திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, August 12, 2007

மழையின் குழப்பம்

" மழையின் குழப்பம் "

மழைக்கு ஒரு குழப்பம்
பெய்வதா வேண்டாமா...?
பெய்தால் எப்போது பெய்வது
எங்கு பெய்வது ?
ஒருவன் வேண்டிக் கொள்கிறான்
இறைவா இன்று மழை பெய்யக் கூடாது
குப்பை அள்ளிப் பிழைப்பவன் நான்
குப்பைகள் நனைந்து விட்டால்
வயிறு காய்ந்துவிடும்

மற்றொருவன் வேண்டுதல்
இறைவா இன்றாவது மழை பெய்ய வேண்டும்
குடைகள் விற்கவே இல்லை
குடை தயாரிப்பவர் பட்டினி கிடக்கிறார்

விவசாயி வேண்டிக் கொள்கிறார்
நட்ட விதை முளைக்க மழை வேண்டும்

பயிர்கள் முற்றி வளர்ந்தவுடன்
மழை பெய்ய வேண்டாம் கதிர் அறுக்கும் வரை
விற்றால்தான் பிழைக்க முடியும்
குழ்ந்தை இன்னிக்கு மழை பெய்தால்
பள்ளிக்கூடம் விடுமுரை மழை பெய்யணும்

மாரி மாரி மக்கள் வேண்டுதல்
குழம்பிப் போனது மழை

வேண்டாத இடத்தில் மழை
வெள்ளப் பெருக்கு
வேண்டிய இடத்தில் இல்லை மழை
தன்ணீஈப் பஞ்ஜம்

என்னதான் செய்யும் மழை
எப்போது பெய்யும் மழை
மழைக்கு ஒரு குழப்பம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: