திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 12, 2009

பழமொழி- 8. இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை
இது ஒரு அருமையான சொல்லாடல்
முதுமொழி,அல்லது பழமொழி


உலகிற்கே மருத்துவம் சொல்லிக்கொடுத்தவர்கள் நம்மவர்கள்
சித்த மருத்துவர்கள்,நம் மூலிகைகள் உலகிற்கே நோய் தீர்க்கும் பச்சிலைகள் ஆகும் ஆனால் அது நம் கண்ணில் படுவதில்லை
இயற்கை மூலிகைகள் சிறந்த நோய் நிவாரணிகள் என்று பல சித்தர்களும் யோகிகளும் உணர்த்தி இருக்கின்றனர்
சித்தர்களால் மூலிகைகளின் மகத்துவம் தெரிந்து கண்டு பிடிக்கப்பட்ட்துதான் சித்த மருத்துவம்
அது மட்டுமல்ல பல கலைகள் நம்மால் கைவிடப்பட்டு அன்னிய நாடுகளால் கவரப்பட்டு முதன்மை பெற்ற கலைகளே உதாரணமாய் சித்தமருத்துவம் ,யோகம், தியானம், தவம்,
இன்னும் பல, கராட்டேஎன்னும் கலை கராட்டே என்றால் சீன மொழியில் வெறும் கை என்று பொருள் ,முதன் முதலில் வெறும் கையையே ஆயுதமாகப் பயன் படுத்த முடியும் என்னும் கலையைக் கண்டு பிடித்தவர் நம் நாட்டினரே,
பல இதிகாச புராணங்களில் ஒருவரை வாழ்த்துவதற்கோ
அல்லது சாபம் அளிப்பதற்கோ வலது உள்ளங்கைகளையே பயன் படுத்தினர், மேலும் தொடு வர்மம் தொடாமல் தூர இருந்தே வெறும் கைகளைக் காட்டியே எதிராளியை செயலிழக்கச் செய்தல் ,அல்லது வெறு கையில் உள்ள விரல்களைப் பயன்படுத்தி எதிராளியின் நரம்புகளில் வலியை ஏற்படுத்தி எதிரே இருப்பவரின் கைகளையோ கால்களையோ அல்லது மொத்த இயக்கதையோ நிறுத்தமுடியும் என்று நிரூபித்தவர்கள் நம் முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் என்பது சரித்திரம்
என்றால் வெறும் கை, களரி யுத்தம்,மல்யுத்தம் wwwf,
வான சாத்திரம், மனோதத்துவம் , பொதுவுடமை, மனிதம், நேசம்
தொடு வர்மம், படு வர்மம், யோகம் தியானம், போன்ற அனைத்துக்குமே தாய் வீடு இந்தியா,
பொதுவுடமைக் கொள்கைகளை கடைப்பிடித்தவர் வள்ளுவர்

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருப்பார்
நல் விருந்து வானத்தவருக்கு ,

அதிரூப சுந்தரிக்கும் அழகில்லாப் பெண்களுக்கும் அமைப்பெல்லாம் ஒன்றேதான் அளவில்தான் வேறு பாடு
ஆனால் நாம் நம் மனைவியை விட அவர்கள் அழகென்று நினைப்போம்,நம் இயல்பு அது,

70 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தேசப்பிதா சொன்னதைத்தான் இன்று 2009ம் ஆண்டு திரு ஒபாமா சொல்கிறார்
ஆனால் நாம் நம் காந்தியை மதிக்கவில்லை
ஒபாமா சொன்னால்தான் காதிலேயே வாங்குவோம்


பசுமையும் ,பனி மேகங்களும்,கானலும் ,நாம் இருக்கும் இடத்தில்
தெரியாது....இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்
அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்

ஆனால் நமக்கு எப்போதுமே
இங்கிருக்கும் பச்சை தெரிவதே இல்லை
அதாவது தோட்டத்துப் பச்சிலை நம் கண்ணுக்கு தெரியாது
பச்சிலை மருத்துவர் சொல்லும்போதுதான் அந்தச் செடி மூலிகை என்றே நமக்குத் தெரியும்
எப்போதுமே நமக்கு ஒரு குணமுண்டு நம்மவர் அறிவாளியாய் இருந்தாலும் ,அவர்கள் சொல்லும் போது மதிக்காத
நாம் அயல் நாட்டார் சொன்னால் உடனே மதிப்போம்
அப்படி ஒரு குணம் நமக்கு இருக்கிறது

வெளி நாட்டுக்கு சென்று அங்கு எங்கேயும்
குப்பையை போட முடியாமல் பத்திரமாக வைத்திருந்து
அயல் நாட்டில் கடைப்பிடித்த அத்தனை நற்குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, விமானம் மும்பையில் வந்து
இறங்கியவுடனே கண்ட இடத்தில் அதே குப்பையை போட்டு போட்டுவிட்டு செல்பவர்கள் தாமே நம்மில் பலர்
தண்டனை கிடைக்குமென்றால் ஒரு மாதிரி தண்டனை கிடைக்காது என்கிற தைரியமிருந்தால் ஒரு மாதிரி நடப்பவர் நம்மில் பலபேர்

சந்தர்ப்பம் கிடைக்காமையினால் தவறு செய்யாதவனை விட
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன்தான் உண்மையான நேர்மையாளி.....
வெளிநாட்டிற்கு கொடுக்கும் அதே மரியாதையை நம் நாட்டுக்கும் கொடுத்தால்எவ்வளவு நன்மை நடக்கும், நாம் வெறுமனே இருந்து கொண்டு அரசாங்கத்தை மட்டும் குறைகூறிக் கொண்டே காலம் தள்ளாமல் நம்முடைய நாட்டையும் சுத்தமாக வைத்துக்
கொள்ளலாம் அல்லவா, நமக்கு அயல் நாட்டைப் பார்த்தால் அப்படி ஒரு ப்ரமிப்பு,நம் நாட்டில் இல்லாத அழகுகளா,இயற்கை கொஞ்சும் சுற்றுலாத் தலங்களா,...?

ஆனால் அவைகளை பராமரிக்க நாமும் முயல மாட்டோம்
நம் அரசாங்கமும் முயலாது, இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதானே, இக்கரையின் பச்சை ,பசுமை ,நன்மை
எதுவுமே நம் கண்களில் படாது

திரைஉலக இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கேட்பார்,
உங்களுக்குத் தெரிந்த பத்தினிகளின் பெயரை சொல்லுங்கள்
என்று ஆளாளுக்கு நளாயினி, கண்ணகி,என்றெல்லாம் சொல்லுவர், பாக்யராஜ் கேட்பார் உங்களுக்கு பத்தினி என்றவுடன்
உங்கள் மனைவியின் பெயர் நினைவுக்கு வரவில்லையா என்று
அது போல நமக்கு நம்மிடம் உள்ள அனேக திறமைகள்
தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவைகளை நாம் மதிப்பதில்லை, தமிழ் பேசி நடிக்க நம்மிடம் இல்லாத
தமிழ் நடிகைகளாஆனால் மும்பையிலிருந்து அல்லது அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழே பேசத்தெரியாத அவர்களுக்கு, உயர்தர உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்து
தமிழ் சொல்லிக் கொடுத்து,தமிழை அவர் மொழியில் அப்படியே எழுதிக் கொடுத்து பேச வைத்து திரைப்படம் எடுத்தால்தான்அது பெரிய தகுதி என்று நம்முடைய இயக்குனர்கள் நினைக்கிறார்களே அதுபோல, நம்மை மதிக்க நாம் எப்போது கற்றுக் கொள்கிறோமோ, அப்போதிலிருந்து நம் நாடு இன்னும் வளமாக
முன்னுக்கு வரும் என்பதில் ஐய்யமில்லை, இவற்றை சுட்டிக் காட்டத்தான் வருங்காலத்தை மனதில் வைத்து அன்றே தீர்க்க தரிசனமாக இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்களோ..?

அல்லது நதியின் இரு கரைகளில் இருக்கும்
இக்கரையின் மேல் நாம் அக்கரை கொண்டு கவனித்தால்
அதாவது பயிர் செய்தால் அந்த விவசாயம் மூலமாக
அக்கரையும் பசுமையாகும் என்று கூட சொல்லி இருக்கலாம்
நம்முடைய நாகரீகமே நதிக்கரையில் தோன்றியவைதானே
ஆகவே இக்கரையின் மேல் அக்கரை வைப்போம்
முதலில் நம் நாட்டின் வளத்தைப் பற்றி யோசிப்போம்
நம்மால் முடிந்த அளவு நம் நாட்டுக்காக ஏதேனும் அக்கரையாகசெய்வோம்
இக்கரை பச்சையாகும் ,பசுமையாகும்
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ




No comments: