இயற்கையாக ஐப்பசி மாதத்தில், கார்த்திகை மாதத்தில் கார்மேகமாய் சூல் கொண்டு மேகங்கள் கருமேகமாய் இருக்குமாம், அடை மழை பெய்யும் என்பார்கள்அப்படிப்பட்ட காலங்களில் விஷப் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் என்னும் வழக்கங்களை விதைத்து விதைத்துப் போயிருக்கின்றனர்
”கார்த்திகைக்குப் பிறகு மழையும் கிடையாது
கர்ணனுக்கு பிறகு கொடையும் கிடையாது”
என்பார்கள்
அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் தீபங்களை ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமான பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம், நம் வாழ்விலும் ஒளி பெருகட்டும்
அன்புடன்
தமிழ்த்தேனீ