ஆவடியில் ஒரு பள்ளியில் நான் உரையாற்றப் போயிருந்தேன்
அந்தப் பள்ளி ஒரு கிரித்துவப் பள்ளி
அங்கே மேடையில் நான் அமர்ந்திருந்தேன்
என் இடப்பக்கம் ஒரு இசுலாமியப் பெரியவர் இசுலாம் வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்
என் வலப்பக்கம் ஒரு கிரித்துவ பாதிரியார் கிரித்துவ வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்
என்னை இந்து மதம் பற்றிப் பேச அழைத்திருந்தனர்
நான் மேடையில் முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டேன்
எண்ணிப் பாருங்கள் என் நிலையை
ஆனால் நான் கவலைப்படவில்லை
ஒலிபெருக்கியைப் பிடித்தேன்
எதிரே இருந்த ஒரு ஆசிரியையிடம்
சகோதரி உங்கள் சாலையில் ஒரு பெரியவர் உங்கள் கண்முன்னே கீழே விழுந்து விடுகிறார்
நீங்கள் பதறிப் போய் உங்கள் வீட்டுக்காரரை உதவிக்கு அழைக்கிறீர்கள்
அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டேன்
அந்த ஆசிரியை கூறினார்
ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் அவருக்கு உதவி செய்வோம் ஓடி வாருங்கள் என்று அழைப்பேன் என்று கூறினார்
அந்த ஆசிரியை ஒரு பெரியவர் என்று கூறினார்களே தவிற
ஒரு இசுலாமியப் பெரியவர்,அல்லது ஒரு இந்துப் பெரியவர், அல்லது ஒரு கிரித்துவப் பெரியவர்
கீழே விழுந்து விட்டார் என்று கூறவில்லையே
பொதுவாக ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் என்றுதானே கூறினார்கள்
என்று குறிப்பிட்டுவிட்டு என்னுடைய உரையை ஆரம்பித்தேன்
என் முதல் வார்த்தையே என்ன தெரியுமா...?
இந்து மதத்தைப் பற்றியோ
இசுலாமிய மதத்தைப் பற்றியோ
கிரித்துவ மதத்தைப் பற்றியோ
மற்ற எந்த மதத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை
இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்றேன்
நாமெல்லோரும் இந்தியர்கள் ,நமக்குள் பேதமில்லை
ஆகவே மதத்தைப் பற்றியோ, தனிதனியாக வேதங்களைப் பற்றியோ
விவாதம் தேவையில்லை, எது உயர்ந்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்
அவரவர் தாய் அவரவர்க்கு உயர்வு,இங்கே யாரும் தாழ்வில்லை, யாரும் உயர்வில்லை,எல்லோரும் சமமே,
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மதம் , வேதம் என்பதெல்லாம் போய்ச்சேரும் இடத்துக்கு உண்டான வாகனம்தான்,
அவரவர் வாகனம் அவரவர்க்கு உயர்வு
வாகனம்தான் வேறு வேறு, போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்
ஆகவே இந்து மனம் பற்றி யோசிப்போம், இந்து மனம் பற்றி பேசுவோம்
நாம் அனைவருமே இந்தியர்கள் என்று பெருமிதம் கொள்வோம்
வந்தே மாதரம் என்று கூறிவிட்டு உட்கார்ந்தேன்
இசுலாமியப் பெரியவரும் , கிரித்துவப் பெரியவரும் என் பேச்சை ஆமோதித்து என்னைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொறிந்து
இந்தப் பொது மனம் இனி இந்தியர்கள் அனைவருக்கும் வரப் பாடுபடுவோம் என்றனர்
நாங்கள் மூவரும் ஒன்றாக உணவருந்திப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்
வந்தே மாதரம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
Wednesday, November 11, 2009
இந்து மனம்
Posted by
Thamizth Thenee
at
8:34 PM
0
comments
Links to this post
Monday, November 2, 2009
தமிழ் வணிகம்காம்
என்னும் இதழில் வெளிவந்த கட்டுரை
http://www.tamilvanigam.com/index.php/kt/811-2009-11-02-03-41-01.html
. .
![]()
Posted by
Thamizth Thenee
at
3:41 PM
0
comments
Links to this post
Monday, October 26, 2009
Monday, October 5, 2009
கனவுப் ப்ரபஞ்சம்
நேற்று வழக்கமான பணிகள் முடிந்து
தூங்கப் போனேன், நல்ல தூக்கம்
அதன் நடுவே நாம் தூங்குகையில் நம் ஆத்மா லோக சஞ்சாரம் செய்யக் கிளம்பிவிட்டது போலும்
மனுஷன் கொஞ்சம் அசந்தா போதும்
அவனோட ஆத்மாவே அவனை விட்டுட்டு சுற்றுலா கிளம்பிவிடுகிறது,அப்படி இருக்க யாரை நம்புவது.?
அது போல ஆதமா சுற்றுலா செல்லும்போதுதான் கனவுகள் வரும், அந்த ஆத்மா எங்கெல்லாம் போகிறதோ, யாரையெல்லாம் பார்க்கிறதோ,
அந்த செயல்களின் தொடர்பாக நமக்கு கனவுகள் வரும் என்று நினைக்கிறேன்,
நேற்று என்னவோ தெரியவில்லை எனக்கும் என் தந்தையார் திருவாளர் ரங்கஸ்வாமி ஐய்யங்கார் அவர்களுக்கும் ஒரு சந்திப்பு,
ஏதேதோ பழைய நிகழ்வுகளின் சிந்தனைகள்
காலையில் கண் விழித்தேன்
காலைக்கடன்களை முடித்துவிட்டு கணிணியைத் திறந்தேன்
என்னுடைய கணிணியின் திரையில்,
எம் எஸ் என், யாஹூ, கூகுல்டாக், என்று ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது, ஏதோ ஆகாயத்தில் நகஷத்திரங்கள் மின்னுவது போல ஒவ்வொன்றாக மின்னத் தொடங்கிற்று
எம் எஸ் என் மெசஞ்சர் தோன்றியது
அதில் ரங்கஸ்வாமி தொடர்பிலிருக்கிறார் என்று காட்டியது
ப்ரபஞ்சத்துக்கும் நம் கணினிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று புலனானது
என்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி
அன்புடன்
தமிழ்த்தேனீ
![]()
Posted by
Thamizth Thenee
at
1:44 PM
2
comments
Links to this post
Thursday, October 1, 2009
விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே என்னும் கட்டுரை சென்னை ஆன் லைனில் வெளியிட்டிருக்கிறார்கள்
http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=2933c31a-15cf-40e4-a2b5-a76e292d5ad5&CATEGORYNAME=Thene
“ மெய்ஞானம் “
நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒவ்வொரு செயல்களும், பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ச்சி செய்து அறிவு பூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் ,
நம் முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்ட மெய்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்,அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன், இதே போல்
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்,
மெய்ஞானம்தான் விஞ்ஞானம் , விஞ்ஞானம்தான் மெய்ஞானம்,
என்பதை கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதை கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர், அந்த திருஷ்டி கழிய, சுற்றிப்போடுதல்,அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்
அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில்வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்தஉப்பையும், காய்ந்தமிளகாயையும், எரிகின்ற நெருப்பில்இடுவார்கள், அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும், காய்ந்தமிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத்தாக்கும்,
இந்த நிகழ்வில் உப்பும் ,காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த ,வேதிய மாற்றம்நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, விஞ்ஞானப் ப்ரகாரம் உப்பும் காய்ந்தமிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம் நம் நோயைத்தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது
கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் ,சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்த தண்ணீருக்கு அளிக்கும்,அந்த சிவப்புத்தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் , தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,
அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய ,மாற்றத்தால் விளையும் மணம் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து நம் நாசியில் புகுந்து நமக்கு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது
அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர் பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி , இந்தக் கிருமி நாசினி
பசுமாட்டின் சாணத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது
அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை
ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடி நீரையும் அளிக்கிறது, பயிர் செழித்து வளரத்தேவையான இயற்கைச் சத்துக்களை பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துக்கள் தாமாகவே கலந்து அந்த சத்துக்களும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு , மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியல் விந்தையால் நீராக , சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது,
ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞானிகளாலும்
ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்த பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள்
அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது , அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவைகள் எல்லாவற்றையும் அதாவது நம்முடைய மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்
ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை
மெய்ஞ்ஞானம் எதை கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது
இயறகையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவைகளில் உள்ள நன்மைகளை அடைவோம்
ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com -- http://peopleofindia.net -- http://thamizthenee.blogspot.com
Posted by
Thamizth Thenee
at
2:52 PM
1 comments
Links to this post
Wednesday, September 9, 2009
நாணயம்
செய்தி : பழங்கால நாணயங்களின் நிரந்தர கண்காட்சி !
400 அரிய வகை நாணயங்கள் காணவாய்ப்பு !
இந்தச் செய்தியைப் படித்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன
நாணயங்கள் காலத்துக்கு காலம் மாறுபடுகிறது
நாணயங்கள் என்றதும் என்னுடைய சிறு வயது நினைவுக்கு வருகிறது
என்னுடைய சிறு வயதில்
ஒரு ரூபாய்க்கு 16 அணா
ஒரு அணாவுக்கு இரண்டு அரையணா
ஒரு அரையணாவுக்கு இரண்டு காலணா
ஒரு அணாவுக்கு நாலு காலணா
அந்தக் காலணாவில் ஒட்டைக் காலணா உண்டு,
ஓட்டை இல்லாத காலணாவும் உண்டு
ஒரு காலணாவுக்கு மூன்று தம்பிடிகள்
ஆக ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள்
அதே போல ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தின் அளவில் பாதி அளவு இருக்கும், அப்போதெல்லாம் உணவு விடுதிகள் சென்னை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் இருக்கும் ,அதற்கு தண்ணீர்ப் பந்தல் என்றும் பெயரிட்டு இருப்பார்கள்,அந்த உணவு விடுதியில் சென்று மணக்க மணக்க இருக்கும் சுவையான உணவு வகைகளை உண்ண ஆரம்பித்தால் ,உண்ண உண்ண கணக்கு தெரியாமல், வயிறு நிறைந்தாலும்,மீண்டும் உண்ணத் தோன்றும், வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு எவ்வளவு ஆயிற்று என்று கணக்கு கேட்டால் நாம் என்னென்ன சாப்பிட்டோம் என்று
மனக்கணக்கு போட்டே சொல்வார்கள், அவ்வளவு சாப்பிட்டும் ஒண்ணரை அணா என்பார்கள் ,அது ஒரு பொற்காலம் ,சுவையிலும் சரி, பணத்தின் மதிப்பிலும் சரி அது உண்மையாகவே ஒரு பொற்காலம்தான்,
உட்காருவதற்கு ஒரு நீளமான மர பென்ச் போட்டிருப்பார்கள்,
வைத்துக்கொண்டு உண்ணவும் ஒரு நீளமான பென்ச் போட்டிருப்பார்கள்
மந்தாரை இலையில் வைத்து உண்ணக் கொடுப்பார்கள்,
எனக்கு வயது 60 க்கு மேல் ஆகிறது, இன்னமும் அந்தச் சுவை நாவை விட்டு அகலவில்லை,
சமீபமாக கேரள மாநிலத்தில் இருக்கும் வர்க்கலா என்னும்
ஷேத்திரத்துக்கு சென்றிருந்தோம், அங்கே வர்க்கலா என்னும்
அந்தக் கடற்கரை மிகவும் அருமையாக இருக்கிறது,
அந்தக் கடற்கரையில் வெளி நாட்டவர் அனேகம் பேர் வருகிறார்கள்,அருமையான சுற்றுலாத்தலம் அது
அங்கே நம்முடைய கிங் ஜார்ஜ் உருவம் பொறித்த பெரிய ஒரு ரூபாய்,
விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த வெள்ளியினாலான ஒரு ரூபாய், காலணா, ஓட்டைக் காலணா, தட்டைக் காலணா, அரையணா,
மஞ்சள் அரையணா , மற்றும் பித்தளையில் செய்த தாமரைப் பூ உருவம் பொறித்த 20 பைசா போன்றவைகளை ஒரு பெரிய தட்டில் பரப்பி வைத்து
விற்றுக்கொண்டிருந்தார் ,
அவைகளை மிகவும் ஆர்வமாக வெளிநாட்டினர் வாங்கிச் செல்கின்றனர்
அந்த வெளி நாட்டவரிடம் நம்முடைய ஆட்கள் தட்டைக் காலணா, தற்போதைய முன்னூறு ரூபாய்,விலைக்கு விற்கிறார்,
ஓட்டைக் காலணா நானூறு ரூபாய், மற்ற நாணயங்கள் அவர்கள் மனதில் எவ்வளவு,தோன்றுகிறதோ அந்த தொகையை சொல்கிறார்கள், வெளிநாட்டவரும் மிக ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்
ஒரு காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய்
நாணயம், 50 பைசா நாணயம்,25 பைசா நாணயம் 20 பைசா நாணயம், 10 பைசா
நாணயம், 5 பைசா நாணயம் என்று உரு மாறிற்று,
அதில் குறிப்பாக 20 பைசா நாணயங்களின் புழக்கம் திடீரென்று
முடங்கியது,கிடைக்காமல் போயிற்று என்ன காரணம் என்று ஆராய்ந்தால்
அந்த தாமரை உருவம் பொறித்த 20 பைசா நாணயத்தில் தாமரை உருவம்
பதித்திருந்ததால் சேமித்து வைத்து, இறைவனுக்கு சொர்ண புஷ்பம் என்று சொல்லி அந்த 20 பைசா (108)நாணயங்களை, அர்ச்சனை செய்ய உபயோகித்தார்கள், அது மட்டுமல்ல, மற்றும் அந்த 20 பைசா நாணயங்களை மோதிரம் செய்து விரலில் மாட்டிக்கொள்ளுதல் அந்தக் காலத்து நாகரீகமாக இருந்தது, அதையும் தாண்டி பித்தளையில் செய்த அந்த 20 பைசா நாணயங்களை சேர்த்து வைத்து பாத்திரக்கடையில் போட்டு, அண்டான், குண்டான், போன்றவைகளை செய்து வாங்கி வீட்டில்
வைப்பர், இது போன்ற காரணங்களால் அந்த 20 பைசா நாணயங்களுக்கு மதிப்பு அதிகமானது, தட்டுப் பாடு ஏற்பட்டது
கலிகாலம் என்பதற்கு இதை விட சாட்சியங்கள் வேண்டுமா என்றும் தோன்றியது
கேரள மாநிலத்தில் இருக்கும் அந்த வர்க்கலாஎன்னும் ஷேத்திரத்தில்கோயிலில் உள்ள விக்ரகம் பிராமணர்கள் ஆசமனம் செய்வது போல வடிக்கப் பட்டிருக்கும் அந்தப் பெருமானின் கைகள் ஆசமனம் செய்வது போல கையில் தண்ணீரை வைத்து வாயருகே வைத்து ஆசமனம் செய்வது போல இருக்கும் ,அந்த கை காலத்துக்கு காலம், அருகே தானாகவே நெருங்கிக் கொண்டே இருக்கிறது, எப்போது அந்தக் கை வாயின் மிக அருகே சென்று ஆசமனம் செய்ய முடியும் அளவுக்கு நெருங்குகிறதோ அப்போது
இந்த உலகத்தில் ப்ரளயம் வரும் ,ப்ரபஞ்சம் அழியும் என்பது பலருடைய
நம்பிக்கையான ஐதீகம்,
நாணயம் இப்போதெல்லாம் ஏமாற்றப் பயன்படுகிறது
நாணயமான மனிதர்களைப் பார்ப்பதும் அறிதாகி வருகிறது
நாணயம் சிலரின் நா - நயத்தினால் கவரப்பட்டு
அனைவரையும் ஏமாற்றுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ![]()
Posted by
Thamizth Thenee
at
8:31 PM
2
comments
Links to this post
Saturday, September 5, 2009
ஆசிரியர் தினமான இன்று
ஆசிரியர் தினமான இன்று
