ளேஆணும் உண்டு ஆணுக்குள்ளே பெண்ணும் உண்டு

ஒன்றுக்குள் இரண்டும் ஒன்றாகி பின் இரண்டாகி

பின் பலவாகி மீண்டும் ஒன்றாக இணைவதுதான்

உலக நியதி, அதுதான் அர்த்தநாரீ தத்துவம்

“வானாகி மண்ணாகி,வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாயை

என் சொல்லி வாழ்த்துவனே....?”

என்கிற

மாணிக்க வாசகப் பெருமானின் தெய்வ வாக்கு

சொல்லும் ரகசியமும் இதுதான்

வேதியல் படித்தாலும்,வேதம்படித்தாலும் தெரியும்,

வேதம் தான் வேதியலின் தந்தை

வேதம் வேதியலின் வர்க மூலம்

இங்கு உயர் திரு கண்ணதாசன் எழுதிய

முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு

என்கிற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது

அர்த்தநாரீ போல் இணைந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி

அன்புடன்

தமிழ்த் தேனீ

www.thamizthenee.blogspot.com