திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, June 25, 2008

பழமொழிகள் ஒரு ஆய்வு

பழமொழிகள் நம்மால் அடிக்கடி உபயோகப் படுத்தப் படுகிறது
ஆனால் பொருள் தெரிந்து உபயோகிக்கிறோமா,,,?
என்பது ஆராய வேண்டிய விஷயம்பழமொழிகள்
அனுபவத்தின் வெளிப்பாடாக கருவாகி வெளிப்பட்டு
முழுமை அடைகிறது ,
அப்படி முழுமை அடையும் போது
சற்றே திரிந்து வேறு பொருள் வருமாறும்
உருமாறுகிறது..அலசிப் பார்ப்போம்
எவ்வளவு அருமையான பழமொழிகள்
ஒவ்வொரு பெரியவர்களும் ஒரு அருமையான
பழமொழி சொல்லுகிறார்கள்,
அது சரி இப்போது காலம் இருக்கும் இருப்பில்
இந்தப் பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம்
யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள் ,
என்கிற எண்ணம் தலை தூக்கினாலும்
நல்லதை சொல்லுவோம், கேட்டால் கேட்கட்டும் ,
கேட்காவிட்டால் அது அவர்கள் இஷ்டம்,
என்று மனதைத் தேற்றிக் கொண்டு எழுதுகிறேன்
அது சரி பழமொழிகள் எப்படி ஏற்பட்டன
என்று ஆராய்ந்தால் எல்லாப் பழமொழிகளுமே
அனுபவத்தால் ஏற்பட்டன என்று ஒரு நல்ல
தீர்ப்பு கிடைக்கிறது,........
பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு,
முற்றிய நிலை,மீண்டும் பல மரங்களுக்கு விதைகள்
கொடுக்கப் போகும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி,
என்றெல்லாம்பொருள் வருகிறதுஅனுபவ முதிர்வே பழம் ,
பழமொழிஎன்றும் பொருள் கொள்ளலாம்
அப்படியானால் எல்லாப் பழ மொழிகளுமே
ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக இருக்க வேண்டும்,
அல்லது பெரியவர்கள் உணர்ந்து சொன்ன பழமொழிகள் ,
சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி தவறான பொருள்
தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்
ஆகவே உண்மையாக எந்த பொருள் வருமாறு
பெரியவர்கள் கூறினர் என்பதை ஆராய்ந்தால்
மிகவும் நல்ல விஷயங்கள் கிடைக்கும்
என்று நம்புகிறேன்,அராய்ச்சியை தொடங்குவோம்
நம் சிற்றரிவுக்கு எட்டியபடி

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com

1 comment:

Anonymous said...

yes. bookmarked post