திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, July 24, 2007

(யோசிப்போம்) 1.அர்த்தநாரீ


யோசிப்போம்் ”

அர்த்தநாரீ

எல்லா ஆண்களிடமும் - தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும் ,எல்லாப் பெண்களிடமும்-
தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும்,
இயற்கையாகவே உண்டு

நாம் எதை வளர்க்கிறோமோ அதற்குண்டான

பலன்தான் அடைய முடியும்

ஆகவே நம் வாழ்க்கை நம் கையில்் தான்

"கல்யாணம் என்கிற ஒரு புது பந்தத்தினால்

வெவ்வேறுகுடும்பப் பாரம்பரியம் இயல்புகள்,பழக்கவழக்கங்கள்

கொண்ட இருவர், அதாவது ,ஒரு ஆணும் ,பெண்ணும்

ஒரு கூறையில் ,ஒரே இடத்தில், இணைந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்

ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வது

என்பது நிச்சயமாக இயலாது,

முழுமையாகப் புறிந்து கொள்ளல் நிச்சயமாக முடியாது.......

,சுக, துக்கங்களிலும்,பங்கு கொண்டு , பல வருடங்கள்

ஒன்றாக வாழ்ந்த்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலே

வாழ்க்கையை முடிப்பவர்கள்தாம் மிக அதிகம் என்பது என்

அனுபவ பூர்வமான கூற்று,,........

ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து

திருமணம் செய்தாலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட

திருமணம் என்றாலும்

தவறு கண்ட இடத்தில் ,தைரியமாக ஆனால் மனம்

புண்படாத வகையில் எடுத்துக் கூறி, தங்களை

தாங்களே சரி செய்து கொண்டு, சமப்படுத்திக் கொண்டு,

வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம்

அப்படியில்லாமல் தவறாக நினைத்துக் கொள்ளப்

போகிறார்களேஎன்று எண்ணி யதார்த்தமான உண்மைகளை

சொல்வதற்கு கூட தைரியமில்லாமல் இருந்துவிட்டு பிறகு

காலம் கடந்து வருத்தப் படுவதில் அர்த்தமில்லை.

