திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, February 24, 2009

ஆன்மீகம்-- 1. கடவுளும் மனிதனும்

“ஆன்மீகம்”


ஆன்மீகம் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது ஒரு நண்பர் என்னைக் கேட்ட ஒரு கேள்விதான். அந்தக் கேள்வி, "விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? உண்மையில் எது முக்கியம்?" என்கிற கேள்வியே. என்னை மிகவும் சிந்திக்க வைத்தது அதற்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில் எழுதி இருக்கிறேன்.

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும் சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகச் செயல் பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால், புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது. நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் எல்லோருடைய முழு மனதோடு கூடிய சம்மதத்தையும் எம்மதமாயிருந்தாலும் சரி, அனைத்து சகோதரகளும் "மனிதம்" என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம் முழு மனதோடு. கடவுள் நம்பிக்கை, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம் எல்லாமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை. அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வு அவசியமற்றது என்று தோன்றுகிறது.

"கண்ணுக்குத் தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்கையில் மிக முக்கியமான பங்காகக் கடவுளை வைத்திருக்கிறானே“ என்கிற பதில் நம்மை யோசிக்க வைக்கிறது. இவைகள் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது. மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வார். மேலும் விஷயமறிந்தவர்கள், எப்போதும் நல்ல சக்தி ஒன்று, கெட்ட சக்தி ஒன்று, ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு இரு சக்திகளும் நம்மை ஆட்டிவைக்கின்றன, கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.

சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் சொல்லியபடி திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது, நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்கக் கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லை. விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக் கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாமெதையுமே செய்ய முடியாது. சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஆக வேண்டும், அதுதான் ஆன்மீகம். கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்க முடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்.

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும், மனிதம் காப்பாற்றப்பட்டாலே ஆன்மீகம் காப்பாற்றப்படும்.நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று

கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்

கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,



No comments: