திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, August 2, 2007

நிழலின் வெளிச்சம்

நிழலின் வெளிச்சம்


ஒரு பெரிய நிறுவனம் பெரிய மூலதனம்
முதலாய்ப் போட்டு திரைப்படமெடுக்க
திட்டமிட்டு என்னை அழைத்து
ஒப்பந்தம் செய்தது
ஒரு நடிகராகப் பங்கு கொள்ள-
நானும் இசைந்தேன் நடித்துக் கொடுக்க ,
என் தொழிலல்லவா அது
ஒப்பனையாளர் என்னை உரு மாற்றினார்
ஆடைகள் கொடுப்பவர் மேலும் பொருத்தினார்
என்னை அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவனாக
உணவு உபசரிப்பாளர்கள் ஆதரவாய் உணவு கொடுத்தனர்
உதவி இயக்குனர் எளிதாக பொறுமையுடன் சொல்லிக்
கொடுத்து மேலும் கூட்டினார் என் பாத்திரத் தன்மையை
இயக்குனர் சொன்ன இடத்தில் நின்றேன்
சொல்லிக் கொடுத்தபடி பேசி, நடித்தேன்
தளப் பொறுப்பாளர் காட்சி ஜோடனைக்
கற்பனைத் தூரிகை கைவண்ணம் காட்டினார்
புகைப் பட நிபுணர் என்னை மேலும்
அழகாக,திறமைசாலியாக காண்பித்தார்
எழுத்தாளர் என் கதா பாத்திரத்துக்கு ஏற்ற
வசனங்களை இயல்பாக எழுதினார்
ஒரு பெருங் கவிஞ்ஞர் பாடலெழுதினார்
பல குரல் வளம் பாடியது ,நான் வாயசைத்தேன்
பல பொறியாளர்கள் பாடு பட்டனர்
திரைப் படம் வெற்றி பெற
அடடா என்னை சுற்றி எத்தனை பேர்
முத்தான வியர்வை கொட்ட உழைக்கிறார்கள்
அவர்கள் வெளியே தெரிவதே இல்லை
அத்தனை பேரும்-
புகைப் படக் கருவிக்குப் பின்னால்
என் வெளிச்சத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா, த்யாகங்களா
நான் மட்டும் மக்கள் மனதில்,
விளம்பர தட்டிகளில்,பத்திரிகைகளில்
தொலைக் காட்சிகளில் ,
மக்கள் மனதில் , வீடுகளில் ,
அனுமதி இல்லாமல் நுழைந்த
வலுக் கட்டாய சூரியன் நான்
ப்ரகாசிக்காத எத்தனயோ நக்ஷத்திரங்கள்
என் பின்னால்,தங்கள் த்யாகங்கள் புரியாமல்
என் ப்ரகாசத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா ?


உண்மையை ம்னம் திறந்து சொல்கிறேன்
எனக்குத் தெரிந்த வரை தன் ப்ராகசத்தின்
பின் இருக்கும் இருட்டுக்களின் வேதனையை
அறியாது அறிந்தாலும்
கண்டுகொள்ளாமல் தன்னால் தான் வெற்றிகள்
குவிகின்றன என்று ஆட்டம் ஆடியவர்கள்
பலபேர் காணாமல் போயிருக்கிறார்கள்
வெற்றியின் உச்சத்திலிருந்து பாதாளத்துக்கு
அதனால் தான் உணர்ந்து எழுதினேன்
நான் தொலைக் காட்சித் தொடரிலோ,திரைப் படங்களிலோ
நடித்தைப் பார்த்து பாராட்டிய பலபேருக்கு நான் சொன்ன
ஒரே வார்த்தை என் பலமே நீங்கள்தான்
நீங்கள் ரசிக்காமல் பார்க்காமல் இருந்தால்
என் திறமை விழலுக்கிறைத்த நீர்தான்
ஆகவே நீங்கள்தான் என் மூலதனம் என்று சொல்லி இருக்கிறேன்
அதே போல் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில்
ஒரு இயக்குனருக்கு என்ன மரியாதை தருகிறேனோ
அதே அளவு மரியாதை எனக்கு தண்ணீர்
கொண்டுவந்து தரும் சேவகனுக்கும் தருகிறேன்
அதுதான் நிலைக்கும் என்று எண்ணுகிறேன்
நிச்சயமாக உணர்ந்த்ததைத்தான்
எழுதியிருக்கிறேன்
அனுபவபூர்வமாக புரிந்து கொண்டதை மட்டுமே
எழுதுகிறேன்
ஆனால் அதே போன்று உண்மையாக நடிக்கவேண்டும்
நடிப்பு ஒரு அருமையான தொல் கலை
அதற்கு மரியாதை கொடுத்து நம்மால் இய்ன்றவறை
அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து
நடிக்கவேண்டுமமென்கிற எண்ணத்துடன்
வரும் அருமையான நடிகர்களை
போலித்தனமான மரியாதையை ,அலட்டல்களை,மட்டும்
மதித்து உண்மையான கலைஞ்ஜர்களை அவமானப் படுத்தி
காயப் படுத்துகிறார்கள் என்பதையும் நேரிடையாகப்
பார்த்து மனம் வலித்திருக்கிறது எனக்கு
எங்கு போலிகள் அட்டகாசம் தொடர்கிறதோ அங்கெல்லாம்
இத் தமிழ்த் தேனீ என்னும் கலைஞ்ஞன் உள்ளம் குமுறுகிறான்


மனச்சாட்சியுடன்
அன்புடன்
தமிழ்த்தேனீ

வார்த்தை ஜாலம்

என்னுடைய கருத்துக்கள் ,நேர்மையாக
மனதின் அடித்தளத்திலிருந்து எழுத்ப் படுபவை
நான் உண்மையை எழுத முற்படும் போது
வார்த்தைகள் தாமாக விழுகின்றன
இந்த வார்த்தை ஜாலம் என்னும் சொல்லுக்காகவே
நான் ஒரு கவிதை எழுதினேன்

சொற்சிலம்பம்

வானத்து நக்ஷத்திரங்களை வாரி எடுத்து
வைரத்தோடு
விடிவெள்ளியை வடித்தெடுத்து மூக்குக் குத்தி
முழுமதியை எடுத்து வந்து சூடாமணீ
-சூரியனைத் துணிந்தெடுத்து ராக்கொடி
மேகக் கூட்டங்களை உருட்டி எடுத்து
திண்டு மெத்தை --மலர்களைக்
கூட்டி எடுத்து தூவிய மலரணை
வெட்டெ வெளியில் வளர்ந்த
முற்றிய சந்தன மரம்
வெட்டி எடுத்துச் செய்த கட்டில்
வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு
ஊட்டுகின்ற அன்னை-தங்கத்தொட்டிலில்
வைத்து தாலாட்ட ஒரு தந்தை.........
ஆகாய விமானத்தில் ஆனந்தமாய்
பயணம்.. திடீரென்று கோளாரு ஜனனம்
அந்தரத்தில் கா கா வென்று
கோளரு பதிகம்,கந்த ஷஷ்டி கவசம்
பந்தாவாய் பாரசூட்டில் பயணம்
கண்விழித்துப் பார்த்தேன்
கிடந்தேன் அரசுத் தொட்டிலில்அனாதையாய்
அது சரி -சொற் சிலம்பம் எனக்கது அத்துப்படி
ஆனால் சோற்றுக்கு வழி எப்படி..?

அன்புடன்
தமிழ்த்தேனீ

திட்டமிடல்

அன்புடன் நண்பர்களே
ஒரு தேவையான யோசனை வந்தது

ஒரு பழைய திரைப் படத்தில்
ஒருவன் என் எஸ் கே எனப்படும் கலைவாணர்
ஒருவரிடம்
உன்னுடைய சட்டைப் பையில் இருக்கும்
மொத்தப் பணத்தையும் என்னிடம் கொடு என்பார்
உடனே அவன் மொத்தப் பணத்தையும் எடுத்து
கலைவாணரிடம் கொடுப்பார்
அதை தன் கையில் வைத்து மூடிக்கொண்டு
கலைவாணர் இதில் எவ்வளவு பணம் இருக்கிறது
என்பார் ,அதற்கு அவன் தோராயமாக சொல்லுவான்
,சரியாக சொல் தோராயமாக சொல்லாதே
என்பார்
அது அவனால் முடியாது

உடனே கலைவாணர் உன்னுடைய சட்டைப் பையில்
எவ்வளவு பணம் இருக்கிறது என்று உன்னாலேயே
சொல்லமுடியவில்லை நீ எதை சரியாக
சொல்லப் போகிறாய் என்பார்
இது மிகவும் யோசிக்கத்தக்க ஒரு கேள்வி
நாம் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறோம்
ஆனால் ,எதையுமே மனதில் இருத்தாது
அதை அதை அப்படியே செய்துவிட்டு
ஓடிக் கொண்டிருக்கிறோம்
நமக்கு ஒரு கோப்பு, நாம் கேடவுடனே
கிடைக்காவிடில் கோபம் வருகிறது
அதை சரியான நேரத்தில் கொடுக்காதவரை
கண்டிக்கிறோம்,பொறுமை இழந்து கத்துகிறோம்,
நாம் சரியாக இருக்கிறோமா?
என்பதுதான் என் கேள்வி..?
நான் இப்போதெல்லாம் பார்க்கிறேன்
பெரியவர்கள் ,இளவட்டங்கள்,அனைவருமே
ஏதோ ஒரு அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோமே
தவிற
ஒரு கணம் நிதானித்து,யோசித்து செயல் படுவதே இல்லை
நாம் நிதானிக்கும் ஒரு கணம் ,
நம்முடைய வாழ்விலே எத்தனையோ
நல்ல மாற்றங்களை கொண்டு வரக் காத்திருக்கிறது
பல கடைகளில்,,பொது இடங்களில் புழங்கும்
அனைவரையும் கவனிக்கிறேன்
கடைக்கு வந்த வுடன் அவர்களுடைய அவசரம்,
பொறுமைஇன்மை,எல்லவற்றிர்க்கும் மேலாக ,
சரியாகத் திட்டமிடாமைஅத்தனையும் சேர்ந்து
நம்மை ஆட்டுவிக்கிறது
கையிலுள்ள சின்னத் தொலை பேசியை ஒரிடத்தில்
வைக்கிறார்கள்,கடைக்காரர் கொடுத்த
விலைப் பட்டியலை ஒரிடத்தில் வைக்கிறார்கள்
கடன் வாங்கும் அட்டையை கடைக் காரரிடம் கொடுத்துவிட்டு ,
அதைத் திரும்ப வாங்க மறந்து விடுகிறார்கள்,
அப்படியே வாங்கினாலும் அது தன்னுடைய
கடன் வாங்கும் அட்டைதானா
என்று பார்க்க மறந்துவிடுகிறார்கள்
ஏன் இவ்வளவு பதட்டம்,வேகம்,
எல்லாவற்றிர்க்கும் மூல காரணம் சரியாகத் திட்டமிடாமை,
காலத்தே படுத்து உறங்கி ,காலத்தே எழாமை
தம்முடைய மூளைக்கு போதிய ஓய்வு கொடுக்காமை
இத்தனை ஆமைகளை நம்மிடம் வைத்துக் கொண்டால்
எப்படி தடுமாறாமல் இருக்க முடியும்
பெரியவர்கள் சொல்வார்கள்
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று
இப்போதெல்லாம் நக்ஷ்க்ஷத்திர ஆமைகள் கூட
நல்ல விலைக்குப் போகிறது
பெரியவர்கள் சொன்ன ஆமை மேலே நான் சொன்ன
திட்டமிடாமை,போன்ற பல ஆமைகள்தான்
நாம் இன்னும் கொஞ்ஜம் கவனமாக செயல் பட்டால்
பல நஷ்டங்களை ,தவறுதல்களை,இழப்புகளை,
சரியாக்க முடியும் என்பது அடியேனின் கருத்து
சரியான உதாரணமாக
ஒரு போட்டி வைப்போம்

" W hy D o n' t a li e n s e a t c lo w n s ?
B e c a u s e t h e y ta s te fu n n y. "

இந்த வாசகம் தினமும் நாம் உபயோகிக்கும்
அவசியத் தேவையான ஒரு பொருளின் மீது
அச்சடிக்கப் பட்டு இருக்கிறது

சவால்,,,, கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு
ஒரு சபாஷ்......
இனாம்..........

இப்படிக்கு
அன்புடன்

தமிழ்த்தேனீ