திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 12, 2009

பழமொழி -7. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “

கேட்டாலே சிந்தனையை தூண்டும் பழமொழி இது

கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன்அம்பலவாணன் உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான்அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும் அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன்ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள்இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படிகொண்டாட்டம் வரும் ....?வரும் ….!!!!!! கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால்மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர்மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும்கலை பயன்பட்டு வந்தது,....ஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால்இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள்கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர்அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர்அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும்மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து,பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர்அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால்ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?" விஞ்ஞானமும் மெய்ஞானமும்தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காதுஆனால் அவைகளை இணைக்கும்நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம்,,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம்கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்றஇணைப்புகள், இவைகள் இல்லாது போயின் மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரிவலுவிழந்து போய்விடும் "இவற்றை உணர்ந்து பெரியவர்கள்இரண்டு தண்டவாளங்களை இணைக்கும்நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாகசெயல்பட்டிருக்கிறார்கள்மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தைஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள்ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே,இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை,இரண்டு படவைக்கிறார்கள்கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சைசெவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்,கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்திநல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள்இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை ,திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்தஅதே பழ மொழியைதங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுமக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டுமக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்குசேர்த்துக் கொள்கிறார்கள்இவை புறியாமல் மக்கள் மாற்றிமாற்றி வேறு வழியில்லாமல் மீண்டும் அவர்களுக்கேவாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு , செல்கிறார்கள்அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால்அந்தப் பணத்தின் அருமை தெரியும் இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டுஅதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய்வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள்இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்தஅக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்மக்களுக்கும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தினார்கள்......இதை நன்கு உணர்ந்துதான் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனரோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -6. வட்டிக்குவாங்கி அட்டிகை பண்ணு,அட்டிகையைவிற்று வட்டியைக் கட்டு

பழமொழி ஆய்வு 6 :-

வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு

இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

நமக்கு அடிப்படை தேவைகளே
இருக்க இடம் , உண்ண உணவு ,குடிக்கத் தண்ணீர்
இந்த மூன்றுக்குமே நாம் போராட வேண்டியிருக்கிறது
நம் அரசியல் அமைப்பு நமக்குத் தரும் வசதிகள்
அப்படி இருக்கின்றன,ஆனால் தற்போது நாமெல்லாரும் நிறைய சம்பாதிக்கிறோம்
நிறைய செலவழிக்கிறோம்,ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் சம்பாதித்ததும் குறைவு, செலவழித்ததும் குறைவு
பெரும் பான்மையான மக்கள் பேராசை இல்லாமல் இருந்தார்கள்
அப்படி இருந்தும் சிலபேர் பேராசைப் பட்டதால்
வந்த சொல் வழக்கு இது


கண்ணை விற்று சித்திரம் வாங்கியதைப் போல என்று சொல்லுவார்கள்,
அது போல அந்தக் காலத்தில் பேராசைப்பட்டவர்கள்
பொன் நகை போட்டுக் கொள்ளுதல் அந்தக் காலத்தில் மிகவும் மதிப்பான விஷயம்,
அந்தக் காலத்தில் என்ன ....?
இந்தக் காலத்திலும் அதே நிலைமைதான்
அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை
என்னும் அலங்கார நகையை வாங்குவார்கள்
ஒட்டியாணம் என்னும் நகை இடையை அலங்கரிக்கும்
கைகளில் மோதிரங்கள், கழுத்தில் தங்க முகப்படாம்கள்
காதிலே வைரத் தோடுகள் எல்லாம் அணிந்து கொண்டு
மினுக்கினால்தான் அது மதிப்பு என்று நினைத்துக் கொண்டு
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்னும் பழமொழியை
மதிக்காமல் அளவுக்கு அதிகமாக தகுதி உணராமல் வீண் செலவு
செய்துவிட்டுபிறகு அந்த வலையிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவார்கள்
மக்களின் இந்தப் பேராசையை பயன் படுத்திக் கொண்டு
சில பேர் தங்கள் கையிலிருக்கும் பணத்தை
வட்டிக்கு ஆசைப்பட்டு பலபேருக்கு கொடுத்து
அனியாய வட்டி வாங்கி கொழுத்த பணக்காரகளாக
ஆவதற்கு சுலபமான வழியாக மக்களின் இந்த வேண்டாத
குணத்தை உபயோகித்தனர்

மக்களின் பேராசை என்னும் வேண்டாத உணர்வு
எந்த அளவு அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது
என்று நமக்குப் புறிய அளவு கோலாக இந்தப் பழமொழி
பயன்படுகிறது

இதே உணர்வு இப்போதும் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது
என்பதில் சந்தேகமே இல்லை...!
இப்போதெல்லாம் நம் செலவு செய்ய பணம் கூடத் தேவையில்லை
ஒரு சிறு அட்டை போதும்
ஆனால் பணத்தை திரும்ப செலுத்த பணம் வேண்டும்
இந்த விஷயத்தை அனேகமாக அனைவரும் மறந்தாற்போல
அட்டையை வைத்து செலவழிக்கிறார்கள்
பிறகுதானே கொடுக்க வேண்டும் என்கிற தைரியம்
பலரை கீழே அதளபாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது
அதுவும் போதாக் குறைக்கு கணிணி விறபன்னராயிருக்கும் சிலர்
அடுத்தவரின் கடவு எண்ணை உபயோகித்து
அவருடைய வங்கியில் உள்ள அத்தனை பணத்தையும் கபளீகரம் செய்யும்
குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்
அத்தனைக்கும் காரணம் மனிதர்களின் பேராசைதான்

வருமானத்துக்கு தக்கபடி செலவு செய்து வளமாக
வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்
நாமோ அளவுக்கு அதிகமாக செலவு செய்து அவமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்
கையில் இருக்கும் காசை எண்ணிப் பார்த்து செலவு செய்ததால்
அவர்களுக்கு வழ்க்கையின் திட்டமிடுதல் பழகி இருந்தது
இப்போது அப்படியில்லை செலவு செய்து விட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்

ஒரு காலத்தில் தங்க நகை வாங்குவது தங்களுடைய
அந்தஸ்தை காட்டிக் கொள்ளவும் , அதற்குப் பிறகு
ஆபத்துக்கு தங்கம் உதவும் என்கிற எண்ணத்தினாலும்
தங்கம் வாங்கினர்...இப்போது ஆடம்பரத்துக்கே தங்கம் அதிகம் பயன் படுகிறது
அரசே தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது
எல்லா நாடுகளும் தங்கம் வைத்திருக்கும் நாடுகளை
தராசில் நிறுத்து தகுதியை எடை போடுகிறது

தங்கம் வாங்குவதில் மீண்டும் விற்பதில் உள்ள சிக்கல்களை ஆரய்ந்தால்

நாம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் அதைத்தவிர வரிகள் என்று ஏராளமான செலவை நமக்கு ஏற்படுத்தி லாபம் சம்பாதிக்கும் தங்க வியாபாரிகள்
அதே நகையை அவர்களிடம் மீண்டும் கொடுத்துவிட்டு
வேறு நகை வாங்கும் போது நாம் கொடுக்கும் தங்கத்தின் விலையை வெகுவாகக் குறைத்து மீண்டும் செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு, மீண்டும் அவர்களிடம் வாங்கும் நகைக்கு செய் கூலி சேதாரம் எல்லாம் போட்டு,,..... அப்பப்பா
நாம் உழைத்த பணம் நம்மை அறியாமலே தங்க நகை வியாபாரிகளால் சுரண்டப் படுகிறது
அது மட்டுமல்ல கற்கள் பதித்த நகைகள் வாங்கினால்வேறு வினையே வேண்டாம்
நமக்கு அவர்கள் விற்கும்போது கற்களுடன் சேர்த்து எடை போட்டு அனியாய விலைக்கு விறபார்கள், நாம் அதை மீண்டு அவர்களிடம் விற்கும்போது 'கற்களையெல்லாம் எடுத்து விட்டு, அதற்கு மேலும் அந்த தங்கத்தை உருக்கி அழுக்கெடுத்து
அப்போது எவ்வளவு எடை இருக்கிறதென்று கணக்குப் பார்த்து
நமக்கு செலவு வைக்கிறார்கள், இதைபோன்ற அனியாயத்தை நாம்தினமும் சந்திக்கிறோம்

ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டத்துக்கு பஞ்ஜமில்லை
இத்தனைக்கும் காரணம்
நம்முடைய அறியாமை,பேராசை,வீண் படாடோபம்
இதைத்தான்
பெரியோர் வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து
அட்டிகை விற்று வட்டியைக் கட்டு என்று சொல்லி இருக்கிறார்களோ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -4. அழுதபிள்ளைதான் பால் குடிக்கும்

" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"

அருமையான முது மொழி!! , பசியெடுத்தாலும் அழாமல் ,
அதாவது எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே என்று கவலைப் படும் பலர்,
அதாவது பரவாயில்லை அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே என்று கவலைப்படும் பலர், இப்படிப் பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல் இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

நான் ஒரு முழு நீள நாடகத்தை மூன்று நாளில் எழுதி முடிக்கும்
வழக்கமுடையவன் என்னை பார்த்து சக நாடக எழுத்தாளர்கள்
கேட்பார்கள் மூன்று நாளில் எப்படி எழுதி முடிக்கிறாய் என்று
அவர்களுக்கு நான் பதில் சொல்லுவேன்,மூன்று நாளில் முடிக்க முன்னூறு நாள் யோசித்திருக்கிறேன்,உழைத்திருக்கிறேன்
என்று, இதுதான் வெற்றியாளர் பலரின் ரகசியம் ,

பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் நேத்து கூட நான் அவரைப் பார்த்தேன் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக ஆகிவிட்டார் என்று
ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆவதற்கு அவர் எத்துணை முயற்சிகள் செய்திருப்பார் பலகாலமாக , அது வெளியே தெரிவதில்லை,

எப்போதும் வேர்கள் வெளியே தெரியாது விருட்ஷம் மட்டும் தான் தெரியும் , மிகச் சிறிய உருவமாக ,குள்ளமாக வாமனாவதாரம் எடுத்த ஸ்ரீமன் நாராயணனின் விஸ்வரூபம் வெகு சிலரே பார்த்திருக்கக் கூடும், ஆனால் அந்த விஸ்வரூபத்தைக் கண்டவர்கள்கூட அந்த விஸ்வரூபத்தின் பின்னால் இருக்கும்
"அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் " என்று ஆன்மீகப் பெரியார்கள் சொன்னாற் போலே அந்த அணுவிலிருக்கும் இறைவனைக் கண்டிருப்பார்களா என்பது சந்தேகமே..அது போலத்தான் முயற்சிகளை காணாதோர் முடிவை மட்டும் கண்டு ஆச்சரியப் படுகின்றனர்,
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புரியவில்லை
கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை அதாவது, கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்று..
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம் தானாகவே வரும் என்னும் பொருளை உணர்த்துவது போல , தன் கடமையைக் கூட உணராமல் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல். இருப்பவர்களை கடமையை செய்யத் தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

ஒரு திருமண மண்டபத்தில் நான் ஒரு குழாயில் கையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன் இன்னொரு கோடியில் கடைசீக் குழாயில் இன்னொருவர் கையை சுத்தம் செய்துகொண்டிருந்தார் அந்த நண்பர் நாட்டில் பல பேர் கோடீஸ்வரராக ஆகிவிட்டனர், நாமெல்லாம் எப்போது அப்படி ஆக முடியும் என்றார்,

அவரைப் பார்த்து நான் சொன்னேன் வேடிக்கையாக நீங்களும் நானும் கோடியில் ஒருவர் என்று, ஆமாம் அந்தக் கோடியில் அவர் இந்தக் கோடியில் நான், அது போல வெகு சிலரே கோடியில் ஒருவராக முயற்சி செய்கிறார்கள், அல்லது கோடிகளுக்காக முயற்சி செய்கிறார்கள் ஆகவே முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான் ”அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்று சொல்லி இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது

இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வருகிறது
ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய பையில் நீந்திக் கொண்டிருந்தாலும்,அந்தத் தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின் உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும் உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,உணவாக அனுப்பப்பட்டும், அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல அனைத்துக் குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தில் கண்டு பிடித்து அவைகளைப் பாதுகாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்(Stem cell) மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து செயலாற்றி இருக்கிறான் என்றால்.. அவன்தான் இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த நமக்கே விஞ்ஞானி என்று பெயரென்றால், உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில் தவறென்ன ....?

என்னே இறையின் சக்தி ,..!!! என்னே இறையின் படைப்பு ரகசியம்
யார் சொன்னது இறை இல்லையென்று...? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் ”அவனன்றி ஒரு அணுவும் அசையாது”

அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம் அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த காற்றும் தடைப்படுகிறது
அக்குழந்தை மூச்சு விடத் தவிக்கிறது அந்த இடைவெளியில்
அதற்கு மூச்சுவிட காற்று தேவை

அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில் விழுந்து அதன் உடல் இயக்கம் ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைப்பட்ட நேரத்தில்
காற்று உள்ளே போகும் மூச்சுக்குழலின் வழியை, இது வரை இருந்த குடியிருந்த கோயிலின் கர்பக் க்ரகத்தில் இருந்த கருணையே வடிவான தண்ணீர் இப்போது அடைத்துக் கொண்டிருக்கும், அந்த தண்ணீர் வெளியேறினால்தான்
காற்று உள்ளே புக முடியும் அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை அழும்போது,
அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து வெளியேறுகிறது ,அப்படி தண்ணீர் வெளியேறியவுடன் குழந்தை முதல் மூச்சு விடுகிறது
அப்படி அழவில்லையென்றால் மருத்துவர்கள் அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர் ஏனென்றால் அழுதால்தான் மூச்சே....
”முதல் மூச்சே விடமுடியும்” முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும் பிழைத்தால்தானே பால் குடிக்கும்?
”அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும்”
என்று ஆன்றோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்


புரட்சி எங்கு உருவாகிறது என்று நானே எனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டு பல நாள் ஆராய்ந்து அதன் மூலத்தை
என்னுடைய பாணியிலே ஒருகவிதையாக வடித்தேன்

" புரட்சி "
"அசை, புரளு, கவிழாதே நிமிரு
இயக்கம் கொள் பேரியக்கம் கொள்
அப்போதுதான் கருவரையிலிருந்தே
நீ வெளி வரமுடியும் இல்லையென்றால்
இறந்த குழந்தை "

என்று, ஆமாம் கருவரையிலேயே புரட்சி ஆரம்பித்து
விடுகிறது என்பதே உண்மை, அந்தக் கருவரைப் புரட்சியே ஒரு இயக்கத்தில்தான் ஆரம்பிக்கிறது,அக்குழந்தையின் இயக்கத்தால் தான் ப்ரசவ வலி ஏற்படுகிறது அதற்கு அடுத்த இயக்கம்தான் (pelvis) என்று சொல்லப்படும் இடுப்பு எலும்புகளின் விரிவாக்கம் அடுத்த இயக்கமாக இடுப்பு வலி ஆரம்பிக்கிறது , இப்படி இயக்கங்கள் அடுத்தடுத்து இல்லையென்றால் ,குழந்தை அழாமல் இருந்தால் இந்தப் ப்ரபஞ்சமே தோன்றி இருக்காது அல்லவா
சம்பந்தன் அழுதான் பராசக்தி பால் கொடுத்தாள், பராசக்தியின் அமுதத்தைக் குடித்ததால் வெறும் சம்பந்தருக்கு ஞானம் சம்பந்தமாயிற்று , ஞான சம்பந்தரானார், திரு ஞான சம்பந்தரானார், இப்போது சொல்லுங்கள்

அழுத பிள்ளை பால் குடிக்குமா ஞானம் பெறுமா
அழாத பிள்ளை பால் குடிக்குமா ஞானம் பெறுமா..?

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.


rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

முகவரி: பழைய எண் 152, புதிய எண் ஏஐ- 58,
ஏ3, இரண்டாவது தளம், சோனக்ஸ்வப்னா அடுக்ககம்
7 வது ப்ரதான சாலை, அண்ணா நகர் ,
சென்னை 600040

கைப்பேசி: 9840884088
இல்லம் : 044-42057923

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -3. ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி

ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்

எவ்வளவு பொருள் பொதிந்த பழமொழி

ஆல்போல் என்றால் என்ன பொருள்
ஆல என்றால் ஆல மரம்
ஆல மரத்தை ஆராய்ந்தால் ஆல்போல் தழைத்து:

ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம்,
அந்த அளவுக்கு ஆல மரம் நம்முடைய வாழ்க்கை
நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும்
நாம் கற்றுக் கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக
இருக்கிறது

ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள்
ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்
ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை
"தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம்
தழைத்தல் என்றால் பெருகுதல்; வளருதல், எவ்வளவு மங்கலமான வார்த்தைகளை நம் முன்னோர்
உபயோகப் படுத்தி இருக்கின்றனர்
ஆச்சரியமாக இருக்கிறது
என்னுடைய சிறு வயதில் என் தாயார் என் தந்தையாரிடம்
சொன்னார் "ஆத்துலெ அரிசிப் பானை நிறைந்திருக்கிறது
சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொண்டு வந்து
விடுங்கள் என்று"
எனக்கு சந்தேகம்... ஏனம்மா அரிசியே இல்லையே பானையில்
நிறைந்திருக்கிறதுன்னு அப்பாகிட்ட சொன்னியே
தப்பு தப்பா சொல்ற என்றேன்
அதற்கு என் தாயார் சொன்ன வார்த்தைகளை
இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்

கண்ணா தமிழ் ஒரு நல்ல மொழி
அதுனாலெ நாம எப்பவுமே நல்லதை உபயோகிக்கும் போது
வெகு ஜாக்கிறதையாக உபயோகிக்க வேண்டும்
பொதுவா தமிழ் மொழிக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு
நல்ல தமிழில் சாபமிட்டா உடனே பலிக்கும்னு பெரியவா சொல்லுவா....
அதுனாலெதான் முன்னெல்லாம் நம்ம நாட்டை ஆண்ட
சக்ரவர்த்திகள் கூட தமிழுக்கு மரியாதை கொடுத்தா
தமிழ்ப் புலவர்களுக்கு மரியாதை கொடுத்து
அவங்களோட மனசு கோணாம நடந்துண்டா
அத்னாலே அமங்கலமான சொற்களை சொல்லக் கூடாது
அதுனாலெதான் அரிசி இல்லேனு சொல்லாம
அரிசிப்பானை நெறைஞ்சிருக்குன்னு அப்பாகிட்ட
சொன்னேன்..... அப்பாவுக்கும் தெரியும் தமிழோட அருமை
அதுனாலெ அவர் புறிஞ்சுப்பார் ,என்றாள்
அடடா என்னே தமிழின் பெருமை
தமிழும் ஆலமரமும் இணைந்தே வளர்ந்தவை அல்லவா
தமிழும் தழைக்கும் ஆலமரமும் தழைக்கும்
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
என்னும் பாடல் காதில் ஒலிக்கிறது
ஆல மரத்தின் சிறப்பே அதன் விழுதுகள்
பெருகி மீண்டும் தரை தொட்டு வேரோடி
மீண்டும் தழைத்து .... ஆஹா எவ்வளவு உயரம் சென்றாலும் நம்முடைய அடிப்படை பாரம்பரியத்தை நாகரீகத்தை
விடாமல் அதை அடிப்படையாக வைத்து மேலும் தழைக்க வேண்டும் என்னும் தத்துவத்தை எவ்வளவு எளிதாக ஆலமரங்கள் நமக்கு சுட்டிக் காட்டி நம் அறிவைத்
தழைக்க வைக்கின்றன...?
இறைவனின் படைப்புகள் அதிசியமே...!!!!!!!

அருகு போல் வேரோடி என்பதை ஆராய்ந்தால்
அருகம் புல்லின் சாறு இதயத்தை பலப்படுத்தும்
என்று பெரியவர்கள் சொல்லுவர்
நம் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று
நம் இதயத்தையே பலப்படுத்தும் அருகு நிச்சயமாய்
நம் வாழ்விலும் ஒரு பெரிய தத்துவத்தை உணர்த்துகிறது
அருகம் புல்லை கொஞ்ஜம் சேகரித்துப் பாருங்கள்
அது வெகுநாட்கள் கெடாமல் இருக்கும்
அது மட்டுமல்ல அந்த அருகம் புல்லை நாம் சேகரிக்க
அதை கையினால் பறிக்கும் போது அருகம் புல்லின் தழைகள்
மட்டுமே நம் கைக்கு வரும் வேரோடு வராது
ஏனென்றால் அருகம் புல்லின் வேர் அடி ஆழம் வரையில்
நன்றாக வேரூன்றி இருக்கும் ,
அது போல நம் வாழ்வில் ஆயிரம் நிகழ்வுகள்
நம்மை அசைத்துப் பார்த்தாலும். பெயர்தெடுத்து
அழிக்க நினைத்தாலும் நம்முடைய
நல்ல பாரம்பரியங்களை முழுமையாக புறிந்து கொண்டு
நல்லவற்றைக் கடைப்பிடிப்போம்,, தீயவை செய்யோம்
என்னும் நல்ல சபதங்களில்,குறிக்கொள்களில்
நாம் ஆழமாக வேரோடி நிலைத்து நின்றால்
நிச்சயமாக நன்மையே தவிற, தீமை இல்லை
இதயம் வலுவானதாக மாறும் இதைத்தான்
நம் பெரியோர்கள் திட சித்தம் என்று சொல்லுகிறார்கள்
இதைத்தான் அருகு போல் வேரோடி என்கிறார்கள்

அடுத்து
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்
என்று சொல்லுகிறார்கள்

ஆஹா மூங்கில் போல் சூழ்ந்து
எவ்வளவு அருமையான வார்த்தை
கொஞ்சம் மூங்கில் காடுகளை மனதில்
நினைத்துப் பாருங்கள்
எப்படி அருகருகே இணையாக, பரவரலாக
கூட்டமாக, இணைந்து, அணைத்து வளர்ந்து
ஒன்றிற்கொன்று பலமாய் ,உறவுக்கு பாலமாய்
ஒற்றுமையாய் சூழ்ந்திருக்கின்றன,அதனால் எப்போதுமே மூங்கில் மரங்களின் வளர்ச்சி மிக அதிகம் என்று சொல்லுவார்கள்
அது போல நாமும் இனம் ஜாதி மதம் போன்ற
எந்த பேதமும் இல்லாமல் இணைந்து அணைத்துக் கொண்டு
சூழ்ந்து நம் பலத்தை வளத்தை பெருக்கிக் கொள்வோம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பெரியவர்கள் கூறியது போல வாழ ஆரம்பித்தால் நம்முடைய நன்மைகளுக்கு
அதுவே பெரும் பக்க பலமாக அமைந்து நம்முடைய
ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் , ஆரோக்கியமான
வளமான வாழ்வுக்கும் எந்த ஒரு முடிவுமில்லாது

தாழம் பூவும் மடல் விரியும் மின்னல் வரும் வேளைதனில்
மூங்கிலும் முளை விடும் மின்னல் வரும் வேளை தனில்
இயற்கையின் ரகசியங்கள் நம்மை முகிழ்க்கவைக்கின்றன
நம் மனதை விகசிக்க வைக்கின்றன
மரம் வளர்வதை பார்க்கமுடியும்
கேட்க முடியுமா.....?

முடியும் என்பர் அனுபவஸ்தர்

மூங்கில் ஒவ்வொரு முளை விடும் போதும்
ஒரு சத்தம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்
அதே போல
தென்னம் பாளையில் பூக்கள் மலரும் போது ஒரு சத்தம் கொடுக்கும் என்றும் அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள்
ஆகவே பெரியவர்கள் சொல்வதையும் கேட்போம்
மரங்கள் வளருவதை பார்ப்போம், , மரம் வளருவதையும் கேட்போம் இயற்கையோடு இசைந்து வாழ்வோம்
ஆமாம் மூங்கில் குருத்துகள் வரும்போது கேட்கும் சத்தம் மத்தளமாகவும், மூங்கில் துளைகளின் வழியே பயணப்படும் காற்று ஊதும் குழலாக மாறி அளிக்கும் ஊதுகுழலின் நாதத்தையும் ரசித்து இசை பட வாழ்வோம்



ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் போல் முடிவில்லாது வாழ்வோம்

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்
என்று ஔவையார் கூறியபடி


அன்புடன்
தமிழ்த்தேனி



பழமொழி : 2 " நடந்தால் நாடெங்கும் உறவு

பழமொழி : 2 " நடந்தால் நாடெங்கும் உறவு
படுத்தால் பாயும் பகை “



இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதே பல பெரியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்
உயர் திரு மஹாத்மா காந்தி, உயர் திரு வினோபா பாவே
உயர் திரு ஜயப்ரகாஷ் நாராயணன்,

எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்திலே
மக்கள் ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குப் போக, அல்லது தாங்கள் போகவேண்டிய இடங்களுக்கு போய்ச்சேர நடந்து தான் செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தில் இருந்தனர்
கால் நடையாளர்களாகவே வாழ்ந்தனர்,அதற்குப் பிறகு தங்களின் தேவைகளை மனதில் கொண்டு உண்மையான கால்நடைகளாகிய குதிரை, மாடுகள், எருது, கழுதை போன்ற கால்நடைகளின் மேலேறி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்

மன்னர்கள் ஆண்ட காலத்தில் முப்படைகளின் பிரிவில்
யானைப்படை, குதிரைப்படை போன்றவை இருந்தாலும் எளிதில் ஊடுருவக் கூடிய காலாட்படையை மன்னர்கள் பெரிதும் நம்பினர்

நாம் வாழும் இந்தப் ப்ரபஞ்சம் அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்றே நமக்குத் தெரியாமல் நம்மை எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறது, அதனால்தான் நாம் வாழக்கையில் ஆயிரம் ப்ரச்சனைகளை எதிர்கொண்டாலும் அவற்றிலிருந்து மீண்டு ஓரளவு இயல்பான, சுவாரஸ்யமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடிகிறது
"நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை நடக்கப் போவதும்” அனைத்தும் நன்மைக்கே என்று தினமும் நடப்போர் சங்கம் ஒன்றிற்கு தட்டி வாசகமாய் நான் எழுதிக் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....!

நடக்க வேண்டும், நல்லவை எல்லாம் நடக்கவேண்டும்
நடப்பன எல்லாம் நன்மையாகவே நடக்கவேண்டும் என்று நம் மனது அடிக்கடி நினைக்கிறது, நடக்கும்....நிச்சயம் நடக்கும், நம்பிக்கைதானே வாழ்க்கை,எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம் என்பது பெரியோர் வாக்கு

”நடந்தால் நாடெங்கும் உறவு”
உண்மைதான் ...நடந்தே நாடெங்கும் உறவை ஏற்படுத்திக் கொண்ட பல பெரியோர்களின் அனுபவ பூர்வமான உண்மை வாசகம், நல்ல நோக்கத்துடன் நடந்து,நல்லவிதமாக நடந்து தாய்நாட்டுப் பாசத்துடன் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மக்களின் மேலும் நேசத்துடனும்,பாசத்துடனும் மனித நேயத்தை மனதிலே தேக்கி அறவழியை உணர்த்தும் வண்ணமாக சத்திய வழியில். அஹிம்சாவழியில் நடந்தே அடிமைப்பட்டிருந்த நம் தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய் இருந்தவர்கள் பலர் அவர்களில் மஹாத்மா காந்தி அவர்கள், வினோபாபாவே அவர்கள்,ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள்
நடந்தே ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுக்க முடியுமென்றால் நடக்கலாமே, நடக்க நடக்க நாடெங்கும் உறவு
உலகமே உறவு என்று எல்லைகள் விரிந்துகொண்டே செல்லும் வாய்ப்பு இருக்கிறது, நடப்போம்..
நடப்பதால் மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.?
எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில் கொழுப்பு, சர்க்கரை, போன்ற பொருட்கள் இருக்கின்றன ,ஆனால் அவைகள் இருக்க வேண்டிய விகிதாசார அளவு குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை நோய் என்கின்றனர் மருத்துவர்கள்,

இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ,அதிகரித்தாலோ, அது அளவுக்கு மிஞ்சுதல் என்று பொருள் கொள்ளலாம்
"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்" அல்லவோ
அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள்
”நான் சொல்வதைக் கேட்டு நட” என்கிறார்கள்
அதாவது நடந்தாலே அனேக வியாதிகள் குணமாகி விடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்
”ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு”
நாம் இருந்தால்தானே நடப்போம், நடந்தால்தானே இருப்போம்
உறவுகள் பெருக வேண்டுமானால்,நடக்க வேண்டும், நல்லது நடக்கவேண்டும், நம்மால் அடுத்தவருக்கும் அடுத்தவரால் நமக்கும், நல்லது நடக்கவேண்டும்

இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்“நடந்தாய் வாழி காவேரி” என்று புகழ்ந்திருக்கிறார்,அந்தப் பாடலை திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ”நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் கொழிக்க நடந்தாய் வாழி காவேரி” என்று வெங்கலக் குரலில் பாடியதைக் கேட்டிருக்கிறோம்

ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக்கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்,அப்படி காவிரி நடந்தே எத்தனை ஊர்களை,கிராமங்களை செழிக்க வைத்திருக்கிறாள்,
பதினெட்டாம் பெருக்கு என்றும் ஆடிப்பெருக்கு என்றும் கொண்டாடும் நாளில் பலவித சித்ரான்னங்களை படைத்து காவிரிக்கரையில் கொண்டு சென்று பல மக்களோடு பகிர்ந்து அருந்தி பொதுவுடமையை நம் மக்கள் வளர்த்துக்கொள்ள உதவுகிறாள், நடந்தால் பொதுவுடமை வளரும் என்றும் நிரூபிக்கிறாள்
நடந்தே மூவுலகும் சுற்றி நன்மை விளைவித்தவர் நாரதர் என்று சொல்வார்கள், நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா
நா--ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர் என்று பொருள்
அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து நன்மை செய்திருக்கிறார் ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்
கலகம் செய்ய வேண்டாம் நாரதர் கலகம் செய்தாலும் நல்ல நோக்கத்திலே செய்வதால் நன்மை விளைகிறது,நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது சொல்வழக்கு
நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது
நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம் நடப்போம்,

"அதே போல் படுத்தால் பாயும் பகை,"

ஒவ்வொரு மனிதரும் படுக்கவேண்டுமென்றால், ஒன்று இரவிலோ அல்லது பகலிலோ ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுப் படுக்கலாம் வயதான பின்னரும் படுத்தால், அதாவது நோயில் படுத்தால் பாயும் பகையாகும்
பாய் எப்படி பகையாகிறது....?நோயினால் தாக்கப்பட்டு தன் சுய உணர்வே இல்லாமல்,அல்லது விபத்தில் அடிபட்டு சுயநினைவில்லாமல் ஒரே நிலையில் படுத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்படிப் படுத்திருப்பவர்களுடைய உடலுறுப்புகளின் சீரான இயக்கம் தடைப்படுவதால் உடலில் பல இடங்களிலும், முதுகிலும் புண்ணாகும், இவற்றை படுக்கை காயங்கள் என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள் அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை, என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஞான வசதிகள் வந்துவிட்டாலும், படுக்கையில் இருப்பவர்களுக்கு நாம் படுக்கையில் இருக்கிறோமே என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும் மனோவியாதியாக துன்புறுத்தும்
”ஆகவே படுத்தால் பாயும் பகை”

இங்கு படுத்தால் என்பது சோம்பினால் என்றும்
பொருள் கொள்ளலாம், நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும்
அப்படி இருக்க படுக்கலாமா...?
தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயண காலத்திலிருந்து உத்திராயண காலம் வரையில் தள்ளிப் போட நினைத்த
பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை சரப் படுக்கையில் படுத்தார், ஏனென்றால் அவருடைய உடற்புண்கள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீளவும், மற்றும் சரங்களின் உறுத்துதல் இருந்து கொண்டே இருந்தால்தான் சோம்பாமல் இருக்க முடியும் என்றும்,
அதையும் தவிர அவருடைய தீர்க்க தரிசனம் மரணத்தையே
தள்ளிப் போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி
நம்மை வியக்கவைக்கிறது, அந்த சரப் படுக்கை மூலமாக
அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை அப்போதே செயல் படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது
ஆகவே படுக்காதீர்கள் ,அப்படிப் படுக்க வேண்டுமானால்
நம்மை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு
செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம் ஆகவே
“படுத்தால் பாயும் பகை”
ஆமாம் படுத்தாலே காத்திருக்கும் பகை எல்லாம் பாயும்
என்பதைத்தான் பெரியவர்கள்
நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை
என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது

எனக்கு இந்த ஆய்வை எழுதும்போதே தோன்றிய சந்தேகம் ஒன்று இருக்கிறது, கருநாகப் பாய் விரித்து கடலின் மேல் படுத்திருக்கும்
திரு நாரணனும் அதனால்தான் அவ்வப்போது பல அவதாரங்கள் எடுத்து நடக்க ஆரம்பித்தானோ என்று,
ராமனை காட்டுக்கு அழைத்து சென்று நடக்கவிட்டார் விஸ்வாமித்திரர்
கண்ணன் மஹாபாரதத்தில் தேரோட்டியாய் வரும் வரையில்
சாந்திபினி ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு நடந்தே காட்டிற்குப் போய் விறகுகள் சேகரித்தான், அனைத்து நற்காரியங்களையும் செய்தான் என்பது மஹாபாரதச் செய்தி


நடக்கும் நாலு கால் பிராணிகளாகவும் நரசிம்மமாகவும்
பல அவதாரங்கள் எடுத்தானோ என்று சந்தேகம் வருகிறது
அப்படியே சற்று நேரம் படுக்கலாம் என்று ஆதிசேஷன் மேல் படுத்தாலும் அவனைப் படுக்க விடாமல் கஜேந்திரன் நாராயணனனை ஆதிமூலமே என்றழைத்து படுக்கையிலிருந்து எழுப்பினான், ,ப்ரஹலாதன் கேட்கவே வேண்டாம்
அவ்வபோது நாராயணனனை எழுப்பிக் கொண்டே இருந்தான்
மஹாபலியோ வாமனாவதாரமாய் நாராயணனை நடக்க விட்டான் இப்படி பக்தர்கள் நாராயாணனை படுக்க விடாமல்
அழைத்துக் கொண்டே இருக்கின்றனரோ என்று சந்தேகம் வருகிறது

ஸ்ரீமன் நாராயணன் கொண்டிருப்பது யோக நித்திரை
என்று சொல்லுவார்கள், யோக நித்திரை கொண்டிருக்கும் நாராயணனையே எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களே
அப்படியானால் போக நித்திரை கொள்ளலாமோ...கூடவே கூடாது என்பதை இப்பழமொழி நன்கு உணர்த்துகிறது


அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான்
ஆராய முயலுவோம் நன்மையென்றால்
அதன் படி நடக்க முயலுவோம்
படுக்க வேண்டாம்.

அன்புடன்
தமிழ்த்தேனீ



பழமொழிகள் ஆய்வு- 1. மூத்தது மோழை இளையது காளை

அன்புள்ள நண்பர்களே

பழுத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாகவும் அடிக்கடி உபயோகப் படுத்தப் படும் சொல் வழக்குகள் பழமொழிகள் என்று பெயர் பெற்றன

எவ்வளவு அருமையான பழமொழிகள், பல பெரியவர்கள் அவ்வப்போது பல அருமையான பழமொழிகளைச் சொல்லுகிறார்கள், இப்போது காலம் இருக்கும் இருப்பில்,
நவீன யுகத்தில்,விஞ்ஞான வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இந்தக்காலத்தில், பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம் யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள், என்கிற எண்ணம் தலை தூக்கினாலும், நல்லதை சொன்னால் எப்பொதும் நம்மவர்கள் புறிந்து கொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையால் எழுந்த பக்குவத்தோடு எழுதுகிறேன்

பழமொழிகள் எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால்,
எல்லாப் பழமொழிகளுமே அனுபவத்தால் ஏற்பட்டன என்று
ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கிறது,

பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு, முற்றிய நிலை, மீண்டும் பல மரங்களுக்கு விதைகள் அளிக்கவிருக்கும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி, என்றெல்லாம் பொருள் வருகிறது, அனுபவ முதிர்வே பழம் , அந்த அனுபவத்தால் விளைந்த, அறிவால் வெளிப்படும் சொற்களை பழமொழி என்று பொருள் கொள்ளலாம், அப்படியானால் எல்லாப் பழமொழிகளுமே, சொல்வழக்குகளுமே, ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக இருக்கவேண்டும், அல்லது..பெரியவர்கள் உணர்ந்து சொன்ன பழமொழிகள் ,சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி தவறான பொருள் தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்,
அப்படி பல பழமொழிகள் இருக்கின்றன,
அந்தப் பழமொழிகளை ஆராய்வோம்,

முதல் பழமொழி : மூத்தது மோழை இளையதுகாளை
இந்தப் பழமொழி எந்த வகை என்று பார்ப்போம்,இந்தப் பழமொழியில் " மூத்தது மோழை என்னும் முதல் பகுதியை எடுத்துக் கொண்டால் என்ன பொருளில் ”மூத்தது மோழை” என்று கூறினார்கள் என்று நம்மைச் சிந்திக்கவைக்கிறது, அந்தச்சொல் வழக்கு நம்மைச் சுற்றி நடக்கும் நடை முறைகளை கவனிக்கத் தூண்டுகிறது, நம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளை கவனித்தாலே, அது பலவகையான அனுபவங்களை அளிக்குமே.

நம் நாகரீகமே நீர்நிலைகளின் அருகே உள்ள கிராமங்களில் பிறந்து வளர்ந்தவைதானே,விவசாயம் தானே முதல் தொழில், வாழ்வுக்கு முதல் ஆதாரமான விவசாயத்தில் மூத்த விவசாயிகள் பல பழமொழிகளை அளித்திருக்கிறார்கள்
வயல் வெளிகளில், பயிருக்கு வேண்டிய தண்ணீரை சேமித்து வைக்கவும், நில உரிமையாளரின் எல்லையைக் குறிக்கவும், வரப்பு கட்டுவார்கள், அந்த வரப்புகளுக்கு அடியில் வழு- வழுப்பான துவாரங்கள் இருக்கும், அந்த துவாரங்களுக்கு ”மோழை” என்று பெயர், வரப்பிலே பாய்ச்சும் தண்ணீர் நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால், அனுபவமிக்க விவசாயம் செய்யும் பெரியவர்கள், ஏதோ ஒரு இடத்தில் மோழை இருக்கிறது, அந்த மோழையைக் கண்டுபிடித்து அடைத்துவிட்டால் வரப்பில் தண்ணீர் நிற்கும் என்று சொல்லுவார்கள்,அப்படிப்பட்ட அனுபவசாலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல் வழக்கே இந்தப் பழமொழி, அந்த மோழை எப்படி வழுவழுப்பாக இருந்து கொண்டு தண்ணீரையும் தக்கவிடாமல் செய்கிறதோ, அதுபோல மூத்த குழந்தைகள், மனதிடமில்லாமல், விவேகமில்லாமல், தைரியமாக நிமிர்ந்து நிற்காமல் இருப்பார்கள் என்பது போன்ற பொருள் வருமாறு இந்தப் பழமொழி அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது,



அதே போல் இளையது காளை என்பர், காளை என்றாலே இளமை,வலிமை,வேகம்,எதிர்கொள்ளும் திறமை,எதையும் எதிர்த்து போராடும் மனப்பான்மை ,என்றெல்லாம் பொருள் வரும், ஆகவே மூத்ததாக தண்ணீரைத் தக்கவிடாமல் செய்யும் மோழையை அடைத்துவிட்டு,அடுத்ததாக காளையை பயன்படுத்தி ஏர் உழுதால்தான் பலன் வரும் என்னும் பொருள்பட சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது,

அப்படி ஆராய்ந்தால், நடைமுறை வாழ்வில் இந்தச் சொல் உண்மையோ என்று தோன்றுகிறது, பல இடங்களில் மூத்த குழந்தையை விட,அடுத்த குழந்தை இன்னும் சற்று தூக்கலான, புத்திசாலியாக,சூட்டிகையாக, துருதுருப்பாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது,இதற்கு விஞ்ஜான ரீதியாக ஏதேனும் விளக்கம் இருக்குமோ என்று ஆராய்ந்தால்

மனிதனின் உடற்கூறு, மனக்கூறு இரண்டையும் ஆராய வேண்டி இருக்கிறது, ஒவ்வொரு மனிதனும் நாகரீக கட்டுப்பாடு காக்க வேண்டி,பருவ விழிப்பு ஏற்பட்டு பல
காலம் வரையில்,தன்னுடைய சுய கட்டுப்பாட்டைக் காக்கவேண்டிய ,அவசியத்திலிருப்பதால் தன்னுடைய
இயல்பான காமத்தை, மிக இயல்பான உடல் இச்சையை
கட்டுப் படுத்திக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலையில்
இருக்கிறார்கள், அப்படி அடக்கி வைக்கப் பட்ட காமம்
உடல் இச்சை , அதைத் தணித்துக் கொள்ள தனக்கென்று ஒரு துணை கிடைத்தவுடன் முழு வேகத்துடன் செயல் பட ஆரம்பிக்கிறது, கட்டவிழ்த்துவிட்ட காளை போல்.......

திருமணம் ஆன உடனே அன்பு பாசம், காதல்,நேசம் , அனைத்தும் இருந்தும்..ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் அவற்றையெல்லாம் தாண்டி காமத்துக்கு முதலிடம்
தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர்
இது இயல்பு ,தவறென்று சொல்லவில்லை, இங்கே சற்று நிதானப்பட்டு யோசிக்க வேண்டியுள்ளது,


அப்படி தம்பதிகள் இருவருமே உணர்ச்சி பூர்வமாக
செயல்படும்போது அங்கே காதல், பாசம், நேசம்,அன்பு
என்று எல்லாம் இருந்தாலும் அவைகள் பின்னுக்கு
தள்ளப்பட்டு காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கிறது
அப்படி காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கும்
அந்த சேர்க்கையில் மனித உடலின் உணர்வுகள்
நரம்புகள், ரத்தம், ஆண்மை ,பெண்மை போன்ற பல கலவைகள் செயல் பட்டாலும் உள்ள பூர்வமாக ,புத்தி பூர்வமாக அந்த சேர்க்கை நடைபெற,சந்தர்ப்பம் மிகக் குறைவு என்பதே என்னுடைய கணிப்பு, அதனால் அப்போது தோன்றும் கரு காமத்தின் அடைப்படையில் விதைக்கப் பட்ட கரு ,
அப்படிப் பிறக்கும் முதல் குழந்தைகளுக்கு உணர்ச்சி பூர்வமான முடிவுகள் எடுக்க இயலும்,அறிவுபூர்வமாக சிந்திக்க இயலாது

உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் முடிவுகள் சரியான விளைவுகளைத் தருவதில்லை என்பது பெரியோர்களின் அறிவாளிகளின் ஆராய்ச்சி பூர்வமான முடிவு,ஆகவே
மூத்தது மோழை என்ற பழமொழி சரியானதாக இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது

அது மட்டுமல்ல, மனரீதியாக உடல் ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும், இயல்பாக எந்த ஒரு மனக்கிலேசமும் இல்லாமல், இல்லறத்தை ஆரம்பித்து மனதால் கலந்து பிறகு
உடலாலும் கலக்க,எளிதான வழியே திருமணம் என்னும் அங்கீகாரம், பெரியவர்கள் கூடி ஒரு நல்ல நாளைத்தேர்ந்து முதல் இரவு என்று அழகாக பெயர் சூட்டி இந்த வைபவத்துக்கு ஏற்பாடு செய்து மணமக்களை அனுமதிக்கிறார்கள்
அப்படி அனுமதிக்கப்பட்ட உரிமையோடு மணமக்கள் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் முறையான இல்லற உறவை
அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்,

அப்படி இல்லாமல் தாங்களாகவே சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பருவ ஈர்ப்பை காதல் என்று எண்ணி,காமத்தின் வலையில் விழுந்து சூழ்நிலை அழுத்தத்தால்,காமத்தின் இயல்பான வெறியினால் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவித்து, வேறு வழி இல்லாமல் திருமணத்தில்
மாட்டிக்கொள்பவர்களுக்கும்,அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் ஏமாற்றப் பட்டு அவல வாழ்வு வாழும் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகள் உள்ளத்தாலோ, உடலாலோ ஊனமான குழந்தைகளாக பிறக்கின்றன என்பது
அனுபவ பூர்வமான உண்மை

இரண்டாவதாக அதே மணமக்கள் ஒரு குழந்தை பெற்ற
நிலையில் ஏற்படும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து அடுத்த குழந்தை பிறப்பை கொஞ்ஜம் தள்ளிப் போடுக்கிறார்கள்
அங்கே அந்த தம்பதிகளின் காமம் சற்றே மட்டுப்பட்டு’ திட்டமிடுதல் உருவாகிறது,முதல் குழந்தைமேல்,இல்லறத் துணையின் மேல் பாசம் , அன்பு, கருணை, எல்லாம் அதிகரிக்கிறது,

எப்போது திட்டமிடுதல் உருவாகிறதோ,அங்கு விவேகம் தலையெடுக்கிறது. பெண்மைக்கும்,ஆண்மைக்கும் வெற்றி பெற்று விட்டோம் என்கிற தைரியம்வருகிறது,
அதற்குப் பிறகு அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தை
மூத்த குழந்தையை விட சற்று அறிவாளியாகவோ, விவேகமாகவோ,,தைரியமாகவோ இருக்க,வாய்ப்புக்கள் அதிகமாகிறது, பல வீடுகளில் கவனித்திருக்கிறேன் மூத்த குழந்தைக்கு, அடுத்த குழந்தையின் சுட்டித்தனங்களால், அறிவு சார்ந்த புத்திசாலித்தனமான விளையாட்டுக்களால்,விவேகமான
செய்கைகளால், எல்லோரையும் கவரும் வண்ணம் திறமையோடிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்




பல மூத்த குழந்தைகளும் புத்திசாலியாக இருந்ததுண்டு,
இருப்பதுண்டு, அது விதிவிலக்கு என்றே படுகிறது..!
இயல்பாகவே மோழை இல்லாத வரப்புகளும் இருத்தலைப் போல!!!!


ஆகவே பெரியோர் சொல்லை மதித்து வாழலாம் அவற்றில் நல்ல பொருள் இருக்கும் என்று வாழ்தலில் தவறில்லை,
பழமொழிகளை பெரியோர் வாக்காக மதிக்கலாம்,
அல்லது ஆராய்ச்சி செய்துதேர்ந்தெடுத்து, பயன்பெறலாம்...!!

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com
முகவரி: பழைய எண் 152, புதிய எண் ஏஐ- 58,
ஏ3, இரண்டாவது தளம், சோனக்ஸ்வப்னா அடுக்ககம்
7 வது ப்ரதான சாலை, அண்ணா நகர் ,
சென்னை 600040

கைப்பேசி: 9840884088
இல்லம் : 044-42057923



Monday, February 2, 2009

தலைக்கனம் யாருக்கு வந்தாலும் அது நிச்சயமாய் அழிவைத் தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்னும் முதிர் சொல் எவ்வளவு உண்மையான அறிவுபூர்வமான, சொல்வழக்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது
என்ன ஆயிற்று திடீரென்று தத்துவமாய் உதிர்க்கிறானே இவன் என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது,என்ன செய்ய( பழைய ) திருவிளையாடல் என்னும் திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் தருமி என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி தனியாகப் புலம்பும் காட்சி ஒன்று வரும், அதுபோல தனியாக யோசித்துக்கொண்டே இருந்ததன் விளைவுதான் இது
நான் கூறப் போகும் விஷயத்துக்கு இவ்வளவு பீடிகை போடவேண்டியிருக்கிறது ,ஏனென்றால் பாதிக்கப் பட்ட பல நடுத்தரக் குடும்பங்களின் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்து வருத்தப்பட்டுதான் எழுதுகிறேன் , யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கோடுதான் இப்படி தனியாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்

ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து தமிழ் எழுத வரும் என்னும் தகுதியினால் மட்டும் எழுதவில்லை, இதைப் படிப்பவர்கள் இந்தக் கட்டுரையின் நோக்கத்தை சரியாகப் புறிந்து கொள்ளவேண்டுமே,புறிந்து கொண்டு இனி வருங்காலத்திலாவது தங்களின் தவறான அணுகு முறையை மாற்றிக் கொள்ளவேண்டுமே ,அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் இன்னும் பாதிக்கப் படுவார்களே என்னும் உயரிய நோக்கத்தோடுதான் இக்கட்டுரையை எழுதுகிறேன்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என் நோக்கமல்ல,மீண்டும் இது போன்ற இழி நிலைக்கு நாம் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமே என்னும் நியாயமான கவலையால்தான் எழுதுகிறேன்
சரி சரி பீடிகை போதும் விஷயத்துக்கு வாய்யா என்று நீங்கள் முணுமுணுப்பதும் காதில் விழுவதால் இதோ இப்போதே விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்,

முன்பெல்லாம் பீ ஏ படித்து விட்டால் உடனே வீட்டு வாசலில், பெயரைப் போட்டு பக்கத்திலேயே பீ ஏ என்று போட்டுக் கொள்ளுவது வழக்கத்தில் இருந்தது, ஆனால் அப்போது பட்டப் படிப்பு படித்து தேறுவது என்பது மிகவும் கடினமான செயலாக கருதப்பட்டது, இன்றைய நிலை அப்படி இல்லை, அதிகம் பேர் படித்தவர்களாகவும் அதுவும் இரண்டு அல்லது மூன்று அதற்கும் மேலே பல பட்டப் படிப்புகளைப் படித்துவிட்டு வேலக்காக பல பட்டதாரிகள் அலைந்து கொண்டிருக்கும் நிலை,

ஒரு நிலையில் பார்த்தால் படித்தவர்கள் அதிகம் பேர் என்று நினைக்கையில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்களையும்,யுவதிகளையும் பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாயிருக்கிறது,சரியான வேலை வாய்ப்புகள் உருவாக்காமல் நம் யுவதிகளையும், இளைஞர்களையும் தவிக்க விட்டோம் நாம் என்று எண்ணும்போது யாரை நோவது என்றே புரியவில்லை, ஆனாலும் காலப்போக்கில் இந்த நிலையும் மாறி ஓரளவு வேலைக் கிடைக்க ஆரம்பித்தது,ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்னும் நிலை ,

நம் நாட்டில் படித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையோ அல்லது வருமானமோ கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தனர்,குறிப்பாக நடுத்தர வர்கத்து யுவதிகளும், இளைஞர்களும்,
கணிணிப் பயன்பாடு பெருத்து ,கணிணி சார்ந்த தொழிலகங்கள் பெருகியவுடன், அந்த நிறுவனங்கள் நன்றாகப் படிக்கும் இளைஞர்களையும், யுவதிகளையும் அவர்கள் கல்லூரிக்கே வந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளித்து படித்து முடித்தவுடன் அவர்களை நல்ல வருமானமும் அளித்து வேலையும் கொடுப்பதாக வாக்களித்து தங்கள் நிறுவனத்தை போட்டியில் ஈடுபட்டு வெற்றி கொள்ள தயாராயின, அந்த நேரத்தில் என் ஐ ஐ டீ,சீஎஸ் ஐ, போன்ற கணினி நுட்பங்கள்கற்றுக்கொடுக்கும் கல்வியகங்களை ஆரம்பித்து அவர்களும் நன்றாகத்தேர்ந்து நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு,மாணவிகளுக்கு ஏற்ற நல்ல வேலையையும் , வருமானத்தையும் அளிக்கக் கூடிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நல்ல பணியினைப் பெற்றுத் தந்தார்கள்,
இவை போன்ற நடவடிக்கைகள் நடுத்தர வர்கத்து படித்த இளைஞர்களுக்கும்,யுவதிகளுக்கும் ஒரு,வெளிச்சப் புள்ளியாக வானில் தோன்றிய அதிர்ஷ்ட நக்ஷத்திரமாக உருவாகி கணிணி நுணுக்கங்கள் கற்றவர்களுக்கு வாழ்க்கை நடைமுறையிலேயே ஒரு பெரிய மாறுதலை தந்தது,வசந்தம் வீச்த் தொடங்கியது ,நடுத்தர வர்கத்து மக்களும்,பல பெற்றோரும் சற்றே மூச்சுவிட்டு நிமிர்ந்தனர் என்றால் அது மிகையாகாது,

ஏதோ ஒரு வெளிச்சப் புள்ளி அவர்களுக்கு கிடைத்தது,அதைப் பற்றிக் கொண்டு வாழ்வின் உயர்ந்த நிலைக்கு,அதாவது மற்ற தொழில் வல்லுனர்களுக்கெல்லாம் கிடைப்பதைவிட வசதியான வாழ்க்கையும் பொருளாதாரமும், சமூக மரியாதையும் கிடைக்க ஆரம்பித்தது கணிணி நுணுக்கம் தெரிந்த யுவதிகளுக்கும், இளைஞர்களுக்கும்,
சரி ஏதோ வாழ்வில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உதவிக் கரம், கை நீட்டி வா என்றழைத்து கைப் பிடித்து தூக்கிவிட்டு உயிரைக் காப்பாற்றியதும் அல்லாமல்அழைத்துச் சென்று ஒரு தங்கப் புதையலையே கண்பித்து ராஜ மரியாதைக்கு உரியவராக ஆக்கி விட்டது பேரதிசியம் அல்லவா, அப்படிப்பட்ட பேரதிசியம் நடக்கும் போது அந்த அதிசியத்துக்கு ஆட்பட்டவர்கள் தங்களுடைய பழைய நிலையை மனதில் கொண்டு அவர்களைவிட நலிந்தவருக்கு உதவிகள் செய்து அவர்களையும் கை தூக்கி விட்டிருந்தால் நாடே மகிழ்ச்சியாய் இருந்திருக்குமே,

மற்ற துறைகளில் பணிபுரிந்து வாழ்க்கையின் எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல், வருமானம் பற்றாமல் களைத்துப் போன மனங்களுக்கு சொந்தக்காரர்கள் கணிணித் துறைகளில் பணிபுரியும் இந்த யோகக்கார யுவதிகளையும், இளைஞர்களையும் பார்த்துப் பெருமூச்சு விட்டு,

இந்தக் கணிணித் துறை வல்லுனர்கள் தாங்கள் பொருள் அதிகமாக ஈட்டும் காரணத்தால் அநியாய விலை சொன்னாலும் தங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லை ,தங்கள் வசதியே முக்கியம் என்னும் மனோபாவத்தில் அதிகமாய் விலை கொடுத்து வாங்கிக் குவித்த சொத்துக்கள் ஏராளம், இந்த நிலையை கவனித்துக்கொண்டே இருந்த பொருளீட்டும் வல்லுனர்களான இடைத்தரகர்கள் பல விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு மொத்த பணத்தைக் கொடுத்து பல ஆயிரம் ஏக்கராக்களை வளைத்துப்போட்டு அவைகளை வீடுகட்டும் நிலமாக,பிரித்து அநியாய விலைக்கு இந்தக் கணிணித்துறை வல்லுனர்களின் பலமாத வருமானத்தை மிக எளிதாக அவர்கள் கையகப்படுத்திக்கொண்டனர் என்பது உண்மை, இந்த நிலையால் ஒரு பக்கம் உண்மையான சொந்தக் காரர்களாகிய விவசாயிகள், நில,வீட்டு உரிமையாளர்கள் மறு பக்கம் கணிணித் துறை வல்லுனர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி கொள்ளையடித்தது இடைத்தரகர்களே என்றாலும் பழி என்னவோ கணிணித்துறை வல்லுனர்கள் மீதுதான் விழுந்தது,

பல வீட்டு உரிமையாளர்களிடமிருந்துவருங்காலத்தில் பொருளாதார நிலைமைகள் எப்படி மாறுமோ என்கிற முன் யோசனையின்றி இவர்கள் செய்த இச்செயலால், கட்டிடத் துறையிலிருந்து அனைத்து துறைகளிலும் இவர்களால்தான் நிலத்தின் விலை, வீட்டு வாடகை , அடுக்குமாடிக் கட்டிடங்களின் விலை, மற்ற அத்யாவசியப் பொருட்களின் விலை அனைத்து விலையேறிவிட்டது, இந்த கணினித் துறையில் வேலை செய்வோர்தான் மொத்த விலையேற்றத்துக்கும் காரணம் என்னும் மனோபாவத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களது நடவடிக்கைகள் ப்ரபலப்படுத்தப் பட்டது,
இவற்றையெல்லாம் விட கணிணியைக் கற்றுக்கொண்டு கணிணித் துறையில் வேலை கிடைத்தவர்களில் பெரும்பாலோர் தங்களை அந்தத் துறையில் படிக்க வைத்த, தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்பதற்காக பலவிதமான சோதனைகளை எதிர்கொண்டு படிக்க வைத்த பெற்றோர்களை அவர்கள் ஏதோ படிக்காத பாமரர்களைப் போல, கணிணியைக் கற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் தாங்கள் பெரிய அறிவு ஜீவிகளாகி விட்டதைப் போன்ற ஒரு மனோ பாவத்தில் மிகவும் சுயநலமாக சிந்திக்கத் தொடங்கினர் என்றால் அது மிகையல்ல

அதே காரணத்தால் பெற்றோரையே மதிக்காத இவர்கள் எல்லாமே தங்களுக்குத் தெரியும், தங்களுக்கு தெரியாதது உலகில் ஒன்றுமே இல்லை,அப்படியே ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டால் இருக்கவே இருக்கிறது இணையம், இணையத்தில் சென்று பார்த்தால் எல்லா விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும், ஆதலால் இனி பெரியவர்கள், பெற்றவர்கள் யாருடைய தயவும் இன்றி வாழ்ந்து விட முடியும் என்று நினைத்துக்கொண்டு யாரையுமே மதிக்காத தங்கள் நலமே பெரியதென்று எண்ணும் சுயநலத்துக்கு அடிமையாகிப் போயினர், கணிணித் துறையில் வேலை செய்து அதிகப் பணம் ஈட்டி ஆடம்பர வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இவர்களுக்கு அங்குதான் ஆரம்பித்தது இறங்குமுகம்,

அந்த இறங்குமுகம் இவர்களை பல விதங்களில் பாதித்தது

1.இவர்கள் முதலீடு செய்து வைத்திருந்த பல கணிணி சம்பந்தமான தொழிலகங்களின் பங்குகள் சந்தையில் விலை குறைய ஆரம்பித்தன
2.அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் தங்கள் சக்தியை உணராது இவர்கள் பல கோடி ரூபாய்களை கடனாக வாங்கி மாளிகைகள் வாங்கினர் , லெமன் போன்ற பல பெரிய முதலீட்டாளர்களின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை முடங்கியது, அதனால் அமெரிக்கா போன்ற பெரிய நகரங்களில் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் இவர்கள் வாங்கியிருந்த மாளிகைகளின் விலை வெகுவாகக் குறைந்து இவர்கள் வாங்கிய விலையை விட பன்மடங்கு சரிந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது, வங்கியில் கடன்பட்டு 20 கோடிகளுக்கு வாங்கிய வீடு இரண்டு கோடி அளவுக்குக் கூட மதிப்பில்லாமல் போனது,ஆனால் இவர்கள் வாங்கிய 20 கோடிக்கு பதிலாக 40 கோடிகள் வங்கிக்கு செலுத்த வேண்டி வந்தது, குதிரை கீழேயும் தள்ளி மேலே மண்ணையும் அள்ளிப் போட்டாற்போல இவர்கள் மூச்சுத் திணரினர்,பலர் கடன் சுமை தாங்காமல் அடிமாட்டு விலைக்கு வீட்டை விற்றும், தங்களின் கையிருப்பையும் போட்டு வங்கிக்கு கட்டவேண்டிய பணத்தில் கால் பங்கைக் கட்டிவிட்டு கையிலோர் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை நாலணா கேட்டால் நானென்ன செய்வேன் என்று நாணித் தலைகுனிந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது,

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார் பெரியோர் அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க உத்யோகம் என்று முன்பெல்லாம் பெரியவர்கள் அரசாங்க வேலையைக் குறித்து பெருமையாகப் பேசுவர் ,அது உண்மைதானோ என்று தோன்றுகிறது

பெரியோர் சொல் வேதம் என்று வாழவேண்டும், அவர்கள் சொல்லுவதில் அனுபவமும் அறிவுரைகளும் இருக்கும் என்பதை உணராமல் போனதனால் வந்த விளைவிது, பெரியோர்களை மதிக்கவேண்டாம் ,ஆனால் அவர்கள் சொல்லும் நன்மையான கருத்துக்களை மட்டுமாவது எடுத்துக் கொள்ளலாமே, காலங்கள் எவ்வளவு நவீன யுகமாக மாறினாலும் நம்முடைய அடிப்படைநாகரீகத்தின் மேல்தான், நற்குணங்களின் மேல்தான் நம்முடைய வாழ்க்கை நெறிமுறைகளைளை அமைத்துக்கொள்ளவேண்டும் ,அப்போதுதான் நம் வாழ்க்கை தடம் புரளாமல் இருக்கும் ,

சமீபத்தில் பெங்களூரில் நடந்த சம்பவம் மனதை மிகவும் பாதித்தது,ஏற்கெனெவே அவர்களின் கலாச்சார சீரழிவை நானே நேரிடையாக பார்த்தவன் என்றாலும், அதிர்ந்து போனேன்
பெண்கள் ஆண்களுக்கு சமமாக என்னும் சொற்றொடரை உபயோகிக்கும் போதே நான் ஏதோ ஆணாதிக்கம் கொண்டவன் என்று தோன்றினாலும், ஆண்களும் பெண்களும் கலாச்சார,நாகரீக கோட்பாடுகளின் அளவை மீறி செயல்படும் போதுதான் இத்தகைய விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன,ஆண்களும் நாணயமாக நேர்மையாக நடக்கவேண்டும், பெண்களும் அதேபோன்று நட்க்க வேண்டும், நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று யுக்க்கவிஞன் பாரதி கூறிய கூற்றை தவறாகப் புறிந்து கொண்டு, பெண்களும் தங்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக காட்டிக்கொள்ளவேண்டும் என்னும் மிகைப்படுத்தப்பட்ட உணர்வினாலேயேஇப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களோ என்னும் சந்தேகம் வருகிறது....

எங்கே ஒருவன் அதிகமாக அர்ப்பாட்டம் செய்கிறானோ,அதிகமாக அலட்டிக்கொள்கிறானோ அங்கே அவன் பயந்து போயிருக்கிறான், அவனுடைய பயத்தை போக்கிக் கொள்ளவே அப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்,அது போல பெண்கள் இயல்பாக அவர்களுக்குரிய தர்மத்தை கடைப்பிடித்தாலே போதுமானது, நாம் மதிக்கப்படுவதில்லை நாமும் சம உரிமை வேண்டும் ,,என்று எண்ணி, பெண் சுதந்திரம் என்னும் பேரில் அதிகப்படியான வேண்டாத நடத்தைகளைக் கைக்கொள்ளும்போது இயல்பாகவே மக்கள் மனதில்வெறுப்பை ஏற்படுத்தி அவமானத்தை சந்திக்கிறார்கள்,

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன், அவர் அமெரிக்காவில் இருக்கும் மகனுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைஅதாவது அவருடைய அமெரிக்க பேரனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார்,நான் சென்றவுடன் என்னை வரவேற்று உட்காரவைத்துவிட்டு அவர் மகனிடமும்,மருமகளிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்,
என் நண்பர் மிகப் பெருமையாக என் மகன் அமெரிக்கா சென்று கணிணித் துறையில் வேலை செய்தாலும் நம்முடைய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதாகவும்,மருமகள் தன்னை பெற்ற தந்தைபோல் நடத்துவதாகவும் சொன்னார் ,மகிழ்ச்சியாக இருந்தது,
நான் அந்த அமெரிக்க கணிணித் துறை பொறியாளரிடம் பேசினேன்,நான் கேட்ட கேள்விகளுக்கு மரியாதையாக விளக்கங்கள் கூறினார்,அதற்கு இடையே அவர் ஐய்யா நான் என் தந்தை சொல்லை தட்டியதே இல்லை, இன்றும் நான் அமெரிக்காவில் இருந்தாலும் எல்லா திட்டங்களையும் தந்தையிடம் ஆலோசனை செய்தே செயலாற்றுகிறேன், இவருடைய அனுபவம் எங்களை வழிப்படுத்துகிறது,இவரும் நான் அனுப்பும் பணத்தில் நிறைய சேமித்து வைத்திருக்கிறார்,நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிரோம்,
இப்படி பெரியவர்களின் அறிவுறுத்தலை மதிக்காமல் அகலக்கால் வைத்தவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் ,அதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம் என்றார்,
எனக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னுடைய இன்னொரு நண்பர் இதே போல் அமெரிக்காவில் வேலை செய்யும் மகனும்,அவனுடைய மனைவியாகிய என் நண்பரின் மருமகளும் அப்பா உங்களுக்கு எதுவும் தெரியாது, நிறையப் படிங்கப்பா, எந்த சந்தேகம் இருந்தாலும் பல வலைத்தளங்கள் இருக்கின்றன அவைகளில் சென்று இன்று பொருளாதாரம் எப்படி இருக்கிறது, குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும், எல்லாம் இருக்கிறது,அவற்றையெல்லாம் படிக்காமல் எல்லாம் தெரிந்த மாதிரி பழைய செய்திகளையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் என்று அவமானப் படுத்துவது போல் பேசியதை சொல்லி வருத்தப்பட்ட நண்பர் நினைவுக்கு வந்தார்,

குழந்தை வளர்ப்பிலிருந்து குடித்தனம் எப்படி செய்யவேண்டும் என்பது வரையில் இணையத்தில் வலைத்தளங்களில் இருந்தாலும், அவைகளெல்லாம் உபயோகமாக இருக்கிறதா வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு..என்கிற கேள்வி மனதில் எழுந்தது.இல்லை நடைமுறையில் அவைகளில் நூற்றுக்கு தொண்ணூரு சதவிகிதம் உபயோகப் படுவதில்லை என்பதே உண்மை
குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு உணவு ஊட்டக் கூடாது, குழந்தைக்கு இயற்கை வைத்தியம் செய்யக் கூடாது,என்றெல்லாம் இணையதளங்களில் குழந்தை வளர்ப்பைப் பற்றி அளித்திருக்கும் செய்திகளை அப்படியே நம்பி குழந்தையை வளர்த்த ,
தாத்தா பாட்டிகள் கூட தங்கள் குழந்தைகளை தொட அருகதை இல்லாதவர்கள்,அவர்களுக்கு ஒன்றும் தெரியாது ,பழைய பஞ்சாங்கங்கள் என்று நினைத்துக்கொண்டு பெற்றவர்களின் பாசத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் அவர்களால் வளர்க்கப்பட்டு ஆளானவர்கள்தாம் அவர்கள் என்பதை மறந்து அவர்களை வார்த்தைகளால் புண்படுத்தி தங்கள் குழந்தையை இணைய தளங்களின் வளர்ப்பு முறையில் வளர்த்த தம்பதிகள் அக்குழந்தைக்கு ஒரு சாதாரண காய்ச்சல் வந்தாலும் கூட பதறிப்போய் அமெரிக்க மருத்துவர்களின் பார்வை நேரத்துக்காக இரு மாதங்கள்ஆனாலும் காத்திருந்து, காத்திருக்கும் நேரத்தில் இன்னும் நோயை அதிகப்படுத்தி பிறகு அவர்களிடம் வைத்தியம் செய்தும் சரியாகாமல் அவதிப்படும் தம்பதிகள்,

இவைகளை உற்று நோக்கும் போது மற்ற துறைகளில் வேலை செய்வோர் அயல்நாடுகளுக்கு சென்று பொருளீட்டினாலும் அவர்களிலும் பெற்றவர்களை, பெரியோர்களை மதிக்காமல் இருப்பவர்களுண்டு என்றாலும் இந்தக் கணினித் துறையில் இருப்பவர்களைப் போல் அதிக அளவு இல்லையென்றே தோன்றுகிறது, ஆக மொத்தம் நல்லவைகளை மகன் சொன்னலும், பெற்றவர்கள் சொன்னாலும் மதிக்க வேண்டும்,கட்டுப் படவேண்டும் என்னும் நல்லுணர்வு மறைந்து போய்விட்டது அதுதான் இப்போது மொத்த சீரழிவுக்கும் காரணம் என்று தோன்றுகிறது

தற்காலத்தில் அதிகப் பணம் ஈட்டும் தொழிலில் உள்ள ஆணோ,பெண்ணோ அனைவருக்குமே சுயநலம் அதிகமாகி விட்டது என்பதுதான் உண்மை, இந்த சுயநலம் எல்லோரையுமே அதல பாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது,எப்படியென்றால் தீவிரவாதம் எப்படி இருமுனைகளும் கொண்ட கூர்மையான கத்தியோ அதே போல் சுயநலமும் பலமுனைக்கூர் கொண்ட ஆயுதம்தான்,இந்த ஆயுதம் யாரிடம் இருக்கிறதோ அது, தான் இருப்பவர்களையும் , மற்றவர்களையும் அழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
இவையெல்லாவற்றையும் தாண்டி இந்த சுயநலம் என்னும் வியாதி எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது எப்படி என்று பார்க்கலாமா..?

பெற்றவர்களை, மற்றவர்களை மதிக்காத சுயநலத்தை ஆயுதமாக ஏந்திக்கொண்ட தற்கால அதிகப் பணம் ஈட்டும் இளைஞர்களும்,யுவதிகளும் இன்னும் சற்று முன்னேற்றம் கண்டு
அந்த சுயநலமென்னும் ஆயுதத்தை கணவன் மனைவிகளுக்குள்ளேயே உபயோகப் படுத்த ஆரம்பித்து விட்டனர் அதன் விளைவே இன்றைய விவாகரத்துக்கள்,பிரிந்து வாழ்தல், சேர்ந்து வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக,நிம்மதியாக இராமல் தவிக்கும் அவல வாழ்க்கை
அதிகம் பொருளீட்டும் தம்பதிகள்தான் விவாகரத்துக்கள் அதிகமாக செய்கின்றனர் என்று இன்றைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன காரணம் தான் அதிகமாக சம்பாதிக்கிறோம் என்னும் மமதையும்,எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக அலையும் மனப்பான்மையுமே காரணங்கள் என்றால் அது மிகையாகாது

ஆகவே நம் வாழ்வின் நடைமுறையிலேயே அதிக பாதிப்பை உள்ளாக்குவது இந்த மமதையே என்றால் அதில் என்ன தவறு
ஆணோ பெண்ணோ அனைவரும் சமமே, வாழ்க்கை வாழ்வதற்கே,
நாம் உழைப்பது, பொருளீட்டுவது, அனைத்துமே நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கே, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்,
என்பதைப் புரிந்து கொண்டால் ,சற்றே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இதே வாழ்க்கை சொர்கமாகும்

அன்புடன்
தமிழ்த்தேனீ



” மனிதம் “
பல பழுத்த ஆத்திகர்களின் வாரிசுகள் நாத்திகர்களாகவும் பகுத்தறிவு பேசும் பல காய்த்த நாத்திகர்களின் வாரிசுகள் ஆத்திகர்களாகவும் இருக்கின்றனரே, கண்கூடாக பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் வளர்க்கும் முறை சரியில்லையா,அல்லது எப்படி வளர்த்தாலும் அவர்கள் போக்கிலே செல்லுகின்ற இந்தக் காலத்து இளைஞர்களின் நடைமுறையே அப்படித்தான் இருக்கிறதா ,அப்படியானால் இந்தச் செய்தி இறைவன் இருக்கிறான் என்று விளக்குகிறதா, அல்லது இறைவன் இல்லை என்று விளக்குகிறதா?
இறைவனை உண்டு என ஒப்புக்கொள்ளும் ஆத்திக வாதியை விட இறைவனை இல்லை என்று சொல்லும் நாத்தீகவாதியை சிறந்த ஆத்திகர் என்று நான் சொல்லுவேன்,
எதையும் குறிப்பிடாமல் இல்லை என்று சொன்னால் யாருக்கும் அவர் எதை இல்லையென்று சொல்லுகிறார் என்றே புரியாது அதனால் இறைவன், இறைவன், என்று சொல்லிவிட்டுத் தானே இல்லை என்று சொல்ல முடியும், தினம் தினம் இறைவனை நினைத்து,நினைத்து பின்தானே மறுக்கிறார்கள், ஆகவே நாத்திகர்கள் என் கண்ணுக்கு ஆத்திகர்களாக தெரிகின்றனர்,
ஆனால் ஆத்திகர்கள் வாதிடும்போது இறைவனை நினைக்கிறார்களே தவிர மற்ற நேரங்களில் நினைப்பது மிகவும் குறைவு, ஆனால் நாத்திகருக்கு சதா சர்வ காலமும் இறைவனை இல்லையென்று சொல்லுவதே வேலையல்லவா அதனால் இறைவன் இல்லையென்று சொல்வதற்காகவேனும், இறைவனை அதிகம் நினைக்கிறார் நாத்திகவாதி,

ஆத்திகவாதிகள் நம்புவது போல, இறைவன் இருக்கிறான் என்று நம்புபவர்களால் மனிதத்தை மதிக்காமல் இருக்க முடியுமா? அப்படி மனிதத்தை மறக்காமல் மனிதர்கள் இருந்திருந்தால் இன்று தீவிரவாதம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா
சாம, தான, பேத, தண்டம், என்று ஒரு வரைமுறையில் வாழ்ந்திருந்த நம் மக்கள், மனிதர்கள், உயிராயுதம் ஏந்தும் அளவுக்கு ஒரு மோசமான நிலமைக்கு தள்ளப் பட்டிருப்பார்களா,மக்களை மீண்டும் மாக்களாக ஆக்கியது யார், மனிதாபிமானத்தை மறந்த பலரின் சுயநலத்தால் அல்லவோ இன்று இப்படிப்பட்ட நிலையை சந்தித்திருக்கிறோம்
மக்களை மாக்களாக மாற்றும் சுயநலத்தை அழித்து, உலகம் முழுவதும் நம் மக்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்திருந்தால் இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்குமா,
பல நேரங்களில் துயரம் நம்மை செயலிழக்க வைக்கும், சில நேரங்களில் சிந்திக்க வைக்கும்,அப்படி எழுந்த சிந்தனையில் விளைந்த ஒரு சுவையான கற்பனைக் காட்சி, நாடகம்,கதைகள் எழுதுபவன் அல்லவா நான்,அந்த அனுபவம் கைகொடுத்தது
சொர்கத்தில் ஒரு காட்சி:-
ஒரு பெரியவர் பழுத்த ஆன்மீகவாதி தன் வாழ்நாளில் அவர் இறைவனை மறந்ததே இல்லை, அது மட்டுமல்ல தினமும் பக்தியுடன் இறைவன் நாமங்களைச் சொல்லி பூஜைகள் பல செய்தவர்,மனித நேயத்துடன் நடந்து கொண்டவர்,மனிதம் உணர்ந்தவர், பதவிக்கோ, செல்வத்துக்கோ அளித்த மரியாதையை விட மனிதருக்கு அதிகமாக மதிப்பளித்தவர்,தன்னுள் உறைகின்ற இறைவன் அனைத்து உயிர்களிலும் உறைகிறான் என்று உணர்ந்தவர்,அதனால் மனித நேயத்தை மதித்தவர், மனிதருள் உதித்தவர், பக்தி,அன்பு நேர்மைபோன்ற நற்குணங்களை கடைப்பிடித்தவர்,மனித நேயத்தை விதைத்தவர்

மற்றொரு பெரியவர் பழுத்த நாத்திக வாதி, பகுத்தறிவு வளர்க்க நாத்திக வாதம் செய்தவர், ஒரு நாளும் இறைவனை மறந்தும் தொழாதவர்,இறைவன் இல்லை என்றே போதனைகள் செய்தவர், ஆனால் மனிதநேயம் மிக்கவர், செல்வமும் செல்வாக்கும் இருந்தால்தான் யாவரும் மதிப்பர் என்னும் உண்மையை அறிந்தவர்,ஆனாலும் அனைத்துக்கும் மேலாக மனிதர்களை நேசித்தவர், மனித நேயத்தை யோசித்தவர்,மக்களிடம் பகுத்தறிவையும் மனித நேயத்தையும் விதைத்தவர்
இரு பெரியவர்களும் சொர்கத்தில் சந்தித்தனர்,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நலமா என்று தமிழிலே விசாரித்துக் கொள்கின்றனர்,சொர்கத்திலும் தமிழ், தமிழே சொர்கமல்லவா சொர்கத்துக்கே சென்றாலும் மனிதர் மனிதர்தாமே! சந்தித்த மறு கணமே பொதுவாக இருவருக்குமே ஒரு சந்தேகம்,
அந்த ஆத்திக வாதியின் மனதிலே ஒரு எண்ணம் என்ன இது நாம் இறைவனை தொழுது பக்தி செய்து சொர்கத்துக்கு வந்தோம், பகுத்தறிவு பேசி, இறைவனே இல்லையென்று வாதிட்டு, சொர்கம் நரகம் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று நாத்திகவாதம் பரப்பிய இவரும் சொர்கத்துக்கு வந்திருக்கிறாரே என்று,
அதே சந்தேகம் அந்த நாத்திக வாதிக்கும் வந்தது, இறைவனே இல்லை,சொர்கம் நரகம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை ,மனிதம் தான் முக்கியம் என்று பரப்பிய தான் எப்படி சொர்கத்துக்கு வந்தோம் என்று, தானும் சொர்கத்துக்குதான் வந்திருப்பது உண்மைதானா என்று
அப்போது அந்த வழியாக சென்ற நாரதர், இவர்கள் மனதில் இருந்த சந்தேகத்தை உணர்ந்து சந்தேகத்தை தீர்த்து வைத்தார்,
எப்படி என்று பார்ப்போமா?

அந்த நாத்திகவாதி சிறு வயது முதற்கொண்டே , நாட்டைப்பற்றியும் நாட்டில் வாழும் மக்களைப்பற்றியும் முறையாக சிந்திக்கத் துவங்கினார்,மனிதர்களிடையே வேற்றுமைகளைக் களைய வேண்டுமென்றால் பகுத்தறிவை விதைக்க வேண்டும், மனிதத்தை படிக்க வேண்டும், என்னும் எண்ணம் கொண்டதனால் சரித்திரங்கள் படிக்க ஆரம்பித்தார், அதனால் இறைவனை இல்லையென்றார் மனிதமே பெரிதென்று பேசினார்,
சிறு வயதில் அவரைக் கவர்ந்த சரித்திர நாயகன் யார் தெரியுமா சாம்ராட் அசோகன், அதனால் எப்போதும் அசோகரைப்பற்றி படித்துக்கொண்டே இருந்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்,
“ நாட்டு மக்களின்மேல் பாசம் வைத்து நாட்டை நல்ல வளமாக்க ஆறுகள் குளங்கள் ஏற்படுத்தி, நல்ல சாலைகள் ஏற்படுத்தி சாலையின் இரு மருங்கிலும் மரங்கள் நட்டு, மக்களை எவ்வித துயரமும் இல்லாது வைத்திருந்தார் அசோகர், அப்போது அவருக்கு அனைத்து நாட்டு மக்களையும் தன் நாட்டு மக்கள்போல் சுகமாக வைக்கும் ஆசை வந்தது ,ஆசை யாரை விட்டது, அனைத்து நாடுகளின்மேலும் படையெடுத்து வெற்றி கண்டு, அசோக சகரவர்த்தி என்று பெயர் எடுத்தார் ,ஆனால் ஒரு போரின் முடிவில் யுத்த பூமியிலேயே ஒரு புத்தர் அஹிம்சையைப் பற்றியும் உயிர்கொல்லாமை பற்றியும், பற்றில்லாத வாழ்க்கையே நன்மை பயக்கும் என்பது பற்றியும் உபதேசம் செய்து அசோகனின் மனதைப் பற்றினார்,அதனால் அசோகர் பௌத்தம் பற்றினார், என்று அசோகரைப் பற்றியே நிறைய படித்தார் பேசினார், சிந்தனை செய்தார், அந்த பகுத்தறிவு வாதியான நாத்திகர்
அதனால்தான் சொர்கம் வந்தார் என்று கூறினார் நாரதர்
என்னடா இது அசோகரைப்பற்றி படித்தனால் சொர்கம் வந்தாரா நாத்திகர், அது எவ்வாறு என்று அந்த இரு மானிடர்களும் வினவ அதற்கு நாரதர்
அசோகர் மனிதம் போற்றினார்,
தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்று உங்களுக்குத் தெரியாதா ,மனிதனை மதித்தாலே தெய்வத்தை மதிப்பது போலதானே, அதனால்தானே இறைவனும் தன்னை விட தன் அடியவர்களை மதிப்பவர்களை மதிக்கிறான், சொர்கம் அளிக்கிறான், என்றார்
அது மட்டுமல்ல அசோக என்றாலே சோகமில்லாத என்று பொருள், அதனால்தான் இறைவனின் தர்ம பத்னியாகிய மஹாலக்‌ஷ்மிக்கு அசோக என்று பெயர் , தினமும் இந்த நாத்திகவாதி அசோக அசோக என்று அடிக்கடி சொல்லி தன்னையறியாமலே மஹாலக்‌ஷ்மியின் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரனாகிவிட்டார், பிறகென்ன அன்னை மஹாலக்‌ஷ்மி இறைவனிடம் இந்த நாத்திகனுக்காக சொர்கத்தை யாசித்தாள் ஏனென்றால் இந்த நாத்திகன், மனிதம் போற்றியதாலே மஹா லக்‌ஷ்மியை யோசித்தான், நேசித்தான், பூசித்தான் அசோகா என்கிற பெயரிலே, அதனால்தான் அந்த நாத்திகனுக்கும் சொர்கம் கிடைத்தது என்றார்

ஆகவே மானுடர்களே மனிதம் காப்போம்,அதுதான் சொர்கம் இறைவனை மகிழ்ச்சிப்படுத்த அதை விட சிறந்த வழி, சொர்கத்தை அடைய அதை விட சிறந்த வழி வேறொன்றுமில்லை
நாமும் அசோகர் போலவே சாலைகள் போடுவோம்,மரங்கள் நடுவோம், நீர் நிலைகள் வளப்படுத்துவோம்,உலகம் காப்போம், மனிதம் வளர்ப்போம் அசோகா, அசோகா, என்று அடிக்கடி கூறி அவரைப் பின்பற்றுவோம் சொர்கம் நிச்சயம்
அன்புடன்
தமிழ்த்தேனீ




http://thamizthenee.blogspot.com, http;//peopleofindia.net, rkc1947@gmail.com





Tuesday, January 13, 2009

பரிதி இளம் உழுதி


” சூரிய உழவன் அல்லது பரிதி இளம் உழுதி ”


திரு வள்ளுவன் மனதுழுதான்,
மறுவள்ளுவன் வயலுழுகிறான்
உழுகின்ற நாளெல்லாம் திருநாளே
பரிதியாய் பரிவாய் அவனெழுகின்ற திருநாளே
அவன் வாராத நாளென்றும் வெறு நாளே

கதிரவன் தானே எழுகிறான் கதிர்களால் உழுகிறான் ,
ஏழு வண்ணக் குதிரைகள் தன் தேரில் பூட்டியே
திண்ணமாக வருகிறான் வாழ்வின் இயலுழுகிறான்
தரணியிலே தர்மத்தை பகிர்ந்தளிக்க வருகிறான்
சுற்றுப்பாதை தன்னிலே கட்டுப்பட்டு வருகிறான்
தர்மமென்னும் விதியையே நமக்களிக்க வருகிறான்

பட்டுக் கதிர் சுட்டியே தொட்டு நம்மை அணைக்கவே
தொடர்ந்து மிளிர வைக்கவே,கெட்டவைகள் விலக்கியே
வாழ்வை ஒளிர வைக்கிறான், பட்டு தூய்மையாக்கியே
மனதைக் குளிர வைக்கிறான்,கொட்டும் ஒளி அருளியே
சுழன்று கொண்டே வருகிறான்

தொழுதாலும் தவிர்த்தாலும் பொதுவான அருள்கிறான்
மனிதத்தின் வேருக்கு வலுவாக மிளிர்கிறான்
மண்ணை வளம் செய்ய தரமான வருகிறான்
முப்போக விளைச்சலுக்கு உரக் கதிராக வருகிறான்
தீமை கண்டு பொங்கியே தீமைகளை அழிக்கவே
போகி போகி போகி என்று தீயிட்டுக் கொளுத்துவோம்
உலகுக்கே பொதுவான தர்மத்தின் சக்கரம்
தாயாக நம்மையே தாங்கின்ற நற்கரம் நீட்டுகின்ற
நற்கரம் அருளுகின்ற பொற்கரத்தான் தாளை வணங்குவோம்

அவனளித்த அரிசியும், அருமையான வெல்லமும்,
விளைந்து வந்த கரும்பையும்,வாழவைத்த வாழையும்
அவனளித்த நெருப்பையே அடுப்பில் அங்கு மூட்டியே
அதன் மீது இருத்தியே ஆக்கும் பொங்கல் பொங்கவே
பாலும் ஊற்றி காய்ந்ததும் பொங்கிவரும் வண்ணமாய்
பொங்குகின்ற போதிலே பொங்கலோ பொங்கலென்று
ஓங்கும் குரல் எழுப்பியே ஒளியவனை வணங்குவோம்
பொங்குகின்ற நம் மனதை பொங்கலிட்டு பதப்படுத்தி
தங்குகின்ற மனிதம் தனை தாங்குகின்ற சக்கரம்

நன்மை கொண்டு களிக்கவே, தீமை கண்டு பொங்குவோம்
தீமைகளை கழித்துவிட்டு நன்மைதனை வளர்க்கவே
வாழையடி வாழையாய் வந்ததொரு நன்னாளில்
ஆகாத சோர்வகற்றி ஆன்மாவை வளமாக்கி
புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம் நம் மனமும்,
மலரும் வண்ணம் ஆரியமோ திராவிடமோ
சாதி மத பேதமின்றி வைய்யமெல்லாம் ஒளிகூட்ட
தவறாமல் மலர்ந்து வரும் தர்மசக்கரம்,

தைமாதத் திருநாளில் விடியும் வேளை
நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே,
நல் வேளயது தனிலே முத்தான அரிசியுடன்
இனிப்பான வெல்லமதை,அளவோடு நாம் சேர்த்து,
காமதேனு மடிகறந்த அமுதமென்னும் பால் சேர்த்து,
பொங்கி வரும் வேளையிலே,பொங்கலோ பொங்கல்
என்றே நம் வாழ்வும் இன்பமுற இயற்கையின்
தாள் பணிந்தே இறைவன் நாமமது நாம் சொல்லி


நல்லறமும் தருமங்களும்,பொங்கலோ பொங்கலென்று
மனமொத்து உரத்துச் சொல்லி,வையகத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே,பொய்யகற்றி மெய்யுணர்ந்து
பொங்கல் திருநாளில் மங்கலமாய் நாம் களிப்போம்
நல்லேர் உழவர்களும், சொல்லேர் உழவர்களும்
மனமென்னும் பூமிதனை உழுது விளைத்தல் போல்
ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது,ஞான ஒளி பரப்பும்
இளம்பரிதி இறைவனுக்கே கதிரவனின் காலடியில்
நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு நாளாய் எண்ணி
நல்வாழ்வு தனை நாடி நன்மைகளை பொங்கிடுவோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி என்கிற
கவிஞர் தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com , http://thamizthenee.blogspot.com , http://peopleofindia.net

முப்பது மாலை

ஆண்டாள் ஆழ்வார் இயற்றிய முப்பது பாசுரங்களையும் நாம் எல்லோருமே நம்சிற்றறிவுக்கு எட்டின வரையில் அனுபவித்து வருகிறோம்,

திருப்பாவையின் அதே முப்பது பாசுரங்களை ஸம்ஸ்க்ருதம்,ஹிந்தி,ஆங்கிலம்,இன்னும் பல மொழிகளைக் கற்றவரும், டாக்டர் பட்டம் பெற்றவரும்,ஜனாதிபதி பரிசும் பெற்றவரும் ,ஸ்ரீஸந்நிதி ஸிஷ்யர் திருகோஷ்டியூர் ஸ்வாமி
திருவடியில் காலஷேபங்கள் செய்தவரும்,விஷ்ணுசஹஸ்ரநாம பாஷ்யம் எழுதியவரும்,ஸம்ஸ்க்ருதத்திலும்,ஹிந்தியிலும்,
ஆங்கிலத்திலும்,பல புத்தகங்கள் எழுதியவரும், திருப்பாவை மாலை என்னும்நூலையும் எழுதியவருமான புதுக்கோட்டை ஸ்ரீ உ.வே ஏ ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் ஸ்வாமி(வைகுண்டவாசி)
என்னும் பெருந்தைகையார்,ஸ்ரீ ந்ரும்மப்ரியா என்னும் புத்தகத்தில் அவருக்கே உண்டான வித்வத் பாணியில் அனுபவித்திருக்கிறார் அதை படித்தவுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தலாமே என்னும் நோக்கில் அவைகளின் சிறு தொகுப்பை இங்கு இடுகிறேன்
“சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே என்று ஆண்டாள் அருளியதற்கு காரணமே”
ஆண்டாள் திருப்பாவை முப்பதையும் சொன்னது மாத்திரமே தான் என்றாளாம்,அதாவது கவிமார்க்க ரீதியில் கவிகள் தாம் செய்யும் கவனங்கள் தங்களுக்கும் தெரியாமலே உள்ளிருந்து பரவசமாய் வெளிவருவது என்பது கவிகளின் அனுபவ விசேஷம்,
அதுவுமன்றி பதங்களை அடுக்கி அடுக்கி தன்னைப் பெற்ற
பெரியாழ்வாரின் மகிமையை அணிபுதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் என்று கொண்டாடி அப்பேற்பட்டவரின் கோதை என்ற பதத்துக்கும், உண்டாகியிருக்கிற வாக்விபவத்தையும் குறிப்பிட்டவளாய், தான் சொன்ன
என்றதால் அத்தைகைய பெரியாழ்வாரின் புத்ரி ஆனதினாலேயே தனக்கு அப்படிச் சொல்லும் சக்தி வாய்த்தது என்பதையும் நிர்த்தேசிக்கிறாள் என்று அருளும் இவர்


பாசுரம் ------------------- மாலையின் பெயர்


1.நாராயணனே நமக்கே– பாரோர் புகழ்மாலை
2.வையத்து வாழ்வீர்காள்- உஜ்ஜீவன மாலை
3.ஓங்கி உலகளந்த- நீங்காத நிறைந்த செல்வ மாலை
4.ஆழிமழைக்கண்ணா- மார்கழி நீராட்ட மாலை
5.மாயனை மன்னு வட- பாபநாச மாலை
6.புள்ளும் சிலம்பின காண்- உள்ளங்குளிர் மாலை
7.கீசுகீ சென்றெங்கும்- தேஜோ மாலை
8.கீழ்வானம் வெள்ளென்- ஆராய்ச்சியருள் மாலை
9.தூமணி மாடத்து- ஸஹஸ்ர நாம மாலை
10.நோற்றுச் சுவர்கம்- தேற்ற மாலை
11.கற்றுக் கறவை- பொருள் மாலை
12.கனைத்திளங் கற்றெருமை- மான மாலை
13.புள்ளின் வாய் கீண்டானை- கள்ளம் தவிர் மாலை
14.உங்கள் புழக்கடை- பங்கயக் கண்ணான் மாலை
15.எல்லே இளங்கிளியே- மாயன் மாலை
16.நாயகனாய் நின்ற- நேய மாலை
17.அம்பரமே தண்ணீரே- உறங்கா மாலை
18.உந்து மதகளிற்றன்- திறப்பு மாலை
19.குத்து விளக்கெரிய- தகவு மாலை
20.முப்பத்து மூவர்- விளம்பாஸஹத்வ மாலை
21.ஏற்ற கலங்கள்- போற்றும் மாலை
22.அங்கன் மா ஞாலத்து- கடாக்ஷ மாலை
23.மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை
24.அன்றிவ்வுலகம்- பகவத் க்ருபா மாலை
25.ஒருத்தி மகனாய்ப் பிறந்து- துக்க நிவாரண மாலை
26.மாலே மணிவண்ணா- பகவதநுக்ரஹ மாலை
27.கூடாரை வெல்லும்- பகவத்ஸம்ச்லேஷ மாலை
28.கறவைகள்- புருஷார்த்த மாலை
29.சிற்றம் சிறுகாலே- பாரமைகாந்த்ய மாலை
30.வங்கக் கடல் கடைந்த- ப்ரம்மானந்த மாலை


என்று முப்பது மாலையாக்கி அனுபவித்திருக்கிறார்
இவைகளைப் பற்றிய விளக்கங்கள் படிக்க வேண்டுமென்றால்
டிசம்பர், 2008, ஜனவரி 2009 ந்ரும்ஹப்ரியா ப்ரதிகளைப் படிக்கலாம்


அன்புடன்
தமிழ்த்தேனீ


Monday, December 8, 2008



தேனீமாமாவை தெரிந்து கொள்ளுங்கள்
http://www.mazhalaigal.com/management/team/team-001/mglt010rkc_honeybee.php

Sunday, December 7, 2008

இரும்போடு விளையாடும்

இரும்போடு உழைத்திட்ட தொழிலாளி நான்
தமிழ்க் கரும்போடு செயலாற்ற எழுத்தாளியாய்
அமிழ்தான தமிழ்தன்னின் பொறுப்பாளியாய்
தரமற்ற செயல் தமக்கே மறுப்பாளியாய்
அமர்கின்ற மலரெல்லாம் தமிழாகவே அமர்ந்திங்கு
மகரந்தம் தனை நாடியே வழிகண்டு வந்திணைந்த
தமிழ்த்தேனி நான் ,ஊன் உயிர் தழுவுதல்போல்
நான் தமிழ் தழுவினேன்,உற்றதொரு தமிழ்நாடி
தேன்தேடி சுந்தரத் தமிழ்சூடி மகிழ்கின்ற தமிழ்த்தேனி நான்
உமிழ்கின்ற உமிழ்நீரும் தேனாகவே தமிழ்த்தேனாகவே
அருஞ்சுவையான தமிழ்தந்து எனை ஏற்றியே
சிறு இறக்கைகள் தந்தருளி பறக்கின்ற அணிலாக
எனை மாற்றியே மகிழ்கின்ற கலைவாணி தமிழ்வாணி,
அவர்தமக்கே குருவான ஹயக்ரீவன் தாள் பணிந்தே
தமிழ்த் தொண்டு நான் செய்ய மனம் கொண்டதால்
அடிபோற்றி நல்அறம் பாடும் தமிழ்த்தேனியாய்
புலம்பெயர்ந்து மரபணிலாய் உளம் கனிந்த
தமிழ்த்தேனியாய் எனை மாற்றி வகை செய்த
அறிஞ்ஞர்கள் மகிழ்கின்ற தமிழோடு இனிதாகவே
இணைகின்ற தமிழ் வாழ்க தமிழ் வாழ்கவே

அன்புடன்
தமிழ்த்தேனீ