திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 12, 2009

பழமொழி -6. வட்டிக்குவாங்கி அட்டிகை பண்ணு,அட்டிகையைவிற்று வட்டியைக் கட்டு

பழமொழி ஆய்வு 6 :-

வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு

இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

நமக்கு அடிப்படை தேவைகளே
இருக்க இடம் , உண்ண உணவு ,குடிக்கத் தண்ணீர்
இந்த மூன்றுக்குமே நாம் போராட வேண்டியிருக்கிறது
நம் அரசியல் அமைப்பு நமக்குத் தரும் வசதிகள்
அப்படி இருக்கின்றன,ஆனால் தற்போது நாமெல்லாரும் நிறைய சம்பாதிக்கிறோம்
நிறைய செலவழிக்கிறோம்,ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் சம்பாதித்ததும் குறைவு, செலவழித்ததும் குறைவு
பெரும் பான்மையான மக்கள் பேராசை இல்லாமல் இருந்தார்கள்
அப்படி இருந்தும் சிலபேர் பேராசைப் பட்டதால்
வந்த சொல் வழக்கு இது


கண்ணை விற்று சித்திரம் வாங்கியதைப் போல என்று சொல்லுவார்கள்,
அது போல அந்தக் காலத்தில் பேராசைப்பட்டவர்கள்
பொன் நகை போட்டுக் கொள்ளுதல் அந்தக் காலத்தில் மிகவும் மதிப்பான விஷயம்,
அந்தக் காலத்தில் என்ன ....?
இந்தக் காலத்திலும் அதே நிலைமைதான்
அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை
என்னும் அலங்கார நகையை வாங்குவார்கள்
ஒட்டியாணம் என்னும் நகை இடையை அலங்கரிக்கும்
கைகளில் மோதிரங்கள், கழுத்தில் தங்க முகப்படாம்கள்
காதிலே வைரத் தோடுகள் எல்லாம் அணிந்து கொண்டு
மினுக்கினால்தான் அது மதிப்பு என்று நினைத்துக் கொண்டு
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்னும் பழமொழியை
மதிக்காமல் அளவுக்கு அதிகமாக தகுதி உணராமல் வீண் செலவு
செய்துவிட்டுபிறகு அந்த வலையிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவார்கள்
மக்களின் இந்தப் பேராசையை பயன் படுத்திக் கொண்டு
சில பேர் தங்கள் கையிலிருக்கும் பணத்தை
வட்டிக்கு ஆசைப்பட்டு பலபேருக்கு கொடுத்து
அனியாய வட்டி வாங்கி கொழுத்த பணக்காரகளாக
ஆவதற்கு சுலபமான வழியாக மக்களின் இந்த வேண்டாத
குணத்தை உபயோகித்தனர்

மக்களின் பேராசை என்னும் வேண்டாத உணர்வு
எந்த அளவு அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது
என்று நமக்குப் புறிய அளவு கோலாக இந்தப் பழமொழி
பயன்படுகிறது

இதே உணர்வு இப்போதும் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது
என்பதில் சந்தேகமே இல்லை...!
இப்போதெல்லாம் நம் செலவு செய்ய பணம் கூடத் தேவையில்லை
ஒரு சிறு அட்டை போதும்
ஆனால் பணத்தை திரும்ப செலுத்த பணம் வேண்டும்
இந்த விஷயத்தை அனேகமாக அனைவரும் மறந்தாற்போல
அட்டையை வைத்து செலவழிக்கிறார்கள்
பிறகுதானே கொடுக்க வேண்டும் என்கிற தைரியம்
பலரை கீழே அதளபாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது
அதுவும் போதாக் குறைக்கு கணிணி விறபன்னராயிருக்கும் சிலர்
அடுத்தவரின் கடவு எண்ணை உபயோகித்து
அவருடைய வங்கியில் உள்ள அத்தனை பணத்தையும் கபளீகரம் செய்யும்
குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்
அத்தனைக்கும் காரணம் மனிதர்களின் பேராசைதான்

வருமானத்துக்கு தக்கபடி செலவு செய்து வளமாக
வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்
நாமோ அளவுக்கு அதிகமாக செலவு செய்து அவமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்
கையில் இருக்கும் காசை எண்ணிப் பார்த்து செலவு செய்ததால்
அவர்களுக்கு வழ்க்கையின் திட்டமிடுதல் பழகி இருந்தது
இப்போது அப்படியில்லை செலவு செய்து விட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்

ஒரு காலத்தில் தங்க நகை வாங்குவது தங்களுடைய
அந்தஸ்தை காட்டிக் கொள்ளவும் , அதற்குப் பிறகு
ஆபத்துக்கு தங்கம் உதவும் என்கிற எண்ணத்தினாலும்
தங்கம் வாங்கினர்...இப்போது ஆடம்பரத்துக்கே தங்கம் அதிகம் பயன் படுகிறது
அரசே தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது
எல்லா நாடுகளும் தங்கம் வைத்திருக்கும் நாடுகளை
தராசில் நிறுத்து தகுதியை எடை போடுகிறது

தங்கம் வாங்குவதில் மீண்டும் விற்பதில் உள்ள சிக்கல்களை ஆரய்ந்தால்

நாம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் அதைத்தவிர வரிகள் என்று ஏராளமான செலவை நமக்கு ஏற்படுத்தி லாபம் சம்பாதிக்கும் தங்க வியாபாரிகள்
அதே நகையை அவர்களிடம் மீண்டும் கொடுத்துவிட்டு
வேறு நகை வாங்கும் போது நாம் கொடுக்கும் தங்கத்தின் விலையை வெகுவாகக் குறைத்து மீண்டும் செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு, மீண்டும் அவர்களிடம் வாங்கும் நகைக்கு செய் கூலி சேதாரம் எல்லாம் போட்டு,,..... அப்பப்பா
நாம் உழைத்த பணம் நம்மை அறியாமலே தங்க நகை வியாபாரிகளால் சுரண்டப் படுகிறது
அது மட்டுமல்ல கற்கள் பதித்த நகைகள் வாங்கினால்வேறு வினையே வேண்டாம்
நமக்கு அவர்கள் விற்கும்போது கற்களுடன் சேர்த்து எடை போட்டு அனியாய விலைக்கு விறபார்கள், நாம் அதை மீண்டு அவர்களிடம் விற்கும்போது 'கற்களையெல்லாம் எடுத்து விட்டு, அதற்கு மேலும் அந்த தங்கத்தை உருக்கி அழுக்கெடுத்து
அப்போது எவ்வளவு எடை இருக்கிறதென்று கணக்குப் பார்த்து
நமக்கு செலவு வைக்கிறார்கள், இதைபோன்ற அனியாயத்தை நாம்தினமும் சந்திக்கிறோம்

ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டத்துக்கு பஞ்ஜமில்லை
இத்தனைக்கும் காரணம்
நம்முடைய அறியாமை,பேராசை,வீண் படாடோபம்
இதைத்தான்
பெரியோர் வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து
அட்டிகை விற்று வட்டியைக் கட்டு என்று சொல்லி இருக்கிறார்களோ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