திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, August 12, 2007

அணைக்கட்டு

அணைக்கட்டு

மூளை அணைக் கட்டில்
முழுவதுமாய் நிரம்பி
வெளியேறத்துடி துடிக்கும்
கருத்து மழை
வான வெளியினிலே
வலம் வரும் பேறரிவு
பெய்திட்ட பெரு மழையால்
மூளை அணைக்கட்டில்
முழுவதுமாய் நிரம்பி
வெளியேறத் துடி துடிக்கும்
கருத்து மழை

இன்னுமோர் சொட்டு வீழ்ந்த்தாலு ம்
உடைத்துக் கொள்ளும் பக்க சுவர்
வெடித்து சிதறும் கனம் மிக்க
பக்க சுவர்
மடை திறக்க வழியில்லை
ஏற்கெனவே பெய்த மழை
வெள்ளம் நிரம்பிய ஊர்
வெளியேற்றியே ஆகவேண்டிய
அபாய நிலை அணைக் கட்டில்

தானமளிக்க தயார் நானென்றாலும்
தாங்குதற்கு தகுதியான தருமிகளை
தானம் வாங்தற்கு தகுதியான
தமிழ் விரும்பிகளை
தேடித் தேடி அலைகின்றேன்
சீக்கிறம் வாருங்கள்
அபாய அறிவிப்பு
கன அடி அளவு கோல்
காட்டுதிந்த்த பயங்கரத்தை
அணைக்கட்டு
அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: