திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 12, 2009

பழமொழி -7. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “

கேட்டாலே சிந்தனையை தூண்டும் பழமொழி இது

கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன்அம்பலவாணன் உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான்அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும் அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன்ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள்இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படிகொண்டாட்டம் வரும் ....?வரும் ….!!!!!! கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால்மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர்மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும்கலை பயன்பட்டு வந்தது,....ஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால்இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள்கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர்அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர்அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும்மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து,பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர்அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால்ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?" விஞ்ஞானமும் மெய்ஞானமும்தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காதுஆனால் அவைகளை இணைக்கும்நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம்,,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம்கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்றஇணைப்புகள், இவைகள் இல்லாது போயின் மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரிவலுவிழந்து போய்விடும் "இவற்றை உணர்ந்து பெரியவர்கள்இரண்டு தண்டவாளங்களை இணைக்கும்நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாகசெயல்பட்டிருக்கிறார்கள்மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தைஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள்ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே,இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை,இரண்டு படவைக்கிறார்கள்கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சைசெவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்,கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்திநல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள்இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை ,திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்தஅதே பழ மொழியைதங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுமக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டுமக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்குசேர்த்துக் கொள்கிறார்கள்இவை புறியாமல் மக்கள் மாற்றிமாற்றி வேறு வழியில்லாமல் மீண்டும் அவர்களுக்கேவாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு , செல்கிறார்கள்அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால்அந்தப் பணத்தின் அருமை தெரியும் இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டுஅதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய்வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள்இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்தஅக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்மக்களுக்கும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தினார்கள்......இதை நன்கு உணர்ந்துதான் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனரோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ


No comments: