திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, August 9, 2007

ஆதி சங்கரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி

ஆதி சங்கரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி

அவர் ஒரு மண்டபத்தில் த்யானத்தில்
ஆழ்ந்திருந்தார்

நிஷ்டை கலைந்து அவர் பார்க்கும் போது
ஒரு பல்லி தலைகீழாக விழுந்து துடித்துக்
கொண்டிருந்த்தை அவர் பார்த்து விட்டு
அப் பல்லியை எடுத்து சரியாக
விட்டு விட்டு மீண்டும் நிஷ்டையில்
ஆழ்ந்தாராம்

மீண்டும் ஒரு முறை நிஷ்டை கலைந்து
அவர் பார்க்கும்போது
அப் பல்லி சிறிய பூச்சிகளை உணவாக
உட்கொண்டிருந்ததைப் பார்த்தாராம்
அப்போது அவர் புறிந்து கொண்டதாகச் சொன்ன விஷயம்

"எந்த ஒரு நல்ல செயலிலும் தீமை உண்டு
எந்த ஒரு தீய செயலிலும் ஒரு நன்மை உண்டு "

ஆக நன்மையில்லாமல் தீமை இல்லை
தீமை இல்லாமல் நன்மை இல்லை

ஒரு சொல் உண்டு ஸமஸ்க்ருதத்தில்

" யதா ராஜா ததா ப்ரஜா "
என்று

ஆளுபவர்கள் அனியாயம் செய்யும்போது
அப் பாவங்கள் மக்களின் மேல் தான் விழும் என்று
சொல்வார்கள்

அதனால்தான்

ராம் ராஜ்யம் என்று கம்பர் வர்ணிக்கிறார்

விதி வலியது அதை மீற
அதை எழுதிய ப்ரம்மனே சக்தியற்றவன்
இதைத்தான்

உபநிஷத்துக்களும், வேதங்களும்,
சொல்கின்றன
ஆகவே ஆண்டவன் நம்மை சோதிக்கும் போதெல்லாம்

" ஆண்டவன் நம்மைப் படுத்துகிறான்
என்று எடுத்துக் கொள்வதைவிட
ஆண்டவன் நம்மைப் பண்படுத்துகிரான்
என்று எடுத்துக் கொள்வோமானால் "


ஓரளவு நமக்கு மன சாந்தி கிடைக்கும்


அன்புடன்

தமிழ்த்தேனீ

http.thamizthenee.blogspot.com

No comments: