திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 26, 2007

உலகில் நல்ல சக்திகள்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராஸதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

No comments: