தவக் கோலமோ, ஊர்த்துவக் கோலமோ கொண்டனர்
என்று செய்திகள் கூறுகின்றன
அப்படி வெகுண்டெழுந்த பெண்மணிகளை சாந்தப்படுத்தும் விதமாகவே ஆதி சங்கரர் பதித்த ஸ்ரீசக்கரம் போன்றவைகளை பதித்தோ, அல்லது அவர்களுக்கு விக்ரகங்கள் வடித்து, பலி கொடுத்தோ அவர்களின் உக்கிரத்தை தணித்திருக்கின்றனர்,
தாய்மை உணர்வுள்ள பெண்ணை சினமூட்டுவானேன்
பிறகு அந்த மஹா சக்தியின் உக்கிரம் தாங்காமல் அவளிடம் வழிபாடு நடத்துவானேன், இதே செய்கையைத்தான் ஆதி காலம் தொட்டு செய்து வருகிறோம்
ஆனால் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்
மகளிர்க்கென்று தனியாக ஒரு தினம் வேண்டாம்,
மகளிர் இல்லையென்றால் ஜனனமே கிடையாது
ப்ரபஞ்ச வளர்ச்சியே கிடையாது,
அப்படிப்பட்ட மகளிரை தினமும் அளிக்க வேண்டிய மரியாதையை அளித்துப் போற்றுவோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments:
Post a Comment