திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, June 25, 2008

பழமொழிகள் ஆய்வு எண் 1

" பழ மொழிகள் "
ஒரு ஆய்வு எண் : ஒன்று


முதல் பழமொழி :
1. மூத்தது மோழை இளையதுகாளை

இது அடிக்கடி பெரியவர்களால் உபயோகப்
படுத்தப் படும் பழமொழி,
மூத்தது மோழை இளையது காளை "
என்னும் சொல்வழக்கை எடுத்துக் கொண்டால்

வயல் வெளிகளில் ,பயிருக்கு வேண்டிய தண்ணீரை சேமித்துவைக்க,எல்லையைக் குறிக்க,
வரப்பு கட்டுவார்கள்,அந்த வரப்புகளுக்கு அடியில்
வழுவழுப்பான துவாரங்கள் இருக்கக் கூடும்,
அந்த துவாரங்களுக்கு "மோழை "என்று பெயர்,
பெரியவர்கள் வரப்பிலே பாய்ச்சும் தண்ணீர் நிற்காமல்
போகுமானால் ஏதோ ஒரு இடத்தில் "மோழை" இருக்கிறது
என்று சொல்லி அந்த மோழையைக் கண்டுபிடித்து
அடைக்கச் சொல்லுவார்கள்
அந்த மோழை எப்படி வழுவழுப்பாக இருந்து கொண்டு
தண்ணீரை தக்கவிடாமல் செய்கிறதோ அதுபோல
மூத்த குழந்தைகள்,மனதிடமில்லாமல், விவேகமில்லாமல்,
தைரியமாக நிமிர்ந்து நிற்காமல் ,நல்லதை மனதில் இருத்திக் கொள்ளாமல்இருக்கும் என்பது போன்ற
பொருள் வருமாறு இந்தப் ,,,,,பழமொழி அமைந்திருக்கிறது
என்று எண்ணுகிறேன்,

அதே போல் இளையது காளை என்பர்
காளை என்றாலே இளமை,வலிமை,வேகம்
எதிர்கொள்ளும் திறமை,எதையும் எதிர்க்கும்
மனப்பான்மை ,என்றெல்லாம் பொருள் வரும்
ஆகவே மூத்ததாக மோழையை அடைத்துவிட்டு
அடுத்ததாக காளையை பயன்படுத்தி ஏர் உழுதால்தான்
பலன் வரும் என்னும் பொருள்படவும் சொல்லி இருக்கலாம்




யோசித்து பார்த்தால் நடைமுறை வாழ்வில்
இந்தச் சொல் உண்மையோ என்று தோன்றுகிறது
பல இடங்களில் மூத்த குழந்தையைவிட
அடுத்த குழந்தை இன்னும் சற்று தூக்கலான,
புத்திசாலியாக,சூட்டிகையாக, துருதுருப்பாக இருக்கிறதோ
என்று தோன்றுகிறது,இதற்கு விஞ்ஜான ரீதியாக
ஏதேனும் விளக்கம் இருக்குமோ
என்று ஆராய்ந்தால்

மனிதனின் உடற்கூறு, மனக்கூறு
இரண்டையும் ஆராய வேண்டி இருக்கிறது
ஒவ்வொரு மனிதனும் நாகரீக கட்டுப்பாடு
காக்க வேண்டி,பருவ விழிப்பு ஏற்பட்டு பல
காலம் வரையில்,தன்னுடைய சுயகட்டுப்பாட்டைக் காக்கவேண்டிய ,அவசியத்திலிருப்பதால் தன்னுடைய
இயல்பான காமத்தை, மிக இயல்பான உடல் இச்சையை
கட்டுப் படுத்திக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலையில்
இருக்கிறார்கள், அப்படி அடக்கி வைக்கப் பட்ட காமம்
உடல் இச்சை , அதைத் தணித்துக் கொள்ள
தனக்கென்று ஒரு துணை கிடைத்தவுடன்
முழு வேகத்துடன் செயல் பட ஆரம்பிக்கிறது,
கட்டவிழ்த்துவிட்ட காளை போல்.......
திருமணம் ஆன உடனே அன்பு பாசம், காதல்,
நேசம் , அனைத்தும் இருந்தும்.....
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும்
அவற்றையெல்லாம் தாண்டி காமத்துக்கு முதலிடம்
தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர்
இது இயல்பு ,தவறென்று சொல்லவில்லை
இங்கே சற்று நிதானப்பட்டு யோசிக்க வேண்டியுள்ளது
அப்படி தம்பதிகள் இருவருமே உணர்ச்சி பூர்வமாக
செயல்படும்போது அங்கே காதல், பாசம், நேசம்,அன்பு
என்று எல்லாம் இருந்தாலும் அவைகள் பின்னுக்கு
தள்ளப்பட்டு காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கிறது
அப்படி காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கும்
அந்த சேர்க்கையில் மனித உடலின் உணர்வுகள்
நரம்புகள், ரத்தம், ஆண்மை ,பெண்மை
போன்ற பல கலவைகள் செயல் பட்டாலும்
உள்ள பூர்வமாக ,புத்தி பூர்வமாக அந்த சேர்க்கை
நடைபெற,சந்தர்ப்பம் மிகக் குறைவு என்பதே
என்னுடைய கணிப்பு
அதனால் அப்போது தோன்றும் கரு காமத்தின்
அடைப்படையில் விதைக்கப் பட்ட கரு ,
அப்படிப் பிறக்கும் முதல் குழந்தைகளுக்கு
உணர்ச்சி பூர்வமான முடிவுகள் எடுக்க இயலும்,
உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் முடிவுகள் சரியான
விளைவுகளைத் தருவதில்லை என்பது
பெரியோர்களின் அறிவாளிகளின் ஆராய்ச்சி
பூர்வமான முடிவு,ஆகவே
மூத்தது மோழை என்ற பழமொழி சரியானதாக
இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது

அது மட்டுமல்ல

மனரீதியாக உடல் ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
இயல்பாக எந்த ஒரு மனக்கிலேசமும் இல்லாமல்
இல்லறத்தை ஆரம்பித்து மனதால் கலந்து பிறகு
உடலாலும் கலக்க,எளிதான வழியாகவே
திருமணம் என்னும் அங்கீகாரமும்
பெரியவர்களாக ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து
முதல் இரவு என்று அழகாக பெயர் சூட்டி
இந்த வைபவத்துக்கு ஏற்பாடு செய்து
தம்பதிகளை அனுமதிக்கிறார்கள்

அப்படி இல்லாமல் தாங்களாகவே சரியான
வழிகாட்டுதல் இல்லாமல் பருவ ஈர்ப்பை காதல்
என்று எண்ணி,காமத்தின் வலையில் விழுந்து
சூழ்நிலை அழுத்தத்தால்,காமத்தின் இயல்பான
வெறியினால் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவித்து
வேறு வழி இல்லாமல் திருமண பந்தத்தில்
மாட்டிக்கொள்பவர்களுக்கும்,
அல்லது திருமண பந்தம் ஏற்படாமல்
ஏமாற்றப் பட்டு அவல வாழ்வு வாழும் பெண்களுக்கும்
பிறக்கும் குழந்தைகள் உள்ளத்தாலோ,உடலாலோ
ஊனமான குழந்தைகளாக பிறக்கின்றன என்பது
அனுபவ பூர்வமான உண்மை

இரண்டாவதாக அதே தம்பதியர் ஒரு குழந்தை பெற்ற
நிலையில் ஏற்படும் அனுபவங்களை அடிப்படையாக
வைத்து அடுத்த குழந்தை பிறப்பை கொஞ்ஜம்
தள்ளிப் போடுக்கிறார்கள்
அங்கே அந்த தம்பதிகளின் காமம் சற்றே மட்டுப்பட்டு’
திட்டமிடுதல் உருவாகிறது,முதல் குழந்தைமேல்,
இல்லறத் துணையின் மேல் பாசம் , அன்பு
கருணை, எல்லாம் அதிகரிக்கிறது
எப்போது திட்டமிடுதல் உருவாகிறதோ
அங்கு விவேகம் தலையெடுக்கிறது.
பெண்மைக்கும்,ஆண்மைக்கும் வெற்றிபெற்றுவிட்டோம்
என்கிற தைரியம்வருகிறது,
அதற்குப் பிறகு அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தை
மூத்த குழந்தையை விட அறிவாளியாகவோ,
விவேகமாகவோ,,தைரியமாகவோ இருக்க,
வாய்ப்புக்கள் அதிகமாகிறது
பல வீடுகளில் கவனித்திருக்கிறேன் மூத்த குழந்தைக்கு
அடுத்த குழந்தையின் சுட்டித்தனங்களால், அறிவு சார்ந்த
புத்திசாலித்தனமான விளையாட்டுக்களால், விவேகமான
செய்கைகளால் எல்லோரையும் கவரும் திறமை,
பெற்றிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்

அபூர்வமாக பல மூத்த குழந்தைகளும் புத்திசாலியாக
இருப்பதுண்டு, அது விதிவிலக்கு என்றே படுகிறது..!
இயல்பாகவே வரப்பு மோழை இல்லாமல் சில சமையங்களில் அமைந்துவிடுதல் போல ,
ஆகவே பெரியோர் சொல் வேதம்
என்று வாழ்தலில் தவறில்லை,
பழமொழிகளை பெரியோர் வாக்காக மதிக்கலாம்,
அல்லது ஆராய்ச்சி செய்துதேர்ந்தெடுத்து...
பயன்பெறலாம்...!!!!!!!!!

அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: