திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, August 12, 2007

குழந்தைகள் ஜாக்கிறதை

" குழந்தை வளர்ப்பு "




குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்
அதிக கவனம் தேவை தாய்மார்களுக்கு


இது போல ஒரு சம்பவம் நடந்த்தது
அதை என் வருத்தம் சேர்த்து எழுத ஆரம்ப்பித்தேன்
அது கவிதையாய் த் தான் வந்தது
அப்படியே அளித்துள்ளேன்

ஒரு வயதுக் குழந்தை
அன்பாக தூளி கட்டி
ஆரிரோ பாடி தூங்கவைத்து
அலுப்பினால் கண்ணயர்ந்த்தாள்
அந்தத் தாயும்
அழுகை சத்தம் கேட்டது
அயர்வான தூக்கத்திலும்
எழுந்து வந்து தாய்மையுடன்
மேலும் கொஞ்ஜம் தாலாட்டி
கொஞ்ஜம் பாலுமூட்டி
தூங்கவைத்தாள் தாயவளும்
தானும் சேர்ந்த்து சோர்ந்து
தூங்கிப் போனாள்

தூக்கம் என்னும் கொடிய காலன்
துக்கத்தை அளித்தறியாமல்
துயில் கலைந்து தெழுந்து பார்த்தால்
தூளியிலே காலனவன் தேள் வடிவில்
குழந்தையினை தீண்டித் தீண்டி
குழந்தையின் அழுகைக் காரணம் புரியாமல்
தூங்கியதென்றெண்ணிக் துயில் கொள்ளப் போனாளே
குழந்தை மூச்சடக்கி விஷமேரி
நீங்காத் துயில் கொள்ள காரணமானாளே
அல்ட்ஷியமென்று சொல்ல மாட்டேன்
இறந்த்தை துயிலென்றெண்ணி

சேயதனைத் தவற விட்ட தாய்தானே
விதியின் மேல் பழி போட்டு பயனென்ன
வருமுன் காப்பதற்கு வழி கண்டு
காத்திடுவீர் குழவிகளை
ஜாக்கிறதை ஜாக்கிறதை ஜாக்கிறதை


அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: