திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 4

எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது,

இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்

எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது
ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த,பாசம் வைத்திருந்தவன் நான் ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன் ,என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்
அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து,என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்,ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன்,
அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும் ,கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும், அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்


என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது, மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர்,
அப்போது என்னுடைய மூத்த (சகோதரி)ராஜாமணி அவர்கள் என்னை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம்
“ இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு, இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய் விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள்
என் காதில் அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது, என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது, வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன், மருத்துவர்களே ஆச்சரியப் படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது, இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும், மிகச் சாதாரணமான ,ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல் நலம் குன்றி அன்றே வலிப்பு கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்,
என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்…
“ உயிரை, ஆயுளைக், கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன்
இன்று வரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை
அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய் அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை


No comments: