திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 9

ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது
அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்
சிறிது நேரம் விளையாடும், தன்னைச் சுற்றி யாருமே
இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்
அந்த நிலையிலே தான் எல்லா வளர்ந்த மனிதர்களும்
வளர்ந்தாலும் குழந்தைதான்,
அணைக்கும் கை இருக்கிறது ,நம்க்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து
ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான்
நாம் மனிதராக இருப்போம்,எப்போது அந்த நம்பிக்கை
நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்
அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி
நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார்
என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்,

இறைவன் இருக்கிறானா ,இல்லையா என்பது
நமக்கு தேவையில்லாத சிந்தனை
இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று
அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால்
இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும்
எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான்
மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு,
கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண்,
எல்லாம் இருக்கிறது ஆனால் எந்த அளவு
இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது
அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும்
உடனே வைத்தியர் அதை சமனப் படுத்த
மருந்து தருகிறார்
அது போல நம்முடைய சுயநலத்துக்காக
நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்
ஒரு பற்றுக் கோல் போல நமக்குப் பயன் படுகிறது
ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக் கோல்
சற்றே பருத்து ,சுயநலம் அதிகமாகும் போது
பொதுநலம் மறந்து போகிறது


No comments: