திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, October 26, 2007

யூனிகோட் இணையக் கவிதைகள்

1. " கவிதை உறவு "

உடன்பாடு இல்லாமல் திணிப்பது
என் உணர்வுக்கு ஒத்து வராது
தினந்தோறும் அனுபவிக்கும் எல்லாமே
தினமும் ஒரு கவிதை தானே
தினம் ஒரு கவிதை படைக்கும்
நிர்பந்தம் எனக்கில்லை .... வலுக்கட்டாயமாக
என் மனத்தினுள்ளும் எதையும்
நான் திணிப்பதும் இல்லை, மற்றவரை
அனுமதிப்பதும் இல்லை வலுக்கட்டாயத்
திணிப்பில் எனக்கு சம்மதமும் இல்லை
கற்பனை சிறகடித்தாலும் கவிதையில்
வார்த்தைகளை திணிப்பதில்ல நான்
ஒரு கவிதை அனுபவித்துப் படிக்கிறேன்,
ஆஹா அருமையான கவிதை
படைத்தவரைப் பாராட்ட மனம் துடிக்கிறது...
ஆமாம் நானும் ஏன் கவிதை எழுதக் கூடாது....?

தமிழ்த்தேனீ

2 ." நிழல் துரத்தும் நிஜங்கள் “
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமாம் ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடிய பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்


ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?

மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே

நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம் பால்மடி
வற்றிப் போனால் அடிமாடென்போம்

நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்

இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்

தமிழ்த்தேனீ

3. " உரிமை "

பகலில் ஒரு நிலவு இரவில் ஒரு சூரியன்
இரண்டும் இணைந்தாற்போல்ஒரு
ப்ரகாசமான பேரழகுஅழகு கண்டு
மோகித்துஅருகில் வரலாமென்ரால்
சுடுகிறாய் சூரியனைப் போல
சுடுகிறதே என்று விலகினால்
குளிர் நிலவாய் அழைக்கிறாய்
புரிந்து கொள்ள முடியவில்லை
என்னால்அன்பிலே நிலவு ,
உரிமையில்லாமல் உறவாட நினைத்தால்
சூரியன்என்று ஒரு பதில் வேறு
சொல்கிறாய்ஏதோ புறிவது போல்
இருக்கிறதுஎன்ன செய்வது ஆமாம்
சாத்திரத்தில் நிலவும் சூரியனும்
இணைந்தால்அமாவாசை என்கிறார்களே
நிலவில்லா வானம் என்கிறார்களே
நீ யாரென்று சொல்ல மாட்டாயா
உன்னிடம் உரிமை எப்படி பெருவது..?
ரகசியம் சொல்லித் தர மாட்டாயா
ஏக்கத்துடன் நான்.............

4. " இயற்கை "

ஒன்பது வழிகள் வைத்தான்
உடல்விட்டு உயிர் போக‌

ஒரு வழியும் வைக்கவில்லை
உயிர் வந்து உடல் சேர‌

இறைவனிடம் நான் கேட்டேன்
இது என்ன ஓர வஞ்ஞனை ?

அவனளித்தான் பல பதில்கள்
அத்தனையும் புரியவில்லை

ஆனாலும் ஒரு பதில்
ஓரளவு புரிந்ததெனக்கு

ரகசியமாய் முணுமுணுத்தான்
என் காதில் மட்டுமதை

இயற்கையின் சாகசமே
அதிலிடங்கும் அதிசயமே
இயற்கையை வெற்றி கொள்ள
என்னாலும் முடியவில்லை
இயற்கைதான் கடவுள் ,
நான் கூட அதன் பிடியில்
தவிக்கிறேன் மீளாமல்
சொன்னால் நம்ப மாட்டாய்
ஒரே ஒரு முறை விதைத்தேன்
ப்ரபஞ்ஜம் வளர்ந்த்தது

பல முறை அழித்துப் பார்த்தேன்
உஹூம் ஒன்றுமே பலனில்லை
இனி இப் ப்ரபஞ்ஜம் நானே
நினைத்தாலும் அழிக்க முடியாது ,
இயற்கையை வெல்ல என்னாலும்
முடியவில்லை !!!!!!!
நீ கேட்ட கேள்விக்கு விடை
தெரியுமா உனக்கு ?
கேள்விகள் கேட்பது சுலபம்
உயிர் வந்து உடல் சேர ,
இயற்கையை வெற்றி கொள்ள‌
வழி எதேனும் இருக்கிறதா ?
என்னைக் கேட்டான் இறைவன்
என்ன ப‌தில் நான் சொல்ல‌ ?

உங்க‌ளுக்கு தெரிந்தால்
ரகசியமாய் என்னிட‌ம்
சொல்லுங்க‌ள்
அவனிடம் சொல்லுகிறேன் நான் .. .. ...!!!!!!!!

தமிழ்த்தேனீ

5. " வாய்மை "
த‌ண்ணீரில் நீந்தும் மீனின் க‌ண்ணீரும் தெரியாது
வென்னீரில் வேகும் போதும் வ‌லிக‌ளும் புரியாது
சிறு மீனின் துய‌ர‌ங்க‌ள் பெரு மீனும் அறியாது
இற‌ந்தாலும் அவை த‌ன்னைத் தானுண்ண‌த் த‌ய‌ங்காது

இய‌ற்கைதான் ஆனாலும் பெருமீனும் ஒரு நாளில்
வ‌லை மாட்டித் த‌வித்தாடும் நாமுண்ணும் உண‌வாகும்
பன்னீரில் குளித்தாலும், க‌ங்கையில் குளித்தாலும்
செய்கின்ற‌ த்ரோக‌த்தின் பாவ‌ங்க‌ள் தொலையாது

என்னென்ன‌ ப‌ரிகார‌ம் எத்த‌னைதான் செய்தாலும்
எங்கேதான் போனாலும் ஊள்ள‌த்தை விட்டு விட்டு
நினைவுக‌ள் போகாது, உயிரேதான் போனாலும்
த‌ப்பிக்க‌ முடியாது உட‌ல் விட்டுச் சென்றாலும்

உள்ள‌த்தை விட்டுச் செல்ல‌ உன்னாலும் முடியாது
பாவ‌ங்க‌ள் தொலையாம‌ல் ஆன்மாவும் அழியாது
வைக்கின்ற‌ ஒவ்வொரு அடியும் யோசித்து வையுங்க‌ள்
வ‌ருகின்ற‌ ப‌ல‌னெல்லாம் அடி தொட்டுத் தான் வ‌ருமே

ப‌ல‌னெல்லாம் ப‌ட்ட‌ பின்தான் ப‌ரிகார‌ம் தான் வ‌ருமே
த‌ப்பிக்க‌ முடியாது தள்ள‌வும் வ‌ழியேது
இத்துணைப் பேர்க‌ளையும் காக்கின்ற‌ ஒரு க‌ட‌வுள்
யோசித்து யோசித்து வழி ஒன்று கண்டிட்டான்

தன் வேலைச் சுமை தாங்க முடியாமல் ‍
‍தானாக இயங்கும் பொறி ஒன்று படைத்திட்டான்
அத்தனை உயிர்களுக்கும் அவரறியாம்ல் அவர் உடலில்
தானியங்கிக் கருவியதை தவராமல் பொருத்திட்டான்


இட்டார்க்கு இட்டபடி தப்பாக வைத்த அடி
தவரான தப்படிகள் தவராமல் கெடு பலன் தருமே
நாடாளும் மன்னர்களும் நடைபாதை வாசிகளும்
அவ‌ன் வரையில் ச‌ம‌ம் தானே அவ‌ன் ப‌டைத்த‌ உயிர்தானே

ஆயிர‌ம் தான் இருந்தாலும் த‌ர்ம‌ வ‌ழி அக‌லாமல் ந‌ட‌ந்திடுவோம்
கால‌ங்க‌ள் மாறிவிடும் ,காட்சிக‌ள் மாறிவிடும் மாறாது என்றென்றும்
த‌ர்ம‌த்தின் வ‌ழிதானே,நாம் க‌ர்வ‌ங்க‌ள் கொண்டாலும்
க‌டைசியிலேவெல்வ‌து வாய்மையின் வ‌ழிதானே

தமிழ்த்தேனீ
6. " ஏன் இப்படி "

திருமணம் ஆன புதிது, இணை பிரியாத மனது
உன் பெயர் சொல்லி என் அம்மா அழைத்தவுடன்
ஒன்றுமே நடவாதது போல்அனைத்தையும்
சரி செய்து கொண்டுகுரலில் ஒரு எளிமையை
வரவழைத்துக் கொண்டு இதோ வந்துவிட்டேன்
அம்மா என்று வெகு இயல்பாக அம்மாவிடம்
சென்று ,கூப்பிடீர்களா அம்மா ? .......சரியான கள்ளி நீ
எத்தனை முக்கியமாய் இருந்தாலும்
ஒன்றுமில்லை நீ அவனைக் கவனி
என்று உன்னை மீண்டும் அறைக்கு
அனுப்பிவிட்டுமுகத்தில் புன்னகையோடு
தன் காரியத்தை தொடர்வாள் என் அம்மா,
நம் வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறாள்
நம் அம்மாவும், அவளுக்குத் தெரியாததா..?
அம்மா எத்தனை அனுபசாலி,
அன்பான அம்மாகொடுத்து வைத்தவர்கள்
நாம் என்று நீ விமர்சிக்கும் போது கூட
அதைவிட முக்கியமாய் உன் அருகாமை
என்னை மூழ்கடித்தது மோகம்
திருமணம் ஆன புதிது
இணை பிரியாத மனது
மருமகளாய் நினைக்காமல் தன் மகளாய்
அம்மா உன்னை நடத்துகையில்
நானே அம்மாவுக்குஅன்னியப் பட்டுப் போனேன்,
சில நேரங்களில்என்னையே பொறாமைப் பட
வைத்தது உங்கள் அன்னியோன்னியம்
கண்களில் காதலைத் தேக்கி சீக்கிரம்
வந்துவிடுங்கள் என்கிற அழைப்பையும்
அதில்தேக்கி புன்சிரிப்போடு நீ கை அசைக்கையில்
பணிக்கு செல்லக் கூட மனம் வருவது இல்லை
மனமில்லாமல் பணிக்குச் சென்றாலும்
அத்தனை பக்கங்களிலும் உன் முகம்
எப்படி வேலை செய்வேன் நான்
அறை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு
அம்மாவிடம் என்ன காரணம் சொல்லுவது
என்று யோசித்துக் கொண்டே வீடு வந்தவுடன் ,
என்னடா கண்ணா தலை வலியா என்று
அம்மா கேட்டவுடன்--,ஆ...ஆமாம் தலை வலி
என்று சமாளித்தேன், நமட்டுச் சிரிப்புடன் நீ!!!
ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல்
பரிசு வாங்கிய நான்,உள்ளுக்குளே மனசாட்சி உறுத்தல்,
திருமணம் ஆன புதிது, இணை பிரியாத மனது
நாட்டு மருந்துக் கடையில் வாங்கி வைத்திருந்த
சுக்கை எடுத்து கல்லில் உரசிபத்து போட்டாள் அம்மா,
ஒரு நல்ல காபி கொடுத்தனுப்பினாள்
உன்னிடம் என்னையே பார்த்துக் கொண்டிருந்த
அம்மா கண்ணா அவளயும் அழைத்துக்
கொண்டு எங்காவது வெளியே போய்விட்டு வா
எல்லாம் சரியாகி விடும் கவனமாகப் போய்விட்டு
வாருங்கள்என்று அம்மா சொன்னவுடன்
சரிம்மா என்று அப்பாவியாய் முகம் காட்டி
இருவரும் புறப்பட்டோம் வெளியே
திருமணம் ஆன புதிது, இணை பிரியாத மனது
அம்மா எத்தனை அனுபசாலி,
அன்பான அம்மாகொடுத்து வைத்தவர்கள் நாம்
என்று நீ விமர்சிக்கும் போது
கூட அதைவிட முக்கியமாய் உன் அருகாமை
என்னை மூழ்கடித்தது மோகத்தில்
திருமணம் ஆன புதிது இணை பிரியாத மனது
சிலு சிலுவென்ற காத்து மீண்டும் மீண்டும்
வந்து போகும் கடலலைகடலை விற்பவன்
தொந்தரவு இத்தனையும் நம்மை எதுவுமே
செய்ய முடியாமல் கனவுலகில் நாம்
வாசலில் ஒரு அழைப்பு மணீ
ஒரு நல்ல தூக்கம் கலைந்த எரிச்சலில்
யாரது என்று கேட்டுக் கொண்டேவாசற்கதவைத்
திறந்தேன்என் பேரு கல்யாணம்
இவ என் பொண்ணுநேத்து கோயிலில்
எங்களை பார்த்து அம்மா இன்னிக்கு
வரச்சொன்னாங்க என்றார் உன் அப்பா
கண்ணா அவங்களை வலது காலெடுத்துவைத்து
உள்ளே வரச் சொல்லு என்றாள்என் அம்மா...!!!!
உனக்குத் தெரியுமா !!!!!அம்மாவுக்கும் தெரியுமா ,!!!!
என் கனவுக் கன்னி நீதானென்று!!!!.?
நம் வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறாள்
என் அம்மாவும், அவளுக்குத் தெரியாததா..?
தமிழ்த்தேனீ
7. " நிழலின் வெளிச்சம் '
ஒரு பெரிய நிறுவனம் பெரிய மூலதனம்
முதலாய்ப் போட்டு திரைப்படமெடுக்க
திட்டமிட்டு என்னை அழைத்து
ஒப்பந்தம் செய்தது ஒரு நடிகராகப்
பங்கு கொள்ள- நானும் இசைந்தேன்
நடித்துக் கொடுக்க ,என் தொழிலல்லவா அது
ஒப்பனையாளர் என்னை உரு மாற்றினார்
ஆடைகள் கொடுப்பவர் மேலும் பொருத்தினார்
என்னை அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவனாக
உணவு உபசரிப்பாளர்கள் ஆதரவாய்
உணவு கொடுத்தனர்
உதவி இயக்குனர் என் பாத்திரத் தன்மையை
மேலும் கூட்டினார் எளிதாக பொறுமையுடன்
இயக்குனர் சொன்ன இடத்தில் நின்றேன்
சொல்லிக் கொடுத்தபடி பேசி, நடித்தேன்
தளப் பொறுப்பாளர் காட்சி ஜோடனைக்
கற்பனைத் தூரிகை கைவண்ணம் காட்டினார்
புகைப் பட நிபுணர் என்னை மேலும்
திறமை சாலியாக காண்பித்தார்
எழுத்தாளர் என் கதா பாத்திரத்துக்கு
ஏற்ற வசனங்களை இயல்பாக எழுதினார்
ஒரு பெருங் கவிஞ்ஞர் பாடலெழுதினார்
பல குரல் வளம் பாடியது ,நான் வாயசைத்தேன்
பல பொறியாளர்கள் பாடு பட்டனர்
திரைப் படம் வெற்றி பெற

அடடா என்னை சுற்றி எத்தனை பேர்
முத்தான வியர்வை கொட்ட உழைக்கிறார்கள்
அவர்கள் வெளியே தெரிவதே இல்லை
அத்தனை பேரும்-புகைப் படக் கருவிக்குப்
பின்னால்என் வெளிச்சத்தின் பின்னே
இத்தனைஇருட்டுக்களா, த்யாகங்களா
நான் மட்டும் மக்கள் மனதில்,விளம்பர
தட்டிகளில்,பத்திரிகைகளில்
தொலைக் காட்சிகளில் ,மக்கள் மனதில் ,
வீடுகளில் , அனுமதி இல்லாமல் நுழைந்த
வலுக் கட்டாய சூரியன் நான்
ப்ரகாசிக்காத எத்தனயோ நக்ஷத்திரங்கள்
என் பின்னால்,தங்கள் த்யாகங்கள் புரியாமல்
என் ப்ரகாசத்தின் பின்னே இத்தனைஇருட்டுக்களா ?

தமிழ்த்தேனீ

8. "வான வேடிக்கை "

தேவ லோகத்திலிருந்து தேவர்கள்
வேடிக்கை பார்க்க பூலோகம் வந்தனர்
பூமியிலே
பாலத்திலிருந்து ஒரு வாகனம்
ஆற்றில் விழுந்தது
கபடமறியா சிறுமியை ஏமாற்றி
கற்பழித்தனர் நால்வர்

குடிசைக‌ள் ப‌ற்றி எறிகின்ற‌ன‌,
வெள்ள‌த்தில் ப‌ல‌பேர் அடித்துச் செல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்
வித்தைக் கூடம் பணப் பற்றாக் குறையால்
மூடப் பட்டது
வேடிக்கை காட்டிப் பிழைக்கும் கோமாளி
பசியால் சுருண்டு கிடக்கிறான்
ஆளில்லா போக்குவரத்தில் அலட்சியத்தால்
பேருந்தும் புகை வண்டியும் மோதிக் கொண்டன‌

மக்கள் வேடிக்கை பார்த்தனர்
துவிச் சக்கர விசை வாக‌ன‌த்திலிருந்து
தூக்கி எறியப்பட்டான் ஒருவன்
முதலுதவி தேவை அவனுக்கு
செய்தால் பிழைத்துக் கொள்ளுவான்
குருதி ஆறாய்ப் பெருகியது
மக்கள் வேடிக்கை பார்த்தனர்

தேவ‌ர்க‌ள் ம‌ன‌ம் ப‌தைத்த‌ன‌ர்
தேவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் விப‌த்துக் குள்ளான‌வ‌னை
ம‌டியிலே கிட‌த்தி முத‌ல் உத‌வி செய்தான்
காவ‌ல் கார‌ர்க‌ள் வ‌ந்த‌ன‌ர் உத‌வி
செய்த‌தேவ‌னை காவ‌ல் நிலைய‌த்துக்கு
வ‌ந்து புகார் எழுதிக் கொடுத்துவிட்டுப்
போக‌ச் சொல்லி காவ‌ல் நிலைய‌த்துக்கு
அழைத்துப் போனார்க‌ள்
வெகு நேரமாகியும் புகார் கொடுக்கப் போன
தேவன் திரும்பி வரவில்லை
தேவ‌ர்க‌ள் தேடிப் பார்த்துவிட்டு
காணாம‌ல் ம‌ன‌ம் ப‌தைத்த‌ன‌ர்

காவ‌ல் நிலைய‌த்தில் புகார் ப‌திவு செய்த‌ன‌ர்
காவ‌ல் நிலைய‌த்துக்கு சென்ற‌அந்த‌
தேவ‌ன் இது வ‌ரை திரும்ப‌வில்ல‌யாம்
யாராவ‌து வேடிக்கை பார்க்கும் போது
அவ‌னைப் பார்த்தால்
விவ‌ர‌ம் சொல்ல‌வும்
த‌குந்த‌ச‌ன்மான‌ம் கிடைக்கும்
தேவ‌ர்க‌ள் காத்திருக்கிறார்க‌ள் ம‌க்க‌ள்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்க‌ள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

9... " மீண்டும் சுதந்திரம் "
பழைய ஞாபகம் மனதிலே
பாரதத் தேசக் கொடி கையிலே
வீர முழக்கம் வாயிலே
விடுதலை வேட்கை நெஞ்ஜிலே
வாருங்கள் மறியல் செய்து
மனம் மகிழ்ந்திட வாருங்கள்
வந்தே மாதரம்,
வீசட்டும் விடுதலை காற்றின்
சுதந்திர வாசம்
வீழட்டும் அன்னியர் மோசம்
மலரட்டும் விடுதலை தேசம்

கதிரவனின் கதிர் இயக்கம் தாக்கும்
ஆனாலும் இந்தியனின் கதர் இயக்கம் வீசும்
வரண்ட நாக்கு, வரளாத தேசப் பற்று
சுதந்திர வேள்வி, சுதந்திரமே கேள்வி
ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை அவன் கூட
பொதுச் சொத்தாய் மாறிப் போனான்
பாரதத் தாயின் அடிமைத் தளை தெறிக்க

அன்னையை பாதிக்கும் அன்னியர் ஆதிக்கம்
தாய் திரு நாட்டின் பொறுமையை சோதிக்கும்
அத்தனை விலங்கினையும் அடியோடு
பெயர்த்தழிக்க உடல் ,பொருள் ,ஆவி
அத்தனையும் போனாலும் சரியென்று
பாச மழை பொழிந்து தேச விடுதலைக்கு
நேசசமாய் ,வீரமாய்,த்யாகமாய்
தம் மக்களை அனுப்பிவைத்த தாய்மார்கள்
இப்போதெங்கு போனார்கள்
தன்னுயிர் நீத்தும் தாய் நாடு
காப்பேன் சூளுரைத்த வாலிபர்கள்
இப்போதெங்கு போனார்கள்
தாய் நாட்டுக் காதல் அப்போது
எங்கே போனது இப்போது.. ?
அன்று அன்னியர்தாம் ஆண்டுவந்தார்
அடிமைகளாய் நாம் மாண்டு வந்தோம்
இன்று நம்மவரே நம்மை ஆளுகின்றார்
அடிமைகளாய் நாம் மாளுகிறோம்
சுதந்திரம் கிடைத்ததே இப்போது
பழைய ஞாபகமாய்

அப்போது மீண்டோம் அன்னியரிடமிருந்து
எப்போது மீள்வோம் நம்மவரிடமிருந்து
ஹூம்ம்ம்... பெற்றே ஆக வேண்டும்
மீண்டும் சுதந்திரம்



10. நல் விதை

புறம் பற்றி ஒரு நூறு கவிதை
அகம் பற்றி ஒரு நூறு கவிதை
எதைப் பற்றியும் எழுதவும் வேண்டும் ......விதை
தாருங்கள் ஒரு நல் விதை
ஏருழுது களையெடுத்து, தமிழ் நீர் பாய்ச்சி
நல்விதை ஒன்று மன வயலில் போட்டால்
கவிதை தானாய் வரும் ,கவிதை யது தேனாய்
வரும் ,துள்ளும் மானாய் வரும்
தமிழ்ப் பற்றினால் தமிழ்ப்பற்று
பற்றிக் கொள்ளும் தகைசார்ந்த
தமிழ்ப் பண்பு அது ,நம் மனது ,
பற்றியது மிகச் சரியாகப்
பற்றினால் விளையும் கொள்முதலே
அனைத்துக்கும் விதை , அதுவே தமிழ் விதை

உள்ளதையும் உள்ளத்தையும்
இல் அதையும், இல்லாததையும்
சொல் அதையும் சொல்லாததையும்
கற்றதையும் ,கல்லாததையும்
சொன்னதையும் சொல்லாததையும்
எழுத முனைந்திட்டால் ,தமிழை நினைந்திட்டால்
கவிதை புனைந்திட்டால் ,புறம் நான் நூறு ,
அகம் நான் நூறு அத்தனையும் சொன்னாலும்
புற நானூறுக்கும் அக நானூறுக்கும்..?
தமிழுக்கும் ஈடாகுமா வேறு .. .. ..?

அன்புடன்
தமிழ்த்தேனீ

11. அணைக்கட்டு
அணைக்கட்டு மூளை அணைக் கட்டில் முழுவதுமாய்
நிரம்பி வெளியேறத்துடி துடிக்கும் கருத்து மழை
வான வெளியினிலே வலம் வரும் பேரறிவு பெய்திட்ட
பெரு மழையால்மூளை அணைக்கட்டில் முழுவதுமாய்
நிரம்பி வெளியேறத் துடி துடிக்கும் கருத்து மழை
இன்னுமோர் சொட்டு வீழ்ந்தாலு... ம்உடைத்துக்
கொள்ளும் பக்க சுவர்வெடித்து சிதறும்
கனம் மிக்கபக்க சுவர் மடை திறக்க
வழியில்லைஏற்கெனவே பெய்த மழைவெள்ளம்
நிரம்பிய ஊர்வெளியேற்றியே ஆகவேண்டிய
அபாய நிலை அணைக் கட்டில்
தானமளிக்க தயார் நானென்றாலும் தாங்குதற்கு
தகுதியான தருமிகளை தானம் வாங்தற்கு தகுதியான
தமிழ் விரும்பிகளை தேடித் தேடி அலைகின்றேன்
சீக்கிரம் வாருங்கள் அணைக்கட்டு
அடி அளவு கோல் காட்டுதிந்த பயங்கரத்தை
...அபாய அறிவிப்பை
அன்புடன்
தமிழ்த்தேனீ

சிறு கவிதைகள்

சிறு கவிதை



1. மஹான்கள்




யேசு அவதரித்தார்
அல்லாஹ் தோன்றினார்
காந்தி பிறந்தார்
மஹான்கள் அவதரித்தனர்
அவர்களை துன்புறுத்தவே
தீவிரவாதமும்
தோன்றியது
ஆதலினால் தீவிரவாதத்தை
அழிக்கவேண்டித் தானோ
இப்பொதெல்லாம்
மஹான்கள் அவதரிப்பதே இல்லை








3






. தினம் ஒரு கவிதை

தினம் தினம் ஒரு ஆரம்பம்
தினம் தினம் ஒரு கவிதை
அனுபவம் எனும் பாடம்
இதை விடக் கவிதை யாரால்
எழுத முடியும்
இறைவன் எழுதும் கவிதை
இது ப்ரபஞ்சத்தின் ஆரம்ப விதை
முடிவில்லா ஆரம்பம்
முற்றுப் புள்ளி இல்லா தொடர் கவிதை
முடிவில்லா வானம் போல்
முயன்றாலும் தொடமுடியாத
வெட்டவெளி இதுதான் ப்ரபஞ்சம்
இறைவன் எழுதும் கவிதை














5. அவதாரம்

நீ பார்த்து வளர்ந்தவன் தானே
நான் பார்க்க வளருவேன் நானே
வான் பார்த்து வளருவேன் நானே
கம்சன் கதை முடிக்க வான் பார்த்து
உயர்ந்த சக்தியவள் சூள் முடிக்கத்தானே
நான் பார்க்க வளருவேன் நானே


கூன் பார்க்க ராமாவதாரம் அதுவும் நானே
மான் பார்த்து மயங்கிய மங்கை அவளால்
ஊண் பார்த்து மயங்கிய
தென் இலங்கை கோன் முடிக்க
பிறந்தவன் தானே அதனால்
நான் பார்க்க வளருவேன் நானே
வான் பார்த்து வளருவேன் நானே















6 தைரியம்


காவல்காரன் தூங்காமல் காவல் செய்யும்
முதலாளி நான்
அரசாங்கம் தவறும் நேர்மை அவ்வப்போது
சுட்டிக் காட்டும் குடிமகன் நான்
அதிகாரியின் தவறு அதட்டிக் கேட்கும்
தொழிலாளி நான்
பூசாரி தவறும் நியமங்கள்
உணர்த்துகின்ற பக்தன் நான்
ஞானிகளின் வர்ண பேதம்
உணர்த்துகின்ற அடியவன் நான்
மேதைகளின் சருக்கல்கள்
கண்டுபிடிக்கும் பேதை நான்
என்னைத் தட்டிக் கேட்க
மறந்துவிட்ட நான் !!!!













காலச் சக்கரம்
7
8


காலச்சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
அதன் கோலம் வரையும்
கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா
ஞாலச் சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
வட்டச் சக்கரம் -இறைவன் விட்ட சக்கரம்
சக்கரத்தை சுழற்றிவிட முடியுமா
இறைவனையே கழற்றிவிட முடியுமா?
ஆரம்ப புள்ளி அறிந்துவிட்டால் போதுமே
முடிவுப் புள்ளி தெறிந்து போகுமே

புள்ளிகளை அறியத்தான் முடியுமா
அதன் பூதாகார வடிவம்தான் தெரியுமா
ஆன்ம யோகச்சக்கரம்
சுழலவைக்காமல் அன்றிஇயலுமா
இவையெல்லாம் நாம் உணர
முடியுமா?













. புரட்சி

அசை, புரளு, கவிழாதே, நிமிரு, இயங்கு,
இயக்கம் கொள், பேரியக்கம் கொள்,
பெரு மலை பிளக்கும், சிறு உளி நீ,
முடங்காதே, முயற்சி செய், செயல்படு,
துள்ளு, துடி, துயில்நீக்கு ,விழி, எழு,
போரிடு , தலையை நிமிர்த்து,
புறப்படு ,சாதிக்க வேண்டியது நிறைய
இருக்கு ,கருவரை உன் கல்லரையல்ல,
முழங்கிப் புறப்படு , தடைகளை தகர்த்து
இயக்கம் கொள், அப்போதுதான்
நீ கருவரையிலிருந்தே வெளிவர முடியும்.!


9. நாயகன்

மணக்கும் சந்தனம்,மயக்கும் பூவாசம்,
சொந்தம் எல்லாம் சந்தோஷம்,ஆசீர்வாதம்
குழந்தைகளின் குதூகலம்,குளிர் பானம்,
நண்பர்களின் கும்மாளம் நாதஸ்வரம்
மங்கள வாத்யம், மலர்கள் அலங்கரித்த
மணமேடை,வாழைமரம், வாண்டுகள் அட்டகாசம்,
ஜாதகத்தில் அதிசயமாய் பத்துப் பொருத்தம்
மந்திரகோஷம் மனதெங்கும் உல்லாசம்
அள்ளித் தெளித்த,அட்ஷதையும்,
மலர் மாரியும்,
அத்தனை நடுவிலே நாயகனாய் நானிருக்க
அவள் பார்வை....... அடுத்தவன் மேல் ???




10. கனவு

கவிதைகள் படைக்கிறேன் ப்ரசுரிக்க யாருமில்லை
கண்டுபிடிப்புகள் கழ்த்துகிறேன் அங்கீகரிக்க நாதி இல்லை
ஓவியங்கள் எழுதுகிறேன் வாங்க ஆட்களில்லை
சிற்பம் வடிக்கிறேன் கர்பக் க்ரஹம் கிடைக்கவில்லை

நடிப்பு நாட்டியம் பாட்டு தெரியும்
அரங்கேற்ற யாருமில்லை
உதவி செய்கிறேன் நன்றி சொல்ல யாருமில்லை
கர்பமாயிருக்கிறேன் கழுத்திலே தாலியில்லை
காலையில் விழித்துப் பார்த்தேன்
எல்லாம் எதிர்மறையாய்.......
யாரோ பெண் பார்க்க வருகிரார்களாம்

13. சந்தேகம்

குயிலின் கூவலில் ஒரு சோகம் கிளியின் அழைப்பில்
ஒரு மருகல்
புறாவின் குரலில் ஒரு குமுறல் ,மைனாவின் குரலில் ஒரு பயம்
மயிலின் அகவலில் ஒரு துக்கம், ஆந்தையின் அலறலில்
ஒரு கடூரம்
கழுகின் குரலில் ஒரு கொடூரம் ,கோழியின் கூவலில்
ஒரு எதிர்பார்ப்பு
பருந்தின் குரலில் ஒரு பரிதவிப்பு
ஆனால் இந்த சிட்டுக் குருவியின்
கிசுகிசுப்பில் மட்டும் !!!!
ஆனந்தம்,குதூகலம்,!!!!!!
இப்படிஎல்லாம் எனக்கு மட்டும்தான்
தோன்றுகிறதா !! ? அல்லது
உங்களுக்குமா!!!!!!!!!! ?






14. சிவப்பு

ஹோமாக்னி வளர்க்க வேண்டியவர்கள்
காமாக்னி வளர்க்கிறார்கள்
பால்ய ஸ்னேகிதர்கள்
பாலியல் ஸ்னேகிதர்களாகின்றனர்
வித்தைகள் விபசாரம் செய்கிறது
குழந்தைகள் குரூரமாய் விட்டன
அழகு நிலயங்கள் ஆபத்தாகிவிட்டன

மரம் செடி கொடி மிருகங்கள் இயல்பு நிலை
கெடாமல்
மனிதம் மட்டும் ஏன் இப்படி சிவப்பாய் ?


11. த்ருப்தி

பிறந்து மூன்று஖ மாதம் ஆகிறது
முகம் பார்த்து சிரிக்கிறேனாம் நான்
பல குரல் காதிலே கேட்குது
நான் மாமா டா என்னை பார்
நான் அத்தை டா என்னை பார்
நான் சித்தி டா என்னை பார்
நான் பெரியப்பாடா என்னை பார்
அடாடா யாரை திருப்தி படுத்த
இவர்களீடம் எப்படி காலம் தள்ளூவது
கண்ணை மூடிக்கொண்டேன்.









15. சுமை

மணப்பெண் கோலத்தில் என் மகள்
என் மடியில்
மாப்பிள்ளை மஹா விஷ்ணுவின் அம்சமாம்
திருமாங்கல்ய தாரணம் செய்து
கன்னிகா தானம் செய்ய வேண்டும்

அப்பப்பா என் மகள் இவ்வளவு கனமா?

மாங்கல்ய தாரணம் முடிந்தது மங்கள
வாத்யம் முழங்க என் மகள்
மஹாலக்ஷ்மி ஆனாள்
இப் போது என் மகள் கனமாக தெரியவில்லை

16. புயல்

வெற்றிடம் நோக்கி தான் எல்லா காற்றும்
போகின்றன அதுதான் புயல்

நம்மை வெற்றிடமாக ஆக்குவோம்
எல்லோரும் நம்மை நோக்கி
வருவர்
நாம் நம்மை உணர்வோம்
பிறர் தானாகவே நம்மை
உணர்வார்கள்



17. ஞ்நானோதயம்


ஈக்களோடு ஈக்களாய் குப்பை தொட்டியில் வாசம்
ஒரு திடீர் ஞ்நானோதயம்
தேனீயாய் மாரி பூக்களோடு வாசம்
தமிழ்த் தேனீயய் மாரி தமிழ்ப் பூக்களோடு வாசம்
தமிழ்தான் என் ஸ்வாசம்




18. பஞ்ச பூதம்


நகர்ந்து நகர்ந்து நழுவிப் போகும்
மேகங்கள் தான் நாமெல்லாரும்
கூடியவரை உரசாமல் நகர்ந்து செல்வோம்,
இடிக்காமல் நழுவிச் செல்வோம்

உரசினாலும் இடித்தாலும் மழைதான்
கண்ணீர் மழை......................
படர்ந்து பரவி தவழ்ந்து செல்லும்
தென்றல் காற்று தான் நாமெல்லாரும்
கூடியவரை சீறாமல் தவழ்ந்து செல்வோம்
மீறாமல் அமைதி காப்போம்
சீறினாலும் மீறினாலும் புயல்தான்
துயரப் புயல்...................


19. சூரியன்

சூரியனை சிறைப்பிடிக்க முடியுமா?
அதைச் சுற்றிவர கூட நம்மால் முடியுமா?
சந்திரனின் ஒளி மறைக்க முடியுமா?
அதை ஈடுசெய்ய நம்மால் முடியுமா?
சூரியனும் சந்திரனும் மோதிக் கொள்ளலாமா?
அவை மோதிக் கொண்டால் நட்ஷத்திரம் ஒளிருமா?
அவை சேர்ந்துவிட்டால் நட்ஷத்திரம் பிழைக்குமா?










20. விடுமுறை


பள்ளியில் படித்த போதும்,
பணியில் இருந்த போதும்,
விடுமுறை எனும் வார்த்தை
செய்தது எத்தனையோ மாயம்

அதிகமாகனது விடுமுறை ஆசை,
ஆசை முற்றின நிலையில்
படிப்பும்,பணியும் போதும்,போதுமென்று
விருப்ப ஓய்வு கொண்டேன்
அதிகமானது விடுமுறை
ஆசையை விடும் முறை-
ஆசையும் விடுமுறையும்
போதும் போதும்!!!!!! விடுமுறை !
இப்போது தண்டனையாய்!!!!!

21. ஏன்..?

சமாதானப் புறாக்களூக்கு இடையே கூட
சண்டை உண்டு
பருந்துகளூக்கு இடையே கூட பாசம் உண்டு
கழுகுகளூக்கு இடையே கூட நேசம் உண்டு
புலிகளூக்கு இடையே கூட கருணை உண்டு
பாம்புகளூக்கு இடையே கூட இணக்கம் உண்டு
நரிகளூக்கு இடையே கூட ஞ்யாயம் உண்டு
நாய்களூக்கு இடையே கூட இரக்கம் உண்டு
இந்த மனிதர்களூக்கு இடையே மட்டும் ஏன்....???????

. நீதி

போலீஸ்காரர்களுக்கு அரசாங்கம் சம்பளம்
கொடுக்கிறது, அதனால் அரசாங்கம் முதலாளி
ஆனால் நாங்கள் தான் வேலை கொடுக்கிறோம்
அதனால் நாங்கள்தான் அவர்களுக்கு அதிகாரிகள்"
இப்படிக்கு குற்றவாளிகள்!!!!!!

அசை
துள்ளிக் குதித்து ஓடுவேனாம் நான்
குழந்தையாய் இருந்தபோது
வாலிபப் பருவத்தில் பார்த்தவர்
மேலெல்லாம் பாய்வேனாம்
இப்போது இயலாமல் உட்கார்ந்திருக்கிறேன்
எண்ணங்களையும் உணவையும்
அசை போட்டபடி
எல்லாரும் மாடு தானோ ?

தளை
தத்தித் தத்தித் தவழும் போது
அன்னையின் ஜாக்கிறதை உணர்வு
துள்ளிக் குதித்து ஓடும் வயதில்
பயம் என்னும் உணர்வு
வாழ்க்கையில் உயர நினைக்கும் போது
நேர்மை என்னும் உணர்வு
சுயநலமாய் வாழ்ந்த்துவிட்டுப்
போய்விடலாம் என்று முடிவுக்கு
வந்த போது அடுத்தவர்
வாழ்க்கை ஒரு பாடமாய்
என்னதான் செய்வது எல்லாமே
தாமதமாய் வந்த விழிப்புணர்வுகள்
எல்லாமே ஒரு தளை தான்

22. பேச்சுத் திறமை

எதைப் பற்றி வேண்டுமானாலும்
பேசும் திறமை எனக்குண்டு
பேச அழையுங்களேன்
கடைப் பிடிக்க என்னால் முடியாது
அழைக்காதீர்கள்












23. பட்டாம்பூச்சிகள்


பட்டாம் பூச்சி கடித்தது-அதன் பல் பட்ட
இடம் வலித்தது
பூவால் அடித்தால் வலிக்குமா?
புண்ணாகி உடல் துடிக்குமா?
மேகக் கூட்டம் இடிக்குமா?
என் தேகம் எங்கும் வலிக்குமா?
சிறு பறவை ஒன்று பறந்ததால்
சில மலைகள் உடைந்து தெறிக்குமா?
சின்னச் சின்ன விஷயம் தான்
இந்த உலகை ஆட்டும் விஷயம்தான்
பட்டாம் பூச்சி கடிக்கையில்
நாம் பூவாய் இருந்தால் வலிக்குமே!!!






24. காதல்


அவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ
என நானும்
எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ
என்று அவளும்

பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதாக
எண்ணி
உண்மையாக காதலிப்பதாக எண்ணி
சொல்லாமலே இருந்தோம்
கடைசீவரை
அங்கு மனித நேயம் பிழைத்தது

ஆமாம் அவள் கணவனிடம்
அவளும்
என் மனைவியிடம் நானும்!!!!


24. பிறந்த நாள்

தினம், தினம், தினத்துக்கு
பிறந்த நாள்!!
வாரா வாரம் வாரத்துக்குப்
பிறந்த நாள்!!
மாதம் தவறாமல் ஒருமுறை
மாதத்துக்கு பிறந்த நாள்!!
வருடத்துக்கு கூட வருடா வருடம்
தமிழ்ப் புத்தாண்டு,ஆங்கிலப் புத்தாண்டு
என்று இரு முறை
பிறந்த நாள்!!!
இது என்ன ஓரவஞ்சனை?
எனக்கு மட்டும் , நான்கு வருடத்துக்கு,
ஒரு முறை தான், பிறந்த நாள்
நான் பிறந்தது லீப் வருடமாம்!!!!!


25. குப்பைத்தொட்டி

கதை, கவிதை,
எச்சில்கள், குப்பைகள்கழிவுகள்
விவாகரத்து கடிதம்
கல்யாணப் பத்திரிகை
வேர்க்கடலை மடித்த காகிதம்
வேறு சில வேண்டாத பொருட்களும்
எல்லாம் விழுகிறது
சலனமே இல்லாமல் ஜடமாய் நான்!!!!



26. மர்மம்

வெகு நாட்களாக பேசிக் கொண்டிருந்தனர்
அப்படி என்னதான் பேசுவார்களோ?
பல முறை கேட் டிருக்கிறேன் தோழியிடம்
அவனிடமும் தான் ,
இருவரும் ஒற்றுமையாய் ஒரே பதில்,
ஒன்றுமில்லை சும்மாதான்......
இந்த ஒன்றுமில்லை சும்மாதான்...
இதற்குள்ளே...
எத்தனையொ பொதிந்திருக்கும்
ஆனாலும் இது ஒரு வெளி வராத
காவியம்.....







27. த்யாகம்

அப்பா நீங்கள் த்யாகம் செய்து
என்னை ஆளாக்கினீர்கள்
நான் நன்றி மறக்கவில்லை
நானும் த்யாகம் செய்து என் மகனை
ஆளாக்குவேன்
என் கடமை நான் செய்ய
நீங்கள் உதவுங்கள் தயவு செய்து
இருங்கள் முதியோர் இல்லத்தில்






28 கடவுள்


சிற்றெரும்பின் காலடி சத்தம் கூட
உனக்குக் கேட்குமாம்
என் சித்தத்தின் மனவெளிக் குகையில்
நான் செய்யும் ப்ரார்த்தனைகள்
உன் காதில் விழவில்லையா?
மனதிற்குள்ளே மருகி மருகி
நான் மயங்கும் வேளையிலும்
மருபடி மருபடி உன்னிடமே அடைக்கலம்


நீ தெய்வம், மஹா சக்தி, உலகரட்ஷகன்
உனக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்
நிறைவேற்றாவிட்டால் தண்டிப்பாயாம்
மனிதனே மன்னித்தால் மஹாத்மாவாகிறான்
நீ தண்டித்தால் கடவுளா?


29. இரசாயனம்-

மனதுக்குள்ளே ஒத்திகை பார்க்கும் நாடகம்
மணம் ஆனபின்னே தினந்தோறும் மோகனம்
கண்ணுக்குள்ளே கண் கலக்கும் சாகசம்-இளம்
பெண்ணுக்குள்ளே எத்தனையெத்தனை காவியம்
உடலுக்குள்ளே உருவாகும் காமரசம்
உயிருக்குள்ளே உயிராகும் இரசாயனம்
கருவுக்குள்ளே திரு வாகும் வாத்சாயனம்
சிறு அணுவுக்குள்ளே பள்ளி கொள்ளும்
அனந்த சயனம் !






30. மரியாதை

அம்மா கண்ணன் வந்துட்டான்
கண்ணா ஷூவை அது எடத்துலெ வையி
ஹெல்மெட்டை பத்திரமா வையி
இந்தா டிபன் சாப்பிடு
நாளைக்கு என்னா வெணுமோ
இப்பவே எடுத்து வெச்சுக்கோ
காத்தாலெ என் உயிர எடுக்காதே
நேரத்தோட படுத்து சீக்கிரமா
எழுந்துக்கோ
என்றாள் கண்ணனின் மனைவி
எல்லாம் சரி இந்த ஷூவை மட்டும்
அது எடத்துலெ வையீ அப்பிடீன்னான்
கண்ணன்




31. கல்வி

சீக்கிரம் டிரஸ் போட்டுக்கோ நேரமாச்சு
ஸாக்ஸ் போடுநேரமாச்சு ஷூ போடு நேரமாச்சு
டை கட்டிக்கோ நேரமாச்சு
டிபன் சாப்பிடு நேரமாச்சு
ஒருவாட்டி சொல்லும்போதே மனப்பாடம்
பண்ணிக்கோ புரியுதா?
கிளம்பு கிளம்பு நேரமாச்சு
ஷாட் ரெடி இயக்குனர் வந்துட்டார்









32. சிரிப்பெனும் நெருப்பு

ராவணன் ராமணைப் பகைத்தான்
அனுமன் சிரித்தான்
ப்ரகலாதனை ஹிரண்யன் பகைத்தான்
நரசிம்மம் சிரித்தது
சக்தியை மகிஷன் பகைத்தான்
அகிலமே சிரித்தது
பச்மாசுரன் சிவனைப் பகைத்தான்
சக்தி சிரித்தாள்
நரகாசுரன் க்ருஷ்ணனை பகைத்தான்

தேவர்கள் சிரித்தனர்
பாஞ்சாலி சிரித்தாள் பாரதம் முளைத்தது
மனிதர்கள் நியாயத்தை பகைத்தனர்
விதி சிரித்தது




33. தேக்கம்-

பள்ளிகள் வேண்டாம், கோவில்கள் கட்டவேண்டாம்,
பாலங்கள் வேண்டாம்,அணைகள் கட்டவேண்டாம்,
தொழிற்சாலைகள் வேண்டாம்,மருத்துவ மனை வேண்டாம்,
கப்பல்கள் கட்டவேண்டாம் ,விமானம் வேண்டாம்,
அவை கட்டிடங்களைஇடித்து, மூண்றாம்
உலக யுத்தத்துக்குவழி வகுக்கும்,
வானளாவும் கட்டிடங்கள் வேண்டாம்,
அவை பூமியிலே மறையும்,
நிறைய,...... நீதி மன்றங்கள் கட்டுங்கள்,
வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன!...
கூவத்தை சுத்தம் செய்யுங்கள்
கொசுக்களை ஒழியுங்கள்
மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்


34. ஞானம்

என்னை ஞானியாக்கியவர்கள்
என் அம்மாவும், என் மனைவியும்
இன்னும் இருவரும் புரிந்து
கொள்ளவில்லை- நான் ஞானியென்று
ஆம் ஒவ்வொரு வெற்றி பெற்றவர்
பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்
புரிந்து கொள்ளாமல்

35. சுனாமி

தண்ணி அடிச்சு தண்ணி விலகாது
நல்ல பழமொழி ,
தண்ணி அடிச்சா எல்லாமே விலகிடும்
அதுதான் சுனாமி
தண்ணி அடிக்காதீங்கோ


37. தைரியம்

காவல்காரன் தூங்காமல் காவல் செய்யும்
முதலாளி நான்
அரசாங்கம் தவறும் நேர்மை அவ்வப்போது
சுட்டிக் காட்டும் குடிமகன் நான்
அதிகாரியின் தவறு அதட்டிக் கேட்கும்
தொழிலாளி நான்
பூசாரி தவறும் நியமங்கள்
உணர்த்துகின்ற பக்தன் நான்
ஞானிகளின் வர்ண பேதம்
உணர்த்துகின்ற அடியவன் நான்
மேதைகளின் சருக்கல்கள்
கண்டுபிடிக்கும் பேதை நான்
என்னைத் தட்டிக் கேட்க
மறந்துவிட்ட நான் !!!!
38. கண் தானம்


பிறப்பும் இறப்பும் இயற்கைதான் தடுக்கமுடியுமா
ப்ரபஞ்சத்தில் இயற்கை தனை மாற்றமுடியுமா
பிறந்ததனால் என்ன பயன் நமக்குத் தெரியுமா
இறந்த பின்னும் வாழும் வகை செய்ய முடியுமா


இறந்த பின்னும் வாழுகின்ற சிரஞ்ஜீவிகள்
முத்து முத்தாய் வழிகள் பல உறைத்தார்
செத்தும் கொடுத்தவன் சீதக்காதி,
தானம் கொடுத்தான் தன் தலையையே

தானத்தில் பலவுண்டு பலனடைய
தலையான தானமது கண்தானம்
பஞ்ச பூதம் ப்ரம்மத்தில் இணைவதுதான்
ப்ரபஞ்ச விதி தடுக்க முடியுமா?

சாகா வரம் பெற்றவர்தாம் யாரோ
தம் உறுப்பு தானம் அளிப்பவர்தானோ
சிறந்த தானம் அன்னதானம்,அறிவுதானம்
அதனினினும் சிறந்தது கண் தானம்
சாகா வரம் பெற சிரஞ்சீவியாய் நாம் வாழ
கருணை மனம் கொண்டிடுவோம்
கண்தானம் செய்திடுவோம்

39. காலம்


காலச்சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
அதன் கோலம் வரையும்
கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா
ஞாலச் சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
வட்டச் சக்கரம் -இறைவன் விட்ட சக்கரம்
சக்கரத்தை சுழற்றிவிட முடியுமா
இறைவனையே கழற்றிவிட முடியுமா?
ஆரம்ப புள்ளி அறிந்துவிட்டால் போதுமே
முடிவுப் புள்ளி தெறிந்து போகுமே

புள்ளிகளை அறியத்தான் முடியுமா
அதன் பூதாகார வடிவம்தான் தெரியுமா
ஆன்ம யோகச்சக்கரம்
சுழலவைக்காமல் அன்றிஇயலுமா
இவையெல்லாம் நாம் உணர
முடியுமா?
40. குண்டலினி


குண்டலினி யோகம் கற்க -திருவருளும்
குரு அருளும் வேண்டுமென்பர்
அதி தேவதை- வினாயகர்,
அருளும் வேண்டுமென்பார்
யமம்,நியமம்,ஆசனம்,பூரகம்,கும்பகம்,
ரேசகம்,எனும் ப்ராணாயாமம்
,ப்ரயத்யாகாரம்,தாரணை,
த்யானம்,எனும் அஷ்டாங்க யோகமும்-
மந்த்திர, லய, ஷட, ராஜ எனும்
சிவயோகமும் வேண்டுமென்பார்
ஞான யோகம்,கர்மயோகம்,பக்தியோகம்,
எனும் த்ரியோகமும் வேண்டுமென்பார்
தாடாசனம்,திரிகோண ஆசனம்,கருடாசனம்
பச்சிமோத்தாசனம்,பத்மாசனம்,
உத்தானபாதாசனம்,பவனமுக்தாசனம்
சிரசாசனம்,விருட்சாசனம் ,ஸ்வஸ்திகாசனம்
சுகாசனம்,எனும் ,ஆசனங்கள்
அத்தனையும் வேண்டுமென்பர்


அதல,விதல, சதல ,தலாதல,ரசாதல,
மஹாதல,பாதாள,ஏழுலக தொடர்பும்
இடை,பிங்கலை,சுஷும்னை-ஹஸ்தகிஹ்வை,குஹு
காந்தாரி,ஸரஸ்வதி பூசை,சங்கினி,பயஸ்வினி,வாருணி
அலம்பூசை,விச்வோதரை,யஸவினி,வஜ்ரை,இட,பிங்கலை,
நாடிகள் கட்டுப்பட வேண்டுமென்பார்
மூலபந்தம்,ஜலந்தர பந்தம்,,உட்டீயண பந்தம்
மஹா,மஹாபந்தம்,மஹாதேவதை,,யோக
விபரீதகரணி ,கேசரி ,வஜ்ரோலி
ஸக்திசீலன்,யோனி, பந்தங்களும் ,முத்திரைகளும்
கட்டுப் படவேண்டுமென்பர்
அணிமா,மஹிமா,வகிமா,கரிமா,ப்ராப்தி,ப்ராகாம்யம்,
வஸித்துவம், ஈஸத்துவம், எனும்
அஷ்ட மஹா ஸித்திகளும் கிட்டுமென்பார்
கோபம்,காமம்,த்வேஷம்,பற்று விலகுமென்பார்
மூலாதாரம்-ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்
அனாஹதம்,விசுத்தி,ஆக்ஞா
பிர்ம ரந்திரம்- ஸஹஸ்ராரசக்கரம்
நம்மை நாமறியும் நற் குணமும்
,யாகமும்,ப்ராணாயாமமும்,
நேமமும், நிஷ்டையும், தவமும்-அருளும்
உட்ப்ரயாணமும் வேண்டுமென்பர்

இத்தனயும் வேண்டுமென்றால்
உன்னை அறி


41. வேஷதாரிகள்

வேஷம் கலைத்து வாருங்கள்
வெகுளியாகப் பேசலாம்
ரோஷம் கலைத்து வாருங்கள்
வினயமாகப் பேசலாம்
கோபம் தவிர்த்து வாருங்கள்
ஆசையாகப் பேசலாம்
த்ரோகம் தவிர்த்து வாருங்கள்
பாசமாக பேசலாம்
மோகம் தவிர்த்து வாருங்கள்
காதலாகப் பேசலாம்
வன்மம் தவிர்த்து வாருங்கள்
அன்பாகப் பேசலாம்
பொய்மை தவிர்த்து வாருங்கள்
உண்மையாகப் பேசலாம்


44. மோதிரம்


மானுடர்க்கு வாழ்க்கை தரும் மோதிரம் ,
கல்யாண மோதிரம் ஒரு போதிமரம்
கொல்லர்கள் தயாரித்த மோதிரம்-பல
முத்திரைகள் பதித்து வைத்த மோதிரம்
அரசாங்க முத்திரை மோதிரம்
உண்டா ஆட்டிவைக்காத ராஜ்ஜியம்
கணையாழி என்கின்ற மோதிரம்,
ராம காதையையே ,படைத்திட்ட மோதிரம்
சீதையையே நம்பவைத்த மோதிரம்
வானில் மாருதியை எழும்ப வைத்த

பல கலைஞர்களை வளர்த்துவிட்ட மோதிரம்
எழுத்து வித்தகரை படைத்திட்ட மோதிரம்
மாயக் கண்னனவன் தவற விட்ட மோதிரம்
விதுரரயே பதற வைத்த மோதிரம்
கவுரவரை வீழ வைத்த மோதிரம்

கற்பனைக்கு -எட்டாத பல வடிவ மோதிரம்
விற்பனைக்கு எளிதான மோதிரம்
காதலுக்கு அடயாள மோதிரம்
காலத்தால் அழியாத மோதிரம்
மோதிரம் ஒரு போதி மரம்





45. நாகம்


பள்ளி கொண்டால் பரம ஸாது
துள்ளி எழுந்தால் வெறியாய் மோதும்
அள்ள முடியாமல் சினந்து சீரும்
வெள்ளம் போல் நுரை கக்கிப் பாயும்
குகையலிருந்து தன் முகம் காட்டும்
தி மூலமும் பள்ளி கொள்ளும்
அனந்த ஸயனமும் கும்
பள்ளிகொள்ளும் பாடமும் கும்
மலையை சுற்றி கயிறாய் படரும்
அகிலம் சுழற்றும் யுதமாகும்
மாலையாய் சிவனின் கழுத்திலிருக்கும்
கணபதி வயிற்றில் கங்கணமாகும்
முருகன் வாகன காலடியாகும்
தானே சக்தி வடிவாய் மாறும்





46. ͨÁ





ஒரு தாய் போதும்,ஒரு தந்தை போதும்
ஓரு பிறப்பு போதும்,
ஒரு வீடு போதும் ,ஒரு ஒரு வாசல் போதும்
ஒன்பது வாசல் வேண்டாம் ,
ஒரு மனைவி போதும், ஒரு திருமணம் போதும்
ஒரு குழந்தை போதும் ,
சம்சாரிக்கு இல்லறம் போதும்,
சன்யாசிக்கு துறவறம் போதும்,

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
எனக்கும் புரிகிறது என்ன செய்ய...?
அப்பப்பா இத்தனை போதும்கள் இருக்கிறதா,
இது தாங்காது "போதும்" "போதும்" "போதும்"
ஒரு போதும் இந்த " போதும் "
என்பதே போதும் .





47. சின்ன கல்

ஒரு சின்னக் கல் என்னைத் தடுக்கி விட்டது-
தலைகுப்புறக் கீழே விழுந்தேன்
ஒரு சின்ன கல்லா என்னை கீழே தள்ளுவது
ஆத்திரம் அறிவை மயக்கியது
சின்னக் கல்லை தூக்கி எரிய
கையைஉயர்த்தினேன்
சின்னக் கல் என் கண்களுக்கு நேரே
வந்த போது உலகையே மறைத்தது
ஒரு சின்னக் கல்லுக்கு இத்தனை
சக்தியா?....மீண்டும் நிமிர்ந்தேன்
என்னுள் ஏதோ மாற்றம்
புத்தருக்கு ஒரு போதி மரம்
எனக்கு ஒரு சின்னக் கல்
ஞானோதயத்தின் சின்ன கல்

பெண்
நீ கணபதி என்றால்
சித்தி புத்தி நானாக வேண்டும்
நீ முருகனென்றால் நான்
வள்ளி தேவானையாக நானாக வேண்டும்
நீ க்ருஷ்ணனென்றால்
பாமா,ருக்மணி,ராதா, அத்தனை கோபியராகவும் நானே ஆக வேண்டும்

நீ ராமனென்றால் சீதையாக நானாகவேண்டும்
நீ ராவணனாகி விட்டால் நான் மண்டோ தரியாக ஆக மாட்டேன்
அப்பொழுதும் சீதையாகத் தானிருப்பேன்

பக்தி கவிதைகள்

பக்தி கவிதைகள்


1. விநாயகர் துதி -

ஓம் கார ரூபனே
முந்தி விநாயகனே மூல முதல்வனே
மங்கள நாயகனே மலைக்கோட்டை
மாமணியே மாசக்தி மைந்தனே
சங்கரன் புதல்வனே கந்தன் தமயனே
தந்த முடைத்து பா ரதம் ஆக்கி
பாரதம் படைத்தவனே
மாறுதலைக் கொண்ட மாசற்ற
மாணிக்க விநாயகனே
ஆறுதல் வேண்டி மனதால் நெக்குறுகும்
அடியார்க்கு தேருதல் அளிக்கும்
துங்கக் கரி முகத்துத் தூமணியே
அங்கம் புழுதி பட அடியவர் தூளி பட
அங்கப் ப்ரதட்ஷணம் செய்கின்றேன்
பங்கம் ஏதுமில்லா வாழ்வு தர
வேண்டுகின்றேன்
எல்லாப் புகழும் குறைவில்லாச்
செல்வமும் நிறைந்த ஆயுளும்
தேர்ந்த பக்தியும் ஞானமும்
ஊட்டி எமக்கு அருள்வாய்












2. முருகன் துணை

கார்த்திகேயா கடம்பா கந்தா
கதிர்வேலா பால முருகா
பார்த்தன் மருகா-கூத்தன் சிவனின்
குழந்தையே மால்மருகா
பார்வதி தேவியின் பால குமாரா
அவ்வையின் மனதுக்கு இனியானே
சூரன் கதை முடித்த வேலாயுதா
திருப்பரங்குன்றத்து கல்யாண முருகா
அழகா தமிழ்க் குமரா
அம்மை வள்ளியின் ஆசை நாயகா
அன்னை தேவானையின் ஆசை நாயகா
கந்தவேளே எமைக் காக்கும் வேலே
கந்தஷஷ்டி சொன்னால் காக்கும் கந்தக்
கடவுளே -அப்பனுக்கே பாடம் சொன்ன
ஸ்வாமிமலை சுப்பையா
திருத்தணிகைக் திருக் குமரா
கந்த கோட்டத்துள் வளர்
ஸந்தத் தமிழோனே ஸுந்தரத்
தமிழா எந்த நாளும் எமைக் காப்பாய்















3. அங்கப் ப்ரதஷணம்

தீராத வியாதியா? தேறாத தலைவிதியா?
சங்கடமான ஊழ்விதியா?
அங்கப் ப்ரதஷணம் செய்து பாருங்கள்
- அங்கப் ப்ரதஷணம்
மங்கள வினாயகனை மனதில் இருத்தி
அங்கப்ப்ரதஷணம் அங்கே செய்துபாரும்
கந்த கோட்டத்துள் வளர் கந்தப் பெருமானை
அந்தரங்கத்தில் நினைத்து - அங்கப் ப்ரதஷணம்

வங்கக் கடல் கடைந்த மாதவனை மனதிலே
நினைத்து- ஐயப்பனை நினைத்து
செய்த வினை தீர சரண கோஷமிட்டு பதினெட்டுப்
படிகளை பவித்திரமாய் நினைத்து- அங்கப் ப்ரதஷணம்

குருவாயூர்க் கண்ணனை குளிரக் குளிர நினைத்து
தருவான் நல் வாழ்வு என்ரெண்ணி
இமயம் வரை செய்த பாவம் இன்றுவரை இருந்தாலும்
சமயவரம் தரும் சமயவரத்தாளை எண்ணி- அங்கப் ப்ரதஷணம்
மருத்துவ மாம இவ்வுள் கிடந்தானை
தருக்கில்லா மனதோடு தலை வணங்கி
உப்பிலிஅப்பனை உளமோடு தான் நினைத்து
எப்பிணியும் தீர வேண்டி- அங்கப் ப்ரதஷணம்
அஞ்ஜனை மைந்தனை அனுமனை மாருதிஐ
வஞ்சமில்லா மனதோடு மனதிருத்தி
பங்கம் இல்லா வழ்வு பெற சோளிங்கமலை
சிங்க முகத்தான்கோயிலிலே- அங்கப் ப்ரதஷணம்
அத்தனையும் செய்துவிட்டு அப்படியும் பாவம்
அகலவில்லையென்றால்
அங்கம் உனக்களித்து ஆன்மாவும் அளித்த
அம்மாவையும் அப்பனையும் அருகருகே
நிற்க வைத்து -உன் அங்கம் பூமிபட
அவர்தம் பாதம் பட அங்கப் ப்ரதஷணம்
அங்கே செய்து பாரும்-அது போதும்
அத்தனை பாவங்களும் அற்றுப் போகும்
மொத்தமும் ஜெயமாகும்

4. அம்மன்

உன்னை வணங்க மனம் எனக்கருள்வாய்
புன்னை வன நாயகியே
முன்னை வினைப் பயன் என்னை வருத்தாமல்
உன்தன் அருள் எனக்கருள்வாய் -உன்னை

கண்ணன் சகோதரியே கந்தனுக்கும்,
அண்ணன் கணபதிக்கும் அன்பான தாயே
எங்களுக்கருள்வாய் தேனுபுரீச்வரர் நாயகியே
தேனுகாம்பாள் தாயே -உன்னை

என்றும் என் துணை நீயே
கற்பகவல்லி தாயே
கபாலீச்வரர் நாயகியே
உன்னை வணங்க நீ அருள்வாயே -உன்னை




5. கருமாரி

எல்லைகளைக் கடந்தவளே கருமாரி
எல்லை இல்லா கருணைமனம் கொண்டவளே
தொல்லையெல்லாம் தொலைப்பவளே கருமாரி
இல்லை எனாது அருள்அளிப்பவளே
வெள்ளை மனம்கொண்டவளே மாரியம்மா
வேற்காட்டில் இருப்பவளே மாரியம்மா









6. கர்வம்

பாமவுக்கும் ருக்மணிக்கும் போட்டியொன்று
முளைத்தது -பக்தியில் சிறந்தவள் யாரென்று
தலைகேறிய கர்வம் தடுமாறும் மனது
கண்ணன் முன் நின்றார் இருவருமே-யார் என்று

நமுட்டுச் சிரிப்புடனே மாயக் கண்ணனவன்
கனமான கர்வத்தை எளிதாக்க எண்ணம் கொண்டு
கற்பனைத் தலைவலியால் துடி துடித்தான்
தாளமுடியதது போல் நடித்தான்

மறையோதும் முனிவரவர் கண்டுகொண்டார்
மறை பொருளின் மனப் பொருளை
தானும் கண்ணனுக்குத் துணையாக
நடிக்கத்தான் திட்டமிட்டார்

தலைவன் கண்ணனவன் தலவலி தீரவேண்டி
தாரம் இருவருமே கலங்கி நின்றார்
கண்ணனுக்காய் -வலி தீர வழி கேட்டு
மயங்கி நின்றார் மன்னனுக்காய்

தீராத் தலைவலி தீரவேண்டி தரமான
மருந்தொன்று சொல்லிவைத்தார்-முனிவருமே
தருக்கில்லா மாந்தரவர் தன் தாள் கொண்ட
பாத தூளி கண்னன் தலை மேலே

பற்றாய்ப் போட்டால் தாங்கவொண்ணாத்
தலைவலி தானே மறையும் என்றார்
தாரமவர் மனவலியும் தானே குறையும்
என்றார்- யார் தயார் ?

பதறிப் போனார் அனைவருமே அபசாரம்
அபசாரம் க்ருஷ்னனவன் தலைமேலே
பாத தூளி அபசாரமென்ரெண்ணி
தர மறுத்தார் தாரமவர்

அபசாரம் செய்வதனால் அன்பனவன்
தலைவலி தீருமென்றால் -உபசாரம்
தேவை இல்லை -தான் தருவேன்
தன் பாத தூளி என்று சொல்லி

தன் பாவம் சேர்ந்தாலும் பரவாயில்லை
கண்ணனின் தலைவலி இனி இல்லை
அது போதும் என்று சொல்லி
அன்பாய்த் தடவி விட்டாள் தன் பாத தூளி
அன்போடு பரவி விட்டாள் கண்ணனின்
தலை மேலே ருக்குமணி

கண்ணன் திரும்பிப் பார்த்தான்
தலை குனிந்தார் தேவியர் இருவருமே














7. ஐய்யப்பன்

சிவ நாடி விஷ்ணு நாடி இரு நாடி
சேர்ந்து இமைப் பொழுதில் உருவான
மைந்தனவன் ஐய்யன் அவன் ஐய்யப்பனே
வெம்புலி வாகனனை ஐயமெல்லாம் போக்கும்
நெய்யாபிஷேகனை பந்தள ராஜனின்
இகலோக மைந்தனை தங்கமலை
வாசனை - துளசி மணி மாலை அணிந்து
மஞ்ச மாதா பாதம் தொட்டுவணங்கி
பையப் பைய மலையேறி பதினெட்டுப்
படியேறி சரண கோஷமிட்டு
சரணடைந்து வணங்குகின்றேன்


துன்பம் யாவுமே தீர வேணுமே
ஐயப்பன் அருளாலே
இன்பம் யாவுமே சேர வேணுமே
மெய்யப்பன் அருளாலே - துன்பம் யாவுமே

பதினெட்டு படிகளில் ஏறி ஏறியே
பதப் படும் அவன் மனமே
சரண கோஷமே பாடிப் பாடியே
வசப்படும் அவன் குணமே - துன்பம் யாவுமே

நெய்யாபிஷேகம் பார்ப்பதனாலே
நிறைந்திடும் அவன் மனமே
இருமுடி தாங்கி பெருவழி நடந்து
தரிசனம் பெற்று வளர்ந்திடுமவன் வாழ்வே - துன்பம் யாவுமே

துன்பம் யாவுமே தீர்ந்து போகுமே
ஐயப்பன் அருளாலே
இன்பம் யாவுமே சேர்ந்து நிறைந்திடும்
மெய்யப்பன் அருளாலே துன்பம் யாவுமே









8. திருவடிகளே சரணம்-

எல்லா உயர்வும் எனக்களிப்பான் ஸ்ரீவாசன்
ஏகாந்தமாய் உறையும் திருப்பதி மலைவாசன்
பொல்லார் கண்பட்டு விளையும் த்ருஷ்டி யெல்லாம்
இல்லாமலே களைந்து எனைக் காக்கும்
மல்லாண்ட திண் தோள் மவண்ணனை
பல்லாண்டு பாடிப் பாசமாய் அழைத்திட்டால்
(எல்லா)

சொல்லாமலே வரும் ஊழ்வினைப் பயனெல்லாம்
இல்லாமலே அருளி இன்பம் நமக்களிக்க
வல்லான் வாசுதேவனை வாயாரப் பாடி
மனதினால் துதித்தால் (எல்லா)

கல்லாரும் கற்றவரும் இல்லாரும் உள்ளாரும்
எல்லாரும் போற்றிவரும் தெள்ளத் தெவிட்டாத
கள்ளக் கண்ணனை மணி வண்ணனை
சொல்லாண்ட தேசிகரும் பல்லாண்டு பாடி
வைத்த சுடர்க்கொடி ஆண்டாளும்
வாமனனைப் போற்றுகின்ற
ராமனுஜ ஜீயெரும்-எல்லாம் தானாகி
நின்ற வல்லான் கோவிந்தன் லக்ஷ்மீ
மணாளன் ஸ்ரீனிவாசன் (எல்லா)

புதுக் கவிதைகள்

புதுக் கவிதைகள்

1. வசியம்

வார்த்தைகளில் தேன் தடவும் வசியம்
வாழ்க்கைக்கு என்றும் அவசியம்

2. நான்

உன்னை ஓட விட்டு உன் பின்னால்
நீ ஓடு உன்னை நீ உணர்வாய்

3. ரசிகன்

சகித்துக்கொண்டு வாழாதே
ரசித்துக்கொண்டு வாழ்

4. தர்க்கம்

கடவுள் இருக்கிறாரா இல்லையா
அது தேவைஇல்லை
நாம் இருக்கிறோம்
நம்முள் அவன் இருக்கிறான்

5. வேண்டுதல்

கடவுளே ஒரே ஒரு நிமிடம்
காட்சி கொடு
யாரிடமும் நிரூபிக்க என்னால்
முடியவில்லை

6. புனிதம்

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்
காதல்- அது இன்னும் இதுவரை
ஏற்படவே இல்லை



7. கர்வம்

தற்பெருமை தேவை இல்லையாம்
பின் மலரே நீ ஏன் மணக்கிறாய்

8. நட்பு

நண்பனுக்குத் த்ரோகம்
செய்ய மாட்டேன் - ஆம்
அவன் மனைவி அழகாக இல்லை

9. ஏக்கம்

ஒரு புகைப் படத்திலும்
உன் அருகில் நான் இல்லையே
ஓ... ஓ... ஓ.... என்றுமே நான்
புகைப்படக்காரன்தான்

10. காபரே

நிர்வாணச்சரக்கை மலிவுச் சந்தையில்
தவணை முறையில்
விற்கும் மொத்த வியாபாரி
11. Å¢Õ

அம்மன் வேஷம் கலைத்துவிட்டு
அடுத்த வேளைச் சாப்பட்டுக்கு
ஐந்து நட்சதிர ஹோட்டலின்
படுக்கை அறை

12. பெருமிதம்

வறுமைக் கோட்டின் கீழே இருக்கிறாயா
கவலைப் படாதே-ஐ நா சபையின்
புள்ளி விவரத்தில் நீயும் சேர்க்கப் பட்டிரூக்கிறாய்


13. பொருமல்

அப்பனுக்கு எதிராய் அன்னிய மதத்தில்
காதலிக்கும் அத்தனை வாரிசுகளும்
தீவிரவாதிகளே

14. யதார்த்தம்

விரலுக்கு மை இட்டு அழகு பார்ப்பார்
பதவி வந்தவுடன் த்ரோணர் போல்
விரலைக் கேட்பார்

15. ஆர்வம்

புகைப் படக்காரரே சற்றுப் பொருங்கள்
உடனே பதிவு செய்து பார்க்க
இது புகைப் படமல்ல - கர்ப்பம்.......

16. மனவியல்

வெறித்த பார்வைகளுக்கு நடுவே
ஒரு தவிர்த்த பார்வை
அதனால் தவித்த பாவை....

17. போதை

போதைக்கும் எனக்கும் போட்டியொன்று
முளைத்தது
யாரை யார் முதலில் நிறுத்துவதென்று?

18. பிறப்பு

உலகிலேயே உயர்ந்தவன் தொழிலாளி -லேபர்
அதனால்தான் பிரசவ வலியை
லேபர் பெயின் என்கிறார்கள்


19 மகிழ்ச்சி

நான் முட்டாள் என்று நிரூபிக்கப் படும் போதெல்லாம்
மகிழ்கிறேன் ஏனென்றால்
பல அயோக்யர்களைபற்றிய
என் அனுமானம் சரியாகவே இருந்திருக்கிறது

20. ஆத்திகம்

என்னையும் படைத்து உன்னையே இல்லை
என்று சொல்லும் நா வன்மையும் எனக்களித்த
கடவுளே நீ இல்லை இல்லை இல்லவே இல்லை

21. படைப்பின் ரகசியம்

ஒரு முறை விதைத்தேன் உலகம் வளர்ந்தது
பல முறை அழித்தேன் ஒன்றும் ஆகவில்லை

22. கணவன்

ஒரு வேளை இவன்தானோ ....?
இது பதினெட்டாவது முறை....

23. வருத்தம்

என் வயது 55
35 வயது என்று சொன்னால்
நம்புகிறார்கள் வருத்தமாயிருக்கிறது
35 வயதுக்கரர்கள் என் போலவா
இருக்கிறார்கள் ?




24. வித்தை

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக
வெகு நாட்களாக ஏமற்றிக் கொண்டிருக்கிறான்
ஒரு வித்தைக்காரன்

பாம்புக்கும் பாம்புக்கும்
கீரிக்கும் கீரிக்குமே
சண்டை மூட்டிக்கொண்டிருக்கிறான்
அரசியல்வாதி

25. ஊழல்

ஊழல் பட்டியலில் இந்தியாவுக்கு 88 வது இடமா?
ஓஒ......அதிலும் முதல் இடம் இல்லையா?

26. முடியாது

என்னால் முடியாதென்று சொல்லிவிடத்தான்
நினைக்கிறேன்

ஹும் ........ என்னால் முடியவில்லை

27. நீதி தேவதை

"நீதிபதி தர்மலிங்கம்,!! நீதிபதி தர்மலிங்கம், !! நீதிபதி தர்மலிங்கம்,
கோர்ட் டவாலி மூன்று முறை கூப்பிட்டார் "

28. பொட்டு

என் மனைவி சுமங்கலி என்று
நிலைக்கன்னாடியிலும்,கதவுகளிலும்
இருக்கும் ஒட்டும் நெற்றிப் பொட்டை
வைத்து கண்டுபிடிக்கிறேன்




29. வேலைக்காரி

பார்த்துப் பார்த்து சமைத்தாயிற்று- நல்லவேளை
வேலைக்காரிக்கு பிடித்த உணவு வகைகள்
மீதமானலும் கவலை இல்லை

30. நாகரீகம்

ஸிந்து நதிக்கரை நாகரீகம்
காலமாற்றமடைந்தனால்
கூவம் நதிக் கரையில்
கொசுக்களுடன் வாழுகிறோம்