திருமணமான சில காலங்களுக்குள்ளேயே

விவாகரத்து ஏற்படும் சமீபகால நிகழ்வுகளுக்கு

மேற்கூறிய

தைரியமில்லாமைதான் மூல காரணம்

ஒரே கூறையின் கீழ் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்பொழுதே

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோம்

ஆதலினால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ,

தனித் தனி அந்தரங்கம்,தனித் தனி சுதந்திரம்

எல்லாம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும்

தனித் தனி சுய மரியாதை உண்டு

என்று ஒப்புக் கொண்டாலும்

பொதுவான மரியாதை,பொதுவான சுதந்திரம்

அன்பு, பாசம், நேசம்,எல்லாம்

ஏற்படும் காலம்தான் தாம்பத்தியக் காலம்

அதற்குப் பெயர்தான்

“தாம்பத்தியம்“-

தாம் பத்தியம் இருக்கும்

இனிமையான தாம்பத்தியம்

தாம்பத்தியங்கள் வெறும் ஒப்பந்த்தங்களாக மாறக் கூடாது

இதைப் புறிந்து கொள்ளாமல்

அவர் விஷயத்தில் நான் தலையிடமாட்டேன்

அவள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்

என்று மூன்றாம் மனைதர்களைப் போல ஒதுங்கி ஒதுங்கி

வாழ்வது,நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுவது

விபரீதமாகும்

அழ அழச் சொல்பவர் தமர் என்று ஒரு பழ மொழி உண்டு

அதற்குப் பொருள்

நாம் சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வந்தாலும்,

வருத்தம் வந்தாலும், அதற்காக நம்மை அவர்கள்

உதாசீனப் படுத்தினாலும் அவர்களுக்கும்

நமக்கும் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை

தைரியமாக சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி

புரியவைப்பது

தெரிந்தோ தெரியாமலோ, தவறான பாதையில்

செல்பவர்களை தட்டிக் கேட்கவும் ,

சரியான பாதையில் நடப்பவர்களை தட்டிக் கொடுக்கவும்

நிச்சயமாக தைரியம் வரவேண்டும், அல்லது

அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்

அப்போதுதான் அவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி

நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்

எவ்வளவு சொன்னாலும் கேட்காதவர்களை

யாரும் மாற்ற முடியாது காலம்தான் ,

அவர்களுடைய அனுபவந்தான்

அவர்களுக்கு புறிய வைக்கவேண்டும்

இச்சகம் பேசுவது என்று ஒன்று உண்டு

கேட்பவர்களுக்கு மிகவும் இதமாக,இனிமையாக இருக்கும்

சந்தோஷமாக இருக்கும் கேட்கும் பொழுது

ஆனால் சொல்பவர்களுக்கு உடனடியான லாபங்களையும்

கேட்பவர்களுக்கு பிற்காலத்தில் படு பயங்கரமான வீழ்ச்சியையும்

நஷ்டங்களையும் ஏற்படுத்தும் இச்சகம்

இந்த இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்

இதை உணராதவர்கள் தாம் அவசரத் திருமணங்கள் புரிதல்,

உடனடி விவாகரத்து புரிதல் என்கிற நிர்பந்த்தத்துக்கு ஆட்படுகிறார்கள்

அர்த்தநாரீ

அர்த்த என்றால் பாதி, நாரீ என்றால் பெண்

பாதி சக்தி ஆண்- சிவம், பாதி சக்தி பெண் -சக்தி

சிவன் பாதி சக்தி பாதி இணைந்து தான்

மொத்த சக்தியும்உருவாகிறது

இந்த சிவமும் சக்தியும் இணைந்ததுதான்

அர்த்தமுள்ள அர்த்த நாரீ

அர்த்தமுள்ள முழுமை பெறும் அர்த்த நாரீ

இதில் விக்ஞானப் ப்ரகாரமும்,ஆன்மீகப் ப்ரகாரமும்

நிறைய அர்த்தங்கள் உள்ளது

ஆணும் பெண்ணும் கலக்காவிட்டால் அங்கு

உயிர்கள் உருவாக முடியாது

உலகில் பிறந்த எந்தப் பிறப்பும் ஆண் தன்மையும்,

பெண்தன்மையும் கலந்து பிறந்ததே

ஆண் தன்மை உள்ள பெண்களும் உண்டு

பெண்தன்மை கொண்ட ஆண்களும் உண்டு

ஆண்மைகலக்காத பெண்ணும் ,பெண்மை கலக்காத ஆணும்

முழுமை பெறவே முடியாது

ஆணுக்குரிய தன்மை பெண்ணுக்குரிய தன்மை

இரண்டும் விகிதாசாரக் கலப்பில் வித்தியாசப் படலாம்

ஆனால் கலப்பு இல்லாமல் இருக்கவே முடியாது

அந்த விகிதாசாரம் எந்த அளவில் இருந்தால்

ஊனமில்லாமல் பிறக்கும் என்கிற

அளவு கோலைத்தான் ஆன்மீகத்தில்

“ஜாதகப் பொருத்தம்” என்றும்

விக்ஞானத்தில் ’’ உடற்கூறுப் பொருத்தம் “

என்றும் சொல்கிறார்கள்

ஆகவே ஆண்தன்மையோடு கலக்கும்

பெண் தன்மையின்,

அல்லது பெண்தன்மையோடு கலக்கும்

ஆண்தன்மையின்,

விகிதாசார மாறுதல், ஏற்றதாழ்வு, இவைகளினால்தான்

ஆண் என்றோ பெண் என்றோ

அல்லது இரண்டிற்க்கும் இடைப்பட்ட படைப்பான

அலி (அரவாணிகள்) என்றோ ஆகிறது

ஆகவே எந்த உயிரினமும் கேலிப் பொருளல்ல

ஜாதகத்தில்

ராசிப் பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம்,

யோனிப் பொருத்தம், தினப்பொருத்தம் ,மஹேந்திரப் பொருத்தம்,

இன்னும் பிற பொருத்தங்கள்

விக்ஞானத்தில் ரத்தத்திலுள்ள, வகைப் பொருத்தம் ,

அதாவது உடற்கூறின்மூலமாகிய,

மரபணுப் பொருத்தம்

குடும்ப பாரம்பரியப் பொருத்தம்

இன்னும் பிற பொருத்தங்கள்

இவைகளைக் கணக்கில் கொண்டுதான்

ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்யக் கூடாது

என்றும் பொருத்தங்கள் சரியாக இல்லையென்றால்

கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள்

இந்த உலகமே கணித மயமானது ,இங்கு பெரியோர்களால்

வகுக்கப் பட்ட சாத்திரங்கள், விக்ஞானிகளால் உருவாக்கப்பட்ட

நவீன வழிமுறைகள் எல்லாமே பல

வகையான கணிப்புகள், கணக்குகள்தாம்,

நமக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக

எதையுமே ஒப்புக் கொள்ளாமல் ,

எந்த வழியில் பயணிக்கப் போகிறோம் என்னும் தெளிவில்லாமல்

நம்மை நாமே குழப்பிக் கொள்வதால் ஏற்படும்

விளைவுகள்தாம், தடுமாற்றங்கள்தான் இப்போதைய

விவாகரத்துகளுக்கு மூல காரணம்

இந்தப் ப்ரபஞ்ஜத்தில் தானே நாம் வாழுகிறோம்

இந்தப் ப்ரபஞ்ஜத்துக்கும் நம்முடைய உயிர்,ஆன்மா

உயிரணுக்கள் எல்லாவற்றிர்க்கும் தொடர்பு உண்டு

பஞ்ஜ பூதங்கள்,அல்லது இயற்கை எனும்

பூமி,ஆகாயம்,நீர்,நெருப்பு,காற்று

இவை அனைத்துதும் இணைந்ததுதான்

ப்ரபஞ்ஜமும் அதிலிருக்கும் எல்லா உயிரினமும்

யோசனை செய்து பார்த்தால் புரியும்

இந்த ஐந்து இயற்கையும் ஒன்று

சேராமல் நம்முடன் ஒத்துழைக்காமல்

நம்மால் எதையுமே செய்ய முடியாது

அதேபோல் ஒவ்வொரு ஜீவராசியும் மீண்டும்

இந்த பஞ்ஜ பூதங்களுடன் இணைந்துதான் மீண்டும் உருவாகிறது

இநத இயற்கைதான் அர்த்தநாரீ தத்துவம்

பெண்ணுக்குள்ளேஆணும் உண்டு ஆணுக்குள்ளே பெண்ணும் உண்டு

ஒன்றுக்குள் இரண்டும் ஒன்றாகி பின் இரண்டாகி

பின் பலவாகி மீண்டும் ஒன்றாக இணைவதுதான்

உலக நியதி, அதுதான் அர்த்தநாரீ தத்துவம்

“வானாகி மண்ணாகி,வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாயை

என் சொல்லி வாழ்த்துவனே....?”

என்கிற

மாணிக்க வாசகப் பெருமானின் தெய்வ வாக்கு

சொல்லும் ரகசியமும் இதுதான்

வேதியல் படித்தாலும்,வேதம்படித்தாலும் தெரியும்,

வேதம் தான் வேதியலின் தந்தை

வேதம் வேதியலின் வர்க மூலம்

இங்கு உயர் திரு கண்ணதாசன் எழுதிய

முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு

என்கிற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது

அர்த்தநாரீ போல் இணைந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி

அன்புடன்

தமிழ்த் தேனீ

www.thamizthenee.blogspot.com


Thursday, July 19, 2007

தினம் ஒரு கவிதை

dokavithai@yahoogroups.com

From: kris_chary

Date: Wed Oct 5, 2005 8:57 am )

தினம் ஒரு கவிதை

தினம் தினம் ஒரு ஆரம்பம்
தினம் தினம் ஒரு கவிதை
அனுபவம் என்னும் பாடம்-இதைவிடக்
கவிதை யாரால் எழுத முடியும்
இறைவன் எழுதும் கவிதை
இது ப்ரபஞ்ஜத்தின் ஆரம்ப விதை
முடிவில்லா ஆரம்பம்
முற்றுப் புள்ளி இல்லாத் தொடர் கவிதை
முடிவில்லா வானம் போல்
முயன்றாலும் தொட முடியாத
வெட்ட வெளி போல் ப்ரபஞ்ஜம்
இறைவன் எழுதும் கவிதை
தினந்தோறும் ப்ரசவம்


தமிழ்த் தேனீ

Saturday, July 14, 2007

அன்புடன் போட்டிக் கவிதைகள்

அன்புடன் குழுமத்துக்கு போட்டிக் கவிதைகளுக்கு
நான் அனுப்பிய கவிதைகள்

1.( T S C KOMATHI ) UNICODE

அன்புடன் படக் கவிதைப் போட்டி

புகைப் படக் கவிதை படம் 01


"ஆரம்பம் "


இது ஒரு நல்ல முடிவின் ஆரம்பம்
நம் கைகள் இணைந்தே இருக்கட்டும்
ஆயிரம் தேடல்கள்,ஆயிரம் ஊடல்கள்
நிலவினைத் தொடும் தேடல்கள்
உயிரினைத் தொடும் மவுனங்கள்
உறவுகள் சுடும் வார்த்தைகள்

கனவுகள் தரும் சுகங்கள்
நிழல்கள் தரும் நினைவுகள்
நினைவுகள் தரும் சுகங்கள்
நிஜங்கள் தரும் கசப்புகள்
கற்பனைத் தூரிகைக் கைவண்ணம்
கலையும் போதில் வருத்தம்

காலையில் விடியும் இயற்கை
மாலயின் இதத்தில் தோள்களின் சாய்ந்து
மறக்க முடியும் சோகங்கள்- செயற்கை
மௌனத்தில் புரியாத அர்த்தங்கள்
வார்த்தையிலும் புரியாத நிஜம்
ஆயிரம்
விழிகள் படிக்கும் காவியம்
மனது படைக்கும் ஓவியம்
அடையத் துடிக்கும் ஆசைகள்
மலரத் துடிக்கும் மொட்டுக்கள்
மலர்ந்து வளரும் மெட்டுக்கள்

ஆயிரம் இருக்கும் அதற்கு மேலும்
வாழ்க்கை இருக்கும்- அதனால்
இது ஒரு நல்ல முடிவின் ஆரம்பம்
நம் கைகள் இணைந்தே இருக்கட்டும்


புகைப் படக் கவிதை படம் 8

" அம்மா "

தேவதை போல் அவள் அம்மா
நம் தேவை அறிந்தவள் அம்மா
வாழ்வை நமக்களித்த அம்மா
நம் ஊழ் வினை போக்கிய அம்மா

ஊரும் உறவும் பேர் சொல்லி வாழ்த்திட
நம் பேரை வைத்தவள் அம்மா
யாவரும் போற்றிட தேவரும் வாழ்த்திட
உயிரை அளித்தவள் அம்மா

எந்தப் பிறப்புக்கும் பெற்றவள்தானே அம்மா
அழுவதை வைத்தே நம் குறை அறிந்தே
நம்மை வளர்த்தவள் அம்மா
எழுவதை விழுவதை ரசித்தவள் இருந்தும்
விழுவதைத் தடுத்து எழுவதில் இன்பம்
கண்ட ஞானி அம்மா -இடைக்கலசம்தனில் தாங்கி
அடைகாத்து மலைக்க வைத்து
தொப்புள் கொடிவழியே உணவூட்டி
இடிபோன்ற வலிதாங்கி முலைக் கலசப் பாலூட்டி
அப்பப்பா !!! உன்னதப் படைப்பாளி அம்மா

மாயப் பிறப்பெடுக்கும் நம் பாவ வினை
அறுக்க நேயமாய்க் கறுவிலே சுமந்து
நல் வினை நாம் பெற தூய
வேள்வி நடத்திய அம்மா
இறப்பெனும் தூக்கம் பிறப்பெனும் விழிப்பு
இடையிலே மலர்ந்த மெய் எனும் பொய்
அதில் உள்ளொளி பெருக்கி,உள்ளுக்குள்ளே
ஊறும் ஞானம் அளித்துக் காத்தவள் அம்மா
கற்பென்னும் தரத்தைக் கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை அற்புதப் பந்தில் அடைத்து
கருவாக்கி ,உருவாக்கி ,கை கால்
முளைக்க வைத்து, கவனமாய்க் காத்து
ஆன்மாவை உள்ளே வைத்து -அறிவும்
ஞானமும் ஆயுளும் அழகும்-நிறைவாய்
சேர்த்திட்ட அற்புதப் படைப்பாளி அம்மா

அம்மையாய் அப்பனாய் அரவணைத்து
அம்புலி காட்டி அமுதும் ஊட்டிய
அப்பனையும் நமக்கு அடியாளம் காட்டிய
அன்னைக்கு நன்றிக் கடனாய்

ஓர் முதியோர் இல்லம்



தமிழ்த் தேனீ

புகைப் படக் கவிதை படம் 03


" திரைகள் "

காற்று அம்மாவின் புடவைத்

தலைப்பை வைத்து
என் முகத்தை மறைக்கிறது-

திரையை விலக்கி
உலகம் பார்க்கிறேன்
ஆயிரம் திரைகள் எனை மூடினாலும்
விலக்கிப் எட்டிப் பார்ப்பேன்
வெற்றிக்கு வழி வகுப்பேன்
ஆயிரம் தடைகள் எதிர் வந்தாலும்
அடித்து உடைத்தெறிவேன்
வெற்றிக்கு வழி வகுப்பேன்

ஆயிரம் எதிரிகள் வந்தாலும்
வீரமாய்ப் , விவேகமாய்ப் போரிட்டு
வெற்றிக்கு வழி வகுப்பேன்
விதியே எனக்கு எதிராய் இருப்பினும்
என் மதியால் அவ்விதியை முறியடித்து
வெற்றிக்கு வழி வகுப்பேன்


எனக்கு யாராவது உதவுங்களேன்
நான் கல்வி கற்க ,
எனக்கு யாராவது ஒருவேளை
பசியாற்றுங்களேன்
எனக்கு யாராவது அ ன்பாய்
ஒரே ஒரு வார்த்தை
சொல்லுங்களேன் ஆயிரம் யானை
பலம் எனக்கு வரும்

எனக்கு ஆசையாய் ஒரு முத்தம் தாருங்களேன்
அம்மா ,அப்பா இல்லாத குறையும்
மறந்து போகும்

ஆமாம் நான் ஒரு குழந்தைத் தொழிலாளீ !!!!!!!!


.PUGAIP PADAK KAVITHAIP POOTTI
PADAM 4

" ரகசியம் "

இது பொம்மைகள் உலகம்
நாம் நிம்மதியாய் இணையலாம்
அன்பாய் வாழலாம், ஆசையாய்ப் பழகலாம்
சொந்தமும் ,பந்தமும்,ஆசையும்,காதலும்
நிறைந்த பொம்மைகள் உலகம்

வருந்த வைக்கும் மொழிகளும் இல்லை
வருத்தப் படுத்தும் த்ரோகங்கள் இல்லை
பொய்யும் இல்லை, புரட்டு இல்லை
திருட்டும் இல்லை,பாவமும் இல்லை
ஜாதிகள் இல்லை,மதமும் இல்லை
குற்றங்கள்,குறைகள் எதுவுமே இல்லை

முக்கியமாய் மனிதர்கள் இல்லவே இல்லை

இது பொம்மைகள் உலகம்

நாம் நிம்மதியாய் இணையலாம்

அன்புடன்

தமிழ்த் தேனீ

பிறந்த நாள்

உலகம்

அடேய் செல்லப் பயலே
இப்பதான் பொறந்தா மாதிரி இருக்கு
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா
குட்டிப் பையா இன்னிக்கு நீ பொறந்து
ஒரு வருஷம் ஆயிடிச்சு

எதேதோ ம‌ந்திர‌ ச‌ப்த‌ங்க‌ள் நாதஸ்வ‌ர‌ இனிமை
ஒரே சிரிப்பு ,கும்மாளம் ,கொண்டாட்டம்
எல்லாம் காதில் விழுகிறது


நானும் பதில் சொன்னேன்
அவர்களுக்கு என் மொழி புரியவில்லை


முதல் வருஷ கொண்டாட்டங்களின்
சப்தங்கள் மீண்டும் காதில் ஒலிக்கிறது

ஒரு பிரியமான முத்தத்தில் கண் விழித்தேன்
க‌ண்விழித்து எழுந்தேன் ,
என் ம‌னைவி, என் குழ‌ந்தைக‌ள்
என் பேர‌ப் பிள்ளைக‌ள் அனைவரும்
பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் சொல்கிறார்க‌ள்
பல கவிதைக் குயில்களும் ,தமிழ்க் குயில்களும்
அன்புடன் வாழ்த்து சொல்கின்றன‌
இன்று காலை அறுபது வயது ஆரம்பம்

உல‌க‌ம் உருண்டைதான்

தமிழ்த் தேனீ

அறிமுகம்





அன்பு நண்பர்களே 1/7/1947
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர்.
லுகாஸ் டீ வீ எஸ் நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு கொண்டவன்.
தமிழின் மேல் தணியாத தாகம் கொண்ட கவிஞன்.
தொலைக்காட்சிகளில், பல தமிழ் சினிமாக்களில்
நடித்துக் கொண்டிருப்பவன். 14 நாடகங்கள்
எழுதி இயக்கி பல முதல் பரிசுகளை வென்றவன்.
என்னுடைய ப்ரபலமான தொலைத் தொடர் சித்தி -
ராடன் நிறுவன தொடர், அதில் மேனேஜர் சாரங்கனாக நடித்தவன். சமீபத்திய தொடர்கள், கோலங்கள், ஆனந்தம்.
படங்கள்:சாமி, ஆறு, திருட்டுப் பயலே, அது ஒரு கனாக் காலம் மற்றும் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் சிவாஜி
(இசைக் கருவிகளின் கூடத்தின் மேனேஜர்)
தமிழ் பால் கொண்ட பற்றின் காரணமாக
பல கவிதைகள் எழுதி வருகிறேன்.
என்னுடைய புனைப் பெயர் தமிழ்த்தேனீ.
மனம் சங்கமித்தால் மதம் மறைந்துவிடும்
மதம் சங்கமித்தால் ஜாதி மறந்துவிடும்
தமிழ் சங்கமித்தால், சங்கமத்தால்
கவிதை பிறந்துவிடும் தமிழில்
சங்கமிப்போம், சந்திப்போம்

என்னுடைய அறிமுகக் கவிதை இதோ


பொதுக்கவி

சந்தத் தமிழ்க் கவிதைத் தரணியாண்ட
தமிழ்ப் பாட்டி அவ்வை அவள்-
கந்தன் கருணையால் -கயிலாயமும்
ஆண்டாள் தமிழ் ஆண்டாள்,
தமிழ் மண்ணாண்டாள்,

கருங்காலிக் கட்டைக்கு, கோணாத கட்டாரி
கதலித் தண்டுக்கு உருகுமாம் என்றுரைத்து
மூவேந்தருக்கும் ஏழுலகுக்கும் கட்டுப்படாத
தமிழ் ஆண்டாள், தமிழ் மண்ணாண்டாள்

கந்தன் கருணைக்கு உருகி கயிலாயமும் ஆண்டாள்
வாலிபமே வயோதிகமாய் தமிழே மூச்சாய் தமிழ்க்கம்பூன்றி இந்த மண்ணூன்றி கயிலாயம் சென்றடைந்தும் தமிழ்க்கம்பு,
தமிழ்க் கரும்பு தரணி ஆண்டது

அருமையாய் ஆத்திச்சூடித் தமிழ் ஆத்தி
தமிழ் மகுடம்சூடி தமிழாண்ட தரணி
மாது கயிலாயமும் ஆண்டாள்
கொன்றை வேந்தன் தனை இன்றை
வேந்தன் வரை சொல்லி கயிலாயம்
சென்றடைந்த அந்த தமிழ்ப் பாட்டி
திருப்பதம் பணிந்து தமிழ் வழி நடக்க
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.

வார்த்தெடுத்த கவிதைகளில் வார்த்தைகளை
விதைக்க வேண்டும் செதுக்கிய சிலைகளெல்லாம்
சிற்பமாக மாற வேண்டும் எழுதுகின்ற
எழுத்தெல்லாம் கவிதையாக மலர வேண்டும்
விற்பனர் உள்ள அவையில் விருதுகள்
பெற வேண்டும் ,விலாசம் வேண்டும்
எனக்கொரு விலாசம் வேண்டும்
மணிமகுடம், மலர்க்ரீடம், பட்டயங்கள்
விருதுகளை ருதுவாக்கும் தகுதி வேண்டும் !!!
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
யாப்பெடுத்து, சீர் அமைத்து அசை,
தளை, தொடை, எனும் இலக்கணம்
சமைத்து பா புனைய வந்த கவி அல்ல
நான் மனதின் பாதிப்பு அப்படியே சொல்ல வார்த்தைகளைக் கோர்த்து, கருத்துக்களைச்
சேர்த்து புதுக்கவி படைக்க வந்த புதுக்கவி,
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
விலாசம் வேண்டும் எனக்கொரு
விலாசம் வேண்டும் நிச்சயமாய்!!!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ

rkc1947@gamil.com   ----    http://thamizthenee.blogspot.com



என் படைப்புகள்

ஜ்யோதிடம் பொய்யல்ல