திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, July 30, 2007

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு திருவண்ணாமலை

என்னுடைய ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்


சென்னையிலுள்ள திருவண்ணாமலை சிவத் தலம்
ஸ்ரீவில்லி புத்துரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள்
இருக்கும் இன்னொரு திருவண்ணாமலையைப் பற்றி
சொல்கிறேன் ,இது வைணவத் தலம்
இங்கு அருமையான ஒரு கோயில் உள்ளது
கீழே ஒரு அருமையான பெரிய குளம் உள்ளது
அதன் அருகே கரையில் ஒரு வினாயகர் உள்ளார்
அவருக்கு ஆதி வினாயகர் என்று பெயர்
அந்த வினாயகர் மிகப் பெரிய சிலா ரூபம்,
அதன் பக்கத்திலேயே, அருமையான மிகப் பெரும்
ஆலமரமும் வேம்பும் பலவருடங்களுக்கு முந்தையது இருக்கிறது
அந்த மரத்தின் கீழே நாகம் ப்ரதிஷ்டை செய்யப் பட்டு
இருக்கிறது, மேலே படிகளேறிப் போனால் மலை மீது
ஸ்ரீனிவாசர் ஆலயம் இருக்கிறது ,
அங்கு திருவண்ணாமலை ஸ்ரீனிவாசன் குடிகொண்டிருக்கிறான்
,மிகவும் தொன்மை வாய்ந்த அருமையான தலம்
அந்தக் கோயிலில் நின்று கொண்டு பார்த்தால்
ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் இயற்கயோடு ரசிக்கலாம்

ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அக் கோயிலுக்கு
மோட்டார் வாகனத்திலும், எல்லா வாகனங்களிலும் செல்லலாம் ,
செல்லும் வழியை இன்னும் சீரமைத்தால்
இயற்கயை ரசிப்பதற்க்கும், ஆன்மீக வாசிகளுக்கு
மிகவும் நிறைவான ஒரு திருத்தலம்,இந்த
திருவண்ணாமலை

அங்கு குளத்தின் கரையில் இருக்கும்
ஆதிவினாயகரின்
தோறறம் மிக அற்புதமாக இருக்கும்
அந்த ஆதி வினாகயகரை தரிசித்து விட்டு
பக்கத்திலேயே இருக்கும் வேம்பும் அரசும் பின்னி வளர்ந்த
பெரிய மரத்தின்கீழ் இருக்கும் நாக விக்ரகங்களை
வணங்கிவிட்டு,
அண்ணாந்ந்து பார்த்தால் ஸ்ரீனிவாசனின் கோயில்,
மலை மேல் தெரியும்,அங்கு பூக்கடைகள்,அதிலிருக்கும்
இன்னும் க்ராமீய வாடை போகாத பூக்காரிகள்
அவர்களிடம் சென்று மாலை வாங்கிக் கொண்டு
படி ஏறலாம்,மொத்தம்250 படிகள், 200 படிகள் ஏறியவுடன்
மங்கம்மா கோயில்,பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம் அங்கு கைங்கரியம் செய்யும் ஒருவர் நமக்கு ஸ்ரீசுவர்ணம் இட்டுவிடுவார்
அன்னையன் தரிசனம் முடித்து ,அப்ப்டியே

- Show quoted text -

No comments: