திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 3.

ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குதான் இதை உதாரணமாக,சொன்னேன்

நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம்
ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர்,அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன்,பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாக கயிறால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை, இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல் படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது,இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான் ,ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்

பொதுவாக ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்கு சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்,அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம், ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது , கூட்டாக முயற்சி செய்யும்போது,அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது
பெற்றோர்கள், மனைவி ,குழந்தைகள்,அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டு பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது ,தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி, இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம் நாம்,பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்
ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படி துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது


No comments: