திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 10

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ,எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான்அங்கு ப்ரச்சனை முளைக்கிறது
தெய்வம் ,இறைவன், ஸ்வாமி,அல்லா,யேசு கிருஷ்ணன்,ராமன் ,வினாயகன்,சிவன், சக்தி,என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே ஒன்றே குலம் அது மனித குலம்,ஒருவனே தேவன் அவன் பொதுவானவன், எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன
என் தாயை நான் அம்மா என அழைப்பேன், என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள்என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள்,சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள், யார் எப்படி அழைத்தாலென்ன,என் அம்மா தானேஅதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்ஆனால் இருப்பது ஒரே தெய்வம்,அது இறைவன் நமக்கும் மேல் பெரியவன்,நம்மைக் காப்பவன்அவ்வளவுதான் ,இந்த உண்மை புரியத்தான்,ஆன்மீகம் என்று ஒன்றை பெரியவ்ர்கள் ஏற்படுத்தினார்கள்
அந்த ஆன்மீகத்தின் நோக்கமே,பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே,நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து,நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு,பிரிந்து,பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவை சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள்என்னும் நிலைமைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம்,(மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள் )
மக்களை மாக்கள் நிலைக்கு தள்ளும்,பிரிவினையை அரசியல் வாதிகள் வேண்டுமானால்அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்என்று ஒரு பழ மொழி இருக்கிறது,ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான்அவர்களுக்கு வசதி,ஆனால் நாம் இதை உணர்ந்து ,ஜாதி,மதம் ,இனம் ,மொழி ,கலாச்சாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு,மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து,மனதால் ஒன்றுபட்டால்மனிதம் பிழைக்கும், எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ,அங்கு எந்த வித பேதமும் இல்லாமல் அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்,அங்கே மனிதம் மலரும் , விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும்,கடவுள் மதத்திலில்லை,ஜாதியிலில்லை,இனத்திலில்லை,மொழியிலில்லை நிறத்திலில்லை,மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான் ஆமாம்,மனிதம் தான் கடவுள்கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்,கடந்தவன் என்று பொருள்கட+உள் உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று,பார்க்க ,உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும் உட்ப்ரயாணம் தேவை, உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம்அன்பு ,கருணை ,இரக்கம் சக உயிர்களை மதித்தல் மனிதனை மனிதனாக மதித்தல்மனிதனை மனிதனாகவே நேசித்தல்,மக்களை மாக்களாக்காமல் மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல் மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள்,இறைவன்அதுதான் ஆன்மீகம்!

1 comment:

Anonymous said...

மிக அழகாக ஆன்மீகத்தை சொல்லி வருகின்றீர்கள்.
நன்றி.


//குணத்தில் இருக்கிறான் ஆமாம்
மனிதம் தான் கடவுள்
கடவுள் //


குணம் இருக்கும் இடத்தில் தான் மனிதம் இருக்கும் அந்த மனிதம் தான் கடவுள்.

ஆதலால் மனிதத்துக்குரிய குணத்தை வளர்த்துக் கொண்டால் கடவுளாகி விடாலாம் அல்லவா.

பஞ்சமா பாதகங்களை விலக்கி அனைவரிடமும் பரிவுடன் பழகு.
உன்னைப் போல் அடுத்தவனையும் நினை என்று
அந்த குணங்களை வளர்த்துக் கொள்வதற்கே மதங்கள் பயிற்றுவிக்கின்றன.

ஆலயங்களில் உபன்யாசங்கள் அடிக்கடி நடக்க வேண்டும். நல்ல விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதான் சமயங்களில் சாரம் இருக்கும்.