திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, August 17, 2009

உட்ப்ரயாணத்தின் மகிமை

ஒவ்வொரு உயிரிலும் சக்கராயுதமும்
சங்கும், வில்லும் வேலும்,கதையும், போன்ற பதினாறு ஆயுதங்களும்,ஆழிப்படைகளும், உள்ளடங்கி ஒரு சைதன்யம் இருப்பதை உலகிற்கு கண்ணன் உணர்த்திய நிகழ்வே மஹாபாரதம்

ஒவ்வொரு உயிரும் இந்த சக்தி இருப்பை தாமாக தம்மை உணர்ந்து அறிந்துகொண்டு தம் சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்பதே இறைவன் கண்ணனின் கீதோபதேசம்

நம்முள்ளே ஒளிந்திருக்கும் அத்துணை சைதன்யத்தின்,ஆயுதங்களின் மஹா சக்தியின் முழுப்பரிமாணத்தையும் உணரும் நிகழ்வே ஆழ்வார்கள் ,நாயன்மார்கள் நமக்களித்த போதனைகள்

நம் சக்தியை முழுதாக உணர்ந்து தகுதியான இடத்தில் தகுதியான நேரத்தில் வெளிப்படுத்தி நம் ஆக்க சக்தியை நமக்கும் புரிகின்ற வகையிலே ஏற்படுத்தப்பட்ட கதா பாத்திரங்கள்தான்
இதிகாச புராணங்களின் உள் நோக்கம்,

நம்மிலிருந்து நாமே பிரிந்து கருடப் பார்வையாக நம்மையே உற்று நோக்கினால் நம் உள்ளே தினம் நடக்கும் குருக்ஷேத்திரப் போரை நாமே காணலாம், நம்மை உணர இதைவிடச் சாலச்சிறந்த வழி வேறேதும் இல்லை

அதனால் உட்ப்ரயாணம் மேற்கொள்ளுதலே உயரப்பறத்தலுக்கும், உள்ளுணர்வுகளுக்கும் வழி வகுக்கும்


கருடப் பார்வையில் ககனம் முழுவதும் நம் கண்ணுக்கும் எட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