ஞானி என்பவன் யார்...?
முற்றும் துறந்தால்தான் முனிவனா...?
இதற்க்கும் ஒரு கதை உண்டு
நாரதர் தன்னைவிட பக்திமான் உலகிலே
யாருமில்லை என்று கர்வம் கொண்டு
நாராயணனிடம் போய் சொன்னாராம்
சதா சர்வ காலமும் நாராயணா நாராயணா
என்று உன் திருநாமம் உச்சரிக்கும் என்னைவிட
பக்திமான் யாராவது உல்கில் இருக்கிறார்களா?
என்று கேட்டாராம்
அதற்கு நாராயணனும் பூலோகத்தில் சென்று பார்ப்போம்
என்று கூறி அழைத்து வந்தாராம்
ஒரு ஏழை விவசாயி காலையில் கலப்பையை
எடுத்து கன்ணில் ஒற்றிக் கொண்டு
இறைவா அனைவரையும் காப்பாற்று
என்று சொல்லி விட்டு வயலுக்குப் போய் உழுதுவிட்டு
மதிய உணவுக்கு முன் அதே மாதிரி ஒரு முறை
இறைவனைத் தொழுதுவிட்டு பின் மீண்டும்
இரவு படுக்கப் போகும் போதும் அதே மாதிரி
தொழுதுவிட்டு படுத்துக் கொண்டானாம்
நாராயணன் நாரதரிடம்
இவர்தான் உம்மைவிட உயர்ந்த பக்தன்
என்று கூற நாரதர் எப்படி என்று வினவினாராம்
அதற்க்கு நாராயணன்
ஒரு கின்ணத்தில் தளும்பத் தளும்ப
எண்ணையை ஊற்றி ஒரு சொட்டு கூட
கீழே விழாமல்
மூவுலகமும் சுற்றி வா நாரதா அப்போது உன்னை
உயர்ந்த பக்தன் என்று ஒத்துக் கொள்கிறேன் என்றாராம்
நாரதரும் ஒரு சொட்டு எண்ணை கூட கீழே விழாமல்
மூவுலகும் சுற்றிவிட்டு நாராயணனிடம்
வந்து இப்போது ஒத்துக் கொள்கிறீரா என்று வினவ
நாராயணன் ஆமாம் இந்த மூவுலகப்
ப்ரயாணத்தில் எத்தனை முறை நாராயண நாமம்
உறைத்தீர் என்று கேட்க ஒருமுறைகூட
நாராயண நாமம் சொல்லாமலே மூவுலகும் சுற்றி வந்ததை
எண்ணி வெட்கப்பட்டாராம்
இப்போது சொல்லுங்கள்
எவ்வளவோ ப்ரச்சனைகள் இருக்கும் போதும்
அந்த மனிதன் மூன்று முறை
என்னை நினைத்தானே சிறந்த பக்திமான்
நீரா அல்லது அவனா ....?
என்று
நாரதர் வெட்கித் தலை குனிந்தாராம்
அதனால் சூழ்நிலைக் கைதிகளாய் நாம் இருந்தாலும்
அதற்கு நடுவே நம்மை சமன்ப் படுத்திக் கொண்டு வாழுகிறோமே
நாம் எவ்வளவோ பரவாயில்லை
என்பது என் கருத்து
அன்புடன்
தமிழ்த்தேனீ
திரு ஆதனூர் படியளந்த பெருமான்
Thursday, August 9, 2007
ஆதி சங்கரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி
ஆதி சங்கரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி
அவர் ஒரு மண்டபத்தில் த்யானத்தில்
ஆழ்ந்திருந்தார்
நிஷ்டை கலைந்து அவர் பார்க்கும் போது
ஒரு பல்லி தலைகீழாக விழுந்து துடித்துக்
கொண்டிருந்த்தை அவர் பார்த்து விட்டு
அப் பல்லியை எடுத்து சரியாக
விட்டு விட்டு மீண்டும் நிஷ்டையில்
ஆழ்ந்தாராம்
மீண்டும் ஒரு முறை நிஷ்டை கலைந்து
அவர் பார்க்கும்போது
அப் பல்லி சிறிய பூச்சிகளை உணவாக
உட்கொண்டிருந்ததைப் பார்த்தாராம்
அப்போது அவர் புறிந்து கொண்டதாகச் சொன்ன விஷயம்
"எந்த ஒரு நல்ல செயலிலும் தீமை உண்டு
எந்த ஒரு தீய செயலிலும் ஒரு நன்மை உண்டு "
ஆக நன்மையில்லாமல் தீமை இல்லை
தீமை இல்லாமல் நன்மை இல்லை
ஒரு சொல் உண்டு ஸமஸ்க்ருதத்தில்
" யதா ராஜா ததா ப்ரஜா "
என்று
ஆளுபவர்கள் அனியாயம் செய்யும்போது
அப் பாவங்கள் மக்களின் மேல் தான் விழும் என்று
சொல்வார்கள்
அதனால்தான்
ராம் ராஜ்யம் என்று கம்பர் வர்ணிக்கிறார்
விதி வலியது அதை மீற
அதை எழுதிய ப்ரம்மனே சக்தியற்றவன்
இதைத்தான்
உபநிஷத்துக்களும், வேதங்களும்,
சொல்கின்றன
ஆகவே ஆண்டவன் நம்மை சோதிக்கும் போதெல்லாம்
" ஆண்டவன் நம்மைப் படுத்துகிறான்
என்று எடுத்துக் கொள்வதைவிட
ஆண்டவன் நம்மைப் பண்படுத்துகிரான்
என்று எடுத்துக் கொள்வோமானால் "
ஓரளவு நமக்கு மன சாந்தி கிடைக்கும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
http.thamizthenee.blogspot.com
அவர் ஒரு மண்டபத்தில் த்யானத்தில்
ஆழ்ந்திருந்தார்
நிஷ்டை கலைந்து அவர் பார்க்கும் போது
ஒரு பல்லி தலைகீழாக விழுந்து துடித்துக்
கொண்டிருந்த்தை அவர் பார்த்து விட்டு
அப் பல்லியை எடுத்து சரியாக
விட்டு விட்டு மீண்டும் நிஷ்டையில்
ஆழ்ந்தாராம்
மீண்டும் ஒரு முறை நிஷ்டை கலைந்து
அவர் பார்க்கும்போது
அப் பல்லி சிறிய பூச்சிகளை உணவாக
உட்கொண்டிருந்ததைப் பார்த்தாராம்
அப்போது அவர் புறிந்து கொண்டதாகச் சொன்ன விஷயம்
"எந்த ஒரு நல்ல செயலிலும் தீமை உண்டு
எந்த ஒரு தீய செயலிலும் ஒரு நன்மை உண்டு "
ஆக நன்மையில்லாமல் தீமை இல்லை
தீமை இல்லாமல் நன்மை இல்லை
ஒரு சொல் உண்டு ஸமஸ்க்ருதத்தில்
" யதா ராஜா ததா ப்ரஜா "
என்று
ஆளுபவர்கள் அனியாயம் செய்யும்போது
அப் பாவங்கள் மக்களின் மேல் தான் விழும் என்று
சொல்வார்கள்
அதனால்தான்
ராம் ராஜ்யம் என்று கம்பர் வர்ணிக்கிறார்
விதி வலியது அதை மீற
அதை எழுதிய ப்ரம்மனே சக்தியற்றவன்
இதைத்தான்
உபநிஷத்துக்களும், வேதங்களும்,
சொல்கின்றன
ஆகவே ஆண்டவன் நம்மை சோதிக்கும் போதெல்லாம்
" ஆண்டவன் நம்மைப் படுத்துகிறான்
என்று எடுத்துக் கொள்வதைவிட
ஆண்டவன் நம்மைப் பண்படுத்துகிரான்
என்று எடுத்துக் கொள்வோமானால் "
ஓரளவு நமக்கு மன சாந்தி கிடைக்கும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
http.thamizthenee.blogspot.com
Monday, August 6, 2007
தமிழ் வலைபதிவர் பட்டறை
அன்புடன் நண்பர்களே கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
சென்னை பல்கலக் கழக வளாகத்தில்
தமிழ்த்துறை அரங்கில் நடந்த
தமிழ் வலைப் பதிவுபட்டறை
விழாவுக்கு சென்றிருந்தேன்
அங்கு இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களை மிகத் தெளிவாக விளக்கினர்
புதிய மென்பொருட்களை உருவாக்கியவர்கள் அவர்களுடைய மென் பொருள்
பற்றிய செய்திகளுடன் .செய்முறை,விளக்கப் படங்களுடன் காட்டினர்
வந்திருந்த அனைவருக்கும் பேச விருப்பப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்
பட்டது
அடியேனும் 2 நிமிடம் பேச் அனுமதி பெற்று
ஒரு வாழ்த்துபா படித்தேன்
மாயத் திரை
சாயப் பட்டறை கேள்விப் பட்டிருக்கிறேன்
தமிழ் நேயப் பட்டறை இங்குண்டு
என்று பறை அறிவித்தனர்
இக் குழாமின் நடத்துனர்கள்
ஆயுதப் பட்டறையிலே சாணை தீட்டுவார்கள்
இது மூளையை சாணை தீட்ட
வந்த தமிழ் நேயப் பட்டறை
வலைப் பூக்கள்,வலைக் குழுமம்
வலைத் தளம் ,வலைஇணையம்
வலைத் தொடர்பு
எல்லாமே தெரிந்து கொள்ள
வலைப் பட்டறை நாடி வந்தோம்
கையிலும் கொண்டு வரவில்லை
பையிலும் ஏதுமில்லை
மையிலும் எழுதவில்லை
பொய்யிலே வாழுகின்றோம்
பொய்யென்றால் கற்பனை
கற்பனைஎன்றால் பொய்
மெய்யைப் பொய்யாக்கி
பொய்யை மெய்யாக்கி
மொத்தமும் கணிணிக்குள்
ஏற்றி வைத்துவிட்டோம்
மறந்து போன மூளையின்
மறு அவதாரம் இந்தக் கணிணி
மாலிக்யூலில் உள்ள செய்தி
நினைவுக்கு வரமறுக்கிறது
கணிணியில் மொத்தமிருப்பதால்
சொந்த மூளைதனை அடகு வைத்தோம்
கணிணிப் பெட்டியிலும்
சின்னத் தொலை பேசியிலும்
மனக் கணக்கு மறந்துபோனது
கையெழுத்து மறந்துபோனது
மொழி பற்றிக் கவலையில்லை
எம்மொழியில் அடித்தாலும்
நம் மொழியில் மாற்று மிந்த
கணிணிப் பெட்டி
செய்யும் மாயத்தாலே
விலாசங்கள் தொலைதொடர்பு எண்கள்
நினைவுக்கு வரவில்லை
அத்தனையும் கணிணியிலே
நம் மூளைக்கு வேலை இல்லை
அது மட்டும் காலை வாராமலிருந்தால்
கணிணியே நம் கையில்
உலகமே நம் பையில்
நாமெல்லாம் அதன் கையில்
இது கணிணி யுகம்
அதனால் நாம் சுகம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
சென்னை பல்கலக் கழக வளாகத்தில்
தமிழ்த்துறை அரங்கில் நடந்த
தமிழ் வலைப் பதிவுபட்டறை
விழாவுக்கு சென்றிருந்தேன்
அங்கு இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களை மிகத் தெளிவாக விளக்கினர்
புதிய மென்பொருட்களை உருவாக்கியவர்கள் அவர்களுடைய மென் பொருள்
பற்றிய செய்திகளுடன் .செய்முறை,விளக்கப் படங்களுடன் காட்டினர்
வந்திருந்த அனைவருக்கும் பேச விருப்பப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்
பட்டது
அடியேனும் 2 நிமிடம் பேச் அனுமதி பெற்று
ஒரு வாழ்த்துபா படித்தேன்
மாயத் திரை
சாயப் பட்டறை கேள்விப் பட்டிருக்கிறேன்
தமிழ் நேயப் பட்டறை இங்குண்டு
என்று பறை அறிவித்தனர்
இக் குழாமின் நடத்துனர்கள்
ஆயுதப் பட்டறையிலே சாணை தீட்டுவார்கள்
இது மூளையை சாணை தீட்ட
வந்த தமிழ் நேயப் பட்டறை
வலைப் பூக்கள்,வலைக் குழுமம்
வலைத் தளம் ,வலைஇணையம்
வலைத் தொடர்பு
எல்லாமே தெரிந்து கொள்ள
வலைப் பட்டறை நாடி வந்தோம்
கையிலும் கொண்டு வரவில்லை
பையிலும் ஏதுமில்லை
மையிலும் எழுதவில்லை
பொய்யிலே வாழுகின்றோம்
பொய்யென்றால் கற்பனை
கற்பனைஎன்றால் பொய்
மெய்யைப் பொய்யாக்கி
பொய்யை மெய்யாக்கி
மொத்தமும் கணிணிக்குள்
ஏற்றி வைத்துவிட்டோம்
மறந்து போன மூளையின்
மறு அவதாரம் இந்தக் கணிணி
மாலிக்யூலில் உள்ள செய்தி
நினைவுக்கு வரமறுக்கிறது
கணிணியில் மொத்தமிருப்பதால்
சொந்த மூளைதனை அடகு வைத்தோம்
கணிணிப் பெட்டியிலும்
சின்னத் தொலை பேசியிலும்
மனக் கணக்கு மறந்துபோனது
கையெழுத்து மறந்துபோனது
மொழி பற்றிக் கவலையில்லை
எம்மொழியில் அடித்தாலும்
நம் மொழியில் மாற்று மிந்த
கணிணிப் பெட்டி
செய்யும் மாயத்தாலே
விலாசங்கள் தொலைதொடர்பு எண்கள்
நினைவுக்கு வரவில்லை
அத்தனையும் கணிணியிலே
நம் மூளைக்கு வேலை இல்லை
அது மட்டும் காலை வாராமலிருந்தால்
கணிணியே நம் கையில்
உலகமே நம் பையில்
நாமெல்லாம் அதன் கையில்
இது கணிணி யுகம்
அதனால் நாம் சுகம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
Saturday, August 4, 2007
நிழல் துரத்தும் நிஜங்கள்
“ நிழல் துரத்தும் நிஜங்கள் “
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமா ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடி பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்
ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?
மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே
நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம்
மடி பால் வற்றிப் போனால் அடிமாடென்போம்
நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்
இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்
ஆக மனிதன் தனக்கு உபயோகப் படும் என்று
தெரிந்தால்தான் வைத்துக் கொள்வான்
என்பது எழுதப் படாத விதி
சுயநலம் அது மட்டுமே மேலோங்கிக் கிடக்கும்
மனித அவலம் இச் சிறுகதையில்
மீண்டும் ஒருமுறை உணர்த்தப் பட்டிருக்கிறது
எத்தனை முறை உணர்த்தினாலும்,
உணர்ந்தும் உணராதவர் போல் இருப்பவர் மனிதர்,
உணர்ந்ததை காட்டிக் கொண்டால்
தானும் கஷ்டப் படவேண்டுமே
மனிதன் என்றுமே சுயநலவாதிதான்
மாற்றமுடியாதவன்
மனிதனின் நிழல் கூட சுயநலத்தோடு தான்விழுகிறது
மனிதனின் நிழல்கூட மற்றவரைத் துரத்தும்
பேய்கள்தான்
மனிதம் வீழ்கிறது அதனால் நிழல் துரத்துகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமா ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடி பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்
ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?
மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே
நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம்
மடி பால் வற்றிப் போனால் அடிமாடென்போம்
நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்
இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்
ஆக மனிதன் தனக்கு உபயோகப் படும் என்று
தெரிந்தால்தான் வைத்துக் கொள்வான்
என்பது எழுதப் படாத விதி
சுயநலம் அது மட்டுமே மேலோங்கிக் கிடக்கும்
மனித அவலம் இச் சிறுகதையில்
மீண்டும் ஒருமுறை உணர்த்தப் பட்டிருக்கிறது
எத்தனை முறை உணர்த்தினாலும்,
உணர்ந்தும் உணராதவர் போல் இருப்பவர் மனிதர்,
உணர்ந்ததை காட்டிக் கொண்டால்
தானும் கஷ்டப் படவேண்டுமே
மனிதன் என்றுமே சுயநலவாதிதான்
மாற்றமுடியாதவன்
மனிதனின் நிழல் கூட சுயநலத்தோடு தான்விழுகிறது
மனிதனின் நிழல்கூட மற்றவரைத் துரத்தும்
பேய்கள்தான்
மனிதம் வீழ்கிறது அதனால் நிழல் துரத்துகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
Thursday, August 2, 2007
நிழலின் வெளிச்சம்
நிழலின் வெளிச்சம்
ஒரு பெரிய நிறுவனம் பெரிய மூலதனம்
முதலாய்ப் போட்டு திரைப்படமெடுக்க
திட்டமிட்டு என்னை அழைத்து
ஒப்பந்தம் செய்தது
ஒரு நடிகராகப் பங்கு கொள்ள-
நானும் இசைந்தேன் நடித்துக் கொடுக்க ,
என் தொழிலல்லவா அது
ஒப்பனையாளர் என்னை உரு மாற்றினார்
ஆடைகள் கொடுப்பவர் மேலும் பொருத்தினார்
என்னை அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவனாக
உணவு உபசரிப்பாளர்கள் ஆதரவாய் உணவு கொடுத்தனர்
உதவி இயக்குனர் எளிதாக பொறுமையுடன் சொல்லிக்
கொடுத்து மேலும் கூட்டினார் என் பாத்திரத் தன்மையை
இயக்குனர் சொன்ன இடத்தில் நின்றேன்
சொல்லிக் கொடுத்தபடி பேசி, நடித்தேன்
தளப் பொறுப்பாளர் காட்சி ஜோடனைக்
கற்பனைத் தூரிகை கைவண்ணம் காட்டினார்
புகைப் பட நிபுணர் என்னை மேலும்
அழகாக,திறமைசாலியாக காண்பித்தார்
எழுத்தாளர் என் கதா பாத்திரத்துக்கு ஏற்ற
வசனங்களை இயல்பாக எழுதினார்
ஒரு பெருங் கவிஞ்ஞர் பாடலெழுதினார்
பல குரல் வளம் பாடியது ,நான் வாயசைத்தேன்
பல பொறியாளர்கள் பாடு பட்டனர்
திரைப் படம் வெற்றி பெற
அடடா என்னை சுற்றி எத்தனை பேர்
முத்தான வியர்வை கொட்ட உழைக்கிறார்கள்
அவர்கள் வெளியே தெரிவதே இல்லை
அத்தனை பேரும்-
புகைப் படக் கருவிக்குப் பின்னால்
என் வெளிச்சத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா, த்யாகங்களா
நான் மட்டும் மக்கள் மனதில்,
விளம்பர தட்டிகளில்,பத்திரிகைகளில்
தொலைக் காட்சிகளில் ,
மக்கள் மனதில் , வீடுகளில் ,
அனுமதி இல்லாமல் நுழைந்த
வலுக் கட்டாய சூரியன் நான்
ப்ரகாசிக்காத எத்தனயோ நக்ஷத்திரங்கள்
என் பின்னால்,தங்கள் த்யாகங்கள் புரியாமல்
என் ப்ரகாசத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா ?
உண்மையை ம்னம் திறந்து சொல்கிறேன்
எனக்குத் தெரிந்த வரை தன் ப்ராகசத்தின்
பின் இருக்கும் இருட்டுக்களின் வேதனையை
அறியாது அறிந்தாலும்
கண்டுகொள்ளாமல் தன்னால் தான் வெற்றிகள்
குவிகின்றன என்று ஆட்டம் ஆடியவர்கள்
பலபேர் காணாமல் போயிருக்கிறார்கள்
வெற்றியின் உச்சத்திலிருந்து பாதாளத்துக்கு
அதனால் தான் உணர்ந்து எழுதினேன்
நான் தொலைக் காட்சித் தொடரிலோ,திரைப் படங்களிலோ
நடித்தைப் பார்த்து பாராட்டிய பலபேருக்கு நான் சொன்ன
ஒரே வார்த்தை என் பலமே நீங்கள்தான்
நீங்கள் ரசிக்காமல் பார்க்காமல் இருந்தால்
என் திறமை விழலுக்கிறைத்த நீர்தான்
ஆகவே நீங்கள்தான் என் மூலதனம் என்று சொல்லி இருக்கிறேன்
அதே போல் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில்
ஒரு இயக்குனருக்கு என்ன மரியாதை தருகிறேனோ
அதே அளவு மரியாதை எனக்கு தண்ணீர்
கொண்டுவந்து தரும் சேவகனுக்கும் தருகிறேன்
அதுதான் நிலைக்கும் என்று எண்ணுகிறேன்
நிச்சயமாக உணர்ந்த்ததைத்தான்
எழுதியிருக்கிறேன்
அனுபவபூர்வமாக புரிந்து கொண்டதை மட்டுமே
எழுதுகிறேன்
ஆனால் அதே போன்று உண்மையாக நடிக்கவேண்டும்
நடிப்பு ஒரு அருமையான தொல் கலை
அதற்கு மரியாதை கொடுத்து நம்மால் இய்ன்றவறை
அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து
நடிக்கவேண்டுமமென்கிற எண்ணத்துடன்
வரும் அருமையான நடிகர்களை
போலித்தனமான மரியாதையை ,அலட்டல்களை,மட்டும்
மதித்து உண்மையான கலைஞ்ஜர்களை அவமானப் படுத்தி
காயப் படுத்துகிறார்கள் என்பதையும் நேரிடையாகப்
பார்த்து மனம் வலித்திருக்கிறது எனக்கு
எங்கு போலிகள் அட்டகாசம் தொடர்கிறதோ அங்கெல்லாம்
இத் தமிழ்த் தேனீ என்னும் கலைஞ்ஞன் உள்ளம் குமுறுகிறான்
மனச்சாட்சியுடன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஒரு பெரிய நிறுவனம் பெரிய மூலதனம்
முதலாய்ப் போட்டு திரைப்படமெடுக்க
திட்டமிட்டு என்னை அழைத்து
ஒப்பந்தம் செய்தது
ஒரு நடிகராகப் பங்கு கொள்ள-
நானும் இசைந்தேன் நடித்துக் கொடுக்க ,
என் தொழிலல்லவா அது
ஒப்பனையாளர் என்னை உரு மாற்றினார்
ஆடைகள் கொடுப்பவர் மேலும் பொருத்தினார்
என்னை அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவனாக
உணவு உபசரிப்பாளர்கள் ஆதரவாய் உணவு கொடுத்தனர்
உதவி இயக்குனர் எளிதாக பொறுமையுடன் சொல்லிக்
கொடுத்து மேலும் கூட்டினார் என் பாத்திரத் தன்மையை
இயக்குனர் சொன்ன இடத்தில் நின்றேன்
சொல்லிக் கொடுத்தபடி பேசி, நடித்தேன்
தளப் பொறுப்பாளர் காட்சி ஜோடனைக்
கற்பனைத் தூரிகை கைவண்ணம் காட்டினார்
புகைப் பட நிபுணர் என்னை மேலும்
அழகாக,திறமைசாலியாக காண்பித்தார்
எழுத்தாளர் என் கதா பாத்திரத்துக்கு ஏற்ற
வசனங்களை இயல்பாக எழுதினார்
ஒரு பெருங் கவிஞ்ஞர் பாடலெழுதினார்
பல குரல் வளம் பாடியது ,நான் வாயசைத்தேன்
பல பொறியாளர்கள் பாடு பட்டனர்
திரைப் படம் வெற்றி பெற
அடடா என்னை சுற்றி எத்தனை பேர்
முத்தான வியர்வை கொட்ட உழைக்கிறார்கள்
அவர்கள் வெளியே தெரிவதே இல்லை
அத்தனை பேரும்-
புகைப் படக் கருவிக்குப் பின்னால்
என் வெளிச்சத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா, த்யாகங்களா
நான் மட்டும் மக்கள் மனதில்,
விளம்பர தட்டிகளில்,பத்திரிகைகளில்
தொலைக் காட்சிகளில் ,
மக்கள் மனதில் , வீடுகளில் ,
அனுமதி இல்லாமல் நுழைந்த
வலுக் கட்டாய சூரியன் நான்
ப்ரகாசிக்காத எத்தனயோ நக்ஷத்திரங்கள்
என் பின்னால்,தங்கள் த்யாகங்கள் புரியாமல்
என் ப்ரகாசத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா ?
உண்மையை ம்னம் திறந்து சொல்கிறேன்
எனக்குத் தெரிந்த வரை தன் ப்ராகசத்தின்
பின் இருக்கும் இருட்டுக்களின் வேதனையை
அறியாது அறிந்தாலும்
கண்டுகொள்ளாமல் தன்னால் தான் வெற்றிகள்
குவிகின்றன என்று ஆட்டம் ஆடியவர்கள்
பலபேர் காணாமல் போயிருக்கிறார்கள்
வெற்றியின் உச்சத்திலிருந்து பாதாளத்துக்கு
அதனால் தான் உணர்ந்து எழுதினேன்
நான் தொலைக் காட்சித் தொடரிலோ,திரைப் படங்களிலோ
நடித்தைப் பார்த்து பாராட்டிய பலபேருக்கு நான் சொன்ன
ஒரே வார்த்தை என் பலமே நீங்கள்தான்
நீங்கள் ரசிக்காமல் பார்க்காமல் இருந்தால்
என் திறமை விழலுக்கிறைத்த நீர்தான்
ஆகவே நீங்கள்தான் என் மூலதனம் என்று சொல்லி இருக்கிறேன்
அதே போல் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில்
ஒரு இயக்குனருக்கு என்ன மரியாதை தருகிறேனோ
அதே அளவு மரியாதை எனக்கு தண்ணீர்
கொண்டுவந்து தரும் சேவகனுக்கும் தருகிறேன்
அதுதான் நிலைக்கும் என்று எண்ணுகிறேன்
நிச்சயமாக உணர்ந்த்ததைத்தான்
எழுதியிருக்கிறேன்
அனுபவபூர்வமாக புரிந்து கொண்டதை மட்டுமே
எழுதுகிறேன்
ஆனால் அதே போன்று உண்மையாக நடிக்கவேண்டும்
நடிப்பு ஒரு அருமையான தொல் கலை
அதற்கு மரியாதை கொடுத்து நம்மால் இய்ன்றவறை
அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து
நடிக்கவேண்டுமமென்கிற எண்ணத்துடன்
வரும் அருமையான நடிகர்களை
போலித்தனமான மரியாதையை ,அலட்டல்களை,மட்டும்
மதித்து உண்மையான கலைஞ்ஜர்களை அவமானப் படுத்தி
காயப் படுத்துகிறார்கள் என்பதையும் நேரிடையாகப்
பார்த்து மனம் வலித்திருக்கிறது எனக்கு
எங்கு போலிகள் அட்டகாசம் தொடர்கிறதோ அங்கெல்லாம்
இத் தமிழ்த் தேனீ என்னும் கலைஞ்ஞன் உள்ளம் குமுறுகிறான்
மனச்சாட்சியுடன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
வார்த்தை ஜாலம்
என்னுடைய கருத்துக்கள் ,நேர்மையாக
மனதின் அடித்தளத்திலிருந்து எழுத்ப் படுபவை
நான் உண்மையை எழுத முற்படும் போது
வார்த்தைகள் தாமாக விழுகின்றன
இந்த வார்த்தை ஜாலம் என்னும் சொல்லுக்காகவே
நான் ஒரு கவிதை எழுதினேன்
சொற்சிலம்பம்
வானத்து நக்ஷத்திரங்களை வாரி எடுத்து
வைரத்தோடு
விடிவெள்ளியை வடித்தெடுத்து மூக்குக் குத்தி
முழுமதியை எடுத்து வந்து சூடாமணீ
-சூரியனைத் துணிந்தெடுத்து ராக்கொடி
மேகக் கூட்டங்களை உருட்டி எடுத்து
திண்டு மெத்தை --மலர்களைக்
கூட்டி எடுத்து தூவிய மலரணை
வெட்டெ வெளியில் வளர்ந்த
முற்றிய சந்தன மரம்
வெட்டி எடுத்துச் செய்த கட்டில்
வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு
ஊட்டுகின்ற அன்னை-தங்கத்தொட்டிலில்
வைத்து தாலாட்ட ஒரு தந்தை.........
ஆகாய விமானத்தில் ஆனந்தமாய்
பயணம்.. திடீரென்று கோளாரு ஜனனம்
அந்தரத்தில் கா கா வென்று
கோளரு பதிகம்,கந்த ஷஷ்டி கவசம்
பந்தாவாய் பாரசூட்டில் பயணம்
கண்விழித்துப் பார்த்தேன்
கிடந்தேன் அரசுத் தொட்டிலில்அனாதையாய்
அது சரி -சொற் சிலம்பம் எனக்கது அத்துப்படி
ஆனால் சோற்றுக்கு வழி எப்படி..?
அன்புடன்
தமிழ்த்தேனீ
மனதின் அடித்தளத்திலிருந்து எழுத்ப் படுபவை
நான் உண்மையை எழுத முற்படும் போது
வார்த்தைகள் தாமாக விழுகின்றன
இந்த வார்த்தை ஜாலம் என்னும் சொல்லுக்காகவே
நான் ஒரு கவிதை எழுதினேன்
சொற்சிலம்பம்
வானத்து நக்ஷத்திரங்களை வாரி எடுத்து
வைரத்தோடு
விடிவெள்ளியை வடித்தெடுத்து மூக்குக் குத்தி
முழுமதியை எடுத்து வந்து சூடாமணீ
-சூரியனைத் துணிந்தெடுத்து ராக்கொடி
மேகக் கூட்டங்களை உருட்டி எடுத்து
திண்டு மெத்தை --மலர்களைக்
கூட்டி எடுத்து தூவிய மலரணை
வெட்டெ வெளியில் வளர்ந்த
முற்றிய சந்தன மரம்
வெட்டி எடுத்துச் செய்த கட்டில்
வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு
ஊட்டுகின்ற அன்னை-தங்கத்தொட்டிலில்
வைத்து தாலாட்ட ஒரு தந்தை.........
ஆகாய விமானத்தில் ஆனந்தமாய்
பயணம்.. திடீரென்று கோளாரு ஜனனம்
அந்தரத்தில் கா கா வென்று
கோளரு பதிகம்,கந்த ஷஷ்டி கவசம்
பந்தாவாய் பாரசூட்டில் பயணம்
கண்விழித்துப் பார்த்தேன்
கிடந்தேன் அரசுத் தொட்டிலில்அனாதையாய்
அது சரி -சொற் சிலம்பம் எனக்கது அத்துப்படி
ஆனால் சோற்றுக்கு வழி எப்படி..?
அன்புடன்
தமிழ்த்தேனீ
திட்டமிடல்
அன்புடன் நண்பர்களே
ஒரு தேவையான யோசனை வந்தது
ஒரு பழைய திரைப் படத்தில்
ஒருவன் என் எஸ் கே எனப்படும் கலைவாணர்
ஒருவரிடம்
உன்னுடைய சட்டைப் பையில் இருக்கும்
மொத்தப் பணத்தையும் என்னிடம் கொடு என்பார்
உடனே அவன் மொத்தப் பணத்தையும் எடுத்து
கலைவாணரிடம் கொடுப்பார்
அதை தன் கையில் வைத்து மூடிக்கொண்டு
கலைவாணர் இதில் எவ்வளவு பணம் இருக்கிறது
என்பார் ,அதற்கு அவன் தோராயமாக சொல்லுவான்
,சரியாக சொல் தோராயமாக சொல்லாதே
என்பார்
அது அவனால் முடியாது
உடனே கலைவாணர் உன்னுடைய சட்டைப் பையில்
எவ்வளவு பணம் இருக்கிறது என்று உன்னாலேயே
சொல்லமுடியவில்லை நீ எதை சரியாக
சொல்லப் போகிறாய் என்பார்
இது மிகவும் யோசிக்கத்தக்க ஒரு கேள்வி
நாம் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறோம்
ஆனால் ,எதையுமே மனதில் இருத்தாது
அதை அதை அப்படியே செய்துவிட்டு
ஓடிக் கொண்டிருக்கிறோம்
நமக்கு ஒரு கோப்பு, நாம் கேடவுடனே
கிடைக்காவிடில் கோபம் வருகிறது
அதை சரியான நேரத்தில் கொடுக்காதவரை
கண்டிக்கிறோம்,பொறுமை இழந்து கத்துகிறோம்,
நாம் சரியாக இருக்கிறோமா?
என்பதுதான் என் கேள்வி..?
நான் இப்போதெல்லாம் பார்க்கிறேன்
பெரியவர்கள் ,இளவட்டங்கள்,அனைவருமே
ஏதோ ஒரு அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோமே
தவிற
ஒரு கணம் நிதானித்து,யோசித்து செயல் படுவதே இல்லை
நாம் நிதானிக்கும் ஒரு கணம் ,
நம்முடைய வாழ்விலே எத்தனையோ
நல்ல மாற்றங்களை கொண்டு வரக் காத்திருக்கிறது
பல கடைகளில்,,பொது இடங்களில் புழங்கும்
அனைவரையும் கவனிக்கிறேன்
கடைக்கு வந்த வுடன் அவர்களுடைய அவசரம்,
பொறுமைஇன்மை,எல்லவற்றிர்க்கும் மேலாக ,
சரியாகத் திட்டமிடாமைஅத்தனையும் சேர்ந்து
நம்மை ஆட்டுவிக்கிறது
கையிலுள்ள சின்னத் தொலை பேசியை ஒரிடத்தில்
வைக்கிறார்கள்,கடைக்காரர் கொடுத்த
விலைப் பட்டியலை ஒரிடத்தில் வைக்கிறார்கள்
கடன் வாங்கும் அட்டையை கடைக் காரரிடம் கொடுத்துவிட்டு ,
அதைத் திரும்ப வாங்க மறந்து விடுகிறார்கள்,
அப்படியே வாங்கினாலும் அது தன்னுடைய
கடன் வாங்கும் அட்டைதானா
என்று பார்க்க மறந்துவிடுகிறார்கள்
ஏன் இவ்வளவு பதட்டம்,வேகம்,
எல்லாவற்றிர்க்கும் மூல காரணம் சரியாகத் திட்டமிடாமை,
காலத்தே படுத்து உறங்கி ,காலத்தே எழாமை
தம்முடைய மூளைக்கு போதிய ஓய்வு கொடுக்காமை
இத்தனை ஆமைகளை நம்மிடம் வைத்துக் கொண்டால்
எப்படி தடுமாறாமல் இருக்க முடியும்
பெரியவர்கள் சொல்வார்கள்
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று
இப்போதெல்லாம் நக்ஷ்க்ஷத்திர ஆமைகள் கூட
நல்ல விலைக்குப் போகிறது
பெரியவர்கள் சொன்ன ஆமை மேலே நான் சொன்ன
திட்டமிடாமை,போன்ற பல ஆமைகள்தான்
நாம் இன்னும் கொஞ்ஜம் கவனமாக செயல் பட்டால்
பல நஷ்டங்களை ,தவறுதல்களை,இழப்புகளை,
சரியாக்க முடியும் என்பது அடியேனின் கருத்து
சரியான உதாரணமாக
ஒரு போட்டி வைப்போம்
" W hy D o n' t a li e n s e a t c lo w n s ?
B e c a u s e t h e y ta s te fu n n y. "
இந்த வாசகம் தினமும் நாம் உபயோகிக்கும்
அவசியத் தேவையான ஒரு பொருளின் மீது
அச்சடிக்கப் பட்டு இருக்கிறது
சவால்,,,, கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு
ஒரு சபாஷ்......
இனாம்..........
இப்படிக்கு
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஒரு தேவையான யோசனை வந்தது
ஒரு பழைய திரைப் படத்தில்
ஒருவன் என் எஸ் கே எனப்படும் கலைவாணர்
ஒருவரிடம்
உன்னுடைய சட்டைப் பையில் இருக்கும்
மொத்தப் பணத்தையும் என்னிடம் கொடு என்பார்
உடனே அவன் மொத்தப் பணத்தையும் எடுத்து
கலைவாணரிடம் கொடுப்பார்
அதை தன் கையில் வைத்து மூடிக்கொண்டு
கலைவாணர் இதில் எவ்வளவு பணம் இருக்கிறது
என்பார் ,அதற்கு அவன் தோராயமாக சொல்லுவான்
,சரியாக சொல் தோராயமாக சொல்லாதே
என்பார்
அது அவனால் முடியாது
உடனே கலைவாணர் உன்னுடைய சட்டைப் பையில்
எவ்வளவு பணம் இருக்கிறது என்று உன்னாலேயே
சொல்லமுடியவில்லை நீ எதை சரியாக
சொல்லப் போகிறாய் என்பார்
இது மிகவும் யோசிக்கத்தக்க ஒரு கேள்வி
நாம் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறோம்
ஆனால் ,எதையுமே மனதில் இருத்தாது
அதை அதை அப்படியே செய்துவிட்டு
ஓடிக் கொண்டிருக்கிறோம்
நமக்கு ஒரு கோப்பு, நாம் கேடவுடனே
கிடைக்காவிடில் கோபம் வருகிறது
அதை சரியான நேரத்தில் கொடுக்காதவரை
கண்டிக்கிறோம்,பொறுமை இழந்து கத்துகிறோம்,
நாம் சரியாக இருக்கிறோமா?
என்பதுதான் என் கேள்வி..?
நான் இப்போதெல்லாம் பார்க்கிறேன்
பெரியவர்கள் ,இளவட்டங்கள்,அனைவருமே
ஏதோ ஒரு அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோமே
தவிற
ஒரு கணம் நிதானித்து,யோசித்து செயல் படுவதே இல்லை
நாம் நிதானிக்கும் ஒரு கணம் ,
நம்முடைய வாழ்விலே எத்தனையோ
நல்ல மாற்றங்களை கொண்டு வரக் காத்திருக்கிறது
பல கடைகளில்,,பொது இடங்களில் புழங்கும்
அனைவரையும் கவனிக்கிறேன்
கடைக்கு வந்த வுடன் அவர்களுடைய அவசரம்,
பொறுமைஇன்மை,எல்லவற்றிர்க்கும் மேலாக ,
சரியாகத் திட்டமிடாமைஅத்தனையும் சேர்ந்து
நம்மை ஆட்டுவிக்கிறது
கையிலுள்ள சின்னத் தொலை பேசியை ஒரிடத்தில்
வைக்கிறார்கள்,கடைக்காரர் கொடுத்த
விலைப் பட்டியலை ஒரிடத்தில் வைக்கிறார்கள்
கடன் வாங்கும் அட்டையை கடைக் காரரிடம் கொடுத்துவிட்டு ,
அதைத் திரும்ப வாங்க மறந்து விடுகிறார்கள்,
அப்படியே வாங்கினாலும் அது தன்னுடைய
கடன் வாங்கும் அட்டைதானா
என்று பார்க்க மறந்துவிடுகிறார்கள்
ஏன் இவ்வளவு பதட்டம்,வேகம்,
எல்லாவற்றிர்க்கும் மூல காரணம் சரியாகத் திட்டமிடாமை,
காலத்தே படுத்து உறங்கி ,காலத்தே எழாமை
தம்முடைய மூளைக்கு போதிய ஓய்வு கொடுக்காமை
இத்தனை ஆமைகளை நம்மிடம் வைத்துக் கொண்டால்
எப்படி தடுமாறாமல் இருக்க முடியும்
பெரியவர்கள் சொல்வார்கள்
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று
இப்போதெல்லாம் நக்ஷ்க்ஷத்திர ஆமைகள் கூட
நல்ல விலைக்குப் போகிறது
பெரியவர்கள் சொன்ன ஆமை மேலே நான் சொன்ன
திட்டமிடாமை,போன்ற பல ஆமைகள்தான்
நாம் இன்னும் கொஞ்ஜம் கவனமாக செயல் பட்டால்
பல நஷ்டங்களை ,தவறுதல்களை,இழப்புகளை,
சரியாக்க முடியும் என்பது அடியேனின் கருத்து
சரியான உதாரணமாக
ஒரு போட்டி வைப்போம்
" W hy D o n' t a li e n s e a t c lo w n s ?
B e c a u s e t h e y ta s te fu n n y. "
இந்த வாசகம் தினமும் நாம் உபயோகிக்கும்
அவசியத் தேவையான ஒரு பொருளின் மீது
அச்சடிக்கப் பட்டு இருக்கிறது
சவால்,,,, கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு
ஒரு சபாஷ்......
இனாம்..........
இப்படிக்கு
அன்புடன்
தமிழ்த்தேனீ
Tuesday, July 31, 2007
வாழ்க்கையின் நோக்கம்
பெரியவர்கள் சொல்வ்து எப்போதுமே
நன்மைதான் , உண்மைதான்
திரு மஹாத்மா காந்தி சொன்னதை
என்றுமே கடைப் பிடித்து வருகிறேன்
என்னுடைய நோக்கமே
பிறந்தோம் ,எப்படியும் இறக்கப் போகிறோம்
இது ப்ரபஞ்ஜ விதி,யாராலும் மாற்ற
முடியாத ப்ரபஞ்ஜ விதி,
ஆக்வே இந்த வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு
முன்னால்,எதையாவது சாதித்து விட்டுத்தான்
இந்தப் பயணத்தை முடிப்பது என்று ,
மன உறுதியோடு செயல் பட்டு வருகிறேன ,
திரு ரங்கஸ்வாமிஅவர்களுக்கும் திருமதி கமலம்மாள்
அவர்களுக்கும் எட்டாவது குழந்தையாய்ப் பிறந்தவன்
நான், அதனால்தான் கிருஷ்ணன் என்று பெயரிட்டார்கள்,
பிறக்கும் போதே (born with silver spoon )
என்று சொல்வார்களே
அதைப் போல செல்வத்தில் பிறந்து ,செல்வத்தில் வள்ர்ந்து
யாரோ ஒருவரின் த்ரோகத்தால் அத்தனை செல்வங்களும்,
போனதால் மனமொடிந்து என் தந்தை
திடீரென்று மாரடைப்பில் இறந்தார்,
திடீரென்று ஏற்பட்ட சுழல் எங்களைப் பந்தாடியது
மூலைக்கு ஒருவராய் தூக்கிப் போட்டது
அதன் பிறகு என் மூத்த அண்ணன் குடும்பப்
பொறுப்பேற்றுக் கொண்டார்,
அண்ணீ வந்தார்கள்
நான் என் அன்னை ,என் தம்பி மூவரும்
அனாதையாக்கப் பட்டோம்
நடுத் தெருவுக்கு வந்தது (silver spoon)
அதன் பிறகு என் தாயாரின் உறவினர் ஒருவர்
என் பெற்றோர் இருவரும் பலருக்கு செய்த
எத்தனையோ உதவிகள் பற்றி புழ்ந்து விட்டு
எனக்கும் லுகாஸ் டீ வி ஸ் ஸில்
வேலை வாங்கிக் கொடுத்தார்
அப்போது எனக்கு மாத சம்பளம் ( 97 Rs )
அன்றிலிருந்து இன்று வரை நேர்மையாக் ,யாருக்கும்
எந்த தீங்கும் செயாதவனாக என்னை என் தாயார்
முன்னுக்கு கொண்டுவந்தார்கள்
கடைசி காலத்தில் அவருக்கும் கேன்சர்
என்னும் கொடிய நோய் தாக்கியது
3000 rs சம்பளத்தை எட்டியிருந்தேன் நான்
ஆனால் மருத்துவச் செலவு மட்டும்
10000 rsஆகும் நான் செய்யாத வேலையே கிடையாது
எப்படியாவது என் தாயாரின் கொடிய நோயை அகற்றிவிட வேண்டும்.
ஆனால் யாரிடமும் ஒரு பைசாவுக்கு கூட உதவி
கேட்டு செல்லக்கூடாது என்னும் வைராக்யம்,ஆகவே
சில பல ஒப்பந்த முறை வேலைகளை என் அலுவலகப் பணீ
நேரம் தவிர செய்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன் நான்
வாழ்க்கையின் அடித் தளத்தையும் ,சொகுசுத் தளத்தையும்
ஒரு சேரப் பார்த்தவன்,
ஒருமுறை மருத்துவர் கலாநிதி எம் பீ,அவர்களின்
மருத்துவ மனையில் என் அம்மாவை சேர்த்து
அவர்களுக்குத் தேவையான ரத்தம் ஏற்றிவிட்டு
அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்
என்னுடைய மகன் வெங்டநாதன் அப்போது
ஒரு சாதாரண வேலையில் இருந்தான்
அவன் என்னிடம் வந்து அப்ப கவலைப் படாதே
இந்தா 500 ரூபாய் வைத்துக் கொள்
என்று அவன் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தான்
இப்போது அவன் மைக்ரோசாப்ட் என்னும்
நிருவனத்தில் பணி புறிகிறான்,பல ஆயிரக் கணக்கில்
சம்பாதிக்கிறான்,நிறைய பணம் கொடுக்கிறான்
ஆனால் அந்தச் சிறு வயதில் அவன் கொடுத்த
அந்த 500 ரூபாய்க்கு எதுவுமே ஈடாகாது
அதற்குப் பிறகு இரண்டு முறை விபத்தில் சிக்கி
இரண்டு தோள்பட்டை எலும்பும் முறிந்தும்பின்
இப்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டையுடன் ஆணிகள் அவகளை
ஒட்டவைத்துக் கொண்டிருக்கின்றன
இரண்டு வருடங்களுக்கு முன் இருதய திறப்பு அறுவை
சிகிச்சை செய்து கொண்ட்டேன்,
பயப் படாதீர்கள்
இப்போது நான் பரி பூரண ஆரோக்கியம்
வாழ்க்கையிலும் என்னுடைய மக்களை நன்றாகப்
படிக்க வைத்து அவர்கள் அனைவரும் கணிணித் துறையில்
பணி புறிந்து கொண்டிருக்கிறார்கள்
நானும் நடிப்பு, ,கவிதைகள் எழுதுதல் என்று சுகமாக
இருக்கிறேன் இறைவன் அருளாலும் ,என் பெற்றோர்களின்
ஆசீர்வாத்தினாலும் மிக நன்றாக இருக்கிரேன்.
நானும் என் மனனவியும்அமெரிக்கா, கன்டா ,மலேஷியா,சிங்கபூர்
போன்ற நாடுகளுக்கு சென்று பார்த்துவிட்டு
வந்தேன், மேலும் என் தம்பியின் மக்களைப் படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறேன்,என் தம்பி குடும்பத்தையும்
முன்னுக்குக் கொண்டு வர என்னாலியன்ற
உதவி செய்து கொண்டிருக்கிறேன்
இது வரை நான் சொன்னது என்னுடைய சுய புராணமே தவிர
விளம்பர நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல
என்னுடைய நோக்கமே எப்படியாவது என்னுடைய
நல்ல முயற்ச்சிகளால்
அடுத்தவருக்கு எந்த த்ரோகமும் செய்யாது
ஏதாவதொரு உபயோகமான
புகழ் மிக்க சாதனயை செய்துவிட்டு
போக வேண்டும் என்றுதான்
முயன்று கொண்டிருக்கிறேன்
எப்படிப் பட்ட சோதனைகள் வந்தாலும்
நேர்மையாக அதை எதிர் கொண்டு சாதனைகள்
செய்வேன் என்னும் உறுதி பூண்ட நெஞ்ஜுரம்
கொண்ட
தமிழ்த் தேனீ
நன்மைதான் , உண்மைதான்
திரு மஹாத்மா காந்தி சொன்னதை
என்றுமே கடைப் பிடித்து வருகிறேன்
என்னுடைய நோக்கமே
பிறந்தோம் ,எப்படியும் இறக்கப் போகிறோம்
இது ப்ரபஞ்ஜ விதி,யாராலும் மாற்ற
முடியாத ப்ரபஞ்ஜ விதி,
ஆக்வே இந்த வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு
முன்னால்,எதையாவது சாதித்து விட்டுத்தான்
இந்தப் பயணத்தை முடிப்பது என்று ,
மன உறுதியோடு செயல் பட்டு வருகிறேன ,
திரு ரங்கஸ்வாமிஅவர்களுக்கும் திருமதி கமலம்மாள்
அவர்களுக்கும் எட்டாவது குழந்தையாய்ப் பிறந்தவன்
நான், அதனால்தான் கிருஷ்ணன் என்று பெயரிட்டார்கள்,
பிறக்கும் போதே (born with silver spoon )
என்று சொல்வார்களே
அதைப் போல செல்வத்தில் பிறந்து ,செல்வத்தில் வள்ர்ந்து
யாரோ ஒருவரின் த்ரோகத்தால் அத்தனை செல்வங்களும்,
போனதால் மனமொடிந்து என் தந்தை
திடீரென்று மாரடைப்பில் இறந்தார்,
திடீரென்று ஏற்பட்ட சுழல் எங்களைப் பந்தாடியது
மூலைக்கு ஒருவராய் தூக்கிப் போட்டது
அதன் பிறகு என் மூத்த அண்ணன் குடும்பப்
பொறுப்பேற்றுக் கொண்டார்,
அண்ணீ வந்தார்கள்
நான் என் அன்னை ,என் தம்பி மூவரும்
அனாதையாக்கப் பட்டோம்
நடுத் தெருவுக்கு வந்தது (silver spoon)
அதன் பிறகு என் தாயாரின் உறவினர் ஒருவர்
என் பெற்றோர் இருவரும் பலருக்கு செய்த
எத்தனையோ உதவிகள் பற்றி புழ்ந்து விட்டு
எனக்கும் லுகாஸ் டீ வி ஸ் ஸில்
வேலை வாங்கிக் கொடுத்தார்
அப்போது எனக்கு மாத சம்பளம் ( 97 Rs )
அன்றிலிருந்து இன்று வரை நேர்மையாக் ,யாருக்கும்
எந்த தீங்கும் செயாதவனாக என்னை என் தாயார்
முன்னுக்கு கொண்டுவந்தார்கள்
கடைசி காலத்தில் அவருக்கும் கேன்சர்
என்னும் கொடிய நோய் தாக்கியது
3000 rs சம்பளத்தை எட்டியிருந்தேன் நான்
ஆனால் மருத்துவச் செலவு மட்டும்
10000 rsஆகும் நான் செய்யாத வேலையே கிடையாது
எப்படியாவது என் தாயாரின் கொடிய நோயை அகற்றிவிட வேண்டும்.
ஆனால் யாரிடமும் ஒரு பைசாவுக்கு கூட உதவி
கேட்டு செல்லக்கூடாது என்னும் வைராக்யம்,ஆகவே
சில பல ஒப்பந்த முறை வேலைகளை என் அலுவலகப் பணீ
நேரம் தவிர செய்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன் நான்
வாழ்க்கையின் அடித் தளத்தையும் ,சொகுசுத் தளத்தையும்
ஒரு சேரப் பார்த்தவன்,
ஒருமுறை மருத்துவர் கலாநிதி எம் பீ,அவர்களின்
மருத்துவ மனையில் என் அம்மாவை சேர்த்து
அவர்களுக்குத் தேவையான ரத்தம் ஏற்றிவிட்டு
அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்
என்னுடைய மகன் வெங்டநாதன் அப்போது
ஒரு சாதாரண வேலையில் இருந்தான்
அவன் என்னிடம் வந்து அப்ப கவலைப் படாதே
இந்தா 500 ரூபாய் வைத்துக் கொள்
என்று அவன் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தான்
இப்போது அவன் மைக்ரோசாப்ட் என்னும்
நிருவனத்தில் பணி புறிகிறான்,பல ஆயிரக் கணக்கில்
சம்பாதிக்கிறான்,நிறைய பணம் கொடுக்கிறான்
ஆனால் அந்தச் சிறு வயதில் அவன் கொடுத்த
அந்த 500 ரூபாய்க்கு எதுவுமே ஈடாகாது
அதற்குப் பிறகு இரண்டு முறை விபத்தில் சிக்கி
இரண்டு தோள்பட்டை எலும்பும் முறிந்தும்பின்
இப்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டையுடன் ஆணிகள் அவகளை
ஒட்டவைத்துக் கொண்டிருக்கின்றன
இரண்டு வருடங்களுக்கு முன் இருதய திறப்பு அறுவை
சிகிச்சை செய்து கொண்ட்டேன்,
பயப் படாதீர்கள்
இப்போது நான் பரி பூரண ஆரோக்கியம்
வாழ்க்கையிலும் என்னுடைய மக்களை நன்றாகப்
படிக்க வைத்து அவர்கள் அனைவரும் கணிணித் துறையில்
பணி புறிந்து கொண்டிருக்கிறார்கள்
நானும் நடிப்பு, ,கவிதைகள் எழுதுதல் என்று சுகமாக
இருக்கிறேன் இறைவன் அருளாலும் ,என் பெற்றோர்களின்
ஆசீர்வாத்தினாலும் மிக நன்றாக இருக்கிரேன்.
நானும் என் மனனவியும்அமெரிக்கா, கன்டா ,மலேஷியா,சிங்கபூர்
போன்ற நாடுகளுக்கு சென்று பார்த்துவிட்டு
வந்தேன், மேலும் என் தம்பியின் மக்களைப் படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறேன்,என் தம்பி குடும்பத்தையும்
முன்னுக்குக் கொண்டு வர என்னாலியன்ற
உதவி செய்து கொண்டிருக்கிறேன்
இது வரை நான் சொன்னது என்னுடைய சுய புராணமே தவிர
விளம்பர நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல
என்னுடைய நோக்கமே எப்படியாவது என்னுடைய
நல்ல முயற்ச்சிகளால்
அடுத்தவருக்கு எந்த த்ரோகமும் செய்யாது
ஏதாவதொரு உபயோகமான
புகழ் மிக்க சாதனயை செய்துவிட்டு
போக வேண்டும் என்றுதான்
முயன்று கொண்டிருக்கிறேன்
எப்படிப் பட்ட சோதனைகள் வந்தாலும்
நேர்மையாக அதை எதிர் கொண்டு சாதனைகள்
செய்வேன் என்னும் உறுதி பூண்ட நெஞ்ஜுரம்
கொண்ட
தமிழ்த் தேனீ
தண்ணீரும் அசோக சக்ரவர்த்தியும்
" உயிர்த் தண்ணீர் "
டேய் தணிகாசலம் , எதுலெ வேணா வெளையாடு
ஆனா தண்ணீலெ மட்டும் வெளையாடதே
"இவ்வளவு போதையிலும்"
அம்மாவின் குரல் காதிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எங்கோ தூரத்தில் இருந்து'
"கடவுள் பாதி மிருகம் பாதி,
கலந்து செய்த கலவை நான் "
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது,
ஆனா நான் இப்போ தினம் தினம் தண்ணீரிலேயே
தான் விளையாடிக்கிட்டு இருக்கேன்,
என்ன செய்யறது? மனுஷனுக்கு ஆயிரம் கவலை,
அடபோடா ! குடிக்கவே தண்ணி இல்லை ,ஆனா
நீங்க நீச்சலுக்கு தண்ணி வீணடிக்கிறீங்க
சாராயம் காச்சறீங்க,
"குடிக்க கூழ் இல்லையாம், கொப்பளிக்க
பன்னீர் கேக்கறாங்க"
தண்ணியை பாட்டில்ல பிடிச்சு விக்கறீங்க!!
அசரீரியாய் என் அம்மாவின் குரல்.
ஆமாம் !!! காவிரிக் கரையிலே எங்க ஊரு,
விடியற்காலமே எழுந்து, கையிலெ வேப்பங்
குச்சியோட போய் ,காலைக்கடன் எல்லாம்
முடிச்சுட்டு, அப்பிடியே காவிரியிலே தொப்புன்னு
குதிச்சி ,நீந்திக் கரையேரி மருபடியும் ,
தொப்புன்னு குதிச்சு .......அது ஒரு தொடர் கதை
சொல்லிகிட்டே போகலாம்,
ம்ம்ம்ம்... அது ஒரு காலம் ,
இப்போ போய்க் காவிரியிலே தொப்புன்னு
குதிச்சோம்னு வெச்சுக்கோ, அவளோதான் ஆளே க்ளோசு,
ஒரே கல்லும் மண்ணுமா தான் இருக்கு ...காவிரியிலே,
குடிக்கக்கூட தண்ணி இல்லாமே நாட்டுல மக்கள்,
கையில குடத்தோட அலையுற அவலத்தப் பாத்துட்டும் ,
தண்ணிப் ப்ரச்சனைய கவனிக்காம தேர்தல்ல,
மும்மரமா இருக்கிற அரசியல்வாதிகளை நெனைச்சு, வருத்தப்
பட்டுபேசறோமான்னு, தெரியாமெ புலம்பிக் கொண்டு,
இருந்தான் தணிகாசலம் ,இந்த நாட்டின் குடிமகன்.
அசோகர் சாலை இருமருங்கிலும் நிழல் தரும்
மரங்களை நட்டார். ஆங்காங்கே குளங்களை
வெட்டினார்,
என்று கத்தி படித்தபடி மனப்பாடம் செய்து
கொண்டிருந்த, அவனின் செல்ல வாரிசு ஓடிவந்து,
அப்பா . அப்பா , எதுக்குப்பா அசோகர் மரம் நட்டாரு?
எதுக்குப்பா குளம் வெட்டினாரு?
அவரு ராஜாதானே அவுருபாட்டுக்கு
ஜாலியா இருக்கவேண்டியதுதானே,
ஐந்து வயதுக் குழந்தை ரிஷி கேட்ட கேள்விக்கு,
என்ன பதில் சொல்றதுன்னு யோசித்தான்
தணிகாசலம்,
போப்பா உனக்குத் தெரியலை ,நான் பாட்டிகிட்டே
கேட்டுக்குறேன், என்று சொல்லிவிட்டு,
பாட்டி தங்கி இருக்கும் முதியோர்இல்லத்து ,
தொலைபேசி எண்ணைச் சுழற்றி,
என் பாட்டி கமலம்மாளை கூப்பிடுங்க
என்றான் ரிஷி,
பாட்டீ... எதுக்கு பாட்டி... அசோகர் குளம் வெட்டினாரு,
எதுக்குப் பாட்டி மரம் நட்டாரு?
பாட்டி சிரித்தாள் தொலைபேசியில்,
டேய் கண்ணா இந்தக் கேள்விக்கு உங்கப்பனுக்கு
மட்டும் இல்லே, யாருக்கும் பதில் தெரியாது,
அசோகர் ஒரு ராசா
ராசாவுக்கு எப்பவும் தன்னோட நாடு. நாட்டு ஜனங்களோட
வசதி, இதுதான்முக்கியம் ,அதனாலெ
மக்கள் நல்லா இருக்கணும்னா,
நாடு வளமா இருக்கணும் ,
நாடு வளமா இருக்கணும்னா, விவசாயம்
நல்லா நடக்கணும் அப்பொதான் இப்பொ
நாமெ சாப்படுறோமே அந்த அரிசி, விளையும்
எல்லா தானியமும், வளரும் காய், கனி ,எல்லாம்
நிறைய கிடைக்கும், அப்போதான் நாட்டுலெ
பஞ்சம் இல்லாமெ இருக்கும்,
பஞ்சம் இல்லாமெ நாடு இருந்தாதான்,
மக்கள் சொகமா இருப்பாங்க , அதுக்கு ,
நீர்இன்றி அமையாது இவ்வுலகம்'ன்னு
பெரியவங்க சொன்னா மாதிரி.
தண்ணி வேணும் தண்ணி இருந்தாதான்
விவசாயம் பண்ண முடியும்
விவசாயம் பண்ணி செழிப்பா எல்லாம்
விளைஞ்சாதான் ,
விவசாயி சந்தோசமா இருப்பான்.,
ஆமாண்டா விவசாயி எந்த நாட்டுலெ
சந்தோசமா இருக்கானோ, அந்த நாட்டிலெ
தான் மக்கள் சந்தோசமா இருப்பாங்க,
நீர் உயர வரப்புயரும், வரப்புயர நெல்
உயரும் , நெல் உயரக் குடி உயரும்,
குடிஉயரக் கோன் உயர்வான்,
அப்பிடீன்னு அவ்வைப் பாட்டி சொன்னா
மாதிரி
மக்கள் சந்தோசமா இருந்தாதான் ,எல்லாருக்கும்
நல்லது, அப்பிடீன்னு அசோகர் அந்தக் காலத்திலேயே
உணர்ந்திருந்தாரு,
அதுனாலெதாண்டா மரம் நாட்டாரு,
குளம் வெட்டினாரு,
நம்ம நாகரீகமெல்லாம் வளர்ந்ததே நதிக்கரையிலேதாண்டா....
இப்போ புரியுதாடா கண்ணா என்றாள் பாட்டி?
புரிஞ்சுதோ இல்லையோ,
தலையை மட்டும் வேகமா ஆட்டிட்டு தொலைபேசியை
வைத்தான் ரிஷி,
மறு நாள் காலையில் பாட்டி சொன்னதையே
நினைத்துப் பார்த்துகொண்டிருந்த ரிஷி
வாசலில் கேட் அழைப்பு மணியைக் கேட்டு
வாசலுக்கு ஓடினான்,
வாசலில் நாலைந்துபேர் கும்பலாக நின்றிருந்தனர்
அதில் ஒருவன், தம்பி உங்க அப்பாவைக் கூப்பிடு,
என்றான்,
அப்பா ,அப்பா ...வாசல்லெ யாரோ வந்திருக்காங்க,
உன்னைப் பாக்கணுமாம் ரிஷியின் குரல்,
தணிகாசலம் எட்டிப் பார்த்தான்,யாரு?
சார் ...நாங்க மெட்றோ வாட்டர்
லேருந்து வரோம்,
நீங்க வாட்டர் டாக்ஸ் கட்டலை அதனாலெ
கனக்ஷன் கட் பண்ணப் போறோம் என்றார்கள்
வந்தவர்கள்,
என்ன இது அநியாயமா இருக்கு நீங்க தண்ணியே
குடுக்கறது இல்லே குடுக்காத தண்ணிக்கு எதுக்கு
டாக்ஸ் அப்பிடீன்னா தணிகாசலத்தின் சகதர்மிணி
வசந்தா,
ச்சு சும்மாஇரு நான் பாத்துக்கரேன் அப்பிடின்னுட்டு,
ஏன் சார் ,என் பொண்டாட்டி கேக்கறது ஞாயம்தானே,
அதுமட்டுமில்லே, இது என் பொண்டாட்டி யோட
குரல் மட்டும் இல்லை இந்த நாட்டு மக்களின் குரல்
அதுனாலெதான் இவ்வளவு உரக்க கேக்குது?
என்று கிண்டலடித்தான் தணிகாசலம்,
அதுக்கு வந்தவர்கள் சார் நாங்க வொர்க்கர்ஸ்,
எங்களை கேட்டா நாங்க என்னா பண்ணுவோம்,
நீங்க அரசாங்கத்தை கேளுங்க? என்றார்கள்.
சரிப்பா இப்பொ கனக்ஷன் இருக்கறதும்
இல்லாததும் ஒண்ணுதான்,
நீங்க கட் பண்ணிக்கோங்க ,என்றான் தணிகாசலம்
பாவம், அவர்கள் கவலை அவர்களுக்கு,
வர வர மக்கள் முழிச்சுகிட்டாங்க,
நம்மை எல்லாம் நம்ப மாட்டேங்கராங்க,
ஹும்.. சரி வா இன்னிக்கு ,ஒண்ணும் தேறாது,
முணுமுணுத்துகொண்டே, படியிறங்கிச் சென்றனர்
அவர்கள்,
என்னா நெனைச்சுண்டு இருக்காங்க இவங்க
அவவனுக்கு இருக்கிற ப்ரச்சனையெல்லாம்
போதாதுன்னு இவங்க வேற எரிச்சலைக்
கிளப்பறாங்க இன்னிக்கு குடிநீர் வாரியத்துக்கு
போய் ஒரு வழி பண்ணிட்டு வரேன்னு கிளம்பினான்
தணிகாசலம்,
ஏங்க, இவங்க குடிநீர் வாரியத்திலேருந்து
தான் வராங்கன்னு தெரியுமா?
இவங்க பேச்சை கேட்டுகிட்டு,நீங்க அங்க போய்
வீண் சண்டையை இழுத்துகிட்டு வராதீங்க,
அது இருக்கட்டும் முதல்ல தண்ணி லாரிக்காரனுக்கு
போன் பண்னி தண்ணி கொண்டுட்டு வரச்சொல்லுங்க
பணம் சாயங்காலம் வந்து வாங்கிக்க சொல்லுங்க
இல்லைன்னா நாளைக்கு தண்னி இல்லாமெ
கஷ்டப் படணும்" என்றாள் வஸந்தா!!!
அம்மாவின் அசரீரிக் குரல்!!!
"டேய் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்திரப்படாதே அவங்களும் அரசாங்கத்த
போய் கேளுன்னுதான் சொல்லுவாங்க!!!
நீ குடிதண்ணிப் ப்ரச்சனைக்கு இந்த நாட்டுக்
குடிமகனா என்னா பண்ணே, சும்மா அரசாங்கத்தை
குறை சொல்லி ப்ரயோசனம் இல்லை,
ஏரியெல்லாம் அரசாங்கம் தான் தப்பான,
திட்டம் போட்டு குடியிருப்பு கட்டிக் கொடுத்தாங்கன்னா,
நீயும் அதை வாங்கி இங்கதானே வாழறே?
ஏரியை பாழ்பண்ணி அங்க வீடு கட்டினா நான்
வாங்கமாட்டேன்ன்னு, சொல்லி வாங்காமெ இருக்கறதுதானே?"
அம்மாவின் கேள்வி அசரீரியாய், சம்மட்டி அடியாய் விழுந்தது!!!
நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள்
கேட்பது எதற்கு,
நாம் என்ன செய்தோம் அதற்கு என்று
உணர்ந்தால் நன்மை உனக்கு!!!!
கண்ணதாசன் பாட்டு தான்
ஞாபகத்துக்கு வந்தது, உண்மைதானே?
நாமெ என்னா செய்தோம்?!!!
சரி நாமெ நம்ம வேலையைப் பாப்போம்,
அப்பிடியே வசந்தாவைக் கொண்டுபோய்,
அவ ஆபீசுலெ விட்டுட்டு வேலைக்கு போகணும்.
கிளம்பினான் தணிகாசலம் !!
சரி ..சரி.. ஜாக்கிறதையா போய்ட்டு வா என்றது அம்மாவின்
அசரீரிக்குரல் ஆமாம்!!
அம்மா எப்பவும் வாசல்லெ வந்து வழிஅனுப்புவா
ஆண்டவனை வேண்டிகிட்டு!!
அம்மான்னா அம்மாதான்...
வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனம்
அம்மாவைப் பத்தியே, அம்மா சொன்னதைப்
பத்தியே, அசை போட்டுக்கொண்டு இருந்தது,
நாம் எல்லாருமே நாட்டுக்கும் எதுவும்
செய்யிறது ,இல்லை பெத்த அம்மாவுக்கும்
எதுவும் செய்யிறது இல்லை,
அது சரி தாயே மதிச்சாதானெ தாய்நாட்டை
மதிப்போம்!!!!
அம்மாக்களுக்கு முதியோர் இல்லம் கட்றோம்,
இல்லை.. இல்லை ...கட்றது கூட இல்லை ,
காட்றோம்.!!
தாய் நாட்டுக்கு நாமெ என்ன செய்யப் போறோம்?
ஒண்ணும் செய்ய மாட்டோ ம், நம்மாலெ
முடிஞ்சதெல்லாம் அடுத்தவனை குறை சொல்றதுதான்,
மனமும் வண்டியும் ஓடிக்கொண்டிருந்தது!!!
ஒரு வாரம் கழித்து, என் சி சி கேம்ப்பிலிருக்கும்
பெரிய மகன் க்ருஷ்ணனிடமிருந்து ,ஒலிநாடா ஒன்று
பார்சலில் வந்தது- அதன் மேலே
அப்பா இந்த ஒலிநாடாவைக் கேட்கவும்,
உங்கள்
அன்பு மகன்
கிருஷ்ணன்
என்று எழுதி இருந்தது
தணிகாசலம் பதறிப்போய்
அதை டேப் ரெகார்டரில் போட்டு
கேட்க ஆரம்பித்தனர்......
அதில்.....
அப்பா இங்க பூங்குடின்னு ஒரு
கிராமத்திலெ எங்க கேம்ப் போட்டு இருக்காங்க,
நம்ம பாட்டி அடிக்கடி சொல்றது போல,
நானும் நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு
தோணிகிட்டே இருந்தது,
அந்தப் பூங்குடி கிராமத்திலெ ஊர் மக்கள் எல்லாம்
சேர்ந்து குளம் வெட்றாங்க,
எவ்வளோ தோண்டியும் தண்ணி வரல,
அங்க ஒரு பெரியவர் ,
இப்பிடியெல்லாம் பூமியைத் தோண்டினா மட்டும்
தண்ணி கிடைச்சுருமா?கிடைக்காது...
மனுஷன் மனசுலெ இரக்கம் , மனிதாபிமானம் எல்லாம் போச்சு ,
மனசுலெ ஈரம் இருந்ததானே மண்ணுலெ இருக்கும்?
எங்க காலத்துலெ இப்பிடி தோண்டி, தண்ணி வரலையின்னா,
ஒரு உசிரை பலி கொடுத்தா தண்ணி கிடைக்கும்னு சொல்லுவாங்க,
இப்பொல்லாம் யாரு அடுத்தவனுக்காக இரக்கப் படரான்?
யாராச்சும் ஒருத்தன் தானே முன்வந்து தன்னை த்யாகம்
செய்யத் தயாரா இருந்தா? தண்ணி தானே வரும்னு ....
சொன்னதைக் கேட்டேன்!!! ஏன் இந்த நாட்டுக்காக
நாமே இந்த த்யாகத்தை செய்யக் கூடாதுன்னு,
தோணிச்சு , அதுனாலெ என்னை மன்னிச்சுருப்பா,
இந்த ஒலிநாடா உன் கைக்கு கிடைக்கும்போது,
நான் ஒரு நல்ல காரியத்தை செய்தோம்கிற ,
த்ருப்தியோட போறேன் ,எப்பிடியாவது நம்ம நாட்டுக்கு
உதவணும்கிற நல்ல எண்ணம்தான்
நாட்டுலெ ஏதாச்சும் ஒரு மூலைலெ கொஞ்சம்
தண்ணீ கிடைச்சா கூட எத்தனையோ மக்களுக்கு
தாகம் தணியும்,
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" ன்னு
பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருதுப்பா
ராமருக்கு சேது அணை கட்டும்போது அணில்
உதவினாமாதிரி நானும் நாட்டுக்கு உதவ
ஒரு சந்தர்ப்பம் கொடுத்த
உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றி
அப்பா ஒண்னு மட்டும் சொல்றேன்
அசோகர் மாதிரி ராஜா வெல்லாம் முட்டாள் இல்லை
நாமெல்லாம் புத்திசாலியும் இல்லை...
இப்படிக்கு
உங்கள்
அன்பு மகன்
க்ருஷ்ணன்
டேய் செல்லமே கதறினர் தணிகாசலமும் , வசந்தாவும்
வீடே இருளில் மூழ்கிக்கிடக்க தணிகாசலமும் , வசந்தாவும்
பூங்குடி கிராமத்துக்கு புறப்பட்டனர்,
அங்கு போய் காம்ப் இருக்கும் இடத்துக்கு
ஓடினர்.
அங்கே.....
கொளுத்துகிற வெய்யிலில் மாணவர்கள் எல்லாம்
சேர்ந்து கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்
அதில் க்ருஷ்ணனும் இருந்தான் !!!!!
டேய் க்ருஷ்ணா.. கதறிக்கொண்டே ஓடிபோய்
கட்டிக்கொண்டனர் இருவரும்....
தழுதழுத்தான் தணிகாசலம் டேய் உனக்கு என்னாடா
ஆச்சு ? நாங்க உன்னை மறுபடியும் உயிரோட பாக்கறமா?
இது உண்மை தானா?கதறினர் இருவரும்...
அப்பா எனக்கு ஒண்ணுமில்லை
அயம் ஆல் ரைட்
கவலப் படாதீங்க!!
நான் எடுத்த முடிவு சரிதான் ஆனா
கடைசீ நேரத்துலெ என் முடிவை
மாத்திகிட்டேன்,
உலகத்துலெ விலை மதிக்க முடியாதது
மனிதாபிமானம் ,ரெண்டாவது உயிர்
ஆனா உயிர் இருந்தா மனிதாபிமானத்தை
நம்ப மனசுலே வளர்த்துக்கொண்டு
மகத்தான சேவை எல்லாம் செய்யலாம்
அப்பிடீன்னு அடிக்கடி உங்கம்மா அதான்
என் பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு
வந்தது ,அதனாலெ என் முடிவை நான்
மாத்திகிட்டேன் ,
அப்பா நான் இப்போ உயிரோடதான் இருக்கேன்
ஆனா நான் உயிரோட இங்கேருந்து திரும்பி வரணூம்னா
ரெண்டு உதவி கேட்கப் போறேன்,,,,,,,,
1. முதியோர் இல்லத்துலெ இருக்குற எங்க
பாட்டி நம்ப வீட்டுக்கு வரணும்,நம்மோடயே
தங்கணும்
2. நாம நமக்கு ஊருலெ இருக்கிற நிலத்துலெ
பெரிய கிணறு எடுத்து எல்லாருக்கும்
உதவற மாதிரி செய்யணும்
செய்வியாப்பா?
டேய் க்ருஷ்ணா எங்களுக்கு நீ வேணும்டா
அது மட்டுமில்லை அப்பனுக்கு பாடம் சொன்ன
முருகன் மாதிரி நீ எங்களுக்கு ஒரு நல்ல
பாடம் சொல்லிக்குடுத்துட்டெ
நாமெ எல்லரும் போய் பாட்டியைக் கூட்டிகிட்டு
வரலாம்,இனிமே நாங்க உங்க பாட்டியை,
அதான் என் அம்மாவையும் மறக்க மாட்டோ ம்
நம்ம நாட்டையும் மறக்க மாட்டோ ம் ,
நிச்சயமா நம்ம நிலத்திலெ நீ சொன்னா மாதிரி
கிணறு வெட்டி நல்லது செய்யலாம்!!!!
மீண்டும் எல்லொரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
என்று சொன்ன தணிகாசலம்
மனைவியையையும் அழைத்துக்
புறப்பட்டான்,
அப்பா நாமெ இப்போ பாட்டியை பாக்கத்தானெ போறோம்,
பாட்டிக்கு ஒரு பாட்டில் தண்ணீ வாங்கிகிட்டு போகலாம்
பாட்டி அடிக்கடி தாகம் எடுக்குதுன்னு சொல்லுவாங்க
என்றான் குழந்தை ரிஷி
மீண்டும் எல்லோரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ
டேய் தணிகாசலம் , எதுலெ வேணா வெளையாடு
ஆனா தண்ணீலெ மட்டும் வெளையாடதே
"இவ்வளவு போதையிலும்"
அம்மாவின் குரல் காதிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எங்கோ தூரத்தில் இருந்து'
"கடவுள் பாதி மிருகம் பாதி,
கலந்து செய்த கலவை நான் "
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது,
ஆனா நான் இப்போ தினம் தினம் தண்ணீரிலேயே
தான் விளையாடிக்கிட்டு இருக்கேன்,
என்ன செய்யறது? மனுஷனுக்கு ஆயிரம் கவலை,
அடபோடா ! குடிக்கவே தண்ணி இல்லை ,ஆனா
நீங்க நீச்சலுக்கு தண்ணி வீணடிக்கிறீங்க
சாராயம் காச்சறீங்க,
"குடிக்க கூழ் இல்லையாம், கொப்பளிக்க
பன்னீர் கேக்கறாங்க"
தண்ணியை பாட்டில்ல பிடிச்சு விக்கறீங்க!!
அசரீரியாய் என் அம்மாவின் குரல்.
ஆமாம் !!! காவிரிக் கரையிலே எங்க ஊரு,
விடியற்காலமே எழுந்து, கையிலெ வேப்பங்
குச்சியோட போய் ,காலைக்கடன் எல்லாம்
முடிச்சுட்டு, அப்பிடியே காவிரியிலே தொப்புன்னு
குதிச்சி ,நீந்திக் கரையேரி மருபடியும் ,
தொப்புன்னு குதிச்சு .......அது ஒரு தொடர் கதை
சொல்லிகிட்டே போகலாம்,
ம்ம்ம்ம்... அது ஒரு காலம் ,
இப்போ போய்க் காவிரியிலே தொப்புன்னு
குதிச்சோம்னு வெச்சுக்கோ, அவளோதான் ஆளே க்ளோசு,
ஒரே கல்லும் மண்ணுமா தான் இருக்கு ...காவிரியிலே,
குடிக்கக்கூட தண்ணி இல்லாமே நாட்டுல மக்கள்,
கையில குடத்தோட அலையுற அவலத்தப் பாத்துட்டும் ,
தண்ணிப் ப்ரச்சனைய கவனிக்காம தேர்தல்ல,
மும்மரமா இருக்கிற அரசியல்வாதிகளை நெனைச்சு, வருத்தப்
பட்டுபேசறோமான்னு, தெரியாமெ புலம்பிக் கொண்டு,
இருந்தான் தணிகாசலம் ,இந்த நாட்டின் குடிமகன்.
அசோகர் சாலை இருமருங்கிலும் நிழல் தரும்
மரங்களை நட்டார். ஆங்காங்கே குளங்களை
வெட்டினார்,
என்று கத்தி படித்தபடி மனப்பாடம் செய்து
கொண்டிருந்த, அவனின் செல்ல வாரிசு ஓடிவந்து,
அப்பா . அப்பா , எதுக்குப்பா அசோகர் மரம் நட்டாரு?
எதுக்குப்பா குளம் வெட்டினாரு?
அவரு ராஜாதானே அவுருபாட்டுக்கு
ஜாலியா இருக்கவேண்டியதுதானே,
ஐந்து வயதுக் குழந்தை ரிஷி கேட்ட கேள்விக்கு,
என்ன பதில் சொல்றதுன்னு யோசித்தான்
தணிகாசலம்,
போப்பா உனக்குத் தெரியலை ,நான் பாட்டிகிட்டே
கேட்டுக்குறேன், என்று சொல்லிவிட்டு,
பாட்டி தங்கி இருக்கும் முதியோர்இல்லத்து ,
தொலைபேசி எண்ணைச் சுழற்றி,
என் பாட்டி கமலம்மாளை கூப்பிடுங்க
என்றான் ரிஷி,
பாட்டீ... எதுக்கு பாட்டி... அசோகர் குளம் வெட்டினாரு,
எதுக்குப் பாட்டி மரம் நட்டாரு?
பாட்டி சிரித்தாள் தொலைபேசியில்,
டேய் கண்ணா இந்தக் கேள்விக்கு உங்கப்பனுக்கு
மட்டும் இல்லே, யாருக்கும் பதில் தெரியாது,
அசோகர் ஒரு ராசா
ராசாவுக்கு எப்பவும் தன்னோட நாடு. நாட்டு ஜனங்களோட
வசதி, இதுதான்முக்கியம் ,அதனாலெ
மக்கள் நல்லா இருக்கணும்னா,
நாடு வளமா இருக்கணும் ,
நாடு வளமா இருக்கணும்னா, விவசாயம்
நல்லா நடக்கணும் அப்பொதான் இப்பொ
நாமெ சாப்படுறோமே அந்த அரிசி, விளையும்
எல்லா தானியமும், வளரும் காய், கனி ,எல்லாம்
நிறைய கிடைக்கும், அப்போதான் நாட்டுலெ
பஞ்சம் இல்லாமெ இருக்கும்,
பஞ்சம் இல்லாமெ நாடு இருந்தாதான்,
மக்கள் சொகமா இருப்பாங்க , அதுக்கு ,
நீர்இன்றி அமையாது இவ்வுலகம்'ன்னு
பெரியவங்க சொன்னா மாதிரி.
தண்ணி வேணும் தண்ணி இருந்தாதான்
விவசாயம் பண்ண முடியும்
விவசாயம் பண்ணி செழிப்பா எல்லாம்
விளைஞ்சாதான் ,
விவசாயி சந்தோசமா இருப்பான்.,
ஆமாண்டா விவசாயி எந்த நாட்டுலெ
சந்தோசமா இருக்கானோ, அந்த நாட்டிலெ
தான் மக்கள் சந்தோசமா இருப்பாங்க,
நீர் உயர வரப்புயரும், வரப்புயர நெல்
உயரும் , நெல் உயரக் குடி உயரும்,
குடிஉயரக் கோன் உயர்வான்,
அப்பிடீன்னு அவ்வைப் பாட்டி சொன்னா
மாதிரி
மக்கள் சந்தோசமா இருந்தாதான் ,எல்லாருக்கும்
நல்லது, அப்பிடீன்னு அசோகர் அந்தக் காலத்திலேயே
உணர்ந்திருந்தாரு,
அதுனாலெதாண்டா மரம் நாட்டாரு,
குளம் வெட்டினாரு,
நம்ம நாகரீகமெல்லாம் வளர்ந்ததே நதிக்கரையிலேதாண்டா....
இப்போ புரியுதாடா கண்ணா என்றாள் பாட்டி?
புரிஞ்சுதோ இல்லையோ,
தலையை மட்டும் வேகமா ஆட்டிட்டு தொலைபேசியை
வைத்தான் ரிஷி,
மறு நாள் காலையில் பாட்டி சொன்னதையே
நினைத்துப் பார்த்துகொண்டிருந்த ரிஷி
வாசலில் கேட் அழைப்பு மணியைக் கேட்டு
வாசலுக்கு ஓடினான்,
வாசலில் நாலைந்துபேர் கும்பலாக நின்றிருந்தனர்
அதில் ஒருவன், தம்பி உங்க அப்பாவைக் கூப்பிடு,
என்றான்,
அப்பா ,அப்பா ...வாசல்லெ யாரோ வந்திருக்காங்க,
உன்னைப் பாக்கணுமாம் ரிஷியின் குரல்,
தணிகாசலம் எட்டிப் பார்த்தான்,யாரு?
சார் ...நாங்க மெட்றோ வாட்டர்
லேருந்து வரோம்,
நீங்க வாட்டர் டாக்ஸ் கட்டலை அதனாலெ
கனக்ஷன் கட் பண்ணப் போறோம் என்றார்கள்
வந்தவர்கள்,
என்ன இது அநியாயமா இருக்கு நீங்க தண்ணியே
குடுக்கறது இல்லே குடுக்காத தண்ணிக்கு எதுக்கு
டாக்ஸ் அப்பிடீன்னா தணிகாசலத்தின் சகதர்மிணி
வசந்தா,
ச்சு சும்மாஇரு நான் பாத்துக்கரேன் அப்பிடின்னுட்டு,
ஏன் சார் ,என் பொண்டாட்டி கேக்கறது ஞாயம்தானே,
அதுமட்டுமில்லே, இது என் பொண்டாட்டி யோட
குரல் மட்டும் இல்லை இந்த நாட்டு மக்களின் குரல்
அதுனாலெதான் இவ்வளவு உரக்க கேக்குது?
என்று கிண்டலடித்தான் தணிகாசலம்,
அதுக்கு வந்தவர்கள் சார் நாங்க வொர்க்கர்ஸ்,
எங்களை கேட்டா நாங்க என்னா பண்ணுவோம்,
நீங்க அரசாங்கத்தை கேளுங்க? என்றார்கள்.
சரிப்பா இப்பொ கனக்ஷன் இருக்கறதும்
இல்லாததும் ஒண்ணுதான்,
நீங்க கட் பண்ணிக்கோங்க ,என்றான் தணிகாசலம்
பாவம், அவர்கள் கவலை அவர்களுக்கு,
வர வர மக்கள் முழிச்சுகிட்டாங்க,
நம்மை எல்லாம் நம்ப மாட்டேங்கராங்க,
ஹும்.. சரி வா இன்னிக்கு ,ஒண்ணும் தேறாது,
முணுமுணுத்துகொண்டே, படியிறங்கிச் சென்றனர்
அவர்கள்,
என்னா நெனைச்சுண்டு இருக்காங்க இவங்க
அவவனுக்கு இருக்கிற ப்ரச்சனையெல்லாம்
போதாதுன்னு இவங்க வேற எரிச்சலைக்
கிளப்பறாங்க இன்னிக்கு குடிநீர் வாரியத்துக்கு
போய் ஒரு வழி பண்ணிட்டு வரேன்னு கிளம்பினான்
தணிகாசலம்,
ஏங்க, இவங்க குடிநீர் வாரியத்திலேருந்து
தான் வராங்கன்னு தெரியுமா?
இவங்க பேச்சை கேட்டுகிட்டு,நீங்க அங்க போய்
வீண் சண்டையை இழுத்துகிட்டு வராதீங்க,
அது இருக்கட்டும் முதல்ல தண்ணி லாரிக்காரனுக்கு
போன் பண்னி தண்ணி கொண்டுட்டு வரச்சொல்லுங்க
பணம் சாயங்காலம் வந்து வாங்கிக்க சொல்லுங்க
இல்லைன்னா நாளைக்கு தண்னி இல்லாமெ
கஷ்டப் படணும்" என்றாள் வஸந்தா!!!
அம்மாவின் அசரீரிக் குரல்!!!
"டேய் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்திரப்படாதே அவங்களும் அரசாங்கத்த
போய் கேளுன்னுதான் சொல்லுவாங்க!!!
நீ குடிதண்ணிப் ப்ரச்சனைக்கு இந்த நாட்டுக்
குடிமகனா என்னா பண்ணே, சும்மா அரசாங்கத்தை
குறை சொல்லி ப்ரயோசனம் இல்லை,
ஏரியெல்லாம் அரசாங்கம் தான் தப்பான,
திட்டம் போட்டு குடியிருப்பு கட்டிக் கொடுத்தாங்கன்னா,
நீயும் அதை வாங்கி இங்கதானே வாழறே?
ஏரியை பாழ்பண்ணி அங்க வீடு கட்டினா நான்
வாங்கமாட்டேன்ன்னு, சொல்லி வாங்காமெ இருக்கறதுதானே?"
அம்மாவின் கேள்வி அசரீரியாய், சம்மட்டி அடியாய் விழுந்தது!!!
நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள்
கேட்பது எதற்கு,
நாம் என்ன செய்தோம் அதற்கு என்று
உணர்ந்தால் நன்மை உனக்கு!!!!
கண்ணதாசன் பாட்டு தான்
ஞாபகத்துக்கு வந்தது, உண்மைதானே?
நாமெ என்னா செய்தோம்?!!!
சரி நாமெ நம்ம வேலையைப் பாப்போம்,
அப்பிடியே வசந்தாவைக் கொண்டுபோய்,
அவ ஆபீசுலெ விட்டுட்டு வேலைக்கு போகணும்.
கிளம்பினான் தணிகாசலம் !!
சரி ..சரி.. ஜாக்கிறதையா போய்ட்டு வா என்றது அம்மாவின்
அசரீரிக்குரல் ஆமாம்!!
அம்மா எப்பவும் வாசல்லெ வந்து வழிஅனுப்புவா
ஆண்டவனை வேண்டிகிட்டு!!
அம்மான்னா அம்மாதான்...
வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனம்
அம்மாவைப் பத்தியே, அம்மா சொன்னதைப்
பத்தியே, அசை போட்டுக்கொண்டு இருந்தது,
நாம் எல்லாருமே நாட்டுக்கும் எதுவும்
செய்யிறது ,இல்லை பெத்த அம்மாவுக்கும்
எதுவும் செய்யிறது இல்லை,
அது சரி தாயே மதிச்சாதானெ தாய்நாட்டை
மதிப்போம்!!!!
அம்மாக்களுக்கு முதியோர் இல்லம் கட்றோம்,
இல்லை.. இல்லை ...கட்றது கூட இல்லை ,
காட்றோம்.!!
தாய் நாட்டுக்கு நாமெ என்ன செய்யப் போறோம்?
ஒண்ணும் செய்ய மாட்டோ ம், நம்மாலெ
முடிஞ்சதெல்லாம் அடுத்தவனை குறை சொல்றதுதான்,
மனமும் வண்டியும் ஓடிக்கொண்டிருந்தது!!!
ஒரு வாரம் கழித்து, என் சி சி கேம்ப்பிலிருக்கும்
பெரிய மகன் க்ருஷ்ணனிடமிருந்து ,ஒலிநாடா ஒன்று
பார்சலில் வந்தது- அதன் மேலே
அப்பா இந்த ஒலிநாடாவைக் கேட்கவும்,
உங்கள்
அன்பு மகன்
கிருஷ்ணன்
என்று எழுதி இருந்தது
தணிகாசலம் பதறிப்போய்
அதை டேப் ரெகார்டரில் போட்டு
கேட்க ஆரம்பித்தனர்......
அதில்.....
அப்பா இங்க பூங்குடின்னு ஒரு
கிராமத்திலெ எங்க கேம்ப் போட்டு இருக்காங்க,
நம்ம பாட்டி அடிக்கடி சொல்றது போல,
நானும் நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு
தோணிகிட்டே இருந்தது,
அந்தப் பூங்குடி கிராமத்திலெ ஊர் மக்கள் எல்லாம்
சேர்ந்து குளம் வெட்றாங்க,
எவ்வளோ தோண்டியும் தண்ணி வரல,
அங்க ஒரு பெரியவர் ,
இப்பிடியெல்லாம் பூமியைத் தோண்டினா மட்டும்
தண்ணி கிடைச்சுருமா?கிடைக்காது...
மனுஷன் மனசுலெ இரக்கம் , மனிதாபிமானம் எல்லாம் போச்சு ,
மனசுலெ ஈரம் இருந்ததானே மண்ணுலெ இருக்கும்?
எங்க காலத்துலெ இப்பிடி தோண்டி, தண்ணி வரலையின்னா,
ஒரு உசிரை பலி கொடுத்தா தண்ணி கிடைக்கும்னு சொல்லுவாங்க,
இப்பொல்லாம் யாரு அடுத்தவனுக்காக இரக்கப் படரான்?
யாராச்சும் ஒருத்தன் தானே முன்வந்து தன்னை த்யாகம்
செய்யத் தயாரா இருந்தா? தண்ணி தானே வரும்னு ....
சொன்னதைக் கேட்டேன்!!! ஏன் இந்த நாட்டுக்காக
நாமே இந்த த்யாகத்தை செய்யக் கூடாதுன்னு,
தோணிச்சு , அதுனாலெ என்னை மன்னிச்சுருப்பா,
இந்த ஒலிநாடா உன் கைக்கு கிடைக்கும்போது,
நான் ஒரு நல்ல காரியத்தை செய்தோம்கிற ,
த்ருப்தியோட போறேன் ,எப்பிடியாவது நம்ம நாட்டுக்கு
உதவணும்கிற நல்ல எண்ணம்தான்
நாட்டுலெ ஏதாச்சும் ஒரு மூலைலெ கொஞ்சம்
தண்ணீ கிடைச்சா கூட எத்தனையோ மக்களுக்கு
தாகம் தணியும்,
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" ன்னு
பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருதுப்பா
ராமருக்கு சேது அணை கட்டும்போது அணில்
உதவினாமாதிரி நானும் நாட்டுக்கு உதவ
ஒரு சந்தர்ப்பம் கொடுத்த
உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றி
அப்பா ஒண்னு மட்டும் சொல்றேன்
அசோகர் மாதிரி ராஜா வெல்லாம் முட்டாள் இல்லை
நாமெல்லாம் புத்திசாலியும் இல்லை...
இப்படிக்கு
உங்கள்
அன்பு மகன்
க்ருஷ்ணன்
டேய் செல்லமே கதறினர் தணிகாசலமும் , வசந்தாவும்
வீடே இருளில் மூழ்கிக்கிடக்க தணிகாசலமும் , வசந்தாவும்
பூங்குடி கிராமத்துக்கு புறப்பட்டனர்,
அங்கு போய் காம்ப் இருக்கும் இடத்துக்கு
ஓடினர்.
அங்கே.....
கொளுத்துகிற வெய்யிலில் மாணவர்கள் எல்லாம்
சேர்ந்து கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்
அதில் க்ருஷ்ணனும் இருந்தான் !!!!!
டேய் க்ருஷ்ணா.. கதறிக்கொண்டே ஓடிபோய்
கட்டிக்கொண்டனர் இருவரும்....
தழுதழுத்தான் தணிகாசலம் டேய் உனக்கு என்னாடா
ஆச்சு ? நாங்க உன்னை மறுபடியும் உயிரோட பாக்கறமா?
இது உண்மை தானா?கதறினர் இருவரும்...
அப்பா எனக்கு ஒண்ணுமில்லை
அயம் ஆல் ரைட்
கவலப் படாதீங்க!!
நான் எடுத்த முடிவு சரிதான் ஆனா
கடைசீ நேரத்துலெ என் முடிவை
மாத்திகிட்டேன்,
உலகத்துலெ விலை மதிக்க முடியாதது
மனிதாபிமானம் ,ரெண்டாவது உயிர்
ஆனா உயிர் இருந்தா மனிதாபிமானத்தை
நம்ப மனசுலே வளர்த்துக்கொண்டு
மகத்தான சேவை எல்லாம் செய்யலாம்
அப்பிடீன்னு அடிக்கடி உங்கம்மா அதான்
என் பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு
வந்தது ,அதனாலெ என் முடிவை நான்
மாத்திகிட்டேன் ,
அப்பா நான் இப்போ உயிரோடதான் இருக்கேன்
ஆனா நான் உயிரோட இங்கேருந்து திரும்பி வரணூம்னா
ரெண்டு உதவி கேட்கப் போறேன்,,,,,,,,
1. முதியோர் இல்லத்துலெ இருக்குற எங்க
பாட்டி நம்ப வீட்டுக்கு வரணும்,நம்மோடயே
தங்கணும்
2. நாம நமக்கு ஊருலெ இருக்கிற நிலத்துலெ
பெரிய கிணறு எடுத்து எல்லாருக்கும்
உதவற மாதிரி செய்யணும்
செய்வியாப்பா?
டேய் க்ருஷ்ணா எங்களுக்கு நீ வேணும்டா
அது மட்டுமில்லை அப்பனுக்கு பாடம் சொன்ன
முருகன் மாதிரி நீ எங்களுக்கு ஒரு நல்ல
பாடம் சொல்லிக்குடுத்துட்டெ
நாமெ எல்லரும் போய் பாட்டியைக் கூட்டிகிட்டு
வரலாம்,இனிமே நாங்க உங்க பாட்டியை,
அதான் என் அம்மாவையும் மறக்க மாட்டோ ம்
நம்ம நாட்டையும் மறக்க மாட்டோ ம் ,
நிச்சயமா நம்ம நிலத்திலெ நீ சொன்னா மாதிரி
கிணறு வெட்டி நல்லது செய்யலாம்!!!!
மீண்டும் எல்லொரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
என்று சொன்ன தணிகாசலம்
மனைவியையையும் அழைத்துக்
புறப்பட்டான்,
அப்பா நாமெ இப்போ பாட்டியை பாக்கத்தானெ போறோம்,
பாட்டிக்கு ஒரு பாட்டில் தண்ணீ வாங்கிகிட்டு போகலாம்
பாட்டி அடிக்கடி தாகம் எடுக்குதுன்னு சொல்லுவாங்க
என்றான் குழந்தை ரிஷி
மீண்டும் எல்லோரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ
Monday, July 30, 2007
குரு
குரு
குரு என்பவர் எந்த தோற்றத்தில் வருகிறார்
என்பது முக்கியமே அல்ல
அவர் எப்படிப் பட்டவர் என்பதும் முக்கியமல்ல
ஒரு சரியான தருணத்தில் நம் அகக் கண்களைத் திறந்து
ஒரு சரியான வழிகாட்டுதல் மூலம் நம்மை ஆட் கொள்ளுபவர்கள் அனைவருமே குருஸ்தானத்தை அடைகிறார்கள்
ஒரு கதை ஞாபகம் வருகிறது
ஒரு பாமரன் கர்ப்பிணியாய் இருக்கும்
தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு ஆற்றின் அக்கரைக்குச் சென்று ,தன்னுடைய பணியை முடித்துவிட்டு திரும்பும் போது ,ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது
அக்கரையிலிருந்து அவசரச் செய்தி ,
கர்ப்பிணி மனைவிக்கு ப்ரசவ வலி
எடுத்து விட்டதாக.
இறைவா என் மனைவியையும்
குழந்தையையும் காப்பாற்று ,
என்னை எப்ப்டியாவது அக்கரைக்கு
அழைத்துப் போ என்று வேண்டிக் கொண்டிருந்தான்
ஆனால் ஆற்றின் சுழல் வேகத்தில் அக்கரைக்கு
செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது
ஆபத் பாந்தவன் போல்
ஒரு சிறுவன்அங்கு வந்து ...என்ன அக்கரைக்குப் போக வேண்டுமா...? வாருங்கள்
என்று அக்கரையோடு அழைத்தான் சிறுவன்
நம்மாலேயே இந்த வெள்ளப் பெருக்கில்
அக்கரை போக முடியாதே
இந்தச் சின்னஞ்சிறுவன் எப்படி அழைத்துப் போவான் ...?
நம்பிக்கை இல்லாவிடினும் நேர அவசரம்
கருதி ஆமாம் உதவி செய்ய முடியுமா?
என்று கேட்டான் பாமரன்
அதற்கு அச்ச் சிறுவன் வாருங்கள் அழைத்துப் போகிறேன்
என்று கன கம்பீரமாய் கூறிவிட்டு
என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,
என் பெயர் ஆயன் ,ஆயன் ,ஆயன் என்று
என் பெயரைச் சொல்லியபடியே வாருங்கள்
என்று சொல்லி நாராயணா நாராயணா
என்று கூறிக் கொண்டே
ஆற்றின் மேல் நடக்க்த் துவங்கினான்,இருவரும்
பாமரன் ஆயன் ,ஆயன் என்று கூறிக் கொண்டே
அந்த வெள்ளப் பெருக்கில் தன்ணீரின்
மேல் நடந்து போகத் துவங்கினர் மூழ்காமலே
முதலில் ஆச்சரியப் பட்ட பாமரன் பாதி வழியில்
திடீரென்று ,,யோசித்தான் சின்னஞ் சிறு இப்பாலகனே
நாராயணா ,நாராயணா என்று சொல்லும் போது தண்ணீரின் மேல் நடக்க முடிகிறதே ,
ஏன் நாமும் நாராயணா என்றே
சொல்லிக் கொண்டு நடக்கலாமே என்று எண்ணி
நாராயணா என்றான் ,உடனே தன்ணீரில் மூழ்கினான்
அப் பாமரனைப் பிடித்து தூக்கிய ஆயன்
என் பெயரை விட்டு விட்டு ஏன்
நாராயணன் பெயரைச் சொன்னீர்கள்
என்று கேட்க பாமரன் பதில் சொல்லத்
தெரியாமல் விழித்தான்
உடனே ஆயன் என்னும் அச்சிறுவன்
"எனக்கு நாராயணனைத் தெரியும்"
நான் அவன் பெயரைச் சொன்னேன்
உங்களுக்கு என்னைத் தானே தெரியும் ,
நான் தானே காப்பாற்றி
அழைத்துப் போகிறேன்
ஆகவே என் பெயரையே சொல்லுங்கள்
என்று சொல்ல பாமரன் ஆயன் ,ஆயன்
என்று சொல்லி அக்கரையை அடைந்தனர்
அவன் மனவிக்கு சுகப் ப்ரசவம் தாயும் சேயும் நலம்
அச்சிறுவன் அவர்களை ஆசீர்வதித்து
,யார் உனக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை நம்பு
அவரைத் தாண்டி அவருக்கு மூலம் எது என்று பாராதே
என்று சொல்லி விடை பெற்றான் ஆயன்
ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது
என்பதன் அர்த்தமும் இதுதான்
குரு எப்படி இருக்க் வேண்டும் என்று
நீ முடிவு செய்யாதே
உருவு கண்டு எள்ளாதே
உன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ள நீ பக்குவப் படு
குருப் ப்ரம்மா ,குரு விஷ்ணு, குரு தேவோ
மஹேச்வரஹ:குருஸ் சாஷ்ஷாத் பரப் ப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:
அன்புடன்
தமிழ்த்தேனீ
குரு என்பவர் எந்த தோற்றத்தில் வருகிறார்
என்பது முக்கியமே அல்ல
அவர் எப்படிப் பட்டவர் என்பதும் முக்கியமல்ல
ஒரு சரியான தருணத்தில் நம் அகக் கண்களைத் திறந்து
ஒரு சரியான வழிகாட்டுதல் மூலம் நம்மை ஆட் கொள்ளுபவர்கள் அனைவருமே குருஸ்தானத்தை அடைகிறார்கள்
ஒரு கதை ஞாபகம் வருகிறது
ஒரு பாமரன் கர்ப்பிணியாய் இருக்கும்
தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு ஆற்றின் அக்கரைக்குச் சென்று ,தன்னுடைய பணியை முடித்துவிட்டு திரும்பும் போது ,ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது
அக்கரையிலிருந்து அவசரச் செய்தி ,
கர்ப்பிணி மனைவிக்கு ப்ரசவ வலி
எடுத்து விட்டதாக.
இறைவா என் மனைவியையும்
குழந்தையையும் காப்பாற்று ,
என்னை எப்ப்டியாவது அக்கரைக்கு
அழைத்துப் போ என்று வேண்டிக் கொண்டிருந்தான்
ஆனால் ஆற்றின் சுழல் வேகத்தில் அக்கரைக்கு
செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது
ஆபத் பாந்தவன் போல்
ஒரு சிறுவன்அங்கு வந்து ...என்ன அக்கரைக்குப் போக வேண்டுமா...? வாருங்கள்
என்று அக்கரையோடு அழைத்தான் சிறுவன்
நம்மாலேயே இந்த வெள்ளப் பெருக்கில்
அக்கரை போக முடியாதே
இந்தச் சின்னஞ்சிறுவன் எப்படி அழைத்துப் போவான் ...?
நம்பிக்கை இல்லாவிடினும் நேர அவசரம்
கருதி ஆமாம் உதவி செய்ய முடியுமா?
என்று கேட்டான் பாமரன்
அதற்கு அச்ச் சிறுவன் வாருங்கள் அழைத்துப் போகிறேன்
என்று கன கம்பீரமாய் கூறிவிட்டு
என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,
என் பெயர் ஆயன் ,ஆயன் ,ஆயன் என்று
என் பெயரைச் சொல்லியபடியே வாருங்கள்
என்று சொல்லி நாராயணா நாராயணா
என்று கூறிக் கொண்டே
ஆற்றின் மேல் நடக்க்த் துவங்கினான்,இருவரும்
பாமரன் ஆயன் ,ஆயன் என்று கூறிக் கொண்டே
அந்த வெள்ளப் பெருக்கில் தன்ணீரின்
மேல் நடந்து போகத் துவங்கினர் மூழ்காமலே
முதலில் ஆச்சரியப் பட்ட பாமரன் பாதி வழியில்
திடீரென்று ,,யோசித்தான் சின்னஞ் சிறு இப்பாலகனே
நாராயணா ,நாராயணா என்று சொல்லும் போது தண்ணீரின் மேல் நடக்க முடிகிறதே ,
ஏன் நாமும் நாராயணா என்றே
சொல்லிக் கொண்டு நடக்கலாமே என்று எண்ணி
நாராயணா என்றான் ,உடனே தன்ணீரில் மூழ்கினான்
அப் பாமரனைப் பிடித்து தூக்கிய ஆயன்
என் பெயரை விட்டு விட்டு ஏன்
நாராயணன் பெயரைச் சொன்னீர்கள்
என்று கேட்க பாமரன் பதில் சொல்லத்
தெரியாமல் விழித்தான்
உடனே ஆயன் என்னும் அச்சிறுவன்
"எனக்கு நாராயணனைத் தெரியும்"
நான் அவன் பெயரைச் சொன்னேன்
உங்களுக்கு என்னைத் தானே தெரியும் ,
நான் தானே காப்பாற்றி
அழைத்துப் போகிறேன்
ஆகவே என் பெயரையே சொல்லுங்கள்
என்று சொல்ல பாமரன் ஆயன் ,ஆயன்
என்று சொல்லி அக்கரையை அடைந்தனர்
அவன் மனவிக்கு சுகப் ப்ரசவம் தாயும் சேயும் நலம்
அச்சிறுவன் அவர்களை ஆசீர்வதித்து
,யார் உனக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை நம்பு
அவரைத் தாண்டி அவருக்கு மூலம் எது என்று பாராதே
என்று சொல்லி விடை பெற்றான் ஆயன்
ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது
என்பதன் அர்த்தமும் இதுதான்
குரு எப்படி இருக்க் வேண்டும் என்று
நீ முடிவு செய்யாதே
உருவு கண்டு எள்ளாதே
உன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ள நீ பக்குவப் படு
குருப் ப்ரம்மா ,குரு விஷ்ணு, குரு தேவோ
மஹேச்வரஹ:குருஸ் சாஷ்ஷாத் பரப் ப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு திருவண்ணாமலை
என்னுடைய ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்
சென்னையிலுள்ள திருவண்ணாமலை சிவத் தலம்
ஸ்ரீவில்லி புத்துரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள்
இருக்கும் இன்னொரு திருவண்ணாமலையைப் பற்றி
சொல்கிறேன் ,இது வைணவத் தலம்
இங்கு அருமையான ஒரு கோயில் உள்ளது
கீழே ஒரு அருமையான பெரிய குளம் உள்ளது
அதன் அருகே கரையில் ஒரு வினாயகர் உள்ளார்
அவருக்கு ஆதி வினாயகர் என்று பெயர்
அந்த வினாயகர் மிகப் பெரிய சிலா ரூபம்,
அதன் பக்கத்திலேயே, அருமையான மிகப் பெரும்
ஆலமரமும் வேம்பும் பலவருடங்களுக்கு முந்தையது இருக்கிறது
அந்த மரத்தின் கீழே நாகம் ப்ரதிஷ்டை செய்யப் பட்டு
இருக்கிறது, மேலே படிகளேறிப் போனால் மலை மீது
ஸ்ரீனிவாசர் ஆலயம் இருக்கிறது ,
அங்கு திருவண்ணாமலை ஸ்ரீனிவாசன் குடிகொண்டிருக்கிறான்
,மிகவும் தொன்மை வாய்ந்த அருமையான தலம்
அந்தக் கோயிலில் நின்று கொண்டு பார்த்தால்
ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் இயற்கயோடு ரசிக்கலாம்
ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அக் கோயிலுக்கு
மோட்டார் வாகனத்திலும், எல்லா வாகனங்களிலும் செல்லலாம் ,
செல்லும் வழியை இன்னும் சீரமைத்தால்
இயற்கயை ரசிப்பதற்க்கும், ஆன்மீக வாசிகளுக்கு
மிகவும் நிறைவான ஒரு திருத்தலம்,இந்த
திருவண்ணாமலை
அங்கு குளத்தின் கரையில் இருக்கும்
ஆதிவினாயகரின்
தோறறம் மிக அற்புதமாக இருக்கும்
அந்த ஆதி வினாகயகரை தரிசித்து விட்டு
பக்கத்திலேயே இருக்கும் வேம்பும் அரசும் பின்னி வளர்ந்த
பெரிய மரத்தின்கீழ் இருக்கும் நாக விக்ரகங்களை
வணங்கிவிட்டு,
அண்ணாந்ந்து பார்த்தால் ஸ்ரீனிவாசனின் கோயில்,
மலை மேல் தெரியும்,அங்கு பூக்கடைகள்,அதிலிருக்கும்
இன்னும் க்ராமீய வாடை போகாத பூக்காரிகள்
அவர்களிடம் சென்று மாலை வாங்கிக் கொண்டு
படி ஏறலாம்,மொத்தம்250 படிகள், 200 படிகள் ஏறியவுடன்
மங்கம்மா கோயில்,பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம் அங்கு கைங்கரியம் செய்யும் ஒருவர் நமக்கு ஸ்ரீசுவர்ணம் இட்டுவிடுவார்
அன்னையன் தரிசனம் முடித்து ,அப்ப்டியே
- Show quoted text -
சென்னையிலுள்ள திருவண்ணாமலை சிவத் தலம்
ஸ்ரீவில்லி புத்துரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள்
இருக்கும் இன்னொரு திருவண்ணாமலையைப் பற்றி
சொல்கிறேன் ,இது வைணவத் தலம்
இங்கு அருமையான ஒரு கோயில் உள்ளது
கீழே ஒரு அருமையான பெரிய குளம் உள்ளது
அதன் அருகே கரையில் ஒரு வினாயகர் உள்ளார்
அவருக்கு ஆதி வினாயகர் என்று பெயர்
அந்த வினாயகர் மிகப் பெரிய சிலா ரூபம்,
அதன் பக்கத்திலேயே, அருமையான மிகப் பெரும்
ஆலமரமும் வேம்பும் பலவருடங்களுக்கு முந்தையது இருக்கிறது
அந்த மரத்தின் கீழே நாகம் ப்ரதிஷ்டை செய்யப் பட்டு
இருக்கிறது, மேலே படிகளேறிப் போனால் மலை மீது
ஸ்ரீனிவாசர் ஆலயம் இருக்கிறது ,
அங்கு திருவண்ணாமலை ஸ்ரீனிவாசன் குடிகொண்டிருக்கிறான்
,மிகவும் தொன்மை வாய்ந்த அருமையான தலம்
அந்தக் கோயிலில் நின்று கொண்டு பார்த்தால்
ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் இயற்கயோடு ரசிக்கலாம்
ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அக் கோயிலுக்கு
மோட்டார் வாகனத்திலும், எல்லா வாகனங்களிலும் செல்லலாம் ,
செல்லும் வழியை இன்னும் சீரமைத்தால்
இயற்கயை ரசிப்பதற்க்கும், ஆன்மீக வாசிகளுக்கு
மிகவும் நிறைவான ஒரு திருத்தலம்,இந்த
திருவண்ணாமலை
அங்கு குளத்தின் கரையில் இருக்கும்
ஆதிவினாயகரின்
தோறறம் மிக அற்புதமாக இருக்கும்
அந்த ஆதி வினாகயகரை தரிசித்து விட்டு
பக்கத்திலேயே இருக்கும் வேம்பும் அரசும் பின்னி வளர்ந்த
பெரிய மரத்தின்கீழ் இருக்கும் நாக விக்ரகங்களை
வணங்கிவிட்டு,
அண்ணாந்ந்து பார்த்தால் ஸ்ரீனிவாசனின் கோயில்,
மலை மேல் தெரியும்,அங்கு பூக்கடைகள்,அதிலிருக்கும்
இன்னும் க்ராமீய வாடை போகாத பூக்காரிகள்
அவர்களிடம் சென்று மாலை வாங்கிக் கொண்டு
படி ஏறலாம்,மொத்தம்250 படிகள், 200 படிகள் ஏறியவுடன்
மங்கம்மா கோயில்,பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம் அங்கு கைங்கரியம் செய்யும் ஒருவர் நமக்கு ஸ்ரீசுவர்ணம் இட்டுவிடுவார்
அன்னையன் தரிசனம் முடித்து ,அப்ப்டியே
- Show quoted text -
பாடங்கள்
என்வாழ்வில்
என்னை நெகிழ் வைத்த சம்பவங்கள்
சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்ச்சி
நான் அடிக்கடி புரசைவாக்கத்திலிருந்த உணவு விடுதிக்கு
சென்று சுவையான சிற்றுண்டி சாப்பிடுவது என் வழக்கம்
இப்போது அந்தச் சுவை இல்லை அதனால்
அவர்களுடைய நலன் கருதி அந்த சிற்றுண்டி
விடுதியின் பெயரைத் தெரிவிக்காது
சம்பவத்துக்கு நேரிடையாக வருகிறேன்
அதே போல் ஒருநாள் அச்சிற்றுண்டி விடுதிக்கு
சென்று என்னுடைய ராஜ்தூத் துவிச்சக்கர வண்டியை
நிருத்திவிட்டு உள்ளே செல்ல முயலும் போது
யதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்
என்னுடைய ராஜ்தூத்தை ஒரு சிறுவன்
சுமார் 12 வயதிருக்கலாம்
ஒரு துணியை வைத்து நன்றாகத் துடைக்க
ஆரம்பித்தான், நான் அவன் என்னைப்
பார்க்கமுடியாத ஓரிடத்திலிருந்து
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
இருக்கும் ஒரு வண்டியையும் யாராவது
எடுத்துப் போய்விட்டால்...?
மனிதனுக்கு சந்தேக புத்திதானே...?
அந்தச் சிறுவன் மிக நன்றாக என்னுடைய
வண்டியைத் துடைத்துவிட்டு
நான்கூட அவ்வளவு நன்றாகத் துடைத்திருப்பேனா
என்பது சந்தேகமே..
ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டான்
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான்
வேண்டுமென்றே என்னுடைய வண்டியின் பக்கத்தில்
போய் நின்றேன்,உடனே அச்சிறுவன் ஓடிவந்து
அய்யா உங்கள் வண்டியை நன்றாகத் துடைத்திருக்கிறேன்
எனக்கு எதாவது பணம் இருந்தால் கொடுங்கள்
என்றான்
எனக்கு வேலையைச் செய்துவிட்டு கூலி கேட்கும்
அவன் குணம் பிடித்திருந்தது ,
(இப்படிப் பட்டவர்களை ஆராயும்போது சில விஷயங்கள்
கிடைக்கும் என்பது என் அனுபவ பூர்வமான உண்மை )
எந்த மனிதரை ஆராய்ந்தாலும் ஏதாவதொரு
அனுபவம் கிடைக்கும் அது நம் வாழ்க்கைக்கு
உபயோகமாகவும் இருக்கும்
அதனால் அவனை மேலும் ஆராய எண்ணி
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு
என்னுடைய வண்டியை என் அனுமதி இல்லாமல்
துடைத்துவிட்டு ,பணம் வேறு கேட்கிறாயா?என்றேன் மிறட்டும் தொனியில்,
அதற்கு அவன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு அய்யா முடிந்தால் பணம் கொடுங்கள் ,
இல்லையானால் பரவாயில்லை ,
என்னை மன்னித்துவிடுங்கள்,உங்கள் அனுமதி
இல்லாமல் உங்கள் வாகனத்தை
நான் தொட்டது தவறுதான் என்றான்,
அவனுடைய அணுகு முறை மிகவும்
ரசிக்கத்தக்கதாகவும்
யோசிக்கத்தக்கதாகவும் இருந்தது
நான் அவனை மேலும் சோதிக்க
நான் உனக்கு பணம் தர முடியாது,
வேண்டுமானால் என்னுடன்வா உனக்கு
உணவு வாங்கித் தருகிறேன்
(இது என்னுடைய நெடுநாளைய பழக்கம்,)
என் தந்தையாரும் தாயாரும் அடிக்கடி
சொல்வார்கள்,
பணம் எவ்வளவு கொடுத்தாலும்,
இன்னும் கொடுக்க மாட்டார்களா
என்றுதான் நினைப்பார்கள்,உணவு கொடுத்தால்
வயிரு நிறைந்தவுடன் போதும் போதும்,
நீங்க நல்லாஇருக்கணும் அப்பிடீன்னு
வாழ்த்துவார்கள் அதனால்
கல்விக்கு உதவி செய் ,பணம் கொடுக்காதே என்பார்கள்
ஆதலினால் அவனை உணவு விடுதிக்கு
உள்ளே அழைத்தேன்
அவன் வர மறுத்தான்,பணம்தான்
வேண்டுமென்று மன்றாடினான்
நான் என்னுடைய கொள்கையைக் கூறியவுடன்
அரை மனதோடு என்னுடன் உணவு விடுதிக்குள்
வந்து நான் சொன்னவுடன் உட்கார்ந்தான்,
அவனுக்கு ஆறு இட்டிலிகளையும்,
எனக்கு தோசையையும்
கொண்டு வரச் சொல்லி அனுப்பினேன்
நான் ருசிக்கு சாப்பிடுபவன்,
அவன் பசிக்கு சாப்பிடுபவன்
எல்லாம் வந்தது,நான் அவனையும் சாப்பிடச்
சொல்லிவிட்டு
நானும் சாப்பிட ஆரம்ப்பித்தேன்
திடீரென்று அவனைப் பார்த்தேன்
அவன் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை
அவனுடைய அடம் ,அழிச்சாட்டியம்
எனக்குப் பொறுக்கவில்லை
என்னை அறியாது கோபம் வந்தது
டேய் என்ன நினைச்சிட்டிருக்கே மனசிலே
சாப்புடுடா,பணம் நிச்சயமாக தரமாட்டேன்
என்று கத்தினேன்
அனைவரும் என்னை திரும்பிப் பார்த்தனர்
என்னை சுதாரித்துக் கொண்டு
(அந்த உணவகத்தின் பணியாளர் என்னையே
கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன்)
என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு
என்னடா சாப்பிடேன் என்றேன்
அதற்கு அச்சிறுவன் அய்யா என்னை மன்னிக்க வேண்டும்
நான் இதை வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடுகிறேன்
என்றான்,ஓ வெளியே எடுத்துப் போய் விற்றுவிட்டு
பணமாக மாற்றலாம் என்று பார்க்கிறாயா
அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்
என்றேன்
அச்சிறுவன் கூறிய பதில் என்னை
திடுக்கிட வைத்தது
அய்யா வீட்டில் என் தம்பி தங்கைகள்
பட்டினியாக இருக்கிறார்கள்
அவர்களுக்கும் கொடுத்து நானும்சாப்பிடுவேன்
நான் மட்டும் எப்படி அய்யா சாப்பிடுவது ..?
என்றான்.எனக்குப் பொட்டில் அறைந்தது போல்
இருந்தது,, ஆமாம் என் வீட்டில் இருப்பவர்கள்
சாப்பிட்டிருப்பார்களா..? இப்போதுதான்
அந்த நினைவே வருகிறது,உள்ளுக்குள்ளே
அவமான உணர்ச்சி, அத்தனை சிறிய வயதில்
அச்சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி
அன்பு பாசம்,நேசம் ,கடமை, அடடா
என்னுடைய கலவையான அதிர்ச்சியான ,சந்தோஷமான
அத்தனை உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு
நான் அவர்களுக்கும் வாங்கித் தருகிறேன், என்றுசொல்லி
நிறைய உணவுப் பண்டங்கள் கட்டி எடுத்துக் கொண்டு
என்னுடைய மேஜையில் வைத்தபிறகு
அவன் சாப்பிட ஆரம்பித்தான்
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
என் கண்களில் கண்ணீர் மழை
பொழிந்து கொண்டே இருந்தது
எல்லோரும் என்னை வேடிக்கை பார்த்தனர்
நான் கவலைப்படவே இல்லை
அந்த ,சிறுவன் எனக்கு ஞானோபதேசம் செய்யவந்த
அச்சிறுவனை,கடவுள்,தீர்க்கதரிசி,ஞானி, எப்படி
வேண்டுமானாலும் கொள்ளலாம்
என்னுடைய அத்தனை உணர்ச்சிகளும்
, வெட்கித் தலை குனிந்திருந்தது
அன்புடன்
தமிழ்த்தேனீ
என்னை நெகிழ் வைத்த சம்பவங்கள்
சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்ச்சி
நான் அடிக்கடி புரசைவாக்கத்திலிருந்த உணவு விடுதிக்கு
சென்று சுவையான சிற்றுண்டி சாப்பிடுவது என் வழக்கம்
இப்போது அந்தச் சுவை இல்லை அதனால்
அவர்களுடைய நலன் கருதி அந்த சிற்றுண்டி
விடுதியின் பெயரைத் தெரிவிக்காது
சம்பவத்துக்கு நேரிடையாக வருகிறேன்
அதே போல் ஒருநாள் அச்சிற்றுண்டி விடுதிக்கு
சென்று என்னுடைய ராஜ்தூத் துவிச்சக்கர வண்டியை
நிருத்திவிட்டு உள்ளே செல்ல முயலும் போது
யதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்
என்னுடைய ராஜ்தூத்தை ஒரு சிறுவன்
சுமார் 12 வயதிருக்கலாம்
ஒரு துணியை வைத்து நன்றாகத் துடைக்க
ஆரம்பித்தான், நான் அவன் என்னைப்
பார்க்கமுடியாத ஓரிடத்திலிருந்து
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
இருக்கும் ஒரு வண்டியையும் யாராவது
எடுத்துப் போய்விட்டால்...?
மனிதனுக்கு சந்தேக புத்திதானே...?
அந்தச் சிறுவன் மிக நன்றாக என்னுடைய
வண்டியைத் துடைத்துவிட்டு
நான்கூட அவ்வளவு நன்றாகத் துடைத்திருப்பேனா
என்பது சந்தேகமே..
ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டான்
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான்
வேண்டுமென்றே என்னுடைய வண்டியின் பக்கத்தில்
போய் நின்றேன்,உடனே அச்சிறுவன் ஓடிவந்து
அய்யா உங்கள் வண்டியை நன்றாகத் துடைத்திருக்கிறேன்
எனக்கு எதாவது பணம் இருந்தால் கொடுங்கள்
என்றான்
எனக்கு வேலையைச் செய்துவிட்டு கூலி கேட்கும்
அவன் குணம் பிடித்திருந்தது ,
(இப்படிப் பட்டவர்களை ஆராயும்போது சில விஷயங்கள்
கிடைக்கும் என்பது என் அனுபவ பூர்வமான உண்மை )
எந்த மனிதரை ஆராய்ந்தாலும் ஏதாவதொரு
அனுபவம் கிடைக்கும் அது நம் வாழ்க்கைக்கு
உபயோகமாகவும் இருக்கும்
அதனால் அவனை மேலும் ஆராய எண்ணி
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு
என்னுடைய வண்டியை என் அனுமதி இல்லாமல்
துடைத்துவிட்டு ,பணம் வேறு கேட்கிறாயா?என்றேன் மிறட்டும் தொனியில்,
அதற்கு அவன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு அய்யா முடிந்தால் பணம் கொடுங்கள் ,
இல்லையானால் பரவாயில்லை ,
என்னை மன்னித்துவிடுங்கள்,உங்கள் அனுமதி
இல்லாமல் உங்கள் வாகனத்தை
நான் தொட்டது தவறுதான் என்றான்,
அவனுடைய அணுகு முறை மிகவும்
ரசிக்கத்தக்கதாகவும்
யோசிக்கத்தக்கதாகவும் இருந்தது
நான் அவனை மேலும் சோதிக்க
நான் உனக்கு பணம் தர முடியாது,
வேண்டுமானால் என்னுடன்வா உனக்கு
உணவு வாங்கித் தருகிறேன்
(இது என்னுடைய நெடுநாளைய பழக்கம்,)
என் தந்தையாரும் தாயாரும் அடிக்கடி
சொல்வார்கள்,
பணம் எவ்வளவு கொடுத்தாலும்,
இன்னும் கொடுக்க மாட்டார்களா
என்றுதான் நினைப்பார்கள்,உணவு கொடுத்தால்
வயிரு நிறைந்தவுடன் போதும் போதும்,
நீங்க நல்லாஇருக்கணும் அப்பிடீன்னு
வாழ்த்துவார்கள் அதனால்
கல்விக்கு உதவி செய் ,பணம் கொடுக்காதே என்பார்கள்
ஆதலினால் அவனை உணவு விடுதிக்கு
உள்ளே அழைத்தேன்
அவன் வர மறுத்தான்,பணம்தான்
வேண்டுமென்று மன்றாடினான்
நான் என்னுடைய கொள்கையைக் கூறியவுடன்
அரை மனதோடு என்னுடன் உணவு விடுதிக்குள்
வந்து நான் சொன்னவுடன் உட்கார்ந்தான்,
அவனுக்கு ஆறு இட்டிலிகளையும்,
எனக்கு தோசையையும்
கொண்டு வரச் சொல்லி அனுப்பினேன்
நான் ருசிக்கு சாப்பிடுபவன்,
அவன் பசிக்கு சாப்பிடுபவன்
எல்லாம் வந்தது,நான் அவனையும் சாப்பிடச்
சொல்லிவிட்டு
நானும் சாப்பிட ஆரம்ப்பித்தேன்
திடீரென்று அவனைப் பார்த்தேன்
அவன் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை
அவனுடைய அடம் ,அழிச்சாட்டியம்
எனக்குப் பொறுக்கவில்லை
என்னை அறியாது கோபம் வந்தது
டேய் என்ன நினைச்சிட்டிருக்கே மனசிலே
சாப்புடுடா,பணம் நிச்சயமாக தரமாட்டேன்
என்று கத்தினேன்
அனைவரும் என்னை திரும்பிப் பார்த்தனர்
என்னை சுதாரித்துக் கொண்டு
(அந்த உணவகத்தின் பணியாளர் என்னையே
கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன்)
என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு
என்னடா சாப்பிடேன் என்றேன்
அதற்கு அச்சிறுவன் அய்யா என்னை மன்னிக்க வேண்டும்
நான் இதை வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடுகிறேன்
என்றான்,ஓ வெளியே எடுத்துப் போய் விற்றுவிட்டு
பணமாக மாற்றலாம் என்று பார்க்கிறாயா
அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்
என்றேன்
அச்சிறுவன் கூறிய பதில் என்னை
திடுக்கிட வைத்தது
அய்யா வீட்டில் என் தம்பி தங்கைகள்
பட்டினியாக இருக்கிறார்கள்
அவர்களுக்கும் கொடுத்து நானும்சாப்பிடுவேன்
நான் மட்டும் எப்படி அய்யா சாப்பிடுவது ..?
என்றான்.எனக்குப் பொட்டில் அறைந்தது போல்
இருந்தது,, ஆமாம் என் வீட்டில் இருப்பவர்கள்
சாப்பிட்டிருப்பார்களா..? இப்போதுதான்
அந்த நினைவே வருகிறது,உள்ளுக்குள்ளே
அவமான உணர்ச்சி, அத்தனை சிறிய வயதில்
அச்சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி
அன்பு பாசம்,நேசம் ,கடமை, அடடா
என்னுடைய கலவையான அதிர்ச்சியான ,சந்தோஷமான
அத்தனை உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு
நான் அவர்களுக்கும் வாங்கித் தருகிறேன், என்றுசொல்லி
நிறைய உணவுப் பண்டங்கள் கட்டி எடுத்துக் கொண்டு
என்னுடைய மேஜையில் வைத்தபிறகு
அவன் சாப்பிட ஆரம்பித்தான்
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
என் கண்களில் கண்ணீர் மழை
பொழிந்து கொண்டே இருந்தது
எல்லோரும் என்னை வேடிக்கை பார்த்தனர்
நான் கவலைப்படவே இல்லை
அந்த ,சிறுவன் எனக்கு ஞானோபதேசம் செய்யவந்த
அச்சிறுவனை,கடவுள்,தீர்க்கதரிசி,ஞானி, எப்படி
வேண்டுமானாலும் கொள்ளலாம்
என்னுடைய அத்தனை உணர்ச்சிகளும்
, வெட்கித் தலை குனிந்திருந்தது
அன்புடன்
தமிழ்த்தேனீ
நெகிழ வைத்த சம்பவங்கள் 1.
திரு ஆண்டாளின் தோள்களிலே
கொஞ்ஜும் கிளிகள்
ரங்கா,ரங்கா,என்று கொஞ்ஜும்
ஸ்ரீரங்கம் ,திருவரங்கன் திருக் கோயில்
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்,.
ராஜ கோபுரத்தை
பல வருடங்களாக , பலமுறை பல பேர்
நிர்மாணிக்க முயன்றும் , முடியாமல் நின்ற
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டுவதற்காக
அப்போது இருந்த ஜீயர் 44வது பட்டம்,
ஸ்ரீவண் ஸடகோபஸ்ரீ வேதாந்த மஹா தேசிகன்
மிகவும் மிகவும் ப்ரயாசைப் பட்டு ,பலவிதமான
,முயற்சிகளை மேற்கொண்டார், அவருக்கு
வயது 70 க்கு மேல்
அந்த வயதிலும் அவர் பல பாடு பட்டு
நம்முடைய புராதனமான,
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்
ராஜ கோபுரத்தை நிர்மாணித்தே ஆகவேண்டும்
என்று தீர்மானமாக முடிவெடுத்து
அதற்காக மொத்த தொகை எவ்வளவு
ஆகும் என்று தோராயமாக ஒரு திட்டமிட்டு
அத்தொகை பல நல்ல வழிகளில்
ஈட்டிவந்தார்,
இயல்பாகவே மிகவும் இரக்க மனம் கொண்ட
எடுத்த உன்னதமான பணியை
முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தினால்
மடத்தின் அனாவசிய சிலவுகளைக் குறைத்து
சிக்கனத்தை மேற்கொண்டு ஒவ்வொரு பைசாவையும்
ஒரு கோடி போல் எண்ணி சேர்த்துக் கொண்டே
தைரியமாக திருப் பணியை ஆரம்ப்பித்தும் விட்டார்
அப்போது ஆட்சியிலிருந்த திரு எம் ஜீஆர்
என்று அழைக்கப் படும் திரு எம் ஜீ ராமச்சந்திரன்
அவர்கள் ஒரு லக்க்ஷ ரூபாய் நன் கொடை
கொடுத்தார்,திரு இளைய ராஜா இன்னும்
பல நல்ல உள்ளங்கள், இந்த நல்ல திருப் பணிக்கு
பொருளுதவி செய்தனர்,
அப்படியும் பணம் போதாமல் இன்னும்
பணம்சேர்ப்பதற்கு பல நல்ல வழிகளில்
முயன்று கொண்டிருந்தார் ஜீயர் அவர்கள்
திருப்பணிகளும் நடந்து கொண்டே இருந்தது
சிக்கனத்தை மேற்கொண்டாரே தவிர
தினம் வரும் அன்பர்களுக்கு
திருவரங்கன்நாச்சியாரின் ப்ரசாதம் அளிப்பது,
உணவளிப்பது எதையும் நிறுத்தவில்லை
அந்த நேரத்தில்
ஒரு வயதான மூதாட்டி அங்கு வந்து
அவரிடம் ,
ஆச்சாரியனே எனக்கு ஒரு பத்து ரூபாய்
கொடுங்கள்,என்று கேட்டார்,
அச்சாரியனும் அந்த மூதாட்டியிடம்
ராஜ கோபுரம் கட்டுதற்க்கே
பொருள் போதாமையால் இன்னும்
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே
இல்லை என்று பல முறை வற்புறுத்தி
சொல்லியும்
அந்த மூதாட்டி அங்கேயே நின்றுகொண்டு
மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்து கொண்டிருந்தாள் பத்து ரூபாய்
கொடுக்கும் படி
அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல்
உதவியாளரை அழைத்து அந்த மூதாட்டிக்கு
ஒரு பத்து ரூபாய் கொடுத்து அனுப்பும்படி
சொல்ல ,அவளுக்கு பத்து ரூபாய் கொடுக்கப் பட்டது
அந்த மூதாட்டி ஆசாரியனை மேலும் நெருங்கி வந்து
தன் தளர்ந்த குரலில் என்னை மன்னிக்க வேண்டும்
இந்த வயதிலும் நீங்கள் ராஜ கோபுர திருப்பணி செய்யும்
மகத்தான காரியத்துக்கு பல பெரிய மனிதர்கள்
பண உதவி செய்திருக்கிரார்கள்
ஆனால் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை
என்னிடம் பணம் இல்லை ஆனால் ராஜ கோபுர
த்ருப்பணிக்கு கொடுக்க மனம் மட்டும் உள்ளது
அதனால்தான் தங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன்
என்று கூறி
ஆச்சாரியனே இந்த அடியாளின் பங்காக
இந்தப் பத்து ரூபாயை ராஜகோபுர திருப்பணிக்காக
வைத்துக் கொள்ளுங்கள் என்று கதறினாள்
அங்கு திருவரங்கனும் நாச்சியாரும் ,ஆச்சாரியாரும்
நெக்குருகினர்
இந்தச் செய்திகேட்டு
அடியேனும் நெகிழ்ந்தோம்
மனமிருந்தால் வழியுண்டு
அன்புடன்
தமிழ்த்தேனீ
கொஞ்ஜும் கிளிகள்
ரங்கா,ரங்கா,என்று கொஞ்ஜும்
ஸ்ரீரங்கம் ,திருவரங்கன் திருக் கோயில்
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்,.
ராஜ கோபுரத்தை
பல வருடங்களாக , பலமுறை பல பேர்
நிர்மாணிக்க முயன்றும் , முடியாமல் நின்ற
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டுவதற்காக
அப்போது இருந்த ஜீயர் 44வது பட்டம்,
ஸ்ரீவண் ஸடகோபஸ்ரீ வேதாந்த மஹா தேசிகன்
மிகவும் மிகவும் ப்ரயாசைப் பட்டு ,பலவிதமான
,முயற்சிகளை மேற்கொண்டார், அவருக்கு
வயது 70 க்கு மேல்
அந்த வயதிலும் அவர் பல பாடு பட்டு
நம்முடைய புராதனமான,
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்
ராஜ கோபுரத்தை நிர்மாணித்தே ஆகவேண்டும்
என்று தீர்மானமாக முடிவெடுத்து
அதற்காக மொத்த தொகை எவ்வளவு
ஆகும் என்று தோராயமாக ஒரு திட்டமிட்டு
அத்தொகை பல நல்ல வழிகளில்
ஈட்டிவந்தார்,
இயல்பாகவே மிகவும் இரக்க மனம் கொண்ட
எடுத்த உன்னதமான பணியை
முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தினால்
மடத்தின் அனாவசிய சிலவுகளைக் குறைத்து
சிக்கனத்தை மேற்கொண்டு ஒவ்வொரு பைசாவையும்
ஒரு கோடி போல் எண்ணி சேர்த்துக் கொண்டே
தைரியமாக திருப் பணியை ஆரம்ப்பித்தும் விட்டார்
அப்போது ஆட்சியிலிருந்த திரு எம் ஜீஆர்
என்று அழைக்கப் படும் திரு எம் ஜீ ராமச்சந்திரன்
அவர்கள் ஒரு லக்க்ஷ ரூபாய் நன் கொடை
கொடுத்தார்,திரு இளைய ராஜா இன்னும்
பல நல்ல உள்ளங்கள், இந்த நல்ல திருப் பணிக்கு
பொருளுதவி செய்தனர்,
அப்படியும் பணம் போதாமல் இன்னும்
பணம்சேர்ப்பதற்கு பல நல்ல வழிகளில்
முயன்று கொண்டிருந்தார் ஜீயர் அவர்கள்
திருப்பணிகளும் நடந்து கொண்டே இருந்தது
சிக்கனத்தை மேற்கொண்டாரே தவிர
தினம் வரும் அன்பர்களுக்கு
திருவரங்கன்நாச்சியாரின் ப்ரசாதம் அளிப்பது,
உணவளிப்பது எதையும் நிறுத்தவில்லை
அந்த நேரத்தில்
ஒரு வயதான மூதாட்டி அங்கு வந்து
அவரிடம் ,
ஆச்சாரியனே எனக்கு ஒரு பத்து ரூபாய்
கொடுங்கள்,என்று கேட்டார்,
அச்சாரியனும் அந்த மூதாட்டியிடம்
ராஜ கோபுரம் கட்டுதற்க்கே
பொருள் போதாமையால் இன்னும்
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே
இல்லை என்று பல முறை வற்புறுத்தி
சொல்லியும்
அந்த மூதாட்டி அங்கேயே நின்றுகொண்டு
மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்து கொண்டிருந்தாள் பத்து ரூபாய்
கொடுக்கும் படி
அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல்
உதவியாளரை அழைத்து அந்த மூதாட்டிக்கு
ஒரு பத்து ரூபாய் கொடுத்து அனுப்பும்படி
சொல்ல ,அவளுக்கு பத்து ரூபாய் கொடுக்கப் பட்டது
அந்த மூதாட்டி ஆசாரியனை மேலும் நெருங்கி வந்து
தன் தளர்ந்த குரலில் என்னை மன்னிக்க வேண்டும்
இந்த வயதிலும் நீங்கள் ராஜ கோபுர திருப்பணி செய்யும்
மகத்தான காரியத்துக்கு பல பெரிய மனிதர்கள்
பண உதவி செய்திருக்கிரார்கள்
ஆனால் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை
என்னிடம் பணம் இல்லை ஆனால் ராஜ கோபுர
த்ருப்பணிக்கு கொடுக்க மனம் மட்டும் உள்ளது
அதனால்தான் தங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன்
என்று கூறி
ஆச்சாரியனே இந்த அடியாளின் பங்காக
இந்தப் பத்து ரூபாயை ராஜகோபுர திருப்பணிக்காக
வைத்துக் கொள்ளுங்கள் என்று கதறினாள்
அங்கு திருவரங்கனும் நாச்சியாரும் ,ஆச்சாரியாரும்
நெக்குருகினர்
இந்தச் செய்திகேட்டு
அடியேனும் நெகிழ்ந்தோம்
மனமிருந்தால் வழியுண்டு
அன்புடன்
தமிழ்த்தேனீ
Subscribe to:
Posts (Atom)