திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, July 31, 2007

வாழ்க்கையின் நோக்கம்

பெரியவர்கள் சொல்வ்து எப்போதுமே
நன்மைதான் , உண்மைதான்
திரு மஹாத்மா காந்தி சொன்னதை
என்றுமே கடைப் பிடித்து வருகிறேன்

என்னுடைய நோக்கமே
பிறந்தோம் ,எப்படியும் இறக்கப் போகிறோம்
இது ப்ரபஞ்ஜ விதி,யாராலும் மாற்ற
முடியாத ப்ரபஞ்ஜ விதி,
ஆக்வே இந்த வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு
முன்னால்,எதையாவது சாதித்து விட்டுத்தான்
இந்தப் பயணத்தை முடிப்பது என்று ,
மன உறுதியோடு செயல் பட்டு வருகிறேன ,

திரு ரங்கஸ்வாமிஅவர்களுக்கும் திருமதி கமலம்மாள்
அவர்களுக்கும் எட்டாவது குழந்தையாய்ப் பிறந்தவன்
நான், அதனால்தான் கிருஷ்ணன் என்று பெயரிட்டார்கள்,
பிறக்கும் போதே (born with silver spoon )
என்று சொல்வார்களே
அதைப் போல செல்வத்தில் பிறந்து ,செல்வத்தில் வள்ர்ந்து
யாரோ ஒருவரின் த்ரோகத்தால் அத்தனை செல்வங்களும்,
போனதால் மனமொடிந்து என் தந்தை
திடீரென்று மாரடைப்பில் இறந்தார்,
திடீரென்று ஏற்பட்ட சுழல் எங்களைப் பந்தாடியது
மூலைக்கு ஒருவராய் தூக்கிப் போட்டது

அதன் பிறகு என் மூத்த அண்ணன் குடும்பப்
பொறுப்பேற்றுக் கொண்டார்,
அண்ணீ வந்தார்கள்

நான் என் அன்னை ,என் தம்பி மூவரும்
அனாதையாக்கப் பட்டோம்
நடுத் தெருவுக்கு வந்தது (silver spoon)
அதன் பிறகு என் தாயாரின் உறவினர் ஒருவர்
என் பெற்றோர் இருவரும் பலருக்கு செய்த
எத்தனையோ உதவிகள் பற்றி புழ்ந்து விட்டு
எனக்கும் லுகாஸ் டீ வி ஸ் ஸில்
வேலை வாங்கிக் கொடுத்தார்
அப்போது எனக்கு மாத சம்பளம் ( 97 Rs )
அன்றிலிருந்து இன்று வரை நேர்மையாக் ,யாருக்கும்
எந்த தீங்கும் செயாதவனாக என்னை என் தாயார்
முன்னுக்கு கொண்டுவந்தார்கள்
கடைசி காலத்தில் அவருக்கும் கேன்சர்
என்னும் கொடிய நோய் தாக்கியது
3000 rs சம்பளத்தை எட்டியிருந்தேன் நான்
ஆனால் மருத்துவச் செலவு மட்டும்
10000 rsஆகும் நான் செய்யாத வேலையே கிடையாது

எப்படியாவது என் தாயாரின் கொடிய நோயை அகற்றிவிட வேண்டும்.
ஆனால் யாரிடமும் ஒரு பைசாவுக்கு கூட உதவி
கேட்டு செல்லக்கூடாது என்னும் வைராக்யம்,ஆகவே
சில பல ஒப்பந்த முறை வேலைகளை என் அலுவலகப் பணீ
நேரம் தவிர செய்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன் நான்
வாழ்க்கையின் அடித் தளத்தையும் ,சொகுசுத் தளத்தையும்
ஒரு சேரப் பார்த்தவன்,

ஒருமுறை மருத்துவர் கலாநிதி எம் பீ,அவர்களின்
மருத்துவ மனையில் என் அம்மாவை சேர்த்து
அவர்களுக்குத் தேவையான ரத்தம் ஏற்றிவிட்டு
அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்

என்னுடைய மகன் வெங்டநாதன் அப்போது
ஒரு சாதாரண வேலையில் இருந்தான்
அவன் என்னிடம் வந்து அப்ப கவலைப் படாதே
இந்தா 500 ரூபாய் வைத்துக் கொள்
என்று அவன் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தான்

இப்போது அவன் மைக்ரோசாப்ட் என்னும்
நிருவனத்தில் பணி புறிகிறான்,பல ஆயிரக் கணக்கில்
சம்பாதிக்கிறான்,நிறைய பணம் கொடுக்கிறான்

ஆனால் அந்தச் சிறு வயதில் அவன் கொடுத்த
அந்த 500 ரூபாய்க்கு எதுவுமே ஈடாகாது


அதற்குப் பிறகு இரண்டு முறை விபத்தில் சிக்கி
இரண்டு தோள்பட்டை எலும்பும் முறிந்தும்பின்
இப்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டையுடன் ஆணிகள் அவகளை
ஒட்டவைத்துக் கொண்டிருக்கின்றன
இரண்டு வருடங்களுக்கு முன் இருதய திறப்பு அறுவை
சிகிச்சை செய்து கொண்ட்டேன்,
பயப் படாதீர்கள்
இப்போது நான் பரி பூரண ஆரோக்கியம்
வாழ்க்கையிலும் என்னுடைய மக்களை நன்றாகப்
படிக்க வைத்து அவர்கள் அனைவரும் கணிணித் துறையில்
பணி புறிந்து கொண்டிருக்கிறார்கள்
நானும் நடிப்பு, ,கவிதைகள் எழுதுதல் என்று சுகமாக
இருக்கிறேன் இறைவன் அருளாலும் ,என் பெற்றோர்களின்
ஆசீர்வாத்தினாலும் மிக நன்றாக இருக்கிரேன்.
நானும் என் மனனவியும்அமெரிக்கா, கன்டா ,மலேஷியா,சிங்கபூர்
போன்ற நாடுகளுக்கு சென்று பார்த்துவிட்டு
வந்தேன், மேலும் என் தம்பியின் மக்களைப் படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறேன்,என் தம்பி குடும்பத்தையும்
முன்னுக்குக் கொண்டு வர என்னாலியன்ற
உதவி செய்து கொண்டிருக்கிறேன்
இது வரை நான் சொன்னது என்னுடைய சுய புராணமே தவிர
விளம்பர நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல
என்னுடைய நோக்கமே எப்படியாவது என்னுடைய
நல்ல முயற்ச்சிகளால்
அடுத்தவருக்கு எந்த த்ரோகமும் செய்யாது
ஏதாவதொரு உபயோகமான
புகழ் மிக்க சாதனயை செய்துவிட்டு
போக வேண்டும் என்றுதான்
முயன்று கொண்டிருக்கிறேன்
எப்படிப் பட்ட சோதனைகள் வந்தாலும்
நேர்மையாக அதை எதிர் கொண்டு சாதனைகள்
செய்வேன் என்னும் உறுதி பூண்ட நெஞ்ஜுரம்
கொண்ட

தமிழ்த் தேனீ

1 comment:

Anonymous said...

good sir..

this kind of biography motivates and guides new generations.

keep writing..

Great work

Thanks