1. பசித்தால் அழவேண்டும், அழுதால்தான் பால் கிடைக்கும்உழைத்தால்தான் பலன் கிடைக்கும்அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று உணர்த்தி,
அதன் பிறகு நான் சிணுங்கினாலே என் பசியறிந்து எனக்கு
அமுதம் உட்டி என் உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும்
உயிரும் , சக்தியும், அறிவும் ஊட்டி வளர்த்த
என் முதல் ஆசிரியையான என்
தாய் என்கிற முதல் குருவுக்கும்
2.என் அறிவுக்கண்ணைத் திறக்க நான் கற்க ஆரம்பித்த முதல்
நாள் , என் கையைப் பிடித்து பரப்பிய நெல் பரப்பில்
என்னை ஓம் என்று எழுத வைத்த என் தகப்பன், என்கிற
இரண்டாம் குருவுக்கும்
3. பள்ளியில் சேர்த்ததுவிட்டு சென்ற அன்னையையும்
அப்பனையும் நினைத்து பிரிவுத்துயர் தாங்காது , புதிய இடம்
புதிய நபர்கள், கண்டு மிரண்டு போய் அழ ஆரம்பித்த
என்னை , முதன் முதலாய் ஒரு தாய்மை உணர்வோடு
அழக்கூடாது, அம்மா ,அப்பா இருவருமே இங்கேதான்
வெளியே இருக்கிறார்கள். என்று எனக்கு ஆறுதல் சொல்லி
"அழ அழச் சொல்லுவர் தமர்" என்னும் முது மொழிக்கேற்ப
என்னை மடியிலே உட்காரவைத்துக்கொண்டு என்னைப்
போன்ற குழந்தைகளைக் காட்டி , அவர்களைப் போலவே
நானும் அழாமல் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என்று
உணர்த்தி, எனக்கு பலூன், பொம்மைகள், இனிப்பு எல்லாம்
கொடுத்துகையைப் பிடித்து கல்வியை எனக்குள்ளே இனிய
விருந்தாக உள்ளேற்ற ஆரம்பித்த அந்த ஆசிரியை
ஆகிய மூன்றாம் குருவுக்கும்,
அதன் பிறகு என் கூடவே இருந்து ஒவ்வொருகணமும்
எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்த என் வகுப்புத்
தோழர்கள் என்கின்ற குருமார்களுக்கும்,,
சற்றே வளர்ந்த நிலையில் நான் செய்த குறும்புகளுக்கு என்
காதைப் பிடித்து திருகி , காய்ச்சல் வந்தால் மருந்து கொடுத்து
குணப்படுத்தும் வைத்தியர் போல என்னை மிகச் சரியான
பாதையில் திசை திருப்பி என்னை முன்னுக்குக் கொண்டு
வந்த அத்துணை ஆசிரியர்களுக்கும்
அதன் பிறகு இன்று வரை, இன்னும் நான் இருக்கும் காலம்
வரை எனக்கு, ஒவ்வொரு அனுபவத்திலும் ஞான குருவாக
இருந்து வழிகாட்டிய, மற்றும் வழி காட்ட இருக்கிற
அத்துணை குருமார்களுக்கும் , ஆசிரியைகளுக்கும்,
ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினமான இன்றைக்கும் இனி
வரும் எல்லாக் காலங்களிலும் என் நன்றி கலந்த , பக்தி
கலந்த குரு வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்
அன்புடன்தமிழ்த்தேனீ![]()
Posted by
Thamizth Thenee
at
4:47 PM
1 comments
Links to this post


