திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, February 22, 2011

"சாக்கடை” சிறுகதை

"சாக்கடை"  சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்

http://www.vallamai.com/?p=2030

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, February 9, 2011

" கைச்சூடு “ சிறு கதை

” கைச்சூடு “ சிறு கதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்




http://www.vallamai.com/?p=1929



அன்புடன்

தமிழ்த்தேனீ

Thursday, February 3, 2011

”தடுப்பான்’

 நம் வாழ்க்கையில் நமக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு அனுபவ பாடமாகவே அமைகிறது.


சமீபத்தில் ஒரு நிகழ்வு,
என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக பழகுவார்கள் ,

ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும் ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் ) மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என் வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம் ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண் என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம் முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம் காண்பித்தீர்களா என்றேன்.
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும் இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து உட்கார்ந்தேன்.

திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன். அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள் என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள். நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள். பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.

ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள் காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின் உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.

ஆனால் அந்தப் பெண் நினைத்தாற் போல திருகாணி தொலையவில்லை, அவள் காது மடலின் மறுபக்க தோலுக்கும் முன் பக்கத் தோலுக்கும் இடையில் காதின் உட்புறமாக சென்று மாட்டிக்கொண்டிருக்கிறது  .
அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும் வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள் என்பது புரிந்து போயிற்று.

ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி பொறுத்துக் கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க திருகாணியைக் கழற்றவேண்டும்.

நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்.
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும் ஒப்புக்கொண்டார்.

பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து, முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான் திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால் எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.

அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும் மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும் அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும் மகிழ்ந்தோம்.

காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள் பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?
முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத் தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து கொடுத்திருக்கிறேன்
ஆகவே எப்போதுமே

” இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப
”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ”

என்னும்  தமிழ்த்தேனியின் வாக்குக்கொப்ப  நடந்துகொண்டால் நன்மையே விளையும் என்று உணர்க

அன்புடன்

தமிழ்த்தேனீ









Wednesday, February 2, 2011

”கனவு மெய்ப்படவேண்டும் “ சிறு கதை வல்லமை இதழில்

 ”கனவு மெய்ப்பட வேண்டும்” சிறுகதை வல்லமை இதழில் படிக்க  சொடுக்குங்கள்
http://www.vallamai.com/?p=1874

அரங்கமே மின்விளக்குகளாலும் அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளாலும் பொதுமக்களாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதி நவீன கணினியின் உதவியால் அரங்கத்தின் திரையில் எல்லா நாடுகளும் கண்டு களிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளித் திரை மின்னிக்கொண்டிருந்தது. ஒரு அதி நவீன நான்கு சக்கர விசை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் ஆச்சரியக் குறி நிரந்தரமாக அவதானித்திருந்தது.


ஒரு பக்கம் நவீன விஞ்ஞானத்தில் முன்னேறி இருந்தாலும் அதிகமாக எரிபொருளை இயற்கையாகவே வைத்திருக்கும் நாடுகளிடம் எரிபொருளுக்குக் கையேந்தும் நிலை. மற்றொரு பக்கம் எரிபொருளின் விலையைக் குறைக்க வழி தெரியாமல், மாற்று எரிபொருளை இயற்கையான சூரிய வெளிச்சத்திலே இருந்து கண்டுபிடித்தாலும் நீரிலே உள்ள சக்தியை எரிபொருளாக உபயோகிக்கும் வழிமுறைகள் தெரிந்தும் அந்தத் தொழில்நுட்பங்களை வளர்க்காமல் தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகள் ஒரு புறம்.

இப்படி இருக்கும் இந்த நிலையில் மக்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம். மாற்று ஏரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! அதுவும் குறைவான செலவில் அதிக சக்தி அளிக்கும் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற அத்துணை எரிபொருட்களுக்கும் விமானத்துக்கும் அணு ஆயுதத்துக்கும் விண்கலத்துக்கும் அதையும் தாண்டி உலகத்தில் தேவையாய் இருக்கும் அத்துணை சக்திகளுக்கும் மாற்றாகப் பயன்படுத்தும் வகையில், உலகமே மின்சாரத் துணை இல்லாமல் இரவிலும் பகலிலும் ஒளியோடு மின்சாதனப் பொருட்கள் அத்தனையும் இயங்கும் வசதியோடு மொத்தமாக ஒரு மாற்றுக் கண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கும் விஞ்ஞானி ‘ஆதிமூலத்தை’ மேடையிலே காணப் போகும் பரபரப்பு, பிரபஞ்சத்தின் ஆச்சரிய விழிகளை இமை மூடாமல் வைத்துக்கொண்டிருந்தது.

உலகத்தில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சிகளும், ஒருங்குவிக்கப்பட்டு உலக மக்கள் அத்தனை பேருமே, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டுச் செய்திகள்… அத்தனையும் மறந்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.

திரையிலே விஞ்ஞானி ஆதிமூலம், ஒரு மந்திரவாதி போல் தன்னுடைய தளர்ந்த நடையுடன் நிதானமாக நடந்து வந்து, நடு மேடையில் நின்று, அத்தனை பேரையும் குனிந்து வணங்கினார். அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது…!!!! அடங்கியது!!

விஞ்ஞானி ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.

“இன்னும் சில நிமிடங்களில் நம்முடைய கண்டுபிடிப்பான அத்துணை சக்திகளுக்கும் ஒரே தீர்வான மாற்றுப் பொருள், இங்கு அனைவருக்கும் காட்டப்படும். அதற்கு முன்னால் ஒரு சிறு விஷயத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்ளுவோம். எனக்கும் என் மகனுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் என் மகன் சொன்னான், ‘மனிதன் நினைத்தால் எல்லாவற்றையும் படைக்க முடியும். ஆகவே கடவுள் என்பது பிரமை. வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் என்பது மாயை’ என்றான். அவன் சொன்ன அந்தச் சொல்தான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த, என்னைத் தூண்டியது.

நான் சொன்னேன், ‘ஏற்கெனெவே இருக்கும், அல்லது படைக்கப்பட்டிருக்கும் மூலப் பொருள் இல்லாமல் எதையுமே மனிதரால் உருவாக்க முடியாதென்று. மனிதன் கண்டுபிடிக்கிறான். உருவாக்குவதில்லை. எப்போதும் மனிதனால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாததைப் புதியதாக உருவாக்க முடியாது. இருப்பதைத்தான், கண்டுபிடிக்கத்தான் முடியும். ஆகவே எப்போதும் இறையை, மூலத்தை, இல்லையென்று சொல்ல முடியாது’ என்றேன்.

ஆனால் அவன் வார்த்தைகள் என்னை மனிதனின் உச்சக்கட்ட சக்தியை எட்ட வேண்டும் என்று வெறிகொள்ள வைத்தது. அதன் முடிவுதான் இப்போது நாம் கண்டுபிடித்திருக்கும் மாற்றுப் பொருள்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அரங்கமே இருளில் மூழ்கியது ஒரே ஒரு விநாடிதான். மறுபடியும் மீண்டும் ஒளிவெள்ளம் சூழ்ந்தது.

“இப்போது நாம் கண்டு பிடித்திருக்கும் மாற்று மூலப் பொருளால்தான் இந்த அரங்கமும் செயல்படுகிறது” என்றார் ஆதிமூலம். விஞ்ஞானி ஆதிமூலத்தின் கையில் ஒரு சிறு குப்பி இருந்தது. அந்தக் குப்பியிலிருக்கும் சிறு மாத்திரை வடிவில் இருந்த ஒரு மாற்றுப் பொருளைக் கையிலெடுத்து ஒரு முறை காட்டிவிட்டு அந்த மாத்திரையை மேடையில் இருந்த ஒரு நான்கு சக்கர விசை வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் சேமிப்பு அறையின் வாயில் இட்டார் ஆதிமூலம். இப்போது இந்த வாகனத்துக்கு நான் அளித்த, நம்முடைய கண்டு பிடிப்பான மாற்றுப் பொருளின் உதவியால் வாகனம் இயங்கத் தொடங்கும் என்றார். இயங்கத் தொடங்கியது…. புகையோ, நாற்றமோ, வெப்பமோ இல்லாமல்.

அவர் சொன்னார், “இனி இவ்வாகனத்துக்கு பல வருடங்களுக்கு எரிபொருள் தேவை இல்லை” என்று. உலகமே அதிர்ந்தது…. கைகூப்பியது. மகிழ்ந்தது. “இனி எப்போதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்னும் பேச்சுக்கே உலக அளவில் இடமில்லை” என்றார் விஞ்ஞானி ஆதிமூலம்.

ஒரு விமானம் பரிசோதனை முயற்சியில் பறக்க ஆரம்பித்தது….. ஒரு விண் கலம் மாற்றுப் பொருளின் உதவியால் நெருப்போ, வெப்பமோ இல்லாமல் அதி விரைவாக வானில் உயர்ந்தது இலக்கை நோக்கி பறந்தது. உயிரோட்டமான காட்சி அரங்கத்தில் இருந்த திரையில் நேரிடைக் காட்சியாக காட்டப்பட்டது. உலகம் ஆச்சரியத்தினால் மௌனமானது. அந்த மௌனத்தைக் கிழித்துக்கொண்டு மீண்டும் ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.

“கண்டு கொண்டேன் மூலப் பொருளை. நாம் கண்டுபிடிக்கும் அனைத்து விஞ்ஞான சாதனங்களுக்கும் சக்திகளுக்கும் தேவையான மாற்று மூலப் பொருளைக் கண்டுகொண்டேன். இப்போதும் சொல்கிறேன் இந்த மாற்று மூலப் பொருளை ஏற்கெனெவே இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மூலப் பொருட்களை வைத்துத்தான் உருவாக்கினேன் ஆகவே மூலப் பொருளில்லாமல் எதையும் உருவாக்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. ஆகவே அனைத்துக்கும் மூலப் பொருளாகிய ‘ஆதிமூலத்துக்கு’ நன்றி..

நான் ‘ஆதிமூலம்’ என்று சொன்னது என்னையல்ல, இறைவனை….. ஆகவே ‘இறைவனுக்கு’ வணக்கம்” என்றார்…. உலகமே அதிர்ந்தது……… தலை வணங்கியது!

விஞ்ஞானி ஆதிமூலமும் தலைவணங்கினார். எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியின் தோட்டா, அவருடைய இதயத்தின் மையப் புள்ளியைத் தாக்கியது.



 
அன்புடன்

தமிழ்த்தேனீ