திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 26, 2007

பயமும் ,தற்காப்பும்

சாதாரண நாம் செல்லமாக கொஞ்சி விளையாடும்
பூனை கூட ஒரு சந்தர்ப்பம் நேரும் போது புலியாக மாறும்

முய்ற்ச்சி செய்து பாருங்கள் ஒரு வீட்டில் வளர்க்கும் பூனையாக இருந்தாலும் சரி
அல்லது எங்கிருந்தோ நம் வீட்டுக்கு வந்து பாலைக் கவிழ்த்து
குடித்துவிட்டுப் போகும் பூனையாக இருந்தாலும் சரி

அந்தப் பூனனயை ஒரு அறைக்குள் போட்டு
பூட்டி விட்டு நிலைக் கதவு ,மற்றும் ஜன்னல்களை
தாழ்ப்பாள் போட்டுவிட்டு நீங்கள் அல்லது வேறு யார்
வேண்டுமானாலும் கையில் ஒரு குச்சியை வைத்துக்
கொண்டு மிறட்டிப் பாருங்கள்
சற்றே மிரளும் ,அப்புறம் ஒரு கட்டில் அல்லது மேஜை
அடியில் புகுந்து கொள்ளும், அங்கும் போய் அதை விறட்டும் போது
அதற்க்கு போக வேறு வழியே இல்லை என்னும் நிலை
உருவாகிவிட்டால் அது சற்றும் எதிர் பாராமல் நமக்கும் அத்ற்க்கும்
உள்ள சக்தி பேதங்களையும் மறந்துவிட்டு நம் மேல் பாயும்
அப்படி தப்பிக்கவே முடியாத நிலை உருவாகும் போது
பூனனயும் புலியாய் மாறும்
உண்மையில் அங்கு என்ன நடக்கும் தெரியுமா..?
தன்னை மிரட்டிய அந்த மனிதரை அந்தப் பூனை
தன் நகத்தாலும் பற்களாலும் கடித்துக் குதறிவிடும்
அம் மனிதன் பிழைப்பதே கடினம்
நம்ப்புவதற்க்கு சற்று கடினமாக இருப்பினும்
இதுதான் உண்மை
nessasity is the mother of invension என்பார்கள்
ஆமாம் தேவை,அவசியத் தேவை ,அவசரத் தேவை ,இவைகள் தான்
பல கண்டுபிடிப்புகளுக்கு மூலாதாரமாய் இருந்த்திருக்கிறது

ஆமாம் ஒரு பூனைக்கே இவ்வளவு பலம் வருகிறதே
இதே கருத்தை உதாரணமாகக் கொண்டு
தன்னைத் தாக்க வரும் ,அடாத வன் முறை செய்ய வரும்
ஆண் மிருகங்களை ஏன் பெண்கள் குத்தி கிழிக்கக் கூடாது..?
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது..?

உயிருக்கு வரும் ஆபத்தை எதிர் கொள்ளவே பல்வீனமான
பூனை பலம் வாய்ந்த புலியாவ்து போல்
இயற்கையிலேயே சக்தி வடிவான பெண் ஏன் உயிரினும் மேலான
கற்பைக் காத்துக் கொள்ள புலியாகக் கூடாது..?



விசாலம் அவர்களே இறைவன் நம்க்கு பல உறுப்புகள்
அத்துடன் சிந்திப்பதற்க்கு மூளை எல்லாம் கொடுத்தாற்போல்
அந்தக் கறப்பான் பூச்சிக்கும் ,ஏன் எரும்புக்கும்,அத விட சிறிய
உயிர்களூக்கும் மூளை கொடுத்திருக்கிறான் இது படைப்பின் ரகசியம்
நீங்கள் அதைப் பார்த்து பயப் படுகிறீர்கள்
அதே நேரம் அது உங்களைப் பார்த்து பயப் படுகிறது
இதன் விளைவாகத்தான் விலகி ஓடும் எண்ணம் இருந்தாலும்
பயம் உங்களை அறியாமல் அதன் மீது உங்களையும்
உங்கள் மீது அதையும் வீழச் செய்கிறது
நீங்கள் பாட்டுக்கு சும்மா இருந்த்தால் பாம்பும் கடிக்காது
அசையாமல் இருந்தால் அது பாட்டுக்கு தன் வழியே நம் மீது ஊர்ந்து
போய்விடும் ,நீங்கள் பயந்த்து அசையும் போதுதான் அது பயந்து நம்மை கடிக்கிறது ,ஆகவே கடிப்பதும் கடிக்கப் படுவதும்
பயம், அல்லது தற்காப்பு உணர்ச்சியால்தான் என்பது என் கருத்து

அன்புடன்

தமிழ்த்தேனீ

No comments: