திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, October 30, 2010

” தவம் “

”குழந்தை வேண்டித் தவம்  செய்தல் தவம்
குழந்தையே  செய்யும் தவம்  எதை வேண்டி”

அன்புடன்
தமிழ்த்தேனீ

Tuesday, October 12, 2010

"நசுங்கல்” சிறுகதை

 வல்லமை இதழில் வெளியாகி உள்ள “நசுங்கல்” என்னும் சிறுகதை படிக்க சொடுக்குங்கள்,
தன்னுடைய மெக்கானிகல் ஷெட்டில் வந்திருந்த ஒரு காரை பழுது பார்த்துவிட்டு, இப்போ சரியாயிடிச்சி எடுத்து ஓட்டிப்பாருங்க சார் என்று அந்த காரின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சிவா, அங்கே ஒரு டொயோட்டா கொரோலா காரை ஓட்டிவந்து நிறுத்திவிட்டு ஏம்பா இந்தக் காரை எவனோ ஒரு மோட்டார்பைக்லே போனவன் இடிச்சிட்டுப் போய்ட்டான், தப்பு தப்பா வண்டி ஓட்றாங்க, ,பயந்துகிட்டே எப்பிடியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிகிட்டு வந்தேன், முன்னாலே பம்பர்கிட்ட நசுங்கி இருக்கு பாரு டயர்லே உராயுது, இதைச் சரி செய்ய முடியுமா என்றார்


சிவா காரைப் பார்த்தான் ,செஞ்சு தரேன் சார் ,உக்காருங்க என்றான், காரின் பின்பக்கம் வந்தவன் பின்பக்க கண்ணாடியில் டாக்டர் என்று எழுதியிருப்பதைக் கவனித்து,மீண்டும் அவரை உற்று நோக்கினான்,அவனுக்கு அவர் யாரென்று நினைவு வந்தது, அவரை உட்காரச் சொல்லிவிட்டு, காரின் முன்பக்கம் வந்து நசுங்கிய பகுதியைப் பார்வையிட்டு சார் இந்த நசுக்கலை நான் சரி பண்ணித்தரேன்,ஆனா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும்,அப்பிடி இந்தப் பகுதிக்கு மட்டும் பெயிண்ட் அடிச்சா அது தனியா தெரியும், காரோட வர்ணத்துக்கு ஒத்துப்போகாது, பரவாயில்லையா? அப்பிடி இல்லேன்னா டிங்கரின் வேலையை ,முடிச்சிட்டு மொத்தமா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும் என்றான்,

இதோ பாருப்பா நீ இந்த நசுங்கலை மட்டும் எடுத்துக்குடு, ஓரளவு டயர்லே இடிபடாமெ இருந்தா சரி, மத்தபடி நான் என்னோட சர்வீஸ் செண்டர்லே விட்டு சரிபண்ணிக்கிறேன், ரொம்ப வெலை உயர்ந்த காருப்பா, டொயோட்டா கரோலா, வெலை எவ்ளோ தெரியுமா கிட்டத்தட்ட பத்து லக்ஷம் என்றார்

சரி சார் எத்தனை லக்ஷமா இருந்தா என்னா செய்யவேண்டியதை செஞ்சுதான் ஆகணும் என்று சொல்லிக்கொண்டே நசுங்கிய பகுதியின் பின்னால் ஒரு மரக்கட்டையை வைத்து முன் பக்கமாக ஒரு சுத்தியலால் டொம்மென்று தட்டினான்,

டாக்டர் நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்து என்னாப்பா இது இப்பிடி அடிக்கறே, கொஞ்சம் மெதுவா அடி ,நான் யாரையும் இந்தக் காரைத் தொடவே விடமாட்டேன், என்னோட வாழ்க்கையிலே நான் அதிகமா நேசிக்கறது இந்தக் காரைத்தான், மெதுவா மெதுவா என்றார்,

சிவா மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,ஆமாம் இதே டாக்டர் வேலைசெய்யும் மருத்துவ மனையில் அவன் உயிருக்குயிராய் நேசித்த மனைவி விமலா ஒரு விபத்தில் மாட்டிகொண்டு குற்றுயிரும் குலைஉயிருமாகக் கொண்டு போனபோது நடந்த அந்தக் காட்சி விரிந்தது

ரத்தம் வீணாகிக்கொண்டிருக்கிறது, இவன் தவித்துக்கொண்டிருக்கிறான், யாரைக் கேட்டாலும் கொஞ்சம் இருப்பா இங்கே டாக்டர்,நர்ஸ் போதிய அளவு இல்லே, கொஞ்சம் வெயிட்பண்ணு,இதோ டாக்டர் வந்திருவாரு என்றபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்,டாகடர் வந்தார் ,அவரிடம் விவரங்கள் சொல்லப்பட்டதுஅவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் டாக்டர்,, அவன் மனைவி விமலா நினைவில்லாமல் இருந்தாலும் வலியால் முனகிக்கொண்டிருந்தாள், டாக்டர் அவளது கையை வேகமாக இழுத்தார்,அவள் வலியால் அலறினாள்,

சிவா பதறிப் போய் டாக்டர் கொஞ்சம் மெதுவா பாத்து கவனமாசெய்யுங்க ,அவளுக்கு வலிக்கிது, அதுமட்டுமில்லை,எலும்பு உடைஞ்சிருந்தா இன்னும் அதிகமாயிடும் என்றான் பதறிப்போய், டாக்டர் இதோ பாருப்பா எங்களுக்கு தெரியும் என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாதுன்னு ,நீ அங்கே போயி ஒரு ஓரமா உக்காரு என்று விரட்டினார், வேறு வழியில்லாமல் தூரமாகப் போய் உட்கார்ந்து கொண்டு தெய்வங்களை வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் தன் இயலாமையை நினைத்து,



தன் மனதில் ஓடிய அந்தக் காட்சியின் வலியை மனதில் வாங்கிக்கொண்டே டாக்டரின் காரை சரி செய்துகொண்டிருந்தான் சிவா, சுத்தியலால் வளைந்த இடத்தை ஒரு அடி அடித்தான், டாக்டர் பதறிக்கொண்டு ஓடிவந்து ஏன்பா இந்தக் காரோட விலை என்னான்னு தெரியுமா,இப்பிடிப் போட்டு அடிக்கிறியே மெதுவா பாத்து நிதானமா செய்யிப்பா என்றார் அதிகாரமான குரலில்

டாக்டர் போன மாசம் விபத்து நடந்த என் மனைவிக்கு ஆப்ரேஷன் செஞ்சீங்களே நியாபகம் இருக்கா, நோயாளிகள் குடுத்த பணத்திலே வாங்கின காரையே இவ்வளவு மதிக்கிறீங்களே, என் பொண்டாட்டி உயிரு இதைவிடக் கேவலமா? நான் பதறினப்போ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஒரு கணவனோட பதட்டத்தை மதிக்காம எப்பிடி வெரட்டினீங்க

என்கிட்ட கொண்டு வந்து காரை விட்டுட்டீங்க இல்லே,எனக்குத் தெரியும் எப்பிடி சரி செய்யணுன்னுட்டு, போயி அங்கே ஒரு ஓரமா உக்காருங்க என்றான், டாக்டரின் மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை,

டாக்டர் சார் …உங்க காரை சரி செஞ்சுட்டேன் என்ற சிவாவின் குரல் கேட்டு மோனம் கலைந்தார் டாக்டர் , கார் நசுங்கிய இடம் இப்போது சரியாக இருந்தது,

என்னை மன்னிச்சுடுப்பா ..இனிமே நான் யாரையும் கோவமா பேசமாட்டேன் என்றார் டாக்டர்,

நசுங்கி இருந்த அவர் மனதையும் சரிசெய்துவிட்டான் அந்த மெக்கானிக்

அன்புடன்

தமிழ்த்தேனீ














அன்புடன்

தமிழ்த்தேனீ

Friday, October 8, 2010

நவராத்திரி

 “ நவராத்திரி “

         






நவராத்திரி என்றதும் என் நினைவுகள் என்னுடைய சிறுவயதுக்காலத்துக்கு பின்னோக்கி ஓடிவிட்டன, அப்போது நாங்கள் சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலயம், ஒற்றைவாடை நாடக அரங்கம் போன்றவைகள் இருக்கும் வால்டாக்ஸ் சாலையும் உயர் நீதிமன்றம், கலங்கரை விளக்கம், போன்றவை இருக்கும் சைனாபஜார் என்று சொல்லப்படும் சுபாஷ் சந்திர போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் 18 வெங்கட்ராயர் தெருவு, பீ ஆர் ஸ்கொயர், என்னும் பகுதியில் இருந்தோம் அந்தப் பகுதியில் நான் இருக்கும்போது எனக்கு வயது பதினொன்று

நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால் எங்களுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடும், பள்ளியில் விடுமுறைவிடுவார்கள், புது சொக்கா புது நிஜார், புது பாவாடை, புதுப் புடவை, பட்டாசுகள் இனிப்புகள் என்று ஆனந்தமாக பொழுதுகள் கழியும், ஊரே திமிலோகப்படும்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாபோன்று களைகட்டும், எங்கள் வீட்டில் என்னுடைய தகப்பனார் ஒன்பது படிகள் வைப்பார்,அந்த ஒன்பது படிகள் முழுவதும் விதம் விதமான பொம்மைகள் அலங்கரிக்கும்,

பரணிலிருந்து பெரிய பெரிய பெட்டிகளை இறக்கி அவைகளில் துணிகளிலும், காகித்த்திலும் பத்திரமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து கீழே அடுக்கி,மிக ஜாக்கிறதையாக அவைகளைப் பிரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றின் உயரம்,பருமன்,போன்ற வித்யாசங்களைக் கவனித்து, அந்தந்த பொம்மைகளை அந்தந்த தொடர்பான பொம்மைகளோடு அடுக்கி வைத்து ,அவைகளை எந்தப் படியில் வைக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றார்ப்போல் அவைகளைப் படியில் வைத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பார் எங்கள் தந்தை,கூடவே என்னுடைய தாயாரும்,என்னுடைய சகோதரிகளும் உதவி புரிவார்கள்,அது ஒரு பொற்காலம்,

ஆமாம் உண்மையிலேயே அது ஒரு பொற்காலம்தான்,

மாலையானால் போதும் , சின்னஞ்சிறார்கள்,சிட்டுப் போன்ற குழந்தைகள் ராமனாகவும்,கிருஷ்ணனாகவும், சரஸ்வதியாகவும் ,மஹாலக்ஷ்மியாகவும், ஆண்டாளாகவும்,காமாக்ஷியாகவும் ,மீனாக்ஷியாகவும் வேடமிட்டு அவர்களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் சற்றும் பொருந்தாவிடினும் கூட, அவர்கள் கள்ளமில்லாத குழந்தை மனத்தினராய் தளுக்கி , மினுக்கி புன்னகையுடன் வலம் வருவதைப் பார்க்க முடியும், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமாய் வாழ்ந்த அந்நாளில் குழந்தைகள் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைகளாகவே இருந்தார்கள், பெண்மணிகளும் புதுப்புடவை சரசரக்க வந்து கூடத்தில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பில் அமர்ந்து, இயல்பான புன்னகையுடன் இதமான குரலில் பலவகையான பாட்டுக்களை தங்களுடைய இனிமயான குரலில் பாடுவதும், குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து கீதமிசைப்பதுமாக ஒவ்வொரு பண்டிகைகளும் களைகட்டும்,

ஒவ்வொரு வீட்டிலும் அளிக்கும் தின்பண்டங்கள், சுண்டல் போன்றவற்றை வாங்கவே கூட்டம் கூடும் சிறுவர்கள் கும்மாளமாக மகிழ்ழ்சியுடன் உலா வருவதைப் பார்க்கும் போது மனம் நிறையும்,

பெரியவர்களும் தங்களின் இயல்பான ஆர்ப்பாட்டம் ,கோவம், எல்லாவற்ரையும் மறந்து புது வேட்டி புது சொக்காய் சகிதமாக வீட்டில் உள்ள பெண்டிருக்கும் ,குழந்தைகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும், மகிழ்ந்த அந்தக் காலங்கள் பொன்னானவை



அப்படிப்பட்ட பொன்னான தருணங்கள் நாட்டிலே சுபிக்ஷம் நிறைந்த அந்தப் பொன்னான காலம் , குழந்தைகளின் கபடமற்ற பொன்னான காலம்

அவையெல்லாம் திரும்பி வருமா நம் நாட்டில்?

பஞ்ச பூதங்களின்மகிமை உணர்ந்து அவைகளை இயற்கையை அரவணைத்துக்கொண்டு இதமாக பதமாக இனிமையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்கள் திரும்பி வருமா? என்னும் எண்ணம் தோன்றி ஒரு பெருமூச்சு விட வைக்கிறது என்ன செய்ய?

மீண்டும் நாம் இழந்த அந்தப் ;பொற்காலத்தை மீட்டவேண்டும்,அதற்காக நம் பாரம்பரியங்களின், ,மரபுகளின் வளத்தை இனிமையை மீண்டும் தெளிவான மனநிலையுடன் மீண்டும் அனுபவிக்க மனம் துடிக்கிறது

மாறுமா மீண்டும் பொற்காலம் மலருமா என்னும் ஏக்கத்துடன் நான்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Tuesday, October 5, 2010

கடல் கடந்தும் கலை

அமெரிக்காவில் சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் பணிபுரியும் என் மகன் திரு கே வெங்கடநாதன் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல இளைஞர்கள்,யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக இண்டஸ் கிரியேஷன்ஸ் என்னும் பெயரில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார், இதில் விசேஷமான செய்தி என்னவென்றால் இந்தக் குழுவை நடத்தும் இவர்களே நாடகம் எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், அதுகூட வியக்கத்தக்க செய்தி அல்ல, இவர்களே மேடை நிர்வாகமும் செய்கிறார்கள்,மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் நேற்று கூட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்,இந்த நாடகங்களுக்கு என்னுடைய மருமகள் திருமதி கவிதா அவர்களும் ஓவியம் வரைதல், போன்ற பல வர்ணம் பூசும் கலைகளை உருவாக்குகிறார், அரங்கில் உள்ள பல காட்சிகளில் இவரது கைவண்ணம் இருக்கிறது


கணிணிப் பொறியாளர்களான இவர்கள் தச்சு வேலை உட்பட அனைத்து வேலைகளையும் இவர்களே தங்கள் கைகளால் செய்து , மேடையில் அரங்கை நிர்மாணிக்கிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்க செய்தி


தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் ,கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும், வாழ்த்துவோம், பாராட்டுவோம்



http://www.youtube.com/watch?v=-4PhUFwBT0g



அன்புடன்

தமிழ்த்தேனீ





Sunday, October 3, 2010

விரஜா நதி ஓரம்

விரஜா நதி ஓரம் அந்த நதியைக் கடக்க காத்திருந்த பல பயணிகளில் ஒருவர் ராமசேஷன், அவருக்கு நினைவு வந்தது, திருமோகூர் காளமேகப் பெருமான் வந்து கையைபிடித்து அழைத்துச் செல்வாராமே, அதற்காக காத்திருந்தார், காத்திருந்த வேளையில் அவர் உடலை விட்டுவிட்டாலும் அவரை விடாத மனம் கூடவே இருந்து யோசித்துக்கொண்டிருந்தது,


இந்த பிறப்பை எடுத்தோமே ,இந்தப் பிறப்பில் என்ன செய்தோம், ,பாவம் செய்தோமா, புண்ணியம் செய்தோமா? நமக்கு நரகம் கிட்டுமா, சொர்கம் கிட்டுமா என்று தெரியாமல், பூமியிலும் இல்லாமல், ப்ரபஞ்ச வெளியிலும் இல்லாமல் நடுவே ஏதோ ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தார் ராமசேஷன், அவருக்கு சிரிப்பாய் வந்தது,

ஆமாம் இப்போதும் தமக்கு ராமசேஷன் என்று தான் பெயரா ,அல்லது யாராவது வந்து தனக்கு வேறு பெயர் வைப்பார்களா என்று யோசித்தார், சரி இனி பெயரில் என்ன இருக்கிறது, போய்ச்சேரும் இடமல்லவா முக்கியம், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவராயிற்றே அவர்,

ஆமாம் ஆரியக் கூத்தென்றால் என்னது அது?
ஆரியனுக்கு ஏது கூத்து? என்று யோசிக்கும் போதே ஆரியன் ஆடாத கூத்தா? என்கிற கேள்வியும் முளைத்தது, எப்படி இந்தச் சொல்வழக்கு வந்தது என்று யோசிக்கலானார்,

இப்படியே காத்திருந்தால் கால்கள் வலிக்குமே எங்காவது உட்காரலாமா? அடேடே இந்த சூக்க்ஷும சரீரத்துக்கு கால்களும் இல்லை,கால்கள் இருந்தால்தானே வலிக்கும், உடல் இருந்தால்தானே வலி தெரியும், திடமான உருவமும் இல்லையே எங்காவது உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்தாலும் அப்படியே காற்று போன பலூன் மாதிரி நைந்த துணி மாதிரி எதிலும் ஒட்டாமல் எப்படியும் இருக்கவிடாமல் அலைகிறதே இந்த சூக்ஷும சரீரம்?

அவருக்கு தன்னுடைய கடைசீக் காலம் நினைவுக்கு வந்தது, மனித உடல் இருந்த காலங்களில் அந்த உடலில் சர்க்கரை அதிகமாயிருக்கிறது,அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னது ஞாபகம் வந்தது, கூடவே அவருடைய மகன் அவருக்கு திவசம் செய்யும்போது இதை ஞாபகம் வைத்திருப்பானா? அவன் யோசிக்காமல் அரிசி சாதத்தையே படைத்தால் எப்படி சாப்பிடுவது, மறுபடியும் சர்க்கரை அதிகமாகி விடுமே , என்று யோசித்து அவருக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்,

இந்த சூக்ஷும சரீரத்துக்கு வியாதிகள் உண்டா? ரத்தமும் சதையும் கொண்ட மானுட சரீரத்துக்குதானே வியாதிகள் இந்த சூக்ஷும சரீரத்துக்கு கிடையாதே என்று யோசித்துவிட்டு மீண்டும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்

யாரோ ஒருவர் கைகொடுத்தார்,ஏன் உனக்கு நீயே யோசித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் யாரேனும் பார்த்தால் பயித்தியம் என்பர் என்று ஒரு குரல் கேட்டது

நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் ,கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை

ஓ கண்ணே இல்லை பின் எது புலப்படும் ?

கை கொடுத்தவர் கேட்டார் நீ மீண்டும் பிறக்க விரும்புகிறாயா?

அட காதுகளும்தான் இல்லை பின் எப்படி அவர் பேசுவது கேட்கிறது

இல்லை..கேட்கவில்லை மனதுக்கு புரிகிறது

யோசித்தார் எனக்கு இனி பிறவி வேண்டாம் என்றார்,


உடனே அந்த அமானுஷ்யக் குரல் இன்னும் நீ அந்த நிலையை எட்டவில்லை ஆகவே இனியும் உனக்கு பிறவி உண்டு, ஆகவே எப்படி, யாராகப் பிறக்க விரும்புகிறாய் என்று மட்டும் சொல் என்றது,

ராமனாகப் பிறந்தால் கானகம் ஏகி மனையாளைப் பிரிந்து தவிக்க வேண்டும்

பரசுராமனகப் பிறந்தால் தாயின் தலையையே வெட்ட வேண்டும்,

கிருஷ்ணனாகப் பிறந்தால் நல்லதே செய்துவிட்டு கெட்ட பெயரும் சம்பாதித்து பின் குறைக் கொள்ளியாக ஒதுங்க வேண்டும்
சரி பூலோக வாசிகளான மானுடரில் பலரையும் யோசித்துப் பார்த்தார், மஹாத்மா காந்தியாகப் பிறந்தால் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்டுவார்

இப்படீ ஒவ்வொன்றாக யோசித்துக்கொண்டே வந்தார்

யாரை நினைத்தாலும் ஒவ்வொன்று தடுத்தது

சரி மீண்டும் ராமசேஷனாகவே பிறக்கலாம் என்றால் இப்படி அடுத்த ஜென்மம் யாராக எடுக்கலாம் என்று யோசிக்கும் நிலை வரும்

அவருடைய மனம் குழம்பியது

எனக்குத் தெரியவில்லை நீயே ஒரு முடிவெடுத்து ஒரு பிறப்பைக் கொடு என்று வேண்டினார்

இப்போது தெய்வம் குழம்பியது ,யோசித்தது, தனக்குத்தானே பேசிக்கொண்டது சிரித்துக்கொண்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Friday, September 17, 2010

”நெற்றிக்கண் “ சிறுகதை



 ” நெற்றிக்கண் “ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள் http://www.vallamai.com/?p=872




அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, September 12, 2010

ஆப்ரேஷன் சக்ஸஸ்

‘ஆபரேஷன் சக்ஸஸ்’ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்


http://www.vallamai.com/?p=836



அன்புடன்

தமிழ்த்தேனீ



Thursday, August 26, 2010

“ மனோதத்துவம்“ சிறுகதை

 " மனோதத்துவம் " சிறுகதை வல்லமை இதழில் வெளியாகி உள்ளது


http://www.vallamai.com/?p=628



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, August 22, 2010

" பணம் ‘ சிறுகதை

Categorized

சிறுகதைகள்Tags : தமிழ்த்தேனீ

”பணம்”  சிறுகதை

http://www.vallamai.com/?p=600


Posted on 22 August 2010



தமிழ்த்தேனீ



“அப்பா! காலங்காத்தாலே எழுந்து அலுவலகத்துக்கு போற அவள் கணவன் ரமேஷுக்குப் பல் தேய்க்கிற பேஸ்ட்டுலேருந்து, துண்டுலேருந்து, கர்சீப் வரைக்கும் எடுத்துக் கையிலே குடுத்து, இருக்கறது ரெண்டு குழந்தைங்கன்னாலும் பெரியவன் கிஷோர் பள்ளிக்கூடம் போறான், அவங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்து, வயித்துக்குக் காலை உணவு குடுத்து, மதியம் உணவுக்கு வேண்டியதையெல்லாம் தயாரிச்சு டப்பாவிலே போட்டுக் குடுத்து, தலையை வாரி, சீருடை போட்டுவிட்டு, அனுப்பறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போகுது”, என்றபடியே புடவைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்தபடி, “இதோ இது இருக்குதே என் செல்லக் குட்டி. இவனுக்குக் கிட்டத்தட்ட ஒண்ணரை வயசாகுது. இடுப்பை விட்டுக் கீழே இறங்க மாட்டான். இன்னும் மழலையே மாறலை. ஆனா பேசற பேச்சு இருக்கே… யப்பா… செம வாலு, எப்பிடித்தான் அந்தக் காலத்திலே பத்து பதினொண்ணுன்னு பெத்து வளத்தாங்களோ? இதுக்கு வயித்துக்கு குடுத்துட்டு வரேன், அப்போதான் தூங்குவான், இல்லேன்னா நம்மளைப் பேச விடாம வம்பு பண்ணுவான்” என்றபடி பருப்புச் சாதத்தை ஊட்டி, அவன் தூங்க ஆரம்பித்ததும் கீழே விட்டுட்டு, “என்ன பண்றது எனக்கு காலம் இப்பிடியே போவுது” என்று சலித்துக்கொண்டே பெருமூச்சு விட்டாள் வசந்தா!



“ஏதோ மதிய வேளையாச்சே கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டுப் போலாம்னு வந்தா, தினோம் நீ செய்யிறதையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பியே பொழுதை ஓட்டற” என்றாள் சுசீலா!



“ஒரு மனுஷின்னா அவளுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும், மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும், சரி அதையே நெனைச்சிகிட்டு இருக்காதே, மனசை ப்ரீயா விடு”, என்றாள் சுசீலா.



‘பணம்’ தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஹாலில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அந்தத் தொடரில் ஒரு பெண், ‘எனக்குப் பணம் முக்கியமில்லே. ஆனா என்னை அவமானப்படுத்தின அந்தத் தியாகுவைப் பழி வாங்காம ஓயமாட்டேன், அவனை வாழ விடமாட்டேன், அவன் எங்க போனாலும் துரத்தித் துரத்திப் பழிவாங்குவேன்’ என்றாள், ஆண்பிள்ளைக் குரலில், வெறியோடு.



“இந்தப் பொம்பளையப் பார்த்தவொடனே ஞாபகம் வருது. உனக்குத் தெரியுமா, நம்ம தெருவிலே கோடீ வீட்டுலே இருக்காளே வத்சலா, அவ புருஷன் ராஜா வெஷம் குடிச்சிட்டானாம்”, என்றாள் சுசீலா.



“ஐயய்யோ ஏன், என்ன ஆச்சு?” என்றாள் வசந்தா!



“வத்சலாவோட புருஷன் ராஜா சீட்டு நடத்தினாரு இல்லே…. அதை ஒழுங்கா நடத்தி அதுலே லாபம் வந்தா பரவாயில்லே. அவங்க ஆடின ஆட்டம் இருக்கே, எல்லாருடைய பணத்தையும் வாங்கி வெளிநாட்டு டீவீ என்னா,நெக்லஸ் என்னா,அப்பிடியே மினுக்கினா, அது போதாக்குறைக்கு வீட்டை இடிச்சு பெரிய பங்களாவா மாத்திக் கட்டினாரு, கடைசீயிலே வரவேண்டிய பணமெல்லாம் வரலைன்னு சொல்லிட்டு யாருக்கும் பணம் குடுக்காம ஏமாத்தி இருக்காரு. எல்லாரும் போலீஸ்லே புகார் குடுத்துட்டாங்க. ஆனா அவராலே பணம் குடுக்க முடியலை. அவருக்கு ஏதோ நஷ்டமாம், என்ன செய்யிறதுன்னே தெரியலையாம், அதுனாலே அந்த ஆளு விஷம் குடிச்சிட்டான்” என்றாள் சுசீலா.



“ஐயய்யோ நான் கூட என் புருஷன் ரமேஷுக்கத் தெரியாம அவருகிட்ட சீட்டு கட்டி இருக்கேன், அப்போ என் பணமும் வராதா?” என்று அதிர்ந்தாள் வசந்தா.



“அதெல்லாம் கவலைப்படாதே. அவங்க கம்பெனிலேருந்து ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க, இவுரு இப்பிடிச் செஞ்சது அவரு வேலை செய்யிற கம்பனிக்கே தெரிஞ்சு போச்சாம். அதுனாலே அந்தக் கம்பனி இவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம். வேலையை விட்டு அனுப்பும்போது அந்தக் கம்பனி இவருக்கு சேர வேண்டிய பெரிய தொகையைக் குடுத்தாங்களாம். அந்தப் பணத்திலே எல்லாருக்கும் திருப்பிக் குடுத்துடறேன்னு அந்த ஆளு ராஜா சொல்லி இருக்காரு.”



திடீர்ன்னு யாரோ மூச்சுத் திணறுவது போல் சத்தம் கேட்டு, வசந்தா எழுந்து ஓடிப் போய்ப் பார்த்தாள். அவளோட குழந்தை திருதிருன்னு முழிச்சிண்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் மண் உண்டியல் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது.



“ஐயய்யோ குழந்தை இந்த உண்டியல்லேருந்து கீழே விழுந்த காசை எடுத்து வாயிலே போட்டுண்டான் போல இருக்கு… அது தொண்டையிலே மாட்டிண்டு அவனுக்கு மூச்சு திணறுது” என்று பதறினாள் சுசீலா. வசந்தா பதறிப்போய் குழந்தையின் வாயில் விரலை விட்டு எப்படியாவது காசை எடுத்து விடலாம் என்று முயன்றாள். குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. மேலும் பதறிய வசந்தா, அழ ஆரம்பித்தாள்.



“நீ ஒண்ணும் பதறாதே. நான் ஆட்டோ கூப்படறேன், நாம ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போயி எப்பிடியாவது குழந்தை தொண்டையிலே மாட்டிண்டு இருக்கற காசை வெளியே எடுத்துடுவோம்,” என்றபடி வாசலுக்கு ஓடிவந்து ஒரு ஆட்டோ பிடித்தாள் சுசீலா.

அதற்குள் வசந்தா குழந்தையை எடுத்துக்கொண்டு , வீட்டைப் பூட்டிவிட்டு, ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள்.



ஆட்டோ அவர்கள் வீட்டுக்கருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கே, ” இதோ பாருங்க, இப்போ டாக்டரெல்லாம் பிசியா இருக்காங்க. நீங்க உடனடியா பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க” என்றாள் நர்ஸ். ஆட்டோ பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடியது. உள்ளே டாக்டரிடம் ஓடினாள் வசந்தா.



வசந்தா சொன்ன விஷயத்தை கேட்ட அவள் கணவன் ரமேஷ், அலுவலகத்தில் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.



முதலில் குழந்தையைப் பார்த்த டாக்டர், “இதோ பாருங்க, ஒண்ணும் பதறாதீங்க,” என்றபடி எக்ஸ்ரே எடுத்தார். “எக்ஸ்ரேவில் ஒண்ணும் தெரியலைம்மா. ஆமா உங்களுக்கு நிச்சயமா தெரியுமா, குழந்தை காசை வாயிலே போட்டுண்டானா?” என்றார்.



“தெரியவில்லை டாக்டர், நான் கூட தொண்டையிலே விரலை விட்டுப் பார்த்தேன். என் விரலுக்கும் ஒண்ணும் அகப்படலை. ஆனா வாயிலேருந்து ரத்தமா வந்துது” என்றாள் வசந்தா.



“சரி நாம் எதுக்கும் இன்னொரு முறை ஸ்கேன் பண்ணிப் பாத்துடலாம். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலே ஒரு ஸ்கேன் செண்டர் இருக்கு. நான் எழுதித் தறேன். மத்த இடங்கள்ளே அதிகமா பணம் வசூலிப்பாங்க, நீங்க இங்கே போயி ஸ்கேன் பண்ணிண்டு சீக்கிரம் வாங்க,” என்றபடி தன்னுடைய கைப்பேசியில் பேச ஆரம்பித்தார்.



மீண்டும் வாயிலில் நின்றிருந்த ஆட்டோவிலே ஏறி, “இதோ பாருங்க, உடனடியா இந்த ஸ்கேன் செண்டருக்குப் போங்க” என்றாள். அங்கே ஸ்கேன் எடுத்து, அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கொடுத்தவுடன் மீண்டும் பெரிய ஆஸ்பத்திரிக்கே வந்து ஆட்டோக்காரருக்கு 200 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காண்பித்தாள் வசந்தா.



ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், “ஸ்கேன்லே கூட ஒண்ணும் தெரியலையே என்னா செய்யிறது? எனக்கென்னவோ குழந்தை காசு தொண்டை வழியா வயித்துக்கு போயிருக்கும்னு தோணுது. நீங்க காசை எடுக்க, குழந்தை வாயிலே விரலை விட்டீங்க இல்லே… அதுனாலே தொண்டையிலே உங்க நகம் கீறி ரத்தம் வந்திருக்கும்” என்றார், டாக்டர்.



வசந்தா பதறினாள். “கவலைப்படாதீங்க. காசு தானாவே மோஷன் போகும்போது வெளியிலே வந்துடும். அது்க்கு நடுவுலே ஏதாவது ஆச்சுன்னா உடனே குழந்தையை மறுபடியும் அழைச்சிட்டு வாங்க பாப்போம்” என்றார் டாக்டர்.



குழந்தை கஷ்டப்பட்டு, “ம்ம்மா” என்றான். வசந்தா குழந்தையின் அருகில் வந்து பதறியபடி “என்னடா கண்ணா?” என்றாள் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி.



குழந்தை ரமேஷை நோக்கி, “ப்பா” என்றது. ரமேஷ் கண்ணில் கண்ணீருடன் குழந்தையை நோக்கிக் குனிந்தான்.



குழந்தை வசந்தாவைப் பார்த்துக் கையை நீட்டியது. அதில் ஒரு முழு ஒரு ரூபாய் பளிச்சென்று மின்னியது.



“ம்மா… நானு பத்திரமா வெச்சிண்டு இக்கறேன், காசு, உனக்கு தரமாத்தேன் போ, காசு என்னுது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தது!