திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 8

ஆன்மீகம் என்பது என்ன….?
மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி
ஒன்று இருக்கிறது,அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று
நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து
ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது
என்றும் சொல்லலாம்
அல்லது மனிதன் ஏற்கெனெவே இருக்கும்
ஆன்மீகத்தை உணரத் தலைப்பட்டான்
என்றும் கொள்ளலாம்


இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்ரு இருக்கிறதாக நம்பத் தொடங்கின
அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு
தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன
இந்த இறை நம்பிக்கைதான் இன்று வரை நம் எல்லோறையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது
ஆன்மீகம் என்று ஒரு வழியினால்தான்
மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்

நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை
நம்மை நாமேதான் காப்பாறிக் கொள்ளவேண்டும்
என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்
அப்படிப்பட்ட நாதீக வாதிகளுக்கு
“ உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு “
என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்
இடுக்கண் வரும்போது அதைக் களைய
ஒரு நண்பனாவது வேண்டும் ,அப்போதுதான்
ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்ரு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும் ,இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்
கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு
சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம்
அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது
தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க
,அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை
என்று தீர்மானமாக எண்னுவதால்தான் உயிரை
விடத் தீர்மானிக்கிறார்கள்

அப்படி தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்
அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்
அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான்
என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்


No comments: